-
அமெரிக்காவின் அடுத்த இலக்காக வாய்ப்புள்ள 5 நாடுகள் எவை?
ட்ரம்பிற்கு நோபல் பரிசு தயார்! இதை பிடுங்குவதற்கு வேறு பல காரணங்கள். சீனா ஒருபுறம், அமெரிக்கா மறுபுறம்.
-
மனநலம் பாதிக்கப்பட்ட இந்திய கடற்றொழிலாளரை விடுவிக்குமாறு குடும்பத்தினர் கோரிக்கை
மனநலம் பாதிக்கப்பட்டவர், தூக்க மாத்திரை எடுத்துக்கொள்பவர், எல்லை தாண்டி கடற்தொழிலுக்கு வந்துள்ளார்? எதற்கும் இலங்கையில் ஒரு பரிசோதனை செய்து உண்மையை கண்டுபிடித்து விட வேண்டியது.
-
தையிட்டி விகாரைக்கெதிராக போராடியவா்களுக்கு சொந்தப் பிணை
நான், அனுரா செய்யும் நல்ல காரியங்களை வரவேற்கும் அதே நேரம் அடாவடிகளை விமர்சிக்கிறேன். நீங்கள் அதை கவனிப்பது இல்லை. இப்போ நான் விமர்ச்சித்த படியினாலேதான் இப்படி ஒரு பதிவை எனக்கெதிராக இட்டிருக்கிறீர்கள். சரி..... இப்ப சொல்லுங்கள், நான் எந்த அரசை வரவேற்கவேண்டுமென நீங்கள் கருதுகிறீர்கள்? மஹிந்தா, கோத்தா, ரணில், மைத்திரி. இவர்களின் ஆட்சியில் இதைவிட மேலாக ஏதும் நடந்ததா? அவர்கள் போட்ட திட்டம், கட்டடங்கள்தானே இவையனைத்தும், அவர்களின் ஆலோசனைப்படிதான் இவைகள் நிறைவேற்றப்படுகின்றன. மெல்லெனப்பாயும் நீர் கல்லையும் உருக்கிப்பாயுமாம். சட்டம் அவர்கள் வீட்டுக்கதவை தட்டுமட்டும் அனுராவை விழுத்த அல்லது தமக்கு கீழ் அடிபணிய வைக்க முயற்சிப்பார்கள். அதையேதான் எதிர்கட்சிகள், விசேடமாக நாமல் சூழுரைக்கிறார்.
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
முன்பு ஈராக்கிலும் அணுஆயுதம் தயாரிக்கிறார்கள் என்று குற்றம் சுமத்தி அந்த நாட்டை சூறையாடி, நிர்வாகத்தை குலைத்து, மக்களை அகதியாகிவிட்டார்கள். ஆனால் அப்படி ஒரு அணு ஆயுத களஞ்சியத்தையோ, ஆய்வு கூடத்தையோ யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. நாடுகள் மேல் குற்றம் சுமத்தி, தனது ஆளுகைக்குள் கொண்டுவந்து, அந்த நாட்டிலுள்ள வளங்களை சூறையாடுவதும் அந்நாட்டின் நிர்வாகங்களை குழப்புவதுந்தான் அமெரிக்காவின் பிழைப்பு. இவர் மூன்றாம் உலக யுத்தத்தை ஆரம்பிப்பாரானால் அமெரிக்காவே முதல் அழிக்கப்படும்.
-
தையிட்டி விகாரைக்கெதிராக போராடியவா்களுக்கு சொந்தப் பிணை
இவற்றிற்கு நீதிமன்றம், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள், அவைதான் இந்தப்பிரச்னைக்கு காரணம் என்றும் சுட்டிக்காட்ட யாரும் முன்வரவும் மாட்டார்கள். போன பௌர்ணமிதினத்தன்று மக்கள் அமைதியாக தெரு ஓரத்தில் கூடாரம் அமைத்து தமது எதிர்ப்பை வெளியிட்டுக்கொண்டிருந்தனர், போலீசார் அவர்களின் கூடாரங்களை பிடுங்கி, அராஜகம் புரிந்தனர். அது ஜனநாயகத்திற்கு எதிரானதில்லையோ? எப்படியும் நாட்டில் ஒரு இனவன்முறையை ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்ற மாட்டோமா எனும் நப்பாசையில் ஒருவரும், இவர்களை உசுப்பிவிட்டால் தம் ஊழலுக்கான தண்டனையில் இருந்து தாம் தப்பிவிடாலெமென்கிற கனவில் ஊழல்வாதிகளும் பிக்குகளுக்குப்பின்னால் அலைகிறார்கள். முற்றுந்துறந்த துறவிகள் தமிழரின் காணிகளை அடாத்தாக பிடிப்பதற்கு, மண்ணாசை கொண்டு நாட்டை கொழுத்தியே தீருவோமென கொழுத்தாடு பிடிக்குதுகள். இதுகளின்ர காவியை கழட்டி வீட்டுக்கனுப்ப வேண்டும்.
-
பிள்ளையான், டக்ளஸ் கைது: பொதுஜன பெரமுன விமர்சனம்
எங்கள் அர்ப்பணிப்புள்ள இராணுவமே பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர் என்று விழா கொண்டாடினார்கள். இன்னொரு புறம் அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், இன்னும் பல நாடுகளை குறிப்பிட்டு இவர்களின் உதவியில்லாமல் இந்த போரை முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியாது என்றார்கள். உண்மையில் இனத்தை காட்டிக்கொடுத்த துரோகிகள் இல்லாமல் இந்தப்போரை முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியாது. இதை பலதடவை சிங்களம் ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறது, வருகிறது. வி. முரளிதரன் சொன்னார்(ன்). நான் காட்டிக்கொடுக்கவில்லை, தலைவரின் உடலை இனங்காண்பதற்கு நான் போகவில்லை என்று. அப்படியெனில் இவர்களுக்கு பதவி, பாதுகாப்பு, வசதிகள் ஏன் கொடுக்கப்பட்டன? இன்று சிங்களம் பகிரங்கமாக சாட்சி சொல்கிறது, துடிக்கிறதே இவர்களுக்காக. அதுமட்டுமல்ல இந்த எஜமானர்களுக்காக பல சட்ட விரோத கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, ஊழல் செய்திருக்கிறார்கள். அந்த மறுபக்கம் வெளிவந்தால் தங்கள் அகப்பட்டு விடுவேமெயென தவிக்கிறார்கள் கதறுகிறார்கள். எப்படியிருந்தாலும் இவர்கள் தமிழரால் ஒதுக்கப்படவேண்டியவர்கள் இனத்தை கெடுத்த, கட்டிக்கொடுத்த கோடரிக்காம்புகள். அவர்கள் கைது, சமூக விரோத கொலை, கொள்ளைகளுக்காக என்பதை புரிந்து கொள்ளவேண்டும். விசாரணையை திசை திருப்ப முயலவேண்டாம். இவர்களுக்கு தண்டனை அளிக்காத முன்னைய அரசாங்கங்களும் விசாரிக்கப்படவேண்டும், விளக்கம் அளிக்க வேண்டும்!
-
டக்ளஸ் மீது பாயும் புதிய வழக்குகள்?
அவரோடு கூட இருந்தவர்கள், தங்கள் பிள்ளைகளை இவர்கள் அழைத்துச் சென்றதை கண்டவர்களின் சாட்சி உள்ளதே. தீவகத்தில் நடந்தகொலைகள், இவர்கள்தானே அப்போ அங்கே ஆயுதங்களுடன் இருந்தார்கள்.
-
சிறீதரனை பதவிவிலகுமாறு பணிப்புரை! எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம்
அதிரடி 1. சிங்கள கட்சியை எதிர்த்து பொது வேட்பாளராக களமிறங்கிய அரிய நேந்திரன் தமிழரசுக்கட்சியிலிருந்து அதிரடி பதவி நீக்கம். அதிரடி 2. அரசுக்கு சார்பாக வாக்களித்ததால் சிறிதரன் கட்சியிலிருந்து பதவி நீக்கம். ஆனால் கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக, கட்சியின் ஒப்புதலின்றி, அரசுடன், வெளிநாட்டு தூதுவர்களுடன் இரகசிய பேச்சுக்கள், நகர்வுகள், முடிவுகள் மேற்கொண்ட, தமிழ்தேசியத்துக்கெதிரான கருத்துக்கள் சொன்ன, தனக்கென பதவிகளை உருவாக்கிக்கொண்ட ,பதவியை இறுக பிடித்துக்கொண்டுள்ள சுமந்திரன் கட்சியின் பொது செயலாளர். தமிழரசுக்கட்சி தன் முடிவை நோக்கி பயணிக்கிறது. சுமந்திரன் அடிக்கடி சொல்லுவார், தமிழ்த்தேசியம், தமிழரசு என்று கட்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் இருப்பதால் சிங்களவர் கோபம் அடைகின்றனராம், பயப்படுகின்றனராம். அவற்றை இல்லாமல் செய்வதற்காகவே கட்சிக்குள் இறக்கப்பட்டார். வந்த காரியம் ஓரளவு நிறைவேறிவிட்டது. தன் இனம் சார்ந்த பெயரை தமிழ் மக்கள் வைப்பதற்கு சிங்களம் ஏன் வெறுக்க வேண்டும்? அதனால் சிங்களத்திற்கு என்ன பாதிப்பு? அதாவது தமிழர் இந்த மண்ணின் குடிகள் இல்லை என்று நிறுவுவதற்கு இவைகள் தடையாக உள்ளனவோ? தமிழ் என்று சொல்லக்கூடாது என்று கூறு அரசுக்கு துணை போகிற சுமந்திரன், எப்படி தமிழ் மக்களின் பிரதி நிதியாகவோ அல்லது அவர்கள் சார்பாக முடிவெடுக்கும் ஒருவராகவோ இருக்க, செயற்பட முடியும்? இருந்தாலும் சுமந்திரனின் அரசியல் அஸ்தமனமாகிறது.
-
யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக் களத்தில்: தையிட்டியில் பதற்றம்!
திஸ்ஸ விகாரை பிக்கு சொன்னாரே, அப்படி ஏதும் நடக்காது, அப்படி செய்யவேண்டாமென்று தான் கட்டளை பிறப்பித்துள்ளதாக, அது பொதுமக்களின் காணி என்று நிரூபிக்கப்பட்டால் அதை தான் ஏற்றுக்கொள்வதாக. அவர் சொன்னது பொய்யா அல்லது வேறொரு பிக்குவை இறக்கியிருக்கிறார்களா? இது விகாரை பிரச்சனையல்ல நாட்டில் ஒரு வன்முறை கிளப்ப வேண்டுமென்றே ஒரு கூட்டம் அலையுது, அவர்களை கைது செய்யும்வரை இது தொடரும்.
-
டக்ளஸ் மீது பாயும் புதிய வழக்குகள்?
அப்போ இவர் செய்த கொலைகள் எந்த வழக்கில்?
-
நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்
களத்திற்கு கொசு மருந்து அடிக்கவேணும், கொசு பெருகி தொல்லை தாங்க முடியவில்லை. இது தென்பகுதியில் இருந்து வந்த கொசுபோல் தெரிகிறது, விளங்காத கிணுகிணுப்பு.
-
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக ஒத்துழைப்பு வழங்கிய சிலர் கைது - சாகர காரியவசம்
சிறியர், பெருமாள் எல்லாரும் ஓடியாங்கோ, எங்கே நீங்கள் விஷயம் அறியவில்லையோ? தினேஷ் ஷாப்டாரின் கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதில், முன்னைய போலீஸ் மா அதிபர், முன்னாள் கிறிக்கெற் வர்ணனையாளர் பிரையன் தாமஸ், வெவ்வேறு பட்ட அறிக்கையளித்த சட்ட மருத்துவர், இன்னும்பலர் சிக்க உள்ளனர். போலீசார் வேண்டுமென்றே கொலைக்கான ஆதாரங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த கொலையில் வேறு யாருக்கெல்லாம் சம்பந்தம் உள்ளது என துருவப்போகிறார்கள். இந்த வழக்கு மீண்டும் விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டதற்கு யாரை குற்றம் சாட்டப்போகிறார்கள் அரசியல் வியாதிகள்? சட்டம் தன்கடமையை செய்ய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை தடுக்கிறார்கள், புலம் பெயர்ந்தோரையும் அனுராவையும் எடுத்ததற்கெல்லாம் குற்றம் சாட்டி.
-
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக ஒத்துழைப்பு வழங்கிய சிலர் கைது - சாகர காரியவசம்
தமிழீழ போராட்டத்தில் சுயமாக இணைந்து, பயிற்சிகள் பெற்று போராடிய இவர்கள், பின் அந்த இயக்கத்திற்கு துரோகம் செய்து, அதற்கு எதிராக போராடினார்கள், காட்டிக்கொடுத்தார்கள் அந்த இயக்கத்தை அழிக்க முக்கிய சக்திகளாக இயங்கினார்கள். இயக்க ஒழுக்கங்களை மீறி கொலை, கொள்ளை, கப்பம் பெறுதல், பாலியல் வல்லுறவு கலாச்சாரத்தில் ஊறியவர்கள், அரசியலாளர்கள், அமைச்சர்கள் தங்கள் சொந்த பழிவாங்கலுக்காக இவர்களை பயன்படுத்தியவர்கள், அனுராவை அழிப்பதற்கு, நாட்டின் இஸ்திரத்தன்மையை பாதிக்க பயன்படுத்தப்பட மாட்டார்கள் அல்லது அவர்களே இயங்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? தாங்கள் பாதுகாத்த, நடவடிக்கை எடுக்கத்தவறிய குற்றவாளிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பது இவர்கள் நீதி. அதைத்தானே சர்வதேசமும் பார்த்துக்கொண்டிருக்கிறது. எப்படியிருந்தாலும் இவர்கள் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டு அதுவல்ல, அதை நிரூபிக்க வேண்டியது பொலிஸாரின் கடமை. அவர்கள்மேல் சட்ட நடவடிக்கை எடுக்காததற்கு முன்னைய அரசுகளும் பொறுப்பு கூற வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும்.
-
நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்
ஆண்டு சரியாக நினைவிலில்லை, ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபது நான்காம் ஆண்டாக இருக்கலாம். ஒரு தமிழர் அன்பளிப்பாக அப்போதிருந்த விகாராதிபதிக்கு கொடுத்ததாக தகவல், அவரோடிருந்த இந்த நயினாதீவு பிக்கு அவருக்கு பிறகு சொந்தம் கொண்டாடினார், அதன் பின் ஒரு பிக்கு இங்கு விகாரை கட்ட முற்பட்ட போது, இவர் மறுப்புத்தெரிவிக்கவில்லை. அவரும் பிழைக்கட்டும் என்று விட்டு விட்டாராம். அதன்பிறகு வேறொரு பிக்குவுக்கு கைமாறியதாம், அவர் இன்னொரு பிக்குவுக்கு கொடுக்க, அவர் பிக்குவிலிருந்து விலகியபோது ஒரு இளம் பிக்கு பொறுப்பானாராம், அவர் பல்கலைக்கழகம் போவதால் இப்போதைய திஸ்ஸ விகாராதிபதி கையில் போயிருக்கிறதாம், இப்படி பல கதைகள். தனது காணி, உறுதியிருக்கிறது, என்றெல்லாம் கதைவிட்டவர் இப்போ பின் வாங்குகிறார். இந்தப்பிக்கு தலைமை பிரச்சனையில் ஏதேதோ பேசி குழப்புகிறார். திஸ்ஸ விகாராதிபதிக்கு பதவி வழங்கிய பின்னே தீவிரமாக இந்தப்பிரச்சனை பற்றி பேசினார். விகாரை கட்டும்பொழுதே இவருக்குத் தெரியும். அப்போ இவர் அதை கண்டிக்கவோ, தடுக்கவோ, அனுமதி பெற்று கட்டுங்கள் என்று அறிவுத்தவோ இல்லை. அதிலும் இப்போதைய காணிக்காரர் ஒருவர் அந்த விகாரைக்கு ஐந்து பரப்பு விட்டுக்கொடுத்திருக்கிறாராம். எல்லாம் நம்முன்னோர் விட்ட தவறு. அவர்கள் நல்லிணக்கத்தோடு பேதம் பாராட்டாமல் வாழ்ந்தார்கள், இப்போ அதுவே இனத்துக்கு மதத்திற்கு பேரிடராக மாறியுள்ளது. அதுதான் ஒரே தீர்வு. ஆனால் அது ஒரு இனப்பிரச்னையுமில்லை, அப்படியொரு பிரச்சினையும் நாட்டில் இல்லை, சர்வதேசம் தலையிடத்தேவையில்லை என்று சிங்களமும் நம்மில் சிலரும் அடித்துக்கூறுகின்றனர். அது நடப்பதென்றால் எப்பவோ நடந்திருக்கும், அது நடக்க வாய்ப்பேயில்லை. பிரித்தானியா நம் நாட்டுக்குள் நுழைந்து நமது அரசியல் அதிகாரங்களை, நிலங்களை குழப்பாமல் இருந்திருந்தால்; நாமே நம்மை ஆண்டிருப்போம். இப்போ இந்தப்பிரச்சனை அவர்களுக்கு பொழுதுபோக்கு, பேசுபொருள்.
-
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக ஒத்துழைப்பு வழங்கிய சிலர் கைது - சாகர காரியவசம்
முன்பெல்லாம் கண்விழித்து எழுந்தவுடன் புலிகள் பல்லவி,இப்போ புலம்பெயர்ந்தோர் பல்லவி. கைதுசெய்யப்பட்டவர்கள் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மீண்டும் ஒருக்கா இவருக்கு வாசித்து காட்டுங்களப்பா, இவருக்கு வாசித்து விளங்குவதில் ஏதோ தவறு இருக்கிறதுபோலுள்ளது. இந்தக்குற்றங்கள் நாட்டில் நடந்ததா இல்லையா? சம்பவம் நடந்த சந்தர்ப்பத்தில் அந்தப்பிரதேசத்தில் ஆயுதத்துடன் நடமாடியவர்கள் யார்,யார்? இவர்கள் அந்தக்குற்றத்தை செய்யாது விட்டால் அடுத்த சந்தேகம் இராணுவத்தினர் செய்திருக்க வாய்ப்புண்டு. இவர்களை விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? உங்கள் வீட்டில் யாராவது கொலை செய்யப்பட்டிருந்தால் இப்படித்தான் பேசுவீர்களா? இவர்களுக்கு ஏன் ஆயுதம் வழங்கப்பட்டது அல்லது ஆயுதத்தை கையாள உரிமை அளித்தது? யார் யார் ஆட்சிக்காலத்தில் இந்தக்குற்றங்கள் நடந்தவை, ஏன் அப்போது அவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை? அப்போதே சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போ புலம்பெயர்ந்தவர்கள் தலையிட்டிருக்கவும் தேவையில்லை, அனுரா கைது செய்ய வேண்டியிருக்கவும் தேவையில்லை. கொலைக்குற்றவாளிகளையும் நீதிமன்ற தண்டனைக்கைதிகளையும் விடுதலை செய்தது யார், நீதிமன்ற நடவடிக்கைகளை தடுக்க நீதிபதிகளை வீட்டுக்கனுப்பியது யார், ஏன்? இவர்கள் பதறியடித்து தங்கள் குற்றங்களையும் கைதுகளையும் மறைக்க முயல்கின்றனரே ஒழிய இந்த ஆயுதக்குழுக்களை காப்பற்றவல்ல. இவர்களை வேண்டுமென்று திட்டமிட்டு பயன்படுத்தியதும் இவர்களே! இவர்களுக்கு ஆயுதம், பதவி, பாதுகாப்பு, வசதி வழங்கியவர்கள் இவர்கள், ஏன் வழங்கினார்கள்? பிரச்சனைக்கு ஒரு தீர்வை அடையாமல் தடுப்பதற்கு, புலிகளை பெலவீனப்படுத்துவதற்கு, மக்களை அழிப்பதற்கு, நீதியின் குரலை நசுக்குவதற்கு இந்தக்குற்றவாளிகளை பயன்படுத்திக்கொண்டார்கள். இவர்கள் கைதுசெய்யப்பட்டவர்களுக்காக அழுகிறார்கள் என்றால் இவர்களும் விசாரிக்கப்படவேண்டும். "சோழியன் குடுமி சும்மா ஆடாது." இந்த குற்றவாளிகளுக்குப்பின்னால் இருக்கும் சூத்திரதாரிகள் இவர்களே இவர்கள் பதறத்தான் செய்வார்கள். உண்மையாகவே இந்தக்குழுக்கள் மேல் நன்றியும், நல்லெண்ணமும் இருந்திருந்தால் அவர்களை இந்தக்குற்றச்செயல்களில் பயன்படுத்தியிருக்கமாட்டார்கள். இவர்களை பலிக்கடாவாக பயன்படுத்தியிருக்கிறார்கள். பாதாள போதைக்கும்பலை கைது செய்தாலும் விமர்ச்சிக்கிறார்கள், ஊழல் செய்தோரை கைதுசெய்தால் தெருக்களில் இறங்கி சவால் விடுகிறார்கள், கொலையாளிகளை கைதுசெய்தால் குற்றம் சாட்டுகிறார்கள். இவர்களின் பிரச்சனைதான் என்ன? இந்தக் குற்றங்கள் எல்லாவற்றிலும் இவர்களுக்கு பங்குண்டு, இவைகளின் எஜமானர்கள் இவர்களே, தாங்களே பொறியில் தலையை வைக்கிறார்கள். இவையெல்லா குற்றங்களுக்கு முந்தைய அரசாங்கங்கள், அமைச்சர்களே காரணம். ஏதோ, புலம்பெயர் அமைப்புகளின் விருப்பத்திலாவது, புண்ணியத்திலாவது நாட்டில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு, நீதி, சமாதானம், சமத்துவம் மலரட்டும். அவர்களே நாட்டில் அக்கறையுள்ளவர்கள். கொலை, கொள்ளை, ஊழல் செய்பவர்களோ அவற்றிற்கு பாதுகாப்பு, வாக்காளத்து கொடுப்பவர்களோ அல்ல. தன் இனத்துரோகியை சுயநலத்திற்கே யாரும் பயன்படுத்துவார்கள், அவர்களை யாரும் நம்புவதில்லை. "துரோகி துரோகத்தினாலேயே அழிக்கப்படுவான்."