Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றச்சாட்டுகள் விடயத்தில் கோட்டை விட்டு விடுவோமா?

Featured Replies

புலம்பெயர் தமிழ்ச் சமூகம் என்பது வலுவானது. ஆனால் அது தனது வலிமையை நிரூபிக்க முடியாத அளவுக்கு, கடந்த வருடம் மே மாதத்துக்குப் பின்னர் இரண்டுபட்டு நிற்பதால் சிங்கள அரசின் மீதான போர்க்குற்றங்களை அம்பலமாக்கி அவர்களைக் கூண்டிலேற்ற முடியாத அவலம் தோன்றியுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது சிங்கள அரசு அப்பட்டமான போர்க்குற்றங்களைப் புரிந்தது. இதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கும், மனித உரிமைச் சாசனங்களுக்கும் முரணான வகையில் ஏராளமான போர்க் குற்றங்களை சிங்களப் படைகள் மேற்கொண்டன.

பொதுமக்கள், ஆலயங்கள், மருத்துவமனைகளைக் குறி வைத்து குண்டுகள் வீசப்பட்டமை, வெள்ளைக்கொடியுடன் சரணடைய முன் வந்த புலிகளின் தலைவர்களைச் சுட்டுக் கொன்றமை, சரணடைந்த புலிகளைக் கொன்று விட்டு அவர்கள் யாரும் சரணடையவே இல்லை என்று கூறுகின்றமை இதைவிட ஏராளமான மனித உரிமை மீறல்கள் போரின் போது இடம்பெற்றன.

இந்தப் போர்க்குற்றங்கள் தனியே இறுதிக்கட்டப் போரின் போது மட்டும் நிகழவில்லை.

தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் பல்வேறு காலகட்டங்களிலும் நிகழ்ந்தன. ஆனால் இப்போது இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் பற்றியே பெரிதும் பேசப்படுகிறது. சிங்களப் படைகளின் இந்தப் போர்க்குற்றங்கள் தொடர்பான பல்வேறு ஆவணங்கள், ஆதாரங்கள் தமிழர் தரப்பிடம் உள்ளன. ஆனால் இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு சிங்கள அரசைக் கூண்டில் நிறுத்துவதற்கு தமிழர் தரப்பினால் முடியாதுள்ளது.

என்ன தான் பிரசாரம் செய்தாலும் இந்த விடயத்தில் தமிழர் தரப்பு போதியளவு அழுத்தத்தை சர்வதேச சமூகத்துக்குக் கொடுக்கவில்லை என்பதே உண்மை. போர்க்குற்ற ஆதாரங்கள், ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய இடங்களில் சமர்ப்பிக்காமல்- இணையங்களில் வெளியிடுவதால் மட்டும் எதையும் சாதிக்க முடியாது.

அதுபோல போர்க்குற்றச்சாட்டுகளுக்கு எதிராக முறையிட வேண்டிய இடங்களை விடுத்து- வேறு இடங்களில் நடத்தப்படுகின்ற போராட்டங்களாலும் பயனில்லை. சிங்கள அரசு தன் மீதான போர்க்குற்றங்களை மறைக்க பெரும் பிரயத்தனம் செய்து வருகிறது.

அதற்கென மாதாந்தம் பல மில்லியன் டொலரைச் செலவிட்டு மேற்குலக நிறுவனங்கள் மூலம் பிரசாரங்களை மேற்கொள்கிறது.

இந்தக் கட்டத்தில் தமிழர் தரப்பு போர்க்குற்றங்கள் தொடர்பாக போதியளவுக்கு வெளியுலகுடன் தொடர்புகளைப் பேணவில்லை என்ற உண்மையைப் புரிந்து கொள்ளவில்லை. ஐரோப்பாவில் நடை பயணம் செல்வதன் மூலமோ அல்லது சிறியளவிலான கூட்டங்கள், பேரணிகள் மூலமோ அதைச் செய்து விட முடியாது.

புலம்பெயர் தமிழ்ச் சமூகம் என்பது வலுவானது.

ஆனால் அது தனது வலிமையை நிரூபிக்கின்ற அளவுக்கு கடந்த வருடம் மே மாதத்துக்குப் பின்னர் செயற்படவில்லை.

தாயகத்தில் புலிகளின் அழிவுக்குப் பிறகு புலம்பெயர் சமூகம் இரண்டுபட்டு நிற்பதால் சிங்கள அரசின் மீதான போர்க்குற்றங்களை அம்பலமாக்கி அவர்களைக் கூண்டிலேற்ற முடியாத அவலம் தோன்றியுள்ளது.

சிங்கள அரசு இராஜதந்திர ரீதியாக நகர்த்தும் காய்களை புலம்பெயர் தமிழர்கள் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை.

அண்மையில் சிறிலங்கா இராணுவத்தின் 58வது டிவிசன் தளபதியாக இருந்து போரை நடத்திய- இறுதிக்கட்டப் போரின்போது அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் உள்ளிட்ட புலிகளின் தலைவர்களைச் சுட்டுக்கொன்ற மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா ஐ.நா பாதுகாப்புச் சபையில் உரையாற்றியுள்ளார்.

அவரை ஐ.நாவுக்கான பதில் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக அனுப்பியிருக்கிறது சிங்கள அரசு. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா சிறிலங்கா மீதான போர்க்குற்றச்சாட்டுகளை மறைக்க- அரசாங்கம் மேற்கொள்ளும் புனர்வாழ்வு தொடர்பாகப் பேசிவிட்டுப் போயிருக்கிறார்.

மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவின் நியமனமானது ஐ.நாவுக்கே சவால் விடும் வகையிலானது. ஏனென்றால் நடேசன் உள்ளிட்ட புலிகளின் தலைவர்களைச் சுட்டுக்கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டவர் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா.

போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா நிபுணர் குழு விசாரணை நடத்தி வருகின்ற நிலையில்- அவரையே ஐ.நாவுக்கான தூதுவராக அனுப்பியது சிறிலங்கா. இவர் அங்கு போய்க் போர்க்குற்றங்களை மறைக்கும் முயற்சியில் மிகத் தாராளமாகவே ஈடுபட்டுள்ளார்.

அதுமட்டுமல்ல இறுதிப்போரில் பங்கெடுத்த இன்னொரு மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வாவை சிங்கள அரசு பிரித்தானியாவுக்குப் பதில் தூதுவராக அனுப்பியுள்ளது, ஏற்கனவே வன்னியில் போர் முடிவுக்கு வந்த கையோடு ஜேர்மனிக்கான தூதுவராக மேஜர் ஜெனரல் ஜெகத் டயசை அனுப்பியது.

அவர் போரின் ஆரம்பம் தொடக்கம் இறுதி வரை அதில் பங்கெடுத்த ஒருவர். போர்க்குற்றங்களுடன் தொடர்புபட்ட அவரை ஜேர்மனிக்கான துணைத் தூதராக நியமித்த போது புலம்பெயர் சமூகம் போதியளவுக்கு விழிப்புடன் செயற்படவில்லை. அதற்கு எதிராக உரிய வகையில் குரல் கொடுக்கவில்லை.

இதன் விளைவாக ஜேர்மனி அரசு அவரை ஏற்றுக் கொண்டது. இப்போது அவர் ஜேர்மனியில் இருந்து இயங்கிய புலிகளைக் களையெடுக்க ஆரம்பித்துள்ளார். அங்கிருந்து கொண்டு ஐரோப்பாவில் பல நாடுகளிலும் அவரது புலனாய்வுச் செயற்பாடுகள் விரிந்து செல்கிறது.

அதேபோன்ற நிலைதான் இப்போது பிரித்தானியாவிலும் உருவாகி வருகிறது. அங்கு துணைத் தூதுவராக அனுப்பப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவும் அதையே தான் செய்யப் போகிறார். இறுதிப்போரில் பங்கெடுத்த- போர்க்குற்றங்களில் நேரடியாகத் தொடர்புடைய மூன்று முக்கிய அதிகாரிகளையும் முக்கிய இடங்களில் தூதரகப் பணிகளுக்கு அனுப்பியுள்ளது சிங்கள அரசு.

அவர்களுக்கு எதிராகப் புலம்பெயர் சமூகத்தால் என்ன செய்ய முடிந்தது?

பிரசன்ன சில்வா லண்டன் வந்தால் கைது செய்யப்படுவார் என்று மிரட்டல்கள் வந்தன. ஆனால் எதுவுமே நடக்கவில்லை.

சவீந்திர சில்வாவின் நிலையும் அது தான்.

ஆக மொத்தத்தில் போர்க்குற்றங்களில் தொடர்புடைய சிங்களப் படையதிகாரிகளை கூண்டில் ஏற்றுகின்ற காரியத்தைச் செய்யத் தமிழர் தரப்பினால் முடியவில்லை என்பதை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.

இந்த நிலையில்தான் லண்டனில் ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்ற வரும் மகிந்த ராஜபக்ஸவைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. பிரித்தானியாவின் உள்ளுர் சட்டங்களின்படி போர்க்குற்றங்களுக்காக மகிந்த ராஜபக்ஸவைக் கைது செய்ய முடியும்.

ஆனால் அதற்கு முன்னர் அவர் மீது வழக்குத் தாக்கல் செய்து ஆதாரங்களுடன் அவரைக் குற்றவாளியாக நிரூபிக்க வேண்டும். அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதா என்பது தெரியாது. ஆனால் அதற்கு முன்னர் அறிக்கைகள்தான் வந்து மிரட்டின.

மகிந்த ராஜபக்ஸவும் பயணத்தைப் பிற்போட்டுள்ளார்.

இப்போது தமிழர்கள் தரப்பு ஏதோ மகிந்த ராஜபக்ஸவை லண்டன் வரவிடாமல் தடுத்து விட்டதாகப் புளகாங்கிதம் அடைகிறது, இது தற்காலிகமான நிம்மதியும் மகிழ்ச்சியும் தான்.

மகிந்தவின் பயணம் பிற்போடப்பட்டதற்கும் இந்த மிரட்டலுக்கும் தொடர்பிருக்கிறதா என்பது உறுதியில்லை. காரணம் என்னவென்றால் பயணம் பிற்போடப்பட்டதற்கு சிங்கள அரசு கூறியுள்ள காரணங்கள் வலுவானவை.

அதேவேளை மகிந்த ராஜபக்ஸ லண்டன் வந்தால் அவரைக் கைது செய்வதற்கு நடவடிக்கையை எடுக்கத் தவறினால்- சர்வதேச அரங்கில் தமிழர் தரப்பின் போர்க்குற்றச்சாட்டு முயற்சிகளில் பெரும் பின்னடைவு ஏற்படப் போகிறது. நாங்கள் சின்னச் சின்ன விடயங்களையெல்லாம்தான் பெரிய வெற்றியாகக் கருதிக் கொண்டிருக்கிறோம்.

எங்களின் அடிப்படை நோக்கம் இந்தச் சிறியளவிலான வெற்றிகளல்ல.

ஏற்கனவே வன்னியில் இப்படியான சிறிய சிறிய வெற்றிகளில் மனநிறைவு கண்டதன் விளைவே ஒட்டுமொத்தப் போரிலும் தோல்வியடைய நேரிட்டது.

போர்க்குற்றங்கள் விடயத்தில் சிங்கள அரசைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் விடயத்திலும் அவ்வாறு நடந்து விடக் கூடாது. அதற்கு நன்கு ஒருங்கிணைந்த செயற்பாடுகளும், அதிக வேகமும் இருக்க வேண்டும்.

இந்த விடயங்களில் நிதானமும் உரிய வழிகளில் அதை அணுகுகின்ற தெளிவும் இல்லாவிட்டால் போர்க்குற்றங்களை நிரூபிக்க முடியாமல் மீண்டும் ஒரு தோல்விக்குள் தள்ளப்படும் நிலை தமிழர் தரப்புக்கு ஏற்படலாம்.

எனவே இங்கு தலைவர் அவர்களின் வாக்கினை நினைவில் நிறுத்திக் கொள்வோம்.

சொல்லுக்கு முன் செயலே வெற்றிக்கு வழிவகுக்கும் !

(கட்டுரையில் இடம்பெற்றுள்ள அழுத்தங்கள் கட்டுரை ஆசிரியருடையது ( தொல்காப்பியன்))

http://www.ponguthamil.com/aayirampookal/aayirampookalcontent.asp?sectionid=10&contentid={B864C669-5E0F-460B-A83A-C19EFBE76D6C}

========================================================================================

உங்கள் சாட்சியங்களைக் கொடுக்கவில்லை என்றால் நீங்கள் நடைபிணம் தான் !!! மார்கழி 15, 2010 கடைசி திகதி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77493

பான்கி மூன் குழு போர்க்குற்றம் தொடர்பில் அறிக்கைகளை கோருகின்றது

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77243

Edited by akootha

  • தொடங்கியவர்

போர் குற்றம்! போர் குற்றம்! சர்வதேச நீதிவேண்டி எமது பணயம், நீதி வேண்ட உள்ளன 32 நாட்களே!

உறவுக்காக செய்வோம், உரிமைக்காக செய்வோம், நீதிக்காக செய்வோம் வாருங்கள் உறவுகளே,

ஒவ்வொருவராக எழுதுவோம், அனைவரையும் எழுதவைப்போம், சர்வதேச போர்குற்ற விசாரணைக்குழு அமைய எழுதுவோம்.

விழுந்தோம் என்பது வரலாறல்ல, எழுந்தோம் என்பதே வரலாறு வாருங்கள், வலுச் சேருங்கள், இனமாக எழுவோம் !

தொலை பேசியை எடுத்தால் மணி அடிக்குது ஆனால் யாரும் எடுக்கினம் இல்லை.... BTF காறரின் வேறு தொடர்பிலக்கங்கள் இருக்கிறதா....?? இருந்தால் தந்துதவவும்...!

இது சம்பந்தமான பிரச்சாரங்கள் தமிழ் ஊடகங்களில் அறவே இல்லை எண்டது தான் உண்மை...

  • தொடங்கியவர்

" BTF காறரின் வேறு தொடர்பிலக்கங்கள் இருக்கிறதா....?? இருந்தால் தந்துதவவும்...! "

பல இலக்கங்கள் இதில் உள்ளன:

பிரித்தானியா: போர்க்குற்ற ஆதாதரங்களை சமர்ப்பிக்கும் அலுவலகங்கள் - தமிழர் பேரவை அறிவிப்பு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77182

" BTF காறரின் வேறு தொடர்பிலக்கங்கள் இருக்கிறதா....?? இருந்தால் தந்துதவவும்...! "

பல இலக்கங்கள் இதில் உள்ளன:

பிரித்தானியா: போர்க்குற்ற ஆதாதரங்களை சமர்ப்பிக்கும் அலுவலகங்கள் - தமிழர் பேரவை அறிவிப்பு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77182

நண்றி.... இந்த பகுதியை கவனிக்கவில்லை...

0207 183 4009 எண்ற இலக்கத்தை ஒருவர் தந்தார்.. முயண்று களைச்சு போனேன்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.