-
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2025
இங்கிலாந்து சார்பாக ஜோ ரூட் 160 ஓட்டங்களைக் குவித்து அசத்த, ஆஸி, சார்பாக ட்ரவிஸ் ஹெட் பதிலடி Published By: Vishnu 05 Jan, 2026 | 07:00 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐந்தாவதும் கடைசியுமான ஆஷஷ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியல் ஜோ ரூட் அபாரம் சதம் குவித்து இங்கிலாந்தை பலப்படுத்தினார். அதேவேளை பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலியா சார்பாக ட்ரவிஸ் ஹெட் மற்றொரு அரைச் சதத்தைப் பெற்று உரிய பதிலடி கொடுத்துள்ளார். போட்டியின் முதலாம் நாளான ஞாயிற்றுக்கிழமை தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டு அதன் பின்னர் தொடரவில்லை. முதலாம் நாள் ஆட்டம் முடிவடைந்தபோது இங்கிலாந்து அதன் முதலாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஜோ ரூட் 72 ஓட்டங்களுடனும் ஹெரி ப்நூக் 78 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். இன்று காலை தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 384 ஓட்டங்களைப் பெற்றது. 35 வயதான ஜோ ரூட் 398 நிமிடங்கள் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 242 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகளுடன் 160 ஓட்டங்களைக் குவித்தார். 163ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜோ ரூட் குவித்த 41ஆவது சதம் இதுவாகும். ஜோ ரூட்டும் ஹெரி ப்றூக்கும் 4ஆவது விக்கெட்டில் 169 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஹெரி ப்றூக் 6 சிக்ஸ்கள், ஒரு சிக்ஸுடன் 84 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து ஜெமி ஸ்மித்துடன் 6ஆவது விக்கெட்டில் 94 ஓட்டங்ளையும் வில் ஜெக்ஸுடன் 7ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களையும் ஜோ ரூட் பகிர்ந்தார். ஜெமி ஸ்மித் 46 ஓட்டங்களையும் பென் டக்கட், வில் ஜெக்ஸ் ஆகிய இருவரும் தலா 27 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மைக்கல் நேசர் 60 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஸ்கோட் போலண்ட் 85 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டாக் 93 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலியா இன்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முதலாவது விக்கெட்டில் ஜேக் வெதரோல்டுடன் 57 ஓட்டங்களையும் இரண்டாவது விக்கெட்டில் மானுஸ் லபுஷேனுடன் 105 ஓட்டங்களையும் டர்விஸ் ஹெட் பகிர்ந்தார். ஜேக் வெதரோல்ட் 21 ஓட்டங்களையும் மானுஸ் லபுஷேன் 48 ஓட்டங்களையும் பெற்றனர். ட்ரவிஸ் ஹெட் 91 ஓட்டங்களுடனும் மைக்கல் நேசர் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். https://www.virakesari.lk/article/235302
-
எரிபொருள் விலைகளில் மாற்றம்
எரிபொருள் விலைகளில் மாற்றம் Jan 5, 2026 - 09:14 PM பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று(05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 335 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 340 ரூபாவாகும். இதேவேளை 277 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 02 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 279 ரூபாவாகும். இதேவேளை, 318 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 323 ரூபாவாகும். மேலும், மண்ணெண்ணெய் 02 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 182 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது. ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளபடாது 294 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படவுள்ளது. இதேவேளை, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு சமாந்திரமாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலைகளை திருத்தியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmk1c01yy03jxo29nuenuc8gb
-
-
உயரும் பயணிகள் விமானங்களின் தேவை - இவற்றை இந்தியாவால் தயாரிக்க முடியுமா?
உயரும் பயணிகள் விமானங்களின் தேவை - இவற்றை இந்தியாவால் தயாரிக்க முடியுமா? பட மூலாதாரம்,LightRocket via Getty Images படக்குறிப்பு,SJ-100 ரக விமானங்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் டெல்லியும் மாஸ்கோவும் கையெழுத்திட்டுள்ளன. கட்டுரை தகவல் ஜுகல் புரோஹித் பிபிசி ஹிந்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் விமான போக்குவரத்து சந்தைகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. சந்தையின் 90 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ள இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள், அடுத்த பத்தாண்டுகளில் சுமார் 1,500 விமானங்களை வாங்குவதற்கு ஆர்டர் செய்துள்ளன; இது பயணிகளின் தேவை எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதை உணர்த்துகிறது. இந்த விரிவாக்கமானது உலகளாவிய விமான விநியோகத்தில் 86 சதவீதப் பங்கைக் கொண்டுள்ள போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களையே சார்ந்துள்ளது; 2024-ல் இந்த நிறுவனங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிலான 'வரலாற்று ரீதியான' விநியோக நிலுவைகளை எதிர்கொண்டன. இது இந்திய ஆர்டர்களையும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பழைய கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது: இந்தியா தனக்கான சொந்தப் பயணிகள் விமானங்களை உருவாக்க வேண்டுமா? அக்டோபர் மாதம் இந்தியாவும் ரஷ்யாவும் மாஸ்கோவில் 'SJ-100' பயணிகள் விமானத்தை இந்தியாவில் தயாரிப்பதற்கான முதற்கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இது உள்நாட்டு விமானத் தயாரிப்பு குறித்த நம்பிக்கையை அதிகரித்தது. ரஷ்யாவுடனான இந்த ஒப்பந்தம் ஒரு தீர்வாகுமா? அதன் கூட்டுத் தயாரிப்புத் திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக இன்னும் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் விமான போக்குவரத்து சந்தைகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது SJ-100 இரண்டு என்ஜின்களைக் கொண்ட ஒரு விமானமாகும்; இது 103 பயணிகள் வரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது மற்றும் இது ஏற்கனவே பல ரஷ்ய விமான நிறுவனங்களின் பயன்பாட்டில் உள்ளது என்று அதன் தயாரிப்பாளரான யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் (UAC) கூறுகிறது. இந்தியா இந்த விமானத்தை ஒரு 'கேம் சேஞ்சர்' என்று விவரித்துள்ளதுடன், இதை குறுகிய தூரப் பயணங்களுக்குப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. ஆனால், வல்லுநர்கள் இத்திட்டத்தின் செலவு மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர் - இவை குறித்த பல விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ரஷ்ய நிறுவனத்தால் இந்தியாவில் விமான உற்பத்தியை மிக விரைவாகத் தொடங்கி, அதை ஒரு பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடியுமா என்பதுதான் தற்போது எழுந்துள்ள மிகப்பெரிய சந்தேகமாக உள்ளது. 2008 மற்றும் 2020-க்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 200 SJ-100 விமானங்களை விநியோகித்ததாக அதன் தயாரிப்பாளர் கூறுகிறார். ஆனால், 2022-ல் யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யா போரைத் தொடங்கியபோது அந்த வளர்ச்சிப் பாதையில் மாற்றம் ஏற்பட்டது. மேற்கத்திய நாடுகளின் தடைகள் மிக முக்கியமான உதிரிபாகங்களின் வரவைத் துண்டித்தன; இதனால் அந்த நிறுவனம் சுமார் 40 தொழில்நுட்ப அமைப்புகளை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதுடன், 2023-ல் 'இறக்குமதிக்கு மாற்றாக' உருவாக்கப்பட்ட ஒரு பதிப்பை இயக்க வேண்டியிருந்தது. ஐரோப்பாவின் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்பு இந்த விமானத்திற்கான சான்றிதழைத் திரும்பப் பெற்றது; இது SJ-100 மற்றும் பிற ரஷ்ய விமானங்கள் அதன் வான்வெளியில் பறக்க தடை விதித்துள்ளது. இந்தியா நீண்டகாலமாகப் பயணிகள் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முயற்சித்துக்கொண்டிருந்தது, ஆனால் அதில் மிகக் குறைந்த அளவிலான வெற்றியையே பெற்றுள்ளது. 1959-ஆம் ஆண்டில், 'சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பயணிகள் விமானங்களை' உருவாக்குவதற்காக தேசிய விண்வெளி ஆய்வகத்தை (National Aerospace Laboratories) அரசாங்கம் நிறுவியது. இந்த நிறுவனம் இரண்டு இருக்கைகள் கொண்ட ஹன்சா மற்றும் ஐந்து இருக்கைகள் கொண்ட பயிற்சி விமானங்களை உருவாக்கியுள்ளது, ஆனால் பெரிய அளவிலான பயணிகள் விமானங்களின் உருவாக்கம் இன்னமும் தொலைவிலேயே உள்ளன. 1960-களில், இந்தியா வெளிநாட்டு உரிமங்களின் கீழ் பயணிகள் விமானங்களைத் தயாரித்தது. அரசுக்குச் சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், பிரிட்டன் வடிவமைப்பான 'அவ்ரோ 748' ரகத்தில் பல விமானங்களைத் தயாரித்தது; இவை பயன்பாட்டிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பு வரை வணிக ரீதியிலான விமான நிறுவனங்களாலும் ராணுவத்தாலும் பயன்படுத்தப்பட்டன. 1980-களில், 19 இருக்கைகள் கொண்ட பயணிகள் விமானத்தைத் தயாரிப்பதற்காக ஜெர்மனியின் டோர்னியர் நிறுவனத்துடன் இந்தியா கைகோர்த்தது; அவற்றில் சில விமானங்கள் இன்றும் ராணுவத்திலும், குறிப்பிட்ட சில சிவில் பயன்பாட்டிலும் உள்ளன. இதையடுத்து, இந்தியா தனது சொந்த சிறியப் பயணிகள் விமானங்களை உள்நாட்டிலேயே சுயமாக வடிவமைக்கவும் முயன்றது. பட மூலாதாரம்,Hindustan Times via Getty Images படக்குறிப்பு,கடந்த மாதம் இண்டிகோ நிறுவனம் விமானங்களை ரத்து செய்ததைத் தொடர்ந்து, பல்வேறு விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர். 2000-ஆம் ஆண்டில், NAL-இன் 15 இருக்கைகள் கொண்ட சரஸ் விமானத்தைத் தயாரிப்பதற்கு உதவி கோரி ரஷ்யாவுடன் இந்தியா ஓர் ஒப்பந்தம் செய்தது. அந்த விமானம் 2004 மே மாதத்தில் தனது முதல் பயணத்தை மேற்கொண்டது; ஆனால் 2009-ல் அதன் இரண்டாவது முன்மாதிரி விமானம் விபத்துக்குள்ளாகி மூன்று விமான ஓட்டிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்தத் திட்டம் முடங்கியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய அரசாங்கம் இத்திட்டத்தை மீண்டும் புதுப்பித்து, 19 இருக்கைகள் கொண்ட 'சரஸ் எம்கே2' என்ற அடுத்த முன்மாதிரி விமானத்தை உருவாக்கியது; இருப்பினும், இது சான்றளிப்பிற்காக காத்திருக்கிறது. மற்றொரு திட்டமான பிராந்திய போக்குவரத்து விமானம் திட்டமும், பல ஆண்டுகளாக மிகக் குறைந்த அளவிலான முன்னேற்றத்தையே கண்டுள்ளது. ரஷ்யாவின் SJ-100 விமானத்திற்கு இணையான 90 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்திற்கான அறிக்கைகள் 2011-லேயே சமர்ப்பிக்கப்பட்டன; ஆனால் அதன் பிறகு இதில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இந்தியாவில் விமானத் தயாரிப்புத் துறை நீண்டகாலமாகப் பல தடைகளைச் சந்தித்து வருவதாக விமானப் போக்குவரத்துத் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். சமீபகாலம் வரை 'உள்நாட்டில் பெரிய அளவிலான தேவை இல்லாதது', உயர் தகுதி வாய்ந்த மனிதவளப் பற்றாக்குறை மற்றும் மிகச்சிறிய அளவிலான உள்நாட்டு உற்பத்திச் சூழல் ஆகியவை இத்துறையின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியுள்ளதாக NAL-இன் இயக்குனர் முனைவர் அபய் பாஷில்கர் சுட்டிக்காட்டுகிறார். இதற்கான தீர்வு 'இந்திய மற்றும் உலகளாவிய உற்பத்தியாளர்களுடன் இணைந்து செயல்படுவதுதான்' என்று அவர் மேலும் கூறுகிறார். SJ-100 திட்டம் உண்மையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் காரணியாக அமையுமா? தற்போதைக்கு, அது அப்படித்தான் தோன்றுகிறது. இந்தியாவின் சொந்தத் திட்டங்கள் முடிவடைவதற்கு நீண்ட தூரம் இருப்பதால், இந்தத் திட்டம் ஒரு 'நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறையை' வழங்குகிறது என்று HAL-இன் முன்னாள் செய்தித் தொடர்பாளர் கோபால் சுதார் கூறுகிறார். மாஸ்கோவைப் பொறுத்தவரை, SJ-100 விமானத்திற்குப் பரவலான அங்கீகாரம் கிடைப்பது, மேற்கத்திய தொழில்நுட்பம் இல்லாமலேயே தங்களால் ஒரு பயணிகள் விமானத்தைத் தயாரிக்க முடியும் என்பதை நிரூபிக்கிறது. இந்த ஒப்பந்தம் சில சமரசங்களுடனேயே வருகிறது. மேலும் இது இந்தியா விமானத் தயாரிப்பின் எதிர்காலம் குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது; இருப்பினும், இந்தியாவின் 'உறுதியான ஆதரவாளராக' ரஷ்யாவின் பங்கு இப்போதும் மிக முக்கியமானது என்று சுதார் போன்ற வல்லுநர்கள் வாதிடுகின்றனர். தடைகள் சவால்களை ஏற்படுத்தக்கூடும், ஆனால் அவை இரு நாடுகளாலும் முன்கூட்டியே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் என்று அவர் கூறினார். விமானங்கள் கிடைப்பது என்பது இந்தியாவின் விமானப் போக்குவரத்து சவால்களில் ஒரு பகுதி மட்டுமே; இத்துறையின் வேகமான விரிவாக்கம் என்பது பயிற்சி பெற்ற பணியாளர்களைப் பொறுத்தே அமையும். விமானிகளின் பணிப்பட்டியல் திட்டமிடலில் ஏற்பட்ட குளறுபடிகளால், இந்த மாத தொடக்கத்தில் இண்டிகோ நிறுவனம் ஆயிரக்கணக்கான விமானச் சேவைகளை ரத்து செய்தது; இதனால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பல மணிநேரம் ஏன் பல நாட்களாக கூட தவித்தனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm24eyp1deko
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
ரி20 உலகக் கிண்ணத்துக்கான பங்களாதேஷ் குழாம் 05 Jan, 2026 | 05:12 PM (நெவில் அன்தனி) இந்தியாவுடனான அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ரி20 உலகக் கிண்ணத்துக்கான 15 வீரர்கள் கொண்ட குழாத்தை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இந்தியாவுடன் அரசியல் முறுகல் நிலை ஏற்பட்டதாலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து முஸ்பிஸுர் ரஹ்மானை நீக்குமாறு இந்திய கிரிக்கெட் சபை அறிவித்ததாலும் பங்களாதேஷின் போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்றுமாறு ஐசிசியை கோரவேண்டும் என பங்களாதேஷ் விளையாட்டுத்துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருள் நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும் இந்த முறுகல் நிலைக்கு மத்தியில் 15 வீரர்கள் கொண்ட ரி20 உலகக் கிண்ண குழாத்தை பங்களாதேஷ் அறிவித்துள்ளது. ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை அரை இறுதிக்கு முன்னேறாமால் இருக்கும் பங்களாதேஷ் அந்த வரலாற்றை மாற்றி அமைக்க முயற்சிக்க உள்ளது. ரி 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணியின் தலைவராக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். லிட்டன் தாஸுடன் தன்ஸித் ஹசன், சய்வ் ஹசன் ஆகியோர் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களாகவும், தௌஹித் ஹிர்தோய், ஷமிம் ஹொசெய்ன், நூருள் ஹசன் ஆகியோர் மத்திய வரிசை வீரர்களாகவும் அணியில் இடம்பெறுகின்றனர். பந்துவீச்சை பலப்படுத்தும் வகையில் வேகப்பந்துவீச்சாளர்களான முஸ்தாபிஸுர் ரஹ்மான், தஸ்கின் அஹ்மத், சுழல்பந்துவிச்சாளர்களான மெஹிதி ஹசன், நசும் அஹ்மத், ரிஷாத் ஹொசெய்ன் ஆகியோர் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர். முன்னாள் சம்பியன்களான இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளுடன் நேபாளம், இத்தாலி ஆகிய அணிகளை சி குழுவில் பங்களாதேஷ் எதிர்த்தாடும். பங்களாதேஷின் போட்டிகள் பெப்ரவரி 7: எதிர் மேற்கிந்தியத் தீவுகள் (கொல்கத்தா) பெப்ரவரி 9: எதிர் இத்தாலி (கொல்கத்தா) பெப்ரவரி 14: எதிர் இங்கிலாந்து (கொல்கத்தா) பெப்ரவரி 17: எதிர் நேபாளம் (கொல்கத்தா) பங்களாதேஷ் குழாம் லிட்டன் தாஸ் (தலைவர்), தன்ஸித் ஹசன், பர்விஸ் ஹொசெய்ன் ஈமொன், சய்வ் ஹசன், தௌஹித் ஹிர்தோய், ஷமிம் ஹொசெய்ன், குவாஸி நூருள் ஹசன் சொஹான், ஷாக் மெnஹித ஹசன், ரஷாத் ஹொசெய்ன், நசும் அஹ்மத், முஸ்தாபிஸுர் ரஹ்மான், தன்ஸிம் ஹசன் ஷக்கிப், தஸ்கின் அஹ்மத், ஷய்ப் உதின், ஷொரிபுல் இஸ்லாம். https://www.virakesari.lk/article/235288
-
அரச வைத்தியசாலையில் முதல் முறையாக உணவுப் பிரிவு ஆரம்பிக்க நடவடிக்கை!
அரச வைத்தியசாலையில் முதல் முறையாக உணவுப் பிரிவு ஆரம்பிக்க நடவடிக்கை! 05 Jan, 2026 | 05:04 PM அரசாங்க வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உரிய சத்தான மற்றும் சுவையான உணவை வழங்குவதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம், இலங்கை ஊட்டச்சத்து நிபுணர்கள் நிறுவனம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் சங்கத்துடன் இணைந்து ஒரு விசேட திட்டத்தை ஆரம்பித்து உள்ளது. மேலும் அதன் முன்னோடி திட்டம் நாளை செவ்வாய்க்கிழமை (06) மஹரகம வைத்தியசாலையில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் ஆரம்பிக்கபட உள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சம், நோயாளிக்கு அரிசி, காய்கறிகள், ஊறுகாய், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை தனித்தனியாக வழங்குவது ஆகும். உணவை ஒரு நோயாளி பார்த்தவுடன், சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதாக பணிபுரியும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் 2,000 பேருக்கு உணவு மற்றும் பானங்கள் தயாரிக்க கூடிய நவீன சமையலறை அமைக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த சமையலறையும் இந்த திட்டத்துடன் சேர்த்து திறக்கப்பட உள்ளது. வைத்தியசாலையின் சமையலறையின் பெயர் 'உணவு மற்றும் பானங்கள் துறை' என வழங்கப்பட்டுள்ளது. நவீன முறையில் உணவு மற்றும் பானங்களை தயாரித்து பரிமாற நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் நிர்வாகம், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம், இலங்கை ஊட்டச்சத்து நிபுணர்கள் நிறுவனம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் சங்கம் ஆகியவற்றின் தலைமையில் செயல்படுத்தப்படும் இந்த விசேட திட்டத்திற்கு, ருஹுணு மகா கதிர்காம தேவாலயம் இலங்கை இராணுவம், லேடி ஜே நிறுவனம், ஹைட்ராமணி நிறுவனம் மற்றும் கிராண்ட் மோனார்க் ஹோட்டல் ஆகியவை தங்கள் ஆதரவினை வழங்குகின்றன. இந்தத் திட்டம் குறித்து மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் தலைவரும் ஒருங்கிணைப்பாளருமான ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் சஜித மல்லவராச்சி தனது கருத்துக்களைத் தெரிவித்து, நோயாளிகளுக்கு சத்தான மற்றும் சுவையான உணவை வழங்குவது மிகவும் முக்கியம் என்றும், சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவு நோயாளிகளுக்கு ஏற்படும் பல சிக்கல்களைக் குறைக்கும் என்றும் கூறினார். வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவுக்கு சமமான அல்லது சிறந்த, அளவு, சுவையான மற்றும் அதிக ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்களைக் கொண்ட தரமான உணவை வழங்குவதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் என்று அவர் மேலும் கூறினார். சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் எதிர்காலத்தில் இந்த திட்டத்தை தீவு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/235270
-
அடிப்படை சுகாதார வசதி திட்டம்
வீட்டுத்திட்டம் சம்பந்தமான ஏற்கனவே எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றை @குமாரசாமிஅண்ணைக்கு வட்சப்பில் அனுப்பி உள்ளேன். விரைவில் புதிய படங்கள், காணொளியை எடுத்து பகிர்கிறேன். மலசலகூடம் அரைவாசி கட்டியபடி பிற் வெட்ட போதிய நிதி வசதி இல்லாததால் பூரணப்படுத்த காத்திருக்கிறார்கள்.
-
வடக்கு, கிழக்கு வானிலை குறித்த விசேட எச்சரிக்கை அறிவிப்பு
தீவிரமடையும் தாழமுக்கம், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை! 05 Jan, 2026 | 05:36 PM தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில் தற்போது காணப்படும் தாழ்வு நிலை வலுப்பெறுகின்றது. இன்றைய நிலையில் இது இலங்கையின் கிழக்கு கரையூடாக வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வடக்கு மாகாணத்தை மிக அண்மித்து தமிழ்நாட்டை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார். மேலும் அவர், இந்த தாழமுக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய, தென் மாகாணங்கள் கன மழையைப் பெறும் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். இது மக்களைப் பதற்றத்துக்குள்ளாக்கும் எதிர்வுகூறல் அல்ல என்பதுடன் மக்களை விழிப்பூட்டித் தயார்ப்படுத்தும் எதிர்வுகூறல் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் கூறிய அவர், இந்த தாழமுக்கத்தினால் இன்று முதல் எதிர்வரும் 11.01.2026 வரை கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளும் பரவலாக கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது. அத்தோடு இத்தாழமுக்கம் கிழக்கு பகுதியை அண்மித்தே (நிலப்பகுதியோடு இணைந்ததாக) வடக்கு நோக்கி நகரும் என்பதனால் வேகமான காற்றோடு இணைந்த கனமழையும் இடி மின்னல் நிகழ்வுகளும் இடம்பெறும். வடக்கு மாகாணத்திற்கான மிகக் கனமழையும் வெள்ள அனர்த்தத்துக்கான எச்சரிக்கையும். இந்த தாழமுக்கம் கிழக்கு கரையூடாக வடக்கு நோக்கி நகர்ந்து வடக்கு கரையூடாக தமிழ்நாட்டை அடையும் என்பதனால், இன்று முதல் வடக்கு மாகாணம் மிதமான மழையைப் பெறும். ஆனால் எதிர்வரும் 07.01.2026 முதல் வடக்கு மாகாணம் பரவலாக மிகக் கனமழையைப் பெறும். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அதிகனமழையும் வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட முன்னெச்சரிக்கையுடன் செயற்படவேண்டும். உருவாகியுள்ள தாழமுக்கத்தினால் எதிர்வரும் 07.01.2026 முதல் யாழ்ப்பாண மாவட்டமும் கிளிநொச்சி மாவட்டமும் அதிகனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது. உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக ஊவா மாகாணம் இன்று முதல் கனமானது முதல் மிகக்கனமானது வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அத்துடன் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இந்த தாழமுக்கத்தின் காரணமாக மழை தொடர்ச்சியாக கிடைக்கும் என்பதனாலும், சில நாட்களில் மிகக்கனமழை பெய்யும் என்பதனாலும் யாழ்ப்பாணம் (மாவட்டத்தின் பல பகுதிகள்), கிளிநொச்சி (மாவட்டத்தின் பல பகுதிகள்), முல்லைத்தீவு (மாவட்டத்தின் பல பகுதிகள்), வவுனியா (மாவட்டத்தின் பல பகுதிகள்), மன்னார் (மாவட்டத்தின் சில பகுதிகள்) திருகோணமலை (மாவட்டத்தின் பல பகுதிகள்), மட்டக்களப்பு (மாவட்டத்தின் பல பகுதிகள்), அம்பாறை (மாவட்டத்தின் பல பகுதிகள்), பதுளை (மாவட்டத்தின் பல பகுதிகள்), மொனராகலை (மாவட்டத்தின் பல பகுதிகள்), அனுராதபுரம் (மாவட்டத்தின் பல பகுதிகள்), பொலன்னறுவை (மாவட்டத்தின் பல பகுதிகள்), புத்தளம் (மாவட்டத்தின் சில பகுதிகள்), குருநாகல் (மாவட்டத்தின் பல பகுதிகள்) அம்பாந்தோட்டை (மாவட்டத்தின் சில பகுதிகள்) வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்கள் உள்ளன. வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாணங்களின் குளங்களின் நீரை தற்போதே சற்று குறைந்த மட்டத்தில் பேணுவது சிறந்தது. இந்நாட்களில் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளதனால் அதனோடு இணைந்த நிலச்சரிவு அனர்த்தங்களும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நாளை முதல் (06.01.2026) இலங்கையின் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தயவு செய்து இந்த கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு நிகழ்வுகளினால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள மக்களைத் தாயார்ப்படுத்தும் திணைக்களங்களின் அதிகாரிகள் இது தொடர்பாக மக்களை விழிப்பூட்டுவது அவசியம். தயவு செய்து மேற்குறிப்பிட்ட மாகாணங்களிலுள்ள மக்கள் இந்த தாழமுக்கம், கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு மற்றும் கடற்கொந்தளிப்பு தொடர்பில் அவதானமாக இருப்பது மிக மிக அவசியம் என நாகமுத்து பிரதீபராஜா மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/235293
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படம்.
-
வெனிசுலா ஜனாதிபதி மற்றும் மனைவியை விடுவிக்குமாறு அமெரிக்காவை சீனா வலியுறுத்தியுள்ளது
அமெரிக்காவால் மதுரோ சிறைப்பிடிப்பு : “உலகின் நீதிபதியாக எந்த நாடும் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” – சீனா Published By: Digital Desk 3 05 Jan, 2026 | 03:19 PM வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலாஸ் மதுரோவை அமெரிக்கா சிறைப்பிடித்ததை தொடர்ந்து, “உலகின் நீதிபதியாக எந்தவொரு நாடும் செயல்படுவதை பீஜிங் ஏற்றுக்கொள்ளாது ” என்று சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை பீஜிங்கில் நடைபெற்ற சந்திப்பின் போது, பாகிஸ்தானின் துணை பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான இஷாக் தாரிடம் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். “உலகின் காவலராக எந்த நாடும் செயல்பட முடியாது என்பதையும், உலகின் நீதிபதியாக தன்னை அறிவிக்க எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என்பதையும் நாம் ஒருபோதும் நம்பியதில்லை,” என்று அவர் கூறினார். அமெரிக்காவை நேரடியாக குறிப்பிடாமல், “வெனிசுவேலாவில் ஏற்பட்ட திடீர் திருப்பங்கள் ” குறித்து அவர் சுட்டிக்காட்டினார். “சர்வதேச சட்டத்தின் கீழ் அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பும் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும்,” என்றும் சீனாவின் தலைமைத் தூதுவர் வலியுறுத்தினார். அமெரிக்காவால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட 63 வயதான மதுரோ கண்கட்டி, கைகட்டப்பட்ட நிலையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் சனிக்கிழமை வெளியாகி வெனிசுவேலா மக்களை அதிர்ச்சியடையச் செய்ததைத் தொடர்ந்து, வாங் யி வெளியிட்ட முதல் கருத்து இதுவாகும். நிக்கோலாஸ் மதுரோ தற்போது போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் கீழ் நியூயோர்க்கில் உள்ள சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். உலகளாவிய தூதரக சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்ற இலட்சியத்தை பீஜிங் கொண்டுள்ளதாகவும், 2023ஆம் ஆண்டில் சவூதி அரேபியா மற்றும் ஈரான் இடையிலான எதிர்பாராத நல்லுறவை ஏற்படுத்தியதன் மூலம் அந்த நோக்கத்தை சீனா தெளிவாக வெளிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அப்போது, “உலகளாவிய முக்கிய பிரச்சினைகளில் பங்காற்றுவோம்” என சீனா உறுதியளித்திருந்தது. அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் நேரடியாக மோதித் தன்னை நிலைநாட்டிய அனுபவம், சீனாவின் தன்னம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர். “இது சீனாவுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. வெனிசுவேலாவுக்கு நம்பகமான நண்பராக தங்களை காட்ட விரும்பினோம்,” என்று மதுரோ கைது செய்யப்படும் சில மணி நேரங்களுக்கு முன்பு, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் விவகாரங்களுக்கான சீனாவின் சிறப்பு பிரதிநிதி கியூ சியாவ்சியுடன் (Qiu Xiaoqi) அவர் நடத்திய சந்திப்பு குறித்து தகவல் அறிந்திருந்த சீன அரச அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், மதுரோவின் மகன் 2016ஆம் ஆண்டில் சேர்ந்து கல்வி கற்ற சீனாவின் முன்னணி பெக்கிங் பல்கலைக்கழகத்தை ((Peking University) 2024ஆம் ஆண்டில் பார்வையிட்டதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பல ஆண்டுகளாக கல்வி மற்றும் சீனாவுடனான உறவுகள் தொடர்பாக தூதரக ஈடுபாடுகள் இருந்தபோதும், அவர் மீண்டும் சீனாவுக்கு திரும்புவாரா என்பது குறித்து உறுதி இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா, 2017ஆம் ஆண்டு அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் தடைகளை கடுமையாக்கியதிலிருந்து வெனிசுவேலாவுக்கு பொருளாதார ஆதரவாக இருந்து வருகிறது. கிடைக்கப்பெறும் சமீபத்திய முழு ஆண்டுத் தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் சீனா சுமார் 1.6 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்களை வெனிசுவேலாவிலிருந்து கொள்முதல் செய்துள்ளது. சீனாவின் மொத்த கொள்முதல்களில் கிட்டத்தட்ட பாதி மசகு எண்ணெயாகும். மேலும், அமெரிக்கன் என்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட் (American Enterprise Institute) என்ற சிந்தனைக் குழு வெளியிட்ட தரவுகளின்படி, சீனாவின் அரசு கட்டுப்பாட்டிலுள்ள எண்ணெய் நிறுவனங்கள் 2018ஆம் ஆண்டுக்குள் வெனிசுவேலாவில் சுமார் 4.6 பில்லியன் டொலர் முதலீடு செய்துள்ளன. https://www.virakesari.lk/article/235255
-
மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும்
மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும் Jan 5, 2026 - 06:17 PM பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் காணப்படுகின்ற காற்றாலை மின் உற்பத்தி மூலம் கிடைக்கும் நிதியில் குறித்த காற்றாலை மின் உற்பத்தி நிறுவனம் வடக்கு மாகாண விவசாய அமைச்சிற்கு வழங்கும் சமூக பொறுப்பு நிதி 19.9 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் பிரதேச சபை வளாகத்தில் பாரம்பரிய உணவகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (05) நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உரையாற்றிருந்தார். புலம்பெயர்ந்து வாழ்கின்றவர் இங்கு மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும் தென்னிலங்கையிலிருந்து இங்கு இருக்கின்ற வளங்களை எவ்வாறு பயன்படுத்தி இலாபம் அடையலாம் என யோசித்து இங்கு வந்து தொழில் நிறுவனங்களை அமைக்கின்றனர். ஆனால் எமது புலம்பெயர்ந்த உறவுகள் கோடிக்கணக்கில் காணிகளை வாங்கி விட்டு அதில் மேல்மாடிகளை கட்டிவிட்டு வெளிநாட்டில் இருக்கிறார்கள் இவ்வாறான முதலீடுகள் செய்வதன் மூலம் எமது பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு தொழிலை வழங்கி எமது பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்ல முடியும் என தெரிவித்தார். -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://adaderanatamil.lk/news/cmk15op2b03jmo29nhbphh488
-
செரெண்டிப் கழகத்தை வெற்றிபெறச் செய்த யாழ். வீரர் அபிஷான்
400 கி.மீற்றர் பயணித்து செரெண்டிப் கழகத்தை வெற்றிபெறச் செய்து யாழ். திரும்பிய அபிஷான் 05 Jan, 2026 | 01:09 PM (நெவில் அன்தனி) யாழ்ப்பாணத்திலிருந்து 400 கிலோ மீற்றர் பயணித்து கொழும்பு வருகை தந்து சனிக்கிழமை (03) இரவு நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் ஏ குழுப் போட்டியில் பங்குபற்றி கடைசிக் கட்டத்தில் கோல் போட்டு மாவனெல்லை செரெண்டிப் கழகத்துக்கு இறுக்கமான வெற்றியை (1 - 0) ஈட்டிக்கொடுத்த விஜயகுமார் அபிஷான், வெற்றிக்களிப்புடன் போட்டி முடிவடைந்த சிறிது நேரத்தில் மீண்டும் யாழ். திரும்பினார். அபிஷானுடன் அவரது மூத்த சகோதரர், அணித் தலைவர் விஜயகுமார் விக்னேஷும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வருகை தந்து போட்டி முடிந்தவுடன் யாழ். திரும்பினார். இந்த சகோதரர்கள் இருவரும் அற்புதமான கால்பந்தாட்ட ஆற்றல்களை வெளிப்படுத்தி விளையாடி ரசிகர்களைப் பரபரப்பில் ஆழ்த்தினர். செரெண்டிப் கழகத்துக்கும் நிகம்போ யூத் கழகத்துக்கும் இடையில் கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் சனிக்கிழமை (03) இரவு நடைபெற்ற இந்தப் போட்டி ஆரம்பம் முதல் கடைசிவரை வேகமும் விறுவிறுப்பும் கலந்ததாக அமைந்தது. போட்டியின் முதல் 18 நிமிடங்கள் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்டதுடன் அவ்வப்போது கோல் போடுவதற்கு எடுத்த முயற்சிகள் வீண் போயின. அதன் பின்னர் இரண்டு அணியினரதும் பந்துபரிமாற்றங்கள் மோசமாக இருந்ததால் ஆட்டத்தின் முதலாவது பகுதியில் கோல் போடப்படவில்லை. இடைவேளைக்குப் பின்னர் எதிர்த்தாடல், தடுத்தாடல் ஆகிய இரண்டிலும் திறமையை வெள்ளிப்படுத்திய செரெண்டிப் கழகம அவ்வப்போது கோல் போட எடுத்த முயற்சிகள் கோல் குறுக்குக் கம்பத்தை உராய்ந்தவாறு வெளியே சென்றன. இவ்வாறு பல கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்ட செரெண்டிப் கழகம் போட்டியின் கடைசிக் கட்டத்தில் நிகம்போ யூத் கழகத்தின் கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் விளையாடியது. இதன் பலனாக உபாதையீடு நேரத்தின் 2ஆவது நிமிடத்தில் டாக்கோ ஜோர்ஜ் பரிமாறிய பந்தை ஆறு யார் கட்டத்துக்கு அருகிலிருந்தவாறு அபிஷான் பலமாக உதைத்து கோலாக்கி, செரெண்டிப் கழகத்திற்கு மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிக்கொடுத்தார். போட்டி முடிவில் கருத்து வெளியிட்ட அபிஷான், 'இயற்கை அனர்த்தத்திற்கு பின்னர் ரயில் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்ததால் நானும் எனது மூத்த சகோதரனும் யாழ்ப்பாணத்திலேயே பயிற்சிகளில் ஈடுபட்டுவருகிறோம். ஏனைய செரெண்டிப் வீரர்களுடன் எங்களுக்கு பயிற்சிபெறக்கூடிய வாய்ப்பு இல்லை. ஆனால், செரெண்டிப் கழக முகாமைத்துவம் எங்கள் மீது நம்பிக்கை வைத்து, முழு நேரமும் விளையாடவைத்து எங்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அதற்காக அணி முகாமைத்துவத்திற்கு நன்றி கூற கடமைபட்டுள்ளேன். ஏனைய வீரர்களுடன் நாங்கள் சிறந்த புரிந்துணர்வுடன் விளையாடி வருகிறோம். இந்தப் போட்டியில் செரெண்டிப் கழகத்தை நான் வெற்றிபெறச் செய்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது' என தூய தமிழ் மொயில் தெரிவித்தார். பெலிக்கன்ஸ் கழகத்திடமும் பொலிஸ் கழகம் தோல்வி இதே மைதானத்தில் சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற பி குழு போட்டியில் பொலிஸ் கழத்தை எதிர்த்தாடிய குருநாகல் பெலிக்கன்ஸ் கழகம 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பொலிஸ் கழகம் தொடர்ச்சியான இரண்டாவது வாரமாக தோல்வியைத் தழுவியது. பெலிக்கன்ஸ் கழகம் ஆதிக்கம் செலுத்திய இப் போட்டியின் 26ஆவது நிமிடத்தில் கோஜோ அனோக்யே 25 யார் தூரத்திலிருந்து தாழ்வாக உதைத்த பந்தை நோக்கி இடதுபுறமாகத் தாவிய பொலிஸ் கோல் காப்பாளர் தினேஷ் மகேந்திரனினால் தடுக்க முடியாமல் போனது. போட்டியின் கடைசிக் கட்டத்தில் கோல் நிலையை சமப்படுத்த பொலிஸ் கழக வீரர்கள் எடுத்த முயற்சிகள் வீண்போயின. ஒரு சந்தர்ப்பத்தில் பொலிஸ் கழக வீரர் கயான் ரிவால்டோ பலமாக உதைத்த பந்தை பெலிக்கன்ஸ் கோல்காப்பாளர் ரங்கன ஜயசேகர வேகமாக செயல்பட்டு திசை திருப்பினார். அவரது திறமையான கோல் தடுப்பும் பெலிக்கன்ஸ் கழகத்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றியது. https://www.virakesari.lk/article/235242
-
வடக்கு, கிழக்கு வானிலை குறித்த விசேட எச்சரிக்கை அறிவிப்பு
எதிர்கால வானிலை குறித்த விசேட அறிவிப்பு Jan 5, 2026 - 04:46 PM எதிர்கால வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. நாட்டிற்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள வளிமண்டல கீழ்த்தளத் தளம்பல் நிலை மேலும் வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஜனவரி 8 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் நாட்டின் குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பு இன்று (05) மாலை 3.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmk12eqyd03jeo29nqci0xzap 9, 10 ஆம் திகதிகளில் கடும் மழைக்கான வாய்ப்புள்ளதாக தரவுகள் எச்சரிக்கின்றன.
-
பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மோசமான பல கூறுகள் புதிய வரைவிலும் உள்ளன ; வரைவை உடன் வாபஸ் பெறுமாறு அரசாங்கத்திடம் சமூக ஊடகப் பிரகடனத்துக்கான கூட்டிணைவு வலியுறுத்தல்
‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ என்ற புதிய ஒடுக்குமுறைச் சட்டத்தை கொண்டுவர அரசாங்கம் தீர்மானம்! 05 Jan, 2026 | 03:31 PM பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அதுபோன்ற அடக்குமுறைச் சட்டங்களை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத அதேவேளை நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றாக ‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ என்ற புதிய ஒடுக்குமுறைச் சட்டத்தைக் கொண்டுவர தீர்மானித்துள்ளது. இம் முயற்சிகளுக்கு எதிராக மக்கள் பேரவைக்கான இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், சமூக ஆர்வலர்களால் டிசம்பர் 30ம் திகதி நீதி அமைச்சின் அலுவலகத்தில் நீதியமைச்சரிடம் கடிதம் கையளிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பில் நீதி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றதுடன் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்ற பெயரில் அல்லது வேறு பெயரில் கொண்டுவரப்படும் எந்த சட்டமும் அடிப்படையில் ஜனநாயக விரோத, மனித உரிமைகுக்கு எதிரான அபாயங்கள் குறித்தும் விளக்கப்பட்டது. தற்போது நடைமுறையில் உள்ள தடுப்புக்காவல் உத்தரவுகலை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத அதேவேளை , தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகலின் கீழ் நீதிமன்ற நடைமுறை மூலம் விசாரணைகளை நடத்தி சந்தேகநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் இயலுமாநதாக இருக்குப் போதே, தற்போதைய அரசாங்கம் அரசியல் தேவைக்காகவே ‘பயங்கரவாத எதிர்ப்பு’ என்ற பெயரில் புதிய சட்டங்களை கொண்டு வர முனைகிறது எனபதும் வலியுறுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/235262
-
ரிஷாட் பதியுதீன் இலஞ்சம் ஊழலுக்கெதிரான ஆணைக்குழுவில் முன்னிலை
ரிஷாட் பதியுதீன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை Jan 5, 2026 - 12:30 PM முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு இணங்க இன்று (05) காலை அங்கு முன்னிலையாகியுள்ளார். கடந்த அரசாங்கக் காலத்தில், விவசாய அமைச்சின் செயல்பாடுகளுக்காக ராஜகிரிய பகுதியில் வாடகை அடிப்படையில் கட்டிடம் ஒன்றைப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது. அந்தச் சம்பவம் தொடர்பில், அப்போதைய அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவே அவர் இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். அதன்படி, அவர் இன்று காலை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmk0t9x0h03iso29njj76o0uk
-
அடிப்படை சுகாதார வசதி திட்டம்
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான அடிப்படைச் சுகாதார மேம்பாட்டு செயற்பாடு என்று எமது புலர் அறக்கட்டளையின் வருடாந்த செயற்பாட்டறிக்கையிலும் குறிப்பிடலாம் அல்லது தனியாகவே முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 என செயற்பாட்டறிக்கை வரவு செலவு விபரம் தயாரிக்கலாம். எல்லோருடைய கருத்தையும் பெற்று செயற்படுவோம். @குமாரசாமி அண்ணையும் யாழில் இருந்து புலர் அறக்கட்டளைக்கு உதவும் நல்லுள்ளம். அவரையும் எமது மூடப்பட்ட(எல்லோரும் தகவல் பரிமாற முடியாது, அட்மின் மட்டும் விபரங்களை போடுவார்) whatsapp குழுவில் ஏற்கனவே நான் இணைத்துள்ளேன். அது போல Telegram ல் ஒரு குழுவை(Mobile number தெரியாமல் பெயர் மட்டும் இருக்கும்) உருவாக்கி தகவல்களை பரிமாறலாம். whatsapp business இலும் நம்பர் தெரியாது குழு உருவாக்கலாம் என நினைக்கிறேன். தொழிநுட்பம் தெரிந்த யாழ் உறவுகள் விளங்கப்படுத்துங்கோ.