Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதிகள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல: கிலாரி கிளின்ரன்

Featured Replies

பயங்கரவாதிகள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல: கிலாரி கிளின்ரன்

[புதன்கிழமை, 24 ஒக்ரோபர் 2007, 07:25 PM ஈழம்] [செ.விசுவநாதன்]

உலக ஒழுங்கில் பயங்கரவாதிகள் எனப்படுவோர் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல என்று அமெரிக்க முன்னாள் அரச தலைவர் கிளின்ரனின் துணைவியாரும் எதிர்வரும் அமெரிக்க அரச தலைவர் தேர்தல் வேட்பாளருமான கிலாரி கிளின்ரன் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் "கார்டியன் நியூஸ்" ஊடகத்துக்கு அவர் வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளதாவது:

அனைத்து பயங்கரவாதிகளையும் ஒன்றாகக் கருத முடியாது. அவர்களின் நோக்கம், பயங்கரவாதிகளாகக் காட்டப்படுவதன் பின்புலம் ஆகியவறை குறித்த தெளிவுபடுத்தலை நாம் பெற்றிருக்க வேண்டும். அதாவது இலங்கையில் போராடும் தமிழ்ப் புலிகள் அல்லது ஸ்பெய்னின் பாஸ்கியூ பிரிவினைவாதிகள் அல்லது அல் அன்பர் மாகாண கிளர்ச்சியாளர்கள் ஆகியோர் உத்திகளினால்மட்டுமேதான் இணைந்துள்ளனர். தத்துவார்த்தங்கள் உள்ளிட்டவை அவர்களால் பகிர்ந்து கொள்ள முடியாது. அகன்ற தூரிகையால் நாம் தான் அவர்கள் மீது அத்தகைய சாயம் பூசுகிற தவறுகளைச் செய்வதாக நினைக்கிறேன்.

வரலாறு முழுமைக்கும் தத்துவார்த்த ரீதியாக அல்லது பிரதேச ரீதியாக ஒன்றை எட்டுவதற்காக பயங்கரவாதம் என்பது ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டே வந்துள்ளது என்றார் அவர்.

பயங்கரவாதிகள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல: கிலாரி கிளின்ரன்

[புதன்கிழமை, 24 ஒக்ரோபர் 2007, 07:25 PM ஈழம்] [செ.விசுவநாதன்]

உலக ஒழுங்கில் பயங்கரவாதிகள் எனப்படுவோர் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல என்று அமெரிக்க முன்னாள் அரச தலைவர் கிளின்ரனின் துணைவியாரும் எதிர்வரும் அமெரிக்க அரச தலைவர் தேர்தல் வேட்பாளருமான கிலாரி கிளின்ரன் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் "கார்டியன் நியூஸ்" ஊடகத்துக்கு அவர் வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளதாவது:

அனைத்து பயங்கரவாதிகளையும் ஒன்றாகக் கருத முடியாது. அவர்களின் நோக்கம், பயங்கரவாதிகளாகக் காட்டப்படுவதன் பின்புலம் ஆகியவறை குறித்த தெளிவுபடுத்தலை நாம் பெற்றிருக்க வேண்டும். அதாவது இலங்கையில் போராடும் தமிழ்ப் புலிகள் அல்லது ஸ்பெய்னின் பாஸ்கியூ பிரிவினைவாதிகள் அல்லது அல் அன்பர் மாகாண கிளர்ச்சியாளர்கள் ஆகியோர் உத்திகளினால்மட்டுமேதான் இணைந்துள்ளனர். தத்துவார்த்தங்கள் உள்ளிட்டவை அவர்களால் பகிர்ந்து கொள்ள முடியாது. அகன்ற தூரிகையால் நாம் தான் அவர்கள் மீது அத்தகைய சாயம் பூசுகிற தவறுகளைச் செய்வதாக நினைக்கிறேன்.

வரலாறு முழுமைக்கும் தத்துவார்த்த ரீதியாக அல்லது பிரதேச ரீதியாக ஒன்றை எட்டுவதற்காக பயங்கரவாதம் என்பது ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டே வந்துள்ளது என்றார் அவர்.

http://puthinam.com/full.php?2eYWrZ00a8g0V...d43ZUC3b02qNX2e

Edited by ஈழவன்85

  • தொடங்கியவர்

அனைத்து கிளர்ச்சி அமைப்புகளையும் நாம் பயங்கரவாத அமைப்பாக வரையறுக்க முடியாது - கிளாரி கிளிங்டன்

உலகில் உள்ள அனைத்து கிளர்ச்சி அமைப்புக்களையும் நாம் பரங்கரவாத அமைப்புகளாக வரையறுக்க முடியாது என அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரும் முன்னாள் அதிபர் கிளிங்டனின் துணைவியாருமான செனற்றர் கிளாரி கிளிங்டன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவிலிருந்து வெளிவரும் '' த கார்டியன் '' நாளேட்டுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உலகின் கிளர்ச்சியாளர்கள் பொதுவான யுத்தியாகவே பயங்கரவாதத்தை பயன்படுத்தி வருகின்றனர். வரலாற்றுக் காலம் தொட்டு சில இலங்குகளை எட்டுவதற்கான யுத்தியாக பயங்கரவாதம் யையாளப்பட்டு வருகின்றது.

இவ்வாறான இலக்குகள் கருத்தியல் ரீதியானதாகவும், நிலப் பிரதேசங்களை மையப்படுத்தியதாகவும், தனி நபர்களின் குணாம்சங்களினால் ஈர்க்கப்பட்டதாகவும் அமைந்துள்ளது.

அடிப்படையில் அனைத்து பயங்கரவாதிகளையும் ஒரே வரையறைக்குள் உட்படுத்த முடியாது. பயங்கரவாதிகளின் நோக்கங்கள் குறித்தும், நியாயங்கள் தொடர்பாகவும் நாம் தெளிவடைய வேண்டிய தேவை உள்ளது.

எடுத்துக்காட்டாக, தமிழீழ விடுலைப் புலிகளும், ஸ்பெயினிலுள்ள பாஸ்கியூ கிளர்ச்சியாளர்களும், அல் அன்வார் மாநில போரளிகளும் வெவ்வேறு நோக்கங்களுக்காகப் போராடுகின்றார்கள்.

இவர்களால் கையாளப்படும் யுத்திகளே ஒரே வரையறைக்குள் வகைப்படுத்துவதற்கு காணியாக அமைகின்றன.

எனினும் இவர்கள் ஒரே மாதியான சித்தாந்தத்தை அல்லது கருத்தினை, உத்திகளைக் கொண்டிருக்கவில்லை.

இதனை உணராது விலாசமான தூரிகையினைப் பயன்படுத்தி இவர்களை ஒரே வரையறைக்குள் ஓவியாமாக தீட்டியிருப்பது தவறானது.

எந்த நோக்கத்திற்காக பயங்கரவாதம் கையாளப் படுகின்றது என்பதைப் புரிந்துகொள்ளாது நாம் எதனை எதிர்கொண்டு நிற்கின்றோம்

http://www.pathivu.com/?ucat=alasal&file=231007

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.