Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இலங்கையில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் சீனா- கேணல் ஆர்.ஹரிகரன் சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மே 20 ஆம் திகதி பாராளுமன்றததில் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் நிவேற்றப்பட்டமையை ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு கிடைத்த ஒரு வெற்றியாக பலரும் கருதுகிறார்கள். சட்டமூலவரைவு நடைமுறை ரீதியான முரணபாடுகளையும் அரசியலமைப்புக்கு முரணான அம்சங்களையும் கொண்டருப்பதாக இலங்கை உச்சநீதிமன்றம் அதன் வியாக்கியானத்தில் தெரிவித்திருந்தது. இறுதியில், அரசாங்கம் உச்சநீதிமன்றத்தினால் விதந்தரைக்கப்பட்ட யோசனைகளில் சர்வஜன வாக்கெடுப்பும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் தேவைப்படுகின்ற குறிப்பிட்ட சில பிரிவுகளை நழுவிக் கொண்ட போதிலும், ஏனைய சகல திருத்த…

  2. தேர்தலைத் திரும்பிப் பார்ப்போம்: கமல்ஹாசன் தரும் அரசியல் படிப்பினை! மின்னம்பலம் ராஜன் குறை தேர்தல் முடிந்து ஒரு மாதம் வாக்கு எண்ணிக்கைக்குக் காத்திருந்தோம். அது முடிந்து திமுக பதவியேற்றதும் கவனம் முழுவதும் புதிய ஆட்சியின் மீது குவிந்தது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாட்டில் பெரும்புயலாக வீசியது. மோடியின் ஒன்றிய அரசாங்கத்தின் அலட்சியத்தால் தடுப்பூசி தயாரிப்பு தாமதமாகி, நாட்டின் பல பகுதிகளில் பிணக்குவியல்களைக் காண நேர்ந்தது. தமிழகத்தில் புதிதாகப் பதவியேற்ற திமுக அரசு, அதன் தலைவர்களின், குறிப்பாக மு.க.ஸ்டாலினின் நீண்ட நாள் நிர்வாக அனுபவம் காரணமாக உடனடியாக முழு வேகத்தில் செயல்பட்டு, கொரோனோ பரவலைச் சிறப்பாக எதிர்கொண்டு மக்கள் மனதில் நம்பிக்கையையும், தைரியத்த…

  3. ஐநா இலங்கை நடவடிக்கையில் ஒரு பின்னடைவு ஐநா மனித உரிமை அலுவலகம், கடந்த மார்ச் மாத முடிவுகளின் படி, இலங்கையில் ஒரு கண்காணிப்பகத்தினை அமைக்க இருக்கிறது. அதற்குரிய பண ஒதுக்கீடு தொடர்பில், நியூயோக்கில் உள்ள தலைமை அலுவலகத்திடம் சமர்ப்பணம் ஒன்றை கொடுத்து இருந்தது. அந்த சமர்பணத்தில் கேட்கப்பட்ட தொகையில் 50% மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக, தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக, அகமகிழ்ந்து போயுள்ள, இலங்கை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். விசாரணையாளர்கள், சட்டத்தரணிகள் என பலரையும் இணைக்க ஐநா மனித உரிமை, இலங்கை விசாரணை அலுவலகம் திட்டமிட்டுள்ளது. சிலவேளை, zoom மூலம் அலுவல்களை முடித்துக் கொள்ளலாம், அதன் மூலம் செலவுகளை குறைக்கலாம் என்று திட்டமோ யாருக்கு தெரியும். ht…

    • 0 replies
    • 547 views
  4. கொழும்பை கவனம் கொள்ள வைக்கும் இரு நிகழ்வுகள் வட அமெரிக்க நிகழ்வுகள் இரண்டு கொழுப்பினை ராஜதந்திர கவலை அடைய செய்துள்ளது என கொழும்பு பத்திரிகை தெரிவிக்கின்றது. ஒண்டாரியோ மாநிலத்தின் ஒரு நகர சபையின் தமிழர் இனவழிப்பு வாரம் சட்டமூலம் நிறை வேறியமை ஒன்று. அடுத்தது அமெரிக்க காங்கிரசின் பிரேரணை. இதிலே, வடக்கு, கிழக்கு, தமிழர்களின் பூர்வக தாயகம் என்ற பதப்பிரயோகம் கொழும்பினை, மிகவும் காத்திரமானது (சீரியஸ்) என்று கவலை அடைய செய்துள்ளதாக தெரிய வருகிறது. நிறைவேறிய பிரேரணை, வெளிவிவகார தெரிவுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார தெரிவுக்குழு இந்த தீர்மானத்தினை ஏற்றுக் கொண்டால், இலங்கைக்கு சர்வதேச ரீதியில் பெரும் சிக்கல்களை உண்டாக்கும் என கொழும்பு கருதுகிறத…

    • 20 replies
    • 1.6k views
  5. பேர்ள் கப்பல் தோற்றுவித்த அச்சத்தால் பெரும் நெருக்கடிக்குள் மீனவ சமூகம் நா.தனுஜா எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தோற்றுவித்துள்ள அச்சத்தினால் நீர்கொழும்பு களப்பிற்குள் கப்பல்கள் நுழைவதும் பாணந்துறையில் இருந்து நீர்கொழும்பு வரையான கடற்பிராந்தியத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் மீன்பிடித்திணைக்களத்தினால் உடனடியாக இடைநிறுத்தப்பட்டிருப்பதாக மீன்பிடி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஏற்கனவே பல்வேறு பாதிப்புக்களை எதிர்க்கொண்டுள்ள மீனவ சமூகம் மீண்டும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளது. பேர்ள் கப்பல் கடலுக்குள் மூழ்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து, அதனை ஆழ்கடலுக்கு இழுத்துச்செல்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த கப்பல…

  6. தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து, மோடியின் வாழ்த்துக்கு நன்றி சொல்லியது முதல், அரசு அறிக்கை, கவுன்சில் கூட்டம், ஊடக சந்திப்பு என அனைத்திலும் "ஒன்றிய அரசு” என்றே மத்திய அரசை புதிய சொல்லாடல் கொண்டு குறிப்பிடுகிறது திமுக. கிரிக்கெட்டில் ஐபிஎல் போலத்தான், இன்றைய இந்திய அரசியலும் உள்ளது. அதில் சென்னை அணி, கொல்கத்தா அணி, மும்பை என்பதைப் போல, இங்கும் தமிழ்நாடு திமுக அணி, மேற்குவங்கம் திரிணாமுல் அணி, கேரளா கம்யூனிஸ்ட் அணி என முன்னணியில் இருக்கின்றன. இரண்டுமே இந்தியாவுக்குள் நடக்கும் உள்விளையாட்டுகள் தான் என்றாலும் கூட, அரசியல் விளையாட்டில் ஒரு சிறு வித்தியாசம் உண்டு, இந்த அணிகளுக்கெல்லாம் ஒரே ஆப்போனண்ட் மட்டும் தான், அது மத்தியில் ஆளும் பாஜ…

    • 1 reply
    • 615 views
  7. தொடர்ந்து தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சினிமாத்துறையின் நோக்கம் என்ன? – அருட்தந்தை ஜெகத் கஸ்பர் June 2, 2021 தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை சிறுமைப்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் ஒரங்கட்டும் நோக்கத்துடன் தமிழர்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் ஆவணங்களைத் தயாரிக்கும் முயற்சிகளை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. அதற்கான ஆதரவுகளை வழங்குவதில் இந்திய சினிமாத் துறை முன்னணி வகிக்கின்றது. அதிலும் குறிப்பாக வேற்று மாநில கலைத் துறையினர் தொடர்ந்து இவ்வாறான இழிவான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியே தற்போது அமசோனில் வெளிவரவுள்ள Family man -2 (பமிலி மான்- 2) என்ற தொடர் நாடகம். இது தொடர்பில் ‘இலக்கு’ ஊடகத்தி…

  8. அஹ்ஸன் அப்தர் / Ahsan Afthar கொழும்பு பௌத்த பாளி பல்கலைக் கழகத்தின் இளமாணி பட்டதாரியான ரதன தேரர் அதே பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் டிப்ளோமா பட்டத்தையும் நிறைவு செய்துள்ளார். இவர் இப்போது இந்தியாவின் அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி கற்கைகளில் முதுகலைமாணி பட்டம் பெற்றுக் கொள்வதற்கும் தயாராகி வருகின்றார். இந்நிலையில், களுத்துறையில் உள்ள தனது பிரிவெனாவில் கல்வி கற்கும் இளம் பௌத்த துறவிகளுக்கு தமிழ் மொழியைப் போதிக்கும் பணிகளையும் செய்து வரு கின்றார். ரதன தேரரின் தாய்மொழி சிங் களம் ஆகும். ஆனால் இப்போது தமிழ் மொழியில் தேர்ச்சியடைந்து தமிழை கற்பிப்பதோடு மாத்திரம் நிறுத்தி விடாமல் அன்றாட வாழ்க்கையில் தனது தனிப்பட்ட கருமங்களையும் தமிழ்மொழியில் ஆற்ற…

  9. கொவிட் : இழக்கப்போவது யார்? June 1, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — மறுபடியும் கொவிட் 19 சூழல் பற்றியே எழுத வேண்டியுள்ளது. இந்த இரண்டாவது அலையில் மரணங்களும் கூடியுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான பெண்ணொருவரும் கொவிட் 19 க்குப் பலியாகியுள்ளார். பல பிரதேசங்கள் மீளவும் முழு முடக்கத்துக்கு வந்துள்ளன. அந்தளவுக்குக் கொரோனா எல்லோரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதிகம் ஏன் நாட்டையே அது முடக்கியிருக்கிறதல்லவா. இப்படியொரு நிலை வரும் என்று மருத்துவர் சங்கத்தினர் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டேயிருந்தனர். ஆனால் அதை அரசாங்கம் கேட்கவில்லை. சனங்களும் கேட்கவில்லை. விளைவு இந்தத் தொடர் முடக்கம். இந்த அனர்த்தங்கள். இந்தத் தேவையில்லாத உயிரழப்…

  10. ஒரு இனம் திட்டமிட்டு அழிக்கப் படுவதை ஒரு போதும் மனித வரலாறு மன்னிக்காது- பேராசிரியர் குழந்தை 10 Views யாழ்.நுாலக எரிப்பு நாள் குறித்து இலக்கு செய்தி நிறுவனத்திற்கு கருத்து தெரிவித்த பேராசிரியரும் அருட்தந்தையுமான குழந்தை, “ஒரு இனம் திட்டமிட்டு அழிக்கப்படுவதை நம் கண் முன்னே காண்பதை ஒரு போதும் மனித வரலாறு மன்னிக்காது எனத் தெரிவித்துள்ளார். மேலும் “நுாலகம் என்பது பண்பாட்டு பாதுகாப்பு பெட்டகம், பண்பாடு என்பது மக்களுடைய அடையாளத்தையும் உரிமையையும் வாழ்க்கை நெறிமுறைகளையும் தாங்கள் வைத்துக்கொண்டிருந்த தொழில் முறையும் அரசியல் முறையும் பொருளாதார முறையும் என பல்வேறு வாழ்க்கை நிகழ்வுகளைப் பாதுகாத்து வைக்கக் கூடியது. எனவே இந்த …

  11. முக்கியமான ஏழு மாதங்கள் 76 Views 2021ஆம் ஆண்டு யூன் முதலாம் திகதியுடன் இவ்வாண்டுக்கான அடுத்த ஏழு மாதங்கள் ஆரம்பமாகப் போகிறது. தொடரவிருக்கும் இந்த ஏழு மாதங்களும் ஈழத் தமிழர்களின் உரிமைகளை மீட்டல் என்னும் இலக்கு நோக்கிய பயணத்தில் அதிமுக்கியமான மாதங்களாக அமையப் போகின்றன. காரணம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமர்வு நிறைவேற்றிய சிறீலங்கா குறித்த தீர்மானத்தின் படி மனித உரிமைகள் ஆணையகம் சிறீலங்காவின் யுத்தக் குற்றச் செயல்கள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை வன்முறைப்படுத்தல்கள் தொடர்பான சான்றாதாரங்களையும், சாட்சியங்களையும் திரட்டவென ஒதுக்கப்பட்ட நிதியில், இதற்கான தனியான அலுவலகம் ஒன்றை அமைத்துச் செயற்படுவதற்கான நடை முறைகள…

  12. பிள்ளையானின் பிரதேசவாதம் ! கிழக்கின் வரமா? சாபமா? May 30, 2021 இக்கட்டுரை சுகபோகங்களுக்காக ஆளும் அரசுடன் கைகோர்த்து நிற்கும் முன்னால் போராளி அரசியல்பவாதிகளைப் பற்றி மட்டுமே பேசுகிறது! * அது 1998 அல்லது 99 ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன். அப்பா என்னையும் தம்பியையும் அழைத்துக் கொண்டு திருமலை வீதியில் இந்துக் கல்லூரி மைதான நுழைவாயிலுக்கு முன்பாக அமைந்திருக்கும் சிறிய சலூன் கடைக்கு முடி வெட்டக் கூட்டிச் சென்றிருந்தார். அப்போது அங்கே ஒரு முதியவர் கம்பீரமாக அமர்ந்திருந்து முடிவெட்டிக் கொண்டிருந்தார். இவர் மட்/ மத்திய கல்லூரியில் ஆசிரியராகவும், அதிபராகவும் கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆசிரியர் சேவையில் பணியாற்றி 1986 ஓய்வு பெற்றவர். …

  13. வைரமுத்துவை பாலியல் புகாரை வைத்து மதிப்பிடலாமா? ஆர். அபிலாஷ் வைரமுத்து தன் இலக்கிய தகுதியின்மையாலே ஒ.என்.வி விருதுகள் போன்ற உயர் அங்கீகாகரங்களுக்கு தகுதியற்றவராகிறார். அதோடு பஞ்சாயத்து முடிந்தது - ஆனால் பாடகி சின்மயி, நடிகை பார்வதி உள்ளிட்டோர் எழுப்பிய மீ டூ விவகாரத்தை வைத்து அவரை மதிப்பிடுவது பத்தாம்பசலித்தனமானது - இதை ஏற்றோம் என்றால் சில கேள்விகள் எழுகின்றன: 1) பாலியல் ஒழுக்கம் தான் ஒருவர் கலைஞனாக, எழுத்தாளனாக இருப்பதற்கு பிரதான மதிப்பீடா? இந்த உலகில் உள்ள பெரும்பாலானோர் பாலியல் ஒழுக்கமில்லாதவர்களே. ஏதோ ஒரு சந்தர்பத்தில் அத்துமீறலில் ஈடுபடுகிறவர்களே. இல்லையென சொல்ல முடியுமா? எழுத்தாளனும் இதே உலகில் தோன்றுகிறவன் தான். உலகம் முழுக்க பட…

    • 9 replies
    • 1.2k views
  14. போலீஸ் அதிகாரியும் மனைவியும்... கொழும்பில் கொரோனா லொக்டவுன் ஊரடங்கு அமுலில் உள்ளது. போலீசார் வீதியில் நின்று அத்தியாவசியமான் பயணங்களை மட்டுமே அனுமதித்துக் கொண்டு இருந்தனர். ஒரு அம்மணி வேகமாக நடந்து வந்தார். பொலீஸ் காரர் மறித்து என்ன விசயம், எங்க போறீர்கள் என்றார். ஜொக்கிங் போகிறேன் என்றார் அவர். அதுக்கெல்லாம் அனுமதி இல்லை. வீட்டுக்கு திரும்பி போங்கள் என்றார் அவர். முடியாது, நான், இந்த பகுதி ஏரியா போலீஸ் உயர் அதிகாரியின் மனைவி. அதுதான் எமது குவாட்டர்ஸ், ஆகவே என்னை தடுக்காதே என்றார். அம்மா, உங்கள் நன்மைக்கு தானே சொல்கிறேன். நோய் வந்தால் பிரச்சனை தானே என்று சொல்லி, வீடு திரும்புங்கள் என்று சொல்ல, அம்மணிக்கு கோபமான கோவம். எடுத்தார் போனை, கூப…

    • 5 replies
    • 893 views
  15. எழுவர் விடுதலை : தேசிய கட்சிகளின் இருப்பு ஏன் மக்களாட்சியை சிக்கலாக்குகிறது? – ஆர். அபிலாஷ் May 25, 2021 - ஆர்.அபிலாஷ் என்னுடைய “மோடியின் எதிர்காலம்” கட்டுரையை பேஸ்புக்கில் பகிர்ந்த போது அதன் கீழ் பின்னூட்டத்தில் கோதை செங்குட்டுவேல் (Kothai Sengottuvel) ‘தேசிய கட்சிகளின் அவசியம்தான் என்ன, மாநில கட்சிகளின் கூட்டாட்சி மத்தியில் தோன்றும் நிலை ஏற்பட வேண்டும்’ என சொல்லி இருந்தார். இது என் மனத்திலும், மாநில தன்னாட்சி உரிமைகள் பற்றி சிந்திப்பவர்கள் மனத்திலும் உள்ள விருப்பமே. இன்னும் சொல்லப் போனால், இது தமிழ் தேசிய அரசியலின் கோரிக்கையே அல்ல. இதுவே உண்மையான மக்களாட்சி அமைய வேண்டும் என கனவு காண்பவர்களின் கோரிக்கை. ஏனென்றால், இப்போதுள்ள நாடாளுமன்ற தேர்தல் முறையும…

  16. சமகாலத்தில் நல்லிணக்கத்தை பாதிக்கும் சமூக ஊடகங்கள் 13 Views இலங்கையில் நல்லிணக்க செயன் முறையை வலுப்படுத்துவதற்காக பன்மைத்துவம் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான உறவினை கட்டியெழுப்புவது காலத்தின் தேவையாகும். இன்றைய நவீன உலகமானது ஊடகத்தை ஒரு அச்சாணியாக வைத்தே இயங்கி வருகின்றது. ஒரு மனிதன் தனது நாளாந்த வாழ்க்கையில் நித்திரையால் விழித்தவுடன் முதலில் பார்ப்பது சமூக ஊடகங்களையே ஆகும். எடுத்துக் காட்டாக ஐரோப்பாவில் கிறிஸ்தவர்கள் நித்திரையால் விழித்தவுடன் பைபிளை எடுத்து வாசிக்கிறார்கள். இது அவர்களுடைய அடையாளம். அதேபோல் இந்த சமகால உலகில் அனைவரும் சமூக ஊடகங்களையோ அல்லது பத்திரிகையையோ எடுத்து வாசிக்கிறார்கள். அதாவது ஒரே செய்தியை எல…

  17. கரிபியன் மற்றும் ஆபிரிக்க நாடுகளில் சீனா செய்த வேலைகள். இலங்கையில் என்ன நடக்கப்போகின்றது என்று தெளிவாக தெரிகின்றது. வருமுன்பே தமிழ் காலி. Attorney General Dappula de Livera unveils a plaque that was scripted in Sinhala, English and the Chinese language http://www.dailymirror.lk/news-features/Chinese-elevated-above-national-languages-in-Sri-Lanka/131-212676 கரிபியன், மற்றும் ஆபிரிக்க நாடுகளில் சீனா வருகை என்ன செய்து இருக்கிறது என்று இங்கே கறுப்பினத்தவர் விவாதிக்கின்றனர். (7 minutes) https://tinyurl.com/ptxx272k

    • 2 replies
    • 564 views
  18. சுரஞ்சனா திவாரி பிபிசி செய்தியாளர் கிட்டத்தட்ட 200 கோடி மக்கள்தொகை கொண்ட தெற்காசியா, தற்சமயம் மிகவும் கடுமையான சுகாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. கொரோனா தொற்றுப் பரவல் இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் வேகமாக அதிகரித்து வருகிறது. சிறிய நாடுகளில், குறிப்பாக இலங்கையில் இது தீவிரமாகக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஆனால், இந்த நாடுகளில் சீனா செய்துள்ள நிவாரணப் பணிகளின் வேகம், இந்த நாடுகளில் சீனாவின் செல்வாக்கை அதிகரிக்கக்கூடும் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர். தொற்றுநோயைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாகக் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இலங்கையின் நகரங்களில் உள்ள சாலைகள் வெறிச்சோடியுள்ளன. மே 25 வரை, மக்கள் அத்தியாவசி…

  19. நிராகரிக்கப்படும் முன்னாள் போராளிகள் : பொறுப்பற்றுச் செயற்படும் சமூகம் May 24, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — லொக்டவுணில் சில திரைப்படங்களைப் பார்த்தேன். அதில் ஒன்று “நாம் பிறந்த மண்”. சிவாஜி, ஜெமினி, கமல், கே.ஆர்.விஜயா, நாகேஸ், படாபட் ஜெயலட்சுமி நடித்த படம். வின்ஸன்ட் இயக்கியது. 1977இல் வெளியானது. முன்பு இதை 1980களின் தொடக்கத்தில் பார்த்திருந்தேன். இயக்கங்கள் புத்தெழுச்சியோடு உலவிய 1980களின் முற்பகுதியில் நாம் பிறந்த மண், கண் சிவந்தால் மண் சிவக்கும், இனியொரு சுதந்திரம், ஊமை விழிகள் போன்ற படங்கள் புரட்சிப்படங்களாக இளைஞர்களால் பார்க்கப்பட்டன. தமிழ்ப்படங்களுக்கு அப்பால் உமர் முக்தார், பைவ் மான் ஆமி (Five Man Army), ஜெயில் பிறேக் (Jail Break)…

  20. சிரஞ்சீவியின் மறுப்பறிக்கை. 25/04/2021 பெரியவர் தடா சந்திரசேகர் ஐயா நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் செயற்படக்கூடாது என்று தலைமையினை கோருகின்றேன்.. நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் பெரியவர் தடா சந்திரசேகர் ஐயா அவர்கள் சற்றும் உண்மை கலக்காத பொய்யினை கட்டவிழ்த்து விட்டு, சிரஞ்சீவி ஆகிய என்னைப்பற்றி அவதூறு பரப்பும்படி ஒருவருடன் உரையாடிய ஒலிப்பதிவு ஒன்றினை கேட்க நேரிட்டது. தமிழர்களின் நம்பிக்கைக்குரிய கட்சியாக கட்டமைக்கப்பட்வருகின்ற நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் பெரியவர் தடா சந்திரசேகர் ஐயா பேசியிருப்பது உண்மையென எண்ணி தொடர்ந்தும் தனிப்பட்ட அழைப்புக்களில் இதன் உண்மை தன்மை குறித்து என்னிடம் கேள்வி எழுப்பி வருகின்றார்கள். தடா ஐயா …

  21. தமிழினம் வலிசுமந்த நினைவுகள் -முள்ளிவாய்க்கால் வரையான அனுபவ பகிர்வு- திருமதி.றூபி செல்வராஜ் 3 Views மனிதகுல வாழ்வியல் வரலாற்றில் தமிழீழத் தாயகத் தமிழினம், ஆளும் சிறீலங்கா அரசின் வன்கொடுமைகளில் அனுபவித்த அதியுச்ச வலிகளையும், இழப்புக்களையும் ஏற்படுத்திய முள்ளிவாய்க்கால் வரையான அவலங்களை கடந்து பன்னிரெண்டு ஆண்டுகளானாலும், நேற்று நடந்தவைபோல எங்கள் மனத்திரையில் அலை வீசிக் கொண்டே இருக்கின்றன. இது ‘போருக்குள் வாழ்ந்தோம்’ என்ற இரு சொற்பதங்களுக்குள் அடக்கக் கூடிய அல்லது சொல்லி விட்டுக் கடந்து செல்லக் கூடிய விடயம் அல்ல இந்த முள்ளிவாய்க்கால் 18 மே 2009 வரையான பேரவலம். மனித வாழ்வுக்கு அடிப்படையான, அத்தியாவசியமானவை எவை என்றால்? உணவு…

  22. ‘என் வழி தனி வழி’ (தமிழ் தேசியம் – சில கேள்விகள்) April 1, 2021 — கருணாகரன் — தமிழ் தேசியம் – சில கேள்விகள் “தமிழ் மக்களில் பெரும்பான்மையினர் தமிழ்த்தேசிய அரசியலையே ஆதரிக்கிறார்கள். தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கே வாக்களிக்கிறார்கள். தமிழ் ஊடகங்களில் பலவும் கூட தமிழ்த்தேசிய நிலைப்பாட்டுடன்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. புலம்பெயர்திருக்கும் மக்களிலும் பெரும்பான்மையினர் தமிழ்த்தேசிய அரசியலின் பக்கமே நிற்கின்றனர். அப்படியிருக்கும்போது நீங்கள் தமிழ்த்தேசிய அரசியலின் மீது கடுமையாக விமர்சனங்களையும் எதிர்ப்பையும் முன்வைக்கிறீர்களே! இது தவறென்று உங்களுக்குத் தோன்றவில்லையா? பெரும்பான்மை மக்களின் உணர்வுக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராக நிற்பது தவற…

  23. பெரும் கனவான் பில் கேட்ஸ் அண்மையில் விவாகரத்து பெற்று இருந்தார் பில்லர். ஆனால் இப்போது கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, அவர் ஒரு பெரும் வில்லர் என்பதை வெளிவரும் பல விவகாரங்கள் வெளிக்காட்டுகின்றன. இவரை பார்க்கும்போது, ஒரு கனவான் (ஒரு கவுரவமான மனிதர் போல முக அமைப்பு) போல, முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ஜான் மேஜர் நினைவு வரும். அவரும் ஒரு கனவான் போலவே தோன்றுவார். ஆனால், ஜான் மேஜர், வில்லங்கமான ஆள் என்று வெளியே தெரிய வந்தது, அவரது அமைச்சரவையில் பெண் அமைச்சராக இருந்த எட்வீனா காரீ, ஓய்வு பெற்ற பின்னர், தனது டயரி குறிப்பினை வெளியிட்ட போது, தான் பிரதமரை ஏதோ கேட்க அவரது அறைக்கு போனபோது, தன்னை கட்டி அனைத்து, முத்தம் தந்தார் என்றும், (அம்மா, எதார்த்தமா சொன்னாலும…

    • 13 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.