நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
சுவிஸைப் போன்று இலங்கையிலும் மாகாணங்களுக்கு சமஷ்டி வேண்டும் - அரசியல் விவகார அதிகாரி! சனிக்கிழமை, 15 செப்டம்பர் 2012 09:18 சுவிஸில் 26 மாநிலங்களும் சுயமாக அதிகாரங்களைக் கொண்டு தாமே நிர்வகிக்கும் சமஷ்டி ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது. அதேபோன்று இலங்கையிலும் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து அவை தங்களைத் தாங்களே நிர்வகிக்கும் சமஷ்டி ஆட்சி முறையை நடைமுறைக்கு கொண்டு வருவதே பொருத்தமானது. இத்தகைய ஆட்சி முறையை கொண்டுவர சகல இனங்களும் பேச்சு நடத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இதையே இந்த நாட்டுக்கு நாம் தெரிவித்து வருகின்றோம். சுவிஸ் நாட்டின் அரசியல் விவகார அமைச்சைச் சேர்ந்த பொருளாதார அபிவிருத்தி அதிகாரி தமினானோ சுடே தமாத்தி மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 2 replies
- 680 views
-
-
கலைஞர் முதல் வலைஞர் வரை - சி. சரவண கார்த்திகேயன்கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் மு. கருணாநிதி ட்விட்டரில் தன் அதிகாரப்பூர்வக் கணக்கைத் தொடங்கி இருக்கிறார். அவர் போட்ட முதல் ட்வீட் ஆங்கிலத்தில் இருந்தது. டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் பற்றியது அது. ஆதரவாளர்களிடம் இருந்து வாழ்த்துகளும் வரவேற்புகளும் பெருகத் தொடங்க, சிறிது நேரத்தில், திமுக மாநில மாநாடு நடைபெரும் நகரின் சாலைபோல் மாறிவிட்டது ட்விட்டர் டைம்லைன். ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட இணையத்தளங்களை எந்தவொரு பிரபலத்தாலும் புறக்கணித்துவிடமுடியாது என்பதற்கு கலைஞர் ஓர் உதாரணம். சோஷியல் நெட்வொர்க்கிங் சைட்ஸ் எனப்படும் சமூக வலைத்தளங்கள் நம் வாழ்வின் அத்தியாவசியமாகி ரொம்ப காலம் ஆ…
-
- 0 replies
- 940 views
-
-
-
கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீ.மு.காங்கிரஸ் மாறியுள்ள நிலையில், ஸ்ரீ.மு.காங்கிரஸினதும் முஸ்லிம் தலைமைகளினதும் பேரங்கள் அதிகரித்துள்ளன: அரசியல் கோரிக்கைகள் பெருகியுள்ளன. 14 ஆசனங்களைப் பெற்றுள்ள ஐ.ம.சு.முன்னணியுடன் 01 ஆசனத்தினைப் பெற்ற சுதந்திர தேசிய முன்னணியும் இணைந்துள்ள நிலையில் அக்கூட்டணிக்கு 15 ஆசனங்கள் உள்ளன. மறுபுறம் 11 ஆசனங்களைப் பெற்றுள்ள தமிழ் அரசுக் கட்சிக்கு 04 ஆசனங்களைப் பெற்றுள்ள ஐ.தே.கட்சி ஆதரவளிக்க முன்வந்துள்ள நிலையில் அக்கூட்டணிக்கு 15 ஆசனங்கள் உள்ளன. இந்த நிலையில்தான் கிழக்கில் 07 ஆசனங்களைப் பெற்றுள்ள ஸ்ரீ.மு.காங்கிரஸின் துணையின்றி எக்கட்சியும் ஆட்சியளிக்கு முடியா நிலை தோன்றியிருக்கிறது. தேர்தலில் கிழக்கின் ஆட்சியைத் …
-
- 0 replies
- 765 views
-
-
சீனா ஆசியா கண்டத்தின் கிழக்கில் அமைந்துள்ளது. சீனா 5000 ஆண்டுகளுக்கு மேலான பழைமையான பண்டைய வரலாறு. என்னதான் பழமையான நாடாக இருந்தாலும் அயல் நாடுகளை ஆக்கிரமிப்புச் செய்துள்ளதுடன், மனித குலத்திற்கெதிரான செயற்பாடுகளை மேற்கொண்ட ஒரு போர்க்குற்றம் சுமத்தப்பட்ட நாடாகத்தான் சீனா விளங்குகிறது. எடுத்துக் காட்டாக திபெத்திய மக்களின் திபெத் நிலப்பகுதியை 1950களில் சீனா வன்முறையாக ஆக்கிரமித்து, இதனால், அவர்களின் அரசியல் சமய தலைமை வெளியே செல்ல வேண்டி வந்தது. அதன் பின்னர் அவர்கள் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் உட்பட்டு அவர்களின் தனித்துவ மொழி, சமய, பண்பாட்டு முறைகள் சீரளிவுக்கு உள்ளாகியது சீனா. சீனாவில் 1927 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மக்கள் விடுதலை படை, 1950 இல் திபெத்தில் நுழைந்தது கிட்…
-
- 4 replies
- 929 views
-
-
முள்ளிவாய்கால் மண்ணில் இரத்த ஆறு ஓடியபோது, பூவும் பிஞ்சும் உடல் சிறதிக்கிடந்த போது, பிணங்களின்மேல் குண்டு மழை பொழிந்தபோது, பசித்த வயிற்றோடு வந்த எங்கள் சொந்தங்களின் ஆடைகிழித்து சிங்கள காடையன் மானத்தைத் தின்றபோது, சிங்களவனுக்கு வந்திராத அக்கறை, பரிவு மிருக பலியிடலின்போதாவது வந்திருக்கின்றதே என்று எண்ணும்போது வியப்பாகவே இருகின்றது. முன்னேஸ்வரம் ஆலயத்தில் மிருகபலிக்கு எதிராக காட்டுமிராண்டி மேர்வின் சில்வாவும், இனவாத பௌத்த பிக்குகளும் நடத்திய போராட்டத்தையடுத்து மிருகபலியிடலை நிறுத்துமாறு சிறீலங்கா ஜனாதிபதி உத்தரவிட்டிருக்கின்றார். இந்தச் செய்தியை தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலுமுள்ள தமிழர்கள் மிகவும் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த நடவடிக்கைக்குப்…
-
- 0 replies
- 365 views
-
-
விடுதலைக்கான ஆயுதம் தாங்கிய விடுதலை அமைப்புக்கள் தோற்றம்பெற்றிருந்தாலும், சிங்கள இராணுவத்திற்கு எதிரான போராட்டங்கள் இடம்பெறாத அக்காலத்தில் தமிழர் தேசங்களை சிங்கள தேசம் எவ்வாறு ஆக்கிரமிக்கின்றது என்பதையும் அதற்கு போராட்டம் தான் வழி என்பதையும் வலியுறுத்தி 18.05.1980 அன்று ‘சுதந்திரன்’ பத்திரிகையின் ஆசிரியர் கோவை மகேசன் அவர்கள் எழுதிய ஆசிரியர் தலையங்கமாகும். ஈழத்தமிழினத்தின் தாயகமான இலங்கையின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களைக் கைப்பற்றி, அங்கு சிங்கள பௌத்தர்களைக் குடியேற்றுவதன் மூலம் தமிழ்த் தாயகத்தை விழுங்கி ஏப்பமிட்டு இலங்கைத் தீவு முழுவதையும் சிங்கள பௌத்த நாடாக்க வேண்டும் என்ற இன ஒழிப்புத் திட்டம் இன்று நேற்று உருவாக்கப்பட்டதல்ல. 1932ம் ஆண்டு டொனமூர் அரசியலமைப்பின் மூல…
-
- 0 replies
- 344 views
-
-
அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற அரசியல் தீர்வு பேச்சு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நிலையில் மக்கள் ஓர் அணியில் நின்று தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிப்பது நடை பெறப் போகும் பேச்சுகளுக்கு ஓர் உந்து சக்தியாக அமையுமெனக் கல்விமான்கள் கூறுகின்றார்கள். சனிக்கிழமை 8 ஆம் திகதி நடைபெற இருக்கும் கிழக்கு மாகாணத் தேர்தலில் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளபடியால், அனைத்துத் தமிழ் பேசும் மக்களும் ஓர் அணியின் கீழ் ஒன்று திரண்டு, அரசியல் அடிமைகளாக்கப் பட்டுள்ள எமது இனத்தின் விடுதலைக்காக உழைக்க முன்வர வேண்டும். இந்த நேரத்தில் கடந்த 64 வருடங்களாகத் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களை, கொலைகளை, பாலியல் வல்ல…
-
- 0 replies
- 1.1k views
-
-
கனடியத் தமிழர் பேரவையால் முன்னெடுக்கப்படும் மிகப்பெரும் செயற் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். ஆண்டுதோறும் இலாபநோக்கமற்ற கனடிய அமைப்பொன்று தேர்ந்தெடுக்கப்பட்டு இந் நிதி வழங்கப்பட்டு வருகிறது. நோயுற்ற சிறார் அமைப்பு, கனடியப் புற்றுநோய்க் குழுமம் மற்றும் கடந்த ஆண்டில் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகிய அமைப்புக்கள் இந் நிதி சேர் நடை மூலம் பயன் அடைந்தன. சர்வதேச மன்னிப்புச் சபைக்கு 50 000 கனடிய டொலர்கள் வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டு மனநலம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாதல் நடுவத்துடன் (காம்எச்-CAMH) கனடியத் தமிழர் பேரவை பெருமையுடன் கை கோர்க்கிறது. காம்எச் அமைப்பானது கனடாவின் மிகப்பெரிய மனநலம் கற்பிக்கும் சிகிச்சை நிலையமாகும். காம்எச் அமைப்பானது ரொறன்ரோ பல்கலைக…
-
- 8 replies
- 992 views
-
-
‘தமிழீழம்’ இது தமிழ் மக்களின் உயிர் மூச்சு. உலகம் பூராகவும் பரந்து வாழ்கின்ற தமிழர்களின் தாயகம். சிங்களத் தீவில் தமிழ் மக்களை அடக்கி ஆள்வோரிடமிருந்து விடுதலை பெறத் துடித்த தமிழ் மக்கள் ஒன்று திரண்டு அமைத்துக்கொண்ட தனித் தமிழ்ப் பூமி. தமிழர்களின் தலைமகன் பிரபாகரனால் கட்டமைக்கப்பட்ட அழகிய பூங்கா. எந்தவித ஆசாபாசங்களும் இல்லாமல் போராடிய பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் தியாகத்தால் கட்டி யெழுப்பப்பட்ட தேசிய நாடு. விலை மதிக்க முடியாத தியாகங்களைப் புரிந்த புனிதர்கள் உறங்குகின்ற புண்ணிய பூமி. தமிழ் மக்களால் நேசிக்கப்படுகின்ற தனித் தமிழ் நாடு. மூன்று தசாப்த காலமாக தியாகங்களைப் புரிந்து கட்டியெழுப்பப்பட்ட இந்தப் புண்ணிய தேசத்தை உலகின் பல நாடுகளுடன் இணைந்து சிதைத்த சிறீலங்கா அர…
-
- 0 replies
- 849 views
-
-
தமிழர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கத்திற்கு உதவ இந்தியாவையும் தனது சொந்தப் பாதுகாப்பிற்கு உதவச் சீனாவையும் இலங்கை பயன்படுத்துகிறது. இதற்காக மிகவும் சாதுரியமான தந்திரோபாயங்களை அது கையாள்கிறது. மேற்கூறிய இரு நாடுகளும் இலங்கையின் நோக்கங்களை நிறைவேற்றத் தயாராக இருக்கின்றன. அதை இலங்கையின் இராசதந்திரத்திற்குக் கிடைத்த வெற்றியாக கருத முடியும். அருகில் இருக்கும் இந்தியாவை பகைக்க இலங்கையால் முடியாது. இந்தியாவுக்கு எதிராகச் செயற்படாவிட்டாலும் இந்தியாவுக்கு எரிச்சலூட்டும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் இலங்கை தயங்குவதில்லை. அதே சமயம் சீனா எங்களுடைய மிகவும் நெருக்கமான நட்பு நாடு என்று இலங்கை பகிரங்கமாக அறிவித்திருக்கிறது. கயிற்றில் நடக்கும் இந்த இராசதந்திர…
-
- 1 reply
- 618 views
-
-
நல்லூரைத் தலைநகராகக் கொண்ட யாழ்ப்பாண இராச்சியம் போத்துக்கேயரின் வருகையோடு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. யாழ்ப்பாண இராச்சியம் யாழ் குடாநாடு முழுவதையும் வன்னியின் வடக்குப் பகுதியையும் உள்ளடக்கியது. யாழ் மன்னர்களிடம் கடற்படையும், வட ஆபிரிக்கக் கூலிப்படையினர் அடங்கிய தரைப்படையும் இருந்தது. மொறக்கோ என்ற வட ஆபிரிக்க நாட்டுக் கூலிப்படையினர் யாழ் மன்னனின் சேவையில் இருந்தனர். இவர்கள் பாப்பரவர் என்று அழைக்கப்பட்டனர். பாப்பரவர்கள் இன்று யாழ் மக்களுடன் கலந்து வாழ்கின்றனர். அவர்கள் தமிழ் பேசுகின்றனர். பெரும்பாலும் கடற்கரை ஓரத்தில் வாழ்ந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். யாழ்ப்பாண இராச்சியத்தைப் பற்றிய வரலாற்றைக் கூறும் வையாபாடல் பாப்பரவர் பற்றிக் குறிப்பிடுகிறது. வஸ்கொட…
-
- 2 replies
- 533 views
-
-
'British Tamils Forum ' அமைப்பின் நிதி உதவிக்காக வரும் சனி மாலை Enfield என்னும் இடத்தில் 'BBQ & Entertaintment ' எனும் நிகழ்வு நடக்கிறது. இடம் : 5 Picketts Lock Lane (Rear of Abra Wholesale Ltd ) London N9 0AS காலம்: 25 ஆவணி சனி மாலை 4 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை கட்டணம்: குடும்பத்திற்கு 25 பவுண்ட்கள்
-
- 3 replies
- 509 views
-
-
அனைத்துலக காணாமற்போனோர் தினம்(International Day of the Disappeared) உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 30ம் திகதி அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது. 'காணாமற்போனோர்' என்பது இன்று உலகளாவிய ரீதியில் ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மனிதாபிமானம் பற்றி மனித உரிமைகள் பற்றி எத்தனை அமைப்புகள் செயற்பட்டாலும் கூட இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதுள்ளது. 2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் 146.679 தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது ? என மன்னார் பிஷோப் மதிப்பிற்குரிய ராயப்பு ஜோசெப் அவர்கள் அனைத்துலக சமூகத்தை நோக்கி குரல் கொடுத்தார். வெள்ளை வான் மூலமாக கடத்தப்படுதலும் காணாமல் போதலும் தொடர்ந்து கொலை செய்யப்படுவதும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது . சிறிலங்காவில்…
-
- 0 replies
- 560 views
-
-
[size=3]ம.பொ.சிவஞானம்(ம.பொ.சி)[/size] 'தமிழ்நாடு எல்லைப் போராட்டம்' என்பதும், பெயர் சூட்டுகின்ற வரலாறு என்பதும் சட்டமன்ற பதிவேடுகளோடு அடங்கிவிடவில்லை. அதற்கப்பாலும் அதுபற்றிய சில உண்மைகள் உண்டு. வடவேங்கடம் முதல் குமரி வரையில் தமிழ் பேசப்பட்டது. அதுதான் தமிழ்நாடு என்று தொல்காப்பியர் காலம் முதல் நிறைய ஆதரங்கள் உண்டு. தமிழகத்தின் வரலாறு என்பது, மொழி வழியாக மாநிலம் அமைந்தது என்பது மிகப்பெரிய பின்னணியைக் கொண்டது. எல்லைப்போராட்டம் நடந்தபோது அன்றைக்கு ம.பொ.சி மட்டுமே குரல் கொடுத்தார். வடக்கெல்லைப் போராட்டத்தை அவருடைய தமிழரசுக் கழகம் முன்னின்று நடத்தியது. அவருடன், தளபதி விநாயகம், மங்களம்கிழார், ரஷத் போன்றவர்களெல்லாம் வெகுண்டெழுந்து போராடினார்கள். ஏராளமான தமிழர…
-
- 12 replies
- 12.9k views
-
-
நீண்ட நெடிய தமிழின வரலாற்றில் இதுவரை கண்டிராத பேரழிவை ஈழத்தில் சந்தித்தோம். முள்ளிவாய்க்கால் இந்த பேரவலத்தின் உச்சத்தைக் குறிக்கிறது. அதே நேரம் தமிழினம் புதிய திசைவழியில் தனது வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை எழுத வேண்டிய தேவையையும் குறித்து நிற்கிறது முள்ளிவாய்க்கால். இது நினைக்க நினைக்க தமிழர்களை உலுக்கி எடுக்கும் பெரும் சோகம் என்றாலும், இன்னொரு பக்கத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழர்களிடத்தில் தமிழ்த் தேசியம் குறித்த புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கும் பரந்து வாழும் புலம் பெயர் தமிழர்கள் ஓர் அரசியல் சக்தியாக எழுந்திருப்பது இந்தப் பேரழிவிற்குப் பிறகுதான். இப்போது தான் தமிழ்நாட்டு இளைஞர்களிடையேயும் தமிழ்த் தேசிய உணர்வு பரவி வருகிறது. ஆயினும், இந்த எழுச்…
-
- 5 replies
- 730 views
-
-
http://www.savukku.n...4-17-44-32.html
-
- 2 replies
- 629 views
-
-
[size=3][size=4]செவ்வணக்கங்க.[/size] [size=4]பொதுவாவே உங்க கூட பேசறதுன்னாலே பயந்தாங்க.[/size] [size=4]நான் நம்மூரைப் பத்தி பேசறப்ப[/size] [size=4]நீங்க இந்த நாட்டப் பத்திபேசுவீங்க.[/size] [size=4]நான் இந்த நாட்டப்பத்தி பேசறப்ப[/size] [size=4]நீங்க வேற நாட்டப்பத்திப் பேசுவீங்க.[/size] [size=4]நானும் உங்கள மாதிரி பேசணும்னு தத்துப்பித்துன்னு நாலு நாட்டு சமாச்சாரங்களத் தெரிஞ்சிட்டு வந்தா[/size] [size=4]அப்பப் பாத்து நம்மூரு மாரியாத்தா கோயிலப்பத்திப் பேசுவீங்க.[/size] [size=4]எப்பப்பாரு இதே கூத்துதாங்க. சாகறதுக்குள்ள என்னைக்காவது ஒருநாள் ஒத்துமையா நாம ஒரே விசயத்தைப்பத்தி பேசணும்னு எனக்கு ரொம்ப ஆசைங்க.[/size] [size=4]உங்ககிட்டே நெருங்கறதுன்னாலே ஒரு கிலி. சும்ம…
-
- 0 replies
- 504 views
-
-
[size=4]ச்சே…. இந்த இளவட்டங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லை போலிருக்கிறது. எதற்கெடுத்தாலும் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று முத்தமிழ் “அறிஞர்”…. தப்பு தப்பு…. ஐந்தமிழறிஞர் கலைஞர் எதைச் சொன்னாலும் பகடி செய்யக் கிளம்பி விடுகின்றனர்.[/size] [size=3][size=4]ஈழத்தில் விமானத் தாக்குதல்களுக்கும், கொத்துக் குண்டுகளுக்கும் தப்பி…. முள்வேலி வதை முகாம்களில் இருந்து குற்றுயிரும் குலை உயிருமாய் மீண்டு…. மிச்ச சொச்ச உயிரையும் கையில் பிடித்துக் கொண்டு அலைபவர்களைக் கரையேற்றலாம் என்று பார்த்தால் அதற்கும் விட மாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்தால் யார்தான் சகித்துக் கொள்வார்கள்.?[/size] [size=4]“டெசோ” வை (அதுவாகப்பட்டது தமிழீழ ஆதரவாளர் அமைப்பு) மீண்டும் ஆரம்பிக்கல…
-
- 0 replies
- 577 views
-
-
[size=3][size=4]சிங்கள பெளத்த இனவாத அரசின் திட்டமிட்ட இனப் படுகொலையில் இருந்து உயிர் தப்பி தமிழகத்தில் ஏதிலிகளாக அடைக்கலம் புகுந்த நம் ஈழத் தமிழ் சொந்தங்களை சிறப்பு முகாம்களில் அடைத்து வதைத்து வரும் கொடுமைக்கு முடிவு கட்ட மீண்டும் போராட்டக்களத்தில் குதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]செங்கல்பட்டிலும், பூந்தமல்லியிலும் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் தமிழக காவல்துறையின் க்யூ பிரிவின் கண்காணிப்பில் இருந்துவரும் சித்தரவதை முகாம்களில் 40க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் சொந்தங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தங்கள் மீதான வழக்குகளில் அவர்கள் பிணைய விடுதலை பெற்றுவிட்ட பின்னரும் இப்படி கால வரையற்று அடைத்து வைப்பது ஏன்? என்று நாம் எழுப்பிய கேள்வ…
-
- 0 replies
- 420 views
-
-
நான்காம் கட்ட ஈழப்போரில் நடைபெற்ற உண்மைகளை வெளிக்கொணரும் போர்வையில், தமிழீழ தேசியத் தலைவருக்கு களங்கம் விளைவித்து, சிங்களத்தின் கைப்பாவையாக விளங்கும் கே.பியிற்கு துதிபாடும் கைங்கரியம் அண்மைக் காலமாக ஊடகப்பரப்பில் அரங்கேறி வருகின்றது. ‘சர்வதேச அரசியல் புலனாய்வு’ என்ற தலைப்பில் தமிழ்த் தேசிய வானொலிகளிலும், ‘பரபரப்பு’ என்ற மகுடத்தின் கீழ் அச்சு ஊடகப் பரப்பிலும், மே 18இற்கு முன்னர் எழுதி வந்த ஒருவரே, இப்பொழுது ‘விறுவிறுப்பாக’ கே.பியிற்கு துதிபாடி, விடுதலைப் போராட்டத்தின் ‘ரிக்ஷி’ மூலங்களை வெளிக்கொணர்பவராகத் தன்னை இனம்காட்டி வருகின்றார். மாவீரர்களின் உயிர்க்கொடையிலும், மக்களின் அர்ப்பணிப்பிலும் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நதிமூலம் தமிழீழத் தேசிய…
-
- 0 replies
- 464 views
-
-
ஈழம் - தமிழ்நாட்டினில் இந்த வார்த்தையை தற்போது பயன்படுத்தாத கட்சிகளே இல்லை என்று சொல்லலாம். கட்சிகள் மட்டுமல்ல, நம்மை போன்ற வலைப்பூவும், வலைத்தளங்களும், நாளேடுகளும், தொலைகாட்சி களும் இதனை பயன்படுத்திக் கொண்டுதான் வருகின்றது. ஆனால் சாதாரண மனிதர்களால் ஈழத்தினில் நடந்த கொடுமைகளை கண்டு பரிதாபப் பட முடியும், அல்லது கண்டனம் தெரிவிக்க முடியும். அதைத் தாண்டி நம்மால் எதையும் சாதிக்க முடியாத நிலைதான் தற்போது உருவாக்கி இருக்கின்றது. தமிழ் நாடு மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவரும் இந்த வார்த்தையை ப்பற்றி தினமும் அவர்கள், அவர்கள் பாணியில் அலசிக் கொண்டுதான் வருகின்றார்கள். ஆனால் என்ன பிரயோசனம்? வெறும் பேச்சுக்களால் மட்டுமே, இன்னும் சொல்லப் போனால் என்னையும் சேர்த்து வெறும் எழுத்துக…
-
- 1 reply
- 568 views
-
-
(சவுக்கு வெளியீடான ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட பதிப்பு, பகுதி-11) ராஜபக்சே - ராணுவத்தைப் போலவே ராஜீவ் அனுப்பி வைத்த ‘அமைதிப் படையும்’ விடுதலைப் புலிகள் தலைவர், உலகத் தமிழினத்தின் தலைவர் பிரபாகரனுக்குத் தான் குறி வைத்தது. விடுதலைப் புலிகளின் படைப் பிரிவான 1.4 ஆம் தளத்தில் ராஜீவ் காந்தியின் படை பிரபாகரனை சுற்றி வளைத்தபோது அவர் தனது மெய்க்காப்பாளர்களால் காப்பாற்றப்பட்டுவிட்டார் என்று ராஜிவ் சர்மா எழுதுகிறார். ராஜீவ் காந்தியும் பிரபாகரன் தலைக்குக் குறி வைத்தார். பிரபாகரன் தலையைக் கொண்டு வராதவரை, தான் அனுப்பி வைத்த படையின் தாக்குதல் நிற்காது என்று சப…
-
- 1 reply
- 686 views
-
-
[size=4]"நாமே மாற்று நாம் தமிழரே மாற்று" என்று முழக்கத்தோடு நாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்திய பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நிகழ்த்திய உரையை கீழே உள்ள இணைக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]நாம் தமிழர் அரசியல் பாதை அதன் மேல் வைக்கப்பட்ட குற்றசாட்டு, நாம் தமிழர் எதிர்கால அரசியல் என அனைத்தையும் விளக்குகிறார்,[/size] [size=4] [/size] http://youtu.be/6mmwvp8lSmA [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]
-
- 0 replies
- 551 views
-
-
Thursday, October 19, 2006 கலைஞர் பற்றிய ஒரு பார்வை! தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றி ஈழத் தமிழர்களிடம் இரு வேறு விதமான கருத்துக்கள் உண்டு. ஒரு சாரர் கலைஞர் மீது பெரும் பற்றும் நம்பிக்கையும் வைத்து அவரை ஒரு தமிழினத் தலைவர் என்ற வகையில் பார்க்க, மறு சாரர் அவரை வெறும் மூன்றாம் தர அரசியல்வாதியாக மட்டுமே பார்க்கின்றனர். இதில் கலைஞர் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துள்ள ஈழத் தமிழர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. இவர்கள் கலைஞர் ஆட்சிக்கு வருகின்ற நேரங்களில் எல்லாம் தமிழினம் விடிவு பெற்று விட்டதாக துள்ளிக் குதித்து அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பி மகிழ்வார்கள். இம் முறையும் வழமை போன்று "உலகத் தமிழினத் தலைவருக்கு" வாழ்த்துச் செய்திகள் அனுப்பி கலக்கி விட்டார்கள…
-
- 24 replies
- 2k views
-