Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பறவையே, இது கேள்;

Featured Replies

rabindranath-tagore.jpg

கவியரசர் இரவீந்திரநாத தாகுரின் 150 ஆண்டுநிறைவு மே 7 ந்திகதி கொண்டாடப்பட்டது. இவருடைய

பாடலே இந்தியாவின் தேசியகீதமாக இடம்பெற்றுள்ளது. 1913 இல் இவருடைய "கீதாஞ்சலி" என்ற நூலுக்கு

நோபல் பரிசு வழங்கப்பட்டது. தாகுர் ஒரு மகரிஷியைப் போல் வாழ்ந்தார்; பேசினார். பாரதநாட்டின் தத்துவஒளி

அவர் கவிதையில் எங்கும் படிந்துள்ளது. எனினும் அவர் துறவறவாழ்க்கைமுறையை ஆதரிக்கவில்லை. "உலைவில்லாத

ஒரு பொருளோடு ஒன்றி, தனி உயிராகத் தத்தளிக்கும் என்னை உலைத்துவிடவே துடிக்கிறேன் " என்கிறார் தாகுர்.

மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் பின்னடைவை நினைவுகூரும் நமக்கு, மே மாதத்தில் பிறந்த இவரின் கீழ்வரும் பாடல்

மிகப் பொருத்தமானது.உயிர்த்தியாகம் செய்த எமது மாவீரர்கள், பொதுமக்கள், எஞ்சியுள்ள நம்மிடம் ஒரு பொறுப்பை விட்டுச்

சென்றுள்ளனர். ஓர்மத்துடன், நெஞ்சில் உறுதியும் உரமும் கொண்டவர்களாக நாம் தொடர்ந்து செயற்பட்டு ஈழவிடுதலையை

வென்றாகவேண்டும். அதற்குத் தேவையான மனப்பாங்குகளை தாகுரின் கவிதை சுட்டிக்காட்டுகிறது. அவர் குறிப்பிடும்

"பறவை" நிலையில் உள்ளவர்கள்தான் தமிழர்கள். பறவையே உனது பாதையில் அந்தி,தனிமை வந்தால் என்ன? கூடு இல்லாத

சூனியவெளியே உன்னைச் சூழ்ந்தால் என்ன? பதறாதே, சிறகை ஒடுக்கிச் சிதைந்து விழாதே. நம்பிக்கையுடன் தொடர்ந்து பற

என்கிறார். இறைநம்பிக்கை இழையோடும் வரிகள் அவை. நமக்குப் புத்துணர்ச்சியும் புதுநம்பிக்கையும் தரவல்லவை அவை.

அந்தி வந்தது ஆடி அசைந்து;

வந்ததும் பாடல் அனைத்தும் ஓய்ந்திடக்

காட்டியது சைகை, கானம் அவிந்தது,

பாட்டையில் நாளெலாம் உன்னுடன் பறந்து

கூடவே வந்த குருகினம் சோர்ந்தன;

தேடி ஓய்வைச் சென்றன எங்கோ;

களைத்தனை நீயும்; ககனம் இருண்டது;

உளையும் அச்சம் உறைந்தது இருளில்.

பறவையே, இது கேள்; உளம் பதறாதே.

சிறைகை மடக்கிச் சிதறி விழாதே.

என்ன அது? உன் காட்டுப் பசுந்தழை,

பின்னிய நிழலா? இல்லை; நீண்டு

கரும் பாம்பு என்ன விம்மும் கனைகடல்.

அரும்பு மல்லிகை ஆடலா அங்கே?

இல்லை; சுழன்று பளிச்சிடும் வெண் நுரை;

எல்லை இல்லாமல் விரியும் எறிகடல்,

வெயில் ஒளி மின்னும் காட்டு வெளியும்,

துயிலுக்கு உகந்த உன் கூடும், எங்கேயோ?

பறவையே, இது கேள்; உளம் பதறாதே.

சிறகை ஒடுக்கிச் சிதறி விழாதே.

வழியெலாம் உனக்குத் தனிமையும் இரவுமே,

நிழலெனத் தொலைவில் நிமிர் மலைக் கப்பால்,

வைகைறை உறங்கும். மூச்சுத் திணறவே,

நகராதிருந்து, நகரும் பொழுதைத்

தாரகை கணக்கிடும். ஆழ்ந்த இருளாம்

வாரியில் நீந்திடும் வற்றிய நிலவு.

பறவையே, இதுகேள்; உளம் பதறாதே,

சிறகை ஒடுக்கிச் சிதைந்து அழியாதே.

நன்மை வருமா? நம்பிக்கை இல்லை.

துன்பம் வருமோ? துணுக்குறல் இல்லை.

பாதையில், துணையோ, பேச்சோ, குரலோ,

காதொடு காதாய்க் குலவவோ இல்லை.

வீடில்லை. ஓய்ந்த தலையைச் சாய்க்கக்

கூடில்லை. என்றால், என்னதான் உண்டோ?

எதுவும் இல்லை. எல்லையில் வானமும்

பதைக்கும் உன் சிறை இரண்டுமே உண்டு.

பறவையே, இதுகேள்; பதறி விழாதே,

சிறகைச் சுருக்கிச் சிதைந்து அழியாதே.

{ கவிதைத் தமிழ் வடிவம்: பேராசிரியர் அ. சீநிவாசராகவன் = [கவியரசர் கண்ட கவிதை - 1963 ]}

நீதிநியாயத்திற்கான போராட்டம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=99250&hl=&fromsearch=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.