Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வே தூதுவர் கிளிநொச்சி பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே தூதுவர் கிளிநொச்சி பயணம்

[வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2007, 02:57 ஈழம்] [து.சங்கீத்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர்மட்ட தலைவர்களுடன் அவசர பேச்சுக்களை மேற்கொள்ளும் முகமாக, இன்று வியாழக்கிழமை இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர் கிளிநொச்சி பயணமாகியுள்ளார்.

சிறீலங்கா அரசைப் பொறுத்தவரை தற்போது எழுத்தில் மட்டும் நடைமுறையிலுள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை, ஒருதலைப்பட்சமாக விடுதலைப் புலிகள் கடைப்பிடித்து வரும் நிலையில், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் எதிர்காலம், சமாதானப் பேச்சுக்கள் போன்றவை தொடர்பாக பிரதானமாக ஆராயப்படுமென நம்பப்படுகிறது.

நேற்றைய தினம், சர்வதேச போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர், சமாதான செயலகப் பணிப்பாளர் எஸ்.புலித்தேவனை, கண்காணிப்புக் குழுவின் கிளிநொச்சி அலுவலகத்தில் சந்தித்து உரையாடினர். குறிப்பாக, கண்காணிப்புக் குழுவின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக இச்சந்திப்பில் ஆராயப்பட்டதாக, அதன் பேச்சாளர் தொபினூர் ஒமர்சன் தெரிவித்தார்.

இச்சந்திப்பில், யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் தமக்குள்ள பற்றுறுதியையும் நம்பிக்கையையும் உறுதிசெய்த விடுதலைப் புலிகள், நோர்வே தூதுவரிடமும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக விவாதிக்கவுள்ளனர்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எந்தவொரு விதியையும் சிறீலங்கா அரசு மதித்த நடக்காத நிலையில், வலிந்த தாக்குதல்கள் மூலம் ஆக்கிரமிப்புக்களும் தொடர்கின்றன. இந்நிலையில், நோர்வே தூதுவரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

http://www.eelampage.com/?cn=30671

புலிதேவனுடன் கண்காணிப்புக்குழுவினர் சந்தித்துப்பேச்சு நோர்வே தூதுவர் கிளிநொச்சிக்கு செல்கின்றார்

போர்நிறுத்தக்க கண்காணிப்புக்கு குழுவினருக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையி

அரசாங்கத்தின் விசேட செய்தியுடன் இன்று கண்காணிப்பு குழு புலிகளைச் சந்திக்கிறது

ஜ31 - துயரெயசல - 2007ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ

- டிட்டோ குகன் -

போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவினர்இ இலங்கை அரசின் " விசேட செய்தி" யொன்றுடன் இன்று புதன்கிழமை கிளிநொச்சி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதை போர் நிறுத்தகண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோபினூர் ஒமர்ஸனும் நேற்று உறுதிப்படுத்தினார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம்இ 30 ஆம் திகதிகளில் ஜெனிவாவில் அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைந்ததை அடுத்துஇ இரு தரப்புக்களுக்கும் இடையிலான தொடர்பாடல்கள் பெரும்பாலும் ஸ்தம்பிதமடைந்து போயிருந்த நிலையில்இ அதை புதுப்பிப்பது போல் அரசின் செய்தியொன்றை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினர் இன்று விடுதலைப் புலிகளிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜெனிவா பேச்சுக்கள் முறிவடைந்ததை அடுத்துஇ அரசாங்கம் இராணுவ நடவடிக்கைகள் மூலம் கிழக்கில் புலிகள் வசம்மிருந்த வாகரை மற்றும் வெருகல் போன்ற பிரதேசங்களை கைப்பற்றியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில்இ போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் முதல் முறையாகஇ அதுவும் அரசின் விசேட செய்தியொன்றுடன் புலிகளை சந்திக்கவுள்ளனர்.

இதே நேரம்இ விடுதலைப் புலிகளுடன் உயர்மட்ட சந்திப்பொன்றை நடத்திஇ தங்களது புதிய நடைமுறைகள் குறித்து விளக்கமளித்துஇ அவை தொடர்பான அவர்களது யோசனைகளையும் பெற்றுக் கொள்ள கண்காணிப்புக் குழு மிகவும் ஆர்வம் காட்டி வந்தது.

இதன்அடிப்படையில்இ போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் இன்று கிளிநொச்சியில் புலிகளை சந்தித்து பேசவுள்ளனர். போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுத் தலைவர் சோல்வ்பேர்க் ஸ்கண்டிநேவிய நாடுகளுக்கிடையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருப்பதால்இ இன்று புலிகளை சந்திக்க இருக்கும் கண்காணிப்பு குழுவுக்கு அதன் பதில் தலைவரான ஒஸ்கார் சோல்லனஸ் தலைமை தாங்கவுள்ளார்.

இதேநேரம்இ விடுதலைப்புலிகளின் தரப்பிலிருந்து அவ் அமைப்பின் சமாதான செயலக பணிப்பாளர் எஸ்.புலித்தேவன் இச் சந்திப்பில் கலந்து கொள்வாரென கண்காணிப்பு குழு பேச்சாளர் ஒமர்ஸன் தெரிவித்தார்.

இதேவேளைஇ கிளிநொச்சி செல்லும் கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் பயணிப்பதற்கு வவுனியா வரை ஹெலிகொப்டர் வழங்க அரசு சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் ஒமர்ஸன் கூறினார்.

இதுவொரு உயர்மட்ட சந்திப்பு. இச் சந்திப்பில் எமது செயலமர்வில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கை மாற்றங்கள் குறித்து புலிகளுக்கு எடுத்துக் கூறி அவர்களின் யோசனைகளை பெற்றுக் கொள்வதே எமது நோக்கமாகும். இதே நேரம்இ அரசாங்கத்தின் செய்தியொன்றையும் விடுதலைப்புலிகளுக்கு எடுத்துச் செல்கிறோம் என்றார்.

அப்ப அரசாங்கம் இவ்வளவு செய்து போட்டு கதைப்பம் எண்டால் கதைச்சிறுவீனமோ. அப்ப சுயநலந்தான் அதுவும் சுழிப்பு மழிப்பா தான் வாழோணும் எண்டா நாங்களும் இங்க பேசாமா எங்கட பிள்ளைகளை படிப்பிச்சு போட்டு காசு மேலும் உழைச்சு வசதியா வாழ தான் பார்க்கோணும் என்று தான் தோண்றப்போகுது.வீணா இதுகளுக்க கொண்டு போய் ஏன் தலையை வாத்து மண்டைஉடைபடுவான் என்று நானும் யோசிக்கிறன். பின்ன என்ன பேச்சுக்குப் போன பாடசாலை அதிபர் சென் ஜோன்ஸ் அதிபருக்கு ஒரு சட்டம் மற்றவைக்கும்(டக்ளஸ், கருண) ஒரு பெயரு....இவையள மாதிரம் என்ன நாம் மன்னித்துத்தான் விடுமா உறவுகளையும், உடைமைகளையும் இழந்த அப்பாவிகள்.... <_<

போர்நிறுத்த கண்காணிப்பு குழு சிறிலங்கா அரசின் செய்தியுடன் தான் விடுதலைப் புலிகளைச் சந்திக்க வன்னி சென்றது என்பதில் நம்பகத்தன்மை குறைந்து காணப்படுகிறது. ஏனெனில் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவுக்கு வேண்டிய போக்குவரத்துக்காக உலங்கு வானூர்தியொன்றை ஒழுங்குசெய்து கொடுப்பதற்கு முதலில் சிங்கள அரசு மறுத்து அழுத்தங்களின் பேரில் வவுனியாவரை பயணிக்க இறுதியில் ஒப்புக்கொண்டது. போ. நி. க. கு கொண்டு செல்லும் செய்தி உதவி வழங்கும் நாடுகளுடையதாயிருப்பதற்குத் தான் அதிகம் சந்தர்ப்பம் இருக்கிறது. எங்கோ ஓரிடத்தில் இடிக்கிறது, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அப்படி எதாவது விசேட செய்தி என்றால் அது சர்வதேசத்தின் செய்தியாகத்தான் இருக்கும்.

இவை இப்படித்தான் நாங்கள் ஏதாவது செய்ய வெளிக்கிட்டால் கெலியையும் பிடிச்சுக்கொண்டு போய்விடுவினம் பஞ்சாயாத்துக்கு

நடப்பவை நல்லாய் இருந்தால் எல்லாம் நலம் அல்லாது போனால் தமிழருக்கு என்ன தான் நியாயம் கிடைக்கப் போகின்றது என்று பொறுத்து இருந்து தான் நாம் பார்க்க வேண்டும் காரணம் தங்கள் சேவைக்காகவும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் தான் உலக நாட்டு பிரசன்னம் எம்மக்கள் மத்தியில்

நன்றி

22 ஆம் திகதிக்கு இன்னமும் 3 கிழமைதான் இருக்கு.

யேர்மனியின் தடை நீக்கம் பற்றிய செய்தி கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்.

பாச்சலின் வேகத்தைக் குறைக்க சர்வதேசம் மிகவும் பாடுபடுது. பெறிக்குள்ளை சர்வதேசமே மாட்டுப்பட்டுட்டுது.

அது விளங்காமல் சிங்களம் உலங்கு வானூர்தி குடுக்கவில்லை. உலங்கு வானூர்தி கொடுங்கள் இல்லை பாச்சல் உங்களை அழித்துவுடும்.

ஆனாலும் அந்த அழிவுகள் பற்றி மகிந்த கவலைப் படப்போவதில்லை ஏன் என்றால் அவர் ஒரு அரசியல்வாதி. :wacko:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனா அவர்கள் போன நோக்கம் ஆய்வுகளில் எழுதப்படுபவை போல் புலிகள் பலமாக இருக்கிறார்களா என்று கேக்க தானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

quote name='kurukaalapoovan' date='Feb 1 2007, 07:37 PM' post='255248']

22 ஆம் திகதிக்கு இன்னமும் 3 கிழமைதான் இருக்கு.

யேர்மனியின் தடை நீக்கம் பற்றிய செய்தி கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்.

பாச்சலின் வேகத்தைக் குறைக்க சர்வதேசம் மிகவும் பாடுபடுது. பெறிக்குள்ளை சர்வதேசமே மாட்டுப்பட்டுட்டுது.

அது விளங்காமல் சிங்களம் உலங்கு வானூர்தி குடுக்கவில்லை. உலங்கு வானூர்தி கொடுங்கள் இல்லை பாச்சல் உங்களை அழித்துவுடும்.

ஆனாலும் அந்த அழிவுகள் பற்றி மகிந்த கவலைப் படப்போவதில்லை ஏன் என்றால் அவர் ஒரு அரசியல்வாதி. :wacko:

Edited by subakaran

நோர்வே தூதுவர் தமிழ்ச்செல்வன் சந்தித்து விரிவான பேச்சு

இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிராஸ்கர் நேற்று புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச் செல்வனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தரைமார்க்கமாக காலை கிளிநொச்சிக்கு சென்ற தூதுவருக்கும் தமிழ்ச்செல்வனுக்குமிடையில் புலிகளின் சமாதான செயலகத்தில் சந்திப்பு இடம் பெற்றது.

ஒரு மணி நேரம் இடம் பெற்ற இச்சந்திப்பில் சமாதான முயற்சியின்தற்போதைய நிலை, கிழக்கு மாகாணத்தில் படையினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை புலிகள் கடைப்பிடித்து வரும் நிலையில் அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் இராணுவ நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவது தொடர்பில் தமிழ்ச்செல்வன் விசனம் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது

விடுதலைப்புலிகள் ஒன்றும் கடுமையாகக் கதைத்திருக்க

மாட்டார்கள். இவர்களிடம் கதைத்தாலும் என்ன நடக்

கப்போகிறது. சும்மா பதற்றந்தான். அதுதான் ஓடுப்படு

கிறார்கள்.

தொலைத்தொடர்பு இல்லாததால் விடுதலைப் புலிகளிடமிருந்து செய்திகளைப் பெற முடியாதென்பது நம்ப முடியாது. சட்டலைட் மூலம் அவர்களுக்கு வெளிநாடுகளுடன் தொடைபுண்டு.

நோர்வேயும் எதுவும் சொல்லாததால் குழப்பமாக உள்ளது.

தமிழ்ச்செல்வன் நோர்வேக் காரருக்கு நாமம் போட்டிருப்பார் அல்லது தனித் தமிழீழத்தை எப்படி சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் என்பது பற்றிப் பேசியிருப்பார்கள்.

மகிந்தர் புலனாய்வுத்துறையை நம்புவதை விட ஜோதிடர்களை நம்புவது அதிகம். மாசி, பங்குனி மாதங்களில் ஸ்ரீலங்கா அரசுக்கும் மகிந்தருக்கும் ஆபத்தான காலம் என்று ஜோதிடர்கள் கூறி விட்டார்கள்.

ஜோதிடப்படி ஆபத்தான, அடுத்த இரண்டு, மூன்று மாதங்களில் புலிகளின் பெரும் தாக்குதல்கள் ஏதாவது நடந்து, மகிந்தரின் ஆட்சி கட்டில் ஆட்டம் கண்டு விடக்கூடாது, என்ற பயத்தினால் பின்னப்பட்ட வலை தான் இந்த சமாதான நாடகம்.

இந்த நாடகத்தின் நோக்கம் அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் புலிகளின் அதிரடி நடவடிக்கைகள் எதுவும் நடந்து விடாமல் தடுப்பது தான். இந்த கிரகநிலை மாற்றத்தின் முன்னே செய்து விட வேண்டும் என்பதற்காக தான், கட்சி தாவல் கோமாளித்தனம், மொத்தம் 100 பேருக்கும் அதிகமான அமைச்சரவை என்று எல்லா அவசர தெருக்கூத்தும் ஆடி இருக்கிறார் மகிந்தர்.

தானாகவே இறங்கி வந்து சமாதானம் பேசுவது போன்ற தோற்றம் சிங்கள மக்களிடம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, காத்திருந்து காலியில் நடந்த உதவி வழங்கும் மாநாட்டில் சர்வதேசத்தின் அழுத்தத்தின் நிமித்தம், சமாதான பேச்சுக்கான முயற்சியில் தான் ஈடுபடுவதை போன்ற ஒரு காட்சியை மகிந்தர் அரங்கேற்றியிருக்கிறார்.

ஜோதிடத்தின் பேரில் அரங்கேற்றி இருக்கும் இந்த நாடகத்தில், நோர்வேயையும் இழுத்து விட்டு இந்தியாவிற்கும், ஐரோப்பிய யூனியனுக்கும், சமாதான முன்னெடுப்பு என்று அல்வா கொடுக்கவும் ஒரு சின்ன முயற்சி. அவ்வளவு தான்.

மகிந்தரின் ஜாதகத்தில் கிரகநிலை பாதகமாக உள்ளது என்று எழுதியதற்காக, அண்மையில் ஒரு சிங்கள ஜோதிட இதழின் நிருபரை கைது செய்து அடித்து உதைத்த ஒரு அரசிடம் இது போன்ற முற்போக்கு சிந்தனைகளை தானே எதிர்பார்க்க முடியும்.

ஜோதிடர்கள் சொன்னார்கள் என்பதற்காக தங்க கட்டிலில் படுத்து உறங்கிய பிரேமதாசவிற்கு என்ன நடந்தது என்று தெரிந்திருந்தும் மகிந்தர் ஜோதிடர்களை நம்பி ஆட்சி செய்வது தான் ஆச்சரியம்.

ஏனென்றால் மகிந்தரின் சேர்க்கை அப்படி. குட்டிச்சாத்தான் ஏவலிலும், மந்திர வித்தைகளிலும், பேய் விரட்டலிலும் நம்பிக்கை கொண்ட பிக்குகளின் கட்சியான "ஹெல உருமய" போன்றவர்களிடம் ஆலோசனை கேட்டு ஆட்சி செய்யும் ஒரு ஜனாதிபதியிடம் இதை தவிர வேறு எதை எதிர்பார்ப்பது?!

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா!

இது கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டும் புரட்டு உலகமடா!

தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா!

தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.