Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் பேரவல ஈராண்டு நிறைவு! - இனி தமிழர் என்ன செய்ய வேண்டும்?

Featured Replies

முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து ஆண்டுகள் இரண்டாகி விட்டன. முள்ளிவாய்க்கால் என்பது தமிழர் மீது சிங்கள பேரினவாதம் நிகழ்த்திய இனப்படுகொலையின் அதியுச்ச வடிவமாகவும் கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக தமிழர் அரசியலின் உந்துசக்தியாகவும் வழிகாட்டியாகவும் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வீரச்சாவடைந்ததை நினைவுகொள்ளும் நாளாகவும் காலத்தால் அழியாது என்றும் நிலைத்திருக்கும்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் வீரச்சாவடைந்த தலைவர், தளபதிகள், போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் பொங்குதமிழ் தனது வீரவணக்கத்தை சமர்ப்பித்து அஞ்சலி செலுத்தும் அதேநேரம் தமிழர் அரசியலின் அடுத்த காலடிகள் குறித்தும் எமது சிந்தனைகளை முன்வைக்க விரும்புகிறோம்.

இந்த இரண்டு ஆண்டுகளில் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் எத்தகைய மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது?

ஈழத் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வு எவ்வாறு அமையப் பெற்றுள்ளது?

தற்போதய சூழலில் ஈழத் தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் சவால்கள் எவை? அச்சுறுத்தல்கள் எத்தகையன?

இச் சவால்களை, அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தமிழர் தேசம் தன்னகத்தே கொண்டுள்ள வாய்ப்புக்கள் எவை?

இன்றைய சூழலில் தமிழர் தேசத்தின் அரசியல் தலைமைகளின் கடமைகள் பொறுப்புக்கள்தான் எவை?

இவை குறித்த ஒரு மதிப்பீட்டினை கணக்கீடு செய்வது இன்றை காலத்தின் தேவை என உணர்கிறோம். இவை விரிவாக ஆராயப்படவேண்டியவை. இருந்தபோதும் முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் நாம் உடனடியாக எடுத்து வைக்க வேண்டிய சில காலடிகள் குறித்த சில விடயங்களை வெளிப்படுத்த விரும்புகிறோம்.

மே 2009 க்கு முற்பட்ட 20 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் தலைமை களத்திலும் புலத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிடம் இருந்த காலம். தமிழீழ மக்களின் தேசியப்பிரச்சினைகளுக்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசே ஒரே தீர்வாக அமைய முடியும் எனும் அடிப்படையில் ஆயுதம் ஏந்திப் போராடிய காலகட்டம். ஈழத் தமிழர் தாயகத்தின் பெரும்பகுதி நிலப்பரப்பு சிங்கள ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து விடுவிக்கப்பட்டு விடுதலைப்புலிகளின் தலைமையில் தமிழர்களின் நடைமுறை அரசு (defacto state) உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்த வேளை அது. தமிழீழ மக்கள் தமது அரசியல் இலக்கினை அடைந்து கொள்வதற்கான பலத்தை விடுதலைப்புலிகள் அமைப்புக்கூடாகத் திரட்டி வைத்திருந்த நாட்கள் அவை.

முள்ளிவாய்க்கால் வரலாற்றுப் பெருந்துயர் நிகழ்ந்தபோது விடுதலைப்புலிகள் அமைப்பு இராணுவரீதியில் அழிவுண்டு போனது. ஈழத் தமிழ் மக்களின் அரசியற்பலம் பெருமளவில் சிதைவுண்டு போனது. தமிழர் தாயகம் முழுமையான சிங்கள ஆக்கிரமிப்புக்குள்ளாகிப் போனது. போர்ப்பூமியில் வாழ்ந்த மக்களின் வாழ்வு உருக்குலைந்து போனது.

ஈழத் தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்ட மக்களாகிப் போயினர். மக்கள் மட்டுமல்ல அரசியல் தலைவர்களது நிலையும் அவ்வாறனதே. ஆதலால் அங்கு வெளிப்படும் அரசியலும் அச் சூழலின் தாக்கத்துக்கு உட்பட்டதாகவே அமையக் கூடியது தமிழீழத் தனியரசு என்பதற்குப் பதிலாக சுயாட்சி அடிப்படையிலோ அல்லது ஒரு நாடு இரு தேசங்கள் என்ற அடிப்படையிலோ அரசியல் தீர்வு காண்பது குறித்த நிலைப்பாடு தமிழ்த் தேசிய அரசியலாக வெளிப்படுகிறது.

புலத்தில், இராணுவ ஆக்கிரமிப்பில்லாத சூழலில் தமிழீழத்தை மையம் கொண்ட அரசியலே முக்கியத்துவம் பெறுகிறது. தமிழீழ மக்களுக்கு சிறிலங்கா அரசால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் கொடுமைகளுக்கும் இனவழிப்புக்கும் நீதி கோரும் நடவடிக்கைகளும் முதன்மை பெறுகின்றன. விடுதலைப்புலிகள் அமைப்பு களத்தில் இராணுவரீதியில் அழிக்கப்பட்ட நிலை தமிழ் மக்களை அரசியல்ரீதியாகப் பலவீனப்படுத்தியுள்ள சூழலில் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதில் வெவ்வேறு வகையான கருத்துக்களும் எண்ணக்கருக்களும் தோற்றம் பெற்றுள்ளன.

இவை வெவ்வேறு வகை அமைப்புக்களை உருவாக்கியுள்ளன. இந்த வகையில் புலத்தில் உருவான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலகத் தமிழர் பேரவை, மக்களவைகள் போன்ற அமைப்புக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

களத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது ஈழத் தமிழ் மக்களின் தலைமைப் பாத்திரத்தை வகிக்கிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அங்குள்ள அரசியல் வெளியின் எந்த அளவு வரை செல்ல முடியுமோ அதுவரை சென்று தமிழ்த் தேசிய அரசியலை வலுப்படுத்த விரும்புகிறது. தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பும் தேசிய அரசியலை கையில் எடுத்துள்ளது.

இத்தகையதொரு சூழலில், ஈழத் தமிழர் தேசம் தனது அரசியல் பலத்தை பெருக்கிக் கொள்ள உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளதான் எவை?

1. தமிழ்த் தேசிய நிலைப்பாடு கொண்ட அமைப்புக்கள் தமக்கிடையே ஒரு புரிந்துணர்வுக்கு வரவேண்டியது மிக உடனடி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இத்தகைய புரிந்துணர்வை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்பது குறித்து ஆழமாகச் சிந்திக்கப்பட வேண்டும்

இதற்குரிய முதற்படியாக ஒருவரை எதிர்த்து மற்றவர் செயற்படும் நிலை நிறுத்தப்பட வேண்டும். மாறுபட்ட கருத்துக்களை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் மாறுபாட்டோடு செயற்படுவதில் ஒரு உடன்பாடு (agree to disagree) காணப்பட வேண்டும்.

2. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் போராளிகளின் நலன்களை பேணுவதில் களத்திலும் புலத்திலும் உள்ள தமிழர் தேசிய நிலைலைப்பாட்டினைக் கொண்ட அமைப்புக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தற்போது இது குறித்து கொடுக்கப்படும் கவனமும், அர்த்தமுள்ள வகையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளும் போதியளவில் இல்லை என்பதனை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

3. தமிழ்களின் நீதி கோரும் பயணத்தில் ஜக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையும் காத்திரமான பாத்திரத்தை வகிக்கக் கூடியது. இவ் அறிக்கை அனைத்துலக பெரும் அரசியல் சக்திகள் தமது நலன்களை எட்டிக் கொள்வதற்கான கருவியாக மட்டும் பயன்படும் நிலை தோன்றாத வகையில் தாயகத்திலும் புலத்திலும் உள்ள தமிழர் தலைமைகள் தமது வியூகங்களை வகுத்துச் செயற்படவேண்டும்.

முள்ளிவாய்க்கால் நினைவுகள் அர்த்தமுள்ளவையாக அமைய இக் குறைந்தபட்ச விடயங்களை நாம் நிறைவேற்றியாக வேண்டும். நமது அரசியல் தலைவர்கள் இவற்றைத் தமது கவனத்திற் கொள்ள வேண்டும் என்பதே எமது பேரவா.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={3E871CBD-C005-49D0-9DAB-A64D95978F84}

Edited by akootha

  • தொடங்கியவர்

அன்பான கள உறவுகளே,

இந்த திரியில் எந்தவிதமான பதில்களையும் முன்வைக்க உங்களுக்கு முழு உரிமை இருந்தாலும், "இத்தகையதொரு சூழலில், ஈழத் தமிழர் தேசம் தனது அரசியல் பலத்தை பெருக்கிக் கொள்ள உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளதான் எவை? " என்ற கேள்விக்கு முன்வைக்கபட்ட பதில்களை அலசுவதும், ஆராய்வதும் அடுத்த முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் எமது மக்கள் முழு அரசியல் உரிமையுடனும் வாழ வழிசமைக்கும்.

நன்றி

அகூதா

  • தொடங்கியவர்

புலம்பெயர் தமிழர்களில் ( பத்து இலட்சம் ), கூடிய பகுதியினர் கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா போன்ற ஒரே பாராளுமன்ற கட்டமைப்புள்ள நாடுகளில் வாழ்கிறனர்.

கனடாவில், ஒரே தொகுதியில் வாழும் ஐந்து பேர், தமது பாராளுமன்ற உறுப்பினரை சந்திக்க ஒரு வாய்ப்பு தரக்கேட்கும் பொழுது அது தரப்பட்டும். அந்த வேளையில்:

-- நீங்களும் உங்கள் கட்சியும் ஐ.நா. அறிக்கைக்கு ஆதரவு தாருங்கள் எனக்கேட்கலாம்

-- சிங்களம் ஐ.நா. அறிக்கைக்கு ஒத்துழைக்காவிடில், பொருளாதார தடை போடக்கேட்கலாம்

அன்பான கள உறவுகளே,

இந்த திரியில் எந்தவிதமான பதில்களையும் முன்வைக்க உங்களுக்கு முழு உரிமை இருந்தாலும், "இத்தகையதொரு சூழலில், ஈழத் தமிழர் தேசம் தனது அரசியல் பலத்தை பெருக்கிக் கொள்ள உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளதான் எவை? " என்ற கேள்விக்கு முன்வைக்கபட்ட பதில்களை அலசுவதும், ஆராய்வதும் அடுத்த முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் எமது மக்கள் முழு அரசியல் உரிமையுடனும் வாழ வழிசமைக்கும்.

நன்றி

அகூதா

அது தான் உண்மையிலும் உண்மை அகூதா. அலசி அராய்ந்து சரியான செயல்வடிவம் கொடுப்பதுதான் நம் ஒவ்வொருவரினதும் கடமை,அதுதான் காலம் நமக்கு இடும் கட்டளை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.