Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது மக்களுக்கு இழைக்கபட்ட அநீதிக்கு அனைத்துலக சமூகம் பொறுப்புக்கூற வேண்டும் : பிரதமர் வி.உருத்திரகுமாரன்

Featured Replies

நாம் தற்போது முக்கியமான வரலாற்றுக்கட்டத்தில் இருக்கிறோம். ஈழத் தமிழர் தேசத்தின் மீது சிங்களம் நடாத்திய இனஅழிப்புக்கு ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட அனைத்துலகச் சமூகம் துணைபோயிருக்கிற உண்மை அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது.

எமது மக்களுக்கு இழைக்கபட்ட அநீதிக்கு அனைத்துலக சமூகம் பொறுப்புக்கூற வேண்டும்.

இங்கு பொறுப்புக்கூறல் என்பது வெறுமனே 'தவறு நடந்து விட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள். இனிமேல் அத்தகைய தவறு நிகழாமல் கவனித்துக் கொள்கிறோம்' என்ற அறிக்கையுடன் முடிவுக்கு வரமுடியாது.

அனைத்துலுக சமூகம் இழைத்த தவறுக்கு பரிகாரம் வேண்டும். எமது மக்களுக்கு இழகை;கப்பட்ட அநீதிக்கு நியாயம் வேண்டும்.

இந்தப் பரிகாரம், இந்த நியாயம் சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசு ஒன்றாக மட்டும்தான் இருக்க முடியும்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய மண்ணில் இடம்பெற்றும் வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வின் தொடக்கநாள் நிகழ்வில் ஆற்றிய உரையின் பொழுதே இக்கூற்றினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர் தேசத்துக்குச் சாதகமான வகையில் அமையக்கூடிய முறையில் இந்தியா, அமெரிக்கா உட்பட்ட உலகநாடுகளின் வெளியுறவுக்கொள்கைகளில் மாற்றம் ஏற்படுவதற்கு உரிய செயற்பாடுகளை நாம் கூரிய நுட்பத்துடன் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தமிழீழ வெளியுறவுக்கொள்கை எனும் போது அதில் இரு அடுக்குகள் உள்ளன தெரிவித்துள்ளார்.

வெளியுறவுக் கொள்கை :

முதலாவது, தமிழீழத்தை அடைவதற்கான ஈழத் தமிழர் தேசத்தின் வெளியுறவுக்கொள்கை. இரண்டாவது அடுக்கு புதிதாய் உருவாகும் தமிழீழ நாட்டின் வெளியுறவுக்கொள்கை.

இந்த இரண்டு அடுக்குக்களும் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டவை. முதலாவதின் அத்திவாரத்தில் இருந்தே இரண்டாவது கட்டப்படல் நடைமுறையில் சாத்தியப்படும்.

இதனால் நாம் இங்கு விவாதிக்கும் வெளியுறவுக்கொள்கை சார்ந்த விடயங்கள் தமிழீழத்தை அடவைததற்கான வெளியுறவுக் கொள்கை என்பதனை நாம் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும்.

இந்த வெளியுறவுக்கொள்கை தமிழீழத்தின் புவிசார் அரசியல் பரிமாணத்துடன் அனைத்துலக அரசியல் ஒழுங்கையும் இணைத்து விரிவாக விவாதிப்பதன் ஊடாகவே உருவாக்கப்படல் வேண்டும். இதனால் இவ்விடயத்தை ஆழமாக விவாதிக்க நாம் மாநாடு ஒன்றினையும் ஏற்பாடு செய்ய உள்ளோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை ( 01-12-2012) மூன்றாம் நாளாக இடம்பெற்று வரும் பாராளுமன்ற அமர்வானது நாளை ஞாயிற்றுகிழமை நிறைவடையவுள்ளது

Live : http://naathamnews.com/?p=7901

[size=4]#1 :

அனைத்துலுக சமூகம் இழைத்த தவறுக்கு பரிகாரம் வேண்டும். எமது மக்களுக்கு இழகை;கப்பட்ட அநீதிக்கு நியாயம் வேண்டும்.
[/size]

[size=4]#2:

இந்தப் பரிகாரம், இந்த நியாயம் சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசு ஒன்றாக மட்டும்தான் இருக்க முடியும்.
[/size]

[size=4]#3:

தமிழீழத்தை அடைவதற்கான ஈழத் தமிழர் தேசத்தின் வெளியுறவுக்கொள்கை. புதிதாய் உருவாகும் தமிழீழ நாட்டின் வெளியுறவுக்கொள்கை.
[/size]

[size=1]

[size=4]இதில் #1 ம் #2ம் எமக்கு முக்கியம். ஆனால் #3 வல்லரசுகளுக்கு முக்கியம்.[/size][/size][size=1]

[size=4]பாதை சரியானதாக தெரிகின்றது. [/size][/size]

[size=3]நாடு கடந்த அரசின் நான்காவது அமர்வு லண்டனில் [/size]

[size=3]நடைபெற்றுள்ளது. இதற்கு முன்னதான மூன்று அமர்வுகள் அமெரிக்காவில் நடைபெற்றிருந்தது. இம் முறை அமர்வு பிரித்தானிய பாராளுமன்றின் வளாகத்தினுள் நடைபெற்றது. அங்கு நா.க.த.அவை உறுப்பினர்கள் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பல்கலைக் கழக வேந்தர், உப வேந்தர் ஆகியோர் போடும் உடைகள் போன்றோ அல்லது உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நீதிமன்ற அமர்வுகளில் அணியும் உடை போன்றோ, அல்லது வத்திக்கானில் உள்ள கத்தோலிக்கப் பேராயர்களின் அணிகள் போன்றோ அணிந்து காட்சியளித்தது வினோத உடைப் போட்டி ஒன்றைப் பார்த்தது போன்று இருந்தது. [/size]

[size=3]ஏற்கனவே இடம்பெற்ற அமர்வுகளில் கடைப்பிடிக்கப்படாத இந்த உடை அலங்காரம் வன்னியில் அழுக்கான உடைகளுடன் எம்மவர்கள் வாடுவதைக் கேலி செய்வதற்காகவே அணியப்பட்டிருக்கின்றது என்று எனது நண்பர் ஒருவர் கிண்டலாகக் கூறினார். இந்த "அரசு" இரண்டரை வருடங்களாயும் எதனையும் செய்ததில்லை. தென் சூடானில் தூதரகம் என்று சொன்னார்கள். தமிழீழ அடையாள அட்டை வழங்கினார்கள்( யாரும் அதனைப் பொருட்படுத்தவில்லை என்பது ஒரு புறம்) . ஒரு நாளைக்கு ஒரு டொல[/size][size=3]

ர் வீதம் பணம் சேகரித்து வடகிழக்கில் வதைபட்டவர்களை காப்பாற்றுகின்றோம் என்றார்கள். மாவீரர் குடும்பங்களைப் பராமரிக்கப் போகின்றோம் என்றார்கள். முடிவில் ஒன்றுமே செய்ததில்லை. இதில் அங்கம் வகித்த சிலர் (செனட்டர்கள் உடபட) கொழும்பிலே கோத்தபாயாவின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படும் ஒருவரோடு தினந்தோறும் தொலைபேசியில் பேசினார்கள். நேர்டோ அமைப்பில் அங்கமானார்கள். கோர்ட்டு , சூட்டு போட்டு மைக்கை மேடையில் விழுங்கினார்கள். படங்களுக்கு "போஸ்" கொடுத்தார்கள். கண்டது ஒன்றுமில்லை.

இரண்டரை வருடங்களில் மூன்று கூட்டங்கள் நடத்தியிருந்தார்கள். அதனை வெட்டுவோம், இதனை வீழ்த்துவோம் என்று பூச்சாண்டி காட்டி பொதுமக்கள் காதில் பூச்சுத்துவதில் கண்ணாயிருக்கிறார்கள் இந்த நா.க.த.அ. அவையினர்! ஒன்றுமே செய்யாது ஏறத்தாள மூன்று வருடங்களை வாயால் வெட்டிப் பேச்சு பேசிக் கடத்திக்கொண்டிருக்கும் இவர்கள் அடுத்த தேர்தலுக்குத் தயாராகிறார்கள் என்பதுதான் உண்மை! "இந்த அவையைப் பொருட்படுத்தத் தேவையில்லை" என்று சிலர் சொல்லுகிறார்கள். ஏனெனில் கற்பனையில் தோய்ந்து, வாழ்ந்து கனவுலகில் மிதக்கும் இவர்களை அப்படியே விட்டுவிடுங்கள். விடிந்ததும் எழும்பிக் கண்ணைத் துடைத்துக் கொண்டு போய்விடுவார்கள் இவர்கள் என்று! இது உண்மையா ?[/size]

நாம் தற்போது முக்கியமான வரலாற்றுக்கட்டத்தில் இருக்கிறோம். ஈழத் தமிழர் தேசத்தின் மீது சிங்களம் நடாத்திய இனஅழிப்புக்கு ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட அனைத்துலகச் சமூகம் துணைபோயிருக்கிற உண்மை அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது.

எமது மக்களுக்கு இழைக்கபட்ட அநீதிக்கு அனைத்துலக சமூகம் பொறுப்புக்கூற வேண்டும்.

இங்கு பொறுப்புக்கூறல் என்பது வெறுமனே 'தவறு நடந்து விட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள். இனிமேல் அத்தகைய தவறு நிகழாமல் கவனித்துக் கொள்கிறோம்' என்ற அறிக்கையுடன் முடிவுக்கு வரமுடியாது.

அனைத்துலுக சமூகம் இழைத்த தவறுக்கு பரிகாரம் வேண்டும். எமது மக்களுக்கு இழகை;கப்பட்ட அநீதிக்கு நியாயம் வேண்டும்.

73287_132357946918372_921834384_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.