Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவசரமாக பிரபாகரன் அழைத்தார்: சத்தியசீலன் (தமிழ் மாணவர் பேரவை ஸ்தாபகர்)

Featured Replies

அவசரமாக பிரபாகரன் அழைத்தார்: சத்தியசீலன் (தமிழ் மாணவர் பேரவை ஸ்தாபகர்)

தமிழீழ ஆயுதப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளி,சத்தியசீலன். விடுதலைப்புலிகள் உட்பட அனைத்து ஈழ விடுதலை ஆயுதப் போராட்ட இயக்கங்களுக்கும் தாய் அமைப்பான `தமிழ் மாணவர் பேரவை'யைத் தொடங்கி, பிரபாகரன் தலைமுறை இளைஞர்களை ஆயுதப் போராட்டத்துக்கு அழைத்து வந்தவர். சென்றவாரம் கனடாவுக்கு வந்திருந்த சத்தியசீலனைச் சந்தித்தோம்.

"தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், முதல் சயனைட் தற்கொலைப் போராளியான பொன்.சிவகுமாரனின் உரும்பராய் கிராமத்தைச் சேர்ந்தவன் நான். எங்களுக்கு வெகுகாலத்துக்கு முன்பே ஈழ விடுதலைப் போராட்டம் தொடங்கிவிட்டது. ஆனால், எல்லாமே தோல்வியில் முடிந்தன. சொற்ப உரிமைகள் தருவதாக வாக்குறுதி அளித்த சிங்கள அரசுகள், பின்னர் அந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இந்த நிலைமையில், இனி சாத்வீக வழிகளில் தமிழர் உரிமைப் போராட்டம் தொடரமுடியாது என்று நான் முடிவு செய்தேன். இனவாத சிங்கள அரசுக்குப் புரிந்த மொழி ஆயுதம்தான் என உணர்ந்தேன்.

சிவகுமாரனும் இதே எண்ணங்களுடன் இருந்தார். நான் யாழ்ப்பாணம் வருகையில், சிவகுமாரன் சிறிது காலம் மறியலில் இருந்துவிட்டு அப்போதுதான் வெளியே வருகின்றார். அவருடைய வீடும் என்னுடைய வீடும் அருகாமையில் இருந்தன. அதனால் இருவரும் எளிதாக இணைந்து செயல்பட முடிந்தது. தமிழரசுக் கட்சிப் பாரம்பரியத்தில் இருந்த சாத்வீக அணுகுமுறையை ஆயுதப் போராட்டத்தை நோக்கி திசை திருப்பியது நாங்கள்தான். பருத்தித்துறை தொடக்கம் திருக்கோயில் வரை இனவாத அரசின் கொடுமையால் குமுறிக் கொண்டிந்த தமிழர்களை நாங்கள் ஒன்றிணைத்தோம். அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டும் என்ற வேட்கையுடன் இருந்த மாணவர்களை ஒருங்கிணைத்து `தமிழ் மாணவர் பேரவை'யைத் தொடங்கினேன்.

அதன்பிறகு, தமிழ் மாணவர் பேரவையின் கருத்துக்களைச் சொல்வதற்கு பல்வேறு ஊர்களுக்குச் சென்றோம். விடுதலை உணர்வுமிக்க வல்வெட்டித்துறைக்கும் சென்றோம். அப்போது அங்கே நடந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த பிரபாகரனையும் வேறு சிலரையும், அவர்கள் மிகவும் சிறுவர்களாக இருந்ததால் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் உள்ளே விடவில்லை. ஆனாலும், உடனே திரும்பிப் போகாமல் அவர்கள் வாசலில் நின்று தர்க்கம் செய்தார்கள். நான், என்ன பிரச்னை என்று வெளியில் சென்று பார்த்தேன். அந்தச் சிறுவர்களின் ஆர்வத்தைக் கண்டு, "உள்ளே விடலாமே'' என்று வாசலில் இருந்தவரிடம் சொன்னேன். அவர், பிரபாகரனுக்கு அண்ணன் முறையானவர்.

``பிரபாகரன் வீட்டில் இம்மாதிரி நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்'' என்றார். வல்வெட்டித்துறைக் கூட்டம் நடந்து, மூன்று தினங்களுக்குப் பிறகு பிரபாகரன் என்னைத் தேடி வீட்டுக்கு வந்தார். அவரது வயதுக்கு மீறிய அறிவுடன், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் பற்றிக் கதைக்கத் தொடங்கினார். 1970-ல் தன் வீட்டைவிட்டு வெளியேறிய பிரபாகரன் சிறிதுகாலம் என்னுடனேயே தங்கியிருந்தார்.

தமிழ் மாணவர் பேரவையின் தொடக்கக் கூட்டம் நடைபெற்ற போது பிரபாகரன், தங்கத்துரை, குட்டிமணி, சிவகுமாரன், பரந்தன் ராஜன், திசைவீர சிங்கம் போன்ற ஈழப்போராட்டத்தின் முக்கியப் புள்ளிகள் பலரும் தமிழ் மாணவர் பேரவையில் இணைந்து கொண்டார்கள். "என்னை இந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு அழைத்து வந்தவர்கள் சத்தி அண்ணாவும் சிவகுமாரனுமே'' என்று பிரபாகரன் பலமுறை நேர்காணல்களில் இதுபற்றி குறிப்பிட்டுள்ளார்.

ஈழ ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவு தேடி கடல்வழியாக 1971-ம் ஆண்டு

நான் தமிழ்நாட்டுக்குச் சென்றேன். அந்தப் பயணத்தில் பெரியாரையும் ஜி.டி.நாயுடுவையும் சந்தித்தேன்.

பெரியார், நேரடியாக தமிழர் உரிமைக்கான போராட்டத்தை ஆதரித்தவர். "பெரிய டாங்கி போன்ற வற்றைக் கொண்டு வந்து உங்களை அவர்கள் அழிக்க முற்பட்டால் என்ன செய்வீர்கள்'' என்று என்னைக் கேட்டார். "அதற்குத்தான் உரிய வழியாக பதிலுக்கு நாங்களும் ஆயுதத்தை தூக்கும் நிலையைக் கைக்கொண்டிருக்கிறோம்'' என்றேன். "அப்படியென்றால் உங்கள் வசதிப்படி செய்யுங்கப்பா'' என்றார் பெரியார்.

ஜி.டி.நாயுடுவைச் சந்தித்த போது, "நான் உங்களுக்கு உதவவேண்டும் என்று நினைக்கிறேன். என்னால் எந்த வகையில் உதவமுடியும் என்று நீங்களே சொல்லுங்கள்?'' என்று கேட்டார். நான், "தொலைத்தொடர்புக் கருவிகளை எங்களுக்குச் செய்து தாருங்கள்'' என்றேன். அவர் இணக்கம் தெரிவித்தார்.

மீண்டும் இலங்கைக்குச் சென்ற பின்னர் 1973-ம் ஆண்டு நான் கைது செய்யப்பட்டேன். நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்தேன். 1977-ல் விடுதலையான போது, ஆயுதப் போராட்டத்தை அடுத்த தலைமுறையினர் கையில் எடுத்து தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் மீது நம்பிக்கை வைத்து, `இனி நான் தமிழீழத்தில்தான் கால்வைப்பேன்' என்ற முடிவுடன் அங்கிருந்து வெளியேறினேன். தமிழ்நாட்டுக்கு வந்து, பின்னர் ஜெர்மனிக்குச் சென்றேன். இன்றுவரை அய்ரோப்பாவில்தான் இருக்கிறேன்.

இந்த இடைப்பட்ட காலங்களில் எவ்வளவோ நடந்துவிட்டது. இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டம் ஒருபோதும் கைவிடப்படாது; அது தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பதில் இன்றும் நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஆனால், இப்போது நாங்கள் எங்கள் வழியைவிட்டு வேறு திசையில் எமது உரிமைக்கான போராட்டத்தைத் தொடரவேண்டும்.

நான் இலங்கையில் இருந்து வெளியேறிவிட்டாலும், பிரபாகரன் என்மீது கடைசிவரை பெரும் மதிப்பும் மரியாதையும் மாறாத பாசமும் வைத்திருந்தார். எப்போதும் என்னுடன் தொடர்பில் இருந்தார். `சத்தி அண்ணா' என்றுதான் என்னை அழைப்பார். சென்ற வருடம் ஏப்ரலில் என்னை வன்னிக்கு வரும்படி ஓர் அவசர அழைப்பை விடுத்தார். என் முடிவை மாற்றி அங்கு செல்ல சம்மதித்தேன். ஆனால், என்னை அழைத்துச் செல்ல வேண்டியவரின் பயணத் தடங்கலால், அது தாமதப்பட்டது. பிரபாகரன் தன்னலமில்லாத நேர்மையான இளைஞர்...''

பெருமூச்சோடு தடைப்படுகிறது சத்தியசீலனின் பேச்சு..

- கனடாவில் இருந்து,செல்வம் அருளானந்தம்.

நன்றி: குமுதம் வார இதழ் (22.7.2009)

Edited by நிழலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.