Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. வல்வை சகாறா

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    5818
    Posts
  2. அபிராம்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    3
    Points
    173
    Posts
  3. தயா

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    1
    Points
    11015
    Posts
  4. sathiri

    கருத்துக்கள உறவுகள்
    1
    Points
    5107
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/22/10 in all areas

  1. பாகம் பன்னிரண்டு கோம்பாவில் குளத்தடியால் வந்த ராணுவத்தையும் தேவிபுரம் காட்டுப்பகுதியால் வந்த ராணுவத்தையும் இரணைப்பாலை வடக்கு பகுதியில் மறித்து உக்கிர சமர் நடத்தினர் புலிகள். கடும் சமர்க்களம் அது. தளபதி லோரன்ஸ், தளபதி தீபன் வழி நடத்தலில் புலிகள் தீரமாக சண்டை போட்டனர். அந்த களமுனையின் காவலரணில் ஒரு தொகுதி தலைவனாக என்னை நியமித்து இருந்தனர். ஒரு நாள் மாலை பொழுதில் அவள் வந்தாள். பின்னால் இருந்து ஒரு பழக்கமான குரலில் அண்ணா என்று கூப்பிட்ட போது, திரும்பிய என்னை அவளின் அழகான புன்னகை மூலம் அன்பை காட்டினாள். அவள் வேறு யாருமில்லை என் உடன் பிறவா கள தங்கை கலையரசி தான். கேப்பாபுலவு களமுனைக்கு பிறகு இப்போ தான் சந்திக்கிறேன். ஒரு நாற்பது நாள் இடைவெளி. எவ்வளவு மாற்றம் காலங்களில். எதிரி புதுக்குடியிருப்பை பிடித்து இரணைப்பாலை வரை வந்துவிட்டான். மறுபக்கத்தாலே விசுவமடுவில் இருந்த இராணுவம் உடையார்கட்டு, சுதந்திரபுரம், தேவிபுரம் பிடித்து இரணைப்பாலை வடக்கு வரை வந்துவிட்டான். மக்கள் புதிய பாதுகாப்பு வலயம் என்று அறிவித்த புதுமாத்தளன், பொக்கணை, வலைஞர்மட பகுதிகள் நோக்கி நகர்ந்துவிட்டார்கள். இடைவிடாத செல் மழை, கிபிர் குண்டுவீச்சுகள், பல்குழல் எறிகணைகள், கொத்து குண்டுகளுக்கு நடுவில் மக்களுக்காக மறவர்கள் தீராத மனவுறுதியுடன் போராடினார்கள். இவற்றுக்கும் மத்தியிலும், போராளிகளின் மனவுறுதியை குலைப்பதற்காக, மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் வரும், வழங்கல் (உணவு) தொகுதிக்கும் அடிக்கடி குறி சூட்டு (சினைப்பர்) தாக்குதல் மூலம் தடுத்து நிறுத்தினான் சிங்கள ராணுவம். சிலவேளைகளில் ஐந்து நாட்களுக்கு கூட சாப்பாடு இல்லாமல் சண்டை போட்டார்கள் போராளிகள். அது அவர்கள் மக்கள் மேல் வைத்த பாசத்தின் வெளிப்பாடு. ஒரு நேர சாப்பாடு தராவிட்டாலும் அம்மாவுடன் சண்டைபோட்ட நாங்கள், ஐந்து நாட்கள் சாப்பாடு வராவிட்டாலும் யாரையும் நோகாமல எதிரியுடன் சண்டை போட மக்கள் மீது எவ்வளவு பாசம் வேண்டும். அது சில வேளைகளில் அவர்களின் அம்மா மீது இருந்த பாசத்தை போல பல மடங்காக கூட இருக்கலாம் இல்லையா.? பட்டினிக்கும் மனவுறுதிக்குமான போராட்டத்தில் மனவுறுதி வென்றாலும், சில வேளைகளில் வயிற்றுபசி எங்களுக்கு சில நோய்களையும்,எரிச்சலையும், சிந்தனை குலைவையும் ஏற்படுத்துவதுண்டு. வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பால் படும் வேதனையை தவிர்க்க, தென்னங்குருத்துகளையும், புளியம் இலைகளையும் ஏன் சில வேளைகளில் பூவரசமிலைகளையும் சாப்பிட்டு அந்த வயிற்று எரிவை குறைத்து இருக்கிறோம். ஏறத்தாழ ஆடுமாடுகள் போல எம்மை மாற்றி கொண்டோம். எல்லாம் எம் மக்களுக்காக என்ற உணர்வு, எங்களை இந்த இலைகுழைகளை கூட அமிர்தமாக உண்ண வைத்தது. இதை கூட என்னால் வார்த்தைகளால் உங்களுக்கு புரிய வைக்க முடியாது. எல்லாம் உணர்வு. அன்றும் அப்படி தான். எனக்கு இரண்டு மூன்று நாளாக காய்ச்சல். பட்டினி, உடலில் சத்தின்மை, அசுத்த நீர் இதில் ஏதாவது ஒன்றினால் தான் அந்த காய்ச்சல். இருந்தும் களத்தை விட்டு நகரமுடியாத நிலை. எனக்கு ஆறுதலாக இருந்தவள் கலையரசி தான். எதிரிக்கு தெரியாமல் அடுப்பு மூட்டி, கொதிநீர் வைத்து தருவாள். குடிக்கவும் ஒத்தணம் பிடிக்கவும். என் கூட பிறந்த தங்கை அந்த இடத்தில் இருந்தால் என்ன செய்வாளோ அதை விட அதிகமாக செய்தால் என் அன்பு தங்கை கலை. இரண்டு நாளாக சாப்பாடும் இல்லை. வாயெல்லாம் கசத்தது. ஏதாவது புளிப்பாக சாப்பிட வேண்டும் போல இருந்தது. கலையிடம் கெஞ்சினேன். "அண்ணா உனக்கில்லாததா.. இரு இப்பவே கொண்டு வாறன்" என்று சொல்லிவிட்டு போனவள் தான். ஒரு படீர் என்ற வெடிச்சத்தம். அதை தொடர்ந்து "அண்ணா....." என்ற அலறல் என்னை திடுக்கிட்டு எழும்ப வைத்தது. காய்ச்சலுடன் சத்தம் வந்த திசை நோக்கி ஓடினேன் கையில் என் ஆயுதத்தையும் எடுத்து கொண்டு. அங்கெ எங்களுக்கும் எதிரிக்குமிடைப்பட்ட பகுதியில் இருந்த புளியமரத்துக்கு கீழே, கையில் கொத்தாக புளியமிலையுடன், என் தங்கை உயிரை விட்டிருந்தாள். நெத்தியில் இருந்து வந்த அவளின் குருதி மண்ணை நனைத்திருந்தது. இந்த பாழாய் போன அண்ணனுக்காக, காய்ச்சலுடன் நான் கேட்டேன் என்ற கடமைக்காக, ஒரு கொத்து புளியமிலைக்காக, இந்த மண்ணுக்காக என் தங்கை, இந்த மண்ணிலே வீழ்ந்து கிடக்கிறாள். எனக்கே களம் என்றும் பாராமல் ஓஒ ... என்று கத்தி அழனும் போல இருக்கு..உங்களுக்கு அப்படி இல்லையா உறவுகளே.. போராளிகள் என்றால் கல் மனம் படைத்தவர்கள் அல்ல. அவர்களும் உங்களை போல தான். அவர்களுக்கும் உணர்வுகள் இருக்கும். சாவுகள், இரத்தம், சதைகள் என அவர்களின் மனசை இறுக்கி இருந்தாலும் சில வேளைகளில் அவற்றையும் மீறி உணர்வுகள் வெளிபடுவது தவிர்க்க முடியாமல் போய்விடும். ஏன் என்றால் நாங்களும் மனுஷர் தானே உறவுகளே..எங்களுக்கு மட்டும் கடவுள் மனசை கல்லாக படைக்கவில்லை தானே .. அங்கெ நடந்ததை என்னால் ஊகிக்க முடிந்தது. கலை கொஞ்சம் உயரம் குறைவானவள். அதுவே அவளுக்கு எமனாகவும் வரும் என்று எள்ளளவும் யோசித்தும் இருக்கமாட்டாள். எங்கள் நிலைகளுக்கு பின்னால் இருந்த புளியமரத்தில் தாழ்வாக இருந்த இலைகள் எல்லாம் கடந்த ஒன்பது பத்து நாட்களாக போராளிகளின் வயிற்றுபசிக்காக பிடுங்கபட்டு மொட்டையாக இருந்தது. உயரத்தில் இருந்தவை அவளுக்கு எட்ட வாய்ப்பில்லை. ஏறி தான் பிடுங்கவேண்டும். ஏறி பிடுங்கும் போது குறி சூட்டு தாக்குதலுக்கு இலக்காகலாம் என்ற நிலையில், எங்கள் அரணுக்கு முன்னால் இருந்த மரத்தில் தாழ்வாக இருந்த இலைகளை பறித்து கொண்டு ஓடிவந்திடலாம் என்று முடிவெடுத்து அதனை செயற்படுத்திய போது தான் அவள் கொடிய எதிரியின் குறி சூட்டுக்கு இலக்காகி இருக்கிறாள். என்னால் என் தங்கையின் உயிரை தான் காப்பற்ற முடியவில்லை. அவளின் புகழுடலையாவது எதிரியின் கைகளில் சிக்காமல் எடுத்து அவளின் குடும்பத்தினரின் கைகளில் சேர்ப்பிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஒரு அண்ணனாக நான் இதைக்கூட செய்யணும் இல்லையா என் உறவுகளே..? பதுங்கி நிலையெடுத்து, ஊர்ந்தபடி அவளின் புகழுடல் இருந்த இடத்தை அண்மித்துவிட்டேன். மீண்டும் படீர் என்ற சத்தம். என் காலை பதம் பார்த்தது கொடிய சிங்கள எதிரியின் குறி சூட்டு சன்னம் ஒன்று. என் தொடைகளை ஊடுருவி மறுபக்கத்தால் சென்று இருந்தது. சத்தம் கேட்டு ஓடி வந்த என் சக போராளிகளை சைகை மூலம் நிறுத்திவிட்டு, அந்த புளியமரத்தின் வேர்களுக்குள் உருண்டு மறைந்து கொண்டேன். உடலை தூக்க வரும் போராளிகளுக்காக வெறியுடன் காத்திருந்தான் அந்த கொடிய குறி சூட்டாளன். மறைந்திருந்தவாறே என் ஆயுதத்தை நிமிர்த்தி, எதிரிகளின் நிலைகளை நோக்கி எழுந்தமானத்துக்கு சுட்டு என் கோபத்தை காட்டினேன். கால் விறைத்து, இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. கள மருத்துவ இறுக்கி துணியை (பில்ட் கொம்பிரசறை) எடுத்து என் காலை சுற்றி கட்டினேன். என்ன விலை கொடுத்தாவது என் தங்கையின் உடலை எடுத்தே தீருவது என்ற மன வைராக்கியத்தை என்னுள் வளர்த்து கொண்டேன். இந்த வைராக்கியம் இதை கேட்கும் உங்களுக்கு வந்திருந்தாலும் ஆச்சரியமில்லை உறவுகளே. ஏன் என்றால் அங்கெ விழுந்திருப்பது என் தங்கை மட்டும் இல்லை. உங்கள் தங்கையும் கூட. என்னில் இருந்து ஒரு நான்கு அல்லது ஐந்தடி தள்ளி தான் அவள் உடல் இருந்தது. தனது ஆசை அண்ணனுக்கு பிடுங்கிய புளியமிலை கொத்தை விடாமல் பிடித்திருந்தாள். இந்த இலைகளை எப்படியும் அண்ணனிடம் சேர்த்துவிட வேண்டும் என்ற வைராக்கியம் அவள் முகத்தில் தெரிந்தது. அந்த கனவுடனே மண்ணில் கிடந்தாள், என் மன்னிக்கவும் எங்கள் தங்கை கலையரசி. அருகில் இருந்த ஒரு மொத்த தடியினை எடுத்து அதன் கிளையினை என் தங்கையின் தலை முடியினுள் செருகி, அதனை சுற்றி சிக்கு பட வைத்தேன். பின்னர் என் பலம் கொண்ட மட்டும் இழுத்தேன். என் தங்கை என்னை நோக்கி அசைய தொடங்கினாள். இடையில் அந்த சிக்கு கழன்று தடி விடுபட்டது. ஆனால் நான் என் முயற்சியை விடவில்லை. மறுபடியும் முயன்றேன் என் கை எட்டும் அளவுக்கு வந்து விட்டாள் என் தங்கை. கையால் எட்டி அவள் தலை முடியை பிடித்து எனக்கு அருகில் அவளை , அவளின் உடலை எடுத்து விட்டேன். கட்டி அழனும் போல இருக்கு. உங்களுக்கு இல்லையா ..?? அவளின் கைகளுக்கு நடுவில் இருந்த புளியம் இலைகளை, கண்ணீருடன் சாப்பிட்டேன். இது என் வயிற்றுப்பசிக்காக அல்ல உறவுகளே. இது அவளின் கடைசி ஆசைக்காக.. (தொடரும்) பாகம் பதின்மூன்று இங்கே அழுத்துங்கள்
  2. பாகம் ஒன்பது வாசலை தாண்டி வந்து விட்டோம். வீதியோரம் இருந்த ஈருளியை நிமிர்த்தி சூப்பி போத்தலுக்குள் இருந்த பெற்றோலை கொஞ்சம் குழாயினுள் ஊற்றி, வாயை வைத்து ஊதினார் ரமணன் அண்ணா. மிதியை இரண்டு மூன்று தடவை உதைத்தும் இயங்கவில்லை. மீண்டும் ஒருமுறை குழாயினுள் வாயை வைத்து ஊதினார். ஊ..ஊ..ஊ... கூவிக்கொண்டு வரும் சத்தம் மட்டும் தான் கேட்டது என்னை விழுந்து படுக்க சொல்லி உதைந்துவிட்டு, அப்படியே குனிந்துவிட்டார் ரமணன் அண்ணா. டொமம்ம்ம்ம் ...டொம்ம்மம்ம்மார்... எங்களுக்குக்கு மிக அருகிலேயே வெடித்தன. காதை செவிடாக்கும் சத்தங்கள். இரும்பு துண்டுகளும் பிளாஸ்டிக் துண்டுகளும் சிதறிப்பறந்தன. நாங்கள் போய்வந்த வீடுக்குள் இருந்து புகை மண்டலம் மேலெழுந்தது. அம்மா..யாரவது காப்பாத்துங்க...என்ற கூக்குரல் விட்டு விட்டு கேட்டு கொண்டிருந்தது. அந்த குரல் வந்த வீட்டை நோக்கி ஓடிய என்னை, பிடித்து இழுத்து மீண்டும் படுக்க சொன்னார் ரமணன் அண்ணா. அதன் அர்த்தம் அப்போது புரியவில்லை என்றாலும், ஒரு நிமிடதிலையே எனக்கு புரிந்துவிட்டது. ஆம்.. எங்கே காயபட்டவர்களை காப்பாத்த யாரும் வருவாங்களோ என்று, சிங்கள கொலைவெறி ராணுவம், மீண்டும் அதே இடத்துக்கு ஐந்துக்கும் மேற்பட்ட செல்களை ஏவினார்கள். மீண்டும் பெரும் இடிச்சத்தங்கள்.. கூக்குரல் அடங்கி முனகல்களாயின.. இரண்டு நிமிட இடைவேளைக்கு பிறகு நாங்கள் இருவரும் அந்த வீட்டை நோக்கி ஓடினோம். இரத்தமும் சதைகளும்..ஆடை துண்டுகளும்..கைகள் கால்கள் வேறு வேறாக..தலைமுடிகள் அங்கும் இங்குமாக சிதறி கிடந்தன. சற்று முன்னர் பார்த்த அந்த அழகான குடும்பம் அங்கெ இல்லை. ஐயா இருந்த பிளாஸ்டிக் கதிரை மட்டும் அல்ல..ஐயாவும் உருத்தெரியாமல் சிதறியிருந்தார். அவர் இருந்த இடத்தில் ஒரு கந்தக நெடியுடன் கருமையான குழி மட்டும் தான் இருந்தது. அவர்கள் சமைத்த குழம்புடன், அவர்களின் இரத்தமும் கலந்து அங்கெ வடிந்து ஓடிக்கொண்டிருந்தது. தம்பீ....மிகவும் மெல்லிதாக அந்த முனகல் கேட்டது. ஓடிப்போனேன்..மரங்களுக்கும் உடைந்த சீட்டுகளுக்கும் நடுவில் அந்த அம்மா.ஒரு கால் சிதறி போய் முழங்காலுக்கு கீழே ஒன்றுமில்லை. "தம்பி என்னை காப்பாத்துங்க.." மரங்களை தூக்கி அவவை வெளியிலே எடுத்தோம். நான் தூக்கி கொண்டு ஓடிவர, ரமணன் அண்ணா ஈருளியை கஷ்டபட்டு உதைத்து கொண்டிருந்தார். எங்கள் அவசரம் அதுக்கு கூட புரியாமல் இருந்தது. அம்மாவின் கால்களில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. என் மேலங்கியை கழட்டி அதை சுத்தி கட்டினேன். அதற்கிடையில் புகையை கக்கியபடி ஈருளி இயங்க தொடங்கியது. அந்த அம்மாவை நடுவிலே கிடத்தி நான் பின்னால் அமர்ந்தவாறு அவவை விழுந்து விடாமல் பிடிக்க, ரமணன் அண்ணா அந்த மழையால் சேறாகி வழுக்கும் வீதியில் தான்னால் இயன்ற அளவுக்கு வேகமாக ஓடினார். ஈருளியும் எங்கள் அவசரத்தை புரிந்து கொண்டதாக தெரியவில்லை. குளத்தடியால் சுத்திவாறது என்றால் அதிக நேரம் எடுக்கும் என்று, ஒரு குறுக்கு வழியால் வந்தோம். அங்கேயும் எங்களுக்கு விதி காத்திருந்தது. வெள்ளம் இருந்த அந்த பள்ளத்தில், வேகமாக வந்த நாங்கள் தாண்டிடலாம் என்று நினைத்த போது, ஈருளி சறுக்கி நான், அந்த அம்மா, ரமணன் அண்ணா மூவருமே வெள்ளத்தில் விழுந்தோம். எழும்பிய ரமணன் அண்ணா, ஈருளியை உதைத்து இயங்க வைக்க முயன்று கொண்டிருந்தார். அம்மாவின் கால்களில் இருந்து குருதி வெள்ளத்துடன் கலந்து கொண்டிருந்தது. எனக்கோ என்ன செய்வது என்றே தோன்றவில்லை. என்னை பெத்த அம்மாவே என் கைகளில் இருபதாகவே உணர்ந்தேன். அண்ணே ..நீங்கள் இயக்கி கொண்டு வாருங்கள் நான் கொண்டு ஓடுறேன் என்று அம்மாவை தூக்கி கொண்டு, என்னால் இயன்றவரை ஓடினேன். தம்பி என்னை எப்படியும் காப்பாத்துப்பா..எனக்கு ரொம்ப வலிக்குதுப்பா ..என்று முனகி கொண்டிருந்தார். என்னுடைய அம்மாவே என்னை பார்த்து கெஞ்சுவது மாதிரியே இருந்தது. அம்மா ஒண்டுக்கும் யோசிகாதீங்கள். உங்கள் மகன் நான் இருக்கிறேன் உங்களை எப்படியும் காப்பாத்துவேன். என்னால் இந்த வாய் ஆறுதலை தவிர எதையுமே செய்ய கூடிய நிலையில் நான் இல்லை. ஓடினேன் ..ஓடினேன்..என்னால் முடியும் வரை ஓடினேன் ..யாரையும் கூட அந்த தெருவிலே காணவில்லை. ஒரு இருநூறு மீற்றர் ஓடி இருப்பேன். இப்போ முனகல் சத்தம் கேட்கவில்லை. அந்த தெருவிலே அப்படியே உட்கார்ந்து, அந்த அம்மாவை என் மடியிலே கிடத்தி, மூச்சுக்கு பக்கத்தில் கையை வைச்சு பார்த்தேன். எதுவுமே இல்லை. கையை பிடித்து பார்த்தேன் நாடித்துடிப்பும் இல்லை. கத்தி அழவேணும் போல இருந்திச்சு. அம்மா.. அம்மா.. என்று வாய் ஓயாமல் கூப்பிடும் எனக்கு கூட, சொல்லாமல் செத்து போனாவே, என்று கத்தி அழணும் போல இருந்திச்சு.. கொஞ்ச நேரத்துக்கு முதல் "தம்பி, தேடிப்பாருங்கள் நிச்சயமா கிடைப்பா. அப்படி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. நானும் உன் அம்மா மாதிரி தான்.. போகும் போது வாருங்கள் சமைச்சு வைக்கிறேன் " என்று சொன்ன அம்மா, இப்போ உயிரோட இல்லை. என்னை பெத்த அம்மாவின் கையால் சாப்பிடும் பாக்கியம் தான் எனக்கு இல்லை என்றால், இந்த அம்மா கையால் கூட சாப்பிடாமல் பண்ணிய விதியை என்ன செய்வது. என் கோபம் எல்லாம் அந்த சிங்கள இன வெறியன் மேல் திரும்பியது. இந்த அம்மா அவனுக்கு என்ன பாவம் பண்ணினா ..? சொல்லுங்கள் உறவுகளே..எதுக்காக எங்களுக்கு மட்டும் இந்த நிலை.இந்த கட்டத்தில் நான் என்ன முடிவு எடுக்க வேண்டும். சொல்லுங்கள் வாய் விட்டு சொல்லுங்கள். இந்த நிலையில் நீங்கள் இருந்தால் என்ன முடிவு எடுப்பீர்கள். அதை தான் நானும் எடுத்தேன். இது தப்பா ..?? நான் செய்கிறது தவறா ..?? என்னையும் கொச்சை படுத்தி தான் பேச போறீங்களா..?? எனக்கும் வாழ தெரியாது..யதார்த்தம் புரியாது என்று தான் பேச போறீங்களா ..?? பேசுங்கள் ..நன்றாக பேசுங்கள் ..எனக்கு எந்த கவலையுமே இல்லை. ஒரு மனுசனா ஒருத்தனுக்கு என்ன கோபம் வருமோ அது தான் எனக்கும் வருகிறது. ஒரு மகனாக அந்த அம்மாவுக்கு என்ன செய்யணுமோ அதை தான் நான் செய்ய போறேன். ரமணன் அண்ணா, வேகமாக ஓடிவந்தார் ஈருளியுடன். ராணி ஏறுடா, அந்த அம்மாவை தூக்குடா என்று கத்தினார். இல்லை அண்ணா, அம்மா செத்துட்டா.. நாங்கள் போவம் அண்ணா. இனி எனக்கு என்னுடைய அம்மாவும் வேண்டாம். சண்டையை முடிச்சு, எதிரியை எங்கட எல்லையில் இருந்து கலைச்சிட்டு வந்து பார்கிறேன். இது தான் நான் இந்த அம்மாவுக்கு செய்யும் கடன் அண்ணா. இந்த அம்மாவின் கதி இனி எந்த அம்மாவுக்கும் வரகூடாது அண்ணா..கடைசி மட்டும் வாழவேண்டும் என்று எவ்வளவு ஆசைப்பட்டா அண்ணா . கண்கள் கலங்கின. நாங்கள் போவம் அண்ணா .. தூரத்தில் புள்ளியாக நம் அம்மாவின் உடல்.. நடுத்தெருவில் அனாதையாக .... (தொடரும்) பாகம் பத்து இங்கே அழுத்துங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.