Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  1. இதுவரை காலமும் வேறேதோ சொல்லிக்கொண்டு திரிந்தாரே. இப்போ இப்படி புலம்புகிறார். அமைச்சுப்பதவி கிடைக்காத ஏமாற்றத்தினால் போலும். ஆமா அடுத்த தேர்தலோடு அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார். தேர்தல் முடிந்துவிட்டது, இனிமேல் வர இருக்கும் தேர்தல் பற்றி பேசுகிறாரே. அப்படி எதை சாதித்திருக்கப் போகிறார்? கூடிய லஞ்சம் பெற்றிருக்கலாமென்கிறாரோ? ஹிஹி இவரது நேசம் யாருக்கு வேண்டும்? தனக்கு கொடுத்த துப்பாக்கியை கூட பாதாள போதைக்கும்பலுக்கு அடகு வைத்து போதை கடத்தல் நடத்தியவர். மக்களுக்கு எதை சாதித்தார்?
  2. தமிழரின் ஏகோபித்த குரல் நாங்கள், பேரம் பேசும் சக்தி நாங்கள் என்று சொல்லி வாக்கு வேண்டி பாராளுமன்றம் போய் சிங்களத்துக்கு காவடி தூக்கியவர்களை விடவா? தமிழரசு, தமிழ்த்தேசியம் என்று சொன்னால் சிங்களவனுக்கு கோபம் வருகுதாம், வந்தால் நமக்கென்ன? அப்படி பயமென்றால் வேறொரு சிங்களக்கட்சியில் சிங்களவரிடம் வாக்கு கேட்டு பாராளுமன்றம் போகவேண்டியது. யார் தடுத்தார்? இவர்களுக்குள் ஒற்றுமையில்லை, ஒருவருக்கொருவர் குழிபறிப்பு. அவர்களே அனுரா வடக்கிற்கு வர சந்தர்ப்பம் அளித்தவர்கள். அனுரா வந்தவுடன் குத்துது குடையுது என்று புலம்பல், ஏளனம். இதுவரை ஆட்சி செய்த சிங்கள ஜனாதிபதிகள் யாருக்கும் இல்லாத எதிர்ப்பலை இவருக்கு மட்டுமேன் என்பதே எனது கேள்வி. அவர் தவறுகளையும் சுட்டிக்காட்டவே செய்கிறோம், அதைப்பற்றி பேசாதது ஏன்?
  3. இதற்குத்தான் இவ்வளவு உருட்டல், மிரட்டல், சவால், கடைசியில் வெளியே வந்துவிட்டது, வாயாலேயே கேட்டு அமைச்சுப் பதவிகளை வாங்குவார்கள் போலுள்ளதே. இவர் ஒருபுறம் மோதுகிறார், வைத்தியர் மறுபுறம். இப்படி செய்தால், விமர்சித்தால் அனுரா இவர்களை தட்டு வைத்து அழைப்பார் என்கிற நினைப்போ? அனுரா எவ்வளவோ தூரம் சென்றுவிட்டார், அவர்களுக்கு வழி காட்டி, அழைத்துவந்து இடம் விட்டதே இந்த பதவியாசை பிடித்த சோம்பேறிக்கூட்டம்தான்.
  4. சிறிதரன் நல்லவரல்லராகவே இருக்கட்டும். அவர்மேல் என்றுமில்லாதளவு விமர்சனம் இப்போ அதுவும் தேர்தலின்பின் எழக்காரணம் என்ன? நானே கட்சியில் எல்லாம் என்று கருத்து சொல்லி, எதேச்சையாக செயற்பட்டவரை விட இவரை மக்கள் தெரிந்தெடுத்துவிட்டனரே எனும் அழுக்காறு, தேர்தல் பயம் என்றுதான் நான் நினைக்கிறன்.
  5. தேவைக்கேற்ப காவியுடையும் இராணுவ சீருடையும் போர்த்தப்படுபவர்கள் இவர்கள். திஸ்ஸ விகாரையிலேயே இரண்டையும் பார்த்தோமே!
  6. அது என்ன இன்னொன்று என அறிய ஆவல்! தனது எதிர்காலம் சிறை அல்லது மறைவாகவே இருந்தாகணும் என்று கணித்தே வைத்துள்ளார் மஹிந்தா. இரண்டாம் துட்ட கைமுனுவுக்கு ஏன் இப்படியொரு விபரீத எண்ணம் வந்தது? சிங்களவருக்கு பயந்தே அவர் விகாரையில் இப்படி ஒரு சொகுசு வீட்டை ஏற்பாடு செய்திருக்கிறார்.
  7. படித்தவர்கள் பேச்சில் "நான்" எனும் அகம்பாவம் கண்டேன். அவர்கள் படித்த படிப்பிற்கும் பேசும் பேச்சுக்கும் சம்பந்தமேயில்லை என உணர்ந்தேன்.
  8. சிவஞானத்தின் ஆதங்கத்திலும் ஒரு நிஞாயம் இருக்கிறது. முன்பொருதடவை முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் ஒரு மக்கள் பேரணி நடத்தப்பட்டது. அப்போ ஊடகவியலாளர் ஒருவர் அதுபற்றி சுமந்திரனிடம் வினவியபோது; தாங்கள் அதில் பங்கு பற்றப்போவதில்லையென்றும் மக்களை பங்குபற்றும்படி கேட்டுக்கொள்வதில்லை என்றும் பதில் வழங்கினார். ஆனால் மக்கள் அலையலையாய் திரண்டிருந்தனர். பின்னாளில் பொதுமக்கள் பேரவை ஏற்பாடு செய்திருந்த பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையில் பேரணியில் புகுந்து தன்னை முதன்மைப்படுத்தினார், அதன்பின் கடற்தொழிலாளர் எதிர்ப்பு போராட்டத்திலும் அதனோடு தொடர்பு படாத தொப்பியணிந்து ஷோ காட்டினார். அவர் நினைத்தது பேரணி, கடையடைப்பு என்று அறிவித்தால்; அது யார் அறிவித்தாலும் மக்கள் திரள்வர் என்று நினைத்து கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்தார். அது பிசுபிசுத்து போனதுடன் எதிர்ப்பும் வெளிப்பட்டது. மக்கள் கோமாளிகளல்ல. அவர்களுக்குரிய காலம், காரணம், அழைப்பு விடுபவரின் நேர்மை, நோக்கம் தெரிந்தே பங்குபற்றுவதா வேண்டாமா என முடிவு செய்வர். இப்போ, தென்னிலங்கையில் இருந்து ஒரு ஜனாதிபதி பொங்கல் கொண்டாட வரும்போது, மக்கள் எதிர்ப்பு ஏதும் செய்யாமல் கூடிக்கொண்டாடியது அவர்களுக்கு வெறுப்பேற்றத்தான் செய்யும். என்ன செய்வது? காற்றுள்ளபோதே தூற்றியிருக்கலாம், இப்படி வாயால் புலம்பிக்கொண்டு திரிய வேண்டியிருந்திருக்காது.
  9. இவ்வளவு நடந்த பின்னும், ஆறஅமர்ந்து தமது தவறுகளை சீர்தூக்கி பார்த்து திருந்தும் எண்ணம் இல்லை, மக்களை குறைகூறுவதும் வெற்றியடைந்தோருக்கு சேறடிப்பதும் வறட்டு கௌரவம் பேசுவதும் அவர்களது முட்டாள்தனத்தை காட்டுகிறது. டக்கிலஸை கட்டியணைக்கிறார்கள், ஸ்ரீதரனுக்கு சேறடிக்கிறார்கள். பின், அனுரா கட்சி தங்கள் கட்சி நிலவரங்களை விமர்சிக்கிறார்களாம். இவர்களே தங்கள் கட்சிக்காரரை விமர்சித்தால் கேட்கிறவர்களும் விமர்சிக்கத்தானே செய்வார்கள், அல்லது உண்மையா என தேடத்தான் செய்வார்கள்.
  10. விகாரைக்குரிய காணியை தவிர்த்து, பொதுமக்களின் காணியில் விகாரை கட்ட வேண்டிய தேவை என்ன? அது இந மத நல்லிணக்கமா அல்லது அதிகார தோரணையா? தமிழ் மக்களை நிம்மதியாக வாழவிடுவதில்லை, எல்லாவற்றையும் அடித்து பிடுங்குவது என்பதே இவர்களின் அரசியல் கொள்கை.
  11. தயாசிறிக்கே பொறுக்கவில்லை, இராணுவ பின்புலம் கொண்ட இருவரின் நியமனத்திற்கு சிறிதரன் ஆதரவளித்தது. அப்போ மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இராணுவத்தினரை தண்டிக்க தயாசிறி ஆதரவு வழங்குவாரா? அல்லது யாரோ சொல்லிக்கொடுத்து கதைக்கிறாரா? அது இருக்கட்டும், தமிழருக்கெதிரான இந அழிப்பின் தளபதியான பொன்சேகாவுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்கு அளிக்கும்படி கேட்டுக்கொண்டவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்பதையும் தயாசிறி தெரிவிக்க வேண்டும்.
  12. அனுரா யாழ்ப்பாணம் வந்து மக்களுடன் பொங்கல் கொண்டாடி, தனது கட்சி அரசியலை முன்னுக்கு கொண்டுபோக முயற்சிக்கிறார். அவர் எதிர்பாராத அளவு மக்கள் அவருக்கு வாக்குப்போட்டு தெரிந்துள்ளனர். அதை ஏன் சிவஞானம் ஷோ காட்டுகிறார்கள் என நினைக்கவேண்டும்? யாருக்கு ஷோ காட்டினார்கள்? அப்படியெனில் இவர்கள் செய்வதெல்லாம் ஷோ காட்டுவதற்காகத்தானா? இவர்களால் ஏன் மக்களோடு பொங்கல் கொண்டாட முடியவில்லை?
  13. இவர்கள் விட்ட தவறே, அனுரா கட்சி வடக்கில் நுழைந்ததும் பொங்கல் விழா கொண்டாடியதும் என்பதையும் ஏற்க முடியவில்லை, அனுரா பொங்கல் கொண்டாடியதை பொறுக்கவும் முடியவில்லை. இவர்கள் இல்லாவிட்டால் என்ன? அவர் மக்களோடு பொங்கல் கொண்டாட வந்தார், கொண்டாடினார், போனார். இவர் ஏன் புலம்புகிறார்? உங்களுக்கு அங்கு என்ன வேலை? உங்களது மரியாதை அவ்வளவுதான். உங்களை கூட்டி வைத்து கும்மாளம் அடித்தவர்கள் எதை சாதித்தார்கள் மக்களுக்கு? அல்லது நீங்கள்தான் எதை சாதித்தீர்கள்? நீங்கள் நிஞாயமாக நடந்திருந்தால் மக்கள் உங்களை தவிர்த்து அனுராவுடன் பொங்கல் கொண்டாடியிருப்பார்களா? மக்களே உங்களை மதிக்கவில்லை, அனுரா ஏன் அழைக்கப்போகிறார்? சிவஞானத்தின் அறிவு அவ்வளவுதான்! இவர்கள் எல்லாம் கட்சி கொள்கை திட்டத்தின் படி அங்கீகாரம் பெற்றா பதவிகளை பெற்றுக்கொண்டார்கள்? மக்கள் இவர்களை விட்டு வெகுதூரம் சென்றதே அனுரா வடக்கிற்கு வரக்காரணம் என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லை பாவம் இவரால். கட்சிப்பிரச்சனை கட்சிக்குள் இருந்திருந்தால் யாரும் விமர்சிக்கப்போவதில்லை. கட்சிப்பிரச்சனை வெளியில் வந்தால், நீதிமன்றம் வந்தால் யாரும் விமர்சிக்கத்தான் செய்வார்கள். நீங்களே உங்கள் உறுப்பினர்களை பகிரங்கமாக விமர்ச்சிக்கிறீர்கள், அவர்கள் மேல் சேறடிக்கிறீர்கள், தெற்கிற்கு செய்தியனுப்பி விசாரணை செய்யச்சொல்லி கேட்க்கிறீர்கள், உங்கள் தவறுகளை மறைத்துக்கொண்டு மற்றவர்கள்மேல் நடவடிக்கை எடுக்கிறீர்கள், ஒரு கட்சியை விமர்சித்து விட்டு உங்கள் தேவைக்காக அந்தக்கட்சியை தேடிச்சென்று கட்டி தழுவுகிறீர்கள், காரணம் என்ன? மக்கள் உங்களை நிராகரித்து விட்டதனாலேயே. இதற்குள் தமிழரசுக்கட்சிக்குள் மறைந்திருந்து போட்ட அட்டகாசம் எல்லாம் போதும். குந்தியிருந்த வீட்டை பூட்டிவிட்டு வேறு எங்கே போய் குந்தப்போகிறார்கள்? சிவஞானத்திற்கு தன் முதுகிலுள்ள அழுக்கும் தெரியவில்லை, கட்சியிலுள்ள சர்வாதிகாரமும் புரியவில்லை, இதற்குள் மற்றவர்களை சாட வெளிக்கிட்டு தலைகுனியப்போகிறார்.
  14. ம், அவ அனுமதி பெறாமல் கற்றிருக்கிறார், இவர்கள் அனுமதி கொடுக்காமல் அவரின் பெயரை சரி பார்க்காமல் கற்பித்திருக்கிறார்கள். ஒவ்வொருநாளும் மாணவர் தொகை, வருகை சரிபார்க்காமல் கற்பிப்பார்களோ? அது இருக்க, இப்போ மருத்துவ கற்கை சித்தியெய்திய சான்றிதழ் இல்லாமற்கூட தனியார் மருத்துவ நிலையம் நடத்துகிறார்களாம், அவர்கள் பிடிபட்டவுடன் போலி வைத்தியர் என்கிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.