Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருணாநிதி எதற்காக தமிழ் இனம் அழிவதை வேடிக்கை பார்த்தாரோ இன்று அவைநிறைவாக நடக்கின்றன.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி எதற்காக தமிழ் இனம் அழிவதை வேடிக்கை பார்த்தாரோ இன்று அவைநிறைவாக நடக்கின்றன. ஈழ தமிழர்களது பாவம் சும்மாவிடுமா?

சனி, 21 மே, 2011

எந்த ஆட்சி குடும்ப உறவு நிலைக்க வேண்டும் என்பதற்காக இனம் அழிவதை வேடிக்கை பார்த்தாரோ அவை இன்று நிறைவாக நடைபெற்றுவருகின்றது. முள்ளிவாய்க்கால் வரை விரட்டப்பட்ட தமிழினம் அழியும் தறுவாயில் கூட இந்த ஆட்சி அதிகார போதை தலைக்கேறிய கருணாநிதியை நம்பியல்லவா அபயக் குரலெடுத்து காப்பாற்றுமாறு கதறித்துடித்தார்கள்.

எமது இனத்தை சிங்களத்துடன் இணைந்து அழித்தது கருணாநிதிக்கு ஆடசிப் பிச்சை போட்ட சோனியாகாந்தியின் காங்கிரசல்லவா...? எப்படி சொக்கத் தங்கம் சோனியாவை மீறி இனத்திற்காக குரல்கொடுப்பது? அப்படிச் செய்வதற்கு கருணாநிதி என் முட்டாளா...?

எவ்வளவு கஸ்ரப்பட்டு சேடம் இழுத்துக் கொண்டிருக்கும் மைனாரட்டி தி.மு.க. அரசை இனத்தை அடமானம் வைத்து காப்பாற்றுவாரா இல்லை போனால் போகட்டும் என்று எல்லாவற்றையும் தூக்கி எறிந்து தமிழினத்தை காப்பாற்ற முயற்சி செய்திருப்பாரா?

கருணாநிதியின் அகராதியில் பணம் பதவி பட்டம் பாசஉறவுகள் பாராட்டுவிழாக்கள் என்பவைக்குதான் முதலிடம். ஒருவேளை முள்ளிவாய்க்கால் யுத்தக்களத்தில் மேடை அமைத்து ஒரு பாராட்டுவிழாவினை எமது சொந்தங்கள் நடத்தியிருந்தால் தலையிட்டு காப்பாற்றியிருப்பார். இல்லையே...! எதுவும் கைகூடவில்லையே.

ஈழத்து கவி புதுவை ரத்தினதுரை அய்யா சொன்னது போல் கையெடுத்து கும்பிட்ட கடவுளரும் கைவிட்டனரே எமது இனத்தை. இப்போது புரிகின்றது அல்லவா கருணாநிதிக்கு அந்த ஆட்சி அதிகாரம் எவ்வளவு தூரம் அவசியமாகப்பட்டது என்று.

பெறுமானம் கணிக்க முடியாதளவிற்கு உலகமகா ஊழலை செய்து ஏப்பம் விட்டு திருட்டு முழி முழித்துக் கொண்டிருந்த கருணாநிதி குடும்பத்தின்நிம்மதி பாதுகாப்பு எல்லாமே அந்த ஆட்சி அதிகாரமல்லவா நிலை நிறுத்தியிருந்தது.

அதனால்தானே ஆட்சியதிகாரம் பறிபோனபின் சீட்டுக்கட்டு போல் அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. அன்பு மகள் கனிமொழி தீகார் ஜெயிலில் களி தின்ன வழியனுப்பி வைக்க வேண்டிய துர்ப்பாக்கிய தந்தையாகவல்லவா இன்று கருணாநிதியை வரலாறு கொண்டுவந்து விட்டுள்ளது.

இனம் அழிந்தாலும் பறவாயில்லை எனது நாற்காலி பத்திரமாக இருந்தால் காணும் என்றுதானே செயற்பட்டீர்கள். நம்பி கையெடுத்து அபயம் தேடிய இலட்சம் தமிழ் உயிர்களை கைவிட்டு முள்ளிவாய்க்காலில் மூச்சடங்க வைத்தீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக எமது தேசத்தாய் பார்வதியம்மாவைக் கூட உங்கள் அரசியல் சுயலாபத்திற்காக அலைக்கழித்து மரணப்படுக்கையில் கிடத்தி எம்மை விட்டு நிரந்தரமாக பிரித்தீரே ஞாபகம் உள்ளதா கருணாநிதி தாத்தா.

இப்பதானே தமிழக மக்கள் உங்களிற்கு நிரந்தர ஓய்வைத் தந்துள்ளார்கள். ஆறுதலாக இருந்து ஒவ்வொன்றாக அசைபோட்டுப் பாருங்கள். கடந்து வந்தபாதை அவ்வளவு தொலைவினில் போய்விடவில்லை. மிக மிக அருகாமையில்தான் உள்ளது. அதனால் சட்டென்று ஞாபகத்திற்கு வரும்.

ஒவ்வொன்றிற்கும் ஒரு எதிர்வினை உண்டு. அதைவிட அறம் வலியது என்பது எம்மைவிட இப்போது உங்களிற்குதான் நன்றாக தெரியும். இலட்சம் தமிழர்களது இரத்தப்பழி உங்களது வம்சத்தையே சர்வநாசமாக்கும் வல்லமை கொண்டது.

இப்போதானே ஆட்டம் ஆரம்பித்துள்ளது. வெயிட் அன் சீ. இனி வரப்போறதுதான் கண்ணா மெயின் பிக்சரே.... ஹஹ...ஹஹ. இனத்திற்கு செய்த துரோகத்தின் தண்டனையாக முதலில் ஆட்சி அதிகாரம் பறிபோனது. இப்போ பாசத்திற்குரிய துணைவியரின்(அதிகார பூர்வமாக மூன்றாவது மணைவியின்) மகள் கனிமொழி சிறை செல்வதை இதயம் வலிக்க கண்கள் பனிக்க பார்க்கும் கொடுமை ஏற்பட்டுள்ளது.

இனிவரும் நாட்களில் இனத்தை அடமானம் வைத்ததற்கான உண்மையான விலையினை அனுபவிக்க வேண்டும் என்பது முள்ளிவாய்க்காலில் மூச்சடங்கிப்போன எம் சொந்தங்கள் அளித்துள்ள தீர்ப்பாகும். இதில் எமது தேசத்தாய் பார்வதியம்மாவின் பங்கு இருக்கவாய்ப்பில்லை. ஏன் என்றால் அது அவர்களது பிறவிக்குணம். ஏன் கலைஞர் அய்யா இப்படிச் செய்தவர் என்று கேட்டதுடன் தனது ஆதங்கத்தை நிறுத்திக் கொண்ட பண்பாளர் அவர்.

திணை விதைத்தவன் திணையினை அறுவனடை செய்வது போல வினை விதைத்தவன் வினையை அறுவடை செய்யத்தான் வேண்டும். இது நாங்கள் ஒன்றும் புதிதாய் சொல்வது அல்ல. தமிழை கரைத்து குடித்து பழம் தின்று கொட்டை போட்டவர் அல்லவா நீங்கள். உங்களிற்கு தெரியாமல் இருக்குமா....?

எமது சொந்தங்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டுள்ளார்கள். நிட்சயமாக துரோகத்திற்கான தண்டனையினை பெற்றுத்தர எழுந்து வருவார்கள்.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

நன்றி விடுதலை.

அரசன் அன்றறுப்பான்............................

தெய்வம் நின்றறுக்கும்............................................................................................................................................................................................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.