நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
அயர்லாந்து வரி ஏய்ப்பு: அப்பிளைக் கடித்தது யார்? தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ அரசு யாருக்கானது என்ற வினா இடையிடையே எழும். காலங்காலமாக அரசாங்கத்தின் வகிபாகம் தொடர்ந்து மாறிவந்துள்ளது. அரசின் பிரதான வகிபாகம், இருந்துவரும் சமூக அமைப்பைப் பாதுகாப்பதும் சமூக உறுதியை நிச்சயப்படுத்துவதுமாக இருந்தது. ஆனால் இன்று அரசாங்கம் வெளிப்படையாகவே மக்கள் விரோதமான, சமூக நலன்களை இல்லாதொழித்துப் பல்தேசியக் கம்பெனிகளுக்குச் சேவகம் புரிவதாக வளர்ந்துள்ளது. இம் மாற்றம் உலகமயமாக்கலும் சந்தைப் பொருளாதாரமும் உலக அலுவல்களைத் தீர்மானிப்பதன் விளைவாக உருவானதாகும். கடந்த வாரம் ஐரோப்பிய ஆணையகம், உலகின் மிகப்பெரிய பல்தேசியக் கம்பெனிகளில் ஒன்றான அப்பிள் நிறுவனம் அயர்லாந்து அ…
-
- 0 replies
- 302 views
-
-
அயலுறவுக்கு முதலிடம் இலங்கையில் நாளுக்கு நாள் மோசமடைந்துகொண்டுச் செல்லும் நெருக்கடி நிலைமையை உலகநாடுகளும் அமைப்புகளும் நிறுவனங்களும் அவதானி கொண்டுதான் இருக்கின்றன. நிலைமை போகும் போக்கை பார்க்குமிடத்து. பசி, பட்டிணி, பஞ்சம், பட்டினிச்சாவு கைக்கு எட்டிய தூரத்திலேயே எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கின்றது. அயல் நாடான இலங்கை இந்தளவுக்கு நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் என்பதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பெரியண்ணா (இந்தியா) ஓடோடிவந்து உதவிக்கரம் நீட்டிக்கொண்டிருக்கின்றது மத்திய அரசாங்கத்துக்கு அப்பால், தமிழக அரசும் தமிழக மக்களும் உலருணவுப்பொதிகளை அனுப்பிவைத்துக் கொண்டிருக்கின்றனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்கு இந்தியா பல்வேறு வழிகளிலும்…
-
- 0 replies
- 281 views
-
-
பிரபாகரன், கருணாநிதி முதலில் தி.மு.க-வை ஆதரிப்பவர்களையெல்லாம் தி.மு.க கட்சியின் உறுப்பினர்கள் போல முத்திரை குத்துவதே தவறான செயல். பிரீமியம் ஸ்டோரி `புதிதாகப் பொறுப்பேற்ற தி.மு.க அரசு சிறப்பாகச் செயல்படுகிறது’ என்கிறார்கள் ஒரு தரப்பினர். மற்றொரு தரப்பினரோ, `அதிகாரிகள் நியமனம், மின்வெட்டு உள்ளிட்ட விஷயங்களில் தி.மு.க அரசு தடுமாறுகிறது’ என்கிறார்கள். ஆக்கபூர்வமான இவர்களின் விமர்சனங்களுக்கு இடையே சமூக ஊடகங்களில் `அரக்கர் கூட்டம்’, `திராவிடம் 2.0’ ஆகிய பெயர்களில் ‘தி.மு.க ஆதரவாளர்கள்’ என்று கூறிக் கொள்பவர்கள் பிரபாகரனையும், விடுதலைப்புலிகள் இயக்கத்தினரையும் கடுமையாக வசைபாடுவது தி.மு.க-வுக்குக் கடும் குடைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களுக்குப் பத…
-
- 0 replies
- 1.1k views
-
-
l சகல மதங்களையும் பின்பற்றுவோர் மத்தியில் சம உரிமைகள் பேணப்படும் என்ற உறுதிமொழியுடன் ஆட்சிபீடமேறிய நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான சவால்களில் ஒன்றாக மத அமைதியீனம் நாட்டில் காணப்படுகிறது. சிங்கள பௌத்தர்கள் பாரபட்சத்தை எதிர்கொண்டிருப்பதாகவும் புத்த சாசனத்தையும் புத்த பிக்குகளையும் பாதுகாக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் அண்மையில் அஸ்கிரிய பீடத்தின் சியாம் நிக்காயாவின் மகாநாயக்க தேரர் அறிக்கையொன்றை விடுத்திருந்தார். புத்த சாசனமும் பிக்குகளும் தீவிரவாதிகளினால் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேவேளை நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இந்த விடயம் குறித்து "சிலோன் டுடே' பத்திரிகை…
-
- 0 replies
- 304 views
-
-
அரச தலைவருக்கு மக்கள் சொன்ன செய்தி தமது எதிர்பார்ப்பு என்ன என்பதை மீண்டும் ஒரு தடவை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நேரடியாகவே தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறார்கள் தமிழ் மக்கள். வலிகாமம் வடக்கில் அமைந்துள்ள முக்கிய மீன்பிடித்துறையான மயிலிட்டியில் புதிய இறங்குதுறை ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நடும் விழாவில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசாவின் உரையின் இடையிடையே பலத்த கரகோசத்தை எழுப்பியதன் மூலம் தமது எண்ணம், நோக்கம் என்ன என்பதை அவர்கள் தெளிவுபடுத்தி யுள்ளார்கள். மைத்திரிக்கும் தமிழ் மக்களுக…
-
- 0 replies
- 257 views
-
-
அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்தவே முடியாது தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் பல் வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் கடத்தப் பட்டவர்கள் மற்றும் காணாமற்போனவர்களின் உறவினர்கள் நூற்றுக்கணக்கில் கொழும்பில் ஒன்றுகூடி வெளியிட்ட பிரகடனத்தில் முக்கியமான ஒரு விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 0 replies
- 993 views
-
-
யாழ்இணைய செய்தி அலசல் அரச பயங்கரவாதமும் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டமும் அன்று தொட்டு இன்று வரை தமது உரிமைகள் மறுக்கப்பட்டு, அதற்காக ஆயுதங்கள் ஏந்தி போராடிய இயக்கங்கள் பயங்கரவாதம் என்ற பெயர் சூட்டப்பட்டு பயங்கரவாதிகள் என்றே அழைக்கப்பட்டிருக்கின்றார்க
-
- 8 replies
- 6.6k views
-
-
யாழ்.அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார், என்ற செய்தி குடாநாட்டு ஊடகங்களில் வெளியாகியிருந்தது. ஆனாலும் அது வெறுமனே ஒரு செய்தி என்ற வகையில் மட்டும்தான் குடாநாட்டு மக்களால் பார்க்கப்பட்டதே தவிரவும் அதற்கப்பால் எமது மாவட்டத்தின் அரசாங்க அதிபர், மாவட்டத்தின் முதல் பெண் அரசாங்க அதிபர் என்ற உணர்வு நிலைகளுடன் அடுத்த கட்டத்தைப் பற்றி எமது மக்கள் சிந்தித்திருக்கவில்லை. முதலில் குடாநாட்டுக்கு வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திக்கக்கூடாதென்ற கட்டளை ஆளுநர் மட்டத்திலிருந்து விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு சில நாட்களில் அரசாங்க அதிபரே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியிருக்கின்றது. இந்த இட மாற்றத்தின் பின்னால் ந…
-
- 1 reply
- 771 views
-
-
அரசதுறை வியாபாரத்தில் ஈடுபட்டதால் மகாவலி போன்ற 100 திட்டங்களை நிர்மாணிப்பதற்கான பணம் வீணடிக்கப்பட்டது - ஜனாதிபதி Published By: DIGITAL DESK 5 23 MAR, 2023 | 04:06 PM மறைந்த பிரதமர் தேசபிதா டி.எஸ்.சேனாநாயக்கவின் தத்துவத்தை நாம் ஒதுக்கினாலும் பிரதமர் லீ குவான் யூ அந்த தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி சிங்கப்பூரை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எமது நாட்டின் அரசியல்வாதிகள் இலங்கையை சிங்கப்பூராக மாற்ற வேண்டும் என்று கனவு கண்ட போதும் கடந்த 75 வருடங்களில் சில அரசியல் இயக்கங்களின் தீர்மானங்களினால் இலங்கைக்கு ஏற்பட்ட அழிவுகள் எண்ணிலடங்காது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டின…
-
- 0 replies
- 377 views
- 1 follower
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகியுள்ளது. அதில் இலங்கையின் பொறுப்புக் கூறல், நீதி விசாரணை தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்றுள்ளது. சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ள இந்த நிலையில் செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரமும் ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையில் பேசு பொருளாக மாறியுள்ளது. இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் விசாரணைகள் சர்வதேச தரத்தின் படி நடத்தப்பட வேண்டும் என பிரிட்டன் ஜெனீவா அமர்வில் வலியுறுத்தியும் உள்ளது. அதுவும் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது. திட்டமிட்ட இனப்படுகொலை தமிழர் தாயகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளில் செம்மணி மனிதப் புதைகுழியான…
-
- 1 reply
- 143 views
-
-
அரசாங்கத்திற்கும்-இராணுவத்திற்குமிடையே பிளவை ஏற்படுத்தும் கோத்தாவின் திட்டம் புஷ்வாணம் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவினால் எழுதப்பட்ட நந்திக்கடலுக்கான பாதை என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த வாரம் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு தற்போதைய அதிபரோ அல்லது பிரதமரோ அல்லது இந்த அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது அமைச்சர்களோ எவரும் அழைக்கப்படவில்லை. முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும் மட்டுமே புத்தக வெளியீட்டிற்கான அழைப்பிதழைப் பெற்றிருந்தனர். மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தான் எழுதிய நந்திக்கடலுக்கான பாதை என்ற நூலை முதன்முதலில்…
-
- 0 replies
- 256 views
-
-
அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் அவசியம் -நளினி ரட்ணராஜா கொரோனா என்ற கொடிய அசுரன் இந்த மொத்த உலகத்தையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருப்பதோடு மனிதகுலத்தையும் அழித்துக் கொண்டிருக்கின்றான். அவனுக்கு ஜாதி, மதம், இனம், நாடு, தேசம், பணக்காரர், ஏழை போன்ற வேறுபாடுகள் தெரியாது; புரியாது. இந்தக் கொடிய அரக்கனிடம் இருந்து எங்களைக் காப்பாற்றுவதற்கு மருத்துவ வசதிகள், மருத்துவர்கள், மருத்துவ ஆய்வாளர்கள், மிகுந்த வசதி வாய்ப்பு உடைய ஆராய்ச்சிக் கூடங்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், மருத்துவ நுண்ணியல் நிபுணர்கள் போன்றவை தேவைப்படுகின்றன. இவைகள் இல்லாதபோது இவற்றை இறக்குமதி செய்யவும் நிபுணர்களை வரவழைத்து கொள்வதற்கும் பணம் தேவை. ஆனால் இந்தக் காலகட்டத்தில் மொத்த உலகமே நடுங்கிக்…
-
- 0 replies
- 242 views
-
-
அரசிடம் விலை போன பாராளுமன்ற உறுப்பினரும்! ஆபத்தை உணராத மட்டக்களப்பு பண்ணையாளர்களும்! February 6, 2026 மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர் கள் தங்களுக்கான மேய்ச்சல் தரை நிலங்களை கோரி பல வருடங்களாகப் போராட்டம் நடாத்தி வருகின்றனர். மறுபுறம் மட்டக்களப்பு எல்லையில் சிங்கள சட்டவிரோத குடியேற்றவாசிகளை குடியமர்த்த எடுக்கப்படும் முயற்சிகள் தற்போது மகாவலி பி வலய அபிவிருத்தித் திட்டம் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் முயற்சிகள் நடை பெற்று வரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களை அரசிடம் கொண்டு போய் அடகு வைக்கும் இரகசிய வேலைத் திட்டத்தை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்னெடுத்து வருகிறார். மட்டக்களப்பு எல்லையை ஊடறுத்து மட்டக்களப்…
-
- 0 replies
- 124 views
-
-
அரசின் தடை அறிவிப்பு இலக்கைத் தாக்குமா? விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களை தீவிரவாத சந்தேக நபர்களாகப் பட்டியலிடும் அரசாங்கத்தின் அறிவிப்பு புலம்பெயர் நாடுகளில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தடைஅறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் மத்தியில் ஒருவித பயம் தொற்றிக் கொண்டிருக்கிறது. இந்த தடையின் காரணமாக, அடுத்து என்ன நடக்குமோ என்ற கேள்வி பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால், அரசாங்கம் எடுத்து வைத்துள்ள அடி அத்தகையது. என்கின்றார் இன்போ தமிழின் இரானுவ ஆய்வாளரான சுபத்திரா அவர்கள். இந்த அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டது ஒரே கல்லில் பல காய்களை வீழ்த்துவதற்காக என்பதை தெளிவாகவே புரிந…
-
- 1 reply
- 815 views
-
-
அரசின் தொண்டையில் சிக்கிய முள்ளாக கொரோனா 2-வது அலை.! சிறந்த தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பரவலை வெற்றிகரமாக(?) கட்டுப்படுத்திய நாடு என்ற பெயரையும் புகழையும் பெற்றுக் கொண்ட இலங்கை அரசாங்கத்தின் தொண்டையில் சிக்கிய முள்ளாக கொரோனா 2-வது அலை பெரும் அவதியை ஏற்படுத்தி வருவதை உணரமுடிகிறது. எப்பாடு பட்டேனும் பாராளுமன்றத் தேர்தலை நடத்திவிட வேண்டும் என்ற நிலைப்பாடு மேலாங்க கொரோனா கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக தளர்வுக்கு கொண்டு வரப்பட்டது. ஈற்றில் நாடு வழமைக்கு திரும்பும் வகையில் அனைத்து விதமான கட்டுப்பாடுகளும் விலக்கிக் கொள்ளப்பட்டது. சுதந்திரமான, அச்சுறுத்தல் அற்ற நிலையில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற சட்டரீதியான காரணத்தை மெய்ப்பிக்கும் வகையில் இந்த தளர்வு…
-
- 0 replies
- 380 views
-
-
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா! வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வ ரனுக்கும் சபையின் உறுப்பினர்களுக்கும் இடையிலான குழப்பத்தைப் பயன்படுத்தி குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடும் முயற்சி செய்வது தெளிவாகவே தெரிகின்றது. தமிழ் மக்கள் பேரவையின் ஊடாகச் செய்ய முயன்று முடியாமல்போனதை இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிறைவேற்றிவிடலாம் என்று தலைகீழாக நிற்கிறார்கள். முதலமைச்சருக்கு ஆதரவாக நடத்தப்பட்ட ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் அவர்களே பெருமளவில் இருந்தார்கள். அதற்கான காரணத்தை முன்னணியின் தலைவர் கஜேந்திரகும…
-
- 0 replies
- 261 views
-
-
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை ! நிரந்தர நண்பரும் இல்லை!…. அவதானி. இலங்கை, இந்திய அரசியலை தொடர்ந்து கூர்ந்து அவதானித்து வருபவர்களுக்கு எமது முன்னோர்கள் எமக்கு விட்டுச்சென்ற முதுமொழிகள்தான் நினைவுக்கு வரும். சமகாலத்தில் இலங்கையில் அரசியல் நிலவரங்களை அவதானிக்கும் எமக்கு, கூட்டணிகள், கூத்தணிகளாக மாறியிருப்பது அதிசயமல்ல. இதற்கு முன்னரும் அரசியல் கட்சிகளின் கூத்துக்களை பார்த்து வந்திருப்பவர்கள்தான். தேர்தல் காலம் நெருங்கும்போது இக்கூத்துக்கள் ஊடகங்களில் அம்பலமாகிவிடும். எனினும், மக்கள் ஏதாவது ஒரு கூத்தணிக்கு வாக்களித்துவிட்டுத்தான் வருவார்கள். அத்தகைய கூத்தணிகளுக்கு தேர்தல் காலங்களில் வேட்பாளர்கள் தேவைப்படுவார்கள். அப்போது ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்…
-
- 0 replies
- 186 views
-
-
சார் நான் ஹீரோவாகனும், அப்புறம் அரசியல், அப்புறம் சி.எம். இதுதான் இன்றைக்கு சினிமாவில் நடிக்க வருபவர்களின் கனவாக இருக்கிறது. சி.எம் ஆனவுடன் பி.எம் ஆகவேண்டும் என்ற கனவும் சேர்ந்தே வருகிறது. சினிமா நட்சத்திரம் என்பது அரசியல்வாதியாவதற்கான ஒரு தனி தகுதியாக இருக்கிறது. காரணம் சினிமாவில் கிடைக்கும் பிரபலம்தான். ஒரு படத்தில் ஓஹோவென்று பேசப்பட்டுவிட்டால் போதும் மக்களிடம் அறிமுகம் கிடைத்துவிடும். அந்த அறிமுகத்தை வைத்து பிரபலமான கட்சியில் சேர்ந்து தனக்கென்று தனி இடத்தை தக்கவைத்துக் கொள்ளலாம். அதேசமயம் எல்லா சினிமா நட்சத்திரங்களினாலும் அரசியலில் ஜெயித்து விடமுடியாது. இப்படி சினிமா நட்சத்திரமாக மின்னி அரசியல் தலைவராகவோ, எம்.எல்.ஏ, எம்.பி., என குறிப்பிட்ட பதவியில் உயர்ந்தவர்களைப் பற்ற…
-
- 0 replies
- 2.7k views
-
-
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம்…. October 9, 2018 1 Min Read வடக்கில் செயலமர்வுகள் ஆரம்பம். ஜெசாக் நிறுவனமானது USAID-SDGAP நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் பெண்களினை அரசியலில் பங்காளிகளாக்குகின்ற செயற்பாட்டின் ஒரு பகுதியாக யாழ் மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 25 அரசியலில் ஆர்வமுள்ள பெண்களுக்கான பயிற்சி நெறி கடந்த வாரம் யாழ்ப்பாணம் TCT மண்டபத்தில் இடம்பெற்றது. நிறுவன இணைப்பாளர். ந.சுகிர்தராஜ் தலைமையில் ஆரம்பமான இந் நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக பிரபல அரசியல் ஆய்வாளர். நிலாந்தன் கலந்து கொண்டு பெண்களை அரசியலில் ஊக்கப்படுத்தும் வகையில் கருத்துக்களை வழங்கினார். அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவுள்ளமையினால்,…
-
- 0 replies
- 253 views
-
-
அரசியலென்றால் பதவி ஆசை மட்டும் தானா? கடந்த 4ஆம் திகதி, குருநாகலில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாடும் கடந்த 10 ஆம் திகதி சனிக்கிழமை, கொழும்பு கெம்பல் பார்க்கில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 70 ஆவது மாநாடும், இதற்கு முன்னர் கடந்த ஆறு தசாப்தங்களில் நடைபெற்ற அக்கட்சிகளின் மாநாடுகளைப் பார்க்கிலும் வித்தியாசமானவையாக இருந்தன. இதற்கு முன்னர், இவ்விரு கட்சிகளில் ஒரு கட்சியின் மாநாட்டில் மற்றைய கட்சியின் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. ஒரு கட்சியின் மாநாடு மற்றைய கட்சியைத் திட்டித் தீர்க்கும் தளமாகவே இருந்தது. ஆனால் இம்முறை, ஒரு கட்சியின் மாநாட்டில் மற்றைய கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, ஐ.தே.க மாநாட்டில் முன்னாள்…
-
- 0 replies
- 378 views
-
-
லண்டனில் எரிக் சொல்ஹெம் விட்ட கப்பல்..! - இதயச்சந்திரன் [size=4] பிரான்செஸ் ஹரிசன் எழுதிய 'இன்னமும் எண்ணப்படும் உடலங்கள்' [still Counting the Dead]என்கிற நூல் வெளியீட்டு விழாவில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்கள். 1.இறுதிப் போரில் மக்கள் கேடயமாகப் பயன்படுத்தப்பட்டார்களா? 2.அதிகரிக்கும் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை. 3.நில ஆக்கிரமிப்பு மற்றும் மந்தகதியில் நடைபெறும் மீள் குடியேற்றத்திற்கு எதிராக சர்வதேச சமூகம் என்ன செய்யலாம்? 4.ஐ.நா. நிபுணர் குழு இலங்கை செல்வதை சிங்களம் மறுத்து விட்டது. -ஜாஸ்மின் சூக்கா. 5.புலிகள் தீர்விற்கான எதுவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லையா? 6.தமிழ் மக்களின் அரசியல் பிறப்புரிமையை மறுக்க இவர்கள் யார்? 7.இலங்கையின் தேசிய இனப்பிரச்…
-
- 0 replies
- 564 views
-
-
வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாளுடனான கலந்துரையாடல்!
-
- 1 reply
- 647 views
-
-
அரசியல் கிசுகிசு செய்திகள் வரிசையில் நின்ற முன்னாள் தலைவர் இந்த நாட்டின் முன்னாள் தலைவர், அண்மையில் நிப்போன் நாடொன்றுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். அங்கு சென்றிருந்த அவருக்கு, அங்கிருந்த இலங்கையர்களால் பெரும் வரவேற்பளிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்துக்கொண்டிருந்த அதிகாரியொருவருக்கு, கோபம் வந்ததாம். இதனால், ஜப்பானிலுள்ள அரசாங்க அதிகாரிகளுக்கு அவர் ஓர் உத்தரவைப் பிறப்பித்தாராம். முன்னாள் தலைவர், தற்போது சாதாரண எம்.பி.யொருவர் மாத்திரமே. அவருக்கு வேறு சலுகைகளை வழங்கவேண்டிய தேவையில்லை என்று கூறினாராம். எவ்வாறாயினும், இவ்விடயம் தொடர்பில், முன்னாள் தலைவரின் காதுக்கு எட்டியுள்ளது. 'ஹா அது என்ன பெரிய விசயமா…
-
- 56 replies
- 5.4k views
-
-
அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அரசியல் தீர்மானமே அவசியமாகும்: ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவசராசா செவ்வி (நேர்காணல்:- ஆர்.ராம்) நீண்டகாலமாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரினதும் விடுதலை சாத்தியமாக அமையவேண்டுமானால் அரசியல் ரீதியான தீர்மானமே எடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார். 1979ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு அதன் கீழ் அப்போதைய சட்டமா அதிபரினால் குட்டிமணி, தங்கத்துரை, தேவன் ஆகிய அரசியல் கைதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முதலாவது வழக்கான நீர்வேலி வங்கிக் கொள்ளையில் கொலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் சிவநேசன் வழக்கிலிருந்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதி…
-
- 0 replies
- 423 views
-
-
அரசியல் சூதாட்டத்தில் பலிக்கடாக்களாகும் அப்பாவிகள்... காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை 10 ஆண்டுகளைத் தாண்டியும், எந்த முடிவும் இன்றித் தொடருவதைப் போலவே, இதனை வைத்து அரசியல் நடத்துகின்ற போக்கும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள் முதலில் தொடங்கப்பட்டது வடக்கில் அல்ல. தெற்கில் தான். 1971 ஜே.வி.பி கிளர்ச்சியின் போதும், 1987- 1990 வரையான இரண்டாவது ஜே.வி.பி கிளர்ச்சியின் போதும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இலட்சத்துக்கும் அதிகம். அப்போது இரண்டு தரப்புகளும் தமக்கு எதிரிகள் எனக் கண்டவர்களையும், சந்தேகம் கொண்டவர்களையும், காணாமல் ஆக்குவதும்,…
-
- 1 reply
- 484 views
- 1 follower
-