Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் படுகொலையில் மறைக்கப்படும் நீதி -பா.அரியநேத்திரன் December 25, 2022 இன்று (25/12/2022) மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் படுகொலை இடம்பெற்று 17, வது நினைவு நாள். தமிழ்தேசிய கூட்டமைப்பு 2001.ல் உருவாக்கப்பட்டாலும் 2004,ஏப்ரல்,04,ல் இடம்பெற்ற பொதுத்தேர்தல் என்பது வரலாற்றில் முதல்தடவையாக வடக்கு கிழக்கில் இருந்து 633,654 வாக்குகளை தமிழ்தேசிய கூட்டமைப்பு பெற்று 22, பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட ஒரு தேர்தலாகும். 2004, பெப்ரவரி,06,ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மறுநாள் வேட்பு மனு கோரல் அறிவிப்பு விடுக்கப்பட்டு சகல மாவட்டங்களிலும் வேட்பு மனுக்கள் கையளிக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜோசப்பரரா…

  2. கம்பன் கழக ஜெயராஜ் பத்திரிகை ஆசிரியர்களை கொச்சைப்படுத்துகிறார்: பத்திரிகையாளர் நிக்ஸன் குற்றச்சாட்டு தமிழ் பத்திரிகைகளின் நான்கு பிரதம ஆசிரியர்கள் பற்றிக் கம்பன் கழக ஜெயராஜ் அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையில் எழுதிய கட்டுரை ஒன்றுக்குக் கொழும்பில் வாழும் மூத்த பத்திரிகையாளரும் ஊடகம் மற்றும் அரசறிவியல் விரிவுரையாளருமான அ.நிக்ஸன் தனது முகநூலில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.ஈழத்தமிழர்களுக்கு ஜெயராஜ் என்ற மனிதரின் முழு அடையாளமும் தெரியும். விரைவில் அவரின் வேஷம் முழுமையாகக் கலையும் எனவும் நிக்ஸன் தனது குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.பகிரங்கக் கடிதத்தின் விபரம் வருமாறு- …

  3. பகிடிவதை வன்முறையை ஒழிக்கமுடியாத அரசுகளும் முதல் பலியான தமிழ் மாணவனும் By T. Saranya 21 Dec, 2022 | 02:19 PM ம.ரூபன். மாணவர்களின் பகிடிவதை வன்முறைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.முன்னாள் துணைவேந்தரையும் மகனையும் தாக்கும் அளவுக்கு இவை மோசமாகியுள்ளது. பல்கலைக்கழகங்கள் ஆசிரியர்கள் கல்விசார் ஊழியர்கள் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற இடமாகியுள்ளது. கற்பிக்கும் ஆசான்களைத் தாக்கும் மிலேச்சத்தனமான செயற்பாடுகளை இனிமேலும் அனுமதிக்க முடியாது என பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தலைவர் பேராசிரியர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். கடந்த 13 பௌத்த பாலி பல்கலைக்கழகத்தில் பகிடி…

  4. முள்ளிவாய்க்கால் இரண்டாம் பாகம் நோக்கித் தமிழினம்?- மா.பு.பாஸ்கரன் Posted on December 14, 2022 by சமர்வீரன் 35 0 தமிழீழ விடுதலைப் போராட்டம் எப்போதெல்லாம் தமிழினத்துக்குச் சாதகமான திருப்புமுனையைச் சந்திக்கிறதோ அப்போதெல்லாம் அது வீழ்த்தப்பட்டதே வரலாறு. சிங்களம் தமிழ்த் தரப்போடு செய்த உடன்பாடுகளைத் தூக்கியெறிந்த சந்தர்ப்பங்கள் பல(1918 – 1965) ஆனால், மூன்றாம் தரப்பொன்றின் தலையீட்டில் எட்டப்பட்ட இரண்டு ஒப்பந்தங்கள் கூடச் சிங்களத்தால் நிராகரிக்கப்பட்டதே வரலாறு. இந்திய – இலங்கை ஒப்பந்தமானது பாதிக்கப்பட்ட தரப்பினது ஆலோசனைகளை நிராகரித்து இரு அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தமாக உருவாகியிருந்தது. அதில் தமிழர் தாயகமான இணைந்த வட-கிழக்கு என்ற விடயம் …

    • 4 replies
    • 731 views
  5. முன்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக செயலாற்றும் சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பு Posted on December 16, 2022 by தென்னவள் 23 0 நிலைத்து நீடிக்கத்தக்க சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு கல்வி முக்கியமாகும். அதன் வெளிப்பாடாக உருவாக்கப்பட்ட அமைப்பாக சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பு காணப்படுகின்றது. இந்த அமைப்பின் தலைவராக ஆறுமுகம் சத்தியமூர்த்தி செயற்பட்டுவருகின்றார். இவர் தமது அமைப்பு தொடர்பாகவும் அதன் செயற்பாடுகள் தொடர்பாகவும் கருத்துத் தெரிவிக்கையில்… கொவிட்- 19 காலத்தில் உலகமே திகைத்துக் போயிருந்தபோது எமது மக்களுக்கு எத்தகைய உதவிகள் செய்யலாம் என அறிமுகமான நண்பர்களை இணைத்து குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எவ்…

    • 0 replies
    • 293 views
  6. ரணிலின் சுதந்திர தின ‘வெற்றி’ உரைக்கு தமிழர் தரப்புடனான பேச்சு வழிவகுக்கும் Posted on December 18, 2022 by தென்னவள் 16 0 இனப்பிரச்சனைக்கு தீர்வு காணவென ஆரம்பிக்கப்பட்டிருக்கும் தமிழர் தரப்புடனான பேச்சுவார்த்தை ஜெனிவாவை ஒதுக்கிவிட ரணில் வகுத்திருக்கும் திட்டத்தில் முக்கியமானது. அதேசமயம், இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண ஏற்பாடாகி விட்டதாக தமது சுதந்திர தின உரையில் அவர் குறிப்பிடுவதற்கும் இந்தப் பேச்சுவார்த்தை வாய்ப்பளிக்கப் போகிறது. வடக்கு தமிழ் எம்.பிக்களுடன் அந்த மக்களின் பிரச்சனைகள் குறித்து பேச்சு நடைபெறுமென்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் பத்தாம் திகதி நாடாளுமன்றத்தில் ஓர் அறிவிப்பை விடுத்தார். தமிழர் பிரச்சனைய…

    • 0 replies
    • 163 views
  7. காசி ஆனந்தன் கதைகள் : கிறுகிறுப்பும் -தலைச்சுற்றும்..! (மௌன உடைவுகள் -13) December 18, 2022 —- அழகு குணசீலன் —- முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடன் பேசுவதற்கு திகதி குறிக்கக் கோரியும் அவர்அதனைக் கிடப்பில் போட்டுவிட்டார் என்று புலம்பிய தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் இந்தியா முதல் அமெரிக்கா வரை சென்று முறையிட்டார்கள். இறுதியில் இலங்கை இனப்பிரச்சினையை இலங்கை அரசியலே தீர்க்கவேண்டும். என்ற “அட்டமெல்லாம் ஓடினாலும் இட்டது இட்டது தான்” என்றாகிவிட்டது. மறுபக்கத்தில் பேச்சுவார்த்தையில் பங்கு கொள்வதற்கான முன் நிபந்தனைகளை விதிப்பதற்கான பலம் தமிழ்தரப்பிடம் அறவே இல்லை. இதனால் பெரும்பாலான தமிழ்தேசிய அரசியல் கட்சிகள் பேச்சுக்களில் பங்கேற்கின்றன. சி…

  8. உலகின் வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை எந்தவொரு அணியுடனும் ஒத்திசைந்து செயற்பட வில்லை – ஜனாதிபதி By T. SARANYA 17 DEC, 2022 | 02:28 PM (எம்.மனோசித்ரா) உலகின் வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை எந்தவொரு அணியுடனும் ஒத்திசைந்து செயற்பட வில்லை. மாறாக சுயாதீனமான அணிசேரா நிலைப்பாட்டிலிருந்தே செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டைப் போன்றே அரசியலமைப்பையும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு இராணுவத்திற்கு உள்ளது. அதனை இன்று ஒப்படைப்பதாகவும் குறிப்பிட்டார். தியத்தலாவை இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சிகளை நிறைவு செய்த இராணுவ சிப்பாய்களுக்கு பதக்கமளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இட…

  9. ரணிலின் சூழ்ச்சியால் நடந்த சர்வ கட்சி மாநாடு பற்றி விபரமாக பேசுகிறார் காண்டீபன்.

  10. தடம் புரண்டு போயுள்ள தமிழ்த் தேசிய அரசியல் தன்னைத் தகவமைத்துக் கொள்வதற்கான தருணத்தைத் தவறவிடக்கூடாது. December 13, 2022 -தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்- (செயலாளர், அகில இலங்கை தமிழர் மகா சபை/தலைவர், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு) 1944 இற்கு முற்பட்ட காலத்து – சேர்.பொன்னம்பலம் இராமநாதன் மற்றும் சேர்.பொன்னம்பலம் அருணாசலம் காலத்து – அரசியல் சீர்த்திருத்தக் கோரிக்கைகள்; 1944 இலிருந்து 1949 வரை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையில் முன்னெடுக்கப்பெற்ற ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை உள்ளடங்களான அரசியல் முயற்சிகள்; 1949 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தோற்றத்தின் பின்பு எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் 1972 வரை ‘சமஸ்டி’ கோரி முன்னெடுக்கப்…

  11. அடுத்த 25ஆண்டுகளில் வலுவான பொருளாதாரத்தினை உருவாக்குவேன்- ஜனாதிபதி ரணில் 11 Dec, 2022 | 02:14 PM இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக்கூடிய வகையில் அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தினை மாற்றவுள்ளேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டம் மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி ரணில் விக் கிரமசிங்கவுடன் இளைஞர்கள் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இளைஞர்கள் முன்வைத்த கேள்விகளும் அதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய பதில்களும் வருமாறு : …

  12. “கிழக்கு கிழக்காக..!” : ஒரு வரலாற்றுப் பாடம்..!! (மௌன உடைவுகள் 12) December 9, 2022 — அழகு குணசீலன் — இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் குறித்து பேசப்படுகின்ற இன்றைய நிலையில் நாடாளுமன்றத்திற்கு உள்ளும், வெளியும் பேசப்பட்ட இருவேறு கருத்துக்கள் பற்றிய மௌன உடைவுகள் இது. அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர், பா.உ. சிவநேசதுரை சந்திரகாந்தன் “கிழக்கு கிழக்காக இருக்கின்ற 13 பிளஸ் தீர்வுக்கு” தங்கள் கட்சியின் ஆதரவு உண்டு என்று அறிவித்திருந்தார். தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர், பா.உ. இராஜவரோதயம் சம்பந்தன் தீர்வு இல்லையேல் “தமிழ் மக்கள் அடையாளம், சுயமரியாதை, ஏன்?கௌரவத்தை கூ…

  13. தீர்வுக்கான வாய்ப்புகள் அதிர்ஸ்டம் நிறைந்தவை – தவறவிடப்பட முடியாதவை December 9, 2022 — கருணாகரன் — ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினுடைய அறிவிப்பின்படி அடுத்த சில நாட்களில் (12.12.2022) இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான (ஜனாதிபதியில் அறிவிப்பின்படி அதிகாரப் பரவலாக்கத்துக்கான) பேச்சுகள் ஆரம்பமாக வேண்டும். கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் அவர் அதற்குத் தயார். இதை அவர் ஏற்கனவே பாராளுமன்றத்திலும் ஓரளவுக்கு வெளிப்படுத்தியிருந்தார் –வெளிப்படையாகப் பேசியிருந்தார். தான் மட்டுமல்ல, ஏறக்குறைய அனைவரும் இதற்குச் சம்மதம்தானே என்பதையும் நேரில் கேட்டிருந்தார். ஜே.வி.பி மட்டும் சறுக்கியது. மற்றத் தரப்புகள் விரும்பியோ விரும்பாமலோ தலையாட்டின. தமிழ்த்தரப…

  14. முன்னாள் ராணுவ மேஜர் ஹசித சிறிவர்தனவின் வாக்குமூலம் இறுதி யுத்த காலம் அடங்கலாக பல வருடங்கள் ராணுவத்தில் பணிபுரிந்த மேஜரான ஹசித சிறிவர்த்தன கடந்த சில வருடங்களாக மகிந்த, கோத்தா, கமால் குணரட்ண ஆகியோருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து வருகிறார். உயிரச்சம் காரணமாக அமெரிக்காவில் மறைந்து வாழும் இவர் அவ்வப்போது காணொளிகளை யூடியூப் தளத்தில் வெளியிட்டு வருகிறார். அண்மையில், இலங்கையின் பிரபல தொலைக்காட்சி செவ்வியாளரான சமுதித்தவுடனான இவரது நேர்காணல் யூடியூப் தளத்தில் வெளிவந்திருக்கிறது. வெள்ளைக்கொடி சரணாளிகளைப் படுகொலை செய்தது, மதிவதனி அக்காவின் படுகொலை, பெர்ணான்டோபுள்ளேயின் படுகொலை உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குற…

  15. நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா….? சொல்லுங்கள் ! ?…. அவதானி. இராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றி அறிந்திருப்பீர்கள். அவர் சிறந்த கதை சொல்லி. அவர் சொன்ன கதைதான் இது:- ஒரு காட்டில் வாழ்ந்த முனிவர், தனது சீடரான மற்றும் ஒரு முனிவரிடம் ஆசிரமத்தை பார்த்துக்கொள்ளச்சொல்லிவிட்டு, வெளிப்பிரதேசம் ஒன்றுக்கு சென்றுவிட்டார். அப்போது அந்த சீடர் ஒரு சிறிய கோவணத்துண்டுடன்தான் இருந்தார். ஒரு நாள் அந்தக் கோவணத்துண்டை எலி கடித்துவிட்டது. அந்தக் காட்டில் வாழ்ந்த காட்டு வாசிகள் அவரது நிலையை பரிதாபத்துடன் பார்த்துவிட்டு, எலியை பிடிப்பதற்காக ஒரு பூனையை கொண்டுவந்து கொடுத்தார்கள். அதற்கு தினமும் பால் தேவைப்பட்டது. அந்தச் சீடர் மக்களிடம் சொன்னார். அவர்கள் ஒரு பசுவையும் க…

  16. வளங்கள் நிறைந்த மட்டக்களப்பில் வறுமை ஏன் ? - ஒரு தேடல் By DIGITAL DESK 2 14 NOV, 2022 | 09:37 AM வ.சக்திவேல் முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களும் நிலவளம், நீர்வளம், வனவளம், கடல்வளம், ஆகியவையும் ஒருங்கே அமையப்பெற்ற மிகவும் வளம் பொருந்தியதும் செழிப்பானதுமான மாவட்டம் மட்டக்களப்பு என்று துறைசார்ந்தோர் தெரிவிக்கின்றனர். இலங்கையில் இயற்கையின் கொடையாக எல்லா வளங்களும் ஒருங்கே அமையப் பெற்ற மாவட்டம் மட்டக்களப்பு என்பது நோக்கர்களின் கருத்தாகும். 2610 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 103 கிலோ மீற்றர் நீளம் கொண்ட வாவியும்,139 கிலோ மீற்றர் நீளம் கொண்ட கடற்கரை…

    • 10 replies
    • 1.4k views
  17. தமிழ்ப்படகு மக்கள் 15 NOV, 2022 | 01:31 PM படகு மக்கள் என்று சொன்னால் ஒரு காலத்தில் வியட்நாமியர்களே நினைவுக்கு வருவர்.வியட்நாம் போரில் 1975 ஆம் ஆண்டு அமெரிக்கா தோற்கடிக்கப்பட்டதன் பிறகு ஆயிரக்கணக்கான வியட்நாமியர்கள் (பெரும்பாலானவர்கள் சீன வம்சாவளியினர்) தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர்.பலவீனமான படகுகளில் பயணம் செய்த அவர்கள் ஆழ்கடலில் அனுபவித்த அவலங்கள் தொடர்பான விபரங்கள் நடுக்கம் தருபவை. ஆபிரிக்காவில் இருந்தும் மத்திய கிழக்கில் இருந்து ஐரோப்பாவுக்கு மத்திய தரைக்கடலின் ஊடாக படகுகளில் சென்ற படகு மக்களின் அவலங்கள் தனியான வரலாறு. உலகின் படகு மக்களின் வரலாற்றுக்கு இலங்கைத் தமிழர்களும் …

  18. ராஜபக்ஷவினரது அரசியலின் விளைவு By DIGITAL DESK 2 13 NOV, 2022 | 03:15 PM (சத்ரியன்) “வெளிநாட்டில் பணியாற்றுவதற்காக செல்லும் மருத்துவர்கள் மீளத்திரும்பமாட்டார்கள். அவர்கள் சிறிது காலத்துக்கு, டொலரை அனுப்பினாலும், குடும்பத்துடன் புலம்பெயர்ந்து விடுவார்கள். அவர்களால் அரசாங்கத்துக்கு எந்த வருமானமும் கிடைக்காது” மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வரவேண்டாம் அல்லது குறைந்தபட்சம் அவர் அவ்வாறு வரப்போகிறேன் என்று கூறாமல் இருந்தால் கூடப் போதும் என, அண்மையில் கொழும்பில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது கூறியிருந்தார் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க. அதற்கு அவர் குறிப்பிட்டிருக்கின்ற காரணம் அரசியல் நோக்கி…

  19. தமிழ்க் கல்வி அதிகாரிகளின் நியமனங்களை விரும்பாத பேரினவாத செயற்பாடுகள் By DIGITAL DESK 2 15 NOV, 2022 | 09:39 AM (சிவலிங்கம் சிவகுமாரன்) அதிக தமிழ் பாடசாலைகளையும் மாணவர்களையும் கொண்டிருக்கக் கூடிய அட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களை நான்காக பிரிக்க திட்டமிடப்பட்டிருந்தாலும் திடீரென அவை மூன்றாக குறைக்கப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்டமானது தொடர்ச்சியாக தமிழ்க் கல்வி அமைச்சை தக்க வைத்திருக்கும் பிரதேசமாகும். கல்வி இராஜாங்க அமைச்சும் இம்மாவட்டத்துக்கே கிடைத்திருந்தது. எனினும் இந்த பதவிகள், எந்தளவுக்கு நிர்வாக பொறுப்புகளை தமிழ் அதிகாரிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கின்றன என்பது கேள்விக்குரியே. நுவ…

  20. குறுகிய சந்துக்குள் கூக்குரலிடாமல் விரிந்த வெளியில் சிறகை விரியுங்கள் November 15, 2022 — கருணாகரன் — “தமிழரசுக் கட்சி காலமாகி விட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏறக்குறைய செல்லாக் காசாகி விட்டதாகச் சொல்கிறீர்கள். அப்படியென்றால், அடுத்ததாக உங்கள் தெரிவு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியா? அல்லது விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியா? அல்லது ஐங்கரநேசனின் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கமா? அல்லது சிவாஜிலிங்கம் –ஸ்ரீகாந்தாவின் தமிழ்த்தேசியக் கட்சியா? அல்லது வேறு ஏதாவது உண்டா?” என்று கேட்கின்றனர் சில நண்பர்கள். இதற்கு என்ன பதிலைச் சொல்ல முடியும்? ஏனென்றால், இவர்கள் தேடுவது தங்களுக்குத் தெரிந்த வட்டத்திற்குள்தான். அதற்கப்…

  21. வளங்கள் நிறைந்த மட்டக்களப்பில் வறுமை ஏன் ? - ஒரு தேடல் By Digital Desk 2 14 Nov, 2022 | 09:37 AM வ.சக்திவேல் முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களும் நிலவளம், நீர்வளம், வனவளம், கடல்வளம், ஆகியவையும் ஒருங்கே அமையப்பெற்ற மிகவும் வளம் பொருந்தியதும் செழிப்பானதுமான மாவட்டம் மட்டக்களப்பு என்று துறைசார்ந்தோர் தெரிவிக்கின்றனர். இலங்கையில் இயற்கையின் கொடையாக எல்லா வளங்களும் ஒருங்கே அமையப் பெற்ற மாவட்டம் மட்டக்களப்பு என்பது நோக்கர்களின் கருத்தாகும். 2610 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 103 கிலோ மீற்றர் நீளம் கொண்…

  22. வடக்கில் சடுதியாக அதிகரித்துள்ள பாடசாலை இடை விலகல்கள் By DIGITAL DESK 2 13 NOV, 2022 | 03:50 PM (ஆர்.ராம்) “இந்த ஆண்டில் தற்போது வரையில் 519மாணவர்கள் இடைவிலகியுள்ளதோடு இதில் வலிகாமம் கல்வி வலயம் முதலிடத்திலுள்ளது” வடக்கு மாகாணத்தில் பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளது. வடமாகாண கல்வித் திணைக்களத்தின் தகவல்களுக்கு அமைவாக, பாடசாலைகளில் இருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டு 485ஆகவும், 2021ஆம் ஆண்டு ஆயிரத்து 105 ஆகவும், இந்த ஆண்டில் தற்போது வரையில் 519 ஆகவும் உள்ளது. வடக்கு மாகாணத்தில் 2020 ஆம் ஆண்டு ஆகக்கூடுதல…

  23. பிரபாகரனும் // ரோகணவும்..! ஒரு புள்ளியில் சந்திக்காத இரு நேர்கோடுகள். (மௌன உடைவுகள் 08) November 12, 2022 — அழகு குணசீலன் — இலங்கையின் ஆயுதப்போராட்ட வரலாறு இருதுருவங்களைக் கொண்டது. ஒன்று வடதுருவம், மற்றையது தென்துருவம். எப்படி ஒன்றுக்கு ஒன்று எதிர்த்திசையில் உள்ள இத்திசைகள் இணைய முடியாதோ, அப்படியே விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனதும், ஜே.வி.பி.யின் தலைவர் ரோகண விஜயவீரவினதும் அரசியலும் அமைந்து இருந்தன. தமிழ்த்தேசிய விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் 2009 மே.18 /19 இல் முடிந்தது போன்று ஜே.வி.பி.யின் சிங்கள தேசியத்தை மையப்படுத்திய ஆயுதம் தாங்கிய வர்க்கப்போராட்டம் (?) ரோகணவின் மரணத்துடன் 1989 நவம்பர் 13 இல் முடிவுக்கு (?) வந்…

  24. தீவிரமடையும் யானை -மனித மோதல் ? உயிரிழப்புக்களை தடுக்க புதிய முயற்சி 07 NOV, 2022 | 08:34 AM ரொபட் அன்டனி உலகில் யானை - மனித மோதலில் முதலிடத்தில் இலங்கை வருடம் ஒன்றுக்கு 400 யானைகளும் 100 பொதுமக்களும் உயிரிழப்பு மக்களின் வாழ்விடங்களுக்கு வருகின்ற யானைகள் மக்களின் பயிர்கள், விளை நிலங்கள், வயல் வெளிகளை நாசமாக்குவதுடன் வீடுகள், சொத்துக்களையும் அழிக்கின்றன இலங்கையில் மொத்தமாக 5800 யானைகள் பல தசாப்தங்களின் பின்னர் நிம்மதியாக உறங்கப்போகிறோம் - கிராமவாசி சுபசிங்க யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் சகவாழ்வை ஏற்படுத்துவதே பிரச்சினைக்கு தீர்வாக அமையும் – யானைகள் குறித்த விஞ்ஞானி பிரிதிவிராஜ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.