Jump to content

தேர்தலைத் திரும்பிப் பார்ப்போம்: சீமான் அரசியலின் அபாயங்கள், அபத்தங்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


 

தேர்தலைத் திரும்பிப் பார்ப்போம்: சீமான் அரசியலின் அபாயங்கள், அபத்தங்கள்!

spacer.png

ராஜன் குறை 

சென்ற வாரம் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சந்தித்த படுதோல்வியிலிருந்து என்ன படிப்பினைகளைப் பெற முடியும் என்று பரிசீலித்தோம். இந்த வாரம் சீமானின் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் தோல்வி குறித்தும், அதன் அரசியல் எத்தன்மையது என்பது குறித்தும் ஆராய்வோம். அரசியல் சிந்தனை என்பது விமர்சனபூர்வமாக இருப்பதுடன் கண்டிக்க வேண்டியதை கண்டிக்க தயங்கக் கூடாது. கமல்ஹாசன் கட்சி, சீமான் கட்சி இரண்டுமே தனிநபர்களை மையப்படுத்தியது. அவர்களைத் தவிர அந்தக் கட்சியில் உள்ள யாருமே முகமற்றவர்கள்; அடையாளமற்றவர்கள் என்ற நிலையிலேயே இந்தக் கட்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையை விமர்சிப்பதில் ஒரு மிகப்பெரிய குழப்பம் பலர் மனதில் இருக்கிறது. எல்லா கட்சிகளுமே ஒரு தலைவரை, முதலமைச்சர் வேட்பாளரை, பிரதமர் வேட்பாளரை மையப்படுத்திதானே நடக்கிறது, அதுபோலத்தானே இந்தக் கட்சிகளும் என்று பலரும் எண்ணத் தலைப்படுகிறார்கள். குறிப்பாக தொலைக்காட்சி ஊடகம் இந்தத் தலைமையேற்கும் தனிநபர் மட்டுமே வெற்றி தோல்விக்கு காரணம் என்ற மனப்போக்கை ஏற்படுத்துகிறது. அதன் காரணமாகவே ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் மறைந்ததும் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாக ஓர் அபத்தமான கற்பிதத்தைத் தொடர்ந்து அனுமதித்தார்கள்.

ஒரு கட்சியின் தலமட்ட தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் எனப் பலரையும் குறித்து அச்சு ஊடகங்களில் செய்திகள் வரத்தான் செய்கின்றன. ஆனாலும் அவர்களது முக்கியத்துவத்தைக் குறித்து ஊடகங்கள் தொடர்ந்து பேசுவதில்லை. பல நேரங்களில் வெற்றி தோல்விக்கு அவர்களது செயலாற்றும் திறமையும், மக்களிடையே அவர்களுக்கு உள்ள தொடர்புகளும் முக்கிய காரணம் என்றாலும் அது முழுமையாக உள்வாங்கப்படுவதில்லை. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளுமே பலமுறை ஆட்சிப்பொறுப்பில் இருந்தவை. அந்தக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக இருந்தவர்கள். மக்களின் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தவர்கள். அதனால்தான் இந்த இரண்டு கட்சிகளும் சமூகப்பரப்பில் முழுமையாக வேரூன்றியுள்ளன. இந்தக் கட்சிகளைக் கடந்து இன்னொரு கட்சி வளர வேண்டும் என்றால் சமூகப் பரப்பில் அந்தக் கட்சி வேரூன்ற வேண்டும். அதற்கு தல மட்டத்தில் மக்கள் நம்பிக்கையை ஈட்டும் வண்ணம் செயலாற்ற வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் தல மட்ட தலைவர்கள் உருவாக வேண்டும். இவர்கள் கட்சியின் செயல்பாட்டை தீர்மானிப்பவர்களாக, கட்சியின் தலைமைக்கு உரம் சேர்ப்பவர்களாக இருக்க வேண்டும். இப்படி ஒரு வலுவான கட்சி அமைப்பு உருவான பின் ஒரு தலைவரை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யலாம். ஆயிரக்கணக்கானவர்கள் தேரை இழுக்கும்போது தேர் நகர்கிறது. ஆனால், அது தானாக நகர்வதில்லை. இழுப்பவர்களின் உடலாற்றலால்தான் நகர்கிறது. அது போல கட்சி தானூர்தி வாகனமில்லை. தலைவர்கள் மட்டுமே அதை நகர்த்திவிட முடியாது. தொண்டர்களை உற்சாகப்படுத்தி இயக்கும், மக்களை கவரும் ஆற்றல் தலைவர்களுக்கு இருக்க வேண்டும். அதே நேரம் அப்படி உற்சாகப்படுத்த தொண்டர்களைக் கொண்ட கட்சி அமைப்பு முதலில் இருக்க வேண்டும்.

 

சீமானின் கட்சி அவருடைய உணர்ச்சிகரமான பேச்சை மட்டுமே நம்பியிருக்கிறது. ஆவேசமாக, நகைச்சுவையாக, உணர்ச்சி தெறிக்க அவர் ஏற்ற இறக்கங்களுடன் பேசுகிறார். அது கேட்பதற்கு நாடகீயமாக, சுவாரஸ்யமாக இருப்பதால் மக்கள் கூடுகிறார்கள். அதை ஆதாரமாகக் கொண்டு பலர் அந்தக் கட்சியில் உறுப்பினர்களாகி கட்சியை வளர்த்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். சீமானையே ஆதாரமாகக் கொண்டிருப்பதால் கட்சியின் தலமட்ட அமைப்புகள் வலுப்பெறுவதில்லை. அவற்றுக்கென செயல்பாடுகள் என சில காரியங்கள் நடந்தாலும், வெகுஜன அமைப்பாக மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. காரணம், சீமானே கட்சியின் ஆதாரம் என்ற நிலைதான்.

தேர்தலில் நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி தேர்தலைத் தனித்து நின்று சந்திக்கிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் 2016ஆம் ஆண்டு 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு நாலரை லட்சம் வாக்குகளைப் பெற்றது. அடுத்து 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதிகளில் போட்டியிட்டு பதினாறு லட்சம் வாக்குகளை பெற்றது. நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு முப்பத்திரண்டு லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது. இது மொத்த வாக்குகளில் ஆறு சதவிகித வாக்குகள் ஆகும். இந்த எண்ணிக்கையைப் பார்க்கும்போது கட்சி மெள்ள வளர்வதாகத் தோன்றலாம். ஆனால், நாம் கவனிக்க வேண்டியது இரண்டு முக்கிய கட்சிகளும், அவர்கள் அமைக்கும் கூட்டணிகளும் தொடர்ந்து எண்பது சதவிகித வாக்குகளைப் பெறுகின்றன என்பதைத்தான். சீமான் போட்டியிட்ட திருவொற்றியூர் தொகுதியிலேகூட அவர் மூன்றாவது இடம்தான் பெற முடிந்தது. பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரு திரைப்பட இயக்குநராக, தமிழ் ஈழ ஆதரவாளராக, தமிழ் அடையாளவாத அரசியல் செய்பவராக ஊடக கவனத்தைத் தொடர்ந்து பெற்றுவரும் அவரால் அவர் போட்டியிடும் தொகுதியில்கூட வெல்ல முடியவில்லை என்பது சிந்தனைக்குரியது.

spacer.png

தமிழகத்தில் நிலைபெற்றுவிட்ட இரு கட்சி ஆட்சி முறை மீது பலருக்கு அதிருப்தி இருக்கிறது. தமிழகத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சி பிற இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது சிறப்பாகவே இருந்தாலும், இன்னும் மக்கள் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படவில்லை என்பது உண்மைதான். அதனால் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினருக்கு மூன்றாவதாக ஒரு மாற்று சக்தி வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இவர்கள் மொத்த வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட இருபது சதவிகித வாக்குகளாக இருந்து வருகிறது. அதாவது திமுக, அஇஅதிமுக கூட்டணிகள் பகிர்ந்துகொண்ட எண்பது சதவிகித வாக்குகளைத் தவிர்த்த, இரு துருவ அரசியல் அதிருப்தியாளர்களின் இருபது சதவிகித வாக்குகளைத் தனித்து நிற்கும் சிறிய கட்சிகள், சுயேட்சைகள், நோட்டா எனப் பலரும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். விஜய்காந்த் கட்சி தொடங்கி 2006 தேர்தலில் போட்டியிட்டபோது இந்த உதிரி அதிருப்தி வாக்குகளில் எட்டு சதவிகித வாக்குகளை ஒரே ஆண்டில் பெற்றார். பின்னர் அவர் 2011 தேர்தலில் அஇஅதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் மூன்றாவது மாற்று என்ற தகுதியை இழந்தார். அதனால் 2016 தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டாலும் மொத்தமாகவே அந்த கூட்டணி ஐந்து சதவிகித வாக்குகளைத்தான் பெற்றது. அதே 2016 தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒரு சதவிகித வாக்கினைப் பெற்றது. அடுத்து நடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் மக்கள் நலக் கூட்டணியின் பிரதான கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்துவிட்டதால் இருபது சதவிகித அதிருப்தி வாக்குகளில் நாம் தமிழருக்கு கணிசமாக ஆறு சதவிகித வாக்குகள் வரை கிடைத்துள்ளதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இந்த வளர்ச்சி என்பது ஒருபோதும் இரண்டு பெரிய கட்சிகளையும் வெல்லும் சாத்தியத்தைக் காட்டும் வளர்ச்சி கிடையாது. அந்தக் கட்சிகள் ஈர்க்கும் வாக்குகளைச் சிறிதளவும் குறைப்பதற்கு நாம் தமிழர் கட்சியால் இயலவில்லை. இனி வரும் காலத்திலும் இயலாது என்பதுதான் உண்மை. ஏனெனில் அதன் அரசியல் தமிழகத்தின் கள யதார்த்தத்துக்குப் பொருத்தமற்ற, உள்ளீடற்ற ஓர் உணர்ச்சி அரசியல் என்பதுதான்.

சீமானின் சாகசவாதம், கற்பனாவாதம், புனைவுரைகள்

ஆரோக்கியமான அரசியல் செயல்பாடு என்பது மக்களைச் சிந்திக்க தூண்டுவது. திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் பகுத்தறிவை முன்வைத்து அரசியல் செய்தன. அவை மக்களாட்சியின் அடிப்படைகள் என்ன, அதன் மூலம் எப்படி சமூக நீதியை நிலைநாட்டுவது, சமத்துவ மனப்போக்கை வளர்ப்பது என்பதையெல்லாம் மிக விரிவாக பிரச்சாரம் செய்தன. வெறும் அடையாளவாதமாகவோ, உணர்ச்சி அரசியலாகவோ அவை இருக்கவில்லை. மொழிப்பற்று, திராவிட இனம் என்றெல்லாம் பேசினாலும் அவற்றின் உள்ளார்ந்த உள்ளடக்கம் சாமானியர்கள் ஆட்சி, சமூக மறுமலர்ச்சி, சாதி இழிவு நீக்கம், முற்போக்கு சிந்தனை என்பதாகவே இருந்தது. இருபதாண்டுகள் நிகழ்ந்த மகத்தான பிரச்சாரத்தினால் பெரும் மக்கள் இயக்கமாக உருப்பெற்றதை உடைத்து தன் கதாநாயக ஆளுமை மூலம் பாதியைப் பிரித்துக் கொண்டார் எம்ஜிஆர். அதிலிருந்து திமுக, அஇஅதிமுக என்ற இருமுனை அரசியல் நிலைபெற்றது.

சீமானின் அரசியல் என்பது ஈழத்தில் விடுதலைப் புலிகள் போரில் அழித்தொழிக்கப்பட்ட தருணத்தில் தொடங்கியது. சீமான் விடுதலைப் புலிகள் போரில் வென்றுவிடுவார்கள் என்று கடைசி வரை உணர்ச்சி பொங்க பேசிக்கொண்டிருந்தார். போர் நிறுத்தம் கோருவது சிங்கள வீரர்களை அழிவிலிருந்து காப்பாற்றத்தான் என்று சூளுரைத்தார். தமிழகத்தில் இலங்கை பிரச்சினை குறித்தும், அங்கு நடந்த உள்நாட்டுப் போர் குறித்தும் உணர்ச்சிவசப்பட்ட அணுகுமுறைதான் எல்லா காலத்திலும் இருந்து வந்திருக்கிறதே தவிர, பகுத்தறிவுடன் கூடிய அணுகுமுறை இருந்தது குறைவு. விடுதலைப் புலிகள் குறித்து உலக அரங்கில் அரசியல் சிந்தனையாளர்கள் என்ன கூறுகிறார்கள், அதன் செயல்பாடுகளை எப்படி மதிப்பிடுகிறார்கள் என்பதையெல்லாம் தமிழில் யாரும் விவாதிப்பதில்லை. சிங்கள அரசு, விடுதலைப் புலிகள் அமைப்பு இரண்டுமே வன்முறையைத் தீர்வாக முன்னெடுத்ததை உலக அளவிலான மனித உரிமை அமைப்புகளும், அரசியல் சிந்தனையாளர்களும் கண்டிக்கிறார்கள். ஆனால், தமிழ் நாட்டில் சிங்கள அரசை மட்டுமே கண்டிக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் எல்லா ராணுவ நடவடிக்கைகளும், அரசியல் படுகொலைகளும் விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. உண்மையில் இலங்கை உள்நாட்டுப் போரின் வரலாறு குறித்த தகவல்களே பலருக்கும் தெரியாது. விடுதலைப் புலிகள் மரணத்துக்கு அஞ்சாமல் போரிட்டார்கள், பிரபாகரன் இறுதிவரை போரிட்டு உயிர் நீத்தார் என்று அவர்கள் வீரம், தியாகம் ஆகியவற்றை போற்றுவதுடன் தமிழ்நாட்டு அரசியல் சிந்தனை நின்றுவிடுகிறது. அந்த வீரம், தியாகத்தால் விளைந்த அரசியல் நன்மை, தீமைகள் என்ன என்பதை குறித்து விவாதிப்பதில்லை. எப்படி சே குவாராவின் சாகச வாதம், கொச்சையான ராணுவ வாதம், வீரமாக, தியாகமாக விமர்சனமின்றி கொண்டாடப்படுகிறதோ அதேபோலத்தான் பிரபாகரன் விஷயத்திலும் நடக்கிறது.

 

இதற்கு மாறாக இந்திய விடுதலைப் போரில் முளைவிட்ட தீவிரவாதப் போக்கை காந்தி தன் மகத்தான அரசியல் தரிசனத்தால் முறியடித்தார். சுபாஷ் சந்திர போஸின் ராணுவ வாதம் அவரை ஹிட்லரின், ஜப்பானின் கூட்டாளியாக மாற்றியது. ஆனால் காந்தியும், காங்கிரஸும் உறுதியாக மக்களாட்சி தத்துவத்தில் நம்பிக்கை வைத்து வெகுஜன அரசியலை முன்னெடுத்ததால் இந்தியாவின் அரசியல் விளைநிலம் பண்பட்டது. காந்தியை, காங்கிரஸை கடுமையாக விமர்சித்தவர்கள் அனைவரும் தொடர்ந்து இந்தியாவில் அரசியலை முன்னெடுக்க முடிந்தது. இன்று வரை அந்த அரசியல் முரண்கள் தேர்தல் களத்தில் மோதிக்கொள்கின்றன. வாக்குச் சீட்டு என்ற ஆயுதத்தின் மூலமே தீர்வுகளைக் காண்கின்றன.

spacer.png

காந்திக்கும், காங்கிரஸுக்கும் இணையாக பெரியாரும், அண்ணாவும் முழுக்க முழுக்க மக்கள் மனமாற்றத்தை நோக்கியே அரசியல் செய்தார்கள். வன்முறையை அறவே தவிர்த்தார்கள். அருவருத்தார்கள். மக்கள் கூட்டம் தன்னெழுச்சியாக வன்முறையில் ஈடுபட நேர்ந்தாலும் அதைக் கண்டித்தார்கள். பாராட்ட மறுத்தார்கள். தாங்கள் அறிவிக்கும் போராட்டங்களால் தொண்டர்கள் அளவுக்குமீறி இன்னல்களை அனுபவித்துவிடக் கூடாது என கவனமாக இருந்தார்கள். மனமாற்றத்துக்காகப் போராடினார்களே தவிர, தாங்கள் நினைத்ததை வன்முறையால் சாதிக்க நினைக்கவில்லை. இந்த மரபில் நின்று ஐம்பதாண்டுக் காலம் மக்களாட்சி விழுமியங்களைக் கட்டி எழுப்பினார் கலைஞர்.

ஆனால், இலங்கையில் தமிழர் உரிமைக்கான அரசியலை முழுக்க, முழுக்க ராணுவமயப்படுத்தினார் பிரபாகரன். இறையாண்மை கொண்ட தமிழ் ஈழத்தாயகம் மட்டுமே ஒரே தீர்வு என்ற அதிகபட்ச தீர்வே முன்னிலைப்படுத்தப்பட்டது. மாற்று தீர்வுகளை முன்வைத்த பலர் துரோகிகளாகக் கருதி கொல்லப்பட்டனர். நீலம் திருச்செல்வன், ரஜினி திரணகம என்று சர்வதேச குடிமைச் சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அரசியல் கொலைகள் பல நிகழ்ந்தன. இவற்றை குறித்தெல்லாம் விமர்சனபூர்வமான சிந்தனை தமிழ் உணர்வாளர்களால் மேற்கொள்ளப் படுவதில்லை.

 

இந்த நிலையில் தனக்கும் பிரபாகரனுக்கும் உள்ள உறவைக் குறித்து பல கற்பனை கதைகளைப் பேசுபவராக சீமான் அறியப்படுகிறார். அதெல்லாம் ஊடகங்களில் நகைச்சுவைக்கான கச்சாப் பொருளாக மாறியுள்ளன. ஆமைக்கறி என்பன போன்றவை கேலிக்கான குழூஉக்குறியாக மாறியுள்ளன. ஆனாலும் இவை சீமானுக்கு விளம்பரமாகவும் மாறிவிடுகின்றன. நாம் தமிழர் கட்சியிலிருந்து கணிசமான பேர் தொடர்ந்து விலகுகிறார்கள். அவர்கள் பொதுக்களத்தில் வைக்கும் குற்றச்சாட்டுகள் பலவும் தொடர்ந்து சமூக ஊடகங்களில் உலா வருகின்றன. சமீபத்தில்கூட சீமான் நட்சத்திர விடுதிகளில் அறை எடுக்கச்சொல்லி வற்புறுத்துவது குறித்து சில குற்றச்சாட்டுகள் வலம் வந்தன. இவையெல்லாம் உண்மையா, இல்லையா என்று யாரும் ஆராய்வதில்லை என்றாலும், குற்றம் சாட்டுபவர்கள் பகிரங்கமாக தங்கள் சொந்தப் பொறுப்பில்தான் கூறுகிறார்கள் என்பதையும் புறக்கணிக்க முடியாது. தனது பொருளாதாரப் பார்வை எனவும், திட்டங்கள் எனவும் மனம்போன போக்கில் சீமான் கூறுபவை அதிர்ச்சியளிக்கின்றன. கொச்சையான தமிழ் அடையாளவாதம், மீட்புவாதம் ஆகியவற்றுடன் இணைந்த நடைமுறைக்கு உதவாத நேட்டிவிசம் என்று சொல்லக்கூடிய கிராமிய வாழ்க்கைக் கற்பனைகளைச் சிறிதும் தயக்கமின்றி நாம் தமிழர் கட்சி வெளிப்படுத்துகிறது.

ஒருபுறம் நகைச்சுவையாகத் தோன்றினாலும், நாம் தமிழர் கட்சியின் மனோநிலை பாசிச கூறுகளைக் கொண்டது. திராவிட அரசியலுக்கு எதிராக இயங்கும் சனாதன சக்திகளின் கைப்பாவையாக மாறும் வாய்ப்புகளைக் கொண்டது. அதனால் அந்தக் கட்சியின் செயல்பாடுகள், அதன் உச்சரிப்புகள் ஆகியவை தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுவது அவசியம்.

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி

 

https://minnambalam.com/politics/2021/06/14/14/Tamil-Nadu-election-2021-and-Seeman

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலுள்ள கட்டுரையில் தடித்த எழுத்துக்களில் உள்ளவை கட்டுரையின் தலைப்பு, உபதலைப்பு, கட்டுரையாளரின் பெயர்கள் மட்டுமே. 

கீழே சில மேற்கோள்கள் கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.

14 minutes ago, கிருபன் said:

சீமானின் கட்சி அவருடைய உணர்ச்சிகரமான பேச்சை மட்டுமே நம்பியிருக்கிறது. ஆவேசமாக, நகைச்சுவையாக, உணர்ச்சி தெறிக்க அவர் ஏற்ற இறக்கங்களுடன் பேசுகிறார். அது கேட்பதற்கு நாடகீயமாக, சுவாரஸ்யமாக இருப்பதால் மக்கள் கூடுகிறார்கள். அதை ஆதாரமாகக் கொண்டு பலர் அந்தக் கட்சியில் உறுப்பினர்களாகி கட்சியை வளர்த்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். சீமானையே ஆதாரமாகக் கொண்டிருப்பதால் கட்சியின் தலமட்ட அமைப்புகள் வலுப்பெறுவதில்லை. அவற்றுக்கென செயல்பாடுகள் என சில காரியங்கள் நடந்தாலும், வெகுஜன அமைப்பாக மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. காரணம், சீமானே கட்சியின் ஆதாரம் என்ற நிலைதான்.

 

15 minutes ago, கிருபன் said:

நாம் தமிழருக்கு கணிசமாக ஆறு சதவிகித வாக்குகள் வரை கிடைத்துள்ளதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இந்த வளர்ச்சி என்பது ஒருபோதும் இரண்டு பெரிய கட்சிகளையும் வெல்லும் சாத்தியத்தைக் காட்டும் வளர்ச்சி கிடையாது. அந்தக் கட்சிகள் ஈர்க்கும் வாக்குகளைச் சிறிதளவும் குறைப்பதற்கு நாம் தமிழர் கட்சியால் இயலவில்லை. இனி வரும் காலத்திலும் இயலாது என்பதுதான் உண்மை. ஏனெனில் அதன் அரசியல் தமிழகத்தின் கள யதார்த்தத்துக்குப் பொருத்தமற்ற, உள்ளீடற்ற ஓர் உணர்ச்சி அரசியல் என்பதுதான்.

 

16 minutes ago, கிருபன் said:

சீமானின் அரசியல் என்பது ஈழத்தில் விடுதலைப் புலிகள் போரில் அழித்தொழிக்கப்பட்ட தருணத்தில் தொடங்கியது. சீமான் விடுதலைப் புலிகள் போரில் வென்றுவிடுவார்கள் என்று கடைசி வரை உணர்ச்சி பொங்க பேசிக்கொண்டிருந்தார். போர் நிறுத்தம் கோருவது சிங்கள வீரர்களை அழிவிலிருந்து காப்பாற்றத்தான் என்று சூளுரைத்தார். தமிழகத்தில் இலங்கை பிரச்சினை குறித்தும், அங்கு நடந்த உள்நாட்டுப் போர் குறித்தும் உணர்ச்சிவசப்பட்ட அணுகுமுறைதான் எல்லா காலத்திலும் இருந்து வந்திருக்கிறதே தவிர, பகுத்தறிவுடன் கூடிய அணுகுமுறை இருந்தது குறைவு.

 

16 minutes ago, கிருபன் said:

ஒருபுறம் நகைச்சுவையாகத் தோன்றினாலும், நாம் தமிழர் கட்சியின் மனோநிலை பாசிச கூறுகளைக் கொண்டது. திராவிட அரசியலுக்கு எதிராக இயங்கும் சனாதன சக்திகளின் கைப்பாவையாக மாறும் வாய்ப்புகளைக் கொண்டது. அதனால் அந்தக் கட்சியின் செயல்பாடுகள், அதன் உச்சரிப்புகள் ஆகியவை தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுவது அவசியம்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
    • தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.