Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு பிரியும் என்று அச்சப்படுவோருக்கு அவர்களின் அச்சத்தை போக்குவோம். நாட்டுப் பிரிவினை எண்ணத்தை எமது மக்கள் சிந்தனையில் இருந்து நீக்கி ஐக்கிய இலங்கை கொள்கையை வலுவாக ஆதரிக்க வைப்போம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இடைக்கால அறிக்கை கையளிப்பு நிகழ்வில் - வீ. ஆனந்தசங்கரி

மேதகு ஜனாதிபதி, கௌரவ அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அனைவருக்கும் வணக்கம்.

சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவர் திஸ்ஸ விதாரண அவர்கள் குழுவின் இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கும் வைபவத்தில் நான் கலந்து கொள்வது உங்கள் அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். இந்த நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்தினருக்கும், பிறநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கும் நான் ஏன் 13வது திருத்தச் சட்டத்தை, இறுதி தீர்வுக்கு முன்பு, முன்னோடியாக இருந்து முற்றாக அமுல்படுத்துவதற்கு ஆதரவு வழங்குகிறேன் என்பதை விளக்க கடமைபட்டுள்ளேன். நாம் தமிழ் பேசும் சிறுபான்மையின மக்களுக்காக ஒன்றிணைந்து செயல்படும் கட்சியாகிய தமிழீழ மக்கள் விடுதலைக் கழக தலைவர் திரு. த.சித்தார்த்தன் சார்பிலும், பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் திரு. தி. ஸ்ரீதரன் சார்பிலும் பேச கடமைபட்டுள்ளேன்.

நாம் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை சிலருக்கு சமஷ்டி என்ற வார்த்தை கசப்பாக இருப்பதால் சமஷ்டிக்கு மாற்றாக இந்திய முறையிலான தீர்வை வற்புறுத்தி வந்திருக்கிறோம். இந்த விடயத்திலும், வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்திலும் எமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. வன்முறையை வெறுத்து ஒதுக்கி தள்ளுகின்ற நாம் சாத்வீக முறையிலும், நட்பு முறையிலும் ஒற்றையாட்சியின் கீழ் நிரந்தர தீர்வை காணமுடியாது என்ற கருத்தை எமது நாட்டு மக்களை ஏற்க வைப்போம்.

நாடு பிரியும் என்று அச்சப்படுவோருக்கு அவர்களின் அச்சத்தை போக்குவோம். நாட்டுப் பிரிவினை எண்ணத்தை எமது மக்கள் சிந்தனையில் இருந்து நீக்கி ஐக்கிய இலங்கை கொள்கையை வலுவாக ஆதரிக்க வைப்போம். இதை நாம் அடைய நாட்டின் ஒரு பகுதியினர் பெரியவர்கள் என்றோ சிறியவர்கள் என்றோ முன்னிலைபடுத்தாது அரசும் ஊடகங்களும் அத்தகைய எண்ணத்தை வளரவிடாது தடுத்தல் வேண்டும்.

இன்று நாம் கலந்து கொள்ளும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று கூடும் இச்சபை ரத்தத்தில் தோய்ந்திருக்கும் நாட்டையும் அரை நூற்றாண்டுக்கு மேல், விசேடமாக கடந்த 25 ஆண்டு காலமாக சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வரும் மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடிய அரசியல் நிர்ணயசபையின் முன்னோடியாக இதை கருதுகிறோம்

சிங்கள, தமிழ், இஸ்லாமிய, மலாய , பறங்கிய மற்றும் ஏனைய சிறுபான்மை சமூகத்தவர்கள் அனைவரும் சகல விதத்திலும் ஒருவர் பெரிது மற்றவர் சிறிது என்ற பாகுபாடின்றி சமமாக வாழக்கூடிய ஒரு தேசம் மறுபிறவி எடுக்கும் போது தமிழ் பேசும் மக்களின் பூரண ஒத்துழைப்பை காட்டுவதற்கு நாம் ஒன்று கூடியிருக்கின்றோம்.

ஒரு குழுவுக்கு மட்டும்தான் இந்த நாடு சொந்தமானது என உரிமை கொண்டாடுவதை நாம் மறுக்கிறோம். இந்தியாவிலிருந்து இலங்கையை 22 மைல் தூரம் கொண்ட பாக்குத் தொடுவாய் பிரிக்கிறது. தொடுவாய்க்கு அப்பால் வாழும் ஆறு கோடி மக்கள,; எமது மக்களுக்கு அமைதியும், இயல்பு வாழ்வும், நல்ல எதிர்காலமும் அமைய தமது வாழ்த்துக்களையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இரு பக்கத்திலுமுள்ள விடுதலைப் புலிகள் சார்பான தலைவர்களால் தமிழ் நாட்டு மக்கள் தப்பாக வழிநடத்தப்படக் கூடாது. கடலுக்கு அப்பால் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு நம் நாட்டு தமிழர்களை இனப்படுகொலை செய்ய எவரும் முயற்சிக்கவில்லை என்பதையும் தமிழ் மக்களில் அரைவாசி பேருக்கு மேல் தமது பூர்வீக குடியிருப்புக்களையும் விட்டு வெகு தூரத்திற்கு அப்பால் தென்னிலங்கையில் சிங்கள, முஸ்லீம் மக்களுடன் அவர்கள் மீது பெருநம்பிக்கை வைத்து சந்தோஷமாக வாழ்கின்றார்கள் என்பதை கூறிகொள்ள விரும்புகின்றேன்.

கடந்த 20 ஆண்டுகாலமாக மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கு பல சந்தர்ப்பங்கள் விடுதலை புலிகளுக்கு அளிக்கப்பட்டன. வட கிழக்கை நிர்வகிப்பதில் பெரும் பங்கினை அரசிடமிருந்து பெற்றுத் தருவேன் என விடுதலை புலிகளுக்கு பல தடைவ கூறியிருக்கின்றேன். தலைவர்களுக்கும், போராளிகளுக்கும் பொது மன்னிப்பு பெற்றுத்தருவதாக கூட கூறியிருக்கி;ன்றேன். எனது கோரிக்கையை அவர்கள் பொருட்படுத்தவில்லை. மாறாக தினமும் இரு பகுதியினர் மத்தியிலும் உயிர் பலிகளை மட்டுமே எடுத்து வருகின்றனர். எனது வேண்டுகோள் இன்றுவரை நீடிக்கிறது. எமது மக்களை பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்க வைப்பது மட்டுமன்றி, அரசியலில் எதுவித அக்கறையுமின்றி தாமுண்டு தமது வேலை உண்டு என ஒதுங்கி வாழும் அப்பாவி சிங்கள கிராமவாசிகளை விடுதலைப் புலிகள் மீண்டும் படுகொலை செய்வது வருத்தத்துக்குரியதாகும். எமது மக்கள் அதாவது இலங்கை மக்கள் போதியளவு துன்பப்பட்டும், பெருமளவு இழந்தும் தொடர்ந்து நிரந்தர பயத்துடனும், பதற்றத்துடனும் வாழ்கின்றார்கள். இவற்றிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்.

சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் பணி தொடருமெனவும் 13வது திருத்தச்சட்டம் ஒரு தற்காலிக ஏற்பாடு எனவும் மேதகு ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். தமிழ் மக்களுடைய அபிலாசைகளை தீர்க்கக்கூடிய வகையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் அதே உற்சாகத்தோடு செயற்பட்டு நல்ல தீர்வை காண்பார்கள் என நம்புகிறோம். சமாதானத்தையும் அமைதியையும் காண ஜனாதிபதி எடுக்கும் முயற்சிக்கு எமது பூரண ஆதரவு உண்டு.

நன்றி

வீ. ஆனந்தசங்கரி

தலைவர்- த.வி.கூ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இடைக்கால அறிக்கை கையளிப்பு நிகழ்வில் - வீ. ஆனந்தசங்கரி

மேதகு ஜனாதிபதி, கௌரவ அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நன்றி

வீ. ஆனந்தசங்கரி

தலைவர்- .வி.கூ ( தமிழர் விசர் கூட்டம்)

இடைக்கால அறிக்கை கையளிப்பு நிகழ்வில் - வீ. ஆனந்தசங்கரி

மேதகு ஜனாதிபதி, கௌரவ அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நன்றி

வீ. ஆனந்தசங்கரி

தலைவர்- .வி.கூ ( தமிழர் விசர் கூட்டம்)

வெற்று வேட்டு என்கிறீர்கள் :lol::(:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதை ஆரம்பித்து வைத்தவனே நீதானேயடா

விசர் ஆனந்தா???

நாடு பிரியும் என்று அச்சப்படுவோருக்கு அவர்களின் அச்சத்தை போக்குவோம். நாட்டுப் பிரிவினை எண்ணத்தை எமது மக்கள் சிந்தனையில் இருந்து நீக்கி ஐக்கிய இலங்கை கொள்கையை வலுவாக ஆதரிக்க வைப்போம். இதை நாம் அடைய நாட்டின் ஒரு பகுதியினர் பெரியவர்கள் என்றோ சிறியவர்கள் என்றோ முன்னிலைபடுத்தாது அரசும் ஊடகங்களும் அத்தகைய எண்ணத்தை வளரவிடாது தடுத்தல் வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.