Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

5வது ஈழப்போராட்டம் நிச்சயம் தொடரும்: ராமதாஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்டம் முடிந்தாகி விட்டது என்றெல்லாம் இந்தியாவும்இ இலங்கையும் சொல்கிறது. ஆனால் இன்னும் ஈழ விடுதலைப்போராட்டம் முடியவில்லை. 5 வது ஈழப் போராட்டம் நிச்சயம் தொடரும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இலங்கையில் முள் வேலி முகாம் களில் உள்ள 3 லட்சம் தமிழர்களை அவர்களுடைய சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்று திருச்சியை நோக்கிய பிரச்சார ஊர்தி பயணம் தொடங்கியது.

சென்னையில் டாக்டர் ராமதாஸ் தலைமையிலும்இ கோவையில் பழ.நெடுமாறன் தலைமையிலும்இ ராமநாதபுரத்தில் வைகோ தலைமையிலும்இ கன்னியாகுமரியில் ஆர்.நல்லக்கண்ணு தலைமையிலும் இன்று தொடங்கிய இந்த பிரச்சார ஊர்தி பயணம் 29 ம் தேதி திருச்சியில் நிறைவடைகிறது.

அங்கு அன்றைய தினம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. சென்னையில் இன்று டாக்டர் ராமதாசை வழியனுப்பும் கூட்டம் பாமக சார்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவதுஇ இலங்கைத் தமிழர்களை ராஜபக்சே கொன்று குவித்த ரத்தத்தின் ஈரம் இன்னும் அங்கு காயவில்லை. இந்த நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் குழு இலங்கைக்கு சென்று ரத்தக்கறை படிந்த ராஜபக்சேவுடன் கைகுலுக்கிஇ சிரித்து பேசிவிட்டு வந்து இருக்கிறார்கள்.

பரஸ்பரம்இ பரிசு பொருட்களை கொடுத்தும்இ வாங்கியும் வந்து இருக்கிறார்கள். எப்படி இவர்களுக்கு இப்படி நடந்து கொள்ள மனம் வந்ததோ தெரியவில்லை. யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரோடு எந்த ஒரு யூதனாவது கைகுலுக்குவானா என்பதை தமிழர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். எங்களுடைய இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் அங்கு சென்று இருந்தால் அவர்கள் ராஜபக்சேவுடன் கைகுலுக்கி விட்டு சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கி இருக்க முடியுமா?

அப்படி அவர்கள் திரும்பி இருந்தால் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் கருணாவோடு சேர்ந்து கொள்ளுங்கள்இ டக்ளஸ் தேவானந்தாவோடு சேர்ந்து கொள்ளுங்கள் அல்லது சிங்களனோடு சேர்ந்து கொள்ளுங்கள் என்று கூறி அவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்பி இருப்போம்.

ஆனால்இ இந்த குழுவுக்கு எப்படி மனம் வந்ததோஇ அங்கே போய் ராஜபக்சேவுடன் கைகுலுக்கி பேசி தேனீரையோஇ எதையோ சாப்பிட்டு விட்டு வந்து இருக்கிறார்கள். இந்த குழுவினர் முதல்வரை சந்தித்து ஒரு அறிக்கை வெளியிட்டனர். டெல்லிக்கு சென்று பிரதமரையும்இ சோனியாவையும் சந்தித்தும் அறிக்கை தந்து இருக்கிறார்கள்.

டெல்லியில் தரப்பட்ட அறிக்கையின் விவரங்கள் என்ன என்பதை இன்னும் அவர்கள் வெளிப்படுத்தவில்லை. அந்த விவரங்களை உடனே வெளியிட வேண்டும். 29 ம் தேதி நாங்கள் திருச்சியில் பொதுக் கூட்டம் நடத்துவதற்குள் இந்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் 68 பக்கம் கொண்ட அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறார்கள். அந்த அறிக்கையில் இலங்கை அதிபர் ராஜபக்சேஇ அவரது சகோதரர்கள் பசில் ராஜபக்சேஇ கோத்தபய ராஜபக்சே மற்றும் ராணுவ தளபதி பொன்சேகா ஆகியோரை போர் குற்றவாளிகள் என்று அறிவித்து இருக்கிறார்கள்.

இது ஒரு நல்ல திருப்பம் இதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமாவை பாராட்ட வேண்டும். காலம் கடந்தேனும் இந்த நிலை எடுத்த அமெரிக்காவை நாம் பாராட்ட வேண்டும். இந்த அறிவிப்போடு நின்று விடாமல் அதே வேகத்தில் ராஜபக்சேவையும்இ அவரது சகோதரர்களையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று ஒபாமாவை கேட்டுக் கொள்கிறோம்.

அப்போது தான் அவர் பெறுகின்ற அமைதிக்கான நோபல் பரிசுக்கு அர்த்தம் உள்ளதாக இருக்கும். விடுதலைப்புலிகளை ஒழித்தாகி விட்டது. ஈழப்போராட்டம் முடிந்தாகி விட்டது என்றெல்லாம் இந்தியாவும்இ இலங்கையும் சொல்கிறது. ஆனால் இன்னும் ஈழ விடுதலைப்போராட்டம் முடியவில்லை. 5 வது ஈழப் போராட்டம் நிச்சயம் தொடரும்.

அது தான் இறுதியான ஈழ விடுதலைப்போராட்டமாக இருக்கும். அதன் முடிவில் நிச்சயம் ஈழ விடுதலை கிடைக்கும். அதற்காகவும்இ முள்வேலி முகாம்களில் அடைப்பட்டு உள்ள 3 லட்சம் தமிழர்களை மீண்டும் அவர்களுடைய வாழ்விடங்களில் குடியமர்த்தும் வலியுறுத்தியே எங்களுடையே இந்த பிரச்சார பயணம் நடைபெறுகிறது.

இதே போல தமிழர் பகுதிகளில் உள்ள சிங்களர்களை வெளியேற்றக் கோரியும் நாங்கள் இந்த பிரச்சார பயணத்தை நடத்துகிறோம் என்றார்.

நெருடல்.கொம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டாக்டர் ஐயா நீங்களும் ஒரு ஸ்ரீலங்கா விசிட் அடச்சுட்டு வாங்க!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.