-
ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுகிறது - சுவிஸ்
சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழுந்த நிலையில் அந்த மக்கள் இப்போது. சுதந்திரம் என்று கூவிக்கொண்டு போனவர்கள், அந்த மக்களை அந்தர வழியில் அம்மோ என்று விட்டு வெளியேறிவிட்டார்கள் தங்கள் வேலை முடிந்தவுடன். ட்ரம்பும் நெதன்யாகுவும் பதவி விலக வேண்டுமென அவர்களது மக்களே எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.
-
ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுகிறது - சுவிஸ்
இன்று, ஈரான் மக்களின் சுதந்திரத்திற்காக போர் புரியும் இஸ்ரேல், அமெரிக்கா அன்று, எம்மினம் அழியும் போது தடுக்க வேண்டாம் குரலாவது கொடுத்ததா? எங்களை அழிப்பதற்கு ஆயுதம், ஆலோசனை, கடன் அளித்து, இலங்கை புலனாய்வுப்பிரிவினருடன் ஒத்துழைத்து, தகவல்களை அளித்து, நம் விடுதலை இயக்கம் அழிக்கப்படும்வரை உதவியது எவ்வாறு? ஏன் எமது சுதந்திரத்தை தடுத்தார்கள்? அப்போ அவர்களுக்கு தேவையான வளங்கள் நம்மண்ணில் இல்லை, இனிவருங்காலத்தில் இந்துசமுத்திரத்தில் தமது போர்கப்பல்களை நிறுத்த வேண்டுமெனில் அதற்கு இலங்கையரசு அனுமதி மறுத்தால் நமது ஜனநாயகம் பற்றியும் பேசுவார்கள். கடந்த காலங்களில் அரேபிய நாடுகளோடு கூடிக்குலாவும்போது அமெரிக்காவுக்கு இது தெரியவில்லையோ? இப்போ திடீரென்று என்ன கரிசனை வந்தது? அமெரிக்காவின் உண்மை நோக்கம் கண்டு, அவர்கள் விலகிக்கொள்வதால் இல்லாத பொய்களை பரப்புகிறார்கள். லிபியாவுடன் சேர்ந்து ஈராக்கை தாக்கிய அமெரிக்கா பின் கடாபிக்கு என்ன செய்தது? ஒசாமா பின்லேடனை வளர்த்ததே அமெரிக்கா, பின் எப்படி மாறியது? ஏன், அமெரிக்கா, இஸ்ரேலிடம் அணுஆயுதம் இல்லையா? அதையும் அழிக்கவேண்டியதுதானே. வெனிசுலாவை ஏன் இரண்டாக்கியது அமெரிக்கா? அவர்கள் தங்கள் புற்றுக்குள் இருந்தார்கள், அவர்களை வெளியே இழுத்து விட்டதே அமெரிக்காதான். இப்போ ட்ரம்ப் சொல்கிறார், ஈரானில் மத ஆட்சி நடந்தாலென்ன, ஜனநாயக ஆட்சி நடந்தாலென்ன அதுபற்றி கவலையில்லை, ஈரான் எங்களோடு இணைந்து செயற்படவேண்டும், முன்னுரிமை அளிக்க வேண்டும் என்கிறார். இங்கே எங்கேயும் அவர் ஜனநாயத்தை பற்றியோ அணு ஆலை பற்றியோ குறிப்பிடவில்லை.
-
ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுகிறது - சுவிஸ்
ட்ரம்பும் நெதன்யாகுவும் ஈரான் மீதுள்ள காழ்ப்புணர்வு, பொறாமை, பயம் காரணமாகவே இந்தப்போரை வலிந்து தொடுத்தனர். அதற்கு பொய்யான காரணங்களை இட்டுக்கட்டினர். ஜனநாயகத்தை கட்டியெழுப்பவும் அணுஆயுத உற்பத்தியை தடுக்கவும் இந்தப்போர் என தம்மைத்தாமே ஏமாற்றினர். இவர்களிடம் ஜனநாயகம் உண்டா? எல்லா நாடுகளிலும் ஜனநாயகப்படிதான் ஆட்சி நடக்கிறதா? ஏன் அந்த நாடுகளை கண்டுகொள்ளவில்லை இவர்கள்? அவர்களின் ஜனநாயக விரோத செயல்களுக்கு உதவி வழங்கினர்? அடுத்து, அங்கு அணு உற்பத்தி செய்கிறார்கள் என்றால்; நிரூபித்திருக்க வேண்டும் அல்லது அவர்களின் அணு ஆலைகளை அழித்திருக்கவேண்டும். அதைவிட்டு சிறுவர் பாடசாலைகளிலும் அந்த நாட்டின் பொருளாதார மையத்திலும் ஏன் தாக்குதல் நடத்தினார்கள்? அணு ஆலை அங்கே இல்லை. ஆகவே இவர்களால் தாக்கியழிக்கப்பட்டவை அணுஆலைகளா? ஈராக்கிலும், சதாம் குசேயினை அழிப்பதற்கு இந்தகாரணங்களையே சொன்னார்கள். அதன் பின் தாங்கள் சுமத்திய குற்றச்சாட்டை நிரூபிக்க இன்றுவரை அவர்களால் முடியவில்லை. இவர்களின் அடாவடியை ஐ. நா. கண்ணை மூடிக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கு, இதற்கு எந்த அதிகாரமுமில்லை வலுச் சண்டியர்களை அடக்க. வந்துவிடுவார்கள் நசுக்கப்படுபவர்களை தாங்களும் சேர்ந்து நசுக்க. போர் முடிந்தபின் ஈரானுக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டோடு ஐ .நா. கூடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
-
ஈரான் மீதான தாக்குதல் - பாரிய எதிர்ப்புப் பேரணி
நெதன்யாகுவும் பதவி விலகவேண்டுமென இஸ்ரேலில் ஆர்ப்பாட்டம் நடப்பதாக அறிகிறேன், ஒருவேளை இதைத்தான் மாறி சொன்னார்களோ? இந்த இரண்டு சாத்தான்களும் சமூகத்திலிருந்து விரட்டப்பட வேண்டியவர்கள்!
-
ஈரானின் எதிர்காலத் தலைமை ஜனநாயக மற்றும் மதச்சார்பற்றதா என்பது குறித்து டிரம்ப் கவலைப்படவில்லை.
அவரவர்க்கு சாதகமான செய்திகள் தமக்கு சார்பானவர்களை உயர்த்தியே கூறும். வளமான மத்திய கிழக்கில் வியாபார ரீதியில், நட்பாக புகுந்து, முழு வளத்தையும் அபகரிக்க நினைத்து, அந்த நாட்டை, வளத்தை, அழித்து, அரசியலை இரண்டுபடுத்தி அவர்களை எழுந்திருக்க விடாமல் அடித்து நொருக்கி ஏதிலிகளாக்கி விட்டு தாம் வந்த வழியே போய்விடுவார்கள். அவர்களுக்கு நன்றியில்லை, குற்ற உணர்ச்சியில்லை, பரிகாரமில்லை, தம்மை நிஞாயப்படுத்துவார்கள். அடுத்தவரின் வளங்களை அபகரிப்பது இல்லையேல் அழித்தொழிப்பது. அவர்களின் வளத்தால் பெற்ற ஆயுதங்களை அவர்களிலேயே பரீட்சிக்கிறார்கள். இது எந்த வகையில் நிஞாயம்? உலகம் முழுவதையுமே அழிவில் தள்ளியுள்ளார்கள். இவர்கள் அழிக்கப்படாதவரை ஏதோ ஒரு நாடு தொடர்ந்து இவர்களுக்கு இரையாகிக்கொண்டே இருக்கும்.
-
ஈரானின் எதிர்காலத் தலைமை ஜனநாயக மற்றும் மதச்சார்பற்றதா என்பது குறித்து டிரம்ப் கவலைப்படவில்லை.
ஆம். ஒரு ஏவுகணையின் விலை சும்மா இலகுவாக குறிப்பிட்டு இது சாதாரணமானது, இதை விட விலை கூடிய ஆபத்தான ஆயுதம் இன்னும் பயன்படுத்தப்படவில்லை என்று கணிக்கிறார்கள். ஒவ்வொருவரும் அணுஆயுதத்தை பாவிப்போமென மிரட்டுகிறார்கள், பொது மக்களின் உழைப்பில், அந்த மக்களை, அவர்களின் சீவியகால உழைப்பை, கனவை அழிக்கிறார்கள். இதனால் இவர்கள் காணும் பயன் என்ன? உலகம், மக்கள் இருந்தாற்தானே இவர்கள் தங்கள் அதிகாரத்தை காட்ட முடியும். அணுகுண்டை பாவிப்போம் என்று எதிரியை மிரட்டுவார்களே அன்றி பாவிக்க மாட்டார்கள். நெதன்யாகு தலைமறைவு என்றும் சொல்கிறார்கள். உலக நாடுகள் சேர்ந்து ட்ரம்ப், நெதன்யாகுவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். ஒருவேளை ஈரான் தோற்றாலும் ட்ரம்ப் ஈரானால் அழிக்கப்படுவார் அல்லது இந்தப்போரை வலிந்து ஈரான் மீது திணித்ததற்காக வருந்துவார் தவறான முடிவை எடுத்து விட்டொமேயென. மனித குலத்திற்கு எதிரான சாத்தான்கள் களை எடுக்கப்படவேண்டும்.
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் உதவி செய்யும் மத்திய கிழக்கு நாடுகள், தம்மை தனிமைப்படுத்திக்கொள்வதோடு அந்த நாடுகளின் அடுத்த இலக்கு தமக்கு உதவி செய்வோரே. துரோகியை, உதவி பெற்றவனே நம்பமாட்டான். இன்று இவன் தன் தலைவனுக்கு, நாட்டுக்கு, மக்களுக்கு, இனத்திற்கு செய்யும் துரோகம் நாளைக்கு தனக்கெதிராக திரும்பாது என்பது என்ன நிட்சயம்?
-
காமேனி படுகொலையும் ஈரான் போரும்: இந்திய மவுனத்தின் பின்னணியில் 5 காரணிகள்!
இந்தியா எப்போது உண்மையின் பக்கம் நின்றது? அது, தான் ஆசியாவின் வல்லரசு என்று தன்னைத்தானே கூறிக்கொள்கிறது. அதற்காக மேலெழும் நாடுகளை, இயக்கங்களை தடுக்கிறது. அமெரிக்காவை எதிர்த்தால் தனது வல்லரசு கனவு தகர்ந்துவிடுமென தயங்குகிறது. அமெரிக்காவுக்கு எந்த விதத்திலும் சளைத்தது இல்லை இந்தியா. காஷ்மீர், இலங்கைத்தமிழர் மீதான தாக்குதல், துரோகம் அதற்கு சாட்சி! ஆனால் அமெரிக்காவிற்கு, தாக்க நினைத்தால் நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை, காரணமும் தேவையில்லை, தானே காரணங்களை தேடிக்கண்டுபிடிக்கும். ஒசாமா பின் லேடன், லிபியா முன்னாள் தலைவர் கடாபி போன்றவர்கள் அமெரிக்காவால் வளர்த்தெடுக்கப்பட்டு அழிக்கப்பட்டவர்கள். தனது லாபத்திற்காகவே உதவி செய்வதாக மாயை காட்டி உள்நுழைப்பவர்கள். அதைத்தான் இந்தியாவும் செய்கிறது.
-
ஈரானின் எதிர்காலத் தலைமை ஜனநாயக மற்றும் மதச்சார்பற்றதா என்பது குறித்து டிரம்ப் கவலைப்படவில்லை.
இதுதான் உண்மை! மனித நேயம், அணுகுண்டு தயாரிப்பு குற்றச்சாட்டெல்லாம் சும்மா கூறப்பட்ட காரணங்கள். அந்த கறுப்பாடு பிடிபடாமல் இருந்திருந்தால்; அதுதான் ஈரானின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும்.
-
ஈரானிய 'கொலை ஒப்பந்த' சதி முயற்சி: அமெரிக்க நீதிமன்றில் குற்றவாளியாகக் காணப்பட்டார் ஆசிப் ராசா!
துரோகத்தினால் காட்டிக்கொடுப்பில் கொல்லப்பட்டுள்ளார். முக்கிய தளபதி அயத்துல்லா அலி கமெய்னியுடன் கூட இருந்து குழி பறிக்கப்பட்டது. அலி கமெய்னியுடன் நிழலாக தொடர்ந்தானே. எங்களின் தலைவருக்கும் விடுதலைப்போருக்கும் நடந்தது இதே. இந்தப்போர் நமது விடுதலைப்போருடன், தாக்குதலுடன், அழிவுகள், இழப்புடன், காட்டிக்கொடுப்புடன் ஒத்துப்போகிறது. ஒரு பலமான அரசை, விடுதலை இயக்கத்தை அழிக்க ஒரு துரோகி துணைபோவதுடன் அந்த இயக்கமோ, அரசோ மீள எழாது எதிரியின் காலடியில் விழச்செய்துவிடும் என்பதற்கு ஈரான் தலைவரின் மரணத்தில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த துரோகி பழியை சுமந்தவன், அதி உச்ச பாதுகாப்பு தலைவர் என்கிறார்கள், புரட்சிகர காவல் படையின் தளபதி என்கிறார்கள், பெயர் அலி ஷம்கானி என்று கூறப்படுகிறது. அந்தப்பதவிக்கேஅவமானம்! அவனால் தன் தலைவனை காட்டிக்கொடுக்க முடிந்ததென்றால், அவனை எவ்வளவு நம்பியிருந்திருப்பார்கள், அந்த நாட்டின் முதுகெலும்பாய் நினைத்திருந்திருப்பார்கள், தலைவனுக்காய், நாட்டுக்காய் உயிரை கொடுப்பானென எண்ணியிருந்திருப்பார்கள். இவனுக்கு ஏற்படப்போகும் முடிவுக்கு இவனை பயன்படுத்தியவர்கள் வருந்தப்போவதில்லை, மன்னிப்பு கேட்கபோவதுமில்லை.
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
இவர்கள் கொல்லப்படும்போது அவரவர் நாட்டு மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இவர்கள் கேட்க முடியாது. ஒரு நாட்டில் பலாத்காரமாக உள்நுழைந்து, அவர்களது வளங்களை சுரண்டி, மக்களையும் அரசியற்தலைவர்களையும் கொன்று, நிர்வாகத்தை, நாட்டை சிதைத்து, செய்வது பயங்கரவாதம், சொல்வது மனிதநேயப்போர். அவர்கள் நாட்டிற்குள் அடாத்தாக புகுந்து இவ்வளவு கோரத்தையும் செய்யும் ட்ரம்ப் தன் நாட்டிற்குள் அவர்கள் வருவதற்கு தடை விதிக்கிறார், காரணம் பயம். அயத்துல்லா அலி கமெனி தங்கியிருந்த இடத்தில ஏவப்பட்ட குண்டு, தரையை தொட்டவுடன் வெடிக்காமல் பல அடி ஆழமுள்ள சீமெந்து மற்றும் பாறைகளை துளைத்துக்கொண்டு உள்ளே சென்ற பிறகுதான் வெடிக்குமாம். நிலத்துக்கடியில் மிகப்பெரிய அதிர்வு ஏற்பட்டு பிறகு தரைப்பகுதி உள்வாங்கப்படுமாம், இதற்கு பங்கர் பஸ்ரர் என்று பெயராம். போராட்டகாலத்தில், நமது ஊர், அண்டைய பல ஊர்களில் இப்படியான பல குண்டுகள் விடியற்காலையில் மக்கள் தூக்கத்திலிருக்கும்போது வீசப்பட்டன. தரை, பல அடி ஆழத்திற்கு கிணறு போல் தோன்றி நீரும் வந்துவிடும், அதற்குள் வீடு முழுதாக அமிழும். இது பல கிராமங்களில் நடந்திருக்கு. தூக்கத்திலிருந்தவர்கள் அதற்குள்ளேயே மாண்டனர். அப்போ, அந்த குண்டுகளை இலங்கைக்கு அளித்தது இஸ்ரேல்! வைத்தியசாலை, சிறுவர் விடுதிகளிற்கு குண்டுகளை வீசிவிட்டு, அங்கு பயங்கரவாதிகள் மறைந்திருந்ததனால் தாக்கி அழித்தோம் என்று கூறினார்கள். அதே சம்பவம் காஸா, ஈரானில் இஸ்ரேலால் நடத்தப்பட்டிருக்கிறது. அந்த ஆலோசனையை இஸ்ரேலே வழங்கியிருக்க வாய்ப்பிருக்கிறது. இன்று இஸ்ரேலை இலங்கை கண்டிப்பது, மனித நேயம் பேசுவது வியப்பாக இருக்கிறது. தன்னை புனிதன் என்று அறிவிக்கிறதா?
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
ஒரு பலமான போராட்டம் அழிவது துரோகிகளால் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. மொஸாட் கும்பலுக்கு முகவராக ஈரானின் படைத்தளபதியே செய்திகளை அனுப்பியுள்ளார். அந்த தகவலின்படியே இஸ்ரேல் துல்லியமாக தாக்குதலை நடத்தியுள்ளன. அயத்துல்லா அலி கமேனியுடன் கூட இருந்துகொண்டே குழி பறித்துள்ளார், கடைசி நிமிடத்தில் முகமது பக்போர் கூட்டத்திலிருந்து மாயமாகி செய்தி அனுப்பி தாக்குதலை நடத்தியிருக்கிறார். அவரும் கூட்டத்திற்கு பங்குபற்ற சென்றதால் அவரும் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அவர் இப்போ விசாரணையில் உள்ளாராம். ஈரான் மீது கடந்த காலங்களில் நடத்தப்பட்ட பல தாக்குதல்களை வைத்துப்பார்க்கும்போது இவர்தான் உளவாளியாக செயற்பட்டுள்ளார் என்பது தெளிவாகிறது, கடந்த ஆண்டே இவர்மீது விசாரணை ஆரம்பித்த போதும் அயத்துல்லா அலி கமேனியுடன் இவர் நெருக்கமாக இருந்த காரணத்தினால் அது தடைபட்டது அல்லது தடுக்கப்பட்டது, அது யாரால் என்கிற விசாரணையும் தொடர்கிறதாம். இவருக்குப்பின்னால் இன்னும் பலர் இருக்கலாம், இது ஈரானிய படையினரை சந்தேகிக்கும், சோர்வடைய செய்யும், பலவீனப்படுத்தும் செயலாகும்.
-
ஈரானிய கடற்படை பணியாளர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்த இலங்கை கடற்படை
உங்கள் படையால் அதை தடுத்து நிறுத்த முடியாதோ? உலக நாடுகளுக்கு பயங்கரவாதத்தை எப்படி வெற்றிகொள்வது என்று பாடம் நடத்திய படையல்லவா உங்கள் படை. எல்லா நாடுகளிடமும் உதவி வேண்டி சொந்த மக்களின் சுதந்திர போராட்டத்தை நசுக்கினீர்கள், இப்போ நீங்கள் நசுங்குங்கோ! உங்கள் வாயே உங்களுக்கு எதிரி.
-
எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு திட்டமிட்டது – அசேல சம்பத் குற்றச்சாட்டு
எப்படி இவர் இவ்வளவு உறுதியாக சொல்கிறார்? தங்களது கடந்தகால அனுபவம் இப்போ இப்படி மாற்றி பேசுகிறது! அன்று அவர்களை கைது செய்து நிரூபித்திருக்கலாமே, அதிகாரம் உங்கள் கையிற் தானே இருந்தது. ஏன் செய்யவில்லை? "வேண்டாப்பெண்டாட்டி கைபட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் இவர்களுக்கு."
-
ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்து! கொழும்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்
சொந்த நாட்டில், ஒரே மொழி பேசும், ஓர் இனமக்கள் வகைதொகையின்றி கொல்லப்படும்போது முட்டுக்கொடுத்தவர்கள், பால்சோறு உண்டு மகிழ்ந்தவர்கள், அதற்கு எதிராக குரல் கொடுக்க மறுத்தவர்கள், அதை நிஞாயப்படுத்தியவர்கள், எங்கோ இருக்கும் ஈரானுக்காக போராடுகிறார்கள் இது விந்தையே. சமாதானத்திற்காக போராடுபவர்கள், அநிஞாயத்திற்கு எதிராக குரல் எழுப்புபவர்கள் எங்கே அநிஞாயம் நடந்தாலும் பேதமின்றி இனம், இடம், மதம், மொழி, அந்தஸ்து, சந்தர்ப்பம், சொந்த ஆதாயம், விருப்பு வெறுப்பு எல்லாம் பார்த்து குரல் கொடுப்பதில்லை. அப்படியான குரல்களுக்கு வரவேற்புமில்லை. இது வெறும் கூக்குரல். சந்தர்ப்பவாத அரசியல் வியாதி. அன்று தமது பக்கத்தை நிஞாயப்படுத்த நட்பு நாடென்றார், இன்று அனுராவை பயமுறுத்தி பின்வாங்கச்செய்ய இப்படிச்சொல்கிறார். அன்று இவர்களுக்கு உதவிக்கரம் கொடுத்தவர்களை இன்று கைவிடச்சொல்கிறார். பக்கா சுயநலவாதி. இவரை தொடர்ந்து பல அரசியல் வியாதிககளின் சுயநல எச்சரிக்கைகள் கிளம்பும்!