Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈராக் போரில் அமெரிக்காவின் அத்துமீறல்கள்: ரகசிய ஆவணங்கள் வெளியானதால் பரபரப்பு!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈராக் போரில் அமெரிக்காவின் அத்துமீறல்கள்: ரகசிய ஆவணங்கள் வெளியானதால் பரபரப்பு!!

ஈராக் மீது அமெரிக்கா நடத்திய போர் தொடர்பான ரகசிய ஆவணங்கள் லீக் ஆன விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 2004 ம் ஆண்டு முதல் 2009 வரை ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்து அதிபர் சதாம் உசேன் வரை சிறையில் தள்ளப்பட்டு அவரும் தூக்கிலிடப்பட்டார். இந்த போருக்கு பின் ஈராக்கில் ஜனநாயக தேர்தல் நடத்தப்பட்டு அங்கு புதிய ஆட்சி கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் விக்கிலீக் இணையதளத்தில் ஈராக் போர் ஆவணங்கள் லீக் ஆகி இருக்கிறது. 4 லட்சம் ரகசியம் கொண்ட ஆவணங்களில் அமெரிக்காகவின் அத்துமீறல்கள், அட்டூழியங்கள், மற்றும் போர் வீரர்கள், பொதுமக்கள் துன்புறுத்திய சம்பவம் கொண்ட புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் பல்வேறு புகைப்படங்கள் மிக கொடூரமானதாக இருக்கிறது. சரண் அடைய வந்தவர்களை சுட்டுக்கொல்வது, சிறையில் அடைத்து துன்புறத்துவது, கண்ணைக்கட்டி கொடுமைபடுத்துதல், சிகரெட்டால் கண்ணை சுடுதல், ரத்தகளறியுடன் கதற விடுவது போன்ற புகைப்பட காட்சிகள் இதில் உள்ளன.

இந்த ஆவணங்கள் சட்டவிரோதமாக வெளியாக தந்திரமாக தயார் செய்யப்பட்டது என அமெரிக்க வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த போர் ஆவணம் லீக் ஆன விஷயம் அமெரிக்க போர் வரலாற்றிலேயே இதுவரை நடக்காதது என முன்னாள் போர்ப்படை தளபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 32 பேர் கொலை : இந்த ஆவணத்தின்படி ஈராக்கில் மொத்தம் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பொதுமக்கள் 66 ஆயிரத்து 81 பேர். 23 ஆயிரத்து 984 பேர் கிளர்ச்சிக்காரர்கள், 15 ஆயிரத்து 195 பேர் ஈராக் போர்படையினர் ஆவர்.

http://www.tutyonline.net/view/29_8218/20101023183304.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=bVGqE726OAo

ஈராக்கில் அமெரிக்கா நடத்திய ராணுவ அத்துமீறல்கள் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்ட "விக்கிலீக்ஸ்' இணையதளத்தின் அதிபர் ஜூலியன் அசேஞ்ச் உயிருக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறார்.

ஈராக்கில், சதாம் உசேன் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளை சேர்ந்த படைகள் அங்கு தங்கி பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தன. அந்த காலக்கட்டத்தில், அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய மனித உரிமை மீறல்கள், அத்துமீறல்கள், சித்ரவதை, அப்பாவி பொதுமக்களை கொன்றது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்த நான்கு லட்சம் ஆவணங்களையும், வீடியோ காட்சிகளையும் அண்மையில், "விக்கிலீக்ஸ்' என்ற இணையதளம் வெளியிட்டது.

இது சர்வதேச அளவில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு, அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஐ.நா., சபை உத்தரவிட்டுள்ளது.

இந்த ரகசியங்களை வெளியிட்டதால், தான் கைது செய்யப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்று கருதிய "விக்கிலீக்ஸ்' இணையதளத்தின் அதிபர் ஜூலியன் அசேஞ்ச் (39) தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறார். அமெரிக்கா அவர் மீது வழக்கு பதிவு செய்யலாம் என்று கருதப்படுகிறது. அவ்வாறு நடந்தால், இங்கிலாந்தும் ஜூலியன் மீது நடவடிக்கை மேற்கொள்ளும். எனவே, ஜூலியன் அவ்வப்போது தான் தங்கும் இடத்தை மாற்றி வருகிறார்.

ரகசிய ஆவணங்களை வெளியிட்ட போது, ஜூலியன் சுவீடன் தலைநகர் ஸ்டாக் ஹோமில் தங்கியிருந்தார். பின்னர், அங்கிருந்து ஜெர்மன் தலைநகர் பெர்லினுக்கு சென்றார். தற்போது, லண்டனில் தங்கியுள்ளார்.

இந்த பயணத்தின் போது, அவரது லேப்-டாப்பும், பையும் காணாமல் போய் விட்டது. தனது தோற்றத்தை மறைப்பதற்காக தனது தலைக்கு "டை' அடித்து கொண்டுள்ளார். வேறு பெயர்களில் ஓட்டல்களில் அறை எடுத்து தங்கும் ஜூலியன், தரையிலும், சோபாவிலும் படுத்து உறங்குகிறார். தனது கிரெடிட் கார்டை பயன்படுத்தினால், இருப்பிடம் தெரிந்துவிடும் என்பதால், அதை பயன்படுத்தாமல், நண்பர்களிடம் கடன் வாங்கி செலவு செய்கிறார்.

பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ஜூலியன் கூறியதாவது: என்னை ஊடகத்துறையின் "ஜேம்ஸ் பாண்ட்' என்று கூறுகின்றனர். இதனால், எனக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்துள்ளனர். அதே நேரத்தில், அவர்களில் சிலர், துரோகிகளாக மாறி, என்னை காட்டி கொடுத்து விட்டனர். இதனால், எனக்கு இதுபோன்ற அசாதாரண சூழ்நிலை உருவாகியுள்ளது.

சுவீடனில், இரண்டு பெண்களை நான் பாலியல் பலாத்காரம் செய்ததாக என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், நான் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடவில்லை. அந்த பெண்களின் முழு சம்மதத்துடன் தான் அந்த சம்பவம் நடந்தது. அமெரிக்கா திட்டமிட்டு என் மீது அவதூறு பரப்பும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இவ்வாறு ஜூலியன் கூறினார்.

சிங்கள பயங்கரவாதிகளின் சதியாகவும் இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.