Everything posted by நன்னிச் சோழன்
-
கடற்புலிகளால் அழிக்கப்பட்ட, சேதப்பட்ட & கைப்பற்றப்பட்ட சிறிலங்காச் சார்புக் கடற்கலங்கள் | திரட்டு
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! ஓகஸ்ட் 29, 1995 அன்று 'ஐரிஸ் மோனா' பொறியில் சிக்கி புலிகளின் தகரிச் சூட்டில் தீப்பிடித்த டோறாவை அன்று காலையில் கைப்பற்றி கரைக்கு கட்டியிழுத்துவரும் கடற்புலிகளின் வோட்டர் ஜெட் படகு "... வல்வையில் முதன்முதல் எடித்தாராவை வல்லவர் கடற்புலி இடித்தார் இவை வண்டியில் போனது சக்கையடி, வந்த பகைப்படை புக்கையடி!" --> போர்க்கால இலக்கியப் பாடல் இவை தமிழீழத் தேசப்பாடகர்களில் ஒருவரான அமரர் எஸ்.ஜி. சாந்தன் அவர்களால் கரும்புலிகள் பற்றிப் பாடப்பட்ட போர்க்கால இலக்கியப் பாடலொன்றின் வரிகளின் நடுவிலுள்ள கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது கடற்கரும்புலித் தாக்குதலையும் சிங்களக் கடற்படையின் கலமொன்று அதில் சேதமானதையும் குறித்த வரிகளாகும். கடற்புலிகளால் 1990 ஆம் ஆண்டு தொட்டு சிங்களக் கடற்படையின் பல்வேறு கடற்கலங்கள் கைப்பற்றப்பட்டும் சேதமாக்கப்பட்டும் மூழ்கடிக்கப்பட்டும் வந்தன என்பது பலரும் அறிந்த ஒன்று. இதற்கு முன்னர் 1986இல் புலிகளால் சில படகுகள் சேதமாக்கப்பட்டும் ஓர் படகு மூழ்கடிக்கப்பட்டும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்திரட்டான ஆவணத்தில் தமிழீழ விடுதலைக்காக நடந்த ஈழப்போரின் காலத்தில் தமிழீழக் கடற்பரப்பிலும் சிறிலங்காக் கடற்பரப்பிலும் சிங்களக் கடற்படையுடன் தமிழீழ நடைமுறையரசின் கடற்படையான கடற்புலிகள் மிண்டிய போது பகைவர் தரப்பில் சேதப்பட்ட, மூழ்கடிக்கப்பட்ட மற்றும் அவர்களிடமிருந்து கடற்புலிகளால் கைப்பற்றப்பட்ட கடற்கலங்கள் பற்றியும் மோதல்களின் நிகழ்வு விரிப்பும் அதனால் இரு அடிபாட்டுக் கன்னைகளின் ஆளணியினரில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உயிரிழப்புகள் ஆகியவற்றையும் ஆவணப்படுத்தியிருக்கிறேன், தமிழர் தரப்புத் தகவல்களாக. இவ்வாவணத்தில் 1991ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 19ம் நாள் வரை, அதாவது “கடற்புலிகள்”/ "கடற்புறா" அணி “விடுதலைப்புலிகளின் கடற்புலிகள்” என்ற பெயரோடு தமிழீழக் கடற்படையாகப் பரிணாமம் பெற்றது வரை (கடற்புலிகள் மகளிர் பிரிவு 1992.03.01 அன்று தோற்றம் பெற்றது), கடலில் நடைபெற்ற சமர்கள் எல்லாம் கடற்புறா என்ற பெயரின் கீழ் பதிவிடப்பட்டுள்ளன. 'கடற்புலிகள்' என்ற பிடாரச்சொல்லானது 1984 ஆண்டு முதன் முதல் பாவனைக்கு கொண்டுவரப்பட்டதாகும். சிறிலங்காவின் வான்படையிடமிருந்த மூன்று அவ்ரோ வழங்கல் வானூர்திகளில் இரண்டு 1995 ஆம் ஆண்டு ஏப்பிரல் 28 மற்றும் 29ம் திகதிகளில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக சுட்டு வீழ்த்தப்பட்டன. இதனால் யாழில் வன்வளைப்பிற்காக நிலைகொண்டுள்ள சிறிலங்கா படைத்துறைக்கு வான்வழி வழங்கல் செய்யும் திறன் வெகுவாகக் குறைக்கப்பட்டது. இந்த அடியால் யாழிற்கு வான்வழி வழங்கல் இனிமேல் நடைபெறாது என்று அப்போதைய சிறிலங்கா அதிபர் சந்திரிக்கா அம்மையார் தலைமையிலான அரசு அறிவிப்பு வெளியிட்டது. இவ்வான்வழி வழங்கல் பாதை நிறுத்தப்பட்டதன் விளைவாக யாழ்ப்பாணத்திற்கான சிறிலங்காவின் வழங்கல் பாதையானது கடல் வழியாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடலில் மக்களின் பயன்பாட்டிற்கும் இடருதவிப் பொருட்களைக் கொணர்வதற்குமென யாழ் மாவட்ட அரச அதிபரால் அமர்த்தப்பட்ட கப்பல்கள் எல்லாம் படையினரால் கையகப்படுத்தப்பட்டு அவற்றில் இடருதவிப்பொருட்கள் என்ற பெயரில் படைக்கலன்களும் போர்த்தளவாடங்களும் யாழிற்கு கொணரப்படுவது வாடிக்கையானது (உதயன்: 24/10/1995). ஆகையால் 1996 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் மத்திய குழு உறுப்பினர்களில் ஒருவரான லோரன்ஸ் திலகர் அவர்கள், சிறிலங்கா படைத்துறையின் வழங்கல் பாதையை சிறிலங்காவின் நிலப்பரப்பிற்கு உள்ளேயும் வெளியேயும் புலிகள் குறிவைப்பார்கள் என்று பறைந்தார் (தமிழ்நெற்: Tigers target sea bridge, 11/07/1997). மேலும், என்றார். எனவே யாழிற்கான கடல்வழி வழங்கலை அறவே துண்டிப்பதற்காக 1997 ஜூலை 15 அன்று விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் அனைத்து வணிகக் கப்பல்களும் முறையான படைய இலக்குகளாகக் கருதப்படும் என்று அறிவித்ததோடு என்றும் குற்றம் சாட்டினர். எவ்வாறெயினும் 1996 ஆம் ஆண்டு முதலே புலிகள் வழங்கல் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்கத் தொடங்கிவிட்டனர். மேலும், 2006ம் ஆண்டு ஓகஸ்ட் 11ம் திகதி முதல் சிங்கள அரசால் மூடப்பட்ட ஏ9 வீதி வழியே முன்னர் யாழிற்கு எடுத்துச் செல்லப்பட்ட உணவுப்பொருட்கள் பின்னர் கடல் வழியாக எடுத்துச் செல்லப்படுமென்று - 12 ஆயிரம் தொன் உணவுப்பொருட்களாம் - சிறிலாங்கா அரசு பரப்புரை செய்தது. இவ்வீதி மூடப்பட்டதற்கான காரணமாக சிங்கள அரசு கூறிய சாட்டுகளில் ஒன்று புலிகளின் யாழ் மீதான (விடுவிப்புப்) படையெடுப்பு தொடங்கியதால் - ஓகஸ்ட் 11ம் திகதி - என்பதாகும். ஆனால் அது தொடங்கிய கையோடு அதையே சாட்டாக வைத்து மூடிவிட்டு படையெடுப்பு கைவிடப்பட்ட பின்னரும் - ஓகஸ்ட் 19ம் திகதி மட்டில் - மூடல் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடல்வழியே உணவுப்பொருட்களும் மக்களின் கடல் போக்குவரவும் என்ற போர்வையின் கீழ் சில பொதுமக்களோடு கப்பல்களில் சிங்களப் படைகளுக்கான படைக்கலன்கள், போர்த்தளவாடங்கள் மற்றும் படையினரே திருமலையிலிருந்து யாழிற்கும் யாழிலிருந்து திருமலைக்குமென மெய்யில் கொண்டு செல்லப்படுகின்றனர் என்று பொதுமக்கள் வழங்கிய நேரடி சாட்சியங்களின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாகக் கையெழுத்திட்டு ஓர் அறிக்கையினை வெளியிட்டிருந்தனர் (உதயன்: 21/02/2007) என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு 1996 அம் ஆண்டு முதல் உண்மைக்குப் புறம்பான போர்வையின் கீழ் பயணித்த போது கடற்புலிகளால் குறிவைக்கப்பட்ட மற்றும் அதனால் அழிபட்ட சில கப்பல்களையும் கைப்பற்றப்பட்டு பின்னர் ஒப்படைக்கப்பட்டவற்றையும் இங்கு ஆவணப்படுத்தியுள்ளேன். ஆவணத்தை வாசகர் வாசிக்கத் தொடங்கு முன்னர் இன்னுமொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். பொதுவாக ஈழப்போர்க் காலத்தில் பாதுகாப்புச் சிக்கலாலும் தமது ஆளணி எண்ணிக்கையினை பகைவர் எடைபோடக்கூடும் என்பதாலும் தவிபு எந்தவொரு சமரிலும் தம் தரப்பில் காயப்பட்டோரின் எண்ணிக்கையினை அறிவித்ததில்லை. ஆகையால் கடற்சமர்களிலும் கடற்புலிகள் தரப்பில் காயப்பட்ட போராளிகளின் விரிப்பானது அறியப்பெறவில்லை. இதே போன்று கடற்சமர்களில் கடற்புலிகளின் படகுகள் (வழங்கல் வண்டிகளாயினும் சரி, சண்டைவண்டிகளாயினும் சரி) ஏதேனும் மூழ்கடிக்கப்பட்டால் அது தொடர்பான தமிழர் தரப்பின் தகவல்கள் எங்கேனும் பெறக்கூடியவாறு உள்ளது. அவ்வாறு 1995 ஆம் ஆண்டின் இறுதிவரை மூழ்கடிக்கப்பட்ட கடற்புலிகளின் படகுகள் பற்றிய தகவல் முற்றாக எடுத்துவிட்டேன். ஆனால் அதற்குப் பிந்தைய காலத்தியவையில் சிலதே கிடைக்கப்பெற்றுள்ளன. அதிலும் தமிழரின் கட்டளையாளர்களோ அல்லது முக்கியமானவர்களோ வீரச்சாவடைந்திருந்தால் மட்டுமே கிடைக்கப்பெறுகிறது. வீரச்சாவுகள் நிகழாமல் மூழ்கடிக்கப்பட்ட எந்தவிதமான படகுகள் பற்றிய செய்தியும் கிடைக்கப்பெறவில்லை. சிறு குறிப்புக்கூட இல்லை. கடற்கரும்புலிகள் பயன்படுத்தப்பட்ட கடற்சமர்களின் போது கடற்புலிகளின் வண்டிகள் (கடற்புலிகளின் படகுகள் வண்டிகள் என்றே அழைக்கப்படும்) ஏதேனும் சிங்களக் கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டிருப்பின் அது தொடர்பான தகவல் ‘உயிராயுதம்’ நிகழ்படங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது; அதாவது கடற்புலிகளே தம் இழப்பினை அறிவித்துள்ளனர். ஆனால் அவ்வாறான கடற்சமர்களின் போதுகூட சேதப்பட்ட படகுகளின் விரிப்பு அங்குகூட அறிவிக்கப்பட்டதில்லை. தமிழர் தரப்பில் சேதப்பட்ட அ மூழ்கடிக்கப்பட்ட படகுகளின் எண்ணிக்கையை சிங்களப் படைத்தரப்புச் செய்திகள் யாவும் நம்பவியலாத அளவிற்கு அள்ளுகொள்ளையாக ஏற்றிக் காட்டியுள்ளன, குறிப்பாக 2006ம் ஆண்டில் பல தடவைகள்; 14 படகுகளை தாம் ஒரே கடற்சமரில் மூழ்கடித்ததாக சிறிலங்கா தேசிய ஊடகமொன்று 10/11/2006 (உதயன் வழியாக) அன்று செய்திவெளியிட்டது இவற்றில் குறிப்பிடத்தக்கது ஆகும். இதுபோன்ற சிங்களப் படைத்துறையின் ஊதிப் பெருப்பிக்கப்பட்ட அனைத்துத் தகவலைப் பற்றி பரவலறியான சிங்களச் சார்புக் கொழும்புப் படையப் பகுப்பாய்வாளர் திரு. இக்பால் அத்தாஸ் அவர்கள் பம்பலாகப் பின்வருமாறு கூறியிருந்தார். ஆகவே சிங்களக் கடற்படைக்கு இழப்புக்கள் ஏற்பட்ட கடற்சமர்களின் போது மூழ்கடிக்கப்பட்ட கடற்புலிகளின் வண்டிகள் பற்றிய தகவலை - என்னால் உறுதிப்படுத்தப்பட்டவை - மட்டுமே இவ்வாவணத்தில் வெளியிட்டுள்ளேன். எதிர்காலத்தில் மேலும் கிடக்குமாயின் இவ்வாவணத்தில் இற்றைப்படுத்துகிறேன் (update). இல்லையேல் அதை தனியான ஒரு ஆவணமாக வெளியிட முயற்சிக்கிறேன். ******
- 27 replies
-
- ஈழம்
- கடற்கரும்புலிகள்
- கடற்படை
- கடற்புலி
-
Tagged with:
-
தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images
தாக்குதல் ஒன்றிற்குத் திட்டமிடும் போது பிடிக்கப்பட்டது 1993/> யாழில் " அடியடி அடியென ஒரு பெரும் அதிர்வொலி அனைவர் உள்ளங்களிலும் கேட்கும்." --> தேசத்தின் புயல்கள் பாகம் - 3 இறுவெட்டிலிருந்து இவ்வரிகள் களமுனையில் சமராடும் போராளிகள் உற்சாகபடுத்த உச்சரிக்கும் சொற்களைக் குறிக்கின்றன. "அடி அடி", "அடி மச்சான்", "அடியடா அடியடா", "குடு, குடு", "குடு மச்சான் குடு", "போடு போடு", "போடு மச்சான் போடு போடு", "அடியா போட்றா குடு", "அடி போடு", "போட்றா போட்றா", "குட்றா குட்றா", "அட்றா அட்றா", "அடியுங்கடா/குடுங்கடா/போடுங்கடா டேய்" என்பன சுடுகலச் சூட்டாளருக்கு அருகில் நிற்கும் போராளிகள் அவரையோ அல்லது சுட்டுக்கொண்டிருக்கும் எவரையோ உற்சாகப்படுத்தும் விதமாக பலுக்கும் சொற்கள் ஆகும். இவை தவிர களமுனையில் சமரின் நடுவே பகிடியாகவும் சில சொற்றொடர்கள் உச்சரிக்கப்படுவதுமுண்டு. எ.கா: "(அ/ப)ங்கான்ரா மகிந்த ஓடுறான் பார்"🤣
- 1202 replies
-
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
-
Tagged with:
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
- சிறிலங்கா இராணுவம்
- விடுதலைப் புலிகளின் நிழற்படங்கள்
- sri lanka rebels
- தமிழீழம்
- புலிகளின் படங்கள்
- விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புலிகளின் படையணிகள்
- tamil eelam army
- prabhakaran
- eelam land force
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- ltte land force
- தமிழீழ இராணுவம்
- ltte brigades
- ltte land tigers
- ltte fighters
- தமிழீழப்படை
- tamil eelam army images
- eelam army
- தரைப்படை
- ltte
- ltte army
- தமிழீழத் தரைப்படை
- ltte regiments
- kotti
- kotty
- srilankan rebel army
- ltte rebel
- ltte fire teams
- ltte battlions
- தமிழீழ படைத்துறை
- srilanka rebels
- சிறீலங்கா
- sri lankan land force
- sri lankan army
- ltte rebels
- ltte images
- ltte pictures
- ltte photos
- புலிகள்
- eelam fighters
- படைத்துறை
- ஈழப்படை
- prabakaran
- ராணுவம்
- tamil army
- tamil forces
-
LMS_DUNHINDA - 2001.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
MV Pride of South - 2001.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images
தமிழீழப் பாடகர் எஸ்.ஜி. சாந்தன் போராளிகள் இசைக்குழுவுடன்
- 1202 replies
-
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
-
Tagged with:
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
- சிறிலங்கா இராணுவம்
- விடுதலைப் புலிகளின் நிழற்படங்கள்
- sri lanka rebels
- தமிழீழம்
- புலிகளின் படங்கள்
- விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புலிகளின் படையணிகள்
- tamil eelam army
- prabhakaran
- eelam land force
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- ltte land force
- தமிழீழ இராணுவம்
- ltte brigades
- ltte land tigers
- ltte fighters
- தமிழீழப்படை
- tamil eelam army images
- eelam army
- தரைப்படை
- ltte
- ltte army
- தமிழீழத் தரைப்படை
- ltte regiments
- kotti
- kotty
- srilankan rebel army
- ltte rebel
- ltte fire teams
- ltte battlions
- தமிழீழ படைத்துறை
- srilanka rebels
- சிறீலங்கா
- sri lankan land force
- sri lankan army
- ltte rebels
- ltte images
- ltte pictures
- ltte photos
- புலிகள்
- eelam fighters
- படைத்துறை
- ஈழப்படை
- prabakaran
- ராணுவம்
- tamil army
- tamil forces
-
தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images
இப்படையணியைச் சார்ந்த போராளிகள் வேறொரு நாளில் மட்டக்களப்பில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடும்போது
- 1202 replies
-
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
-
Tagged with:
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
- சிறிலங்கா இராணுவம்
- விடுதலைப் புலிகளின் நிழற்படங்கள்
- sri lanka rebels
- தமிழீழம்
- புலிகளின் படங்கள்
- விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புலிகளின் படையணிகள்
- tamil eelam army
- prabhakaran
- eelam land force
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- ltte land force
- தமிழீழ இராணுவம்
- ltte brigades
- ltte land tigers
- ltte fighters
- தமிழீழப்படை
- tamil eelam army images
- eelam army
- தரைப்படை
- ltte
- ltte army
- தமிழீழத் தரைப்படை
- ltte regiments
- kotti
- kotty
- srilankan rebel army
- ltte rebel
- ltte fire teams
- ltte battlions
- தமிழீழ படைத்துறை
- srilanka rebels
- சிறீலங்கா
- sri lankan land force
- sri lankan army
- ltte rebels
- ltte images
- ltte pictures
- ltte photos
- புலிகள்
- eelam fighters
- படைத்துறை
- ஈழப்படை
- prabakaran
- ராணுவம்
- tamil army
- tamil forces
-
ltte_big_125.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
ltte_big_235.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
ltteoff.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
unceasing waves 1
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
2005 status.png
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
SBS Rubber boats
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் - ஆவணம்
தொடர்தடம் (Continuous track) உடைய இடிவாருவகங்கள் தொடர்தடம் (Continuous track) உடைய இடிவாருவகங்கள் மட்டும் கடற்புலிகளிடம் ஆகக் குறைந்தது 6 இருந்தன. இவை யாவும் சிறிலங்கா படைத்துறையிடமிருந்து விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டவையாகும். அவை ஒவ்வொன்றிற்கும் கடற்புலிகள் கடற்புலி மாவீரர்களின் பெயர்களை சூட்டியிருந்தனர். அந்த இறக்கும் இடிவாருவகத்தின் பின்புறத்தில் ஓர் கயிறு கட்டி அக்கயிற்றினை பினால் ஓர் ஊர்திக்கு கட்டிவிடுவார்காள். இதன் மூலம் அந்த தள்ளி இறக்கும் ஊர்தி கடலினுட் விழுந்தாலும் அதை கரையில் பிணைக்கப்பட்டுள்ள ஊர்தியைப் பயன்படுத்தி அதை உள்ளிழுத்து விடலாம்! 'கடலினுட் கலத்தினை இறக்கும் இடிவாருவகம்' 'மணலைத் தோண்ட வரும் கேசரி என்ற பெயர் கொண்ட இடிவாருவகம்(bulldozer) | கவனி: இவ்வூர்தியினை ஓட்டுபவர் ஒரு பெண் போராளியாவார்' 'மணலைத் தோண்டும் இடிவாருவகம்' 'தோண்டப்பட்ட சாய்வான இடத்தினூடாக கடலினுள் இறக்கபடும் வேவ் ரைடர் படகு | படகு, படகுகாவியின் மேலே வைக்கப்பட்டிருப்பதை கவனிக்கவும்' இடிவாருவகத்தின் அருகில் அமர்ந்திருப்பவர் சிங்கள ஊடகவியலாளர். இதுவும் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஊர்தியே. இதன் பயன்பாடு என்னவென்று எனக்குத் தெரியவில்லை!
- 9 replies
-
- asian rebels navy
- eelam navy
- eelam tamil navy
- eelam tigers
-
Tagged with:
- asian rebels navy
- eelam navy
- eelam tamil navy
- eelam tigers
- ltte miraj class boat
- ltte navy
- ltte sea tigers
- maritime armed wing of ltte
- naval wing of ltte
- naval wing of tamil tigers
- rebel navy
- sea tigers
- sri lankan navy
- tamil navy
- tamil new tigers
- tamil rebels navy
- tamil tigers
- tamil tigers navy
- ஈழப் புலிகள்
- கடற்கலன்
- கடற்புலி
- கடற்புலிகள்
- தமிழரின் கடற்கலங்கள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- தமிழீழக் கடற்கலங்கள்
- தல்ராஜ்
- புலிகள்
- மிராஜ்
- விடுதலைப் புலிகள்
- விடுதலைப்புலிகள்
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
காலகாலத்திற்கும் காவுவார்கள்.
-
கருணா குழுவின் துரோகத்தால் கொல்லப்பட்ட கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன்
கடற்கரும்புலிகள் காவியத்தில் கடற்கரும்புலி மேஜர் புகழரசன் கடற்கரும்புலிகள் அணிக்குள் இவனது வீரச்சாவு சற்றும் வித்தியாசமானதே. விடுதலை போராட்டம் தமிழீழத் தேசியத் தலைவர் காலத்தில் விருட்சமாக வளர்ந்து விடிவை நோக்கி நகர்கிறது; பல வரலாறுகள் பதிந்தும் – தொடர்ந்தும் பல இடைவெளிக்கு பின்பு விடுதலை சேனையில் இணைந்து எமக்கு முன்னர் விதையாக விழ்ந்தவர்கள் வழித்தடங்கள் விடிவை நோக்கிய நெஞ்சங்களின் பாதையாக, கிட்டண்ணா முதல் பல மூத்த தளபதிகள் கடலில் உலாவந்து மேற்கொண்ட ஈழத்தின் விடியலுக்காக திரவியங்கள் சேர்த்திட சுற்றும் பூமியை சூற்றுகின்றேன் ஈழக் கனவுடன்………….. இது இயல்வளவன் உதிர்க்கும் வார்த்தைகள், வார்த்தைகள் போன்று விடுதலை உரம் இவன் மனதில் நிறைந்திருந்தது ஆனால் அப்படியே அவனது இறுதி மூச்சும் யாரும் நினைக்காத வண்ணம் ஒர் பூ மலர்ந்த இடத்திலே ஒவ்வோர் பூவின் இதழும் உதிர உதிர வாசனை இழந்து வாடிப்போவது போன்று அன்று கரையிலும் – கடலிலும் நின்று இவர்கள் நினைவில் விம்மி விம்மி மனம் குமுறி விழிகரைந்த சக தோழ – தோழியர் ஆயிரம். ஆம், ஒருவர் மீது அதிகம் அன்பு வைக்கும் போதும் அல்லது நட்புடன் உறவாடும் போதும் சுற்றிய சூழலும், காலத்தின் தருணமும் அவைகள் நிலைத்து செல்ல விடுவதில்லை. ஏதோ ஓர் கனவை சுமந்து திசைக்கு ஒவ்வோன்றாய் பிரிந்து செல்கிறது பல காவ்யங்கள்; ஆனால், அதில் ஓர் புனிதத்தின் எல்லையைக் கடந்து உயர்ந்த மனங்களாக காட்சிதருவர் மாவீரர்கள். இது எங்களின் வாழ்வில் தினம் தினம் காண்பவைகள் அப்படியாக கடற்கரும்புலி கப்டன் இயல்வளவனும் எம்மிடையே பிரிவை எகிச்சென்றான். என்னதான் செய்யமுடியும்? அவனது உயர்வான இலட்சியத்தைத் தேடி அவன் விரைந்தான்; எதோ ஓர் திசையில் கடமை அவனை அழைத்துச் சென்றது…………………………………. 2006ம் ஆண்டு ஆவணி மாதம் தென் தமிழீழத்தின் படுவான் கரையில் சூரியன் மெல்ல மெல்ல மறைந்து தன் இயற்கை நிறைந்த மாலைக்காட்சியை படரவிட்டுக்கொண்டிருந்தது. அந்த மாலைநேர சூரியக் கதிர்கள் கடலில் ஓர் மீன்பிடி படகில் (றோலர்) இருந்த மூன்று உருவங்களின் தேகங்களை நிறைத்து, இன்னும் இயற்கையை அழகு படுத்தி அந்த அலையின் இசைவிற்கு ஏற்றால்போல் மிதந்தவண்ணம் இருந்தது. அப்போது, ஓர் தென்னிந்திய திரைப்பாடல் வரிகளை அந்த உருவங்களில் ஓர் இளைய உருவம் முனுமுனுத்தபடி படகை செலுத்தியவண்ணம் இருந்தது. (அவைகள் பகைவனின் தேசம் கடந்தும் சென்று செய்யவேண்டிய சில நடவடிக்கை காரணமாகவும், தமிழீழ தேசியத்தலைவரின் அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தது. ஆதலால் அந்த போராளிகளுடைய விடுதலைக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளும் அந்த படகில் சினிமா பாடல் கேட்கும் வகையில் ஒழுங்கும் செய்யப்பட்டது. அவைகள் எக்காரணம் என திரிவு படுத்த வேண்டிய தேவை எனக்கு இருக்காது என நினைக்கிறன் நீங்களே இலகுவாக புரிந்து கொள்வீர்கள்) தொடர்பாடல்களில் உரையாரும் போதும் அந்த வீரனின் உதட்டில் இருந்து ஓர் உணர்வாகத்தான் அவன் தனக்குரிய பாணியில் இசைத்தான். காற்று மழையில் கலங்குவதில்லை கட்டுமரங்கள் மூழ்குவதுமில்லை மூழ்குவதுமில்லை………………… நாம் ஓய்வதுமில்லை…………….. கோடையினாலே கடல் காய்வதுமில்லை……………. அது இயலுக்கு பிடித்த ஓர் கரையோர மக்களின் தென்னிந்திய திரைப்படப் பாடல் அதையும் சற்று நீங்களும் ஓர் உணர்வாக ரீதியாக மட்டும் கேட்டுப் பாருங்கள்………….. கதிரவனில் கதிர்கள் பட்டுத்தெறித்த அந்த உருவங்களில் கடற்கரும்புலி கப்டன் இயல்வளவ னும் ஒருவனாக நிஜத்திலும் கருமையாகத்தான் இருந்தான். 2004க்கு முன்னர் எங்கள் கட்டுப்பாட்டாக இருந்த கடல் அப்பொழுது கிழக்கில் நடந்த துரோகத்தால் தற்காலிகமாக பறிபோன கடல்பரப்பாலும், கரைகளைப் பார்த்த வண்ணமும் துரோகத்தின் ஆறாத ரணத்தின் பழைய நினைவுகளுடனும் வேறு ஒரு பிரத்தியேக இடம் நோக்கி தமிழீழ போரியல் வழங்களைச் சுமந்து சென்றவண்ணம் இருந்தது. ஆனால் அங்கே இடையில் அவர்களை வேட்டையாட குரோதத்துடனும், கொலைவெறியுடன் காத்திருந்தது துரோக நாய்கள் ஆம்……………………….. யாவற்றையும் அறியாது கடலில் துள்ளிவரும் அலையின் துளிகளும், வாடைக் குளிர்க் காற்றும் மேனி தடவி தடவிச்செல்ல வழமைபோல் அந்த நடவடிக்கையின் கட்டளை அதிகாரி லெப். கேணல் குகன் அவர்களின் தலைமையில் அன்றைய பயணமும் தொடர்கிறது. பயணம் தொடரும் வேளை இயலின் கடந்த நினைவுகளுக்கு சற்று செல்வோம்………………….. தமிழீழத்தின் தலைநகர் திருமலையில் 1987ம் ஆண்டு பிறந்து. சிங்கள ஆதிக்க வெறிகளின் அடாவடியால் உருக்குலைந்த தலைநகரில் அகதி வாழ்வு சூழ்ந்த மக்களில் இவனது குடும்பமும் உள்ளாக்கப்பட்டது. தன் குடும்ப சுமையை சிறிய பிராயத்தில் சுமந்தவன் தான் வேலைக்கு செல்லும் பொது ஏற்பட்ட போராளிகளின் தொடர்புகளால் போராட்டத்துக்கு உறுதுணையான சில போராட்ட வேலைகளுக்கு பின்னணியில் இருந்து வெளித்திரியாது உழைக்கின்றான். ஆனால் தன்னை முழுநேர போராட்ட பங்காளனாக மாற்றிக்கொள்ள முயற்சித்து சில வேலைகள் சார்ந்த பொறுப்பாளர்களுக்கு தன்னை வன்னிக்கு அனுப்புமாறும் அல்லது பயிற்சி அளிக்குமாறும் அழுத்தம் மற்றும் (அன்பு ரீதியான கரைச்சல்) கொடுக்கிறான். ஆயினும் இவனது சில தேவைகளின் முக்கியத்தை உணர்ந்து உன் வயது நிலை போதாது என்று மழுப்பி பதில் கூற பின்பு அங்கிருந்து வன்னி நோக்கி சென்று விடுதலைச் சேனையில் தன்னை இணைக்கின்றான். முல்லைமாவட்டத்தில் சிலாவத்துறை கடற்புலிகள் “இரும்பொறை” பயிற்சிப் பாசறை பாசறை 2001ம் ஆண்டு முதல் பயிற்சி ஆரம்பமாகி பல போராளிகளைகளை உருவாக்கி அவர்களில் பாதங்கள் உலாவந்த அந்த தென்னம் சோலை அடங்கிய வளாகம் மீண்டும் தன்மீது பல காவிய மைந்தர் கள் உருவாகுவார்களா என எக்கிக் காத்திருந்த போது வட்டக்கச்சி “அன்பு” அடிப்படை முகாமிலிருந்து சிறு தொகை போராளிகள் (அதாவது புதிதாக இயக்கத்தில் இணைந்தவர்கள்) முல்லைத்தீவுக்கு அழைத்துவரப்பட்டார்கள். ஆயினும் அந்தத் தொகை சற்று போதாததால் முத்தையன் கட்டு மணிவண்ணன் பாசறையில் இருப்பில் அடிப்படை பயிற்சிக்காக காத்திருந்த சில போராளிகளும் அழைத்து வந்தார்கள். (அங்கே சில பாசறைகளை உருவாக்கியவர்களும் இவர்களே பயிற்சிக்காக சுபேசன், யாழினி, மணிவண்ணன் எனும் பாசறைகளே ஆகும்.) அதிலே இயலும் ஒருவனாக இருந்தான். அனைவரையும் ஒன்றாக்கி கடற்புலி சூட்டுப்பயிர்சியாளர் அனந்தன் தலைமையில் “இரும்பொறை 02″ உருவாகியது அந்த தென்னம் சோலை நிறைந்த வனாந்தரமும் ஒரு புத்துயிர் கொண்டு பல போராளிகளை வளர்க்கத் தொடங்கியது. அதிலே இயல் சகல விதமான பயிற்சிகள் மற்றும் கடற் பயிற்சிகளையும் மேற்கொண்டான். இவனது திறனும், பயிற்சியின் வேகமும் அனைத்து போராளிகளையும் மற்றும் பயிற்சி ஆசான்களையும் கவர்கின்றது. அதன் பயனே அந்தப் பயிற்சியின்போது இவன் ஒரு 12 போராளிகளுக்கு குழுத் தலைவனாக நியமிக்கப்பட்டான். (ஒரு கொட்டிலில் 12 போராளிகள் வசிப்பர்) பின்னர் ஞாயிறு தோறும் நடைபெறும் கலைத்திறன் நிகழ்ச்சிகளில் இவனது ஒரு கலைநிகழ்ச்சியும் மேடை ஏறும் சற்று நகைச்சுவை கலந்திருக்கும். மற்றவர்களை எந்நேரமும் சிரிக்கவைக்கும் ஓர் நகைச்சுவையாளன். தமிழீழ விடுதலை மீது அதிக அவாகொண்டும், தலைவர் மீதும் அன்பு கொண்டிருந்த இந்த புலிமறவன் அங்கு வைத்தே ஓர் கடிதம் வரைகின்றான் தலைவருக்கு அதன் பதில் சற்று காலம் தாழ்த்தியே வந்து கிடைக்கின்றது. இவனில் ஓர் பெரும் சோகத்தை புதைந்து கிடக்கும் ஆயினும் சோகத்தை மிறிய அந்தப் புன்சிரிப்பை எந்நேரமும் மலரவைப்பான். இப்படியாக பயிற்சிப் பாசறையில் உலாவந்த போது சிலோஜன் நீரடி நீச்சல்ப் பிரிவுக்கு 20 பேர் கொண்ட போராளிகள் தெரிவாகி செம்மலை நோக்கி அவர்கள் அந்தப் பயிற்சிப் பாசறையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார்கள் அவர்களின் இயலின் இணைபிரியா நண்பர்கள் பலர் பின்னைய நாட்களில் ஈழக்கடலில் சாதனை வரலாறாகிய கடற்கரும்புலி மேஜர் தீக்கதிர், கடற்கரும்புலி கப்டன் முறையமுதன், கடற்கரும்புலி கப்டன் சோழமைந்தன் போன்ற பல போராளிகள்……………………… இவர்கள் சென்று மறுதினம் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி வந்து பன்னிரண்டு போராளிகளைத் தேர்வு செய்தார். அதில் இயல்வளவனும் ஒருவன். உடனே நீங்கள் உங்கள் கொட்டிலுக்கு சென்று உங்கள் உடமைகளை எடுத்துக்கொள்ளுங்கள் பின்பு ஒருவர் வந்து உங்களை அழைத்துச் செல்வர் என்று கூறி வாழ்த்துக்கள் கூறி விடைபெற்று சென்றார். பயிற்சிப் பாசறையில் ஆயிரம் விழிகள் இவர்களைப் பார்த்தபடி, ஏதேதோ வினவி முனுமுனுத்தபடி இருந்தார்கள் மற்றப் போராளிகள். பின்பு ஓர் நள்ளிரவில் இதமான தென்னம் காற்றுடன் கடல்காற்றுடன் கலந்து தேகத்தை சிலிர்க்கச் செய்த தருணம் லெப். கேணல் கடாபி அண்ணா அவர்கள் மத்தியில் வந்து நான்தான் உங்களை பொறுப்பெடுக்கப் போகின்றேன் என கூறி ஓர் வாகனத்தில் ஏற்றி வாகனம் பறந்தது தேவிபுரம் நோக்கி………. ஆனால், வாகனத்தில் இருந்த மனங்கள் பலத்தை சிந்தித்தபடி எங்கு போகின்றோம்????????????? சில மனம் ஓர் மகிழ்ச்சி பயிற்சி முகாம் விட்டு கடமைக்கு போகின்றோம் என. வாகனம் தேவிபுரத்தில் அரைகுறையாக கிடந்த “லெப். கேணல் சதீஸ் இயந்திரவியல் கல்லூரியில்” வந்து நின்றது. அன்றிலிருந்து கடற்புலிகளின் (Inboard and Outboard Engine) உள் – வெளி இணைப்பு இயந்திரவியல் அணி (டோறா ரிம்) மீள் எழுச்சி கொண்டு கடமை ஏற்று பயணித்தது அதன் சாதனைச் சரங்கள் விபரமாக விபரப்படுத்த முடியவில்லை மன்னிக்கவும். உண்மையில் இந்த அணி உருவாக்கம் 2000ம் ஆண்டு வெற்றிலைக்கேணியில் சண்டை ஒன்றில் சேதமடைந்த சிறிலங்கா கடற்படையின் அதிவேக டோறாவை கரைகொண்டு வந்து சேர்த்து பின்பு வேறு ஒரு சண்டையில் வீரமரணம் அடைந்த லெப். கேணல் சதீஸ் நினைவாகவும் கடற்புலிகளின் டீசல் – பெட்ரோல் மற்றும் நான்கு வகையான் இயந்திர வகைகள் கடற்புலிகளின் வளர்ச்சிக்கு பெரிதும் வலுச்சேர்த்தன என்பன குறிப்பிடத் தக்கது அதன் வளர்ச்சியை அதிகரிக்கவும் மற்றும் டோறா இயந்திரத்தின் (MTU Aero Engines) Motoren- und Turbinen-Union GmbH (MTU) தொழில்நுட்பம் மற்றும் அதன் பரிமாண தேர்வுகள் முற்றும் மாறுபட்டதனாலும் அவற்றில் முழுமையான தரவுகளுடன் பல போராளிகளை வளர்க்க வேண்டும் அவற்றைப் பராமரித்து எம் வளங்களை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. பின்பு கடற்புலிகளின் மூத்த உறுப்பினர்கள் கடாபி அண்ணா, குபேரன் அண்ணா, ரோமியோ அண்ணா, செமாலை அண்ணா, சின்னக்கண்ணன் அண்ணா மற்றும் சில பழைய போராளிகளையும் உள்ளடக்கி இவர்களுக்கும் (MTU Aero Engines) இயந்திரம் பற்றி மற்றும் அடிப்படை இயந்திரம் பற்றி (பெற்றோல் & டீசல்) கற்றுக்கொடுக்கப்பட்டு பயிற்சியும் வேறு ஒரு நாட்டில் இருந்து அழைத்துவரப்பட்ட தமிழரால் நடத்தப்பட்டு அந்த நாட்டு மொழியும் கற்றுக்கொடுக்கப்பட்டது. அந்த நாட்டு மொழி உண்மையில் அனைவரது மண்டையிலும் ஏறுவது கடினமாக இருந்தது அப்போது நகைச்சுவையாக இயலின் குரல் கேட்கும். இப்படியாக பயிற்சிகளில் தேர்வு செய்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றனர் இயல் உட்பட ஏனைய போராளிகளும். இப்போது பழைய உறுப்பினர்களும் புதிய போராளிகளுக்கு வாழ்த்துக்களை கூறி நீண்ட தூரம் பிரிந்து ஊர் விட்டு ஊர், மாவட்டம் விட்டு மாவட்டம் அவர்களின் பழைய கடமை ஏற்று சென்றார்கள். இப்போது இவர்கள்தான் யாவுமாகி…………… சதீஸ் இயந்தியவியல் எங்கும் பேசப்பட்டார்கள் ஆயினும் அவர்களின் அடையாளம் கடாபியின் பெடியல்கள்……………. ஆனால் இந்த அணியின் அதிக வளர்ச்சிக்கும் பெரிதும் பாடுபட்டவர் லெப். கேணல் கடாபி அண்ணா. இப்போது படையணிக்குள் சென்று அவர்களின் தொகுதிப் படகுகளின் இயந்திரம் இணைப்பது பிழை திருத்துவது, விநியோக இயந்திரம் புதிதாக பூட்டுவது போன்று கடற்புலிகளின் சண்டைப் படகுகளிலும், விநியோக வள்ளங்களிலும் (பெற்றோல் & டீசல்) என அனைத்து வகையான இயந்திரங்களிலும் இயலின் கைவண்ணம் தெரிந்தது. நாளடைவில் கடற்கரும்புலி மகளிர் போராளிகளுடன் இணைந்து செயற்பட்டார்கள். எம்முடன் உழைத்து பின்தளத்தில் இருந்து அனைத்து வகையான கடல்சார் நடவைக்கைக்கும் நீண்ட தூர பயணத்திற்கும், சண்டைகளின் அதிவேகம் கொண்ட இயந்திரங்களை இயக்கும் கரங்களாக இரவு பகலாக தமிழீழத் தேசியத் தலைவரையும், தேசத்தையும், மக்களையும் நெஞ்சிருத்தி உழைத்தார்கள். தமிழீழத்தில் அன்று கடற்புலிகளின் கடலோடிகள் நினைவில் கலை நிகழ்வு மாலை “அலைபாடும் பரணி” பாடல் இறுவட்டு வெளியீடு முல்லைத்தீவு மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெறவிருந்தது. ஆனால் அதன் நிகழ்ச்சி ஒத்திகை லெப். கேணல் சாள்ஸ், லெப். கேணல் நிறோஜன் நினைவு மண்டபம் அமைந்திருக்கும் வட்டுவாகல் கடற்புலிகளின் பிரத்தியேக தளத்தில் நடைபெற்றது. அதில் சிறப்புத் தளபதி உட்பட கடற்புலிகளின் உள்ளக கட்டமைப்பின் அனைத்து மாவட்டத்திலிருந்தும் போராளிகளும் கலந்து கொண்டிருந்தார்கள் அதில் மங்கை படகு கட்டுமானப் போராளிகளின் கலைநிகழ்வு ஒத்திகை கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு தலைமையிலான போராளிகளால் அரங்கேறிய தருணம் “தந்தனா பாடலாம் தாளம் போட்டு ஆடலாம்” எனும் பாடல் ஒலித்த போது இவன் நீண்ட நாள் கனவு சிறப்புத் தளபதி சூசை அண்ணா, லெப். கேணல் கடாபி அண்ணா, அப்போதைய கடற்கரும்புலி மேஜர் புகழரசன் கடற்கரும்புலிகள் அணிகளின் பொறுப்பாளர் மேஜர் கலைமாறன் (2006ம் ஆண்டு சர்வதேசக் கடற்பரப்பில் வீரச்சாவு) அவர்களும் கூடி கதைத்த போதும் கடாபி அண்ணா வியந்தார்; அவரின் புருவங்கள் உயர அவரின் வியப்பு அவரை அகலாத நேரத்திலும் யாவற்றையும் அடக்கி இயலை அழைத்தார் அப்போது அவனின் நீண்ட நாள் காத்திருப்புக்கு பதில் கிடைத்தது. சிறப்புத் தளபதி மூலம் கிடைத்தது. என்னதான் செய்யமுடியும்? அவன் உள்ளம் அடைந்த ஆனந்தம் யார்தான் உரைப்பார்? யாரிடமும் கூறும் விடயமும் இல்லை தனக்குள் சந்தோசத்தை அடக்கிக்கொண்டான். ஆயினும் சதீஸ் இயந்திரவியல் பாசறையில் அவன் சிறிது காலந்தான் வாழ்வான் என அப்போது அவனின் சில செயற்பாடுகள் அனைவருக்கும் தெளிவூட்டியது. ஓர் முறை கடற்புலிகளின் சிறிய ரக சண்டைப்படகு (போராளிகளின் இழப்பைக் கடலில் சந்திகளில் குறைப்பதற்கும், இலக்கின் தன்மையை குறைப்பதற்கும் உருவாக்கப்பட்ட “வின்னர்” படகு) ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு அதை ஒத்திகைக்கு விட்டு பாவனைக்கு உட்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு படகு வடிவமைப்புக்கு இரவும் பகலும் மங்கை படகு கட்டுமானப் போராளிகளும், புதிய இயந்திரங்களை ஒருநிலைபடுத்து இயக்குவதிலும் சதீஸ் இயர்ந்திரவியல் போராளிகளும் உழைத்தார்கள். ஆனால் அனைத்தும் முடிவூற்றது இரவு முழுவதும் இயந்திரத்தை மெதுமெதுவாக அதன் வலுத்திறனை நிலைப்படுத்த வேண்டும். (படியவிட வேண்டும்) அவற்றையும் சீர்நிலைப்படுத்தி முடிக்கும் தருணம் காலை புலர்ந்தது. இயல் உட்பட நாங்கள் அனைவரும் ஒவ்வொரு படகிலும் நின்றோம். ஆனால் அப்போது தீடிரென கரையில் போராளிகள் வந்து கூடினர். ஒரு போராளி காட்டிய திசையின் என்ன மச்சான் தீடிரென இப்படி கணக்க போராளிகள் என்றோம். அப்போது சற்று கரையால் படகை விட்டு பார்த்தோம். மங்கை படகு கட்டுமானப் போராளிகள் உட்பட ஏனைய படைப்பிரிவுப் போராளிகள் நின்றனர். எல்லாம் பார்த்த முகம்தான் என்றான் இயல். ஆயினும் மறுபக்கத்தில் சண்டைப்படகுகள் கடலிற்குள் இறக்கப்பட்டு பாதுகாப்பிற்கு சற்று உயர்வாக உலாவந்தது. தொலைத் தொடர்பில்…………… “யாவற்றையும் சரி செய்யுங்கள் சற்று படகுகளை நிறுத்தி வையுங்கள் கொஞ்ச நேரம் கழித்து வெள்ளோட்டத்தை ஆரம்பியுங்கள்……………….” சிறிது நேரம் கழித்து,,,, தமிழீழம் அப்போது புலர்ந்திருந்தாலும் உண்மையான சூரியன் அப்போது கரையில் உதயமானது. அதற்காகவே படகு வடிவமைத்தை அதன் கட்டுமானத்திற்க்காக உழைத்த கரங்களுடன் அந்த சாலை மணலின் நின்றவண்ணம் கடலை நோக்கி பார்த்தது அந்த கூரிய விழிகள்………….. அப்போது தொலைத்தொடர்பில் ஒவ்வோர் படகிற்கும் கட்டளை பிறந்தது இன்ன வேகத்தில் இப்படி போய்விட்டு இப்படி வரவும் என அனைத்து படகின் வெள்ளோட்டமும் ஆரம்பமானது. உயர்வாக சென்றுவிட்டு கரைநோக்கி வந்து கரை மணல் இயந்திர வாலில் பட்டும் படாமலும் திருப்பப்பட்டது கடற்புலிகளின் பரிபாசையில் கூறினால் (ஒ போடுவது) அப்போது அனைவரின் விழியும் கரையில் போராளிகளுக்கு மத்தியில் இருந்த அந்தக் கம்பீர உருவத்தையே பார்த்தது. பின்பு இயல் உட்பட ஏனைய போராளிகள்……… மச்சான்…… அது…………. அது……………… என்னால்………….. என்னால் நம்ப முடியவில்லை என்றனர். ஆம்………………. தலைவர்………………. ஆம் தேசியத் தலைவர் அவர்களடா……………. ஆம் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவனை, இயல்போல் பல போராளிகள் நாளும் தினமும் நித்தமும் போற்றிக் காதலிக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை சந்திக்கும் பாக்கியம் வரம் முதலில் கடற்கரும்புலி கப்டன் இயல்வளவனுக்கு இப்படியாக அமைந்தது. 2015-04-31 இயல் பங்கு பற்றிய கடற்சண்டைகள் மிக அரிதும், குறைவும் ஆனால் கடமை ஏற்று இவன் தமிழீழத்தின் அனைத்து மாவட்டமும் சென்று உழைத்த உழைப்பின் பெறுமதி கனவளவு அதிகம். சண்டை கூடிவரும் போது வேறு மாவட்டத்துக்கு அவன் செல்லவேண்டிய தேவை அவசியமும் அவசரமுமாக இருக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும் போல் இவன் கைவண்ணம் பட்ட இயந்திரத்தை ஆழகடலில் எவ்வளவு தூரமும் நம்பி இயக்கிச் செல்லலாம் அப்படியாக தூரித அறிவுக்கு கூர்மையான செயற்பாட்டால் அனைவர் மனதிலிலும் நம்பிக்கையை விதைத்து இடம் தரிப்பான். சண்டைக்கு இவன் செல்லாததற்கு இன்னுமோர் காரணம் விநியோம் ஓர் கலந்துரையாடலில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சிறப்புத் தளபதி, பொறுப்பாளர்கள் மற்றும் கடற்புலிகளின் தாக்குதல் அணிகள், விநியோக அணிகள் என அனைவரும் கூடியிருந்தோம். அப்போது தேசியத் தலைவர் அவர்கள் அனைவரின் தேவைகள் நலன்கள் விசாரித்தார் அப்போது விநியோக அணி ஓர் வேண்டுகோள் விடுத்தார்கள் “நாங்கள் எப்போது சண்டைக்கு செல்வது…? எமக்கு ஓர் சிங்கள கடற்படைக் கலம் அழிக்கும் சர்ந்தப்பம் வழங்கப்பட வேண்டும் என்று……………..” 2015-04-30 அப்போது தேசியத் தலைவர் அவர்கள் கூறிய பதில்….. நிச்சயமாக நிறைய சர்ந்தப்பம் வழங்கப்படும், ஆனால், நீங்கள் இப்போது செய்யும் பணி {விநியோகம்} அதி உன்னதமானது, ஓர் சண்டைக்கு நிகரான பணிதான் ஆகையால் திறம்பட இதை செய்யுங்கள் என வாழ்த்துக்களையும் கூறி ஆசி வழங்கினார். இதுவே பலரது மனங்களை நிறைத்து அவர்களுக்கு வழங்கப்பட்ட பணியில் கண்ணும் கருத்துமாக செயற்பட்டார்கள் ஆகையினால் சண்டைக்கு செல்லும் சர்ந்தப்பம் விநியோகத்தில்……….. 2009ம் ஆண்டின் பின் தேவிபுரத்தில் சிங்கள இனவெறிப் படைகள் கண்டுபிடித்த நீச்சல் தடாகத்தை வைத்து எம் தலைமை மீது பொய்யான பிரச்சாரம் மேற்கொண்டது. அது தேசியத் தலைவரின் உல்லாச வாழ்க்கைக்கு கட்டப்பட்டது. உலாசமகா இருந்தார் என அது உண்மை இல்லை. அந்த நீச்சல் தடாகம் 2005ம் ஆண்டு கட்டப்பட்டது போராளிகளின் பாவனைக்கும் மற்றும் போராளிகளின் சில பயிற்சிக்காகவும் அது கடற்கரும்புலி லெப். கேணல் சிலம்பரசன் (றஞ்சன்) அவர்களின் நினைவாக கட்டப்பட்டது. அந்த நீச்சல் தடாகத்தை பராமரிக்கும் பொறுப்பு சதீஸ் இயந்திரவியளையும் சார்ந்து இருந்தது. அது சதீஸ் இயந்திரவியலில் இருந்து சிறு தூரவளாகம்தான். அதில் சில உள்ளக வேலைகளுக்கும் – தேவைகளுக்கு சில போராளிகளை கடாபி அண்ணா சிறப்புத் தளபதியின் அனுமதியில் நியமித்தார் அதில் இயல்வளவன் ஒருவனாக இருந்தான் என்பதும் குறிப்பிடத் தக்கது. 2004ம் ஆண்டு உலகில் சில தேசத்தை தாக்கிய ஆழிப்பேரலை அனர்த்தம் ஈழத்தின் கரையோரங்களையும் தாக்கி பல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான வயது வேறுபாடுகள் இன்றி பல உயிர்களை காவுகொண்டு சோகத்தில் மூழ்கியிருந்தது. அப்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்து வகையான படையணிகளும் தூரிதமாக மீட்புப்பணியில் ஈடுபட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதல் கடற்புலிகளின் ஏனைய உள்ளக பிரிவுகளின் எங்களின் அணியும் சென்று மீட்புப்பணியை மேற்கொண்டோம் அதில் இயலும் ஒருவனாக இருந்தான். ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை மீள்கட்டுமானம் செய்து மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்ய தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் ஒவ்வோர் படையணிகளுக்கும், அணிகளுக்கும் பாரிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டன. சதீஸ் இயந்திரவியல் கல்லூரிப் போராளிகளுக்கும், மங்கை படகு கட்டுமானப் போராளிகளுக்கும் சில முக்கிய பொறுப்புக்களான மீனவர்களின் கடல்தொழில் சார் படகுகள் – இயந்திரங்கள் சரிசெய்யும் வேலைகள் போராளிகளுக்கு வழங்கப்பட்டன. லெப். கேணல் கடாபி அவர்களின் தலைமையில் பன்னிரண்டு இயந்திரவியல் போராளிகள் உள்ளடக்கி வடமராட்சி கிழக்கு, முல்லைத்தீவு, முள்ளியவளை என மாறி மாறி மக்களின் பாதிக்கப்பட்ட மீனவர்கள் இயந்திரங்களை சரி செய்து அதின் பதிவுகள் எடுக்கப்பட்டன. அதில் இயல்வளவனும் ஒருவனாக திறம்பட செய்தான். அதேபோன்று மங்கை படகு கட்டுமானப் போராளிகளும் தங்கள் பணியை தொரம்பட செய்து தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களினதும் தமிழீழ மக்களினதும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பெற்றனர். ஓர் முறை கடற்புலிகளின் உள்ளக விளையாட்டுப் போட்டி முல்லைத்தீவில் நடைபெற்றது.அதில் பல மாவட்டபோ போராளிகளும் அனைத்து கடற்புலி படையணி பிரிவுகளும் பங்குபற்றினர். அதில் வங்கக்கடலில் மற்றும் சர்வதேசக் கடற்பரப்பில் வரலாறாகிய போராளிகள் பயணித்த கப்பல்களின் பெயர்களில் பிரிக்கப்பட்டு நடைபெற்றது. எம்.வி.அகத், எம்.ரி.கொய், எம்.ரி.சொய் என்னும் பெயர்களை நடைபெற்றது. ஆனால் அதில் இயலுக்கு மறக்க முடியாத சம்பவம் மற்றும் வருந்திய செயலும் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டியில் ஒவ்வோர் போராளிகளும் தங்கள் கப்பல்கள் சார்பில் ஒரு விளையாட்டிலும் பங்குபற்ற வேண்டும். சிறப்பு விருந்தினராக தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இயல் தான் ஒரு விளையாட்டில் கலந்து தன் திறமையை வெளிக்காட்ட வேண்டும் எனவும் மற்றும் தேசியத் தலைவர் கலந்து கொல்லும் போராளிகள் நிகழ்வு சென்றதால் அவனின் எதிர்பார்ப்பும், ஆர்வமும் பலமடங்கு அதிகரித்து இருந்தது. அப்போது மன்னாருக்கு அவசரம் செல்லவேண்டும் ஓர் நடவடிக்கைக்கு தேவையான படகு வழிப்பாட்டில் பழுதடைந்து இருந்தது அதை அங்கிருந்த சரி செய்து கிராச்சிக்கு கொண்டுவரவேண்டும். அதற்கு லெப். கேணல் கடாபியண்ணா தெரிவு செய்த இரு போராளிகளில் இயலும் ஒருவனாக இருந்தான். சென்றோம்………….. மீண்டும் மன்னாரில் இருந்து முல்லைத்தீவு நோக்கி வந்து நிகழ்வில் நடந்த சுவாரஸ்யமான செய்திகளை நண்பர்கள் சொன்னபோதும் ஏக்கமும் ஏமாற்றமும் கவலையும் இருந்ததது; தலைவரைப் பார்க்க முடியவில்லை என்று. ஆனால் சதீஸ் இயந்திரவியல் சார்பில் கப்டன் ஈழப்பதி மற்றும் சாரங்கன் பரிசில்களைப் பெற்றனர் மற்றைய போராளிகள் ஆறுதல் பரிசில்களையும் பெற்றனர். வேறு ஒரு நாள் மன்னார் மாவட்டம் கிராச்சியில் அந்த கடற்புலிகளின் தளபதி லெப். கேணல் கங்கைஅமரன் நினைவு மண்டபம் அமைந்திருக்கும் கானகத்தில் ஓர் பயிற்சிக்காகவும் நடவடிகைக்காகவும் கடற்கரும்புலிகள் கடற்புலிகள் கூடினர். சில இணைபிரியா முகங்கள் கடமைகள் வெவ்வேறாக இருந்த போதும் நீண்ட நாட்கள் சந்தித்த ஓர் உவகையில் தோழமைகளின் நலன்கள் விசாரிப்பு ஒன்று கூடித் திரியும் நாள் எத்தனைநாள் நிலைக்குமோ என்ற நினைப்பு இருந்தாலும் அந்த முகாமின் கானகத்தை தோழமைகளுடன் உலாவந்தோம் அப்போது ஓர் துயர் சம்பவம் அந்த கானகத்தில்………………………….. கடற்கரும்புலி நீராடி நீச்சல் பயற்சி தீவிரமாக இடம்பெற்றது ஆனாலும் மன்னார் சமுத்திரக் கடல் சற்று சீரற்று மூசிக்கொண்டு இருந்தது அவற்றைப் பொருட்படுத்தாமல் பயிற்சியில் போராளிகள் ஈடுபட்டனர். ஆனால் இயற்கையின் சீற்றத்திலும் இயற்கையின் கடல் வகைப் பிராணி அதாவது (கடல் சொறி) அடையல்களுடன் கலந்து மிதந்து போராளிகளின் தேகங்களைப் பதம்பார்த்தது. பயிற்சியில் ஈடுபட்ட போராளிகள் கடல் சொறியின் வருகையை அறிந்து அதற்குள் லாபகமாக தப்பித்து பயிற்சியைத் தொடர்ந்தார்கள் ஆனால் சில போராளிகளின் தேகம் பதம் பார்க்கப்பட்டமையால் கடியின் எரிவின் வேதனை தாங்காமல் குச்சல் போட்டு, கத்திக்கொண்டு இருந்தார்கள் ஆனால் ஒரு போராளியை நெருப்புச் சொறி பதம் பார்த்தது இதன் தாக்கம் சற்று வித்தியாசமானது. உடம்பில் பட்டால் மூச்சு அடைக்கும் உடலில் பயங்கர வேதனை விக்கம் எரிவு என கொடுமையாக இருக்கும். அப்படியாக அந்த வீரனை சில நெருப்புச் சொறிகள் மாறி மாறி பதம் பார்க்க கரை நோக்கி அனுப்பப்பட்டு செல்கிறான் ஆனால் அதன் வேதனை எப்படி இருக்கும் என்பது வார்த்தைகளால் கூறமுடியவில்ல. நாம் வாழ்வில் காணும் நியதிபோன்று இயற்கையின் சீற்றம் தகர்க்க முடியாத பெரும் மலையைப் பிளந்து ஊற்றெடுக்கும் எரிமலையின் அக்கினி நாவுகள் போன்று அந்த வீரனையும் அதன் தாக்கம் பாதித்தது வேதனையால் துடித்தவன்……………. கடலில் இருந்த போராளிகளுக்கு ஓர் வெடியோசை மட்டும் கேட்டது அந்த வீரன் எம்மைவிட்டு சென்றான் அவன் பாசறை வீட்டில் இயலின் கீழ் உற்ற தோழனாகி இறுதிவரை இயலின் எங்கள் தோழனாக உலாவந்தவன் அந்த கானகத்தில் இடைநடுவே எம்மைப் பிரிந்து வரலாறாகினான். கண்ணெதிரே பல தோழர் – தோழியர்களின் பிரிவுகளை கண்டு கலங்கி நின்றான் இயல்வளவன். செம்மலை மக்கள் மத்தியில் இவன் அவர்கள் வீட்டுப் பிள்ளையாகவே உலாவந்தான். ஓர் நாள் சாலைத் தளத்திலிருந்து குறிப்பிட்டசதீஸ் இயந்திரவியல் போராளிகள் அமுதசுரவி கட்டளைப் படகை பொறுப்பெடுத்து அதிலிருந்த இயந்திர சீரமைப்புக்காக கடலில் இறக்கி நீண்ட நேரம் ஓர் இடத்தில் தரித்து நின்றுவிட்டு ஓட்டத்தை ஆரம்பித்து உயர்வான பகுதியால் சென்று நாயாற்றில் இருந்து செம்மலை நோக்கி பதிவாகவும், முழு இயந்திர வலுவையும் பாவித்து படகைச் செலுத்தினான் இயல். ஆனால் கரையோர மக்கள் சற்றும் திகைப்படைந்து இருந்தனர் அது வந்த திசை மற்றும் படகின் தோற்றம் மக்களுக்கு எதிரிப் படகு என்று தாக்குதலுக்கு வருவதாகவும் சித்தரித்தனர். பின்னர் மிக கரையைப் படகை விட்டதும். எங்கள் கொடிகளையும், முகங்களையும் மக்கள் பார்த்து நிம்மதி அடைந்து பின்னர் அன்று மதியம் மக்கள் அனைவரும் இணைத்து ஓர் சுவையான சமையல் செய்து விருந்து வைத்தனர். அப்போது அங்கே ஓர் வீட்டில் எதோ ஓர் விசேஷத்தில் கூடியிருந்த எம் பல நடவடிக்கைகள், போராட்ட வளர்ச்சிக்கு உதவிய மக்களின் வற்புறுத்தலான வேண்டுகைக்கு இணங்க பொறுப்பாளரின் அனுமதிகளுடன் அவர்கள் செய்த ஓர் கலைநிகழ்வில் நாங்கள் கடலில் இருந்தபடி ஓர் பாடலுக்கு ஆடிப் பாடி மகிழ்ந்தனர் அதில் இயலும் கரையில் விளையாடிய சிறுவர்களை படகில் ஏற்றி வெற்றிக் கப்பலையும் வட்டமிட்டு அன்றைய பொழுதுகள் கழிந்தன. ஓர் முறை முல்லைமாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழா அங்கு வாழும் மக்கள் சிறப்புத் தளபதியிடம் அனைத்து போராளிகளும் திருவிழாவிற்கு கலந்து கொள்ள அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஒவ்வொரு போராளிகளுக்கும் சிறு குறைந்த தொகை பணமும் வழங்கப்பட்டது ஏதும் திண்பண்டங்கள் வாங்கிச் சாப்பிடும்படி. ஆனால் அந்த திருவிழாவில் ஒரு புதினம் நடைபெற்றது. எங்கள் போராட்ட வாழ்வில் இரு ஆண் – பெண் காதலித்து போராட்டத்தில் இணைந்து குறிப்பிட்ட வயது வந்தவுடன் திருமணம் செய்து போராட்டத்துக்கு உழைந்தவர்கள் பலர் வரலாற்றில்…. அப்படியாக பாரதி மூடிய காதல் தீ இங்கே இயல் மீது காதல் தொடுத்தாள் ஒரு தமிழீழக் கன்னியவள் எம் அனைவருக்கும் சிரிப்பு சிரிப்பாக வந்தது. இயல் வெட்க்கிப்போனான். ஆனால் அவன் மனம் காதலை ஏற்கும் நிலை இல்லை. என்னதான் செய்யமுயியும்? அனைவருக்கும் காதல் உண்டு ஆனால் கடமையே பெரிதாகி சுயங்களை திறந்து திரிந்தவர்கள் அல்லவா இவர்கள்? ஆயினும் எங்களின் தோழமை அன்பின் அறுவைகள் அவ்வப்போது இயலைத் தாக்கும். கடாபி அண்ணா கூட சிரிப்பார் இயலைப் பார்த்து அப்படியாக கலகலப்பான நாட்களுக்கு முற்றுப்புள்ளி கிடைத்தது. கடாபி அண்ணா மன்னார் மாவட்டம் இழுப்பக்கடவைக்கு செங்கதிர் எனும் போராளியுடன் இணைந்து அணைத்து விதமான இயந்திரங்களையும் பராமரிக்கும் பொறுப்பினை ஒப்படைத்து லெப். கேணல் எழில்கண்ணன் அவர்களிடம் அனுப்பிவைத்தார். பின்பு அங்கிருந்து கடினமாக உழைத்து பல நடவடிககிகளுக்கு உறுதுணையாக இருந்தான். சில காலத்தில் அப்படியே விநியோகத்தில் சில கடற்கரும்புலிகளுடன் ஆழ்கடல் விநியோகத்தில் இறங்கி செயற்படுகிறான். அங்கும் அவனது ஆதிக்கம் நன்கு பேசப்படுகின்றது. தமிழீழத்தின் கிழக்கு மாகாணம் (மட்டக்களப்பு, திருமலை, அம்பாறை) மற்றும் மன்னார் மாவட்டத்தின் ஊடாக வன்னிக்கு உரிய விநியோக நடவடிக்கையையும் செய்து தமிழீழ தேசத்தின் வளங்களை சேகரித்து பல வெளித்தெரியாது பின் தளத்தில் இருந்து உழைத்த கடலோடிகள் (கப்பல் பிரிவு, கடற்கரும்புலிகள், கடற்புலிகள் ஏனைய பிரிவுப்) போராளிகளுடன் இரவு பகல் பாரது இயற்கை கடல் சீற்றத்துக்கும் முகம்கொடுத்தும் தூரம் எல்லை தாண்டி பறந்து சென்று ஆழக்கடலின் ஆழங்கள் அளந்தும் பல காவியமான கடலோடிகள், கடற்கரும்புலிகள், கடற்புலி மாவீரர்களுடன் உழைத்தான். தமிழீழத்திற்கு வளங்களை சேகரிக்க தமிழீழத்தை மற்றும் சிங்கள தேசத்தை பல தடவை சுற்றி வந்தவர்களின் இவனும் ஒருவன். இவனுக்கு சற்று சிங்களம் தெரியம் ஓர் முறை மன்னார் ஊடாக மேற்கொண்ட விநியோக நடவடிக்கை (அப்போது எதிரி எங்கள் நகர்வுகளை அவ்வளவாக அறிந்திருக்க வில்லை பின்னைய நாட்களின் நடந்த செயற்பாடுகளால் அவ்வழிகளை எதிரி முடுக்கினான் தடைகளையும் மீறி சாதனை படைத்தார்கள்) சரவதேச கடற்பரப்பில் இருந்து கொண்டுவந்த வளங்களை ஓர் சிங்கள இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் தரவிறக்கம் செய்துவிட்டு விநியோகப் படகு திருத்த வேலைக்காக எங்கள் கட்டுப்பாட்டு கிராஞ்சி தளம் நோக்கி விரைந்தது விநோயோகப் படகு. விடியச் சாமம் ஆனால் குறுகிய நேரத்தில் எதிரியின் பிரதேசத்தைக் கடக்க வேண்டும் ஆனால் நேரம் அவ்வளவாக இல்லை. இலுப்பக்கடவை நோக்கி திருப்பிவிட்டு பின்பு கரையூடாக கிராஞ்சி நோக்கி செல்ல தீர்மானிக்கப்பட்டது. அப்போது சிங்களக் கடற்படைக்கு அருகாமையில் மன்னார் மந்திட்டியில் எங்கள் விநியோகப் படகு ஏறிவிட்டது எவ்வளவு முயற்சித்தும் பலனளிக்கவில்லை. நன்றாக விடிந்து விட்டது கடல் வற்று காரணமாக ஆழம் குறைவாக இருந்ததே காரணம். படகில் கடற்கரும்புலிகள் லெப். கேணல் வளவன் உட்பட ஏனையோர் இருந்தோம் படகில் அப்போது சிறிலங்கா கடற்படையின் வோட்டர்ஜெற் ரோந்து வந்து கொண்டிருந்தான். எதிரி சீண்டினால் முடிவு கட்டுவது என தீர்மானிக்கப்பட்டது கையில் ஆயுதங்கள் ஏதும் இல்லை ஆனால் படகில் வெடிமருந்து இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் பொறுமை காக்க வேண்டியும் இருந்தது காரணம் எதிரி அறியிவில்லை முன்பு நாங்கள் அந்த வழியால் செய்த நடவடிக்கையை அதுவே முதல் காரணம். அப்போது எதிரியின் வோட்டர்ஜெற் எங்கள் படகில் அருகில் வந்தபோது அவனுக்கும் சந்தேகம் வரவில்லை அது மீன்பிடி வள்ளம் என்பதனால் பின்பு அவன் கேள்வி தொடுத்தபோதும் இயலின் பதில் சிங்களத்தில் அமைந்தது நாம் எம் காணாமல் தொடர்பு அற்றுப்போன மற்ற மீன்பிடி வள்ளத்தைத் தேடி வந்தோம் இது எமக்கு புதிய இடம் இப்படி ஆழம் குறைவு என்று தெரியாது என்றான். பின்பு கடற்படை தனது வோட்டர் ஜெற்றால் கட்டி இழுத்து எம்மை வழியனுப்பி வைத்தது. அனைவருக்கும் சிரிப்புத் தாங்க முடியவில்லை. இயலின் மனமும் ஏனையவரின் மனமும் பகையே இன்று எதோ ஓர் சர்ந்தப்பத்தில் தம்பிவிட்டாய் ஆயினும் வேறு சர்ந்தப்பமாக இருந்தால் நிச்சயம் உனக்கு மரணம்தான் என நினைத்தது. ஆயினும் பின்னைய நிகழ்வுகளில் பல கடற்கரும்புலிகள், கடற்புலிகள், நாட்டுப்பற்றாளர்களின் உயிர்கள் அந்த கடலிடை காவியமாக அந்த அலைகளோடு மௌனித்தே குமுறிக்கொண்டே இருக்கின்றது. வெடியாய் அதிரும் ஒவ்வொரு வெடிக்கும் வரலாறு இருக்கிறது – கடல் மடியினில் புதிய காவியம் படைத்தே வீரச்சாவு திகழ்கின்றது வெளியினில் சொல்ல முடிவதில்லை வீரச்சாவுகள் முழுதும் தெரிவதில்லை இப்படியாக நீண்ட இவனது தேசத்திற்கு உழைப்பு இன்னோர் தடத்தையும் பதிவு செய்தது. விடுதலைக்கு பலம் சேர்க்கும் கனரக ஆயுதங்களை பீரங்கிகளை கொண்டுவந்து கரை சேர்ப்பது என்பது இலகுவான காரியம் இல்லை யாவற்றையும் கடந்து எங்கள் வீரர்கள் வெற்றி கண்டார்கள். ஆட்லறி பீரங்கியின் அளவு, அதன் கனவளவு அறிந்து அதைத் தாங்கும் அளவில் வித்தியாசமாக போராளிகளால் படகு வடிவமைக்கப்பட்டு இயந்திரவியலால் வலுக்கூடிய டிசல் இயந்திரமும் பூட்டப்பட்டு கடற்புலி லெப். கேணல் புரட்சி அவர்களின் தலைமையில் ஆட்லறி பீரங்கி வன்னிக்கு மன்னார் ஊடாகவும், தென் தமிழீழ கிழக்கு மாவட்டங்களுக்கும் மட்டக்களப்பில், திருமலையில் தரவிறக்கப்படுகின்றது அதில் இயலின் மற்றும் ஏனைய கடற்கரும்புலிகள், கடற்புலி மாவீரர்கள் உட்பட பங்கும் கணிசமானதாக உள்ளது இன்றும் பலர் உள்ளமையால் ஓர் நாள் வெளித் தெரியாமலே என்ற நம்பிக்கையில் தவிர்க்கின்றேன். பீரங்கி மோட்டர்கள் பேசிடும் பொழுதினில் இவர்களின் ஈகங்கள் தெரிந்திடும் – அதை தூரங்கள் தாண்டியே கடலில் தந்தவர் தோழமை உணர்வுகள் புரிந்திடும். உதிரிப்பூக்கள் எல்லாம் மாலையான பின்னே உள்ளே இருக்கும் நாரை கண்கள் அறிவதில்லையே இப்படியாக இவனது உழைப்பு பயன்பட்ட போது அன்றும் விநியோகத்துக்கு உரிய நடவடிக்கையின் பயணம் தொடர்ந்தது. இனி…………………… சர்வதேசக் கடற்பரப்பில் இருந்து விடுமுறையில் சென்று மீண்டும் ஆழக்கடலில் ஆழத்தை அளவிடத் தயாராக மீண்டும் கடற்புலி லெப். கேணல் ஸ்ரிபன் தலைமையிலான போராளிகள் தயார் நிலையில் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். அப்போது நேரம் நெருங்கியது தமக்குரியவற்றை செய்தார்கள். அங்கே தமது விநியோகத்துக்கான ஆரம்ப நடவடிக்கைகளுக்கு செல்வதற்காக ஒவ்வொரு தயார் படுத்தலை ஒவ்வோர் முனையிலும் இருந்து செயற்படுத்தத் தொடங்கினார்கள். ஆனால், அன்று இராணுவ நெருக்கடிகள், துரோகத்தின் கொலை வெறிபிடித்த பார்வைக்கும் மத்தியில் ஓரளவு சீராக தம் போரியல் திரவியங்களை (வழங்களை) தென் தமிழீழத்தின் ஓர் பகுதியில் தரவிறக்கம் செய்துவிட்டு கடற்புலி லெப். கேணல் குகன் (குன்றலினியன்) தலைமையில், கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன், கடற்கரும்புலி கப்டன் இசையரசன் ஆகிய விநியோகப்பிரிவுப் போராளிகள் வன்னி நோக்கி தமக்கு உரிய இடத்திற்கு செல்ல தொலைத்தொடர்பின் மூலம் வருகையை அறிவித்து விட்டு புறப்படத் தயாரானார்கள். ஏனைய விடை கொடுத்த விழிகள் கடலைப் பார்ப்பதும் வருவதுமாய் இவர்களின் பயணத்தின் திசையைப் பார்த்தவண்ணம் இருந்தது அந்த சீரற்ற காலத்தில் பல ஏக்கங்களுடன்…… ஆனால், அங்கே குறிப்பிட்ட மணித்தியாலத்தில் சேரும் இடத்தைத் தாண்டவுமில்லை, நேரம் வழமையை விட அதிகரித்து சென்றது தொடர்பை எதிர்பார்த்த மனங்கள் பலதை எண்ணி ஏங்கித் தவித்த வண்ணம் இருந்தன. அவர்களின் பயணத்தின் போது……………………… தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கையை – நகர்வுகளை 2004ம் ஆண்டிற்கு பின்னர் சிறிலங்கா அரசுகளுடன் இணைந்து துரோக சக்திகளும் (துரோகி கருணா குழு) முடக்கி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. பல முடக்க வேலைகளையும் – மூட்டுகட்டைகளையும் தரைவழியாக கடமைகளை மேற்கொண்ட போராளிகளுக்கு செய்து வந்த துரோக சக்திகள் அன்று கடற்புலிகளின் வரலாற்றில் மாபெரும் துரோகத்தை விதைத்து பல விழுதின் வேர்களை அந்த கரை மணலில் சாய்த்தார்கள். அப்போது அந்த போராளிகளின் படகை துரோகிகள் (துரோகி கருணா குழு) சூழ்ந்து, போராளிகளை நிராயுத பாணிகளாக கைது செய்து கரையில் கொண்டு சென்றார்கள். அதிலும் சில பழகிய முகங்கள் அங்கு துரோக சக்தியாக மனம் தாங்குமா? ஆயினும் அனைத்தையும் கடந்து அவர்கள் துரோகிகள் எம் விடுதலைக்கு எதிராகவே அவர்கள் கரங்களில் ஆயுதங்கள் ஆயினும் போராளிகள் அடிபணிவதாக இல்லை. அப்போது மறு திசையில் இவர்களின் வரவை அவதானித்தும் காத்திருந்த குரல்கள் தொடர்பலை இவர்களின் தொலைபேசியில் கூவிய வண்ணம் இருந்தது. இங்கே துரோகிகள் புடைசூழ போராளிகளின் கைகள், கால்கள் கட்டபப்ட்டு விசாரணை ஆரம்பமாகியது. எங்கிருந்து வருகின்றீர்கள்? எங்கே செல்கின்றீர்கள்? எங்கே எத்தனைபேர் என புதிய திட்டங்கள் மாற்றங்கள் விபரங்கள் போன்றவற்றை அறியும் முனைப்புடன் தொடுத்தார்கள் விசாரணையை…. ஆயினும் போராளிகளின் வாய்கள் மௌனம் காத்தன. பொறுமையிழந்த துரோகிகள் கோழைத்தனமான (சித்திரவதை) தாக்குதலை தொடுத்தார்கள். (அதை இங்கே எழுத்துருவில் வடிக்கும்போது என் கண்களே பனிக்கின்றது) குருதி தொய்ந்து வலிகள் தொடர்ந்தாலும்…., முன்னைய காலத்தில் ஒன்றாக ஓர் அணியில் இருந்து ஓர் தட்டில் உணவுண்டு பழகிய நட்புகள் இளைத்த துரோகம் இன்னும் வேதனையை கூட்டியது அப்போது………… தங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை மற்றவர்கள் உயிர் காக்கப்பட வேண்டும் அவர்கள் மூலம் தொடர்ந்து தங்களின் பணி தொடரவேண்டும் என்ற மனநிலையில் அங்கும் அவர்கள் போராட்ட மரபைக் கடைப்பிடித்து மெல்ல மெல்ல உயிரும் விட்டு பிரியும் நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது……….. ஒரு தட்டில் உண்டு மகிழ்ந்த சக தோழர்கள் – சகோதரன் சாவதைப் பார்ப்பது எவ்வளவு கொடுமை அதுவே அங்கே…………. துரோகியால் கட்டையால் அடித்து அடித்தே ஓர் வீரனை சாகடித்தனர் அவனது உயிரும் அந்த அலைவந்து தாலாட்டும் கரை மண்ணில் கடலைப் பார்த்தவண்ணம் உயிர் பிரிந்து அவன் சாய்த்து சருகாகி விழுந்து போனான். எந்த ஒரு வைர நெஞ்சமும் கலங்கும் படி அங்கே நடந்த சம்பவம் ஏனையவன் மேல் துரோகிகளின் கோழைத்தனம் பாய்வதற்கு கைது செய்யப்பட்ட போராளிகளின் படகின் கட்டளை அதிகாரியின் முன் தொலைத்தொடர்பை வைத்து யாரையாவது இங்கு அழை என கூறினார்கள். அப்போது, கட்டளை அதிகாரி தன்னுடன் விடுதலைக்காக வேண்டி உழைத்தவன் இந்த கோழைகளினால் மற்றைய தோழன்போல் சாகடிகக்ப்படுவதா? என சற்று காலநிலை மாற்றத்துடன் கூடிய அந்த கடற்காற்றுடன் கலந்து இவரின் குரலும் மறுதிசையில் ஒலித்தது. ஆயினும் சில பின்னணி சத்தங்களை வைத்து ஊகிப்பார்கள் என அவர் நினைத்தார். ஆனால் அங்கு இயற்கையும் அவர்களுக்கு இசைவாகவே இருந்தது. ஆதலால் காத்திருந்தவர்களால் ஊகிக்க முடியவில்லை. துரோகிகள் அவர்களை படகின் இயந்திரம் பழுதடைந்தது விட்ட ஓர் மாயத்தை தோற்றுவித்து கதைக்கக் வைத்தார்கள். நாம் அன்றைய காலநிலையில் கடமைகள் செய்யும் பிரதேசம் எமக்கு சாதகம் அற்ற பிரதேசம். ஆதலால் சற்று வேகமாகவும் துரிதமாகமும் முடிக்க வேண்டும் என்ற காரணத்தால் குறிப்பிட்ட இடத்திலிருந்து இவர்கள் கூறிய இடத்துக்கு செல்ல சற்று வேகம் கூடிய படகே தேவை ஆதலால் அப்போது கரும்புலிப் படகு மட்டுமே புறப்படுவதற்கு தயார் செய்தார்கள். கரும்புலிப் படகு கடலின் குறுகிய பரப்பில் எதிரியின் அவதானிப்பு இல்லை என்று உறுதிப்படுத்திவிட்டு படகின் வழமையான திசைக்கு கருவிமூலம் அறிந்து அங்கே விரைந்தார்கள் அங்கே……………. கரையில் எமது படகு இருப்பதை அறிந்து கரும்புலிப் படகு கரைநோக்கி தொலைத்தொடர்பில் அறிவித்த படி மெல்ல மெல்ல நகர்ந்து சென்றது. ஆயினும் படகின் அமைதி ஓர் சந்தேகத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியது. துரோகிகள் தங்கள் கைவரிசையைக் காட்ட தயாரானார்கள். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மறுகணம் ஓர் புத்தரின் (பற்றைக்குள்) மறைவில் இருந்து கரும்புலிப் படகை நோக்கி R.P.G ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தி கூவிவந்தது. உடனே லாபகமாக திருப்பி நிலையை உடனே உணர்ந்து வேகம் கூட்டி உயரப் பறந்தது கரும்புலிப் படகு. ஆயினும் அதிலிருந்தவர்கள் விழிகள் ஓர் திசையில் எம் வீரர்கள் கைது செய்யப்பட்டும், ஓர் உடல் சாய்த்தும் கிடப்பதை அவதானித்து நிலைமையை அறிவித்துக் கொண்டு சென்றது. அப்போது கரும்புலிப் படகில் இருந்து அறிவிக்கப்பட்டது…………. நாங்க…………… நாங்கள் உயர நல்லா இழுக்கிறோம்………………. இழுக்கிறோம் ஆக்களை நீங்க…………………. வந்தால் சாத்தலாம்……. உடனே துரோகிகளின் சில படகுகள் எங்கிருந்தோ வந்து அவர்களை தொடர்ந்தது அப்போது கரும்புலிப் படகு உயரப்பறந்ததின் காரணம் அவர்களை உயர இழுத்து செல்ல மறு முனையின் இருந்து எம்மவர்களின் படகு வந்து ஓர் களம் விளையாடும் திட்டத்தில்……….. இல்லை…………… இல்லை………….. இப்ப வேண்டாம்……………… நிலைமை சரியில்லை………………. சற்று விளங்கும் தானே நிலைமை……………… சண்டைக்கு ஓர் அனுமதியும், ஓர் களத்தித் திறக்கவும் உத்தரவை வேண்டிக் காத்திருந்தார்கள். ஆனால் அது எமக்கு சாதகமற்ற சூழ்நிலையும் – இடமும் அந்நேரம் என்னதான் செய்வது……………………….? அவர்களின் இறுதித் தருணத்தில் கூட பதில் கூற முடியாதவர்களாய் நாங்கள் அன்று இருந்தோம். பின்பு கரும்புலிப்படகு கடலில் திசைமாற்றி சென்று அவர்களின் கண்ணில் இருந்து மறைந்து சற்று மணித்தியாலம் கழித்தே தளம் வந்து சேர்ந்தது. ஆத்திரமும் – குரோதமும் நிறைந்து அவர்களை இப்படியாக அடித்தே அந்த அலைகடல் மணலில் சாய்த்தனர் துரோகிகள். அதில் இதுநாள் வரையில் அருகாய் இருந்த எங்கள் கடற்புலி லெப். கேணல் குகன் (குன்றலியன்), கடற்கரும்புலி கப்டன் இயல் வளவன், கடற்கரும்புலி கப்டன் இசையரசன் ஆகிய விலைமதிப்பற்ற செல்வங்கள் ஆயிரம் கனவுகளுடன் பூவின் வாழ்வுபோல் உதிர்ந்து போனார்கள். இன்னலுறும் ஈழத்தமிழர்களின் வாழ்விற்காய் நீ வரித்துக்கொண்ட கருமை வரியின் வாழ்வை தினம் தினம் காதலித்த தேசியத் தலைவனை, தமிழீழ மண்ணை – மக்களை, சக தோழ தோழியரை சோகத்தில் தகிக்கவிட்டு எட்டாத உயரத்துக்கு சென்றாய். வெடி சுமந்து பகை களம் அழைக்கும் ஆசைக் கனவை மலர வைப்பதற்காய் வெண்மணல் மேனியை – உன் உதிரத்தால் சிவப்பாக்கி சென்ற துரோகங்கள் இன்று நீ நேசித்த மண்ணில் இது நீள்வதில்லை என் ஆருயிர் தோழனே!!! தினமும் உதயமாகும் அந்த செங்கதிர் உருவத்தில் எங்களின் கடலன்னை மடியிலிருந்து பிரசவமாகும் பல ஆயிரம் மாவீரர்களின் ஈகங்களும் – தியாகங்களுடன் நீயும் கலந்திருந்து என்றும் எம்மை வழினடத்துவாய் தோழனே!!!! அலைகடல் மணலில் நீ – நடந்த ஈரம் காயவில்லை வாழ்வில் நீ காட்டிய – நட்பின் உருவும் இன்னும் மாறவில்லை. உன் இழப்பின் வலியோ – நெஞ்சில் கனமாக இன்றும் வலிக்கிறது உன்னை அழித்த துரோகத்தை – இன்னும் நாம் அழிக்கவும் இல்லை. உன் போன்ற வீரனைப் பெற்ற அந்த வீரத்தாயவள் நிச்சயம் அறிந்திருப்பாள்; உன் மரணத்தை என்னதான் செய்வோம் ஓர் முள்ளுக் உத்தினால் துவண்டு துடித்துப்போகும் தாய் மற்றும் உறவுகள் என்பாயே என்னை அடித்து அடித்து குற்றுயிராக போட்டார்கள் துரோகிகள் என்றால் என்ன பதைபதைக்கும் அவள் உள்ளம்? ஐயோ! எம்மால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை; உன் தாய்க்கு ஆறுதல் கூறும் நிலை எமக்கு இல்லை. தோழர்கள் நாம் என்ன செய்வோம். எம்மை மறுகணம் மறுதிசையில் கடமை அழைக்கிறது சென்றோம். ஈரக்காற்றின் அலை அவனது மேனி தடவி உன் நினைவுகளை மீட்டிச் செல்ல நீ விட்ட பணி முடிப்பதற்கு விரைகின்றோம். ஆயினும், தமிழீழ தேசத்திலும், தேசம் தாண்டியும் நீளும் கடற்கரும்புலிகள் காவியத்தில் கடற்கரும்புலி மேஜர் புகழரசன் கடற்கரும்புலிகள் அணிக்குள் கடற்கரும்புலி கப்டன் இயல்வலவனின் காவியமும் சற்று வித்தியாசமானதே. பல உயிராயுதங்களின் உள்ளடக்கத்தில் இவன் நினைவுமாக கடற்கரும்புலிகள் பாகம் 11ம் நீள்கின்றது. வெற்றிச் செய்தியுடன் வர காத்திருந்த தருணம் காலம் கொடுத்த படிப்பினை ஏற்று நீங்கள் நாளும் நேசித்த அந்த சூரிய தேவனின் வரவை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்,. நிச்சயம் உங்கள் கனவை நனவாக்கி ஈழத்தை மீட்க கடலிலே காவியம் தொடர்வோம்! நினைவுப்பகிர்வு:- அ.ம.இசைவழுதி. தேசக்காற்று
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
கருணா குழுவினர் நடாத்திய மற்றொரு வஞ்சகம் 24.08.2006 அன்று மட்டக்களப்பில் அ. ம. இசைவழுதி எழுதிய கடற்கரும்புலி கப்டன் இயல்வாணனின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து... "சர்வதேசக் கடற்பரப்பில் இருந்து விடுமுறையில் சென்று மீண்டும் ஆழக்கடலில் ஆழத்தை அளவிடத் தயாராக மீண்டும் கடற்புலி லெப். கேணல் ஸ்ரிபன் தலைமையிலான போராளிகள் தயார் நிலையில் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். அப்போது நேரம் நெருங்கியது தமக்குரியவற்றை செய்தார்கள். அங்கே தமது விநியோகத்துக்கான ஆரம்ப நடவடிக்கைகளுக்கு செல்வதற்காக ஒவ்வொரு தயார் படுத்தலை ஒவ்வோர் முனையிலும் இருந்து செயற்படுத்தத் தொடங்கினார்கள். ஆனால், அன்று இராணுவ நெருக்கடிகள், துரோகத்தின் கொலை வெறிபிடித்த பார்வைக்கும் மத்தியில் ஓரளவு சீராக தம் போரியல் திரவியங்களை (வழங்களை) தென் தமிழீழத்தின் ஓர் பகுதியில் தரவிறக்கம் செய்துவிட்டு கடற்புலி லெப். கேணல் குகன் (குன்றலினியன்) தலைமையில், கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன், கடற்கரும்புலி கப்டன் இசையரசன் ஆகிய விநியோகப்பிரிவுப் போராளிகள் வன்னி நோக்கி தமக்கு உரிய இடத்திற்கு செல்ல தொலைத்தொடர்பின் மூலம் வருகையை அறிவித்து விட்டு புறப்படத் தயாரானார்கள். ஏனைய விடை கொடுத்த விழிகள் கடலைப் பார்ப்பதும் வருவதுமாய் இவர்களின் பயணத்தின் திசையைப் பார்த்தவண்ணம் இருந்தது அந்த சீரற்ற காலத்தில் பல ஏக்கங்களுடன்…… ஆனால், அங்கே குறிப்பிட்ட மணித்தியாலத்தில் சேரும் இடத்தைத் தாண்டவுமில்லை, நேரம் வழமையை விட அதிகரித்து சென்றது தொடர்பை எதிர்பார்த்த மனங்கள் பலதை எண்ணி ஏங்கித் தவித்த வண்ணம் இருந்தன. அவர்களின் பயணத்தின் போது……………………… தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கையை – நகர்வுகளை 2004ம் ஆண்டிற்கு பின்னர் சிறிலங்கா அரசுகளுடன் இணைந்து துரோக சக்திகளும் (துரோகி கருணா குழு) முடக்கி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. பல முடக்க வேலைகளையும் – மூட்டுகட்டைகளையும் தரைவழியாக கடமைகளை மேற்கொண்ட போராளிகளுக்கு செய்து வந்த துரோக சக்திகள் அன்று கடற்புலிகளின் வரலாற்றில் மாபெரும் துரோகத்தை விதைத்து பல விழுதின் வேர்களை அந்த கரை மணலில் சாய்த்தார்கள். அப்போது அந்த போராளிகளின் படகை துரோகிகள் (துரோகி கருணா குழு) சூழ்ந்து, போராளிகளை நிராயுத பாணிகளாக கைது செய்து கரையில் கொண்டு சென்றார்கள். அதிலும் சில பழகிய முகங்கள் அங்கு துரோக சக்தியாக மனம் தாங்குமா? ஆயினும் அனைத்தையும் கடந்து அவர்கள் துரோகிகள் எம் விடுதலைக்கு எதிராகவே அவர்கள் கரங்களில் ஆயுதங்கள் ஆயினும் போராளிகள் அடிபணிவதாக இல்லை. அப்போது மறு திசையில் இவர்களின் வரவை அவதானித்தும் காத்திருந்த குரல்கள் தொடர்பலை இவர்களின் தொலைபேசியில் கூவிய வண்ணம் இருந்தது. இங்கே துரோகிகள் புடைசூழ போராளிகளின் கைகள், கால்கள் கட்டபப்ட்டு விசாரணை ஆரம்பமாகியது. எங்கிருந்து வருகின்றீர்கள்? எங்கே செல்கின்றீர்கள்? எங்கே எத்தனைபேர் என புதிய திட்டங்கள் மாற்றங்கள் விபரங்கள் போன்றவற்றை அறியும் முனைப்புடன் தொடுத்தார்கள் விசாரணையை…. ஆயினும் போராளிகளின் வாய்கள் மௌனம் காத்தன. பொறுமையிழந்த துரோகிகள் கோழைத்தனமான (சித்திரவதை) தாக்குதலை தொடுத்தார்கள். (அதை இங்கே எழுத்துருவில் வடிக்கும்போது என் கண்களே பனிக்கின்றது) குருதி தொய்ந்து வலிகள் தொடர்ந்தாலும்…., முன்னைய காலத்தில் ஒன்றாக ஓர் அணியில் இருந்து ஓர் தட்டில் உணவுண்டு பழகிய நட்புகள் இளைத்த துரோகம் இன்னும் வேதனையை கூட்டியது அப்போது………… தங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை மற்றவர்கள் உயிர் காக்கப்பட வேண்டும் அவர்கள் மூலம் தொடர்ந்து தங்களின் பணி தொடரவேண்டும் என்ற மனநிலையில் அங்கும் அவர்கள் போராட்ட மரபைக் கடைப்பிடித்து மெல்ல மெல்ல உயிரும் விட்டு பிரியும் நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது……….. ஒரு தட்டில் உண்டு மகிழ்ந்த சக தோழர்கள் – சகோதரன் சாவதைப் பார்ப்பது எவ்வளவு கொடுமை அதுவே அங்கே…………. துரோகியால் கட்டையால் அடித்து அடித்தே ஓர் வீரனை சாகடித்தனர் அவனது உயிரும் அந்த அலைவந்து தாலாட்டும் கரை மண்ணில் கடலைப் பார்த்தவண்ணம் உயிர் பிரிந்து அவன் சாய்த்து சருகாகி விழுந்து போனான். எந்த ஒரு வைர நெஞ்சமும் கலங்கும் படி அங்கே நடந்த சம்பவம் ஏனையவன் மேல் துரோகிகளின் கோழைத்தனம் பாய்வதற்கு கைது செய்யப்பட்ட போராளிகளின் படகின் கட்டளை அதிகாரியின் முன் தொலைத்தொடர்பை வைத்து யாரையாவது இங்கு அழை என கூறினார்கள். அப்போது, கட்டளை அதிகாரி தன்னுடன் விடுதலைக்காக வேண்டி உழைத்தவன் இந்த கோழைகளினால் மற்றைய தோழன்போல் சாகடிகக்ப்படுவதா? என சற்று காலநிலை மாற்றத்துடன் கூடிய அந்த கடற்காற்றுடன் கலந்து இவரின் குரலும் மறுதிசையில் ஒலித்தது. ஆயினும் சில பின்னணி சத்தங்களை வைத்து ஊகிப்பார்கள் என அவர் நினைத்தார். ஆனால் அங்கு இயற்கையும் அவர்களுக்கு இசைவாகவே இருந்தது. ஆதலால் காத்திருந்தவர்களால் ஊகிக்க முடியவில்லை. துரோகிகள் அவர்களை படகின் இயந்திரம் பழுதடைந்தது விட்ட ஓர் மாயத்தை தோற்றுவித்து கதைக்கக் வைத்தார்கள். நாம் அன்றைய காலநிலையில் கடமைகள் செய்யும் பிரதேசம் எமக்கு சாதகம் அற்ற பிரதேசம். ஆதலால் சற்று வேகமாகவும் துரிதமாகமும் முடிக்க வேண்டும் என்ற காரணத்தால் குறிப்பிட்ட இடத்திலிருந்து இவர்கள் கூறிய இடத்துக்கு செல்ல சற்று வேகம் கூடிய படகே தேவை ஆதலால் அப்போது கரும்புலிப் படகு மட்டுமே புறப்படுவதற்கு தயார் செய்தார்கள். கரும்புலிப் படகு கடலின் குறுகிய பரப்பில் எதிரியின் அவதானிப்பு இல்லை என்று உறுதிப்படுத்திவிட்டு படகின் வழமையான திசைக்கு கருவிமூலம் அறிந்து அங்கே விரைந்தார்கள் அங்கே……………. கரையில் எமது படகு இருப்பதை அறிந்து கரும்புலிப் படகு கரைநோக்கி தொலைத்தொடர்பில் அறிவித்த படி மெல்ல மெல்ல நகர்ந்து சென்றது. ஆயினும் படகின் அமைதி ஓர் சந்தேகத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியது. துரோகிகள் தங்கள் கைவரிசையைக் காட்ட தயாரானார்கள். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மறுகணம் ஓர் புத்தரின் (பற்றைக்குள்) மறைவில் இருந்து கரும்புலிப் படகை நோக்கி R.P.G ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தி கூவிவந்தது. உடனே லாபகமாக திருப்பி நிலையை உடனே உணர்ந்து வேகம் கூட்டி உயரப் பறந்தது கரும்புலிப் படகு. ஆயினும் அதிலிருந்தவர்கள் விழிகள் ஓர் திசையில் எம் வீரர்கள் கைது செய்யப்பட்டும், ஓர் உடல் சாய்த்தும் கிடப்பதை அவதானித்து நிலைமையை அறிவித்துக் கொண்டு சென்றது. அப்போது கரும்புலிப் படகில் இருந்து அறிவிக்கப்பட்டது…………. நாங்க…………… நாங்கள் உயர நல்லா இழுக்கிறோம்………………. இழுக்கிறோம் ஆக்களை நீங்க…………………. வந்தால் சாத்தலாம்……. உடனே துரோகிகளின் சில படகுகள் எங்கிருந்தோ வந்து அவர்களை தொடர்ந்தது அப்போது கரும்புலிப் படகு உயரப்பறந்ததின் காரணம் அவர்களை உயர இழுத்து செல்ல மறு முனையின் இருந்து எம்மவர்களின் படகு வந்து ஓர் களம் விளையாடும் திட்டத்தில்……….. இல்லை…………… இல்லை………….. இப்ப வேண்டாம்……………… நிலைமை சரியில்லை………………. சற்று விளங்கும் தானே நிலைமை……………… சண்டைக்கு ஓர் அனுமதியும், ஓர் களத்தித் திறக்கவும் உத்தரவை வேண்டிக் காத்திருந்தார்கள். ஆனால் அது எமக்கு சாதகமற்ற சூழ்நிலையும் – இடமும் அந்நேரம் என்னதான் செய்வது……………………….? அவர்களின் இறுதித் தருணத்தில் கூட பதில் கூற முடியாதவர்களாய் நாங்கள் அன்று இருந்தோம். பின்பு கரும்புலிப்படகு கடலில் திசைமாற்றி சென்று அவர்களின் கண்ணில் இருந்து மறைந்து சற்று மணித்தியாலம் கழித்தே தளம் வந்து சேர்ந்தது. ஆத்திரமும் – குரோதமும் நிறைந்து அவர்களை இப்படியாக அடித்தே அந்த அலைகடல் மணலில் சாய்த்தனர் துரோகிகள். அதில் இதுநாள் வரையில் அருகாய் இருந்த எங்கள் கடற்புலி லெப். கேணல் குகன் (குன்றலியன்), கடற்கரும்புலி கப்டன் இயல் வளவன், கடற்கரும்புலி கப்டன் இசையரசன் ஆகிய விலைமதிப்பற்ற செல்வங்கள் ஆயிரம் கனவுகளுடன் பூவின் வாழ்வுபோல் உதிர்ந்து போனார்கள்."
-
kilinochchi.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
126845969_4341107639252117_2564203167860634828_n.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
ltte soldiers
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
தேசப்பற்றுடன் மனிதநேயம் மிகுந்த லெப். சலீம்
விந்தன் அண்ணாவுடனான அறிமுகம் கிடைத்தது எனது ஒன்றுவிட்ட அண்ணன்கள் மூலம்தான். அது 1983களின் பிற்பகுதி. ஆடிக்கலவரம் ஓரளவு ஓய்ந்திருந்தாலும் தமிழ் இளைஞர்களிடம் அது விட்டுச்சென்ற தாக்கம் அதிகம். இளைஞர்கள் எல்லோரும் ஏதேனுமொரு அமைப்புடன் தொடர்புகொண்டு தீவிரமாக இயங்கியகாலமது. அவ்வாறே விந்தன் அண்ணாவும் புலிகள் அமைப்புடன் இணைந்து தீவிரமாக இயங்கத்தொடங்கியிருந்தார். அண்ணன்களைப்போலவே அவரும் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் படித்துக்கொண்டு பகுதிநேரமாக வல்லையிலும் வெவ்வேறு இடங்களிலும் இரவில் சென்றிக்கு செல்வார். அக்காலத்தில் சென்றிக்கு செல்வோர் கொழித்தி எறியும் கிரனைட்டையே வைத்திருப்பார்கள். குமுழமுனையில் வாழ்ந்துவந்த மாமாவின் வீட்டிற்கு மட்டக்களப்பு சிறையுடைத்து வெளியேறிய புளொட் உமாமகேஸ்வரன் போன்றோர் மட்டக்களப்பிலிருந்து யாழ் வரும் வழியில் குமுழமுனையில் மாமா வீட்டில் தங்கிச்சென்றதிலிருந்து மாமாவும் குடும்பத்தினரும் புளொட்டின் தீவிர ஆதரவாளர்கள். மாமாவின் இளைய மகளின் பெயர் உமாபிரபா என்னுமளவில் மாமா உமா அவர்களதும் பிரபா அவர்களதும் தீவிர ஆதரவாளர். அவ்வகையில் எனது ஒன்றுவிட்ட அண்ணன்கள் புளொட்டின் ஆதரவாளர்களாக இருந்ததில் ஆச்சரியமில்லை. புளொட்டின் ஐயர் எங்கள் ஊருக்கு வந்து கூட்டங்கள் வைக்குமளவிற்கு அவர்கள் புளொட்டுடன் தீவிரமாக இயங்கினார்கள். புலிகளுடன் தீவிரமாக விந்தன் அண்ணா இயங்கியபோதிலும் அவர் தனது பாடசாலை தோழர்களான எனது அண்ணன்களுடன் அன்னியோன்னியமாகவே பழகினார். விக்னேஸ்வராவிலிருந்து கரணவாய் சில்லியோடைப் பகுதியில் இருந்த தனது வீட்டிற்கு செல்லும் வழியில் அண்ணன்கள் வீட்டிற்கு வந்து அரசியல் பேசுவது அவர்வழமை. இவ்வளவிற்கும் எனது அண்ணன்களுக்கும் விந்தன் அண்ணாவிற்கும் வயசு என்னவோ 15-16 வயதுதான். விந்தன் அண்ணனது இயற்பெயர் அரவிந்தன். அவரது அப்பா யாழ்ப்பாணம் முழுவதும் மிகவும் பெயர்பெற்ற இரசாயனவியல் (Chemistry) ஆசிரியரான சண்ணர் என அறியப்பட்ட சண்முகசுந்தரம் மாஸ்ரர். அவர் இயக்கத்தில் சேர்ந்ததும் அவரது இயக்கப்பெயர் சலீம். சிங்களம் வடமராட்சிப்பகுதி மீது லிபரேசன் ஒப்பரேசன் (விடுதலை நடவடிக்கை) எனும் பெயரில் அந்நேர அதன் நம்பிக்கை நட்சத்திரம் பிரிகேடியர் டென்சில் கொப்பேகடுவ தலைமையில் ஒரு விரைவு தரையிறக்கத்தை வடமராட்சியின் எல்லை பகுதிகளான தொண்டைமனாறு கடல்நீரேரியை அண்டிய கரவெட்டி யாக்கரு ஆயத்து சந்தி முள்ளி சந்தி போன்ற இடங்களில் ஹெலிமூலம் தரையிறக்கஞ்செய்த அதே நேரத்தில் தொண்டைமானாறு சந்நதி கோவில் பகுதியில் தங்கியிருந்த இராணுவம் வேகமான நகர்வைச்செய்து வல்லைச்சந்தி மற்றும் மண்டான் பகுதிக்கு நகர்ந்தனர். இதேபோன்று கடற்கரையூடு நகர்ந்து வல்வெட்டித்துறை ஊரிக்காட்டில் இருந்த சிங்கள இராணுவத்துடனும் அதன் பின்னர் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி சுற்றுவட்டாரத்தில் இருந்த சிங்கள முகாமுடன் இணைந்ததன் மூலம் வடமராட்சிமீதான முற்றுகை முழுமை பெற்றது. விந்தன் அண்ணனுக்கு சிங்களம் தொண்டமனாற்றிலிருந்து முன்னேறியதிலிருந்து வல்லைவெளியில் சிங்களத்திற்கு தொடர்த தொல்லையைக் கொடுத்து முற்றுகையை சிதைப்பதே கொடுக்கப்பட்டவேலை. நெல்லியடி மத்தியகல்லூரியில் முகாமிட்டிருந்த சிங்களம்மீது கப்டன் மில்லர் அவர்கள் வரலாற்றுத் தாக்குதலான தற்கொடை தாக்குதலில் விந்தன் அண்ணாவினது பங்கும் குறிப்பிடத்தக்கது. நெல்லியடி முகாம் தாக்குதலின் பிற்பாடான ஒரு நாளில் சிங்களத்துடன் எதிர்பாராதவிதமான தாக்குலில் வல்லைப் பகுதியில் 12/07/1987 அன்று லெப் சலீம் அவர்கள் வீரச்சாவடைந்தார். ஒரு இனிமையான தேசப்பற்றுடன் மனிதநேயம் மிகுந்த மகனை தமிழ்தேசம் அன்று இழந்திருந்தது. விந்தன் அண்ணனுக்கு வீரவணக்கம். https://www.facebook.com/photo.php?fbid=2391995034163397&set=pb.100000587714856.-2207520000.&type=3
-
வெளியகப் புலனாய்வு நடவடிக்கைகளின் வெளித்தெரியாச் சிற்பி கேணல் வாகீசன் (சீலன்/துரோணர்)
சீலன்- விசுவாசத்தின் உருவம் துரோணர்- சாவுக்குள் நின்று சதுராடும் சாமர்த்தியம் போராட்ட களத்தில் எல்லோரையும் செதுக்கி செம்மைப்படுத்துவார்கள் ஆயினும் அரிதாய் ஒரு சிலரே அதிசிறந்த சிற்பிகளின் உளிகளால் செதுக்கப்படும் பெரும் பாக்கியத்தை பெறுவார்கள். சிலருக்கு இருக்கும் இடம் தேடி வாய்ப்புகள் வரலாம், ஆயினும் இவன் அந்த வாய்ப்புக்காய் முழுமையாய் அர்ப்பணித்த நாள் தொடக்கம் தன்னை அதற்காய் ஒப்புக்கொடுத்தான்,தன்னை தானே செதுக்கிக்கொண்டான், ஒரு சில களங்களில் தனி ஒருவனாய் நின்றான், தளபதிகளுக்கு தனித்தே தெரிந்தான். கிண்ணி அண்ணாவும், கஸ்ரோ அண்ணாவும் ஒரே களத்தில் கூட்டாய் தோள்தட்டிக்கொடுத்த பாக்கியம் பெற்ற சாதாரண முன்னரங்க போராளி. கோபம் வந்தால் முகம் சிவக்கும் வெள்ளைத்தோல் புலி தன்னை கரியபுலி கரும்புலியாய் உருமாற்றிய காலத்திடையே இவன் நின்ற களங்கள் தளங்கள் இவன் வாழ்க்கைக் குறிப்பின் முதல் பாகம். கரியபுலி கரும்புலியாய் உருமாறி துரோணராய் முழுஅவதாரம் தரித்தபின்னான இரண்டாம் பாகம் துரோணாச்சாரியாரின் வில் வித்தையை போன்றது. வேகம், விவேகம், தந்திரம், சாமர்த்தியம், சாணக்கியம் நிறைந்தது. தை 1 "எல்லாம் வெல்லலாம்" என்றவனை கரிகாலனிடம் இருந்து காலன் வென்ற கதை ...... ஏமாற்றம்...வலிநிறைந்தது!.. காலம் கடந்தே சில விதைகள் விருட்சமாய் முளைக்கும். -தேவராசா ஞானராஜ்
-
வெளியகப் புலனாய்வு நடவடிக்கைகளின் வெளித்தெரியாச் சிற்பி கேணல் வாகீசன் (சீலன்/துரோணர்)
கேணல் வாகீசன் (சீலன்/துரோணர்) தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியகப் புலனாய் நடவடிக்கையின் “தாயக விடுதலைக்காய் தன்னையே மறைத்து எதிரியின் சாம்ராஜ்யத்தில் சாதனைகள் பல படைத்து விடுதலை அமைப்பின் நகர்வுக்கு வித்திட்ட போராளி” புலனாய்வுக் கட்டமைப்பே ஒரு இராணுவ அமைப்பை சீராக வழிநடத்த ஊன்றுகோலான ஒன்றாகும். போராட்டத்தில் இணைந்த ஆரம்பத்திலேயே புலனாய்வு சம்பந்தமான துறையில் இணைந்து விடுதலைப் பணியாற்றிய தளபதி துரோணர். இவரின் பணியில் விடுதலை தீ வீச்சாக தென்பட்டது. காலம் உருண்டோட பொறுப்பாளர்களின் அதி நம்பிக்கைக்குரியவனாக திகழ்ந்தான். விடுதலையை வேண்டி போராடும் ஒரு இராணுவ அமைப்பு கட்டுக் கோப்பாக சீர்குலைவின்றி வளர புலனாய்வுத் துறையே முக்கியம் என்பதை உணர்ந்து செயலாற்றியவர். புலனாய்வுத்துறையின் முக்கிய தளபதிகளின் வீரச்சாவின் பின் அந்த வெற்றிடங்களை இவரே பொறுப்பெடுத்து செயலாற்றினார். இவரின் செயற்திறன் தலைமையின் கவனத்தை ஈர்த்தது. பல செயற்பாடுகளில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரின் பாராட்டைப் பெற்றவர். அமைப்பின் தலைமை இவரின் புலனாய்வு ஆளுமையை உணர்ந்து இவருக்கு சிறந்த ஒரு புலனாய்வு அணியை வழிநடத்தும் பொறுப்பைக் கையளித்தது. தனது பொறுப்பை சரிவரச் செய்து தன் விடுதலைப் பணியில் சிறந்து விளங்கினார். கடமை தவறும் போராளிகளை சரியாகத் தண்டித்து பணியின் முக்கியத்துவத்தை உணர்த்தி சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தார். போராளிகளோடு மிகவும் அன்பாகப் பழகுவார். பாராபட்சம் பாராது தனக்கு கீழ் இருக்கும் போராளிகளை வழிநடத்திய சிறந்த தளபதி. இவரின் விடுதலைப் பணியான புலனாய்வுத்துறையின் அவசியம் எவ்வளவோ அதே நேரம் ஆபத்தும் அதிகம். எதிரியின் கட்டுப்பாட்டு முக்கிய நகரங்களில் நிகழ்ந்த நடவடிக்கையின் சாதனையாளர். மக்களோடு மக்களாய் அன்பாகப் பழகி அவர்களை பயன்படுத்தியே பல சரித்திரங்கள் படைத்தவர். தன் போராளிகளை சந்திக்கும் நேரங்களில் தலைவரின் கரத்தை நாங்கள் தான் பலப்படுத்தோணும். அந்த ஆள் என்ன செய்யிறது, எத்தனை என்று கவனிக்கிறது. அவர் என்ன எதிர்பார்க்கிறாரோ அதை எங்கட உயிர பணயம் வைத்தாவது செய்து குடுப்பம். என்று தான் அடிக்கடி கதைப்பாராம். ஆடம்பரத்தை முற்றாக புறந்தள்ளி வாழ்ந்த தளபதி. தமிழீழத்தின் வெளிப் புலனாய்வு நடவடிக்கைகளின் பல வெற்றிகளின் வேராகவும் செயற்பட்டவர். இவரின் சாதனைகள் பற்றி பலருக்கு தெரியாது. இருந்தாலும், அந்த சாதனை வீரனைப் பற்றி குறிப்பிட்டவர்களுக்கு நன்கு தெரியும். இவரின் விடுதலைப் பணியின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்ட ஒரு சம்பவம் நினைவில் குறிப்பிடுகிறேன் ஒரு இறுக்கமான காலகட்டத்தில் இலங்கையின் தலைநகரில் ஒரு நடவடிக்கைக்கான புலனாய்வு அணி நகர்த்தப்பட்டது. எந்த நேரமும் ஆபத்தும் அதிஉயர் பாதுகாப்புக்களை உடைத்து இவரின் திறமையால் அந்த அணி குறிப்பிட்ட இடத்தை அடைந்தது. எதிர்பாராத விதமாக அந்த அணியின் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டார். உடனே அந்த நடவடிக்கைக்கான காலத்தை நீடித்து அந்த அணிக்கு வரப்போகும் ஆபத்தான சூழலை உணர்ந்து அணியை தளத்தை நோக்கி நகர்த்தி பின்பு குறிப்பிட்ட காலவோட்டத்தின் பின் அந்த நடவடிக்கை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. நிலமைகளை உணர்ந்து கண்ணும் கருத்துமாக செயற்பட்டவர். இவரின் சாதனைகளை எளிதில் விபரித்து சரித்திரம் எழுதிவிட முடியாது. எதிரி அவிழ்க்க முடியாத பல விசித்திரமான வேட்டைக்காரன் இவன். தமிழீழத் தேசியத்தலைவர் மனதிலும், மக்களிடத்திலும், போராளிகளிடத்திலும் தனி இடத்தை பிடித்த ஓர் தளபதி. மாற்று இன மக்கள் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் சாதனைகளையும், வீரத்தையும், தியாகத்தையும் அறிந்தவர்களால் நிச்சியமாக இவரை ஒரு சாதரண வீரனாகப் பார்க்க முடியாது. இவரின் செயல்கள் ஒவ்வொன்றும் வியப்பையே அளிக்கும். கடமை நேரத்தில் மிக மிக கண்டிப்புடன் இருப்பார். கடமை தவறும் போராளிகளோடு கோபம் கொண்டு சில மணி நேரங்களின் பின் அவர்களை அழைத்து ஆற்றுப்படுத்துவார்.இவரின் வீரச்சாவு உயிரை எம்மிடமிருந்து பிரித்ததே தவிர விடுதலை உணர்வை வீச்சாக்கியுள்ளது. விடுதலைப் போராட்டப் பாதையில் இவரின் சாதனைகள் வெளிச் சொல்ல முடியாத பொக்கிஷங்கள். பெயர் புகழை மறந்து எந்த நேரமும் பேராபத்தை எதிர்கொள்ள தாயாராக செயற்பட்ட உன்னத வீரன். எதிரிகள் விடைகண்டு பிடிக்க முடியாத பல கேள்விகளின் உரிமையாளன். 13.02.2009 அன்று சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சுக்கு இலக்காகி தமிழ்த்தாய் மடியில் வீரகாவியமானார். தாயக விடுதலையை கனவாய் நெஞ்சமதில் சுமந்து தமிழ் மக்களின் மண்,உரிமைகளை மீட்டெடுக்கும் எம் புனிதப் போரிலே கேணல் துரோணரோடு வீரகாவியமான ஏனைய அனைத்து மாவீரர்களையும் இந்நாளில் நினைவுகூர்ந்து பூசித்து வணங்கி இவர்களின் உயரிய உன்னத இலட்சியத்தை மனதில் நிறுத்தி விடுதலை வேண்டி வீறுநடை போடுவோமாக… ---------------- மாவீரர்களின் வீரவரலாறுகளோடு “ராஜ் ஈழம்”
-
கடற்புலிகளின் நரேஸ் படையணியின் கட்டளையாளர் லெப். கேணல் ஆதிமான் (ஒஸ்கார்)
1991ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்த ஒஸ்காா் மணியந்தோட்டத்தில் லெப் கேணல் சாரா அவர்களின் தலைமையில் பயிற்சிபெற்றுக்கொண்டிருந்த வேளையில் (இவர் மன்னாா் மாவட்டத் தளபதியான லெப் கேணல் விக்ரர் அண்ணையின் தமையனது மகனென அறிந்த சரா அண்ணை விக்ரர் அண்ணையின் சங்கேதப் பெயரானா ஒஸ்காரை இவனுக்கு வைத்தார்.அத்தோடு விக்ரர் அண்ணையைப் பற்றி சில அறிவுரைகளையும் வழங்கினாா்.) 'ஆகாயக் கடல் வெளிச்' சமருக்கான பின்களப்பணிகளுக்கான சென்றாா். ஆகாய கடல் வெளி சமருக்குப் பின் கடற்புறாவாக இருந்த அணி கடற்புலிகளாக உருவாக்கப்பட்டபோது அங்கு சென்று ஐப்பான் 01 இல் பயிற்சிபெற்று கடற்புலியானான். 29.08.1993 ம் ஆண்டு பருத்தித்தித்துறைக் கடற்பரப்பில் கரும்புலித்தாக்குதலில் அழிக்கப்பட்ட டோறா பீரங்கிப் படகில் கைப்பற்றப்பட்ட 20மிமீ இன் துணைச் சூட்டாளாராகச் செயற்பட்டு அதன் பின் சூட்டாளாராகச் திறமையாகச் செயற்பட்டதால் கடற்புலிகளுக்காக முதன் முறையாக வந்த கனரக ஆயுதத்தின் பிரதான சூட்டாளராகவும் அதன் பொறுப்பாளராகவும் செயற்பட்டான். வீரச்சாவடையும் தருணத்திலும்கூட அவனது கை கனரக ஆயுதத்திலேயே இருந்தது. கிளாலி தொடக்கம் திருகோணமலை வரை வீரச்சாவடையும் வரை ஐம்பத்திரண்டு சமர்களில் பங்குபற்றி தனது ஆற்றலை வெளிப்படுத்தினான். அது மட்டமல்லாது தமிழீழத்திற்க்கு பலம் சோ்க்கும் நடவடிக்கையிலும் முன்னின்று செயற்பட்டான். பொறுப்பாளராக படகின் கட்டளை அதிகாாியாக பலம் சோ்க்கும் அணிகளின் பொறுப்பாளாராக லெப் கேணல் நரேஸ் படையணியின் தளபதியாக என பலவேறு கடமைகளை பொறுப்பெடுத்து போராளிகளின் திறமைகளை அறிந்து அதற்கேற்றவாறு வளர்த்தெடுத்தான். 12.01.1999 அன்று திருகோணமலையில் கொலரா நோயின் தாக்கத்தால் இருந்த தென்தமிழீழப் போராளிகளை வன்னிக்கு எடுக்கும் நடவடிக்கையினை விநியோக அணி செய்து கொண்டிருக்க அதற்க்கு பாதுகாப்புப் வழங்கிக்கொண்டிருக்கும் வேளையில் இடம்பெற்ற இலங்கைகடற்படையினருடனான கடும் சமரில் வீரச்சாவடைகிறான். 1999ம் ஆண்டு பிற்பகுதியில் இவனது பெயரைத் தாங்கிய கடற்சண்டைப்படகு வடிவமைக்கப்பட்டு கட்டளைப்படகாக செயற்பட்டதுடன் இவனால் வளர்த்தெடுக்கப்பட்ட போராளிகள் ஆயுதச்சூடுனராகவும் கட்டளை அதிகாரிகளாகவும் அப்படகில் செயற்பட்டனர். மூலம்: http://irruppu.com/2021/01/11/லெப்-கேணல்-ஆதிமான்-ஒஸ்கா/ எழுத்துருவாக்கம் - சு.குணா.
-
சொன்ன மாதிரி டோறாவை நிற்பாட்டிய லெப். கேணல் பிரசாந்தன்
http://www.errimalai.com/wp-content/uploads/2022/05/லெப்.கேணல்-பிரசாந்தன்-1024x683.jpg 1992 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்துகொண்ட பிரசாந் கடற்புலிகளின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்து அதன் பின் கனரக ஆயுதப் பயிற்சியையும் பெற்று வெளியேறிய காலப்பகுதியில் கடற்புலிகளின் விசேட தரைத்தாக்குதலனி ஒன்று மாவீரான லெப் கேணல் டேவிட்/ முகுந்தன் அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்டபோது அவ்வணிக்குள் உள்வாங்கப்பட்ட பிரசாந் . அங்கு தனது திறமையான செயற்பாட்டால் போராளிகள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றான். இப் படையணி ஒரு பெரும் தாக்குதல் ஒன்றிற்கான பயிற்சிக்காக மற்ற தரைத்தாக்குதலணிகளுடன் இணைந்து அப்பயிற்சிகளில் பங்குபற்றியது.பயிற்சிகள் முடிவடைந்தவுடன் .இவர்கள் எடுத்த பயிற்சிக்கான சமரான பூநகரிக் கூட்டுத்தளம் மீதான தாக்குதலில் பங்குபற்றி தனது முதலாவது தாக்குதலிலேயே தனக்கான ஒரிடத்தை பதித்தான். அதனைத் தொடர்ந்து .1994ம் ஆண்டு ஆரம்பத்தில் இப்படையணியில் இருந்த போராளிகளும் வேறு பலபோராளிகளும் உள்வாங்கப்பட்டு தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக கடற்புலிகளின் கடற்தாக்குதலனியாக (கிளாலிக் கடற்சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் சாள்ஸ் அவர்களின் நினைவாக) சாள்ஸ் படையணியாக உருவாக்கம் பெற்றது. இப்படையணியில் உள்ளவர்களுக்கு அனைத்துப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு கடற்சமர் மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்கும் ஏற்றவாறு வளர்த்தெடுக்கப்பட்டனர். இப்பயிற்சிகளில் சிறந்து விளங்கியவன் குறிப்பாக ஐம்பது கலிபர் துப்பாக்கியின் சிறந்த சூட்டாளனாக அங்கிருந்த போராளிகளுள் சிறந்து விளங்கிய பிரசாந். அக்காலப் பகுதியில் நடைபெற்ற பெரும்பாலான கடற்சமரில் முன்னனி ஆயுதமாக தனது ஐம்பது கலிபர் துப்பாக்கியுடன் செனறு வந்தவன் . ஆழ்கடல் விநியோக நடவடிக்கையில் படகுச் சாரதியாகவும் சென்று வந்தான்.சிலகாலம் கப்பலிலும் கடமையாற்றிய பிரசாந் கடலனுபவங்களையும் எனைய பல அனுபவங்களையும்.பெற்றுத் திரும்பியவன் இங்கு வந்து முல்லைத்தீவுச் சமரில் கைப்பற்றப்பட்ட ஆடலறிப் பீரங்கிகளை சக போராளிகளுடன் இணைந்து பாதுகாப்பாக நகர்த்துவதில் முக்கிய பங்காற்றினான். அதன் பின் சாள்ஸ் படையணியின் துணைப் பொறுப்பாளராக சிறப்புத் தளபதி சூசை அவர்களால் நியமிக்கப்படுகிறான்.அப் பணிகளில் மிகவும் திறமையாகக் செயற்பட்ட பிரசாந் தொடர்ந்து சிறப்புத் தளபதி அவரகளின் பணிப்புரைக்கமைவாக விமானத்தாக்குதலால் விநியோகம் பாதிக்கப்படாமலிருக்க சாளையில் பிறிதொரு ஒடுபாதை (படகுகள் இறக்கி ஏற்றுவதற்க்கு )அமைக்கச் சொன்னதற்கமைவாக குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அமைத்தான் . என்ன வேலையாகிலும் சிறப்பாகச் செய்வதிலும் பிரசாந்திற்க்கு நிகர் பிரசாந்தே தொடர்ந்து புதிய கனரக ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டு அவ் ஆயுதங்கள் வன்னிக்குக் கொண்டு வருவதிலும் பெரும் பங்காற்றியவன் .அக் கனரக ஆயதங்கள் கடற்புலிகளுக்கு வழங்கப்பட்டபோது அவ் ஆயுதங்களுக்கு அனுபவம் வாய்ந்தவர்கள் தெரிவு செய்யப்பட்டபோது பிரசாந்தும் ஒருவனாகச் சென்று பயிற்சியில் சிறந்து விளங்கி அக் கனரக ஆயுதத்தின் சிறந்த சூட்டாளனாகவும் அவ் ஆயுதத்தின் பொறுப்பாளனாகவும் பயிற்சி முடித்து வெளியே வந்தான். அக்காலப் பகுதியில் கடற்புலிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கமுடியாத கடற்படையினர் அதி நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கடற்புலிகளின் படகுகள் மீது தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்தனர்.இது சம்பந்தமாக சிறப்புத் தளபதி சூசை அவர்கள் போராளிகளுடன் கலந்தாலோசித்து கொண்டிருந்தபொழுது நான் எனது ஆயுதத்தால் அடித்து நிற்பாட்டுவேன் என்று போராளிகளுக்கு நம்பிக்கையூட்டினான். 25.05.1999 அன்று புல்மோட்டைக் கடற்பரப்பில் விநியோகப் பாதுகாப்பு நடவடிக்கையின்போது கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின் போது தனது நீண்ட கடற்சண்டை அனுபவத்தின் மூலமும் மதிநுட்பமாகவும் சக போராளிகளின் துணையுடனும் தனது கனரக ஆயுதத்தால் சிறிலங்காக் கடற்படையின் அதிதொழில் நுட்பம் கூடிய அதிவேக டோறாப் படகை அடித்து சொன்னதைப் போலவே நிற்பாட்டி வீரச்சாவடைகிறான். பல போராளிகளை ஆயுதத்துறையில் தன்னைப்போலவே வளர்த்த ஒருவீரன் பெரும் நெருக்கடிக்குள்ளும் போராளிகளை கட்டுப்பாட்டோடு வைத்திருந்த பொறுப்பாளன்.இப்படியாக பிரசாந்தைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.இவனது பெயரில் உற்பத்தி செய்யப்பட்ட படகு ஆழ்கடல் சண்டைப் படகுகளின் கட்டளைப் படகாக செயற்பட்டதுடன் இவனால் வளர்க்கப்பட்ட போராளிகள் அப்படகின் முன்னனி ஆயுதத்தின் சூடுனராகவும் கட்டளை அதிகாரிகளாகவும் செயற்பட்டனர். மூலம்: erimalai.com
- சூட்டி படையணியிற்கு பெயர் சூட்டக் காரணமான சூட்டி