நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4203 topics in this forum
-
தமக்குள்ளே வெட்டி விளையாடும் தமிழ்க்கட்சிகள் January 5, 2023 —- தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —- ‘சர்வகட்சி மாநாடு’ என்று ஊடகங்களால் வர்ணிக்கப்பெற்ற, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு- பேச்சுவார்த்தை- 13.12.2022 அன்று எந்த வில்லங்கங்களுமில்லாமல் நடந்து முடிந்த பின்னர், திடீரென்று ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் 21.12.2022 மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் அலிசப்றி, கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா மற்றும் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஆகியோர் அரசாங்கத் தரப்பிலும் தமிழர் தரப்பில் …
-
- 0 replies
- 321 views
-
-
சின்னத் தேர்தலும் பெரிய கேள்விகளும் மொஹமட் பாதூஷா உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான சத்தியத்தன்மை குறித்த வாதப் பிரதிவாதங்களே, இன்று அரசியல் அரங்கை நிரப்பியுள்ளன. தேர்தல் நடந்தால், நாட்டில் நிலவும் பெரும்பாலான பிரச்சினைகள், நெருக்கடிகள் எல்லாம் முற்றாகத் தீர்ந்து விடும் என்ற அளவுக்கு அதன் முக்கியத்துவம் பெருப்பித்துக் காட்டப்படுகின்றது. இந்தப் பின்னணியில், தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்டத்தின்படி, வேட்புமனு தாக்கல் பூர்த்தியாகி, ஐந்து முதல் ஏழு வாரங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே, எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் சபைகளைக் கலைத்து, மார்ச் மாதத்தில் வாக்…
-
- 0 replies
- 182 views
-
-
அதிரடியான திருப்பங்களின் பின்னணியில் நடந்தது என்ன?-பேராசிரியா் அமிா்தலிங்கம் செவ்வி January 2, 2023 இலங்கையைப் பொறுத்தவரையில் இன்றுடன் விடைபெற்றுச் செல்லும் 2022 ஆம் ஆண்டு சரித்திரத்தில் எழுதப்பட வேண்டிய முக்கியமான வருடமாகிவிட்டது. எதிா்பாா்க்காத அதிரடியான அரசியல் திருப்பங்கள், வரலாற்றில் என்றுயே இல்லாத பாரிய பொருளாதார நெருக்கடி. ராஜபக்ஷக்களுக்கு எதிரான போராட்டம் என மறக்கமுடியாத பல நிகழ்வுகளைப் பதிந்துவிட்டு 2022 ஆம் ஆண்டு விடைபெற்றுச் செல்கின்றது. இந்த ஆண்டு எவ்வாறான தடங்களை விட்டுச்செல்கின்றது என்பதையிட்டு கொழும்பு பல்கலைக்கழக பொருளியா் துறை போராசிரியா் வழங்கியுள்ள செவ்வி கேள்வி – இந்த ஆண்டு இந்தளவுக்கு அதிரடியான குழப்பங்களை விட்டுச் ச…
-
- 2 replies
- 220 views
-
-
கோட்டாபயவும் அமெரிக்க விசாவும்: அன்று கைகளிலிருந்தது இன்று கனவாகிப்போனது-அகிலன் January 2, 2023 நான்கு வருடங்களுக்கு முன்னா் ஒரு அமெரிக்க பிரஜையாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இப்போது அமெரிக்கா என்பது ஒரு எட்ட முடியாத கனவாகிவிட்டது. 2019 இல் ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க குடியுரிமையைத் துறப்பதற்கு துடியாய்த் துடித்த கோட்டாபய, இப்போது அமெரிக்க “விசிட் விசா” என்றையாவது பெற்றுக்கொள்வதற்கு படாத பாடு படுகின்றாா். இன்று கோட்டாபயவின் கனவு அதுதான். எப்படியாவது அமெரிக்காவுக்கு விசா கிடைத்து போய்ச் சோ்ந்துவிட்டால் போதும் என்பதுதான். அவரது கனவு நனவாகுமா? கடந்த 26 ஆம் திகதி திங்கட்கிழமை (2022-12-26) அதிகாலை 2.55 மணியளவில் கொழும…
-
- 0 replies
- 217 views
-
-
அரசியல்வாதிகளின் ‘இலட்சணங்கள்’ மொஹமட் பாதுஷா ஆசிரியர்கள் தவறான பழக்கவழக்கங்கள் கொண்டவர்களாக இருந்துகொண்டும் ஒழுக்கக் கேடான காரியங்களைத் தொடர்ச்சியாகச் செய்துகொண்டும், தங்களது மாணவர்களை நல்வழிப்படுத்துவது என்பது முடியாத காரியமாகும். அதேபோல் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், அதிகாரத்தில் இருப்பவர்களில் கணிசமானவர்கள், பொதுவெளியிலும் திரைமறைவிலும் குற்றங்களை இழைப்பவர்களாக, சமூகவிரோதிகளாக, ஊழல் பெருச்சாளிகளாக, ஒழுக்கம் கெட்டவர்களாக வாழ்கின்ற நாட்டில், சட்டத்தையும் மக்களையும் நெறிப்படுத்துவது அவ்வளவு சாத்தியமில்லை. ‘கள்வனைப் பிடித்து விதானைக்கு வைத்தல்’ என்று கிராமப் புறங்களில் ஒரு பழமொழியை சொல்வார்கள். அதாவது, குற்றமிழைப்பவனை ஒரு பதவிக்கு நியமித்தல் என இது…
-
- 0 replies
- 206 views
-
-
13 ஆவது திருத்தச்சட்டத்தை அகற்ற ரணில் திட்டம் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கம் செய்து இந்தியத் தலையீட்டை இல்லாமல் செய்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கம். தற்போது புதுடில்லியில் இலங்கைக்கான தூதுவராக அமைச்சரவை அந்தஸ்த்துடன் பதவி வகிக்கும் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட 13 ஐ இலங்கை அரசியல் யாப்பில் இருந்து அகற்றுவற்கான திட்டங்களை வகுத்து வருகிறார் என்பதைச் சமீபகால அணுகுமுறைகள் காண்பிக்கின்றன. மிலிந்த மொறகொட 2002 சமாதானப் பேச்சுக் காலத்தில் எவ்வாறு ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கையைத் தரமிறக்கும் சர்வதேச நகர்வுகளில் ரணிலுக்கு விசுவாசமாக செயற்பட்டாரோ, அதனையும் விட கோட்டாபய ராஜபக்ச மிலிந்த மொறகொட மீது அதீத நம்பிக்கை வைத்து…
-
- 0 replies
- 261 views
-
-
மறைமுகமான சமாதான துாதுவராக செயற்படுகின்றாரா சொல்ஹெய்ம்?-அகிலன் December 28, 2022 இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் இடையில் ஆரம்பமாகியுள்ள பேச்சுவாா்த்தைகளில் தாம் எந்தப் பங்களிப்பையும் வழங்கவில்லை என்று எரிக்சொல்ஹெய்ம் கூறியிருக்கின்றாா். கொழும்பில் விஜயத்தை மேற்கொண்டிருக்கும் சொல்ஹெய்ம் அதிரடியாகப் பல அரசியல் தலைவா்களைச் சந்தித்துவருகின்றாா். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கின் காலநிலை ஆலோசகா் என்ற பதவி அவருக்கு வழங்கப்பட்டிருந்தாலும்கூட, அதற்கு மேலாக சமாதானத் துாதுவராகவே அவா் செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் பலமாக எழுந்திருப்பதற்கு நியாயமான பல காரணங்கள் உள்ளன. சொல்ஹெய்ம் கொழும்பில் இருக்கும் பின்னணி…
-
- 3 replies
- 324 views
-
-
ரணில் முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை அடுத்த வருடம் நடத்த முடியுமா? December 26, 2022 —ஸ்பார்ட்டகஸ் — உள்ளூராட்சி தேர்தல்களுக்கு நியமனப்பத்திரங்கள் தாக்கலுக்கான ஏற்பாடுகள் குறித்த வர்த்தமானி அறிவித்தலை இவ்வாரம் வெளியிடப்போவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா ஏற்கெனவே பல தடவைகள் அறிவித்துவிட்ட போதிலும், அந்த தேர்தல்கள் குறித்து நிச்சயமற்ற தன்மை தொடரவே செய்கிறது. சகல உள்ளூராட்சி சபைகளும் அடுத்த வருடம் மார்ச் மாதம் 20க்கு முன்னதாக அமைக்கப்படக்கூடியதாக தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று இடையறாது கோரிக்கை விடுத்துவரும் எதிரணி கட்சிகள் தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்துக்கொண்டிருப்பதாக சந்தேகத்தை வெளியிட்ட வண்ணமே இருக்கின்…
-
- 0 replies
- 167 views
-
-
மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் படுகொலையில் மறைக்கப்படும் நீதி -பா.அரியநேத்திரன் December 25, 2022 இன்று (25/12/2022) மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் படுகொலை இடம்பெற்று 17, வது நினைவு நாள். தமிழ்தேசிய கூட்டமைப்பு 2001.ல் உருவாக்கப்பட்டாலும் 2004,ஏப்ரல்,04,ல் இடம்பெற்ற பொதுத்தேர்தல் என்பது வரலாற்றில் முதல்தடவையாக வடக்கு கிழக்கில் இருந்து 633,654 வாக்குகளை தமிழ்தேசிய கூட்டமைப்பு பெற்று 22, பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட ஒரு தேர்தலாகும். 2004, பெப்ரவரி,06,ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மறுநாள் வேட்பு மனு கோரல் அறிவிப்பு விடுக்கப்பட்டு சகல மாவட்டங்களிலும் வேட்பு மனுக்கள் கையளிக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜோசப்பரரா…
-
- 1 reply
- 231 views
-
-
கம்பன் கழக ஜெயராஜ் பத்திரிகை ஆசிரியர்களை கொச்சைப்படுத்துகிறார்: பத்திரிகையாளர் நிக்ஸன் குற்றச்சாட்டு தமிழ் பத்திரிகைகளின் நான்கு பிரதம ஆசிரியர்கள் பற்றிக் கம்பன் கழக ஜெயராஜ் அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையில் எழுதிய கட்டுரை ஒன்றுக்குக் கொழும்பில் வாழும் மூத்த பத்திரிகையாளரும் ஊடகம் மற்றும் அரசறிவியல் விரிவுரையாளருமான அ.நிக்ஸன் தனது முகநூலில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.ஈழத்தமிழர்களுக்கு ஜெயராஜ் என்ற மனிதரின் முழு அடையாளமும் தெரியும். விரைவில் அவரின் வேஷம் முழுமையாகக் கலையும் எனவும் நிக்ஸன் தனது குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.பகிரங்கக் கடிதத்தின் விபரம் வருமாறு- …
-
- 9 replies
- 568 views
-
-
பகிடிவதை வன்முறையை ஒழிக்கமுடியாத அரசுகளும் முதல் பலியான தமிழ் மாணவனும் By T. Saranya 21 Dec, 2022 | 02:19 PM ம.ரூபன். மாணவர்களின் பகிடிவதை வன்முறைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.முன்னாள் துணைவேந்தரையும் மகனையும் தாக்கும் அளவுக்கு இவை மோசமாகியுள்ளது. பல்கலைக்கழகங்கள் ஆசிரியர்கள் கல்விசார் ஊழியர்கள் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற இடமாகியுள்ளது. கற்பிக்கும் ஆசான்களைத் தாக்கும் மிலேச்சத்தனமான செயற்பாடுகளை இனிமேலும் அனுமதிக்க முடியாது என பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தலைவர் பேராசிரியர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். கடந்த 13 பௌத்த பாலி பல்கலைக்கழகத்தில் பகிடி…
-
- 0 replies
- 353 views
-
-
முள்ளிவாய்க்கால் இரண்டாம் பாகம் நோக்கித் தமிழினம்?- மா.பு.பாஸ்கரன் Posted on December 14, 2022 by சமர்வீரன் 35 0 தமிழீழ விடுதலைப் போராட்டம் எப்போதெல்லாம் தமிழினத்துக்குச் சாதகமான திருப்புமுனையைச் சந்திக்கிறதோ அப்போதெல்லாம் அது வீழ்த்தப்பட்டதே வரலாறு. சிங்களம் தமிழ்த் தரப்போடு செய்த உடன்பாடுகளைத் தூக்கியெறிந்த சந்தர்ப்பங்கள் பல(1918 – 1965) ஆனால், மூன்றாம் தரப்பொன்றின் தலையீட்டில் எட்டப்பட்ட இரண்டு ஒப்பந்தங்கள் கூடச் சிங்களத்தால் நிராகரிக்கப்பட்டதே வரலாறு. இந்திய – இலங்கை ஒப்பந்தமானது பாதிக்கப்பட்ட தரப்பினது ஆலோசனைகளை நிராகரித்து இரு அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தமாக உருவாகியிருந்தது. அதில் தமிழர் தாயகமான இணைந்த வட-கிழக்கு என்ற விடயம் …
-
- 4 replies
- 751 views
-
-
முன்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக செயலாற்றும் சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பு Posted on December 16, 2022 by தென்னவள் 23 0 நிலைத்து நீடிக்கத்தக்க சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு கல்வி முக்கியமாகும். அதன் வெளிப்பாடாக உருவாக்கப்பட்ட அமைப்பாக சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பு காணப்படுகின்றது. இந்த அமைப்பின் தலைவராக ஆறுமுகம் சத்தியமூர்த்தி செயற்பட்டுவருகின்றார். இவர் தமது அமைப்பு தொடர்பாகவும் அதன் செயற்பாடுகள் தொடர்பாகவும் கருத்துத் தெரிவிக்கையில்… கொவிட்- 19 காலத்தில் உலகமே திகைத்துக் போயிருந்தபோது எமது மக்களுக்கு எத்தகைய உதவிகள் செய்யலாம் என அறிமுகமான நண்பர்களை இணைத்து குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எவ்…
-
- 0 replies
- 308 views
-
-
ரணிலின் சுதந்திர தின ‘வெற்றி’ உரைக்கு தமிழர் தரப்புடனான பேச்சு வழிவகுக்கும் Posted on December 18, 2022 by தென்னவள் 16 0 இனப்பிரச்சனைக்கு தீர்வு காணவென ஆரம்பிக்கப்பட்டிருக்கும் தமிழர் தரப்புடனான பேச்சுவார்த்தை ஜெனிவாவை ஒதுக்கிவிட ரணில் வகுத்திருக்கும் திட்டத்தில் முக்கியமானது. அதேசமயம், இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண ஏற்பாடாகி விட்டதாக தமது சுதந்திர தின உரையில் அவர் குறிப்பிடுவதற்கும் இந்தப் பேச்சுவார்த்தை வாய்ப்பளிக்கப் போகிறது. வடக்கு தமிழ் எம்.பிக்களுடன் அந்த மக்களின் பிரச்சனைகள் குறித்து பேச்சு நடைபெறுமென்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் பத்தாம் திகதி நாடாளுமன்றத்தில் ஓர் அறிவிப்பை விடுத்தார். தமிழர் பிரச்சனைய…
-
- 0 replies
- 174 views
-
-
காசி ஆனந்தன் கதைகள் : கிறுகிறுப்பும் -தலைச்சுற்றும்..! (மௌன உடைவுகள் -13) December 18, 2022 —- அழகு குணசீலன் —- முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடன் பேசுவதற்கு திகதி குறிக்கக் கோரியும் அவர்அதனைக் கிடப்பில் போட்டுவிட்டார் என்று புலம்பிய தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் இந்தியா முதல் அமெரிக்கா வரை சென்று முறையிட்டார்கள். இறுதியில் இலங்கை இனப்பிரச்சினையை இலங்கை அரசியலே தீர்க்கவேண்டும். என்ற “அட்டமெல்லாம் ஓடினாலும் இட்டது இட்டது தான்” என்றாகிவிட்டது. மறுபக்கத்தில் பேச்சுவார்த்தையில் பங்கு கொள்வதற்கான முன் நிபந்தனைகளை விதிப்பதற்கான பலம் தமிழ்தரப்பிடம் அறவே இல்லை. இதனால் பெரும்பாலான தமிழ்தேசிய அரசியல் கட்சிகள் பேச்சுக்களில் பங்கேற்கின்றன. சி…
-
- 0 replies
- 273 views
-
-
உலகின் வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை எந்தவொரு அணியுடனும் ஒத்திசைந்து செயற்பட வில்லை – ஜனாதிபதி By T. SARANYA 17 DEC, 2022 | 02:28 PM (எம்.மனோசித்ரா) உலகின் வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை எந்தவொரு அணியுடனும் ஒத்திசைந்து செயற்பட வில்லை. மாறாக சுயாதீனமான அணிசேரா நிலைப்பாட்டிலிருந்தே செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டைப் போன்றே அரசியலமைப்பையும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு இராணுவத்திற்கு உள்ளது. அதனை இன்று ஒப்படைப்பதாகவும் குறிப்பிட்டார். தியத்தலாவை இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சிகளை நிறைவு செய்த இராணுவ சிப்பாய்களுக்கு பதக்கமளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இட…
-
- 0 replies
- 152 views
- 1 follower
-
-
ரணிலின் சூழ்ச்சியால் நடந்த சர்வ கட்சி மாநாடு பற்றி விபரமாக பேசுகிறார் காண்டீபன்.
-
- 1 reply
- 338 views
- 1 follower
-
-
தடம் புரண்டு போயுள்ள தமிழ்த் தேசிய அரசியல் தன்னைத் தகவமைத்துக் கொள்வதற்கான தருணத்தைத் தவறவிடக்கூடாது. December 13, 2022 -தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்- (செயலாளர், அகில இலங்கை தமிழர் மகா சபை/தலைவர், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு) 1944 இற்கு முற்பட்ட காலத்து – சேர்.பொன்னம்பலம் இராமநாதன் மற்றும் சேர்.பொன்னம்பலம் அருணாசலம் காலத்து – அரசியல் சீர்த்திருத்தக் கோரிக்கைகள்; 1944 இலிருந்து 1949 வரை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையில் முன்னெடுக்கப்பெற்ற ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை உள்ளடங்களான அரசியல் முயற்சிகள்; 1949 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தோற்றத்தின் பின்பு எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் 1972 வரை ‘சமஸ்டி’ கோரி முன்னெடுக்கப்…
-
- 0 replies
- 526 views
-
-
அடுத்த 25ஆண்டுகளில் வலுவான பொருளாதாரத்தினை உருவாக்குவேன்- ஜனாதிபதி ரணில் 11 Dec, 2022 | 02:14 PM இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக்கூடிய வகையில் அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தினை மாற்றவுள்ளேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டம் மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி ரணில் விக் கிரமசிங்கவுடன் இளைஞர்கள் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இளைஞர்கள் முன்வைத்த கேள்விகளும் அதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய பதில்களும் வருமாறு : …
-
- 7 replies
- 865 views
-
-
“கிழக்கு கிழக்காக..!” : ஒரு வரலாற்றுப் பாடம்..!! (மௌன உடைவுகள் 12) December 9, 2022 — அழகு குணசீலன் — இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் குறித்து பேசப்படுகின்ற இன்றைய நிலையில் நாடாளுமன்றத்திற்கு உள்ளும், வெளியும் பேசப்பட்ட இருவேறு கருத்துக்கள் பற்றிய மௌன உடைவுகள் இது. அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர், பா.உ. சிவநேசதுரை சந்திரகாந்தன் “கிழக்கு கிழக்காக இருக்கின்ற 13 பிளஸ் தீர்வுக்கு” தங்கள் கட்சியின் ஆதரவு உண்டு என்று அறிவித்திருந்தார். தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர், பா.உ. இராஜவரோதயம் சம்பந்தன் தீர்வு இல்லையேல் “தமிழ் மக்கள் அடையாளம், சுயமரியாதை, ஏன்?கௌரவத்தை கூ…
-
- 10 replies
- 1.4k views
-
-
தீர்வுக்கான வாய்ப்புகள் அதிர்ஸ்டம் நிறைந்தவை – தவறவிடப்பட முடியாதவை December 9, 2022 — கருணாகரன் — ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினுடைய அறிவிப்பின்படி அடுத்த சில நாட்களில் (12.12.2022) இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான (ஜனாதிபதியில் அறிவிப்பின்படி அதிகாரப் பரவலாக்கத்துக்கான) பேச்சுகள் ஆரம்பமாக வேண்டும். கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் அவர் அதற்குத் தயார். இதை அவர் ஏற்கனவே பாராளுமன்றத்திலும் ஓரளவுக்கு வெளிப்படுத்தியிருந்தார் –வெளிப்படையாகப் பேசியிருந்தார். தான் மட்டுமல்ல, ஏறக்குறைய அனைவரும் இதற்குச் சம்மதம்தானே என்பதையும் நேரில் கேட்டிருந்தார். ஜே.வி.பி மட்டும் சறுக்கியது. மற்றத் தரப்புகள் விரும்பியோ விரும்பாமலோ தலையாட்டின. தமிழ்த்தரப…
-
- 0 replies
- 706 views
-
-
முன்னாள் ராணுவ மேஜர் ஹசித சிறிவர்தனவின் வாக்குமூலம் இறுதி யுத்த காலம் அடங்கலாக பல வருடங்கள் ராணுவத்தில் பணிபுரிந்த மேஜரான ஹசித சிறிவர்த்தன கடந்த சில வருடங்களாக மகிந்த, கோத்தா, கமால் குணரட்ண ஆகியோருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து வருகிறார். உயிரச்சம் காரணமாக அமெரிக்காவில் மறைந்து வாழும் இவர் அவ்வப்போது காணொளிகளை யூடியூப் தளத்தில் வெளியிட்டு வருகிறார். அண்மையில், இலங்கையின் பிரபல தொலைக்காட்சி செவ்வியாளரான சமுதித்தவுடனான இவரது நேர்காணல் யூடியூப் தளத்தில் வெளிவந்திருக்கிறது. வெள்ளைக்கொடி சரணாளிகளைப் படுகொலை செய்தது, மதிவதனி அக்காவின் படுகொலை, பெர்ணான்டோபுள்ளேயின் படுகொலை உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குற…
-
- 17 replies
- 1.5k views
-
-
நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா….? சொல்லுங்கள் ! ?…. அவதானி. இராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றி அறிந்திருப்பீர்கள். அவர் சிறந்த கதை சொல்லி. அவர் சொன்ன கதைதான் இது:- ஒரு காட்டில் வாழ்ந்த முனிவர், தனது சீடரான மற்றும் ஒரு முனிவரிடம் ஆசிரமத்தை பார்த்துக்கொள்ளச்சொல்லிவிட்டு, வெளிப்பிரதேசம் ஒன்றுக்கு சென்றுவிட்டார். அப்போது அந்த சீடர் ஒரு சிறிய கோவணத்துண்டுடன்தான் இருந்தார். ஒரு நாள் அந்தக் கோவணத்துண்டை எலி கடித்துவிட்டது. அந்தக் காட்டில் வாழ்ந்த காட்டு வாசிகள் அவரது நிலையை பரிதாபத்துடன் பார்த்துவிட்டு, எலியை பிடிப்பதற்காக ஒரு பூனையை கொண்டுவந்து கொடுத்தார்கள். அதற்கு தினமும் பால் தேவைப்பட்டது. அந்தச் சீடர் மக்களிடம் சொன்னார். அவர்கள் ஒரு பசுவையும் க…
-
- 2 replies
- 259 views
- 1 follower
-
-
வளங்கள் நிறைந்த மட்டக்களப்பில் வறுமை ஏன் ? - ஒரு தேடல் By DIGITAL DESK 2 14 NOV, 2022 | 09:37 AM வ.சக்திவேல் முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களும் நிலவளம், நீர்வளம், வனவளம், கடல்வளம், ஆகியவையும் ஒருங்கே அமையப்பெற்ற மிகவும் வளம் பொருந்தியதும் செழிப்பானதுமான மாவட்டம் மட்டக்களப்பு என்று துறைசார்ந்தோர் தெரிவிக்கின்றனர். இலங்கையில் இயற்கையின் கொடையாக எல்லா வளங்களும் ஒருங்கே அமையப் பெற்ற மாவட்டம் மட்டக்களப்பு என்பது நோக்கர்களின் கருத்தாகும். 2610 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 103 கிலோ மீற்றர் நீளம் கொண்ட வாவியும்,139 கிலோ மீற்றர் நீளம் கொண்ட கடற்கரை…
-
- 10 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 397 views
- 1 follower
-