Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களின் அடுத்த தலைவர் சம்பந்தர் தான்...தளபதிகள் கக்கீமும், மனோகணேசனும் ஏனைய மலையாக தலைவர்களும் தான்...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(வேறு இடத்தில் பதிந்திருந்தேன் எனே இங்கும் பதிய தோன்றியதால் மிளப்பதிந்துள்ளேன்)

தேர்தல் முடிவுகள் சொன்ன, சொல்லவந்த உண்மை...

1 . தமிழர்கள் இன்னும் கொஞ்சம் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து முன்னுக்கு போயிருக்கிறார்கள்...கடந்த மாநகர தேர்தலை விட கூடியளவு வாக்கு பதிவு யாழில்..கூடிய அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில்..குழப்பமான பிரச்சாரங்கள்...குழப்பமான அரசியல் கூட்டணிகளுக்கும் மத்தியில்..

2 . தெளிவான முடிவுகள்...தமிழர் தேசம், கூடுதாலா தமிழரை கொண்ட பிரதேசங்களில் எல்லாம் எதிர்கட்சிகளில் கூட்டமைப்பு வென்றுள்ளது...உண்மையில் எதிர்கட்சிகளின் கூடமைப்பில் உள்ள வெற்றிக்கட்சிகள் தமிழ் கட்சிகளே...UNP , JVP ஒறிடத்தைதானும் வெல்லவில்லை..இதைவிட தமிழரின் ஒற்றுமையை சொல்லமுடியாது...UNP தனது கோட்டையான கொழும்பிலும் தோல்வி..

3 தமிழர் ஒன்றாயிருக்கிறார்கள்...முஸ்லீம், மலையகம், மற்றைய தமிழர்கள் எல்லோரும் ஒன்றாய் இருக்கிறார்கள்...

4 . இந்த ஒற்றுமையை பலப்படுத்த நாங்கள் உதவ வேண்டும்...இந்த நிலை தொடர்ந்தால் ஏப்ரல் அல்லது அதற்கு முந்தய பாராளுமன்ற தேர்தல் தமிழருடையதே/ சிறுபான்மை இன்னங்களுடையதே...

5 . இதை உருவாக்கிய மனோகணேசன், கக்கீம், சம்பந்தன் மற்றும் ஏனையயோரும் வாழ்த்தப்படவேண்டியவர்கள்...வாழ்த்துவோம் நாங்களும்...அவர்களின் ஒற்றுமையை குலைக்க வேண்டாம்...

6 . இறுதியாக சரத் தோத்தது பற்றி... வந்திருந்தால் நல்லம்...ஆனாலும் இன்று வராமல் சொன்ன செய்தி மிகவலியது...எங்களுடன் மலையகத்தையும் இணைத்து தந்துள்ளார்...முக்கியமாக...நன்றாக வேறுபடுத்தி காட்டியுள்ளார் எங்கெல்லாம் தமிழ் உண்டோ அங்கெல்லாம் பச்சை நிறமென...(UNP ) இன் கலர்தான் ஆனால் நாங்கள் வெற்றி பெற்ற நீல சிங்களம் அல்ல..

7. 2005 தேர்தலை புறக்கணித்தது தவறு என்று சொன்னது பற்றி...இப்பவும் சொல்லுகிறேன் புறக்கணித்தது தவறு..அப்படி சொன்ன சம்பந்தர் அதைவிட மிகத்திருத்தமாக சொல்லவேண்டிய எல்லாருக்கும் சொல்லியிருக்கிறார்..நிச்சயமாக..எங்களின் அடுத்த தலைவர் சம்பந்தர் தான்...தளபதிகள் கக்கீமும், மனோகணேசனும் ஏனைய மலையாக தலைவர்களும் தான்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த எதிர்கட்சிகளின் கூட்டமைப்பு நின்று நிலைக்குமோ தெரியாது, ஆனால் எங்களின் தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டமைப்பு தொடர வேண்டும். அவர்களை இணைந்தது வைத்திருப்பதற்கான ஆக்கமும் ஊக்கமும் நாங்கள் வழங்கவேண்டும்...மஹிந்த உடைக்காத, அழிக்காத கட்சியில்லை (UNP,JVP,பிள்ளையான்-கருணா, தமிழ் தேசிய கூட்டமைப்பு,.....) ஆனால் தன்னை அறியாமல் இணைத்து வளர்த்த கூட்டே இந்த தமிழ் கட்சிகளின் ஐக்கியம்..

நாங்கள் சரத், அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதவளித்த கட்சி/நபர் தோற்றபடியால் தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்தது தவறு என்று வாதிட்டோ அல்லது அவர்களை குறைகூறி அவர்களின் செயற்பாடுகளுக்கு இடைஞ்ச்சலாக இருந்தால் நாங்கள் எதையும் சாதிக்க போவதில்லை..சிவாஜிலிங்கமும் ஏனையோரும் தாங்கள் விட்ட தவறுகளை உணந்து மீள இணையவேண்டும்... அதற்குரிய முழுமுயற்சிகளும் சகல தரப்பாலும் தொடங்கவேண்டும்...

இந்த நேரத்தில் சம்பந்தன் மற்றும் ஏனையோருக்கு நாங்கள் செய்யும் உதவி..அவர்களுக்கு துணையாக அவர்களின் செயற்பாடுகளை தொடர்ந்து செய்ய முன்வர வேண்டும்..முக்கியமாக பிழையான தகவல்களை/ பிரச்சாரங்களை தவிர்க்க வேண்டும்..அவ்வாறு ஈடுபடுவர்களை உரிய தகவல்களை சொல்லி நிலைமைகளை விளங்கப்படுத்த வேண்டும்..எங்களது தற்காலிக, நீண்டகால இலக்குகளை அடைய உதவ வேண்டும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பாராளுமன்ற தேர்தலில்..மலையாக கட்சிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைய வேண்டும்...அதற்கு உரிய வேலைகள் தொடங்க வேண்டும் முக்கியமாக ஹக்கீம் உடன் உள்ள உறவு எந்தவையிலும் பாதிக்காமல் பார்க்கவேண்டும்..யாழ்பாணத்தில் கூட முஸ்லீம் மக்கள் பிரிந்து போட்டுள்ளார்கள்(எந்தளவு என்று தெரியாது ) என்பது தெரிகிறது. முஸ்லீம்ங்கள் இல்லாமல் வடக்கு கிழக்கு இணைப்போ..அல்லது அதற்கு கூடிய அதிகார பகிர்வோ சாத்தியம் இல்லை என்று உணரவேண்டும்...நீண்ட காலத்தில் பிரதான கட்சிகளுடன் இணைந்துள்ள முஸ்லீம் தமிழ் அரசியல் வாதிகளை ஒரே குடையில் கொண்டுவருவதர்ற்கு முயலவேண்டும்...அடுத்த தேர்தலில் 22 பதிலாக எத்தனை பேரை அனுப்ப போகிறோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பும் தனியே நீண்ட கால அரசியல் தீர்வுகளுக்குள் மட்டும் நில்லாமல் மக்களில் வாழ்வாதார பிரச்சனைகளுக்கும் பதில் சொல்லவேண்டும். அல்லாதுபோனால் டக்லஸ், பிள்ளையான் தொடர்ந்து அமைச்சராவும், முதல் அமைச்சராவும் இருந்துகொண்டே இருப்பார்கள்.ஏப்ரல் மட்டும் ஏதும் தலைகீழாக செய்யத்தேவையில்லை...அரசாங்கத்துடன் இணைந்து ..அமைச்சாரவது போன்ற செயற்பாடுகள்.ஆனால் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு, நிச்சயம் அது தேவை அதுவும் கௌரவமான முறையில்...:wub:

JVP , UNP அடுத்த தேர்தலில் நம்வர்களை இணைப்பார்களோ தெரியாது.ஆனால் நம்மவர்கள் அவர்களுடன் இணைவதற்காக ஏற்பட்ட ஒற்றுமையை இழக்கக்கூடாது.புலம் பெயர்ந்தவர்களும் இதற்கு ஆதரவாய் இருக்கவேண்டும்.மதில் மேல் பூனைபோலோ, எங்களுக்கும் உங்களுக்கும தொடர்பில்லை என்பதுபோலோ இருக்ககூடாது.

மீண்டும் உங்கள் பதில்களுடன் ...

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மகிழ்ச்சி வல்கனோ. இவ்வார குமுதத்துக்கு நான் எழுதிய கட்டுரையில் வலியுறுத்திய விடயங்கஐயே நீங்களும் வலியுறுத்தியுள்ளீர்கள்.தலைவர் சம்பந்தனும் என் தோழரும் தலைவருமான றவ்ஹக்கீம் தலைவர் மனோகணேசன் போன்றவர்களின் தேர்தலுக்கான கூட்டு அரசியல்ரீதியான ஐக்கிய முன்னணியாக வலுப்பெற நாம் அனைவரும் கைகொடுக்கவேண்டும். சமாதான காலத்தில் அதிகாரங்களை சம்பந்தருருக்கும் பகிரவேண்டும் என்றும் பேச்சுவார்த்தைகளில் அவர் பங்குபற்றவேண்டும் என விரும்பினேன். அதனை வன்னியில் வலியுறுத்தவும் செய்தேன். இன்ன்று களத்திலும் புலத்திலும் உள்ள சகல அரசியல் அறிந்தவர்களையும்விட அதிகம் வடகிழக்கு களத்தையும் இலங்கை அரசிலையும் அறிந்த தலைவர் சம்பந்தந்தான். அமரர்கள் அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் கொலைக்குப் பின் நிலவிய சூழலில் குடும்ப அங்கத்தவர்கள் நண்பர்கள் சுற்றியிருந்தவர்களின் நிர்பந்தத்தையும் மீறி அவர் தமிழர் தேசிய அரசியலில் தொடர்ந்தார். முஸ்லிம் மக்களிடத்திலும் கிழக்கு தமிழர்கள் இடத்திலும் பெரும் செல்வாக்குள்ள ஒரே தலைவரும் சம்பந்தர்தான். ஆகாயக் கோட்டை கட்டமுடியாது என்கிறதையும் விடுதலையை ஏற்றுமதி செய்ய முடியாது என்பதையும் நமது புலக்குடி புலக்குடி(Diaspora } மேற்க்கை பொருளாதார ரீதியாகவும் இறையியல் ரீதியாகவும் அனுதாபா அடிப்படையிலும் கட்டுப் படுத்தும் யூதப் புலக்குடியை ஒத்ததல்ல என்பதையும் நாம் உணர வேண்டிய தருணமிது. களத்தில் யாழ்ப்பாண மையவாத்துக்கும் அதன் கண்ணாடிப் பிம்பமாக உருவான கிழக்கு மைய வாதத்துக்கும் தமிழ் முஸ்லிம் முரண்களுக்கும் சவாலால வாழும் சம்பந்தரை உங்கள் உங்கள் விமர்சனங்களோடு ஆதரிக்குமாறு புலம் பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகளை கோருகிறேன். இன்றைய சூனியத்துள் இருந்து வெLivara வேறு வழிகள் இல்லை

Edited by poet

. களத்தில் யாழ்ப்பாண மையவாத்துக்கும் அதன் கண்ணாடிப் பிம்பமாக உருவான கிழக்கு மைய வாதத்துக்கும் தமிழ் முஸ்லிம் முரண்களுக்கும் சவாலால வாழும் சம்பந்தரை உங்கள் உங்கள் விமர்சனங்களோடு ஆதரிக்குமாறு புலம் பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகளை கோருகிறேன். இன்றைய சூனியத்துள் இருந்து வெLivara வேறு வழிகள் இல்லை

இந்த மைய வாதங்களை சாவலாக எடுக்காமல் ,சிங்கள இனவாத மைய வாதத்தையும் கண்டும்காணாமல் வாழபழகினால் நல்லம்

அது சரி தலைவர்கள் இருந்தால் தான் அரசியல் நடத்தமுடியுமோ?தலைவர்கள் ,தளபதிகள் இல்லாமல் ஒவ்வொருத்தனும் சுயமாக சிந்தித்து அரசியல் நடத்த முடியாதா?

ஆத்மீகம் என்றால் தலைவனை தேடி ஒடுரோம்,அரசியல் என்றால் தலைவனை தேடி ஒடுரோம் ,கடசியில் தலைவர்மார் வெற்றி அடையினம் நாங்கள்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.