Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா படைத்தரப்பின் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் கப்டன் தர அதிகாரி வாக்குமூலம்! - கனேடிய ஊடகம் தகவல்!!

Featured Replies

இலங்கையில் சிறிலங்கா படைத்தரப்பினரால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா படைத்துறையில் இருந்து தப்பிச்சென்ற கப்டன் தர நிலையிருந்த அதிகாரி ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக கனேடிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

watudura.jpg

2009ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சிறிலங்கா படைத்துறையில் இருந்து தப்பிச் சென்ற 38 வயதான கப்டன் ரவீந்திர வடுதுர பண்டாரகே என்பவரே இவ்வாறு வாக்மூலம் வழங்கியுள்ளார். இவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாவது:

'இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட மனிதவுரிமை மீறல்கள் குறித்து எனக்குத் தெரியும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வீட்டில் குண்டொன்றை வைக்குமாறு தனக்கு சிறிலங்கா படைத்தரப்பின் கேணல் தர நிலையிலிருந்த அதிகாரி ஒருவர் பணித்தார்.

நான் அதற்கு மறுப்புத் தெரிவித்ததால், கொழும்புக்கு இடமாற்றப்பட்டு தமிழர்களைச் சுற்றிவளைத்து கைது செய்யும் தேடுதல் நடவடிக்கைகளுக்கு உதவினேன் ' என கப்டன் ரவீந்திர வடுதுர பண்டாரகே தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறிலங்கா படைத்தரப்பினரால் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவைதைகள், தாக்குதல் மற்றும் பாலியல் வல்லுறவு போன்ற விடயங்கள் குறித்து தனக்குத் தெரியும் எனவும் வாக்குமூலம் வழங்கிய அவர், இது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை என்பதையும் ஒத்துக் கொண்டுள்ளார்.

1993ஆம் ஆண்டில் சிறிலங்கா படைத்தரப்பில் இணைந்து கிளர்ச்சி முறியடிப்பு பயிற்சிகளைப் பெற்றதாகக் குறிப்பிட்ட கப்டன் ரவீந்திர வடுதுர பண்டாரகே, தான் இலங்கைக்கு திரும்பிச் சென்றால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கனேடிய குடிவரவு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற போரில் தான் பங்குபற்றவில்லை என்று இவர் கூறியதை நம்பாத கனேடிய குடிவரவு அதிகாரிகள், சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட மனிதவுரிமை மீறல்களுக்கு உடந்தையாக இருந்தவர் என்ற ரீதியில் அவர் கனடாவில் புகலிடம் கோரத் தகுதியற்றவர் எனக் கூறியுள்ளனர்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் குண்டை வைக்குமாறு இவரிடம் கேட்கப்பட்டதால், சிறிலங்கா படைத்தரப்புக்கு அவர் நம்பிக்கைக்குரிய ஒரு அதிகாரியாக இருந்துள்ளார். அத்துடன் சிறிலங்கா படைத்தரப்பால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் இவர் அறிந்துள்ளதால் கனடாவில் புகலிடம் பெறத் தகுதியற்றவர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறிலங்கா படைத்தரப்பில் இவர் ஒரு கப்டனாக பணியாற்றியுள்ள நிலையில், இவரின் புகலிடக் கோரிக்கை கடந்த வாரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா படைத்தரப்பில் பணியாற்றிய கப்டன் ஒருவரால் வழஙற்கப்பட்ட இந்த வாக்குமூலம் மிகவும் முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ள கனேடிய ஊடகம், இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=2c981918-70f1-41f2-b49c-66048e61ed6a

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.