Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. விடுதலைப் பு*லிகள் ஒருதலைப் பட்சமாக போர் நிறுத்தம் செய்திருந்த காலப்பகுதியது என நினைக்கின்றேன் எனது மாமா வேலை நிமித்தம் மன்னார் பெருநிலப் பரப்பில் ஒரு முக்கிய பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தார் விடுதலை பு*லிகளின் கட்டுப் பாட்டுப் பகுதியில் இருந்த எங்களது வீட்டிற்கு மாமா அவ்வப்போது வந்து போவார்.. தாய் மாமன் மாரை யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும் அப்படித்தான் நானும் என் குட்டி மாமா மீது அதீத நேசம்... அன்று ஒரு நாள் மாலை மங்கும் நேரம் எங்கள் வீட்டில் மாமா தேனீர் அருந்திக் கொண்டிருந்தார். மாமாவோடு போராளிகள் அல்லாத இரண்டு அண்ணா மார்களும் இருந்தனர் அவர்களும் எமக்கு பரிட்சயமானவர்களே ... மாமா அவ்வப்போது வீட்டிற்கு வரும்போது இவர்களும் கூட வருவார்கள்.. அன்றுதான் நான் மாமாவை உயிருடன் பார்கப்போகும் இறுதி நாள் என்பதை அறியாமல் மாமாவுக்கு அருகில் இருந்து தேனீர் அருந்திக் கொண்டிருந்தேன். தன் தம்பிக்கு தான் கொடுக்கும் இறுதித் தேனீர் அதுவென அறியாமல் எனது அம்மா... தம்பி கவனம் ஆ*மி ஒரே ஆக்களிட்ட உன்னத்தான் கேக்கிறானாம் போய் வாறது கவனம் என்றார் மாமாவிடம் இருந்து பதிலில்லை ஒரு கேலியான சிரிப்பு.. ஆ*மி என்னை என்ன செய்து விட முடியும் என்பது போல இருந்தது அந்த சிரிப்பு.. அம்மாவின் எச்சரிக்கைக்கான பதில் அருகில் இருந்த போ*ராளி அல்லாத அந்த அண்ணாவிடம் இருந்து வந்தது... அக்கா நாங்கள் செத்தால் தான் கலையரசன் சாகுவான் நீங்கள் ஒண்ணும் யோசிக்காதையுங்கோ..... படு பாதகர்கள் மாமாவையும் இப்படித்தான் நம்ப வைத்திருப்பார்கள் போல... தேனீர் அருந்தி முடித்ததும் அவசர அவசரமாக புறப்பட்டுச்சென்றார்கள். சரியாக மூன்றாவது நாள் எமது காதோரம் வந்த செய்தி எம்மை அதிர்சியடைச் செய்தது .. துயரத்தின் எல்லைக்கே சென்று வந்தேன். வாழ்க்கைப் பட்டான் கண்டல் பகுதியில் கலையரசன் வீர*ச் சாவாம்.. மாமா யாரை நம்பி பயணித்தாரோ அவர்களே அவரின் நடமாட்டம் பற்றி தகவல் வழங்கியதாக மாமாவின் போ*ராளி நண்பர்கள் மூலம் அறிந்து கொண்ட போது இன்னும் வலித்தது... இப்படி எத்தனை ஆயிரம் துரோகங்கள் எத்தனை ஆயிரம் சாவுகள்... என் குட்டி மாமா மட்டுமல்ல எம் இனமே துரோகத்தால் தான் ........ என் மாமா கலையரன் அண்ணா வல்லவன் நண்பன் நிலவன் நண்பன் யாழ்வேந்தன் அறிவு அண்ணா சுதா அண்ணா ரகுராம் அண்ணா நீலவண்ணன் அண்ணா சோ அண்ணா இவர்களோடு எம் இனத்தின் விடியலுக்காய் வித்தாகிப் போன ஆயிரமாயிரம் வேங்கைகளுக்கும் என் வீர வணக்கங்கள். Moris Fernando - Muththooran (Muththooran)
  2. இறுதி வரை உறுதியாக நின்றாய். பிரிகேடியர் தமிழ்செல்வன் அண்ணாவின் இறுதி வணக்க நிகழ்வு தான் உனக்கும் எனக்குமான இறுதி சந்திப்பு. தமிழ்செல்வன் அண்ணாவின் விதை குழியருகில் செல்ல நீண்ட நேர காத்திருப்பு. அத்தனை நேரமும் அவருக்கும் உனக்கும் இடையிலான சம்பாசனைகளை எனக்குள் விதைத்துக்கொண்டு வந்தாய். விதைகுழியருகில் வந்துவிட்டோம். நீ முன்னால் நான் உன் பின்னால். கையில் ஏந்திய மண்ணினை வித்துடலின் மேல் மெதுவாக தூவினோம். கையை நெஞ்சில் வைத்து மரியாதை செய்தாய். விழிகள் அருவியாக கரைந்தன. பாதங்களை உறுதியோடு முன்னால் வைத்து நகர்ந்தோம். அப்போது “ மச்சான் விரைவில எனக்கும் இப்பிடி மண் போடுவாய் என்று நினைக்கிறன். எதுக்கும் புலிகளின்குரலைக் கேளு ஈழநாதத்தை தினமும் பாரு“ என்று கூறினாய். அது உன்னைப் போன்ற விடுதலைப் போராளிகள் வாழ்வில் சாதாரணமான கதை. நண்பனே நீ எனக்கு கூறிய அந்த வார்த்தைகளை பொதுமகனான நானும் சாதாரணமாகவே கடந்து போனேன். ஆனால், அன்றொருநாள் உன் செய்தி வானேறி தொலைத்தொடர்பினூடாக வந்து புலிகளின்குரல் வானொலியினூடு எங்கள் செவிகளுக்கு வந்து சேர்ந்தது. பிரபா வீரச்சாவாம். அருந்தவத்தார்ர பெடியன் பிரபா வீரச்சாவாம். விழிகள் பனித்தன. உன் குரல் இன்னும் இன்னும் செவிகளுக்குள் ரீங்காரம் இசைத்தபடியே இருக்கிறதடா. நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வல்லாதிக்க சக்திகளால் இடம்பெயரவைத்த பொல்லாத பொழுதுகளை கடக்க முடியாது தவித்த 1996 ஆம் ஆண்டின் சித்திரைத் திங்களின் ஒரு நாளில் ஏதியிலாக உன் ஊர் முற்றத்தில் வந்து இறங்கிய என்னை அரவணைத்தது உன்னைப் போன்ற உறவுகள் தான். யோகபுரம் தாய் எம்மை கல்விக்காக அரவணைத்த போது முதன்முதலாக உன்னைக் கண்டேன். நிரந்தரமாக கற்கும் மாணவன் நீ. நானோ இடம்பெயர்ந்து வந்தவன். அதனால் என்னை அருகில் இருக்க விடுவார்களா என்ற ஏக்கத்தோடு வந்தவனை கையை பிடித்து பக்கத்தில் இருத்திய அந்த பொழுதில் ஆரம்பித்தது நண்பா உனக்கும் எனக்குமான உறவு. அன்றில் இருந்து 2007 கார்திகைத்திங்கள் 7 ஆம் நாள்வரை சந்தோசமாக தான் இருந்தோம். தேசத்துரோகிகள் செய்த காட்டிக்கொடுப்பெனும் கொடூரத்தினால் நீ உன்னை நீயே தற்கொடையாக்கிய செய்தி வந்த போது அழுவதை தவிர வேறென்ன இருக்கும் நண்பா…? அருந்தவத்தார்ர பெடியா வீரவணக்கமடா.. விழியில் நீருடன் உன் கூட்டாளி இ.இ.கவிமகன்
  3. நண்பா உன்னுடைய கனவுகள் மிக நீண்டது…பயணத்தின் பாதையில் உன்னை தவற விட்டு விட்டோம்…. உன்னைப் பற்றி அதிகம் எழுத வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் இந்த முகநூல் அதற்கு உகந்ததல்ல… அது ஒரு காலம்…ஸ்கந்தபுரம் தொடக்கம் பூநகரி கௌதாரி முனை வரை பயணமும் பாதையும் எங்களுடைய யாழ்ப்பாணத்து கடமைகளை கதைகளை சொல்லும்…கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லும் விமானத்தை விட நாங்கள் வேகமாக யாழ்ப்பாணத்துக்கு சென்ற நாட்கள் பல… ஒருமுறை உனக்கும் பிரதீப் மாஸ்டருக்கும் சின்னதாக சண்டை.. எங்களுடைய முகாமுக்கு வந்து யாரிடமாவது பாதை இருக்கிறதா என்று நீ காத்திருந்த அந்த நினைவுகள் இன்றும் என் நினைவில்…உன்னுடைய தேசக்கடமை உன் உயிரை விட மேல் என்பது உன்னுடைய ஒவ்வொரு செயல்பாடுகளும் எங்களுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தது… பூநகரி வாடி அடியில் இருந்த எங்களுடைய உணவுச் சாலை…விமான தாக்குதலுக்குள் அகப்பட்டுவிட்டது…அன்று அதிர்ஷ்டவசமாக நீ தப்பி விட்டாய்…காயமடைந்தவர்களை வைத்தியசாலை அனுப்பிவிட்டு நீ வந்து நீ கூறிய வார்த்தைகள்…என்னுடைய சாவு யாழ்ப்பாணத்தில் தான் அதுவரை எனக்கு சாவில்லை…உன்னுடைய துணிவு தான் உன்னை குறுகிய காலத்தில் உன்னை எல்லோர் மத்தியிலும் உயர்த்திப் பார்த்தது… எங்களை எல்லோரும் படிக்காத பல்கலைக்கழக மாணவர்களாகத்தான் பார்த்தார்கள் ஆனால் எங்களுக்கும் படிப்புக்கும் சம்பந்தமில்லை…உன்னை பார்த்து பலர் கேட்பார்கள் பார்க்க மருத்துவத் துறை மாணவன் போல் இருக்கிறாய் என்று…நீ தலையை ஆட்டிக் கொண்டு சிரிக்கும் அந்த சிரிப்பு எப்பொழுதுமே மிக அழகானது… இப்பொழுது பசுமையோடு ஓடிக் கொண்டிருக்கிறேன் நண்பா ஓய்வுகளை தொலைத்து…ஓய்வு கிடைக்கும் பொழுது உன்னுடைய தேசத்திற்கான கடமைகளையும் பயணத்தையும் வரலாறாக எழுதுவேன்…நேற்றைய தினம் நீ மண்ணை முத்தமிட்ட நாள் உன்னுடைய ஆன்மா இளைப்பாறட்டும் நண்பா அமைதியாக…பிரார்த்தித்துக் கொள்கிறேன் சக நண்பனாக… விதைப்பது நமது கடமை… தரன் ஸ்ரீ💐 வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம்
  4. “அந்தச் சிரிப்பும் கடைசி வார்த்தைகளும்...” 2006 ஆம் ஆண்டு மே மாதமளவில் அவனை கடைசியாக சந்தித்திருந்தேன். உடலாலும் மனதாலும் சோர்ந்திருந்தான். அதற்கு ஒரு மாதம் முன்பு வீதியால் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்திருந்தான். ஓட வழியின்றி இரண்டு மூன்று மதில்களால் ஏறி பாய்ந்தவனால், அதிக குருதிப்பெருக்கத்தால் ஒரு கட்டத்தில் இயலவில்லை. அருகில் தெரிந்த வீடொன்றின் மலசலகூடமொன்றில் சென்று படுத்துவிட்டான் - இல்லை மயங்கிவிட்டான். சிறிது நேரத்தில் அங்கு வந்த வீட்டின் அம்மா, இவனை அடையாளம் கண்டு கொண்டுள்ளார். உடனடியாக சறமொன்றினால் காயத்தை கட்டிவிட்டு தனக்கு தெரிந்த மருத்துவபீட மாணவன் ஒருவருக்கு தெரியப்படுத்தியுள்ளார். உடனேயெ சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் அவனுக்குரிய அவசர மருத்துவ உதவிகளை செய்துவிட்டு பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச்சென்று மேலதிக சிகிச்சை வழங்கினர். அதன்பின் அவனுக்கு பல்கலைகழக நூலகமும் சிற்றுண்டிச்சாலையுமே வீடாகிற்று. நான் மீண்டும் சந்தித்த போது, அவனில் இருந்த பழைய உறுதியும் தீவிரமும் மங்கியிருந்தது. தன் இறுதிக்காலம் நெருங்கிவிட்டதென்றே எண்ணியிருப்பான் போல. ஆனால் எனக்கு அது கடைசி சந்திப்பென்று புரியவில்லை. பழைய அதே புன்னகையுடன் 'இப்பவும் அந்தப்பிள்ளைய பார்க்கிறனியா? படிடா, நல்லா இருக்கனும்' என்றான். அவனது புகைப்படம் பார்க்கும்பொழுதெல்லாம் அந்தச்சிரிப்பும் கடைசிவசனங்களும் எனக்குள் வந்து தொலைக்கும். 'நான் இறந்தபின் என்னோட பள்ளிக்கூடத்தில ஒரு போட்டோ கூட வைக்கமாட்டிங்க என்னடா?' இந்த ஒரு வார்த்தைக்கு பின் என்னால் அவனுடன் பேசமுடியவில்லை. பல்கலைக்கழகத்தை விட்டு வெளியே வந்த பின்னும் அவன் அதே இடத்தில் இருந்தபடி வேலியால் பார்த்துக்கொண்டே இருந்தான். மாணவர் ஒன்றியத் தலைவராக — சுனாமி அனர்த்த மீட்பு உட்பட பல தளங்களில் தன் நேர்த்தியான தலைமைத்துவத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிக்காட்டியவன். நாம் சுனாமி பற்றிய செய்தியை அறிந்த வேளையில், அவன் ஏற்கனவே பல சடலங்களை மீட்டதுடன், அல்லல்பட்ட பலரை ஆலயங்களிலும் பொதுமண்டபங்களிலும் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தான். அது ஒன்றே அவனது அர்ப்பணிப்பிற்கு சான்றாகும். 17 வயதில், அந்த நேரத்தில் எமக்கு மோட்டார் சைக்கிள் — அதுவும் கிளட்ச் மொடல் — என்றால் தொட்டுப் பார்த்ததில்லை. ஒரு நாள் வேலை அலுவலாகச் செல்லும் பொழுது, “மோட்டார் சைக்கிள் ஓடுவியா?” என்றான். “அய்யோ, தெரியாது,” என்றேன். சட்டென்று கரைக்கெடுத்தவன், “இந்த பிடி... ஓடு,” என்றான். “அடேய், ஸ்டார்ட் அடிக்கமாட்டன்டா! எங்கயாச்சும் மதிலுக்க விட்டிரப்போறன்,” என்றேன். “நீ நினைக்கிற மாதிரி இதெல்லாம் பெரிய விஷயமில்லடா... இந்தா,” என்று சொல்லிக் கொண்டு வெறும் ஐந்து நிமிடங்களில் கற்றுத்தந்து, அன்றைய நாள் முழுதும் என்னையே ஓடவைத்தான். 2008 ஆம் ஆண்டு தை 21 இல் நான் சந்தித்த அந்த இடத்திற்கு சற்று அருகில் தான் சுடப்பட்டு இறந்திருந்தான். கடந்த மூன்று நாட்களாக அவனது நினைவுகள் மீண்டும் வந்து உறுத்திக்கொண்டே இருக்கின்றன. ஆம் அவனின் அந்த இரத்தக்கறை படிந்த சறத்திற்கு வயது 19. எல்லாளன் என்ற குணேந்திரன் - நயினாதீவிலிருந்து வைத்தியர் கனவுடன் வந்து தன் கனவினை அகலமாக்கிய மாறாப்புன்னகை
  5. 01-11-2008 அன்று பகல் 2.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னிக்கு செல்ல முற்பட்டபோது , கூட இருந்த ஒருவரால் காட்டி கொடுக்கப்பட்டு அரியாலை பகுதியில் இராணுவம் சுற்றிவலைத்தபோது நடைபெற்ற நேரடி தாக்குதலில் வீரச்சாவை தழுவிக்கொண்டார். இதே சம்பவத்தில் கப்டன் உத்தமன் எதிரியிடம் அகப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக குப்பி கடித்து வீரச்சாவை தழுவிக்கொண்டார். https://www.facebook.com/amal.raj.108
  6. எழுத்தாளர்: புரட்சி தமிழன் இவர்களை பலருக்கு தெரியாது. அவர்களுடைய வீட்டினருக்கு கூட போராளியென்பது தெரியாது, அருகில் இருந்தவர்களுக்கு கூட போராளி என்பது தெரியாது. ஏனைய படையணி போராளிகளுக்கு கூட தெரியாது. பிரிகேடியர் கடாபியின் நேரடி ஆயுதபயிற்சியில் மிக குறுகிய காலத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற அணி. எந்த ஒரு ஆயுத்தையோ அல்லது ஒரு இயந்திரத்தையோ இலகுவாக கையாளகூடிய அனைத்து துறை சார் அறிவையும் பெற்றவர்களாக இருந்தார்கள். வளமான தமிழீழத்தை கட்டமைக்கும் நோக்கில் நெறிப்படுத்தபட்டார்கள். பலர் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பட்டபடிப்பை மேற்கொள்ள அனுப்பபட்டனர்.சிலர் இராணுவ கட்டமைப்புக்குள்ளேயே பல்வேறு வேலைகளுக்காக அனுப்பபட்டனர். சிலர் மரணமடைந்த பின்னர்தான் போராளியாக இருந்திருக்கிறான் என்பது பலருக்கு தெரியும். சிலர் இராணுவ கட்டுபாட்டுக்குள்ளேயே வேலை செய்தனர். இந்த அணியின் ஒரு 30% வீதமானோர் உயிரோடுள்ளனர். தப்பி வந்தவர்கள் அல்ல கட்டளைகளுக்காக காத்திருந்தவர்களாக . இன்று அவர்கள் போராளியாக இருந்தார்கள் என்பது தெரியாமல் சமூக ஓட்டத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ்கிறார்கள். ஆனால் அவர்களின் வாழ்வு முறை என்றும் போராளிகளுக்கான ஒரு அடையாளம் . .
  7. என் பெயர் சரோஜினி நாகநந்தன். நான் கொழும்பு கொட்டாஞ்சேனையில் வசிக்கிறேன். என் மகன் – ராஜீவ் நாகநந்தன் – 17 செப்டம்பர் 2008 அன்று கடத்தப்பட்ட 11 ஆண் குழந்தைகளில் ஒருவராக இருக்கிறார். 1987 மார்ச் 30 அன்று பிறந்த என் மகன், கொழும்பிலுள்ள ஒரு சர்வதேச பாடசாலையில் படித்தார். அவர் மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவு கொண்டிருந்தார். காணாமல் போன நாளின் மறுநாள் இங்கிலாந்து பயணிக்க திட்டமிட்டிருந்தார். அன்று இரவு, நண்பர்களுக்காக நாங்கள் பிரியாவிடை விருந்து வைத்திருந்தோம். அதன் பின்னர் தலைமுடி வெட்டவும், மற்றொரு நண்பரை சந்திக்கவும் என் மகனும் அவரது நண்பர்கள் நான்கு பேரும் காரில் புறப்பட்டார்கள். அவர்கள் சென்ற காரை கடற்படை ஆயுததாரிகள் தடுத்து நிறுத்தி கடத்திச் சென்றனர். சிறிது நேரத்தில் ராஜீவ் என்னை அழைத்து நடந்ததைப் பகிர்ந்தார். நான் திரும்ப அழைத்தபோது, அவரது தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது. டிசம்பர் 14, 2008 — எதிர்பாராத ஒரு அழைப்பு ராஜீவ் எங்களை மீண்டும் தொடர்பு கொண்டார். சம்பத் முனசிங்க என்ற கடற்படை வீரர் தம்மை பிடித்து ஹெட்டியாராச்சி என்பவரிடம் ஒப்படைத்ததாகச் சொன்னார். அவர்கள் முதலில் வெலிசராவில் வைத்திருந்து பின்னர் திருகோணமலையின் Gunsite கடற்படை வதை முகாமுக்கு மாற்றப்பட்டதாக கூறினார். 2009 மே 21 — என் மகனின் கடைசி குரல் அன்று ராஜீவ் என்னை இறுதி தடவையாக அழைத்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு மனம் நெகிழ்ந்த நபரிடமிருந்து தொலைபேசியை வாங்கி பேசினார். அவரது குரல் நடுங்கியது… அங்கு நடக்கும் பயங்கரமான நிகழ்வுகளை பற்றி கூறினார். “அம்மா… 18–20 வயதுடைய இளைஞர்களை இங்கு கொண்டு வந்து சு*ட்*டு*க் கொ*லை செய்கிறார்கள்…” கழிவறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது இரத்தக்கறைகள் மற்றும் பெருமளவு இரத்தத்தை கண்டதாகச் சொன்னார். தனக்கும் அந்த விதி ஏற்படும் என அச்சத்தில் இருந்தார். நான் அவனை உற்சாகப்படுத்தி: “ஜயப்பனை வணங்கு… கடவுள் உன்னை காப்பாற்றுவார்,” எனச் சொன்னேன். அப்போதே, அவன் சாப்பாடு வந்து முடிச்சிருந்த பேப்பரில் ஐயப்பனின் படம் இருந்ததாகவும், அதை தன்னிடம் வைத்திருப்பதாகவும் சொன்னான். அதன் பின்… 16 ஆண்டுகள் கழிந்தும் ஒன்னு கூட தகவல் இல்லை. இன்று வரை, ராஜீவ் 2009 மே 21க்குப் பிறகு கொ*லை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. https://www.facebook.com/namathuyalpanam
  8. எழுத்தாளர்: தமிழ்ப்பொடியன் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் பருத்தித்துறையில் உள்ள பிரபலமான ஆண்கள் பாடசாலையான ஹாட்லிக்கல்லூரியின் நூலகம் 1984ஆம் ஆண்டு எரிக்கப்பட்டது உங்களுக்கு தெரியுமா? 1984 ஆம் ஆண்டு செப்ரம்பர் 2 ஆம் திகதி. "பருத்தித்துறை படுகொலை" 18 பேர் சிறிலங்கா பொலிசாரால் பட்டப்பகலில் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். அத்தோடு ஹாட்லிக்கல்லூரியின் நூலகத்தை எரித்தார்கள். சுமார் 7000 புத்தகங்களை எரித்து சாம்பல் ஆக்கினார்கள். நூலகத்தை எரிப்பதற்கு ஹாட்லிக்கல்லூரியின் ஆய்வுகூடத்தில் இருந்த இரசாயண திரவங்களை(acids) பாவித்தார்கள். ஆய்வுகூடத்தையும் உடைத்து எறிந்தார்கள். யாழ்நூலகம் எரிக்கப்பட்டது 1981. மூண்டு ஆண்டுகள் கழித்து திரும்பவும் ஒரு பெரிய நூலகத்தை 1983 இல் சிறிலங்கா பேரினவாதம் கொழுத்தி வேடிக்கை பார்த்து எக்காளமிட்டு சிரித்தது.
  9. குண்டுவைத்து தகர்க்கப்பட்ட புலிகளின் கட்டுமானம் முழுமைபெறாத நிலை-இறக்கை வானூர்தி இது பொறி மற்றும் நடுப்பகுதி என்று எண்ணுகிறேன்.
  10. குண்டுவைத்து தகர்க்கப்பட்ட புலிகளின் கட்டுமானம் முழுமைபெறாத நிலை-இறக்கை வானூர்தி இது வால் என்று நினைக்கிறேன். மற்றது இது முழுமையாக கட்டிமுடிக்கப்படவில்லை.
  11. குண்டுவைத்து தகர்க்கப்பட்ட புலிகளின் கட்டுமானம் முழுமைபெறாத நிலை-இறக்கை வானூர்தி வான்புலிகளின் நிலை-இறக்கை வானூர்தியானது பாதி கட்டப்பட்ட குறையியிலேயே புலிகளால் குண்டுவைத்து தகர்க்கப்பட்டிருக்கிறது என்பது கிடைக்கப்பெற்றுள்ள படிமங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. சிங்களவரின் கைகளிற்கு தமது தொழில்நுட்பம் கிடைக்கக்கூடாது என்ற நோக்கிலேயே புலிகள் இவ்வாறு செய்துள்ளனர் என்பதை ஊகித்தறியலாம். இது வானூர்தி முகப்பு என்று எண்ணுகிறேன். எனினும் வானூர்தி தொடர்பில் அறிந்தவர்கள் இவற்றை கண்டுபிடிக்கவும்.
  12. தமிழீழ வான்படையால் உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்த வானூர்திக்கான வரைபட மாதிரி கீழே நீங்கள் காண்பது நிலை-இறக்கை வானூர்தி (fixed wing aircraft) ஆகும். கூடுதலாக இதுவொரு இலகு வானூர்தியாக இருந்திருக்கலாம்.
  13. வானூர்தி தொடர்பான கட்டுமான கல்விக்கு புலிகள் பாவித்த ஆங்கில நூல்கள்: இந்தப் படிமங்கள் யாவும் புதுக்குடியிருப்பு மேற்கிலிருந்த புலிகளின் வானூர்தி கட்டுமான தொழிற்சாலையிலிருந்து எடுக்கப்பட்டன. வானூர்தி தொடர்பான கல்வியை புலிகள் ஆங்கிலத்தில் மேற்கொண்டுள்ளனராக்கும்:
  14. இது 1998ம் ஆண்டு யாழிலிருந்து வெளியாகும் நாளேட்டில் வெளியிடப்பட்ட செய்தி. முழு விரிப்பு எனக்குத் தெரியாது. இருப்பினும் அறிந்தவற்றை இங்கே வரலாறாக எழுதி வைத்துச் செல்கிறேன். செக் குடியரசிலிருந்த (அப்படித்தான் நினைவு) ஓர் வானூர்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏறத்தாழ 10இற்கும் மேற்பட்ட தெற்காசியர்கள் வேலைசெய்து வந்ததாகவும் ஒருநாள் பின்னேரம் அவர்கள் அங்கிருந்த 4 வானூர்திகளை களவாடிச் சென்றுவிட்டனர் என்பதுதான் முக்கிய செய்தியே. அந்த வானூர்தி களவாடல் நிகழ்விற்குப் பிறகு ஒரு கிழமை கழித்து நான்கு வானூர்திகளுக்குமான உரிய பணம் காசோலையில் அனுப்பி வைக்கப்பட்டதாக அந்நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிகழ்விற்கும் புலிகளுக்கும் தொடர்பிருப்பதாக அக்காலத்திய சிங்கள அரசாங்கம் குற்றம் சுமத்தியதை அந்நிறுவனம் மறுத்தது. ஆருக்கேனும் நேரமிருந்தால் அக்காலத்திய யாழ் செய்தித்தாள்களை புரட்டி இச்செய்தியை கண்டுபிடியுங்கள். நன்றி
  15. இதில் இணையமெங்கும் உள்ளவற்றை எடுத்து என்னால் முடிந்தளவு ஒரு முன்னோட்ட ஆய்வாக செய்துள்ளேன். ஆயினும் யாழ் பல்கலைக்கழகம் அல்லது மட்டு. பல்கலைக்கழகம் நித்திரையிலிருந்து எழுந்து எமது தீவிலுள்ள தமிழரின் கடற்கலங்கள் தொடர்பில் சிரத்தை எடுத்து ஆவணப்படுத்த வேண்டும். சரியான பெயர்கள், கலங்களின் காலம், கலங்களின் படிமங்கள் மற்றும் பாவிக்கப்பட்ட இடங்கள் என்பன சரியாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். "வரலாறு எனது வழிகாட்டி" என்பது தேசியத் தலைவரின் கூற்றாகும். அதற்கு இணங்கு நாம் எமது வரலாற்றை பாதுகாக்க வேண்டும். வரலாற்றை சரியாக ஆவணப்படுத்த தவறின் வரலாற்றை இழந்துவிடுவோம். ஆயுதவழிப் போர் முடிந்து இத்தனை ஆண்டுகளிற்குப் பிறகும் எமது தீவிலிருந்து தமிழரின் கடற்கலங்கள் தொடர்பில் சரியான ஆய்வு வரலாறு வெளிவராமை கண்டிக்கத்தக்கதாகும். "எங்களின் தாயவள் சிந்திடும் நீரெல்லாம் தீயென மூழுமடா - வரும் சந்ததி இங்கினி தலைகுனியாமலே சரித்திரம் எழுதுமடா" இஃது முடிவுரை அல்ல... மேலும் தகவல் கிடைக்கும் போது இது நீட்டிக்கப்படும். அதுவரையில் உங்களிடமிருந்து விடைபெறுவது நன்னிச் சோழன். இடிகள் முழங்க, வெடிகள் முழங்க வருவேன் வருவேன் நானும்....
  16. வள்ளம் தலைநகர் திருகோணமலை, தமிழீழம் படிமக்காலம்: ஆங்கிலேயர் காலம் "கோணமலையாள வேண்டும். - அந்தக் கோட்டை கொடியேற வேண்டும்."
  17. வள்ளம் தலைநகர் திருகோணமலை, தமிழீழம் படிமக்காலம்: ஆங்கிலேயர் காலம் "திருமலை பகலினில் ஓரழகு இரவினி லேயிது பேரழகு அலைதரும் நீரழகு - இது தமிழரின் விடுதலைத் தலைநகரு!"
  18. ஆஞ்செல்கை அ சங்கடம் அ சங்காடம் அ இரட்டைத்தோணி மன்னார் வளைகுடா சிங்களவருக்கும் தமிழருக்கும் பொதுவான கடற்கலம் இதுவாகும். இவற்றில் தூம்புக்கட்டை உடையவனவும் உண்டு. 1910 ம் ஆண்டு/ கொழும்பில் எடுத்த படம்
  19. பிளாவு திருகோணமலையில் பாவிக்கப்பட்ட பிளாவின் ஒரு விருத்தாகும்.
  20. பிளாவு இது யாழில் பாவிக்கப்பட்ட பிளாவின் விருத்தாகும் (version). இவை தோணியின் கால்களாக (தொடுவை வள்ளம்) பாவிக்கப்பட்டதாக ஜேம்ஸ் இஃகோர்னெல் குறித்துள்ளார்.
  21. பிளாவு சிங்களவருக்கும் தமிழருக்கும் பொதுவான கடற்கலம் இதுவாகும். தமிழர் பகுதிகளில் இதைக் கூடுதலாக மட்டு-அம்பாறையில் பாவிப்பவர்.
  22. பட்டை மாரவில, புத்தளம் இதை சிங்களத்தில் மா-தெல் பருவா என்பர். இது சிங்களவருக்கும் தமிழருக்கும் பொதுவான கடற்கலமென்றாலும் இதை அதிகம் பாவிப்பது சிங்களவரே. காலி பேருவளையில் கிடைத்த மற்றொரு படிமம். இதில் இருப்பது சோனகர்கள்/ சிங்களவராவர். .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.