Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மழைநீர் சேகரிப்பின் மகத்துவம் அறிந்த தேனி தொழில் அதிபர்: 2 கோடி லிட்டர் தண்ணீர் சேகரிப்பு.

Featured Replies

மழைநீர் சேகரிப்பின் மகத்துவம் அறிந்த தேனி தொழில் அதிபர்: 2 கோடி லிட்டர் தண்ணீர் சேகரிப்பு.

 

Tamil_News_large_1023503.jpg

 

நம் முன்னோர்களிடம் ஒரு வழக்கம் இருந்து வந்தது. அவர்கள் தினமும் குளத்தில் குளிக்கும் போதும் குளித்து முடித்த பின்னும், ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து கரைக்கு வெளியே போட்டு விடுவார்கள். இப்படி செய்வது, குளத்தினை தினமும் தூர்வாருவதற்கு சமம். குளிக்கும் ஒவ்வொருவரும் தினமும் ஒரு கைப்பிடி மண்ணை அள்ளி வெளியேற்றும் போது, குளம் எப்போதும் ஆழமாகவே இருக்கும். நீர் எப்போதும் நிறைந்திருக்கும். அந்தளவிற்கு அப்போது பொறுப்பான சமூகம் இருந்தது. அதேபோல் ஆற்றிலோ, குளத்திலோ சிறுநீர் கழிப்பதோ, மலம் கழிப்பதோ, மலம் கழித்து விட்டு சுத்தம் செய்வது போன்ற செயல்களையும் செய்ய மாட்டார்கள். அது குடிநீர், குளிக்கும் நீர் என்பது எல்லோருக்கும் தெரியும். நீர் நிலைகளை தெய்வமாக மதித்து அருகில் கோயில் கட்டினார்கள். 'மரங்களுக்கு சந்தனம் பூசி, ஆடை கட்டி அதனை வழிபட்டு, அது தெய்வம், வெட்டாதே,' என அறிவுறுத்தினார்கள். எல்லாவற்றையும் நாம் தவறாக புரிந்து கொண்டோம். இன்று ஆறுகள், குளங்கள் எல்லாமே கழிவுகளின் சங்கமம் ஆகி விட்டன. பிளாஸ்டிக் குப்பை அடைத்து பூமித்தாய் பிளாஸ்டிக் போர்வையால் போர்த்தப்பட்டு விட்டாள். ஒரு சொட்டு தண்ணீர் கூட பூமிக்குள் இறங்காதோ என்ற நிலைதான் இன்றைய சூழ்நிலை. ஆற்றிலோ, வாய்க்காலிலோ, குளத்திலோ தண்ணீர் தேங்க முடியாத அளவிற்கு நாம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி விட்டோம்.
இப்படி ஒரு பொறுப்பற்ற சமூகத்திலும், பொறுப்பான சிலர் வாழ்ந்து வழிகாட்டிக் கொண்டுதான் உள்ளனர். தேனி அருகே மதுராபுரியில் ஏ.சி.வி., மில்ஸ் நடத்தி வருபவர் சந்திரசேகர். இவர் 2004ம் ஆண்டே தனது மில்லில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கி விட்டார். இவரது மில்லின் பரப்பளவு இரண்டே முக்கால் ஏக்கர். இவ்வளவு நிலத்திலும் விழும் ஒரு சொட்டு நீர் கூட வீணாக வெளியேறாது. 9,200 சதுர மீட்டர் பரப்புள்ள இந்த மில்லில், கட்டடம் மட்டும் 5,200 சதுர மீட்டர். அதேபோல் மற்றொரு இடத்திலும் மில் வைத்துள்ளார். இதன் பரப்பளவு 40 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ளது. எல்லா இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைத்துள்ளார். கட்டடத்தின் மேல்தளத்தில் விழும் மழைநீர் வெளியேற மேலேயே கான்கிரீட் வடிகால் அமைத்துள்ளார். இந்த கான்கிரீட் வடிகாலில் இருந்து வரும் நீர் கான்கிரீட் வாய்க்கால் வழியாகவே செல்கிறது. தரைதளம் முழுவதும் பேவர் பிளாக் அமைத்து, இதில் விழும் மழைநீரும், கான்கிரீட் வாய்க்கால் வழியாகவே சென்று மிகப்பெரிய கிணற்றில் விழுவது போல் அமைத்துள்ளார். இந்த கிணறு மட்டும் 25 லட்சம் லிட்டருக்கும் மேல் கொள்ளவு கொண்டது. ஆண்டுக்கு இவரது மில்லில் மட்டும் சராசரியாக 2 கோடி லிட்டர் தண்ணீர் சேகரிக்க முடியும். அந்த அளவிற்கு மழைநீர் சேகரிப்பை வலுவாக அமைத்துள்ளார். இவரது மில்லில் 200 பேர் வேலை பார்க்கின்றனர். தினமும் இவர்களது தேவை மட்டும் 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர். இந்த கணக்குப்படி இவர் ஒவ்வொரு ஆண்டும் சேகரிக்கும் மழைநீர், இரண்டு ஆண்டிற்கும் மேல் போதுமானதாக உள்ளது. மழைநீர் சேகரிப்பு அமைத்தது முதல் தற்போது வரை, மில்லில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதே இல்லை. இதனால் மில்லிலேயே பால்பண்ணை அமைத்துள்ளார். சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகிறார்.
 
 
 
சந்திரசேகர் கூறியதாவது:
 
என்னை மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்குமாறு யாரும் அறிவுறுத்தவில்லை. மாறாக நான் அமைத்த போது, எதற்கு வீண் வேலை செய்கிறாய் என கிண்டல் செய்தனர். நான் அதைப் பற்றி கவலைப்படாமல் மில் வளாகம் முழுவதும் சேரும் தண்ணீரை கடந்த 10 ஆண்டுகளாக சேகரித்து வருகிறேன். இதனால் இப்பகுதி முழுவதுமே நிலத்தடி நீர் வளம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்றாண்டுகளாக மழையே இல்லாத நிலையிலம், எங்கள் மில் வளாகத்தில் உள்ள ஆழ்குழாய்களில் தண்ணீர் நன்றாக கிடைக்கிறது. நான் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்தாலும், அடிப்படையில் விவசாயக்குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால், எனக்கு நிலத்தடி நீரின் முக்கியத்துவமும், விவசாயத்தின் மகத்துவமும் முழுமையாக தெரியும். இயற்கையை மதிக்கத் தெரியும். எனவே இயற்கைக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் இயற்கை வளங்களை முழுமையாக பாதுகாத்து வருகிறேன். ஆரம்பத்திலேயே கான்கிரீட்டால் வலுவான முறையில் அமைத்து விட்டதால், ஒவ்வொரு முறையும் பராமரிப்பிற்காக நான் சிரமப்பட வேண்டிய அவசியம் ஏதும் ஏற்படவில்லை. இவ்வாறு கூறினார். மழைநீர் சேகரிப்பு தொழில்நுட்பம் அறிய 98422 71975 ஹலோ சொல்லுங்க.
 

பிரயோசனமான நல்ல தகவல்களயும் செய்திகளையும் இணைக்கின்றீர்கள் ஆதவன்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான திரிகள் வரவேற்க்கப்பட வேண்டியவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.