Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரும் செவ்வாய் அமெரிக்காவில் தேர்தல் நடக்கப்போவது என்ன ?

Featured Replies

ஒரு கறுப்பனிடமிருந்து அமெரிக்காவை காப்பாற்றும்படி கோஷம் ..

கேள்வி – பதில் வடிவில் அமெரிக்கத் தேர்தல் விபரம்

பாராக் ஓபாமா குடும்பம் மாக்ஸ்டிக் பின்னியைச் சேர்ந்தவர்கள், இவர் தீவிரத்துக்கு ஆதரவு தெரிவிப்பார், அமெரிக்காவே விழித்தெழு, விழித்தெழு, இந்த மனிதனிடம் இருந்து அமெரிக்காவைக் காப்பாற்று என ஒரு பெண்மணி வெள்ளை மாளிகைக்கு முன்னால் நின்று கூச்சல் போடுகின்றார், இவர் ஒரு கையில் அமெரிக்காவின் தேசிய கொடியையும் மறு கையில் இஸ்ரேல் கொடியுடன் வெள்ளை மாளிகைக்கு முன்னர் வலம் வருகின்றார். வருகின்ற செவ்வாய்க்கிழமை வரும் இடைத்தேர்தலில் மக்களே விழித்தெழுங்கள், விழித்தெழுங்கள் எனவும் இவ் பெண்மணி கோஷம் போடுகின்றார்.

கேள்வி : இது என்ன மீண்டும் அமெரிக்காவில் தேர்தலா?

பதில் : ஆம், தேர்தல்தான் ஆனால் சனாதிபதித் தேர்தல் இல்லை, இடைத் தேர்தல், இந்த இடைத் தேர்தல் இரண்டு வருடத்துக்கு ஒரு முறை வருவது வழமை.

கேள்வி : சரி, இந்த தேர்தலில் யாரை தெரிவு செய்வது?

பதில் : அமெரிக்காவில் இரண்டு பராளுமன்றங்கள் உண்டு, முதலாவது மக்கள் அவை ( பிரதிநிதிகளின் அவை. ) மற்றது செனற்ட் சபை.

மக்கள் அவையில் 435 அங்கத்தவர்கள் அங்கத்துவம் வகிக்கின்றனர், இவர்கள் அனைவரும் இரண்டு வருடத்துக்கு ஒரு முறை தெரிவு செய்யப்படுவர்.

செனற் சபையில் 100 அங்கத்தவர்கள் அங்கத்துவம் வகிக்கின்றனர், ஆனால் இவர்களில் மூன்றில் ஒரு பகுதி அங்கத்தவர்கள் இரண்டு வருடத்துக்கு ஒரு முறை தேர்தலை சந்திக்க வேண்டும், தெரிவு செய்யப்பட்டவர்கள் ஆறு வருடங்கள் செனட் சபையில் அங்கம் வகிக்கலாம்.

கேள்வி : இந்தச் சபைகளில் தற்போதைய பலம் எப்படி உள்ளது?

பதில் : மக்கள் அவையில் உள்ள 435 அங்கத்தவர்களில் 255 அங்கத்தவர்கள் சனநாயகக்கச்சியைத் சேர்ந்தவர்கள், 175 அங்கத்தவர்கள் குடியரசுக் கட்சியைத் சேர்ந்தவர்கள், இரண்டு ஆசனங்கள் வெறுமையாகவும் உள்ளது.

செனற்ட் சபையை எடுத்துக்கொண்டால் 59 அங்கத்தவர்கள் சனநாயகக்கட்சியை சேர்ந்தவர்கள், 41 அங்கத்தவர்கள் குடியரசுக்கட்சியைச் சேர்ந்தவர்கள்.

கேள்வி : நமது ஓபமா சனநாயக்கட்சியைச் சேர்ந்தவர் எனத் தெரியும், ஆனால் தற்போதைய கருத்துக்கணிப்பு என்னதான் சொல்கின்றது?

பதில் : செவ்வாய்க்கிழமை; இரண்டாம் திகதி நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் அவையில் 222 அங்கத்தவர்கள் குடியரசுக்கட்சி சார்பாகவும், 175 அங்கத்தவர்கள் சனநாயக்கட்சி சார்பாகவும், மிகுதியுவுள்ள 38 அங்கத்தவர்கள் எந்தப்பக்கமும் வரலாம் என இந்தக் கருத்துக்கணிப்பு கூறுவதோடு, குடியரசுக்கட்சி பெருபான்மை அங்கத்தவர்களை மக்கள் சபையயில் பெறுவதற்கு வாய்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.

செனற்ட் சபையைக் எடுத்துக் கொண்டால் கூட, இங்கே ஏற்கனவே கூறியபடி மூன்றில் ஒரு பகுதி அங்கத்தவர்களுக்கு தேர்தல் நடப்பதால், சனநாயக்கட்சி 45 இல் இருந்து 49 அங்கத்தவர்களையும், குடியரசுக்கட்சி 45 அங்கத்தவர்களைப் பெறுவதற்கும், மிச்சவுள்ள 6 அங்கத்தவர்கள் ஏதாவது ஒரு கட்சிக்கு வருவதற்கு வாய்புள்ளதாக கூறப்படுகின்றது. இந்த ஆறு அங்கத்தவர்களை குடியரசுக்கட்சிக்கு செல்லுமாயின், செனற் சபையையிலும் சனநாயக்கட்சி தனது பெருபான்மையை இங்கேயும் இழக்க நேரிடும்.

கேள்வி : பொதுவாக நடக்கும் இடைத் தேர்தலில், அதிகாரத்தில் இருக்கும் சனாதிபதியின் கட்சியை ஆதரிக்கமால், எதிர் கட்சிக்கு வாக்கு அளிப்பதாக கூறப்படுகின்றதே?

பதில் : இதுவும் சரிதான் என்று கூறவேண்டும்.

கடந்த சனாதிபதித் தேர்தல் போது பெருபான்மையான சனநாயக்கட்சி சார்பாக மக்கள் அவை அங்கத்தவர்களும், செனற் சபை அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் தற்போது இரண்டு வருடத்துக்கு பின்னர் எதிர்கட்சியான குடியரசுக்கட்சி இரண்டு சபையிலும் பெருபான்மையைப் பெறுவதற்கு கூடிய வாய்புண்டு. இதே போன்று ஏனைய சனாதிபதிகள் அதிகாரத்தில் இருந்த காலங்களில் கூட எதிர்கட்சிகள் இடைத் தேர்தல்களில் வென்றதைக் காணமுடிந்தே.

கேள்வி : சில தேர்தல்; கூட்டங்களில் எங்களது அமெரிக்காவை மீண்டும் எங்களிடம் தாருங்கள், அமெரிக்கா ஒற்றுமையை பேணவேண்டும் என சில குடியரசுக் கட்சிக வேட்பாளர்கள் மைக்கைப் பிடித்து கோசம் போடுகின்றார்களே, இதில் என்ன உண்மை உண்டு?

பதில் : தற்போதைய சனாதிபதி பராக் ஓபாமா கடந்த இரு வருடங்களில் அமெரிக்காவை ஒன்றும் விற்றுவிடவில்லை ஆனால் அமெரிக்காவில் தொடர்ந்தும் பொருளாதார மந்தம் இருப்பதால், சனாதிபதி மேல் ஒரு அதிருப்த்தியை மக்கள் காட்டுகின்றனர், இந்த அதிருப்த்தியை குடியரசுக்கட்சி தமக்கு சாதகமாகப் பாவித்துக்கொள்கின்றது.

இன்னும் சொல்லப் போனால் தற்போதைய சனாதிபதியால் நிறைவேற்றப்பட்ட சுகாதார சீர் திருத்தச் சட்டம், அமெரிக்க மக்களை இரண்டாக பிரித்துள்ளது. எந்தவொரு சனாதிபதியாலும் நிறைவேற்ற முடியாத விடயத்தை தற்போதைய சனாதிபதி நிறைவேற்றியுள்ளார் எனப் பார்க்கும் பொழுதும், 35 மில்லியன் அமெரிக்க மக்களுக்கு இந்தச் சலுகை சென்றடையப் போகின்றது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மற்றும்படி மைக்கைப் பிடித்து அமெரிக்காவை மீண்டும் எங்களிடம் தாருங்கள் என்பதும், அமெரிக்காவின் ஒற்றுமையைப் பேணவேண்டும் எனக் கோசம் போடுவதும், தங்கள் தங்கள் ஆசனங்களை தக்கவைப்பதற்கும், மக்கள் சபை, செனற் சபைக்கு தெரிவு செய்யப் போவதற்கும் மட்டுமே தவிர வேறொன்றும் பதிதாக இல்லை.

கேள்வி : சரி எப்படிப் பார்த்தாலும் கடந்த இரு வருடங்களில் அமெரிக்காவில் வலதுசாரிக் குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும், பராக் ஒபாமாவை ஒரு கறுப்பர் எனக் பகிரங்கமாக கூறுவதோடு, பெருபான்மையான அமெரிக்க மக்கள் இவரை ஒரு முஸ்லிம் எனக் கூறுகின்றார்களே, இது உண்மையான விடயமா?

பதில் : ஆம் பெருபான்மையான அமெரிக்க மக்கள் இவரை ஒரு முஸ்லிம் குடிமகனாக தற்போது பார்ப்பதோடு நிற்காமால், வெள்ளை மாளிகைக்கு பொறுத்தம் அற்றவர் எனவும் கூறுகின்றனர்.

பாராக் ஒபாமாவை எடுத்துக் கொண்டால் அமெரிக்காவின் சிறுபான்மை ஆப்ரோ அமெரிக்க இனத்தைச் சேர்ந்தவர், அமெரிக்காவின் மொத்த சனத்தொகையில் 12 வீத மக்களே ஆப்ரோ அமெரிக்கர்கள், எனவே பெருன்பான்மையான வெள்ளை இன மக்களின் ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்ட பாராக் ஓபாமா, அதே பெருபான்மையான மக்களால் இவர் வெள்ளை மாளிகைக்கு பொறுத்தம் அற்றவர் என இங்கு கூறுவதும் ஆச்சரியமே. அமெரிக்காவின் சரித்திரத்தில் இரண்டு சிறுபான்மை இனம், மதத்தை சேர்ந்தவர்கள் சனாதிபதியாக வந்துள்ளனர். முதலாவதாக சனாதிபதி யோன் எப். கெனடி, இவர் கத்தோலிக்க மதத்தை தழுவியவர், மற்றவர் தற்போதைய சனாதிபதி பாராக் ஓபாமா.

கேள்வி : மிகவும் புகழ் போன தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஓபாமா பங்குபற்றி, மக்களே செவ்வாய்க்கிழமை மறந்து விடாமால் வாக்களியுங்கள் எனக் கூறப்படுகின்றதே, ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்வது சரியா?

பதில் : இந்த நிகழ்ச்சியை நடத்தியவர், ஓபாமாவைப் பார்த்து நீங்கள் அமெரிக்காவில் மாற்றம் வேண்டும் என பொதுத் தேர்தலில் நின்றீர்களே, தற்போது எங்களை மாற்றி விடாதீர்கள் என மக்களிடம் கேட்கிறீர்களே இது என்ன விதத்தில் நியாயம் என்று நகைச்சுவையாக கேட்டதோடு நிற்காமால் உங்கள் சனநாயக்கட்சி வேட்பாளர்களே, உங்கள் சுகாதார சீர் திருத்த சட்டத்தைப் பற்றி தேர்தல் கூட்டங்களில் பேசவில்லையே, இதைப் பற்றி கதைத்தால் விழும் வாக்கும் விழாமல் போய்விடும் என பயப்பிடுகின்றார்களோ என நகச்சுவையாக வினாவியதையும் பார்க்க முடிந்தது.

ஓபாமாவின் தற்போதைய நிலையில் வரும் தேர்தலில் எப்படியாவது வெல்ல வேண்டுமென ஒபாமா ஒற்றைக் காலில் நிற்கின்றார். எனவே இந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் கூட ஓபாமா பங்கு பற்றியது ஒன்றும் ஆச்சரியமான விடயமில்லை ஆனால் அடுத்த சனாதிபதித் தேர்தலின் போது, தொலைக் காட்சி நிகழ்ச்சியில் ஓபாமா நடிப்பாரோ என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

கேள்வி : மக்கள் அவை மற்றும் சேனற்ட் சபையில் இரண்டிலும் சனாதிபதியின் கட்சியான சனநாயக்கட்சி பெருபான்மையை இழந்தால், சனாதிபதியின் எதிர்காலம் கேள்விக்குறியா போய்விடுமா?

பதில் : மேல் கூறிய கணிப்புகளின் படி தேர்தல் முடிவுகள் அமையுமாயின், வரப்போகும் இரண்டு வருடங்களும் மிகவும் சிரமத்துடன் அரசாங்கத்தை நடத்த வேண்டி வரும் என்பது ஒரு புறம் இருக்க, புதிதாக கொண்டு வரப்படும் சட்ட, திட்டங்களுக்கு குடியரசுக்கட்சி முட்டுக்கட்டையாக அமைவார்கள் என்பதும் இங்கு உண்மை. ஏனைய சனாதிபதிகள் போன்று தற்போதைய சனாதிபதியும் வேற்றோ அதிகாரத்தை பாவிப்பதற்கு தயங்க மாட்டார் ஆனால் இந்த வீட்டோ அதிகார விடயம் இவரின் அடுத்த சனாதிபதி தேர்தலுக்கு உதவி செய்யுமா எனத் தற்போது கூறமுடியாது. எனவே வருகின்ற செய்வாய்க் கிழமை நடக்கவிருக்கும் இடைத் தேர்தல் முடிவுகள் பாராக் ஓபாமாவின் வருங்கால செயல் திட்டங்களை மழுங்கடிக்குமா என்பதை பொறுத்திருந்தே அவதானிக்க வேண்டும்.

அலைகளுக்காக யோசப் அருளையா 31.10.2010

  • தொடங்கியவர்

பரக் ஒபாமாவிற்கு ஆதரவளிக்கப்படும் ‐ அமெரிக்கத் தமிழர்கள்

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவிற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என அந்நாட்டில் வாழும் தமிழர்கள் அறிவித்துள்ளனர்.

எதிர்வரும் இரண்டாண்டு காலப்பகுதியில் பரக் ஒபாமா இலங்கை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துவார் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவளிக்கக் கூடும் என எதிர்பார்க்க முடியாதென அமெரிக்கத் தமிழர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்க அரசாங்கம் இலங்கையின் மீது கவனம் செலுத்தி வருவதாக அமெரிக்கத் தமிழர் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது சூடானில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் போன்றே இலங்கையிலும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், பரக் ஒபாமாவின் மனித உரிமை விவகாரங்கள் குறித்து திருப்தி அடைய முடியாதெனத் தெரிவித்துள்ளார்.

http://www.nerudal.com/nerudal.20920.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.