Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிலவரம் - ஆய்வு நிகழ்வு 19.08.2007

Featured Replies

மோசமான விமர்சனங்களுக்குப் பின்னரும் ஏன் ஐ.நா. பொங்கி எழவில்லை?: இளந்திரையன் கேள்வி

சிறிலங்கா அரசாங்கத்தின் மோசமான விமர்சனங்களுக்குப் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபை பொங்கி எழாமல் உறுமாமல் பூனை போல் இருப்பது ஏன்? என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19.08.07) ஒளிபரப்பாகிய "நிலவரம்" நிகழ்ச்சியில் இராசையா இளந்திரையன் கூறியதாவது:

அண்மையில் இலங்கை வந்து சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோல்ம்சின் வருகை என்பது கொழும்பால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடயம். மனித உரிமை தொடர்பாக நிச்சயமாக அவர் ஏதாவது கூறுவார், அதனை எதிர்க்க வேண்டும், அத்துடன் மனித உரிமை தொடர்பாக யார் வந்து கதைத்தாலும் எதிர்ப்பது ஒரு என்கின்ற நிலைப்பாடு இப்போது கொழும்பு நிர்வாகத்திடம் இருக்கின்றது. இருக்க வேண்டும் அது தயார்படுத்தப்பட்ட விடயமாக இருக்கின்றது.

அந்த நிகழ்ச்சிக்குள்ளே இங்கே வந்து ஜோன் ஹோல்ம்ஸ் பலியாகிக்கொண்டாரா அல்லது இந்த விடயங்களை அவர் இங்கே வந்து இப்போது பழகிக்கொண்டிருக்கிறாரா என்பதுதான் எங்களுடைய கேள்வி.

ஏனெனில் அவர் கிழக்கிற்கும், குடாநாட்டிற்கும் சென்றிருந்தார். அங்கே உள்ள மக்கள் ஒன்றிரண்டு பேரை அவர் சந்தித்ததாகவும் கூறுகின்றார். அப்படியாக இருந்தால், கிழக்கில் அபிவிருத்திக்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புக் கிடைக்கும் என்று அவர் என்ன அடிப்படையில் பேசினார் என்பது முதலாவது கேள்வியாக இருக்கிறது.

ஏனெனில் மனிதாபிமான நடவடிக்கைகளை செய்வதற்கான ஏதுநிலை இலங்கையில் இல்லை என்று அவர் கூறியிருக்கின்றார். பின்பு எந்த அடிப்படையில் அந்த நிதிகளை வழங்குவதற்கு அவர் ஒப்புக்கொண்டார் என்பது ஒரு பக்கம்.

இரண்டாவது பக்கம் எனனவெனில்,

மனிதாபிமானப் பணியாளர்கள் அதாவது கொல்லப்பட்டவர்களின் தொகை தொடர்புடைய வித்தியாசம் ஒன்றை அவர் வெளியிட்டது ஆளும் தரப்பினிடையே பெரிய அலையைக் கிளப்பியிருக்கிறது. அதன் விளைவாக அவர் மேல் எழுந்த விமர்சனங்கள் காட்டமானவை என்று கூறுவதனை விட ஒரு மிகவும் விளிம்பைத் தொட்டவை என்று கூறமுடியும்.

ஏனெனில்,

அவர் பயங்கரவாதி என்று விமர்சிக்கப்பட்டிருக்கின்ற

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசின் மோசமான விமர்சனங்களுக்கு பின்னரும் ஐ.நா.சபை அமைதிகாப்பது ஏன்?

[28 - August - 2007]

* புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கேள்வி

இலங்கை அரசாங்கத்தின் மோசமான விமர்சனங்களுக்குப் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபை பொங்கி எழாமல் பூனை போல் இருப்பது ஏன்? என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய `நிலவரம்' நிகழ்ச்சியில் இவ்வாறு தெரிவித்துள்ள இளந்திரையன் மேலும் கூறியதாவது;

அண்மையில் இலங்கை வந்துசென்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோல்ம்சின் வருகை என்பது கொழும்பால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடயம். மனித உரிமை தொடர்பாக நிச்சயமாக அவர் ஏதாவது கூறுவார். அதனை எதிர்க்கவேண்டும். அத்துடன் மனித உரிமை தொடர்பாக யார் வந்து கதைத்தாலும் எதிர்ப்பது ஒரு என்கின்ற நிலைப்பாடு இப்போது கொழும்பு நிர்வாகத்திடம் இருக்கிறது. அது தயார்படுத்தப்பட்ட விடயமாக இருக்கிறது.

அந்த நிகழ்ச்சிக்குள்ளே இங்கே வந்து ஜோன் ஹோல்ம்ஸ் பலியாகிக்கொண்டாரா அல்லது இந்த விடயங்களை அவர் இங்கே வந்து இப்போது பழகிக்கொண்டிருக்கிறாரா என்பதுதான் எங்களுடைய கேள்வி.

ஏனெனில், அவர் கிழக்கிற்கும் குடாநாட்டிற்கும் சென்றிருந்தார். அங்கே உள்ள மக்கள் ஒன்றிரண்டு பேரை அவர் சந்தித்ததாகவும் கூறுகின்றார். அப்படியாக இருந்தால் கிழக்கில் அபிவிருத்திக்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புக் கிடைக்கும் என்று அவர் என்ன அடிப்படையில் பேசினார் என்பது முதலாவது கேள்வியாக இருக்கிறது.

ஏனெனில், மனிதாபிமான நடவடிக்கைகளை செய்வதற்கான ஏதுநிலை இலங்கையில் இல்லை என்று அவர் கூறியிருக்கிறார். பின்பு எந்த அடிப்படையில் அந்த நிதிகளை வழங்குவதற்கு அவர் ஒப்புக்கொண்டார் என்பது ஒரு பக்கம். இரண்டாவது பக்கம் என்னவெனில்,

மனிதாபிமானப் பணியாளர்கள் அதாவது கொல்லப்பட்டவர்களின் தொகை தொடர்புடைய வித்தியாசம் ஒன்றை அவர் வெளியிட்டது ஆளும் தரப்பினரிடையே பெரிய அலையைக் கிளப்பியிருக்கிறது. அதன் விளைவாக அவர்மேல் எழுந்த விமர்சனங்கள் காட்டமானவை என்று கூறுவதனை விட ஒரு விளிம்பைத் தொட்டவை என்று கூறமுடியும்.

ஏனெனில், அவர் பயங்கரவாதி என்று விமர்சிக்கப்பட்டிருக்கின்ற

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசின் மோசமான விமர்சனங்களுக்கு பின்னரும் ஐ.நா.சபை அமைதிகாப்பது ஏன்?

[29 - August - 2007]

நேற்றைய தொடர்ச்சி

அங்கே குழுக்களில் கிராம மட்டங்களில் தமிழர்களின் பிரதிநிதிகள் என்று கூறப்படுகின்றவர்கள் இருந்தாலும் கூட, அங்கே அவர்களால் எதனையும் சாதிக்க முடியாது. ஏனெனில், அங்கே தலைமையில் இருப்பது அந்தப் படை அதிகாரிகள். இவ்வாறாக அந்த மக்களை இரும்புப் பிடிக்குள் கொண்டு வந்து அவர்களுடைய உணர்வுகளை நீர்த்துப் போகச் செய்கின்ற முயற்சியை கொழும்பு நிர்வாகமும் படைத்துறையும் அங்கே செய்து வருகின்றன.

அவ்வகையான கொடிய சூழலினை எதிர்கொண்டுதான் எங்கள் மக்கள் அங்கே உணர்வுடனும் விழிப்புடனும் வாழ்ந்து வருவதனைத்தான் நாம் கிழக்கில் காணக்கூடியதாக இருக்கின்றது. இலங்கை அரசு எந்தப் படை நடவடிக்கைகள் எடுத்தாலும் அது மனிதாபிமான நடவடிக்கை என்றுதான் கூறுகிறது.

கொழும்பிலிருந்து வெளிவருகின்ற அந்த செய்திகள் யாவும் உண்மையில் செய்திகள்தானா அல்லது ஏதாவது நகைச்சுவைப் பத்திரிகை படிக்கின்றோமோ என்கின்ற உணர்வுகள் ஏற்படுவது வழக்கம்.

லட்சக்கணக்கான மக்களை பலவந்தமாக இடம்பெயரவைத்து அவர்கள் இடம்பெயர முடியாது எங்களுடைய இல்லங்களை விட்டுப் போகமாட்டோம் என்று கூறிய சூழ்நிலையில், அவர்கள் மீது எறிகணைகளை வீழ்த்தி தொகை தொகையாக கொன்றொழித்து இடப்பெயர்வை நடத்தி இன்று அவர்களை இடைத்தங்கல் முகாம்களில் அவலப்படவிட்டிருக்கின்ற அந்தப் படை நடவடிக்கைக்கு பெயர் மனிதாபிமான படை நடவடிக்கை என்றால், அதனைவிடப் நகைச்சுவை நடவடிக்கை இந்த உலகத்தில் நீங்கள் கண்டுபிடிக்க மாட்டீர்கள் இதில் அதனைப் விடப் பெரிய விடயம் என்னவெனில், சில பன்னாட்டு அமைப்புகள் அதனைப் பார்த்து ஆமாம் போடுவதுதான். அவ்வகையான சூழல்தான் அங்கே இருந்து வருகின்றது. அதற்குரிய காரணங்கள் பின்னணிகள் வேறாக இருக்கலாம்.

அப்படியிருந்தும் கூட அங்கு இப்போது ஒரு சூழ்நிலை. அதாவது அபிவிருத்தி சார்ந்த ஒரு சூழ்நிலை அங்கே இருக்குமா அது எப்படி அங்கே நடைபெறப்போகின்றது? மிகவும் அவலமான சூழ்நிலைக்கு அந்த மக்களை இட்டு வந்தவர்கள் எவ்வாறான ஒரு கரிசனையை அந்த மக்கள் மீது கொண்டிருக்கின்றார்கள் என்ற கேள்விகள் எல்லாம் இங்கே எழுந்து நிற்கின்றன.

அவற்றுக்கான நியாயமான பதில்கள் அடையப்படாமல் மக்களின் குரல்களின் நியாயப்பாடுகள் புரியப்படாமல் அங்கு எந்த முயற்சியாவது செய்வது சாத்தியம் இல்லை என்றே பெரும்பாலான நடுநிலை அவதானிகள் கருதுகின்றனர்.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.