Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னியில் நவம் அறிவுக்கூட வளர்ச்சிக்காக " இராவணேசன்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

seranmb7.jpg

நவம் அறிவுக்கூடம் பற்றி முன்பு யாழில், உறவுகள் பதிந்த கருத்துக்களில் சில

வசிசுதா -

இங்கு போராட்டத்தில் எதிரியுடன் சமர் புரிந்து உடம்பில்

ஏதோ ஒரு அங்கத்தை இழந்த பெண் ஆண் போராளிகள்

உள்ளனர். இவர்கள் இங்கு படித்தும் வேறு சில

சுயதொழில்களும் செய்து போராட்டத்திற்கு தங்களால்

முடிந்த அளவு செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

பிறேம் -

நவம் அறிவுக்கூடமானது, லெப். கேணல் நவம் அவர்களின் ஞாபகார்த்தமாக தலைவர் அவர்களினால் போரிலே உடல் உறுப்புக்கள் பாதிப்படைந்த போராளிகளைப் பேணிப் பாதுகாப்பதற்காகவும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் உருவாகிய ஒன்று. லெப். கேணல். நவம் அண்ணா அவர்கள் போராட்டத்திலே தனது ஒரு கரத்தினை இழந்தவர்.

இந் நவம் அறிவுக்கூடம் நிலையத்திலே இருக்கும் போராளிகள் எமது தமிழீழ விடிவிற்கான போராட்டத்திலே பங்களித்து தம் அங்கங்களை இழந்தும் அல்லது முழுமையாக அங்கங்கள் செயற்படாது இருப்பினும் இன்னும் தாயகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் எனும் துடிப்புடன் இருக்கிறார்கள்.

வல்வை சகாரா -

நவம் அறிவுக்கூடம் போரில் காயமுற்று அங்கங்கள் பாதிக்கப்பட்ட போராளிகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது.

அங்கு அவர்களுக்கு கலைகள்இ தொழில்நுட்பம்இ ஆங்கில மொழிப்பயிற்சி

அத்தோடு விளையாட்டுகள் எனப் பலதரப்பட்ட

கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

இருகண்களை எதிரியின் துப்பாக்கிக்குண்டுக்கு இரையாகக் கொடுத்த

அன்புக்கரசன் என்னும் கவிஞன் அகக்கண்களால் உலகைப் பார்த்து கவிதை படைக்கிறான்.

அதேபோல் ஒருபெண்

போராளி பரதக்கலையில் சாதனை படைப்பது மட்டுமல்லாது

மற்றைய போராளிகளுக்கு அக்கலையைப் புகட்டும் குருவாக இருக்கிறார்.

முள்ளந்தண்டு மடிந்த ஒரு போராளி கணனியைக் கரைத்துக் குடித்திருப்பதோடு நின்றுவிடாமல்

தன்னம்பிக்கையோடு எங்களை வரவேற்று பிரமிக்கவைத்தார்.

உயிரோட்டமுள்ள ஓவியங்களைப் படைக்கிறார்கள். சிறந்த

இசைக்கலைஞர்கள் உருவாகியிருக்கிறார்கள்.

கந்தகக் குதறல்கள் எம் சிந்தைகளை என் செய்யும்? என்று

நிமிரும் வண்ணம் அங்கிருக்கும் போராளிகள் துணிவுடன் எதிர்காலத்தை நோக்கி நகர்கிறார்கள்.

தமிழீழத்தின் அரச கட்டுமானத்தில்

இந்த நவம் அறிவுக்கூடம் பெரும்பங்கு வகிக்கும்.

இங்கு பாதிக்கப்பட்ட போராளிகள் ஒளியுூட்டும் தாரகைகளாகச் செதுக்கப்படுகிறார்கள்.

ltnavamri0ha6.gif

இராணுவப் பரிசோதனை ஒன்றின்போது கையை இழந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான் ஒரு போராளி. வருவோர் போவோர் எல்லாம் அவனுக்கு ஆறுதலும், அனுதாபமும் தெரிவிக்கின்றனர். அது அவனுக்கு சினத்தை மூட்டுகின்றது. இறுதியாக அவனது தாய் வருகின்றாள். நீ போராடியது போதும். இனி உனக்கு ஒரு கையில்லை. வீட்டிலேயே இரு பாசத்தின் மேலீட்டால் இப்படியொரு கோரிக்கை விடுகின்றாள் தாய். அது அவனது மனக்கொதிப்பை அதிகரிக்கின்றது. தனக்கு அனுதாபம் கூறவந்தவர்களுக்கு சொல்ல வேண்டியதைச் சொல்ல இதுதான் தருணம் எனத் தீர்மானிக்கின்றான்.

எனக்கு இன்னொரு கை இருக்கு. உறுதியுடன் தெளிவாக ஒலிக்கின்றது அவனது வார்த்தைகள். அவனுக்கு ஆறுதல் கூற முனைந்தவர்களும் தனது நிலையை எண்ணி நாணுகின்றனர். கால் இழந்த போராளிகளுக்கு கிட்டு எப்படி நம்பிக்கை நட்சத்திரமாக, வழிகாட்டியாக திகழ்கின்றாரோ அதே போலத்தான் போராட்டத்தில் தமது கரங்களை இழந்த போராளிகளுக்கு வழிகாட்டியாக விளங்குகின்றான் அவன். அவன்தான் டடி.

டடி-நவம் வன்னிக் காடுகளின் மூலை முடுக்குகள் எல்லாம் இவனுக்கு அத்துப்படி. இக்காடுகள் பற்றிய படம் இவன் நெஞ்சில் நிறைந்திருக்கும். இவன் பிறந்தது மலைப்பிரதேசத்தில். போராடியது வன்னிக் களங்களில். வன்னியை நேசித்ததாலும் வன்னிக்களத்திலே காயமுற்ற இவனது உயிர் பிரிந்தது தமிழகத்தில்.

பசீலனையும், லோறன்சையும் சேர்த்தால் அதுதான் நவம். இவனுடன் நெருங்கிப் பழகிய ஒரு போராளி கூறிய வார்த்தைகள் இவை. ஒவ்வொரு போராளிக்கும் தனித்துவமான சில ஆற்றல்கள் இருக்கும். துணிச்சலுக்கும் பெயர் போனவன் பசீலன். சிறந்த மதிநுட்பத்திற்குப் பெயர் போனவன் லோறன்ஸ். இருவரது தன்மைகளையும் ஒருவரிடத்தில் கண்டதால் தான் நவத்தைப்பற்றி அப்போராளி இவ்வாறு குறிப்பிட்டான்.

அதிதியாக வந்தோரால் அகதியாக ஆக்கப்பட்டதுதான் மணலாற்று மக்களின் வரலாறு. இன்றோ தமது சொந்த நிலத்தை தாமே பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுடன் நிற்கிறார்கள் மணலாறு மக்கள். வரலாற்றில் இந்நிலையை ஏற்படுத்தியதில் கணிசமான பங்காளிகள் நவமும் அவனது தந்தையுமே. எப்போதும் துப்பாக்கியுடன் காணப்படும் ஓமர்முக்தார் என்று போராளிகளால் அழைக்கப்படும் இவனது தந்தையும் இவனும் இந்த மண்ணை விட்டு நாம் எங்கும் போவதற்கில்லை என்ற செய்தியை சிறீலங்கா அரசிற்கு அடிக்கடி உணர்த்தினார்கள்.

அரசன் ஒருவன் தான் கைப்பற்றும் பிரதேசங்களைத் தன் ஆட்சியின் கீழ் வைத்திருப்பதற்கு அவனுக்கு உதவுவது அங்கு அவன் விட்டுச் செல்லும் அவனது இராணுவமுகாம்கள் அல்ல. இதைவிட அவன் தனது பிரதேசத்து மக்களை அங்கு குடியேற்றுவதன் மூலம் சிறப்பாகச் செய்யலாம். காரணம் அங்கு குடியேறும் மக்கள் அங்கு நிரந்தரமாக வசிக்கப்போகிறவர்களாதலால் எவ வித இடர்களையும் எதிர்கொள்ளவும், அவ்விடங்களைத் தமதாக்கிப் போராடுவதற்கும் தயாராக இருப்பர். இது இளவரசன் என்னும் நூலில் காணப்படும் மாக்கிய வல்லியின் கூற்று. இதை அப்படியே நடைமுறைப்படுத்தியதால் தான் இன்று அம்பாறை என்றொரு தொகுதியே முழுச்சிங்களத் தொகுதி என்றாகிவிட்டது. இதையே படிப்படியாக திருமலை, மணலாறு என விஸ்தரித்து வருகின்றது சிறீலங்கா அரசு. ஆனால் இது தமிழீழமண் என்று எல்லை போட்டுக்காட்டியது நவத்தின் துப்பாக்கி. குடியேற்றக்காரர்கள் என்பது ஆக்கிரமிப்பு இராணுவத்தின் ஒரு வடிவமே என்பதை இவன் உணர்ந்து அதற்கேற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டபடியால் இன்னொரு ஒதியமலை வரலாறு மீண்டும் நிகழாது தடுக்கப்பட்டது.

நெருக்கடி மிகுந்த காலகட்டங்களான, எங்கும் இந்திய இராணுவமணம் வீசிய அந்த நாட்களில் இயக்கத்தையும், இயக்கத் தலைமையையும் பாதுகாக்க இவன் மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையையும் பற்றி இவனுடன் பழகிய ஒவ்வொரு போராளியும் கண்கள் பனிக்க கதைகதையாகக் கூறுகின்றனர். சூழலுக்கேற்ற மாதிரியும், மக்களுக்கேற்ற மாதிரியும் அமைந்த இவனது ஒவ்வொரு செயலும் போராட்டம் பற்றிய தெளிவை புதிதாகப் போராட்டத்தில் இணைந்துகொள்ளும் இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் ஊட்டியது. நெருக்கடியான காலகட்டத்தில் பதட்டப்படாமல் செயற்படும் துணிவை சகபோராளிகளுக்கு ஊட்டினான். காட்டில் நவம் நிற்கும் பகுதி ஒரு பாதுகாப்பு வலயம் என்றே கூறலாம். அந்தளவுக்குச் சிறந்த முறையில் ஒரு ஒழுங்கமைப்பை உருவாக்கியவன் அவன்.

ஒற்றைக்கையால் இவன் செய்யும் வேலைகளைப் பார்த்த ஒவ்வொருவருக்கும், இவனால் இது முடியுமானால் என்னால் ஏன் முடியாது என்ற தன்னம்பிக்கையை ஊட்டியது. அவ்வாறு உருவான போராளிகள்தான் இன்று வன்னி மண்ணைக் காத்து நிற்கின்றனர்.

கணக்கற்ற களங்களைக்கண்ட இவனை நாம் இழந்தது உண்மைதான். ஆனால் இவனால் ஊட்டப்பட்ட ஒழுங்கமைப்பு, போராட்ட உணர்வு எதையும் மணலாறு மண் மறந்துவிடவில்லை. அவ்வப்போது மணலாறு பிரதேசத்தில் எதிரியிடமிருந்து இவனால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் திரியும் போராளிகளும், ஊர்காவல் படையும் சொல்லும் செய்தி.

- எரிமலை

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சேரனின் இராவணேசன் - நாட்டிய நாடகம்

'இன்றுபோய் நாளை வா' என்று, போர்க்களத்திலே இராவணனைப் பார்த்து இராமன் கூறியதும், மாவீரன் இராவணன், 'வீரமும் களத்தே போட்டு

வெறுங்கையோடு இலங்கை புக்கான்', என்பதும், மறுநாள் போரிலே அந்த மாவீரன் சாவைத் தழுவியதும், கம்பரைக் கற்றோர் அறிந்த கதை. காலம் காலமாக இராமனை நல்லவனாகவும் இராவணனைத் தீயவனாகவும் இராமகாதைகள் காட்டி நிற்கின்றன.

இன்றைய காலகட்டத்தின் தேவை கருதி இதிகாச, புராணப் பாத்திரங்களைப்பற்றி, புதிய பார்வை, புதிய சிந்தனை ஏற்பட்டுவருவதைப் பார்க்க முடிகிறது. சமீபத்தில் இளைய பத்மநாதனின் அண்ணாவியத்தில் 'பரதம் விரவிய கூத்து' வடிவிலே கர்ணன் கதை அரங்கேறியபோது, இந்தப் புதிய சிந்தனையை உணரமுடிந்தது. கர்ணனின் கதையை இன்றைய அரசியலோடு இiணைத்து, இளைய பத்மநாதன் அரங்காக்கியது, உருவத்தாலும் உள்ளடக்கத்தாலும் தமிழ்த் தேசிய அரங்கத் தேடலுக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்தது.

இராவணன் சிறந்ததோர் வீரன், கைலை மலையையே அசைத்த பராக்கிரமசாலி, கல்விகேள்விகளிலே சிறந்தவன், இசைக்கலைஞன், வீணையை இசைத்துப் புகழ்பெற்றவன், சிவபக்தன். மேலும், தசமுகன் என்னும் போது, அவன் பத்துத் தலைகளோடு கூடிய அரக்கன் அல்லன், ஒரே நேரத்தில் பத்து விடயங்களைச் செய்யும் ஆற்றல் படைத்தவன், தசாவதானி. அவன் வாழ்வில் செய்த தவறு, பிறர்மனையைக் கவர்ந்து சிறைவைத்தது, ஆனாலும், முறைதவறி நடக்க முற்படவில்லை. இதனால் அவன்மீது மதிப்பே ஏற்படுகிறது. விமர்சனத்திற்கும் அப்பால் உயர்ந்து நிற்கிறான்.

இவ்வாறாக இராவணனைப் போற்றும் வகையில் 'இராவணேசன்', மட்டக்களப்பு வடமோடிக் கூத்தாக, பேராசிரியர் மௌனகுரு அவர்களின் ஆட்டத்திலும் ஆக்கத்திலும் பிரபலமடைந்தது. முன்னம், ஆர். எஸ். மனோகர் அவர்களின் 'இலங்கேஸ்வரன்' என்னும் நாடகமும் இரவணனின் புகழ் பாடியது.

இந்த வகையிலே சேரன் சிறீபாலன், சிட்னியிலுள்ள ர்ருசுவுளுஏஐடுடுநு ஊஐஏஐஊ ஊநுNவுசுநு ல், அக்டோபர் 25ம் நாள் இராவணனை ஒரு வீர புருஷனாக பரதநாட்டியத்தில் அரங்கேற்றியது பெரும் வரவேற்பைப் பெற்றது.

தாயகத்திலுள்ள நவம் அறிவுக் கூடத்தின் பணிகளுக்கு உதவும் வகையில், சென்ற இரண்டு வருடங்களாக சேரன் தனது தனி ஆடல் மூலம் நிதி சேகரித்து உதவியுள்ளார். போரிலே பாதிக்கப்பட்டு அங்கங்களை இழந்த போராளிகளுக்கு கணனி, இலக்கியம், வரலாறு, இசை போன்ற கற்கை நெறிகளை நவம் அறிவுக் கூடம் வழங்கிப் பெரும் தொண்டாற்றி வருகிறது.

அங்கவீனனாகியும் உறுதியை இழக்காத நவம் என்னும் மாவீரனின் பெயரால் நடைபெறும் இக்கல்விக் கூடம் போராளிகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வருவதாக அங்கு நேரிலே சென்று பணியாற்றிய பல்வைத்திய கலாநிதி வாசுகி டெலிலோ தனது உருக்கமான பேச்சின் மூலம் விளக்கினார். அதனைத் தொடர்ந்து நவம் அறிவுக் கூடத்தைப் பற்றிய ஒரு விவரணப் படமும் திரையிடப்பட்டது. அங்கங்களை இழந்தபோதும் அவர்களின் தன்னம்பிக்கை சிலிர்ப்படைய வைத்தது. சேரன் தனது நடன நிகழ்வு மூலம் இந்த வருடமும் நிதி சேகரித்து இந்த நல்ல பணிக்குக் கையளித்துச் சாதனை புரிந்துள்ளார்.

'இராமனின் புகழ் வழும்வரை இராவணனின் புகழும் வாழும்'

என்பதற்கிணங்க நிகழ்ச்சியின் முற்பகுதி இராமனையும், பிற்பகுதி இராவணனையும் முதன்மைப்படுத்தி அமைக்கப்பட்டிருந்தன. நடனக் கலைஞர் ஆனந்தவல்லி அவர்கள் குத்துவிளக்கேற்றி நகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.

பத்ராசல ராமதாஸர், துளசிதாஸர், ஆகியோரின் இராமர் புகழ்பாடும் பஜனைப் பாடல்களுக்கு நடனம் ஆடியது புதுமையாக இருந்தது. தனஞ்ஜயன் தம்பதியினரின் மாணவனான சேரனும், கலஷேத்ரா மற்றும் சி. வி. சந்திரசேகரனின் மாணவனான ரஞ்ஜித் சூரகட் என்னும் நடனக் கலைஞனும் இணைந்து இராமாயணக் காட்சிகள் சிலவற்றை நடனத்தில் அமைத்து ஆடியது அழகாக அமைந்திருந்தது. இராமர் விஸ்வாமித்திரரின் யாகத்தைக் காவல் புரிவது, குகனைச் சந்திப்பது, சபரி மோட்ஷம் ஆகியவற்றை நடனத்தில் கொண்டுவந்தனர்.

இதன் நிறைவாக நிருத்திய அங்ககாரம் என்னும் நடன அமைப்பிலே, ஆனந்தவல்லியின் லிங்காலயம் மாணவி அபிராமி சிறீகாந்தாவும், சேரனின் ரஸனா கவின்கலைக் கல்லூரி மாணவி லாவணியா தேவராஜானும் சேரன், ரஞ்ஜித் ஆகியோருடன் இணைந்து அழகிய நடனக் கோர்வைகளையும் நிருத்த நிலைகளையம் கொண்ட விறுவிறுப்பான நிருத்தத்தில் சிறந்ததொரு நடனத்தை வழங்கியது கண்ணுக்கு விருந்தாக அமைந்திருந்தது.

தொடர்ந்தது நிகழ்வின் இரண்டாம் பகுதி - 'இராவணேசன்'. சேரன்: இராவணனாகவும், ரஞ்ஜித்: இராமன், சிவன், அங்கதனாகவும், அபிராமி: மண்டோதரி, சூர்ப்பனகை, சீதையாகவும், லாவணியா: பார்வதி, மாயமான், சகியாகவும் முறையே பாத்திரங்களை ஏற்று ஆடினார்கள்.

ரஞ்ஜித் கதை சொல்லியாகத் தோன்றியதுமே நிகழ்ச்சி களைகட்டத் தொடங்கிவிட்டது. திறந்த வெளியரங்கில் மக்கள் கூடியிருந்து விடிய விடிய நாடகம் பார்த்த காலத்திற்குப் பார்வையாளர்களை அழைத்துச் சென்றுவிட்டார். திரையை நீக்கி எட்டிப் பார்ப்பது, சபையோரைப் பார்த்த திருப்தியுடன் தலையசைப்பது எனப் பலவிதமான அபிநயங்கள் மூலமும், தனது நடிப்பாற்றல் மூலமும், தனது தனித் திறமையை வெளிக்காட்டினார்.

தென் திசை பார்க்கின்றேன் என் சொல்வேன் என்றன்

சிந்தை யெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்குதடா

அன்றந்த லங்கையினை ஆண்ட மறத் தமிழன்

ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்

குன்றெடுக்கும் பெருந் தோளான் கொடை கொடுக்கும் கையான்

குள்ளநரிச் செயல் செய்யும ;கூட்டத்தின் கூற்றம்

என் தமிழர் மூதாதை என் தமிழர் பெருமான்

இராவணன் காண் அவன் நாமம் இவ்வுலகம் அறியும்

எனப் பாரதிதாசனின் உணர்ச்சிமிக்க கவிதையை லாவண்யா விதூஷன் இசைக்க, இராவணனின் வருகை கம்பீரமாக அமைந்தது. சிவபக்தன் இராவணன் கைலைமலையை அசைப்பதும், அவன் தருக்கை அடக்கிய சிவன். அவன் இசையில் உருகுவதும் தொடர்ந்தது. சேரனும் ரஞ்ஜித்தும் முறையே இராவணனாகவும் சிவனாகவும் ஆடியபோது இரு சிறந்த கலைஞர்களும் இணைந்து மிளிர்ந்தனர். சேரனின் அடக்கமான ஆட்டமும், ரஞ்சித்தின் தாண்டவமும் பொருத்தமாக அமைந்தன.

காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி

வானாகி எங்கும் விரிந்தாய் போற்றி

நீராகி எங்கும் பரந்தாய் போற்றி

தீயாகி எங்கும் ஒளிர்ந்தாய் போற்றி

மண்ணாகி எங்கும் சுழன்றாய் போற்றி

கைலை மலையானே போற்றி போற்றி

என இராவணனின் சிவ துதியைத் தொடர்ந்துவந்த ஞானசம்மத்தப் பெருமானின் கோணமாமலைப் பதிகம் தாயக வரலாற்றுத் தடங்களைக் காட்டியது.

நிரைகழல் அரவஞ் சிலம்பொலி யலம்பும்

நிமலர்நீ றணிதிரு மேனி

வரைகெழு மகளோர் பாகமாய்ப் புணர்ந்த

வடிவினர் கொடியணி விடையர்

கரைகெழு சந்துங் காரகிற் பிளவும்

அளப்பருங் கனமணி வரன்றிக்

குரைகடல் ஓதம் நித்திலங் கொழிக்குங்

கோணமா மலையமர்ந் தாரே

என்னும் தேவாரத்தில் பக்திரசம் மேலோங்கியது. வீரம், பக்தி ஆகிய ரசானுபவங்களைத் தொடர்ந்து வந்தது சிருங்காரம். இராவணனும் மண்டோதரியும் வாசமிகு மலரச்சோலையில் வட்டமிடும் வண்டுகளின் ரீங்கார இசையில் தம்மை மறந்து காதல் கொள்வதை, புலவர் குழந்தையின் இராவண காவியப் பாடலில் பார்த்தோம். வீரன் ஒருவனை மனதார விரும்பும் அழகியதொரு பெண்ணையும், அந்தக் காதலை முழுமையாக ஏற்கும் ஒரு வீரனையும் பார்க்கிறோம். அபிராமி சிறீகாந்தா நாணம், காதல், வியப்பு ஆகிய உணர்வுகளை அழகாகத் தனது நடனத்தில் கொண்டுவந்தார்.

திருமணத்தைத் தொடர்ந்து வரும் நல்லாட்சியில் சூர்ப்பனகை வடிவில் விதி புகுந்து விளையாடுவதைப் பார்க்கிறோம். இராமலக்குவர் சூர்ப்பனகையை அவமானப்படுத்துவதும், அவள் அண்ணனிடம் முறையிடுவதும், அவன் சீதையைக் கவருவதும் என்று துயரங்கள் போர்க்களம் வரை தொடர்கின்றன. கிரேக்க நாடகங்களிலே வரும் துன்பியல் கதாபாத்திரங்களுடன் இராவணனின் கதையையும் ஒப்பக் காணலாம்.

விதி யாரை விட்டது. 'சீதையை விடு அல்லது இராமனின் கையால் கெடு' என்ற செய்தியோடு அங்கதன் இராமதூதனாக வருகிறான். வாலியின் மகன் அங்கதன் கூற்றுக்கு,

அப்பனைக் கொன்றவனோடு

எப்படிநீ கூடினாயோ - அட தம்பி

நானவனைக் கொல்லுகிறேன் நீ

எனக்குத் துணைவாடா தம்பி

என்ற, 'இராவணேசன்' கூத்துப் பாடல் வரிகளை இராவணனின் பதிலில் கேட்கிறோம். சீதையை விடுவதல்ல இராவணனின் பிரச்சனை, எதிரிமுன் பணிவதா என்பதே. தான் தோற்பது உறுதி என்று தெரிந்தும் போருக்குச் செல்லும் சுத்த வீரனைக் காண்கிறோம். வந்தபகையை விட்டானில்லை.

போர்க்களக் காட்சியில் ரஞ்ஜித்தும் சேரனும் ஒருவருக் கொருவர் சளைக்காது, அம்பு, வில், ஈட்டி, வாள், சிலம்பம், என்பவற்றோடு போரிடுகையில், ரஞ்ஜித்தின் 'களரிப்பயிற்று' ஆற்றல், நடன அமைப்புக்குப் புதிய அசைவுகளைத் தந்து பிரமிக்கவைக்கிறது. ஆனாலும், ஆயுதங்களைக் கையாளாது, பரதத்திற்கே உரிய முத்திரைகளுக்கூடாக ஆயுதங்களை உருவப்படுத்தி இருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. போராட்டம் இன்னும் பரதத்தின்பாற் பட்டிருக்கும்.

போர்க்களத்திலே எல்லாவற்றையும் இழந்து நிற்கும் இராவணனைப் பார்த்து இராமன், 'இன்று போய் நாளை வா' என்பதும், அவன் தளர்ந்து ஏகுவதும், துன்பியல் தலைவனின் பெரும் வீழ்ச்சியைக் காட்டிநிற்கின்றன.

வாரணம் பொருத மார்பும்

வரையினை எடுத்த தோளும்

நாரத முனிவர்க் கேற்ப

நயம்பட உரைத்த நாவும்

தாரணி மௌலி பத்தும்

சங்கரன் கொடுத்த வாளும்

விரமும் களத்தே போட்டு

வெறுங்கையோடு இலங்கை புக்கான்

என்ற, கம்பனின் வரிகள், பின்னணியில் இராவணனின் வீழ்ச்சியை எடுத்தியம்பின.

அழிவது உறுதி என்று

அறிந்துமே இராவணன்

இறுதி மூச்சிருக்கு மட்டும்

உறுதியைக் கைவிட்டானில்லை

வீரத்திற்காக வீழ்ந்தான்

விரத்தின் சின்னமானான்

என்று, 'இராவணேசன்' கூத்துப் பாடல் சிறிபாலனின் கம்பீரமான குரலில் ஒலிக்க, மாவீரன் கதை முடிகிறது.

மண்டோதரியின் சோகத்தை அபிராமி தனது பாவத்திலே கொண்டுவந்து தன்னை ஒரு பூரணமான நடனக்கலைஞர் என்பதைக் காட்டிவிட்டார். பாவமும் நிருத்தமும் இவரில் நிறைந்திருக்கின்றன.

'இராவணன் மேலது நீறு' என்று சம்மத்தப் பெருமான், சிவபக்தன் இராவணனுக்குப் பெருமை சேர்த்தார். சேரனின் நெற்றியில் நாமக் குறி இராவணனுக்குப் பொருந்தாது. இராவண மீசை எங்கே என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஒப்பனையில் மேலும் கவனம் எடுத்திருந்தால், சேரனின் ஆளுமை மேலோங்கியிருக்கும். சேரன் ஓர் அருமையான நடனக் கலைஞன்.

ரஞ்ஜித் இராமனாக, அங்கதனாகப் பல பாத்திரங்களால் பல முகங்களைக் காட்டிவிட்டார். குகனாக ஓடத்தை வலித்தபோது தண்ணீரிலே ஓடம் சென்றதைக் கண்டோம். கதை சொல்லியாக அவருடைய ஒவ்வொரு அசைவும் முகபாவமும் இந்த நாட்டிய நாடகத்திற்கு மெருகேற்றிவிட்டன. ரஞ்ஜித் ஒரு பூரணமான நடனக் கலைஞன். சிறந்ததோர் எதிர்காலம் இந்த இளம் கலைஞனுக்கு உண்டு.

சேரனின் மாணவி லாவணியா தேவராஜனுக்கு இது ஒரு சவாலான நடன நிகழ்வு. மூன்று பெரும் நர்த்தகர்களுக்கு ஈடுகொடுக்கவேண்டியிருந்தது.

பாட்டும் பக்கவாத்தியங்களும் இணைந்து நிகழ்ச்சிக்கு மேலும் மெருகேற்றின. லாவண்யா விதூஷன், பாரத் மோகன் ஆகியோரின் மிடற்றிசையுடன், கோபதிதாசின் வயலின் இசை, கிறிஷான், செந்தூரன் ஆகியோரின் மிருதங்கம் முதலான தோல் வாத்தியங்கள், லஷ்மி நரேந்திரனின் வீணை இசை என பல்லியம் வெகு பொருத்தம். தமிழிலும் ஆங்கிலத்திலும் காயத்திரியின் பொருத்தமான விளக்கமும், கம்பீரமான நட்டுவாங்கமும், செந்தூரனின் விறுவிறுப்பான சொற்கட்டும் நிகழ்ச்சிக்கு முழுமை சேர்த்தன. அவர்கள் அனுபவம் மிக்கவர்கள். ஒவ்வொருவரும் தமது திறமையைக் காட்டினார்கள்.

சிட்னி இரசிகர்களுக்கு இராவணேசன் கண்ணுக்கும், காதுக்கும், கருத்துக்கும் நல்ல விருந்து. நடன நிகழ்வு சிறப்பாக அமைந்ததோடு, நல்லதொரு நோக்கக்கத்திற்காகவும் அமைந்ததென்பது திருப்தியைத் தருகிறது. சேரன் போன்ற இளையோர் சமூக நோக்குடன் பல படைப்புகளை வழங்கிவருவது நிறைவைத் தருகிறது.

-பராசக்தி சுந்தரலிங்கம்

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

imgp8060filteredie0.jpg

imgp8955filteredxc1.jpg

imgp8025filteredll0.jpg

imgp8275filteredey6.jpg

seran6ll7.jpg

imgp8324filteredpu5.jpg

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

seran3bg8.jpg

seran3lr8.jpg

seran4qu6.jpg

seran1zl3.jpg

seran5bn9.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தனின் விமர்சனத்தைப் பார்வையிட

http://www.yarl.com/forum3/index.php?showtopic=46316

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.