நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
எமக்கு எதிரான தாக்குதல்களுக்கு பழி: ஈஸ்டர் சூத்திரதாரி சக்ரான்
-
- 7 replies
- 587 views
-
-
பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. தாமதமாக வந்த பருவமழையாலும் தொடர்ந்து ஏற்படும் காலநிலை மாறுபாடுகளாலும் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 12 மாதங்களில் அரிசியின் சந்தை விலை 11.5% அதிகரித்துள்ளதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் அரிசியின் விலை 3% அதிகரித்திருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. அல்லாடும் அமெரிக்கா முன்பு கம்யூனிஸ்ட்டுகளை கிண்டல் செய்ய ஒரு வாசகம் சொல்வார்கள், ‘மாஸ்கோவில் மழை பெய்தால், மதுரையில் அவர்கள் குடைபிடிப்பார்கள்,’ என்று. உலகமயமாக்கலுக்கு பின்பு இதுவே நிதர்சனம் ஆகிவிட்டது. உலகமயமாக்கல் புத…
-
- 3 replies
- 375 views
-
-
சீனாவின் தரமற்ற இயற்கை உர ஏற்றுமதி ஏற்படுத்தியுள்ள தாக்கம் இலங்கைக்கு தரமற்ற மற்றும் அசுத்தமான இயற்கை உரத்தை ஏற்றுமதி செய்வதற்கு முற்பட்டதன்; மூலம் பெறப்பட்ட 6.3 மில்லியன் டொலர்களை திருப்பிக் கொடுப்பதில் சீனா தயக்கம் காட்டி வருகிறது. அண்மையில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் சீனாவின் சர்வதேச வர்த்தக நெறிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் தரநிலைகள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது. அதுமட்டுமன்றி இலங்கை அரசாங்கம் சீனாவிடமிருந்து நிதியை மீட்பதற்கு முயற்சிக்கையில், உலகளாவிய வர்த்தகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அவசியத்தை நிலைமை எடுத்துக்காட்டுகிறது. இலங்கையானது தனது விவசாயத்துறைக்கு கரிம உரங்கள் மிகவும் அவசியமா…
-
- 0 replies
- 312 views
-
-
–பிறிக்ஸ் மாநாடும் அது தொடர்பான போட்டிகளும் இலங்கை போன்ற மிகச் சிறிய நாடுகளுக்கு அதாவது சீனாவும் இந்தியாவும் ஏட்டிக்குப் போட்டியாகக் கையாள விரும்பும் தெற்காசியாவின் சிறிய நாடுகளுக்குப் பல வழிகளிலும் சாதகமாகவே அமையும் என்பது வெளிப்படை. குறிப்பாக சீன – இந்திய அரசுகளின் நிழல்களில் இலங்கை முழுமையாகக் குளிர்காயும் என்பது பகிரங்கம்– அ.நிக்ஸன்- அமெரிக்க – சீனா, அமெரிக்க – ரசிய உறவுகள் இந்திய – சீனா உறவுகளுக்கான சூழலை மாற்றியுள்ளதாக புதுடில்லியைத் தளமாகக் கொண்ட மூலோபாய விவகார நிபுணரான ஜோராவர் தௌலெட் சிங் (Zorawar Daulet Singh) வலியுறுத்துகிறார். மேற்குலகின் கூட்டு மற்றும் மேற்கின் மதிப்பிழந்த நவதாராளவாத பூகோளவாத சித்தாந்தத்தில் தொகுக்கப்படாத பல்முனை, பல நாகரீக உல…
-
- 0 replies
- 201 views
-
-
பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, தமிழர்கள் வாழும் பகுதியில் தாெடர்ந்து மூடப்பட்டு வரும் பாடசாலைகள் கட்டுரை தகவல் எழுதியவர், யூ.எல். மப்றூக் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணத்தில் சுமார் 200 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். கல்விக்கு வழங்கும் நிதியைக் குறைக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அதனாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், வடக்கு மாகாணத…
-
- 1 reply
- 339 views
- 1 follower
-
-
பாதுகாப்பாக புலம் பெயர்வோம். புலம்பெயர்ந்து செல்வதென்பது பொதுவாகத் தனிமனிதனுக்கும் , சமூகங்களுக்கும் , நாடுகளுக்கும்கூட நன்மைபயக்கக்கூடியதொன்றேயாகும். தனது உணவை வேட்டையாடி உண்ட ஆதிமனிதன் முதல் நவயுக மனிதர்கள்வரை அனைவரும் ஏதாவதொரு காரணத்துக்காகப் புலம்பெயர்ந்து வந்துள்ளனர். போர்க்காலச்சூழல் , இயற்கை அனர்த்தங்கள் , அரசியல் ஸ்திரமற்ற தன்மை போன்றவை பொதுவாக மனிதர்கள் புலம்பெயர்வதை ஊக்குவித்து வரும்நிலையில் வறுமை , பிணி , பஞ்சம் போன்றவை மற்றொரு வகையில் மனிதர்களைப் புலம்பெயரச் செய்து வருகின்றன. மனிதர்கள் அனைவரும் வளமாக வாழ விரும்புவது இயற்கை. இவ்வாறு வளமான வாழ்வைத்தேடி ஓடும் மனிதர்கள் புலம்பெயர்தலை விரும்பி ஏற்றுக்கொள்கின்றனர்.முறையான , பாதுகாப்பான புலம் பெயர்வால் சமூகத்…
-
- 0 replies
- 296 views
-
-
தயாமோகனின் பதவி பறிப்பின் பின்னணி என்ன? July 24, 2023 — அழகு குணசீலன் — தயாமோகன் ! தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர். நந்திக்கடல் இறுதியுத்தத்தின் போது மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர். இருந்தவர் என்பதைவிடவும், கிழக்கு மாகாண முன்னாள் புலிகளின் கருத்தில் ”தலைவரால்/ அண்ணேயால் நியமிக்கப்பட்ட அரசியல் துறை உயர் நியமனம் இது. இது விடுதலைப்புலிகளின் தலைமையின் ஏக அதிகாரத்திற்கு உட்பட்டது. இறுதியுத்தத்தின் போது உயிர் தப்பி , புலம்பெயர்ந்து வாழும் விரல்விட்டு எண்ணக்கூடிய முக்கிய பதவிகளில் இருந்தவர்களுள் தயாமோகன் முக்கியமானவர். குறிப்பாக புலிகளின் பிளவுக்குப்பின்னர் கிழக்கில் மட்டக்களப்பு- அம்பாறையில் தயாம…
-
- 14 replies
- 1.8k views
-
-
2 மணி நேரங்களுக்கு முன்னர் ''40 வருடங்களுக்கு முன்னர் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரத்திலிருந்து இன்றும் மீண்டெழ முடியாதுள்ளது" என்கின்றார் அருட்தந்தை எம்.சக்திவேல். ''எங்களை பொருத்தவரை 83 மாத்திரம் அல்ல கருப்பு ஜுலை என்பது. இந்த நாட்டின் சுதந்திரம் கருப்பு. இந்த நாட்டின் யாப்பு கருப்பு, இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் கருப்பாக இருக்கின்றார்கள். அனைத்தும் கருப்பாக இருக்கின்றமையினால் தான் நாங்கள் இந்தளவு பாதிப்புகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம்" எனவும் அவர் குறிப்பிட்டார். ஜுலை மாதம் 23ம் தேதி இதேபோன்றதொரு நாளில், 40 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் ஜுலை கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் நேர…
-
- 0 replies
- 290 views
- 1 follower
-
-
‘வாராது வந்துற்ற மாமணிகளை தோற்றோம்’ July 20, 2023 (சுகு ஸ்ரீதரன் நேர்காணல்) —- கருணாகரன் —- தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் சுகு ஸ்ரீதரன், ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலப் போராளிகளில் ஒருவர். ஏறக்குறைய 45 ஆண்டு கால அரசியல் போராட்ட வரலாற்றைக் கொண்டவர். ஆயுதப் போராட்ட அரசியல், ஜனநாயக நீரோட்ட அரசியல் என இரண்டிலும் செழிப்பான அனுபவங்களைக் கொண்ட சுகு, பல தரப்பினருடைய மதிப்பையும் தன்னுடைய நற்குணத்தினாலும் சிந்தனைத் திறத்தினாலும் பெற்றவர். புதுடில்லி, தமிழ்நாடு, தென்னிலங்கை, மலையகம் என விரிந்த பரப்பில் அரசியல் உறவுகளைக் கொண்டிருக்கும் சுகுவுக்கு, தமிழ், முஸ்லிம், மலையக மக்களிடத்திலும் அந்தந்தச் சமூகத் …
-
- 1 reply
- 373 views
-
-
பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு, இந்திய பிரதமர் மோதியுடன் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 21 ஜூலை 2023, 11:22 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. புதுடெல்லியிலுள்ள பிரதமரின் அதிகாரபூர்வ வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது. ரணில் விக…
-
-
- 14 replies
- 1.6k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,KOGULAN படக்குறிப்பு, சமோதி போதனா மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி அனுமதிக்கப்பட்டார் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையிலுள்ள மருத்துவமனைகள் சிலவற்றில் அனுமதிக்கப்பட்ட சிலர், உயிரிழந்த சம்பவம் பேசுப்பொருளாக மாறியுள்ளது. தரமற்ற மருந்து வகைகள் வழங்கப்பட்டமையே, இவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் என பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர். இந்த நிலையில், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டு வரவுள்ளதாக எதிக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார். மருத்துவமனைகளில் பதிவாகிய திடீர் மரணங்கள் …
-
- 3 replies
- 294 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, இலங்கை ஆதிகுடிகளாக வேடுவர் தேன் எடுக்கிறார் கட்டுரை தகவல் எழுதியவர், யூ.எல். மப்றூக் பதவி, பிபிசி தமிழுக்காக 18 ஜூலை 2023, 07:42 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையின் ஆதிகுடிகளாக வேடுவர்கள் (வேடர்கள்) அறியப்படுகின்றனர். வேடுவ மொழியினையும் சிங்கள மொழியினையும் பேசுகின்றவர்களாகவே வேடுவர்களை பெரும்பாலானோர் தெரிந்து வைத்துள்ளனர். ஆனால், இலங்கையின் கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் பேசும் வேடுவர்களும் வாழ்க்கின்றமை அதிகமானோருக்குத் தெரியாது. தமது மூதாதையர்களின் வாழ்க்கை முறைமை, பண்பாடு, வழிபாடுகள் போன்றவற்றினை பெரும்பாலும் இழந்து வா…
-
- 10 replies
- 1.4k views
- 1 follower
-
-
Published By: VISHNU 13 JUL, 2023 | 11:11 AM குமார் சுகுணா நாம் நமது கவன குறைவினால் செய்யும் சிறிய விடயங்கள் கூட மிக பெரிய இழப்புகளை நமக்கு ஏற்படுத்தி விடுகின்றது. குறிப்பாக நாம் அறியாமலே செய்யும் சில விடயஙகள் பெரும் விபத்துகளை உருவாக்கி விடுகின்றன. விபத்து என்பது திட்டமிடாத எதிர்பார்க்கப்படாத ஒரு நிகழ்ச்சி. அவ்விபத்தின் விளைவால் காயம் ஏற்படலாம், அல்லது ஏற்படாமலும் போகலாம். ஆனால் சில நேரங்களில் எமது விலைமதிக்க முடியாத உயிரை கூட நாம் இழந்து விடுகின்றோம். இந்த விபத்துகள் எந்த வகையிலும் உருவாகலாம். இவற்றில் முக்கியமானதும் வருடா வருடம் உலகளவில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுகொள்வதற்கும் காரணமாக அமைவது வாகன விபத்துக…
-
- 0 replies
- 252 views
- 1 follower
-
-
சிங்களத்தின் எதிர்காலத் தலைமைக்கு சிங்க(ள)க் குட்டிகள் இரண்டு களத்தில்! Posted on July 10, 2023 by தென்னவள் 16 0 மகிந்த தரப்பிலிருந்து அவரது மகன் நாமலும், ரணில் தரப்பிலிருந்து அவரது மைத்துனர் றூவன் விஜேவர்த்தனவும் சிங்களத் தேசத்தின் எதிர்கால தலைமைக்கு மறைமுகமாகவும், பகிரங்கமாகவும் வளர்க்கப்பட்டு வருகின்றனர். இவர்களால் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியுமென்ற நம்பிக்கையில்லை. இவர்களுக்கு நிகராக தமிழர் உரிமைகளுக்கு நீதி கேட்டுப் போராடக்கூடிய ஓர் இளந்தலைவர் எப்போது வரப்போகிறார்? இலங்கை அரசியல் என்பது தீர்க்கமான எந்த முடிவையும் எட்டாது, அல்லது எட்ட விடாது பிரச்சனைகளை நகர்த்திச் செல்லும் பாணியையே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. சிங்கள…
-
- 8 replies
- 789 views
-
-
பலியாடுகள் ஆகும் மக்கள் Published By: VISHNU 02 JUL, 2023 | 06:32 PM (கார்வண்ணன்) பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அரசாங்கம், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் செலுத்துகின்ற கவனத்தில் ஒரு சிறு பகுதியைக் கூட, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் செலுத்தவில்லை. கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், பசுமை காடுகள் பாதுகாப்புக்கும், இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என்று, பாரிஸில் நடந்த காலநிலை மாநாட்டில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உறுதியளித்திருந்தார். ஆனால், அவரது அரசாங்கம் வடக்கு, கிழக்கின் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் ஆபத்து குறித்து கவனத்தில் கொள்ளவேயில்லை. வவுனியா மாவ…
-
- 0 replies
- 497 views
-
-
கோட்டாவைத் துரத்தும் பழைய கணக்கு Published By: VISHNU 02 JUL, 2023 | 06:01 PM (சுபத்ரா) கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இப்போது புதிதாக ஒரு சிக்கல் உருவாகியிருக்கிறது. இது பழைய கணக்குத் தான், என்றாலும், புதிதாக திறக்கப்பட்டு, அவருக்கு எதிராக திரும்புகின்ற நிலை உருவாகியிருக்கிறது. ஜே.வி.பி. கிளர்ச்சியை ஒடுக்கும் நடவடிக்கையின் போது, மாத்தளை மாவட்டத்தில் இராணுவக் கட்டளை அதிகாரியாகவும் இராணுவ இணைப்பதிகாரியாகவும் இருந்தவர் லெப்.கேணல் கோட்டாபய ராஜபக்ஷ. கஜபா ரெஜிமென்ட்டின் முதலாவது பற்றாலியனின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட அவர், மாத்தளை மாவட்ட இராணுவ இணைப்பதிகாரியாகவும் நியமிக்கப்பட்டிர…
-
- 0 replies
- 396 views
-
-
சீனா ஏன் ஆர்வமாக இல்லை பாரிஸ் கிளப் ஜப்பான் மற்றும் இந்தியா காட்டிய கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் சீனா ஏன் ஆர்வமாக இல்லை. சீனாவின் திட்டங்கள் வெள்ளை யானை மற்றும் இலங்கைப் பொருளாதாரத்தில் சுமையாக இருப்பது அம்பலமாகிவிட்டதால், அதன் விளைவுகளில் சீனா உறுதியாக உள்ளது. பல உயர் மட்ட குழுக்கள் வந்தாலும்சீனாவிடம் இருந்து எந்த அர்ப்பணிப்பும் இல்லை. கடன் மறுசீரமைப்பு அல்லது சாத்தியமான வருமானம் ஈட்டும் முதலீடுகள் தொடர்பிலும் ஆக்கப்பூர்வமான முடிவுகள் இன்னும் எட்டப்படவில்லை. இலங்கை மற்றும் முக்கிய கடன் வழங்குநர்கள் சீனா இல்லாமல் நாட்டின் கடனை மறுசீரமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை முறையாகத் தொடங்கினர் - அதன் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குபவர் - வளரும் நாடுகளில் கடன…
-
- 0 replies
- 249 views
-
-
வறுமையில் பெருந்தோட்ட மக்களே அதிகளவில் பாதிப்பு Posted on June 20, 2023 by தென்னவள் 17 0 இலங்கையில் 7 மில்லியன் மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக லேர்ன் ஏசியா என்ற அமைப்பு முன்னெடுத்த ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கின்றது. அதாவது 2019 ஆம் ஆண்டு வரையில் மூன்று மில்லியன் மக்களே வறுமையின் கீழ் இருந்ததாகவும் எனினும் கடந்த பொருளாதார நெருக்கடிகள் காரணமாக வறுமையின் கீழ் தள்ளப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 7 மில்லியன்களாக உயர்வடைந்திருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு 14 சதவீதமாக இருந்த இலங்கையின் வறுமை நிலை 2023 ஆம் ஆண்டாகும் போது 31 சதவீதமாக அதிகரித்த…
-
- 0 replies
- 178 views
-
-
ஆனந்தசங்கரியின் தீர்க்க தரிசனம் June 23, 2023 – கருணாகரன் – கிளிநொச்சியைத் தனி மாவட்டமாக்கியவர் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுலைக் கூட்டணியின் தலைவருமான திரு. வீ. ஆனந்தசங்கரி. இது நடந்தது 1984 இல். அதற்கு முன்பு யாழ்ப்பாணத்துடனேயே கிளிநொச்சி இணைந்திருந்தது. 1977 ஆம் ஆண்டுத் தேர்தலின்போதே கிளிநொச்சியைத் தனி மாவட்டமாக்குவேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார் ஆனந்தசங்கரி. அதன்படி தனிமாவட்டமாக்கினார் ஆனந்தசங்கரி. இதற்காக அவர் பெரிய சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அதுவும் அவர் அங்கத்துவம் வகித்த அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியுடனேயே போராட வேண்டியிருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சியைப் பிரித்தெடுப்பதற்குக் கூட்டணியிலிருந்த …
-
- 0 replies
- 626 views
-
-
-
அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் செனட்டரும், வடக்குக் கரொலினாவின் 13 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்தவருமான வைலி நிக்கெல் முள்ளிவாய்க்கால் நினைவுநாளன்று தமிழினக் கொலையினை ஏற்றுக்கொண்டு தீர்மானம் ஒன்றினை இன்னும் சில செனட்டர்களுடன் இணைந்து நிறைவேற்றியிருக்கிறார். அமெரிக்காவில் வாழும் தமிழ்த் தேசியவாதிகள் சிலருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கும் வைலி நிக்கெல், தனது சகாக்களுடன் இணைந்து தமிழினக் கொலைபற்றிய விளிப்புணர்வை அமெரிக்காவில் ஏற்படுத்தவும், போர்க்குற்ற விசாரணைகள் குறித்த முயற்சிகளை முன்னோக்கித் தள்ளுவதற்குத் தேவையான நடவடிக்கைகளுக்கு தான் உதவ விரும்புவதாகவும் கூறியிருப்பதாக தெரியவருகிறது. முள்ளிவாய்க்கால் நினைவுநாளன்று அவர் ஆற்றிய உரையினையும் அதன் தமிழாக்கத்தினை…
-
- 24 replies
- 1.4k views
-
-
தூத்துக்குடியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜோசப் ராஜன் அவர்களின் பதிவு.. எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து அரசியல் கட்சி ஆதரவாளனாக, அதன்பின் ஒரு பத்திரிக்கையாளனாக நூற்றுக்கணக்கான அரசியல் கூட்டங்களிலும், மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் செய்தி சேகரிக்க அல்லது ஆதரவாளனாக கலந்து கொண்டிருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற நாம் தமிழரின் இன எழுச்சி மாறாட்டில் கலந்து கொண்டேன். மற்ற எந்த கட்சிகளையும் விட முற்றிலும் மாறுபட்ட ஒரு அரசியல் அமைப்பாகவே இக்கூட்டத்தை காண முடிந்தது. விசில் அடித்து ஆட்டம் போட்டுக்கொண்டு ஆரவாரம் இல்லை.... ஒரு சொட்டு மது இல்லை.... எவரும் குடித்து விட்டு வரவில்லை.... அதனால் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையில் ஒரு குவ…
-
- 3 replies
- 345 views
-
-
சென்னையில், அல்லிராஜா சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனத்தில் அமுலாக்கத்துறை இன்று காலை முதல் சோதனை. பாமக கட்சி எம்எல்ஏ ஜிகே மணியின் மகன் தமிழரசன் தலைமை செயல் அதிகாரியாக செயல்படுகிறார். சமீப காலமாக பெரு வியாபார ஈழத்தமிழர்கள் பலரது பெயர்கள், தமிழக அரசியல் வாதிகளுடன் சேர்த்து பேசப்படுவது கவனிக்கத்தக்கது.
-
- 16 replies
- 1.5k views
- 1 follower
-
-
கடலோர மீன்பிடிக்கு மரணம்: இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இலங்கையின் வடகடலில் கடல் வெள்ளரி விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே வருகின்றன. யுத்தத்துக்குப் பின்னர் வடக்கு மீனவர்கள் பல்வேறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். பலமுறை எடுத்துகூறியும் ஆக்கப்பூர்வமான எந்தவிதமான நடவடிக்கைகளையும் இதுவரையிலும் எட்டப்படவில்லை என்று மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்பு, வடகடலில் மீன்வளத்தை முழுமையாக சுரண்டும் செயற்பாடுகள், வடக்கு மீனவர்களின் மீன்பிடி வள்ளங்கள் அழிப்பு, மீன்வலைகளை அறுத்தெறிந்து அட்டகாசம் செய்தல், இந்திய மீனவர்களின் அத்துமீறல், இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றினால், தங்கள…
-
- 10 replies
- 741 views
- 1 follower
-
-
சட்டமறுப்புப் போராட்டத்துக்கு தமிழ்க் கட்சிகள் தயாராகுமா?-அரசியல் ஆய்வாளா் யதீந்திரா செவ்வி May 1, 2023 தமிழா் தாயகப் பகுதிகளில் பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றிருக்கின்றது. புதிதாக அறிமுகப்படுத்தபடவிருக்கும் பயங்கரவாத எதிா்ப்புச் சட்டம் மற்றும் தமிழா் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்கு எதிராகவே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. சட்டமறுப்புப் போராட்டம் ஒன்றுக்கும் தாம் தயாராக இருப்பதாக அன்றைய தினம் சுமந்திரன் நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கின்றாா். இவை குறித்து உயிரோடைத் தமிழ் தாயக களம் நிகழ்வில் இந்த வாரம் தமது கருத்துக்களைப் பகிா்ந்துகொண்டிருந்தாா் அரசியல் ஆய்வாளா் யதீந்திரா. அவரது செவ்வியின் முக்கிய…
-
- 0 replies
- 190 views
-