நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
இலங்கையில் 253 உயிர்களை பலிவங்கிய பயங்கரவாத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் ஒரு வார காலம் ஆகின்றது. கடந்த 21ஆம் தேதி பயங்கரவாத இயக்கத்தினால் 8 இடங்கள் இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் காலை 8.45க்கு முதல் தாக்குதல் நடத்தப்பட்டது. படத்தின் காப்புரிமை Anadolu Agency …
-
- 0 replies
- 315 views
-
-
ஜனாதிபதி தேர்தல்; வாக்களிப்பது எப்படி?; 50 வீதம் கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்? இம்முறை பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் பலர் போட்டியிடுகின்றமையினால் 2 ஆம் , 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் நிலைமை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஆகவே தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் யாருக்கும் கிடைக்காத பட்சத்தில் 2 , 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் போது பின்பற்றப்படும் நடைமுறைகள் தொடர்பாக வாக்காளர்கள் தெளிவை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. ந.ஜெயகாந்தன் இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதிகளவில் வாக்குகளை பெற்றுக்கொள்…
-
- 0 replies
- 198 views
-
-
இரானில் சக்திவாய்ந்த நபராக விளங்கிய ஜெனெரல் காசெம் சுலேமானீ அமெரிக்காவால் கொல்லப்பட்டிருப்பதால் அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது. இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந்த நாட்டிலேயே அதிக அதிகாரம் பெற்ற ராணுவத் தளபதியாக விளங்கியவருமான ஜெனரல் காசெம் சுலேமானீ கொல்லப்பட்டுள்ளது சர்வதேசஅளவில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இந்த பதற்றம் குறித்து பிபிசியின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான செய்தியாளர் ஜொனாதன் மார்க்கஸ் பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறார். மூன்றாம் உலகப்போருக்கு சாத்தியம் உள்ளதா? இரானுக்கு எதிராக அமெரிக்கா போரை அறிவிப்பதற்காகவே காசெம் சுலேமானீ கொல்லப்பட்டுள்ளார் என பலர் விவரிக்கின்றனர். இந்த வ…
-
- 0 replies
- 320 views
-
-
நான்காம் கட்ட ஈழப்போரில் நடைபெற்ற உண்மைகளை வெளிக்கொணரும் போர்வையில், தமிழீழ தேசியத் தலைவருக்கு களங்கம் விளைவித்து, சிங்களத்தின் கைப்பாவையாக விளங்கும் கே.பியிற்கு துதிபாடும் கைங்கரியம் அண்மைக் காலமாக ஊடகப்பரப்பில் அரங்கேறி வருகின்றது. ‘சர்வதேச அரசியல் புலனாய்வு’ என்ற தலைப்பில் தமிழ்த் தேசிய வானொலிகளிலும், ‘பரபரப்பு’ என்ற மகுடத்தின் கீழ் அச்சு ஊடகப் பரப்பிலும், மே 18இற்கு முன்னர் எழுதி வந்த ஒருவரே, இப்பொழுது ‘விறுவிறுப்பாக’ கே.பியிற்கு துதிபாடி, விடுதலைப் போராட்டத்தின் ‘ரிக்ஷி’ மூலங்களை வெளிக்கொணர்பவராகத் தன்னை இனம்காட்டி வருகின்றார். மாவீரர்களின் உயிர்க்கொடையிலும், மக்களின் அர்ப்பணிப்பிலும் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நதிமூலம் தமிழீழத் தேசிய…
-
- 0 replies
- 456 views
-
-
அழுத்துக http://puspaviji.net/page15.html
-
- 0 replies
- 2k views
-
-
சாலாவ ஆயுதக் களஞ்சிய வெடிப்பும் சில கேள்விகளும் கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம், தென்னிலங்கையை சற்றுப் பதற்றமடைய வைத்திருக்கின்றது. ஆயுதக் களஞ்சியம் முற்றாக வெடித்துச் சிதறி ஓய்வதற்கு 7 மணித்தியாலங்கள் வரை ஆனது. அது, ஏற்படுத்திய தீச் சுவாலையும் புகை மூட்டமும் பிரதேசத்தினை முற்றாக மூடியிருந்தன. அத்தோடு, ஆயுதக் களஞ்சிய வெடிப்பினால் அயல் பிரதேசத்திலுள்ள வீடுகளும் பொதுக் கட்டடங்களும் முழுமையாகவோ, பகுதியளவிலோ சேதமடைந்துள்ளன. ஆயுதங்களின் வெடிப்புச் சார்ந்து நிகழ்த்திருக்கின்ற இந்த அனர்த்தத்தை எதிர்கொள்வது தொடர்பிலான நடவடிக்கைக…
-
- 0 replies
- 226 views
-
-
மலையக பல்கலைக்கழக கனவு நனவாகுமா? ஒரு நாட்டில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய பல்வேறு துறைகளுள் கல்வித்துறை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. கல்வித்துறையின் அபிவிருத்தியினால் பல்வேறு சாதக விளைவுகள் ஏற்படும். எனவே தான் உலக கல்வித் துறையின் அபிவிருத்தி கருதி முக்கிய கவனம் செலுத்தி வருகின்றன. இந்த வகையில் உயர்கல்வி குறித்து நாம் பேசுகின்றபோது பல்கலைக்கழகங்கள் உயர்கல்விக்கு உந்து சக்தியாக அமைகின்றன. எமது நாட்டில் பல பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்றன. எனினும் மலையக அடையாளத்துடன் கூடிய பல்கலைக்கழகம் ஒன்று இல்லாத நிலையில், மலையக பல்கலைக்கழகம் என்ற ஒன்று ஏற்படுத்தப்படவேண்டும் என்ற…
-
- 0 replies
- 466 views
-
-
முக்கிய செய்திகள். வீரப்பன் என் மனதில் பதிந்த வீரர்களில் அவனுக்கு தனி இடம் உண்டு.. அந்த சிங்கத்தை நம்பவைத்து சாப்பாட்டில் விசம் வைத்து கொன்று.. இறந்த அவன் உடலை துப்பாக்கியால் சுட்டு தன் வீரத்தை காட்டியது தமிழக காவல்... அதற்கு சன்மானம் வேறு..... அவன் மீது ஒரு பாலியல் புகாரை இந்த காவல் துறை காட்ட முடியுமா?.... அவன் நினைத்திருந்தால் ராஜ்குமாருக்கு பதில் ஏதேனும் கவர்ச்சி நடிகையை கடத்தி சென்றிருக்க முடியும்.... பெண்களிடம் வீரத்தைகாட்ட அவன் புரச்சி நடிகன் இல்லை.. தமிழ்தாயின் வீரமகன்... அப்போது விடுத்த கோரிக்கையிலும் அவனுக்கு அவன் குடும்பத்திற்கென்று எதுவும் கேட்கவில்லை என்பது உலகறிந்த உண்மை.. அப்படி அவன் என்னதான் தப்பு செய்தான்... மலைவாழ் மக்களிடம…
-
- 0 replies
- 667 views
-
-
முல்லைத்தீவில் கட்டுக்கடங்காத தென்பகுதி மீன்பிடியாளர்களால் கொரோனா ஆபத்து! கே .குமணன் முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்த அனுமதியும் இன்றி தெற்கின் புத்தளம் மாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் அத்துமீறி குடியமர்ந்து கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் மீன்பிடி தொழிலாளர்களால் வடக்கில் பாரிய ஆபத்தினை தோற்றிவிக்கும் அபாயம் எழுந்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தளத்தினை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் வாடி அமைத்து குறுகிய நிலப்பரப்பில் தொழில்செய்து வருகின்றார்கள். ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து இதுரை அப்பகுதியில் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் முடக்கப்பட்டுள்ள தங்கள் பிரதேசத்தை விடுவிக்க கோரி இன்று (24.07.2021) போரா…
-
- 0 replies
- 193 views
-
-
இலங்கை பொருளாதார நெருக்கடி: அரசு ஊழியர்கள் அரசுக்கு சுமையாக உள்ளனரா? யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 65இல் இருந்து மீண்டும் 60 ஆக்கியுள்ளார். இலங்கையில் தற்போது நிலவும் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் அரசு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் அரசு தடுமாறிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. இதனால், அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை எவ்வகையிலாவது குறைக்க வேண்டும் என்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. இந்த நிலையில்…
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் தமிழர்களுக்கு பக்கபலமாக இருக்கும் - அங்குரார்ப்பண நிகழ்வில் தெரிவிப்பு By VISHNU 19 OCT, 2022 | 12:17 PM வடக்கு - கிழக்கில் இன்று நடைபெறும் நினைவேந்தல்களில் நாங்கள் அரசியலை காண்கின்றோம். தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்து விடயங்களுக்கு எதிராகவும் இனிமேல் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் பலமாக இருக்கும் என வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் ஊடகப்பேச்சாளர் இராசரெத்தினம் தர்சன் தெரிவித்தார். யாழ்.பல்கலைக்கழகமும் கிழக்கு பல்கலைக்கழகமும் இணைந்து வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் என்னும் அமைப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் அங்குர…
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
எதையோ விட்டு விட்டு - எதையோ பிடித்தல் ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் எதையோ கடித்த கதை பற்றி நீங்கள் அறிவீர்கள். அது போல, பல்கலைக்கழக மாணவர்களுக்காக இராணுவத்தினர் வழங்க ஆரம்பித்துள்ள பயிற்சி நெறி - இப்போது அதிபர்களிடம் போய் நிற்கிறது! பல புறங்களிலிருந்தும் பல்கலைக் கழக மாணவர்களுக்கு இராணுவத்தினர் மூலம் பயிற்சி வழங்கப்படுவதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய போதும், அதைக் கணக்கெடுக்காமல் உயர்கல்வி அமைச்சு குறித்த பயிற்சி நெறியினை ஆரம்பித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏன் இராணுவத்தினர் பயிற்சி வழங்க வேண்டும் என்பது ஒரு சாராரின் கேள்வி! ஆனால், இது இராணுவப் பயிற்சியேயல்ல, இராணுவத்தினர் மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி வழங்குகிறார்கள் - அவ்வளவுதான் எ…
-
- 0 replies
- 924 views
-
-
வடமாகாணமும் கல்வி நெருக்கடியும் Editorial / 2019 மார்ச் 21 வியாழக்கிழமை, மு.ப. 11:53 Comments - 0 வடமாகாணத்தின் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பதாக, வடமாகாண ஆளுநர் அண்மையில் தெரிவித்திருந்தார். இது, பலவிதமான எதிர்வினைகளைத் தோற்றுவித்திருக்கிறது. ஒருபுறம் இதை வரவேற்று, வடமாகாணத்தின் கல்வி அபிவிருத்திக்கு இது அவசியமானது என்ற கருத்துகளும் மறுபுறம் மாகாண அரசின் அதிகாரத்தின் கீழ்வரும் கல்வித்துறையை, மத்திய அரசின் கீழே கொண்டு வருகின்ற இந்நடவடிக்கையானது அதிகாரப் பரவலாக்கலுக்கு எதிரான இனவாதத் திட்டம் என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகின்றது. இவ்விடத்தில், ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டிய சில விடயங்கள் உள்ளன. முதலாவது, வடமாகாணம் …
-
- 0 replies
- 498 views
-
-
தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள்? ஒரு கள நிலை ‘அப்டேட்’ June 27, 2020 மிகவும் இறுக்கமான அரசியல் பரப்பொன்று எம் முன்னே விரிந்து கிடக்கிறது. தேர்தல் நெருங்க, நெருங்கத் தேர்தல் களம் சூடு பிடிப்பதுதான் வழமை. இம்முறை அப்படியல்லாததொரு சூழ்நிலையே காணப்படுகிறது. அதற்கான காரணம் என்ன? என்று கேட்டால் உடனே கொரோனாவைச் சொல்லிவிடுவீர்கள். ஆனால் காரணம் அதுவல்ல. அரசியல் பரப்பைச் சூடாக்கவல்ல போட்டியாளர்கள் களத்தில் இல்லை என்பதுதான் உண்மையான விடயம். அதனால் போலிகள் எல்லாம் பொருத்தமானவர்கள்போல் தோற்றம் பெறத்தொடங்கி விட்டனர். நாடு முற்றிலும் இப்படியான தொரு நிலை காணப்பட்டாலும், தமிழர் தேசத்து அரசியலும் அவ்வாறே இனங் காணப் பட்டிருக்கிறது. பல ஆண்டுகாலம் தம…
-
- 0 replies
- 291 views
-
-
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=v_gWGYpbB74#! https://www.youtube.com/watch?v=3HVoa9HEHIw https://www.youtube.com/watch?feature=player_embedded&v=v_gWGYpbB74#!
-
- 0 replies
- 430 views
-
-
ஈழத்தமிழர் உரிமையும் நீதியற்ற உலகமும் ஈழத்தமிழர் உரிமை விவகாரத்தில் சர்வதேச மௌனம் அதிகமான அப்பாவி உயிர்களைப் பலியெடுத்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இணைந்து தலைவர் பிரபாவிற்கு (தமிழருக்கு) எதிராக போர் தொடுத்தது என்பதை நிரூபிப்பதற்கு சர்வதேச மௌனமும், உதவிகளும், இந்தியாவின் செயற்பாடுகளும் சாட்சியங்களாக இருக்கின்றன. இதை யாரும் சொல்லி விளங்கவேண்டியதில்லை. இலங்கை அரசாங்கத்தின் எந்தச் செயல்களும் மற்றைய காத்திரமான கண்டிப்புக்களுக்கு உட்படவில்லை. சிறுவரைப் படையில் சேர்த்தல் குற்றம் என்று சொல்பவர்கள். சிறுவர், சிறுமியர், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் என்று வகை தொகையாகக் கொல்வது எந்த வகைக் குற்றத்திலும் இடம் பெறாதா? கொன்றவர்கள் அவர்களை சார்ந்தவர்களாயிற்றே. சர்வதேச போர…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஆரோக்கியம் கெட்ட ஆரோக்கியபுரம் அபிவிருத்தி என்ற போர்வையில் அழிக்கப்படும் வளங்கள் முல்லைத்தீவு, கொக்காவில் பிரதேசத்தில் சட்ட விரோத கிரவல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட பகுதி, கடந்த வாரம் முற்றுகையிடப்பட்டு, கிரவல் அகழ்வில் ஈடுபட்ட கனரக வாகனங்களுடன் அதன் சாரதிகள் கைது செய்யப்பட்டு உள்ளமையானது, பிரதேச மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இதுவரைகாலமும் இவற்றைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள் கண்மூடியிருந்தார்களா? எனவும் கேள்வியெழுப்பி உள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்தில் 2,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பகுதிகளில் பெருங்காடுகள் அழிக்கப்பட்டு, கிரவல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் …
-
- 0 replies
- 228 views
-
-
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா! வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வ ரனுக்கும் சபையின் உறுப்பினர்களுக்கும் இடையிலான குழப்பத்தைப் பயன்படுத்தி குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடும் முயற்சி செய்வது தெளிவாகவே தெரிகின்றது. தமிழ் மக்கள் பேரவையின் ஊடாகச் செய்ய முயன்று முடியாமல்போனதை இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிறைவேற்றிவிடலாம் என்று தலைகீழாக நிற்கிறார்கள். முதலமைச்சருக்கு ஆதரவாக நடத்தப்பட்ட ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் அவர்களே பெருமளவில் இருந்தார்கள். அதற்கான காரணத்தை முன்னணியின் தலைவர் கஜேந்திரகும…
-
- 0 replies
- 255 views
-
-
விரைவு படுத்தப்படும், சீன – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்? இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான அமைச்சரவை உபகுழுவானது கடந்த 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் முதன்முறையாக கூடியது. இந்த உபகுழுவானது சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாகக் முன்னெடுப்பதற்கான ஆலோசனையை முன்வைத்திருந்தது. அத்துடன், இலங்கை மற்றும் ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையிலான பொருளாதார விடயங்கள் மற்றும் வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட ஏனைய இரண்டு உப குழுக்களும் இந்த உபகுழுவின் கூட்டத்தின் போது பங்கேற்றிருந்தன. இந்த உபகுழுக்கள் இலங்கையின் ஏற்றுமதி கைத்தொழில்களுக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செ…
-
- 0 replies
- 237 views
-
-
http://www.nerudal.com/nerudal.17304.html ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள், புலம் பெயர் தமிழர்கள் அனைவரும் இந்தியாவை – இந்தியத் தேசியத்தைத் தமது பகை சக்தி என புரிந்து கொள்வதே புதிய திசைவழிப் பயணத்தின் மையப்புள்ளியாகும். தமிழின உரிமை குறித்த சிக்கலில் இந்தியா நட்பு நாடோ நடுநிலை நாடோ அல்ல என்ற தெளிவு தமிழின உணர்வாளர்களிடையே உரிய அளவு இன்னும் உருவாகவில்லை.-------------------Please click on the link to read the whole article.
-
- 0 replies
- 629 views
-
-
வியாழேந்திரன் ஏமாற்றப்பட்டாரா?; இன்று மட்டக்களப்பு செல்கிறார்! November 6, 2018 தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து அண்மையில் கட்சி தாவி, மஹிந்த அணயை ஆதரிப்பாக அறிவித்துள்ளார் சதாசிவம் வியாழேந்திரன் எம்.பி. மட்டக்களப்பில் அவருக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்று அவர் மட்டக்களப்பிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். கட்சி தாவியதால் மட்டக்களப்பில் அவருக்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தனக்கு நெருக்கமானவர்களை இன்று மந்திராலோசனைக்காக அழைத்துள்ளார். இதேவேளை, கட்சி தாவ வைக்கப்பட்டு தம்மை ஏமாற்றி விட்டார்கள் என வியாழேந்திரன் தரப்பு உணர்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வியாழேந்திரன் தரப்பிலிருந்த சிலர் இது குறித்து ஓரளவு வெளிப்படையாக தமது அதிருப்தியை பதி…
-
- 0 replies
- 402 views
-
-
‘கண்பொத்தியார்’ விளையாட்டு முகம்மது தம்பி மரைக்கார் / 2018 டிசெம்பர் 11 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:10Comments - 0 நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக, ஜனாதிபதி வெளியிட்ட அறிவித்தலுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பைப் பரபரப்போடு நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தப் பத்தி எழுதப்படுகிறது. தத்தமது விருப்பு - வெறுப்புகளுக்கேற்ப, தீர்ப்புக் கிடைத்து விட வேண்டுமென்பதே கணிசமானோரின் ஆசையாக உள்ளது. ஆனால், ‘நீதிக்குக் கருணை கிடையாது’ என்பதை, இங்கு பதிவுசெய்ய வேண்டியுள்ளது. அதனால், அடுத்தவரின் அபிலாஷைகளுக்கேற்ப அது, செயற்பாடுவதில்லை. எனவே, தீர்ப்பு எப்படியும் அமையலாம். அரசியலரங்கில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பானது, மேலே கூறப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புடன், முடி…
-
- 0 replies
- 326 views
-
-
உலகில் அடிமைப்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பல இனங்களை வரலாற்றில் நாம் பார்த்திருக்கின்றோம், இன்றும் நினைவில் வைத்திருக்கின்றோம். இவற்றில் பல தமது இருப்புக்கான அல்லது சுயத்திற்கான போராட்டத்தில் வெற்றி பெற்று உலகத்தின் முகத்தில் ஆச்சரியக் குறியை நிறுத்திய சம்பவங்களையும் வரலாற்றிலிருந்து நாம் அறிந்திருக்கின்றோம். இதிலிருந்து நாம் ஒரு உண்மையினை நன்கு புரிந்து கொள்ள முடியும். அதாவது ஆயுதங்களை மட்டுமே நம்பிய அல்லது விசுவாசித்த எந்தவொரு போராட்டமும் நிலைபெறவில்லை. அவை ஈற்றில் அழிந்துபோனது. அல்லது அடையாளம் தெரியாமல் சிதைக்கப்பட்டது. இதனையே தமிழீழ விடுதலைப் போராட்டத் தலைமையும் நன்கு புரிந்து கொண்டு, விடுதலைப் போராட்டம் உலகத்தின் கவனத்தை திசை திருப்பியிருந்தபோது, பேச்சுவார்த்தை என அ…
-
- 0 replies
- 520 views
-
-
மக்கள் தேடிவிடுவர் முஹம்மது தம்பி மரைக்கார் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் இப்போதிருக்கும் ஜனரஞ்சகத் தன்மையுடன் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இருக்கவில்லை. சிங்களப் பெருந்தேசிய அரசியல் கட்சிகளுக்கு சேவகம் செய்கின்ற ஒரு சமூகமாகவே முப்பது வருடங்களுக்கு முன்னர்வரை, முஸ்லிம்கள் இருந்தனர். தமிழர் சமூகம் அரசியல் விழிப்புணர்வு பெற்று, நெடுங்காலத்தின் பின்னர்தான் - முஸ்லிம்கள் தமக்கென்று ஒரு தனியான அரசியல் கட்சி பற்றி யோசிக்கலாயினர். அப்படியொரு யோசனையின் பலனாகத்தான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கிற ஜனரஞ்சக அரசியல் கட்சி முஸ்லிம்களுக்குக் கிடைத்தது. முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பெற்றெடுப்பதற்காகவும், அவர்களின் சமூகப்…
-
- 0 replies
- 366 views
-
-
-
- 0 replies
- 324 views
-