Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதற்குமேல் என்ன சாட்சி வேண்டும்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு முன்பாக சாட்சியமளித்த பெரும்பாலான பெண்கள் தங்களது கணவன்மார் மற்றும் பிள்ளைகளை படைத்தரப்பினர் கைதுசெய்த பின்னரே காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்தனர்.

இங்கு சாட்சியமளித்த அண்மையில் காணாமல் போன மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சகாயமணியின் மனைவி சகாயமணி மேரி யோசப் சாட்சியமளிக்கையில்;எனது கணவர் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு மாநகர முதல்வரை சந்திக்கச் சென்றிருந்தார். ஆனால் வீடு திரும்பவில்லை. கடத்தியவர்களைத் தெரியும். எனது கணவரை அடித்து சங்கிலியில் கட்டி பற்பொடி கொம்பனியில் வைத்திருந்தனர். இங்கு உள்ள இராணுவத்தினரே இவரை துன்புறுத்தி வைத்திருந்தனர். அங்கிருந்த ஒருவரிடம் எனது கணவர் தகவல் கூறி அனுப்பி இருந்தார். எனது கணவர் ரி.எம்.வி.பி.யில் இருக்கும் போது கூட இருந்த ஒருவர் தற்போது இராணுவத்தில் உள்ளார். அவர் மூலமே தகவல் வழங்கி இருந்தார்.

நீதிமன்றம் செல்வேன் என்று கூறியும் விடவில்லை. தற்கொலை செய்வேன் என்று தெரிவித்தும் விடவில்லை. எனது கணவனை விடாவிட்டால் இரண்டு பிள்ளைகளுடனும் தீக்குளித்து தற்கொலை செய்வேன் என்றார்.

இதேவேளை, பருத்தித்சேனையைச் சேர்ந்த விஜயநாதன் கெங்கேஸ்வரி சாட்சியமளிக்கையில், தனது கணவன் பத்தம்போடி விஜயநாதனை கடந்த 2008.11.07 ஆம் திகதி மட்டக்களப்பு நகரில் இருந்து திரும்பும் போது வவுணதீவு விசேட அதிரடிப்படை கைது செய்ததாகவும் பின்னர் அவர்கள் கைது செய்யவில்லை எனத் தெரிவித்ததாகவும் சாட்சியத்தில் தெரிவித்தார்.

பழுகாமத்தை பிறப்பிடமாகவும் நொச்சிமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் மங்களாதேவி சாட்சியமளிக்கையில்;தனது மகனான இரத்தின சிங்கம் கேதீஸ்வரன் (28 வயது) 2009.01.01 ஆம் திகதி நொச்சிமுனையில் இருந்து பழுகாமத்திற்கு மரண வீட்டுக்குச் சென்றவர் திரும்பாத நிலையில் மூன்று நாளாக பழுகாமத்தில் இருக்கின்றார் என நினைத்துத் தேடவில்லை. பின்னர் தேடினோம் அவரைக் காணவில்லை. பின்னர் எமது பகுதி பிரதேச சபைத் தலைவர் கூறினார். களுவாஞ்சிக்குடி இராணுவம் கைது செய்து மட்டக்களப்பு பற்பொடிகொம்பனிக்குக் கொண்டு சென்றதாக இது தொடர்பாக முறைப்பாடு செய்த அனைத்து இடங்களிலும் இத்தகவலைக் கூறினோம். ஆனால், எந்த முடிவும் கிடைக்கவில்லை என்றார்.கரடியனாறு மரப்பாலத்தைச் சேர்ந்த கமலராஜ் அமலநாயகி சாட்சியமளிக்கையில்.தனது கணவன் கடந்த 2009/02/19 ஆம் திகதி வயலுக்குச் சென்றவர் திரும்பவில்லை. எனது கணவனை மரப்பாலம் அதிரடிப்படை முகாமுக்குள் நந்தன, தென்னக்கோன் ஆகிய இரண்டு அதிரடிப்படை வீரர்கள் கொண்டு சென்றதைக் கண்டுள்ளனர். நான் போய்க் கேட்டபோது அப்படி ஒருவரைக் கைது செய்யவில்லை என்று கூறினார்கள். இதனைக் கரடியனாறு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன். எனது கணவனை மீட்டுத் தாருங்கள். இவ்வாறே சாட்சியமளித்தவர்களில் அனேகமானோர் பாதுகாப்புத் தரப்பினரால் கொண்டுசென்றதாகத் தெரிவித்தனர். ஒரு சிலரே இனந்தெரியாதவர்களால் கடத்திச் சென்றதாக இங்கு சாட்சியமளித்தவர்கள் கூறினர்.

அரசின் கட்டுப்பாட்டில் முழு இலங்கையும் இருக்கும் போது யார் இனந்தெரியாதவர்கள் என ஆணைக்குழுவிடம் கேள்வி எழுப்பினர்.தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தினைக் கருத்தில்கொண்டு கணவன்மாரை மீட்டுத் தருமாறு கண்ணீர் மல்கிக் கேட்டுக்கொண்டனர்.விசாரணை நடத்தி முடியுமானவரை நல்ல பதிலைத் தருவதாக ஆணைக்குழு தெரிவித்தது.?????www.tharavu.com

  • கருத்துக்கள உறவுகள்

பாவமாக உள்ளது <_<

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ தீர்வு கிடைக்கும் நம்பிக்கையில் அந்த அப்பாவி மக்கள் சாட்சியமளிக்கின்றார்கள். ஆனால் சிங்கள அரசு எவ்வகையான சதித்திட்டதோடு இதை மேற்கொள்கின்றது தொடர்பாக நாம் அறியோம்.

தலைவரின் தாயாரை மலேசியாவுக்கு போக அனுமதித்தது. ஆனால் அங்கே, அவருக்கு யார், யார் உதவ வருகின்றார்கள் என்பதை இனம் கண்டு கைது செய்யவே அந்தச் செயலைச் செய்தது. அதில் சிலர் கைது செய்யப்படக் காரணமாக அமைந்தது. இதில் யாருடைய தப்புமிருக்கவில்லை. எங்களுடைய அறியாமை, நாங்களாகப் போய் வலைக்குள் மாட்டுப்பட்டதாகவே அமைந்திருந்தது.

இதிலும் ஒரு வகைச் சதித்திட்டம் இருக்கலாம். இப்போதும் வீரியத்தோடு, அல்லது போராட்ட குணத்தோடு, சிங்கள அரச எதிர்பாளர்களாக யார், யார் இருக்கின்றார்கள் என்பதை இனம் காண்பதற்காகவும் இருக்கலாம். இதில் சாட்சி அளிப்பவர்களுக்கு எவ்வகை பாதுகாப்பையும் யாரும் வழங்கவில்லை.

ஐநா அனுப்பினாலும் இவர்கள் சாட்சி அளிக்கப் போய் விடுவார்கள் என்ற களையெடுப்புக்காகவும் இந்தச் செயல் இருக்கலாம். மக்கள் அவதானமாகச் செயற்படுவதே நன்று.

ஏதோ தீர்வு கிடைக்கும் நம்பிக்கையில் அந்த அப்பாவி மக்கள் சாட்சியமளிக்கின்றார்கள். ஆனால் சிங்கள அரசு எவ்வகையான சதித்திட்டதோடு இதை மேற்கொள்கின்றது தொடர்பாக நாம் அறியோம்.

தலைவரின் தாயாரை மலேசியாவுக்கு போக அனுமதித்தது. ஆனால் அங்கே, அவருக்கு யார், யார் உதவ வருகின்றார்கள் என்பதை இனம் கண்டு கைது செய்யவே அந்தச் செயலைச் செய்தது. அதில் சிலர் கைது செய்யப்படக் காரணமாக அமைந்தது. இதில் யாருடைய தப்புமிருக்கவில்லை. எங்களுடைய அறியாமை, நாங்களாகப் போய் வலைக்குள் மாட்டுப்பட்டதாகவே அமைந்திருந்தது.

இதிலும் ஒரு வகைச் சதித்திட்டம் இருக்கலாம். இப்போதும் வீரியத்தோடு, அல்லது போராட்ட குணத்தோடு, சிங்கள அரச எதிர்பாளர்களாக யார், யார் இருக்கின்றார்கள் என்பதை இனம் காண்பதற்காகவும் இருக்கலாம். இதில் சாட்சி அளிப்பவர்களுக்கு எவ்வகை பாதுகாப்பையும் யாரும் வழங்கவில்லை.

ஐநா அனுப்பினாலும் இவர்கள் சாட்சி அளிக்கப் போய் விடுவார்கள் என்ற களையெடுப்புக்காகவும் இந்தச் செயல் இருக்கலாம். மக்கள் அவதானமாகச் செயற்படுவதே நன்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.