Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலை இந்தியாவில் நடத்த அனுமதிக்க முடியாது-மத்திய அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலை இந்தியாவில் நடத்த அனுமதிக்க முடியாது-மத்திய அரசு

புதன்கிழமை, நவம்பர் 17, 2010, 12:43[iST]

டெல்லி: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல்கள் இந்தியா [^] வில் நடத்தப்படும் பட்சத்தில் அதற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை [^] எடுக்கப்படும் என, மத்திய அரசு [^] எச்சரித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்டமாகப் பார்க்கப்படும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கு, உலகம் முழுக்க பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா போன்ற நாடுகளில் தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டதைப் போல இந்தியாவிலும் நாடுகடந்த அரசாங்கத்துக்கான தேர்தல் நடத்தப்படும் அந்த அரசின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் அண்மையில் அறிவித்தார்.

கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் தொடர்பாளரிடம், இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, "இவ்வாறான தேர்தல் எதையும் இந்தியாவ்ல் நடத்த முடியாது. அதனை இந்திய அரசு அனுமதிக்காது. மீறி நடந்தால் கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளை கடந்த 1992ம் ஆண்டு தடை செய்தது. இந்தத் தடை இன்று வரை தொடர்கிறது.

இலங்கையில் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் யுத்தம் நிறைவடைந்த போதும், இந்தத் தடை விலக்கப்படவில்லை. இன்னும் இரு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

thatstamil

இதன்மூலம், நாடு கடந்த தமிழீழ அரசு இந்தியாவை தமிழர் பக்கம் ஆதரவாக திருப்ப முனைகின்றது. இது சரியான அணுகுமுறையா இல்லையா என தெரியவில்லை.

இதற்கு ஏன் இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது? அதுவும் தெரியவில்லை.

நாடு கடந்த தமிழீழ அரசு நடத்திய தேர்தல்கள் நடந்த பல நாடுகளில், மக்களாட்சி நடக்கும் நாடுகளில், இந்த மாதிரி தேர்தல்கள் நடந்தன. இங்கும் பல நாடுகளில் விடுதலை புலிகள் தடை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தேர்தலுக்கும் தமிழரின் நியாயமான விடுதலைப்போரட்டதிற்கும் உள்ள பண்புகளையும் மேற்கைத்திய நாடுகள் இந்தியாவைவிட கூடுதலாக புரிந்துள்ளன.

ஆனால், இந்தியாவில் ஆறுகோடி தமிழர்கள் வாழ்வதையும் அவர்கள் ஒருநாளுமே விழித்துக்கொள்ளாமல் தக்கவைத்தலே இதன் நோக்கமோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இத்தேர்த்தலை நடாத்தவிடாமல் தடுத்தால் அது ஜனநாயக நாடு இல்லை என்பதை இதன் மூலம் உலகுக்கு நிரூபிக்கலாம்.

1.தேர்த்தலை நடாத்துவதன் மூலம் 6 கோடி தமிழர்களில் இருந்து எமக்கான பிரதிநிதிகளை தேர்வதன் மூலம் எமது போராட்டத்துக்கான ஆதரவு சக்திகளை அதிகரிக்க முடியும்.

2.நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு பயங்கரவாத இயக்கமல்ல.அதனை ஜனநாயரீதியாக மேற்குநாடுகள் இயங்க விடும் போது இந்தியா இயங்க விடாமல் தடுப்பதன் மூலம் அதன் முகத்திரையை கிழிக்கலாம்.(எமக்கு இவர்கள் ஒரு போதும் உதவவில்லை. இனியும் எதிர்பார்ப்பது மடமை)

3.மகிந்த சகோதரர்களின் தமிழர் மீதான அராஜகங்களை உலகின் எல்லா நேச சக்திகளையும் திரட்டுவதன் மூலம் அம்மக்களின் மீதான அராஜகங்களை குறைக்கலாம்.

4.இத்தகைய தேர்த்தல்களை இலங்கை , இந்தியாவில் தடுக்குமிடத்து (இலங்கையில் நடாத்த விடாததினால் தான் நாடு கடந்த அரசு உதயமானது) இந்தியாவும் தமிழின அழிப்புக்கு உதவியது என நிறுவுவது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் எம்மவர் மத்தியில் ஆக்கள் இருக்கினம்.. புலிகள் தான் இந்தியாவின் எதிரிகள். மற்றும்படி இந்தியா தமிழ் மக்களின் நலனில் அக்கறையுள்ள தன்னிகரற்ற நாடு என்று சொல்லவும்.. நம்ப வைக்கவும்.

இந்தியா எப்போதுமே தமிழீழக் கொள்கையை எதிர்க்கும் நாடு. சிறீலங்காவை தன் வசம் வைத்துக்கொள்ள அது எங்களின் பிரச்சனையில் தலையிட்டு எமக்கு ஆதரவளிப்பது போல நடித்ததே அன்றி.. உண்மையில் இந்தியா தமிழ் மக்களின் விடிவுக்கு குறிப்பாக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தாயகக் கோட்பாட்டை அங்கீகரித்து தீர்வு பெற்றுத் தராது. அது தான் அதன் நிரந்தரக் கொள்கை.

இவ்வளவு காலமும் புலிகளை எதிரியாகக் காட்டி எமது போராட்டத்தின் ஆயுத வழிப் போராட்டத்தை ஒடுக்கிய இந்தியா இப்போ.. அரசியல் தீர்வு முயற்சிகளையும் அடியோடு கைவிட்டு விட்டது.

இந்த நிலையில் ஜனநாயக வடிவில் உருவெடுக்கும் தமிழீழக் கொள்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்பது பகற்கனவு. அப்படி ஆதவளித்தாலும் அதன் பின்னால் இந்திய நலன் மட்டுமே மிகுந்திருக்கும்.. நிச்சயம் எமக்கான விடுதலையின் அவசியம் அதில் பொதிந்திருக்காது. இன்றைய நிலையில் அப்படி ஆதரவளிக்க வேண்டிய நேரடித் தேவையும் இந்தியாவிற்கு இல்லை.

இதை உருத்திரகுமாரன் உணர்ந்திருந்த போதும்.. இந்தியாவின் கபடக் கொள்கையை தெளிவுபடுத்தவே இப்படி ஒரு அறிக்கையை விட்டுருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. அல்லது நாடு கடந்த அரசின் இந்தியாவுக்கான சகிக்ஞையோ தெரியவில்லை.

இன்றும் சிலர் வரதராஜப் பெருமாள் டக்கிளஸ் போன்ற இந்திய வாழல்பிடிகளால்.. எமக்கு விடிவு கிட்டும் என்று நம்பிக் கொண்டிருப்பதும் இன்றி அவற்றை பிரச்சாரமாகவும் காவித்திரிகின்றனர். இவர்களுக்கு இது மீண்டும் படிப்பிக்கப்படும் ஒரு நல்ல பாடம்.

இந்தத் துரோகிகள்.. புலிகள் மீதிருந்த காண்டில்.. இந்தியாவோடு சேர்ந்து எமது அரசியல் உயிர் நாடியையே அறுத்தெறிந்திருக்கிறார்கள் என்பதை மக்கள் மறக்கக் கூடாது. :D

Edited by nedukkalapoovan

வரப்போகின்ற இந்திய தேர்தலில் இந்த விடயம் பெரிதுபடுத்தப்பட வேண்டும் என தோன்றுகின்றது.

தலைவி சோனியாவும் முதல்வர் கருணாநிதியும் ஏற்கனவே இது பற்றி கடிதங்களை வெளிப்படையாக எழுதி, பரிமாறி தமிழ் மக்களில் மீண்டும் மீண்டும் சவாரி செய்ய நினைக்கிறார்கள்.

1. அனுமதிக்க மறுக்கும் மத்திய அரசு மீது, தமிழக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அழுத்தம் கொடுத்தல் ஒரு அணுகுமுறையாக அமையலாம்.

2. இல்லை உதாரணத்திற்கு "திருகோணமலையை" உங்களுக்கே தாறம் "சீனாவுடன்" ஒரு உறவும் வைக்கமாட்டோம் என ஒரு "டீலை" பேசிப்பார்க்கலாம்.

3. இல்லை, கள உறவு ஒன்று கூறியமாதிரி, இந்திய அரசியல், தேசிய மொழியான "இலஞ்சத்தை" பாவிக்கலாம்.

எப்படியாயினும் இந்தியாவை சிங்களத்திற்கு எதிராக திருப்புவதே தமிழினத்தின் இன்றைய அரசியல் சாணக்கியமாக முதன்மை பெறுகின்றது என எண்ணத்தோன்றுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.