Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிறிஸ்மஸ்தீவில் தனிமைப்படுத்தப்படும் தமிழ் அகதிகள் – செய்திகளும் படங்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SL-boat-people.jpg

[size=4]சிறிலங்காவில் இருந்து வந்ததாக நம்பப்படும் மற்றொரு அகதிகள் படகு நேற்றிரவு கிறிஸ்மஸ்தீவுக்கு அருகே இடைமறிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய உள்துறை அமைச்சர் ஜாசென் கிளெர் தெரிவித்துள்ளார்.

இந்தப் படகில் 39 அகதிகள் இருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் பாதுகாப்புச் சோதனைகளுக்குப் பின்னர், கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இந்த அகதிகள் படகு அவுஸ்ரேலிய கடற்படையினரால் கிறிஸ்மஸ்தீவு நோக்கி கொண்டு செல்லப்படுகிறது.

ஆபத்தான பயணம்

சிறிலங்காவில் இருந்து அகதிகளை ஏற்றிவரும் படகுகள் ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொள்வதாக அவுஸ்ரேலிய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சிறிய மீன்பிடிப் படகுகளிலேயே சிறிலங்கா தமிழ் அகதிகள் ஆயிரம் கி.மீ இற்கும் அதிகமான தூரத்தைக் கொண்ட கடற்பயணத்தை மேற்கொள்கின்றனர்.

இவர்கள் பயணம் செய்யும் மீன்பிடிப் படகுகள் சிறியதாக இருப்பதாகவும், ஆழ்கடல் பயணத்துக்கு ஏற்றவாறு தரமானதாக இல்லை என்றும் அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.[/size]

[size=4]

SL-asylum-seekers-boat.jpg[/size]

[size=4]தமிழ் அகதிகளுக்காக காத்திருக்கும் கொகோஸ் தீவு

அவுஸ்ரேலியாவின் கொக்கோஸ்தீவுக்கு சிறிலங்காவில் இரந்து மேலும் பல அகதிகள் படகுகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், அங்கு அவசரமாக விமான மூலம் உதவிப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா மற்றும் தென்னிந்தியாவில் இருந்து தமிழ் அகதிகள் மேலும் வரலாம் என்று நம்பப்படும் நிலையிலேயே, அவுஸ்ரேலியா அதிகாரிகள் கொகோஸ் தீவுக்கு அகதிகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பொருட்களை நேற்று அனுப்பி வைத்துள்ளனர்.

நோயாளர் காவு கட்டில்கள், சலகை இயந்திரங்கள், உலர்த்திகள், கிருமிகொல்லி மருந்துகள், மற்ம் ஏனைய பொருட்களை ஏற்றிய விமானம் நேற்று கிறிஸ்மஸ் தீவில் இருந்து கொகோஸ் தீவுக்குச் சென்றது.

சிறிலங்கா மற்றும் தென்னிந்தியாவுக்கு நெருக்கமாக கொகோஸ் தீவு இருப்பதால், இங்கு மேலும் அகதிகள் படகுகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

67 தமிழ் அகதிகள் கொகோஸ் தீவில்

சிறிலங்காவில் இருந்து புறப்பட்ட 67 தமிழ் அகதிகளுடன் புறப்பட்ட படகு ஒன்று நேற்று முன்தினம் கொகோஸ் தீவை சென்றடைந்தது.

கடந்த ஒரு மாதத்தில் சிறிலங்காவில் இருந்து கொகோஸ் தீவை வந்தடைந்த நான்காவது அகதிகள் படகு இதுவாகும்.

இந்தப் படகில் வந்த 67 தமிழ் அகதிகளுமே ஆண்களாவர். இவர்களில் இருவர் பதின்ம வயதினர்.

இவர்கள் கொகோஸ் மற்றும் கீலிங் சமூக மன்றத்தில் ஒரு நாள் இரவு மட்டும் தங்கவைக்கபட்டனர். [/size]

[size=4]

cocos-islands-tamils.jpg[/size]

[size=4]சிறிலங்கா அகதிகளை வெறுக்கும் கொகோஸ் வாசிகள்

கொகோஸ் தீவுக்கு அடுத்தடுத்து வரும் சிறிலங்கா அகதிகள் படகுகளை அங்குள்ள மக்கள் வெறுப்புடன் பார்க்கின்றனர்.

இந்தத் தீவில் கொகோசியன் இனமக்களும், மலாய் இனத்தவருமாக மொத்தம் 600 பேர் வாழ்கின்றனர்.

கொகோஸ் மற்றும் கிலிங் சமூக மன்றத்தில் அகதிகள் தங்க வைக்கப்படுவது உள்ளூர் வாசிகளை வெறுப்பேற்றுகிறது.

இங்கு அகதிகள் தங்க வைக்கப்படுவதால், தாம் கொகோஸ் மற்றும் கிலிங் சமூக மன்றத்தைப் பயன்படுத்தும் உரிமையை இழந்து வருவதாக இவர்கள் விசனடைந்துள்ளனர்.

இதனால் ஒவ்வொரு படகு வரும் போதும் அவர்கள் கோபத்துடன் பார்க்கின்றனர்.

வாடகை விமானத்தில் கிறிஸ்மஸ் தீவு பயணம்

கொகோஸ் தீவை கடந்த சனிக்கிழமை சென்றடைந்த தமிழ் அகதிகள் 67 பேரும் நேற்றுக்காலை வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானம் ஒன்றின் மூலம் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

கிறிஸ்மஸ் தீவு விமான நிலையத்தில் வந்திறங்கிய தமிழ் அகதிகள் புன்முறுவலுடன் காணப்பட்டனர்.

இவர்களுடன் சிறிலங்காவில் இருந்து 53 அகதிகளுடன் புறப்பட்ட மற்றொரு படகு கிறிஸ்மஸ் தீவை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது. [/size]

[size=4]

christmas-island-airport.jpg[/size]

[size=4]அம்மை நோயுடன் வந்த தமிழ் அகதி

சிறிலங்காவில் இருந்து கடைசியாக வந்தடைந்த இரண்டு படகுகளில் ஒன்றில் வந்த தமிழ் அகதி ஒருவர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து சிறிலங்கா அகதிகளை கையாளும் அதிகாரிகள் கவனமாக இருக்கும்படி சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெருமளவு முகவரமைப்புகளும், அதிகாரிகளும் சிறிலங்கா அகதிகளை கையாளும் பணியில் ஈடுபட்டுள்ளதால், மருத்துவமனையில் குறித்த நோயாளிக்கு தனியாக சிகிச்சை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை அங்குள்ள நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படுவதாகவும், தேவைப்பட்டால், சிறிலங்காவில் இருந்து வந்த அகதிகள் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் அவுஸ்ரேலிய குடிவரவு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.[/size]

[size=4]

tamil-asylum-seekers-.jpg[/size]

[size=4]http://www.puthinapp...?20120702106511[/size]

செய்தியின் தலைப்பில் சொல்லப்படும் விடயம் எதை சுட்டிக் காட்டுகின்றது?

தம் உயிரைக்காக்க எப்படியான ஆபத்தான வழிகளை தேடுகிறார்கள் என்று நினைக்கும் போது மிகுந்த கவலை ஏற்படுகிறது. அவுஸ்திரேலிய அரசும் பொல்லாதது. இவர்கள் அகதி கோரிக்கையை ஏற்பதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.