Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. 1992 காலப்பகுதியில் கடற்புலிகள் அமைப்பிற்கு வந்த நாட்களிலிருந்து எட்டு வருடங்கள் தொடர்ந்த நட்பொன்று மூச்சிழந்துபோனது. எந்தக் கடல் சண்டையெனிலும் படகுக் கட்டளை அதிகாரியாய் அங்கே பழனி நிற்பான். "பப்பா வண்" எனும் கோட்வேட் அவனுக்கு பொருத்தமாய் அனைவர் வாயினிலும் உச்சரிக்கலானது. பூநகரி தவளைப்பாச்சல் சமர் தொடக்கம், முல்லை வெற்றிச்சமர், ஆனையிறவு முப்படைத்தள அழிப்பு வரை குறிப்பாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்பு தரையிறக்க நடவடிக்கையின் கதாநாயகன் எங்கள் பழனி என்பது தமிழர் வரலாற்றுப்பதிவுகளில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டியது. சிங்களத்தின் கடற்கலங்களை எல்லாம் புரட்டிப் போட்ட சமர்களிலெல்லாம் பழனியின் கொமாண்டும் கணிசமாய் இருக்கும். உகண, பபதா, வலம்புரி, லங்காமுடித போன்ற சிங்களத்தின் ஆழ்கடல் வினியோக கலங்களை கடலுக்கடியில் 28 Njrj;jpd; Fuy; Fuy; 31 அனுப்பிவைத்த கடற்சண்டைகளில் முன்னின்று சமராடிய மூத்த கடற்புலி போர்வீரன் எங்கள் பழனி. மொத்தத்ததில் அவனின்றி கடற்புலிகளின் வரலாற்றுச் சாதனைகளை முழுமையாக எழுதி விடமுடியாத கடற்புலி மறவன் இந்த லெப் கேணல் பழனி. சிங்களக்காடையரின் இனக்கலவரமொன்றில் குடும்ப உறவுகள் அனைவரையும் பறிகொடுத்து எங்கோ அநாதரவாய் கைவிடப்பட்ட பிள்ளையாய் பதுளையிலிருந்து தனது 15வது வயதில் போராடப் புறப்பட்டு வந்தவனை வன்னிக்காடு அரவணைத்துக்கொண்டது, அன்றிலிருந்து இயக்கமே அவனது குடும்பமென்றானது. விடுமுறையில் வீட்டுக்குச் செல்ல குடும்ப உறவுகள் இல்லாத போராளியாய் பழனி இருந்தான். போர்க்களமே அவனுக்கு பொழுதுபோக்காய் ஆனது. 1991 இல் எமது விடுதலை இயக்கத்தால் முதன் முதலில் பெயர்சூட்டி நடத்தப்பட்ட மரபுவழிப்போர் நடவடிக்கையான ஆகாயக்கடல் வெளிச்சமரில் இயக்கத்தின் முதல் மரபுவழி தாக்குதல் படையணியான சாள்ஸ் அன்ரனி படையணியின் போர்வீரனாய் களமிறங்கியவன், 1992 காலப்பகுதியில் கடற்புலிகள் அமைப்பு உருவாக்கம் பெற்றபோது அதில் இணைந்துகொள்கிறான். யாழ் வடமராட்சி திக்கம் பகுதியில் அமைந்திருந்த 1-6 (வண் சிக்ஸ்) எனப்படும் கடற்போக்குவரத்து வழிகாட்டுதல் கற்கைநெறி முகாமில் கடல்சார் கற்கை நெறியை முடித்துக்கொண்டு கிளாலி கடல்நீரேரியின் பொதுமக்களின் போக்குவரத்து காவலனாய் கண்விழித்துக் களமாடினான். படிப்படியாய் உயர்ந்தவன் சிறந்த கடலோடியாக, கனரக பீரங்கி சூட்டாளராக, படகுக்கட்டளை அதிகாரியாக, ஆழ்கடலில் பன்னாட்டுப் பெருங்கடலில் ஆயுத நடவடிக்கையில் ஈடுபட்ட கப்பலொன்றின் கப்டனாக, ஒரு சிறந்த பொறுப்பாளராக, தாக்குதல் தளபதியாக, அனைவ ருக்கும் அன்பான அண்ணனாக, சகோரதனாக, நண்பனாக தன்னை அமைத்துக் கொண்டான். தேசியத்தலைவர் தோள்தட்டி வளர்க்கும் தளபதியாய் வளர்ந்து உயர்ந்தவன். கடலில் நடைபெற்ற மூர்க்கமான சண்டைகளிலெல்லாம் பழனியைச்சுற்றி எமது அலைவரிசைக் கருவிகள் முழுதும் குரலெழுப்பிய காலங்கள் தான் இன்றும் காதுகளில் இரைகின்றது. பலவெற்றிச் சமர்களுக்கெல்லாம் வித்திட்டு நின்ற வீரவேங்கையவன். சிங்களத்தின் திட்டமிட்ட நில அபகரிப்பு நடவடிக்கைகளான ஜெயசிக்குறு, சத்ஜெய போன்ற பாரிய படையெடுப்புகளை முறியடித்து முடக்க கடற்புலிகளின் கனரக பீரங்கிப்படைகளை தரையால் கொண்டுசென்று மோதித்தகர்த்த மூர்க்கப் போர்வீரன் அவன். இயக்கத்தின் கடைசி மூச்சென்று தலைவரால் கூறப்பட்டு பெயர்சூட்டி நடத்தப்பட்ட அந்த இரகசிய கடல் நடவடிக்கையான ‘மூச்சு நடவடிக்கை’ எனும் ஆழ்கடல் ஆயுத வினியோக நடவடிக்கையில் தொடராக 25 நாட்கள் முக்குளித்து நின்று வானில் எமது வான்கலங்கள் பறப்பதற்காய் அந்தக் கலங்களையே சுமந்துவந்த படகில் இவனுமாய் பத்திரமாய் கரைசேர்த்த பாரி அவன். ஒன்றாயிருந்து ஒருவேளைகூட விட்டுப்பிரியா உறவாகி தோள்கொடுத்துநின்ற நண்பனிவன் 15/08/2000 அன்று தனது இன்னுயிரை எம் தேசத்துக்காய் தந்து வீரவரலாறாய் மண்ணை முத்தமிட்டான். விட்டுப்பிரிய முடியாத நினைவுககளுடன், புலவர், கடற்புலிகள்.
  2. Two shapes of these Stealth 16' Boats used by Sea Tigers These boats were called Kfir (Tamil: கவிர்/ Romanized: Kavir) class boats by the Navy of Tamil Eelam a.k.a. Sea Tigers of Liberation Tigers. Type 1: Mostly two-man crew (boater & radio operator who also act as an LMG gunner) during Sea Black Tiger attacks and sometimes one manned too. Less than 10 people could travel in it. They were also used during sea-borne special operation missions like marine attacks on Sri Lankan naval installations or infiltrations. This design was the most produced design of the stealth 16' in the Eealm Wars and the most used suicide vessel by Sea Tigers. These were produced from 1998 until the end of the Eelam War. Images: Type 2: These were one-man-crew (boater alone) Sea Black Tigers' boats. Not much is known about this type.
  3. The stealth boat is a product of the Mangai boat construction of the LTTE's Sea Tigers The design of the boat started in accordance with the idea of our national leader and Soosai Anna that the Black Tigers' boat should be made invisible to the radar and with increased speed. Mr. V Master brought an English magazine of that time to the model yard. It contained pictures of a stealth aircraft and some notes. stealth aircraft are specifically designed around stealth technology and it's invisible to RADAR. Yes, the plane will hide itself completely from the radar. After looking at the picture, the map for the bow hull was drawn as a pointed hull design and the rear was drawn as a tunnel hull design. Then a small 8″ model of the bottom was made by the carpenter. For that Gunwale; angles were made according to the shape of the aircraft, a small model was made on cardboard, how the angles refracted the radiation was observed using the torchlight light, and then it was corrected. Then a small model was made on the plywood. At that time there were no technical facilities or computer facilities Under the guidance of Master V, the drawing section women fighters drew pictures for Stealth 16′. 'P carpenter' and four of his workmen along with model yard Women Fighters built the model using board and plywood in about a month. It was then docked to a fibreglass yard. There the carpentry work for the mold was carried out with a team led by a woman fighter who had experience and skill in fiberglass work and a woman fighter who had gone from a model yard. After 20 days the mold is removed from the model. Then 3 days shan paper was put on it and it was ready for production. The same crew also made the boat. In 25 days the first Stealth 16' was painted like a bird of prey and stood majestically named as Thanikai, a Sea Black Tiger named Captain Thanikai. After the technical section, the male fighters put the respective engine and did the wiring work and the boat work was completed. Whenever a boat is to be moulded from any model (Only to the first of its kind) it is always sent off after a Pongal in the traditional Tamil style. Then the boat will be garlanded, coconut will be broken on the floor and a lamp is lit and then only it is sent away from the yard. They did the same to the 'Thanikai' boat too. Our national leader and Soosai Anna came to see the beautiful boat in the evening. Anna, who was happy to see Stealth 16', asked the boat builders of this boat to go up to Velottam (the first entry of any boat into the water body) as well. The Velloottam of the Thanikai boat took place in the Vattuvagal Sea (in Mullaitivu) with the boat builders. Estimated speed with and without load. Hull design calculates the speed at 45–50 knots when it reaches its highest speed of 50–55 knots. The main factor to be considered while designing a boat is the 'Center of Buoyancy and Center of Gravity'. Both of these should come on the same line. This is very rare. But for Stealth 16' both centers are 3′ 6″ away from the rear so it rotates 360°. It also completely hid itself from the radar It is a successful product of Sea Tigers. Our salute to Lt. Col. Soba and Lt. Col. Sudarmani, who participated in the mould and production of the Thanikai boat from the construction of the boat to the final battle. Author: Mangai Boat Building Unit Source: https://eelavarkural.wordpress.com/2020/10/13/seatigers-boat/ Translated from Tamil by: Nane Chozhan (with the help of Google Translate).
  4. Author: Vaakai Via: Thesaththinkural magazine, 03/2022 ------------------------------------- A Stealth boat is a type of vessel that is especially used as a war vessel, and it employs Stealth technology construction techniques in an effort to ensure that time is hard to detect by one or more radar, visual, sonar, and infrared methods. The main detectors that find out whether a Navy vessel of an enemy is in the oceanic water are the sander, the radar, and the infrared. Stealth boats are designed in such a way that they are invisible, but unlike a Navy ship, which is not, it gives a very big boost and advantage to the stealth boat to launch an attack. These techniques borrow from stealth aircraft technology. The earliest known Ship to incorporate stealth technology is the US Navy Sea Shadow. It was completed in the mid-80s, but the public got its first view in 1993. Which was eventually scrapped in 2006. Our Tamil leaders, the Honourable P.V. Prabhakaran and Brigadier Soosai, were attracted by the F117A stealth fighter and decided to build their own stealthy speedboat with a low profile. The Mangai boatyard, which was founded in 1993 and established under the direct observation of the LTTE Leader and the direct guidance of the Sea Tiger leader, In early 1998, the Mangai boat yard's design and model/plug building yard started the construction of a stealth 16‘ in the Vanni jungle, several miles away from the sea. The major feature that is taken into account while constricting a stealth boat is the right angle, which is designed in such a way that it deflects and reflects the radar, and the infrared rays that hit this reflecting surface are known as the radar cross-section. By not constricting the boat with any right angles, such deflection and emerging are avoided, making the vessel a stealth boat. Distinctive low and wide wing-like structure designed to help lift the heavy bow section out of the water during high speed; the upper surface is angular with a ridge along the bow, lending to an open-topped cockpit. The important thing is the stealth, which is designed, and the plug or model construction is done without any mechanical aids or devices. The sea tiger women have done freehand boat line drawing with their master‘s instruction. 8" model of a stealth 16‘ built out of plywood, checked the angles manually, and corrected them, then its final blueprint is ready for plug building. 'Tri-V Hull | Image Screenshotted by Nane Chozhan' The stealth 16‘ Hull is designed with Montego's patented Tunnel hull or tri-V hull. This design provides unusual comfort and excellent stability at high-performance speeds. When it comes to hull design, the most important concern is: i. The centre of gravity is the point in a body where the gravitational force may be taken to act. ii. The centre of buoyancy is the centre of gravity for the volume of water that a hull displaces. When the hull is upright, the centre of gravity and centre of buoyancy are on the same vertical line, and the hull is stable. When the hull line drawings are ready, plug builders will check each line by drawing in the original measurements. After the corrections, the hull line drawings and blueprint will be finalised. Building a boat plug is the first major step in fibreglass boat construction. The boat-designed construction of the plug or model calls for the traditional skills of a boat builder; wood and plywood are the principal materials for construction. Though traditional skills are required, if carpenters will be made in terms of accuracy and quality of workmanship and require constant encouragement by an experienced technician, our sea tiger women who did with their Mastery (Mestiri//master carpenter) Building the plug upside-down is normal, but in LTTE boat yards, they don‘t have a permanent place, so they have to build it strong and firm so it can be easily transported. A Stealth 16‘ plug constructed together with the upper surface, canwall, and hull, which is an exact duplicate of the real boat, will be used once and thrown away. It resembled an F117A stealth fighter. The next step is to build the main structure of the fibreglass boat, which is the mould. From here, all the construction was done by women only. The plug will receive hand-sanding several times to make sure it is smooth enough to receive a layer of hard tooling gel coat, which eventually gives the polished surface when the mould is lifted. When the time comes to make the mould, the process is a faithful reproduction of the plug surface. The mould thickness is up to twice the finished hull thickness. This layout gives the required dimensional stability once the mould has cured, with extra stability added and a mounting caste to allow it to be moved. All this is done, the mould is released or removed from the plug, and then final hand sanding and polishing are done. The Mother mould will be ready to be used for boat construction. Once all the major construction is done, building a boat is not a big deal for the Mangai boatyard ladies. The same team that built the mould also built the first stealth 16-foot boat. They consider it a small boat, which makes them construct it in just 25 days. The only struggle when joining the canwall and hull is that of its unusual wing-like structure; they have to expose themselves to fibreglass mixtures that produce adhesive vapours. When inhaled, these fumes can lead to various respiratory issues. The first stealth boat was named Thanikai (தணிகை) to honour Black Tiger captain Thanikai. On top of the gel coat, the Thanikai stealth boat is painted with a lookalike eagle. Then the Sea Tigers outboard motor technicians did the wiring, fixed the gearbox, and attached a single 200-hp outboard engine at the stern. Mangai Boat Yard always gave an awesome send-off for their boats; they did the traditional Tamil Pongal, gave it a turmeric water bath, and put a garland on the bow. Before it was dispatched, our honourable LTTE Leader visited, congratulated them, and appreciated the hard work of these lady fighters. Speaking to their Leader gave them confidence and made them feel empowered. A stealth 16-foot Thanikai boat casts off in the Vadduvakal Sea. This super-stable speed hull design calculates the speed at 45–50 knots when it reaches its highest speed of 50–55 knots. The centre of gravity and the centre of buoyancy are on the same vertical line, and their stability never vanishes at any point when making a sudden turn. The stealth technology of their construction and their inherent low profile make them difficult to spot. Stealth 16‘ was used as an explosive black tiger boat for many battles until the last war. This is one successful stealthy design boat of LTTE, Which is 90% women-built boats.
  5. செஞ்சிலுவைச் சங்க நிகராளிகளோடான தமிழீழக் காவல்துறையினரின் சந்திப்பு தமிழீழ காவல்துறை நடுவப்பணியகம் கிளிநொச்சி 27/03/2006 | காலை 11:00 மணியளவில் அப்போதைய த.கா. பொறுப்பாளர் பா. நடேசன், த.கா. ஆளுவப் பொறுப்பாளர் தே. கானகன், த.கா. குற்றத் தடுப்புக் கண்காணிப்பாளர் பா. இயலரசன், த.கா. பயிற்சிக் கல்லூரி கண்காணிப்பாளர் ச. தமிழரசன் ஆகியோர் இலங்கைக்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆலோசகர் ரொறி மாங்கோவன், செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளிநொச்சி தலைமை அதிகாரி மரின் டின் கஜ்டொம்கய் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். (எங்கடையாக்கள் த.கா. சீருடையில் சமூகமளித்திருக்கலாம்!) த.கா. நடுவப்பணியகக் கண்காணிப்பாளர் மாதவன்
  6. காட்டினுள்ளே அமர்ந்து உணவுண்ணும் கேணல் ரமேஸ் மற்றும் இன்னொரு போராளி
  7. மாவீரர்கள்
  8. ஆண்டு: 2007 திகதி: சனவரி 21, 2007 அடிபாட்டுக் காலம்: எற்பாடு 3:45 மணி முதல் மாலை 6:30 மணி வரை நிகழ்வு இடம்: திக்கத்திற்கும் பொலிகண்டிக்கும் இடைப்பட்ட கரையிலிருந்து 3 மைல் தொலைவிலுள்ள கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: வெற்றிலைக்கேணியிலிருந்து 15 முதல் 20 வரையான சண்டைப்படகுகளைக் கொண்ட கடற்புலிகளின் பல கலத்தொகுதிகள் பருத்தித்துறை துறைமுகத்தை நோக்கி வலிதாக்கும் நோக்கத்தோடு சென்றுகொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத வேளையாக கடற்புலிகளின் சில கலத்தொகுதியினர் சிங்களக் கடற்படையினரோடு முட்டுப்பட மோதலொன்று வெடித்தது. சம நேரத்தில் பருத்தித்துறைத் துறைமுகத்தில் சிட்டி ஒஃவ் லிவர்பூல் கப்பல் பொருட்களை (சிறிலங்கா அரசின் தகவலின் படி உணவுப்பொருட்களாம்) இறக்கிவிட்டு நின்றிருந்த வேளையே தாக்குதல் நடந்ததால் அதன் பாதுகாப்பின்பொருட்டு நங்கூரம் உயர்த்தப்பட்டு காங்கேசன்துறை நோக்கிப் பயணமானது. அப்போது கப்பலை 5 அல்லது 6 பல வகுப்புப் படகுகளைக் கொண்ட கடற்புலிகளின் இரு கலத்தொகுதிகள் பின்தொடர்ந்து சென்றன. உடனே கப்பலின் பாதுகாப்பிற்காக தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 10 கடற்படையினர் கடற்புலிகளை நோக்கிச் சுடத்தொடங்க அங்கும் ஒரு மோதல் வெடித்தது. சமரின் நடுவே கப்பலை இலக்குவைத்து நோக்கிப் பாய்ந்துசென்ற கடற்கரும்புலிகளின் இடியன் ஒன்று பகைச் சூட்டிற்கு இலக்காகி வெடித்துச் சிதறியது. அதன் வெடிப்பில் கப்பலின் கலக்கூடு (hull) சிறிது சேதமடைந்தது. எனினும் கப்பல் 3:45 மணி முதல் 5:45 மணிவரை கடற்புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடற்புலிகள் அவ்விடத்தை விட்டகன்ற பின்னரே சிங்களக் கடற்படையின் கடற்கலங்கள் கப்பலை நெருங்கின. பின்னர் கப்பல் காங்கேசன்துறை நோக்கிப் படையினரால் கொண்டுசெல்லப்பட்டது. தொடர்ந்த கடற்சமரில் கடற்படையின் கடற்கலங்களை தாம் தொண்டைமானாறு வரை அடித்துக் கலைத்துச் சென்று விரட்டிவிட்டுத் திரும்பியதாகக் கடற்புலிகள் தெரிவித்தனர். நடந்த கடற்சமரில் கடற்புலிகளுடன் மிண்டிய சிங்களக் கடற்படையின் பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்த 15 சுடுகல & டோறாப் படகுகளுக்கு ஆதரவாக மாலை 6 மணியளவலிலிருந்து சிங்கள வான்படையின் மிக்-29 தாரை வானூர்திகள்-2, கிபிர் தாரை வானூர்திகள்-2, எம்.ஐ. 24 வகை தாக்குதல் உலங்குவானூர்திகளும் தாக்குதல் நடாத்தின. கடற்படையினருக்கு உதவியாக தரையிலிருந்து முள்ளி, நாகர்கோவில், மந்திகை ஆகிய முகாம்களிலிருந்து சேணேவி, தகரி மற்றும் பல்குழல் உந்துகணைத் தாக்குதல்கள் கடலை நோக்கி மேற்கொள்ளப்பட்டன. இக் கடற்சமரால் கரையோரப் பகுதி மக்கள் இடம்பெயர்ந்து வேற்றிடங்களுக்குச் சென்றனர். கடலில் மோதல் வெடித்ததிலிருந்து பலாலி மற்றும் பல்லப்பை ஆகிய இடங்களிலிருந்து வடமராட்சி வடக்குப் பரப்பு நோக்கி சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான எறிகணை வீச்சில் ஒரு எறிகணை அல்வாய் சிறிலங்காப் பாடசாலையில் வீழ்ந்தது. இதன் சிதறல்களால் கிறேசியன் பானுமதி என்ற பெண் கொல்லப்பட்டதோடு அவருக்கு அருகில் நின்றிருந்த அவரின் இரு பிள்ளைகளும் காயமடைந்தனர். இக்கப்பலானது யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்காப் படையினருக்கும் பொதுமக்களுக்கும் வழங்கல் பொருட்கள் எடுத்து வரப்படும் கப்பல்களில் ஒன்றாகும். இக்கப்பலில் 10 சிறிலங்காப் படையினரும் 15 பொதுமக்களும் பயணித்திருந்தனர். இதிலிருந்த 15 பொதுமக்கள் கலக்குழுவினரில் பெரும்பாலாtனோர் இந்தியர்கள் ஆவர். கப்பலிலிருந்த கலக்குழுவினருக்கோ கடற்படையினருக்கோ எவ்விதச் சேதமுமில்லையென்று சிறிலங்கா அரசின் படைத்துறைப் பேச்சாளர் பிரசாத் அமரசிங்கே அற்றைநாளே ஊடகங்களுக்குத் தெரிவித்தார். சேதப்பட்ட (சிறிய) கடற்கலங்கள்: 1 கடற்கலப் பெயர்: சிட்டி ஒஃவ் லிவர்பூல் (City of Liverpool) கல வகை: சரக்குக் காவி படிமம்: படிமப்புரவு: அறியில்லை சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் கார்குழலி கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: ஆகக்குறைந்தது 1 கல வகை: அறியில்லை ஆதாரம்: உதயன்: 22/01/2007 | தமிழ்நெற்: 21/01/2007 (Sea Tiger boats enter Point Pedro harbour), (SLA shelling kills mother, wounds children in Pt. Pedro) திகதி: சனவரி 29 & 30, 2007 அடிபாட்டுக் காலம்: வைகறை 5:40 மணியளவில் நிகழ்வு இடம்: கொழும்புத் துறைமுகம் நிகழ்வு விரிப்பு: கொழும்புத் துறைமுகத்தினுள் ஊடுருவிய கடற்கரும்புலிகளால் அங்கு தரித்து நின்ற நான்கு புளு ஸ்ரார் வகுப்புப் படகுகள் அழிக்கப்பட்டன. வெடிப்பு அதிர்வால் துறைமுகத்தினுள் இறங்கிக்கொண்டிருந்த ஒரு சரக்குக் கப்பலும் மெல்லிய சேதமடைந்தது. ஆனால் இவற்றை மூடி மறைந்த சிங்களம் தாம் துறைமுகத்தினுள் நுழைந்த மூன்று இடியன்களை சுட்டு வெடிக்க வைத்துவிட்டதாகவும் ஒரு தமிழர் மற்றும் 8 சிங்களவர் என மொத்த 9 மீனவர்களைக் கைது செய்து அவர்கள் புலிகள் என்றும் அவர்களில் ஒருவர் சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்தார் என்றும் மற்றொருவர் சயனைட் உட்கொண்ட படி பிடிபட்டார் என்றும் கதை அளந்தது. ஆனால் 31 ம் திகதி மட்டில் அகில இலங்கை மீனவ சங்கம் பிடிக்கப்பட்டவர்கள் முன்னக்கரையைச் சேர்ந்த மீனவர்கள் என்றும் அவர்களுக்கும் இதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென்று கூறிட சிங்களத்தின் குட்டு உடைபட்டது. பின்னர் கரையோர மக்கள் போர்க்கொடி தூக்க அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அந்த அப்பாவித் தமிழர் மட்டும் சிங்களப் புலனாய்விப் பிரிவினரால் தொடர்ந்து மறியலில் வைக்கப்பட்டார். தாக்குதலின் முழு விரிப்புக் கிடைக்கப்பெறவில்லை. புலிகளும் இத்தாக்குதல் தொடர்பாக எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை. வீரச்சாவடைந்த கரும்புலிகளின் பெயர் விரிப்பினை மட்டும் அறிவித்தனர். இந்த மீனவர் சிக்கல் தொடர்பாக தொடர்பாக மேலும் வாசிக்க: மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 4 கடற்கல வகுப்புப் பெயர்: புளூ ஸ்ரார் (விதப்பான கல வகுப்பு அறியில்லை. இந்த புளூ ஸ்ரார் நிறுவனத்தால் படைத்துறைக்கு K-71, K-72, சீ கார்ட் ஆகிய வகுப்புக் கடற்கலங்கள் உருவாக்கப்படுகின்றன) கல வகை: அறியில்லை சேதப்பட்ட (மெல்லிய) கடற்கலங்கள்: 1 கடற்கலப் பெயர்: பெலொபோனேசியன் பிறைட் (PELOPONESIAN PRIDE) கல வகை: கொள்கலன் காவி படிமம்: படிமப்புரவு: MarineTraffic.com சிறிலங்கா கடற்படை ஆளணியினkozhuரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 5 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் சுகந்தன், மேஜர் தீக்கதிர், லெப். மணிக்கொடி, கப்டன் முறையமுதன், லெப். எழுகடல் இவர்களில் லெப். எழுகடல் மற்றும் கப்டன் முறையமுதன் ஆகியோர் இத்தாக்குதலிற்கு கடல் வேவுப்புலிகளாகச் சென்று பின்னர் கடற்கரும்புலிகளாகி வீரச்சாவடைந்தனர் என நான் தமிழீழத்தில் வசிக்கும் போது கேள்விப்பட்டனான். கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: அறியில்லை ஆதாரம்: தமிழ்நெற்: 27/01/2007 (Attack boats enter Harbour of Colombo, SLN claims destroying 3 boats), (Confusion amidst harbour attack black out), 31/01/2007 (Union: Navy destroyed fishing boats, not Tiger craft), 02/02/2007 (Fishing hamlet fears backlash after Navy arrests) | எரிமலை: மார்ச் 2007 திகதி: மார்ச் 28 & 29, 2007 அடிபாட்டுக் காலம்: மாலை 10:00 மணி முதல் சாமம் 1:00 மணி வரை நிகழ்வு இடம்: முல்லைத்தீவிற்கும் அளம்பிலிற்கும் இடைப்பட்ட கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக் கடற்பரப்புக்குள் நுழைந்த சிறிலங்காக் கடற்படையின் 23 டோறாக்கள் மீது கடற்புலிகள் நடாத்திய எதிர்த்தாக்குதல் இதுவாகும் என்று தவிபு தெரிவித்திருந்தனர். இதில் சிறிலங்காக் கடற்படையின் 2 டோறாக்கள் மோசமாக சேதமடைந்தன. சேதமடைந்த டோறாக்களை ஏனைய டோறாக்கள் கட்டியிழுதவாறு திருமலை நோக்கி தப்பியோடின. கடற்புலிகள் அவர்களை திருமலை வரை விரட்டிச்சென்றுவிட்டுத் திரும்பினர். இத்தாக்குதலில் குறைந்தது 10 வரையான கடற்புலிப் படகுகள் பங்குபெற்றியிருந்தன என்று சிங்களக் கடற்படை தெரிவித்தது. கடற்புலிகள் தரப்பில் படகுகள் எதுவும் மூழ்கடிக்கப்படவில்லை. இக்கடற்சமரினிடையே அளம்பில் கரையோரத்தில் சிங்களக் கடற்படையினர் சேணேவித் தாக்குதல் நடாத்துவதால் அங்கு வசித்து வந்த மக்கள் அவலப்பட்டு பாதுகாப்பான இடம்தேடி இடம்பெயர்ந்தனர். இத்தாக்குதலில் ஒரு தரைப்புலிப் போராளி வீரச்சாவடைந்துள்ளதை வைத்துப் பார்க்கும் போது இது தென் தமிழீழத்திலிருந்து வட தமிழீழத்திற்குப் போராளிகளை ஏற்றிப்பறிக்கும் நடவடிக்கையின் போது ஏற்பட்ட முட்டலால் வெடித்த கடற்சமரெனத் துலங்குகிறது. சேதப்பட்ட (மோசமாக) கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினkozhuரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த தரைப்புலிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் குட்டிவீரன் எ கனிவாளன் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: அறியில்லை ஆதாரம்: உதயன்: 30/03/2007 திகதி: ஏப்ரல் 6, 2007 அடிபாட்டுக் காலம்: நண்பகல் 15 மணியிலிருந்து 11:30 மணிவரை நிகழ்வு இடம்: மன்னாரின் புலிகளின் கட்டுப்பாட்டுக் கற்பிட்டி கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: இரு தரப்பின் சுற்றுக்காவல் கலத்தொகுதி ஒன்றை ஒன்று நேருக்கு நேர் சந்தித்த போது வெடித்த கடற்சமர் இதுவாகும். இதில் கடற்புலிகளின் சுற்றுக்காவல் படகுத்தொகுதியின் கட்டளையாளரின் தகவலின் படி சிங்களவரின் வோட்டர் ஜெட் ஒன்று மூழ்கடிக்கப்பட்டதாக தவிபு படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்தார். எனினும் சிறிலங்காப் படையினர் இதை மறுத்ததோடு கடற்கரும்புலிப் படகொன்றை தாம் மூழ்கடித்ததோடு அதன் வெடியதிர்வில் தமது வோட்டர் ஜெட் ஒன்று சேதமடைந்தது என்றனர். அதனால் அது கற்பிட்டி கடற்றுறைக்கு இழுத்துவரப்பட்டது என்றும் கூறினர். ஆயினும் விடுதலைப்புலிகளின் மாவீரர் பட்டியலின் படி கடற்கரும்புலிகள் யாரும் இத்தாக்குதலில் வீரச்சாவடையவில்லை. மேலும் சிறிலங்காக் கடற்படையின் வட்டாரங்களின் படி காயப்பட்டு கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 8 சிங்களக் கடற்கலவர் சிறிலங்கா வான்படையால் காப்பாற்றப்பட்டு கொழும்புக்கு வான்தூக்கிச் செல்லப்பட்டனர். ஆகவே இதில் கடற்படையின் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டிருப்பது உறுதியாவதோடு கடற்படையின் வழமையான மறைப்பும் இங்கு தெரிகிறது. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 7 பேர் காயப்பட்டோர்: சிறிலங்காக் கடற்படையின் வட்டாரங்களின் படி 8 பேர் கடலில் காயப்பட்டு தத்தளித்துக்கொண்டிருந்னர். வீரச்சாவடைந்த கடற்புலிகள்: ஆகக்குறைந்தது 1 ஆள் தரநிலையுடனான பெயர்கள்: கப்டன் றெஜி ஆதாரம்: உதயன்: 7/04/2007 | தமிழ்நெற் 6/04/2007 (SLN vessel sunk, 7 killed in Mannar seas - LTTE) திகதி: மே 4 & 5 , 2007 அடிபாட்டுக் காலம்: சாமம் 11:30 மணியளவில் தொடங்கி அடுத்தநாள் விடிகாலை வரை தொடர்ந்தது. நிகழ்வு இடம்: புல்மோட்டைக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: இரு தரப்பின் சுற்றுக்காவல் கலத்தொகுதிகள் நேருக்கு நேர் சந்தித்த போது வெடித்த கடற்சமர் இதுவாகும் என்று புலிகள் தெரிவித்தனர். எனினும் அக்கால கட்டத்தில் கடல்வழியாக திருமலையிலிருந்து வன்னிக்கு போராளிகளை ஏற்றிப்பறிக்கும் நடவடிக்கை நடந்துகொண்டிருந்ததால் அதில் ஈடுபட்ட கடற்புலிகளுக்கும் சிங்களக் கடற்படைக்கும் ஏற்பட்ட கடற்சமராக இது இருக்கலாம் என்று இவ்வெழுத்தாளர் கருதுகிறார். மூண்ட சமரில் கடற்படையின் இரு டோறாக் கலங்கள் மோசமாகச் சேதப்படுத்தப்பட்டன. அவை சமரின் முடிவில் கடற்படையினரால் கட்டியிழுத்துச் செல்லப்பட்டன. இதே வேளை கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் சிக்கி திரியாய்க் கடற்பரப்பில் மூன்று சிங்கள மீனவர்கள் கொல்லப்பட்டனர் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சேதப்பட்ட (மோசமாக) கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: பலர் காயப்பட்டோர்: பலர். வீரச்சாவடைந்த போராளிகள் : ஆகக்குறைந்தது 3 பேர் கடற்கரும்புலிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்கள்: லெப்.கேணல் தமிழவன் எ புதியவன் கடற்புலிகள்/ தரைப்புலிகள்: ஆகக்குறைந்தது 2 பேர் தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் சதா, வீரவேங்கை தூயோன் ஆதாரம்: உதயன்: 6/05/2007 திகதி: மே 24, 2007 அடிபாட்டுக் காலம்: சாமம் 12:45 மணிக்குத் தரையிறக்கப்பட்டு சாமம் 1:15 மணிக்கு தளம் முற்றுக்கையிடப்பட்டு தாக்குதல் தொடுக்கப்பட்டு வைகறை 2:45 மணிக்கு முற்றாக அழிக்கப்பட்டது. நடவடிக்கை இரண்டு மணிநேரம் நீடித்தது நிகழ்வு இடம்: நெடுந்தீவு குந்துவாடியில் அமைந்துள்ள குயின்ராக் கடற்படைத்தளம் & அண்டிய கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: நெடுந்தீவின் குந்துவாடியில் 2006ம் ஆண்டு சிறிலங்கா கடற்படையினர் அமைத்த குயின்ராக் கடற்படைத்தளம் மீதான ஈரூடகத் தாக்குதலணியின் (2008இல் 'சேரன் ஈரூடகத் தாக்குதலணி' எனப் பெயர் சூட்டப்பட்டப்பெற்றனர், இதன் முதலாவது கட்டளையாளரின் பெயரால்) தாக்குதல் இதுவாகும். தமிழீழத்தின் மேற்குப் பக்கத்திலுள்ள கடற்புலித் தளமொன்றிலிருந்து 23ம் திகதி மாலை வேளையில் கடற்புலிகளின் துணையுடன் ஈரூடகத் தாக்குதலணியினர் புறப்பட்டனர். இவர்கள் 6 கட்டைப்படகுகளில் (Dinghy) ஏற்றிச்செல்லப்பட்டனர். இவற்றோடு வேறு பல படகுகள் என மொத்தம் 12 படகுகள் இத்தாக்குதலில் பங்கேற்றிருந்தன. சென்றவர்கள் நெடுந்தீவு வெள்ளைப் பரப்பில் சாமம் 12:45 மணியளவில் தரையிறக்கப்பட்டனர். அங்கிருந்து குந்துவாடி நோக்கி நகர்ந்த தமிழரின் ஈரூடகப் படையினர் சாமம் 1:15 மணிக்குத் தளத்தை முற்றுகையிட்டு தாக்குதலைத் தொடுத்தனர். வைகறை 2:45 மணியளவில் தளம் முற்றாக அழிக்கப்பட்டது. இந்நடவடிக்கை இரண்டு மணிநேரம் நீடித்தது. தளத்தினுள் சமர் நடந்துகொண்டிருக்கும் போது உதவிக்கு விரைந்த கடற்படையினர் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டது. அப்போது டோறா ஒன்று தாக்குதலிற்குள்ளாகி அருகிலிருந்த முருகைப் பாறையில் மோதி முற்றாகச் சேதமடைந்தது. மேலும் இரு வோட்டர் ஜெட்கள் சேதமடைந்தன. அத்தளத்தினுள்ளிருந்த போர்த்தளவாடங்கள் - குறிப்பாக கதுவீ (RADAR) ஒன்று - மற்றும் படைக்கலன்கள், கணைகள் என்பனவற்றைக் கைப்பற்றிக்கொண்டு பாதுகாப்பாகத் தளம் திரும்பினர், ஈரூடகப் படையினர். கடற்படையின் தளக் கட்டமைப்புகளுக்கு வலுத்த சேதம் விளைவிக்கப்பட்டது. தளத்தினுள் கடற்படையினரின் 34 சடலங்கள் கிடக்கக் காணப்பட்டது கடற்புலிகளால் உறுதிப்படுத்தப்பட்டது. இத்தாக்குதலில் யாழ் மாவட்ட கடற்புலிகளின் பொறுப்பாளர் லெப் கேணல் அருணன் மாஸ்டரும் பங்காற்றியிருந்தார். இத்தக்குதலின் போது படைத்தளத்தினுள்ளிருந்த படையினர் சிறிலங்கா வான்படையினை உதவிக்கு அழைத்தும் அவர்கள் உதவிக்கு கடைசிவரை வரவேயில்லை. இத்தீவில் வெட்டுக்கழி, பெரிய கழி, பேய்க்கழி, வெள்ளைக்கழி, செம்பட்டைக்கழி, இராமிழாப்புக்கழி, இரவதைக்கழி போன்ற கழிகளும் சண்ணாங்குளம், நெழுவினிக்குளம், கம்பராமடை, சமனன் குளம், வடக்குறாவெளிக் குளம் போன்ற குளங்களும் காணப்படுகின்றன. நிகழ்படம்: https://eelam.tv/watch/24-05-2007-ச-ற-த-த-வ-camp-attack-video_sFX5YAPmUeXthd2.html படிமங்கள்: படிமப்புரவு: நிலாவரை நூல் சேதமடைந்த கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் சேதமடைந்த (முற்றாக) கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 34 பேர் காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த போராளிகள்: 7 பேர் ஈரூடகத் தாக்குதலணியினர்: 4 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் தமிழ்வேந்தினி & பெயர் அறியில்லாப் போராளிகள் சிறிலங்கா அரசாங்கத்தின் தகவலின் படி தரநிலை அறியில்லாத முகிலன் (வீரசிங்கம் ஜங்கரன்), சுகிர்தன் (பாஞ்சாளன் சுகந்தன்), சிறிமாறன் (சந்திரசேகரன் மயூரன்), தமிழ்வேந்தினி, ??னிவிழி (செபஸ்தியாம்பிள்ளை மேரி கனிஷ்ரா), காலைத்தென்றல் (கதிரிப்பிள்ளை மரியா கௌரி), காதல்மைந்தன் (பிரான்ஸிஸ் ??னிகுமார்) தரை நடவடிக்கையின் போது 4 போராளிகள் மட்டுமே வீரச்சாவடைந்ததாக தவிபு அறிவித்தனர். ஆனால் சிறிலங்கா அரசின் (ஒற்றாடலால் அறியப்பட்டதாம்) இத்தகவலில் 7 பேர் வீரச்சாவடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே மேலதிகமான மூன்று பேர் கடலில் நடந்த சமரில் வீரச்சாவடைந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன். ஆதாரம்: உதயன்: 24/05/2007 | தமிழ்நெற் 24/05/2007 (Tigers attack Sri Lanka Navy installations in Delft) | கட்டுரை: மேஜர் தமிழ்வேந்தினியின் வாழ்க்கை வரலாறு திகதி: சூன் 19, 2007 அடிபாட்டுக் காலம்: எற்பாடு 5:30 மணிக்குத் தொடங்கி சாமம் 10:30 மணி வரை நிகழ்வு இடம்: பருத்தித்துறை முனை கடற்பரப்பிற்கும் வெற்றிலைக்கேணி - பருத்திக்காடு கடற்பரப்பிற்கும் இடைப்பட்ட கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: சிறிலங்காக் கடற்படையின் கட்டுப்பாட்டிலுள்ள நீர்ப்பரப்பான முனைக்குள் நின்றுகொண்டிருந்த கடற்புலிகள் மீது சிறிலங்காக் கடற்படையினர் மேற்கொண்ட வலிதாக்குதல் இதுவாகும். இதன்போது வெடித்த கடற்சமரில் கடற்புலிகளின் கல்லப்படாத வேவ் ரைடர் வகுப்பைச் சேர்ந்த 'இந்துமதி' என்ற கலப்பெயரைக் கொண்ட சண்டைப்படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டது. அது பின்னர் சிறிலங்காக் கடற்படையினரால் மீட்டெடுக்கப்பட்டது (இதை மறுநிலை பொறியியல் (reverse engineering) செய்து அதன் மூலமே சிறிலங்காக் கடற்படையினர் தமது வேவ் ரைடர் வகுப்புப் படகை 2008இல் உருவாக்கினர் என்று நம்பப்படுகிறது). வேறு சண்டைப்படகுகள் ஏதேனும் சேதப்படுத்தப்பட்டதா என்பது பற்றிய தகவல் தெரியவில்லை. இவ் மூழ்கடிக்கப்பட்ட சண்டைப்படகிலிருந்து பல ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கடற்படையினர் கைப்பற்றினர். இதிலிருந்த நான்கு வித்துடல்களையும் தரைவழிப் பாதை மூடப்பட்டுள்ளதால் கடல் வழியாக புலிகளிடம் கையளிக்க செஞ்சிலுவைச் சங்கம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்காக் கடற்படை தெரிவித்திருந்தது. கடற்படையினருக்கு தமது வரணி மற்றும் பல்லப்பை ஆகிய இடங்களிலுள்ள படைமுகாம்களிலிருந்து பல்குழல் உந்துகணை செலுத்தி மூலம் தரைப்படையினர் சூட்டாதரவை வழங்கினர். அவை வடமராட்சிக் கடற்பரப்பில் நீண்ட நேரமாக கடற்புலிகள் நின்றுகொண்டிருந்த இடங்களில் வீழ்ந்து வெடித்தன. சிறிலங்காக் கடற்படையினர் தரப்பில் அவர்களின் டோறா ஒன்று சேதப்படுத்தப்பட்டு சிங்கள கடற்படையினரால் கட்டியிழுத்துச் செல்லப்பட்டது. சேதப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: ஆகக்குறைந்தது 4 பேர் தரநிலையுடனான பெயர்கள்: 'படகு கட்டளை அதிகாரி' லெப். கேணல் முல்லைமகள், லெப். வர்மா, வீரவேங்கை இளங்கீரன், கப்டன் அன்புமலர் (இவர் காயமடைந்து மருத்துவமனையில் காயச்சாவடைந்தவர்) ஆதாரம்: உதயன்: 21 & 23/06/2007 | தமிழ்நெற் : 19/06/2007 (SLN, Sea Tigers battle at Point Pedro seas) திகதி: சூலை 7, 2007 அடிபாட்டுக் காலம்: அதிகலை சுமார் 3 மணிநேரம் நிகழ்வு இடம்: கொக்கிளாய் தொடக்கம் கொக்குத்தொடுவாய், புல்மோட்டை வரையான கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: தமிழீழக் கடற்பரப்புக்குள் நுழைய முற்பட்ட சிறிலங்காக் கடற்படையின் 21 டோறாக் கலங்களை வழிமறித்து கடற்புலிகள் மேற்கொண்ட முறியடிப்புத் தாக்குதல் இதுவாகும். தாக்குதலின் போது கடற்படையினருக்கு தமது கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், புல்மோட்டை ஆகிய இடங்களிலுள்ள படைமுகாம்களிலிருந்து சேணேவிகள் மூலம் தரைப்படையினர் சூட்டாதரவை வழங்கினர். ஆயினும் கடற்படையினர் திருமலை நோக்கி விரட்டப்பட்டனர் என்று கடற்புலிகள் தெரிவித்தனர். சிறிலங்காக் கடற்படையினர் தரப்பில் அவர்களின் டோறாக்கள் மூன்று சேதப்படுத்தப்பட்டு சிங்கள கடற்படையினரால் கட்டியிழுத்துச் செல்லப்பட்டன. கடற்புலிகளின் சண்டைப்படகுகளுக்கு ஏற்பட்ட சேத விரிப்புகள் தெரியவில்லை. எனினும் சிறிலங்காக் கடற்படையின் பேச்சாளரோ கடற்புலிகள் குச்சவெளியிலிருந்த தமது படைமுகாமை தரைவழியாகவும் கடல்வழியாகவும் (ஆகக்குறைந்தது 15 படகுகள்) நுழைந்து தாக்கினர் என்றும் மூண்ட முரட்டுத்தனமான இருமுனைச் சமர் முறியடிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். எவ்வாறெனினும் அற்றை நாள் சமரில் இரு போராளிகளே வீரச்சாவடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சேதப்பட்ட கடற்கலங்கள்: 3 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் நீலன், வீரவேங்கை சுடர்வேந்தன் ஆதாரம்: உதயன்: 9/07/2007 | தமிழ்நெற்: 8/07/2007 (SLN, Sea Tigers clash in the seas off Pulmoaddai) திகதி: ஓகஸ்ட் 12 & 13, 2007 அடிபாட்டுக் காலம்: சாமம் 10:00 மணி முதல் வைகறை 2:30 மணி வரை நிகழ்வு இடம்: கொக்கிளாய், நாயாறு, புல்மோட்டை ஆகிய கடற்பரப்புகள் நிகழ்வு விரிப்பு: கடற்புலிகளிடம் தலைநகர் திருமலையின் புல்மோட்டையில் இருந்து வன்னிக்கு பின்வாங்கி வந்த போராளிகளை ஏற்றிப்பறிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. இதனை சிறிலங்காப் படையினரினர் தமது கட்டளைப் பீடத்திற்கு அனுப்பியதை புலிகளின் ஒற்றாடல் பிரிவினர் அறிந்து கடற்புலிகளுக்குத் தெரிவித்திருந்தனர். இதனை அறிந்தபடியே புல்மோட்டையை நோக்கிக் கடற்புலிகளின் வழங்கல் படகுகளை உள்ளடக்கிய கலத்தொகுதிகள் தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் தியாகனின் தலைமையில் புறப்பட்டுச் சென்றன. அப்போது கரையை நோக்கித் தரைவழியாக நகர்ந்துகொண்டிருந்த தரைப்புலிகள் எதிர்பார்த்தது போலவே சிறிலங்கா தரைப்படையுடன் முட்டுப்பட்டதால் அவ்விடத்தில் சமரொன்று வெடித்தது. அதேவேளை புலிகளின் நகர்வினை ஏற்கனவே அறிந்து வைத்திருந்த சிறிலங்காக் கடற்படையினர் வெளியேற எத்தனித்த போராளிகளை ஏற்றவென வந்த கடற்புலிகளை தடுக்கும் கடல் வியூகத்தினையும் கடலில் அமைத்தார்கள். புல்மோட்டையை நோக்கி வந்த கடற்புலிகளின் கலத்தொகுதிகளுக்கும் காத்திருந்த கடற்படையினரின் 20இற்கும் மேற்பட்ட டோறாக்களுக்கும் இடையில் கடுஞ்சமர் வெடித்தது. இதேவேளை கடற்படையினருக்கு ஆதரவாக தரைப்படையினரும் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், புல்மோட்டை ஆகிய இடங்களிலிருந்து கடலை நோக்கி எறிகணை வீச்சு நடாத்தினர். சிறிலங்காக் கடற்படையினர் தரப்பில் 3 டோறாக்களை கடற்புலிகள் சேதமாக்கியதாகவும் அவர்களை திருமலை நோக்கி விரட்டியடித்ததாகவும் புலிகள் அறிவித்தனர். ஆனால் கடற்புலிகளால் தரைப்புலிகள் அற்றை நாளில் அங்கிருந்து ஏற்றிப்பறிக்கப்பட்டனரா என்பது தெரியவில்லை. முல்லைத்தீவு மற்றும் சிலாவத்தையில் புலிகளின் ஆட்புலங்களில் பொதுமக்கள் வசிக்கும் பரப்புகளை நோக்கியும் எறிகணைகள் வீசப்பட்டன. கரையோரங்களில் உள்ள மக்கள் முள்ளியவளை மற்றும் முள்ளிவாய்க்கால் பரப்புகளுக்கு இடம்பெயர்ந்தனர். இந்தச் சமரில் தமிழரின் வேவ் ரைடர் வகுப்பைச் சேர்ந்த சண்டைவண்டியான ராஜ்மோகன் என்ற கலப்பெயரைக்கொண்ட படகு மூழ்கடிக்கப்பட்டது. இதன் படகு கட்டளை அதிகாரியாக லெப். கேணல் தியாகன் செயற்பட்டிருந்தார். சேதப்பட்ட கடற்கலங்கள்: 3 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 6 பேர் தரநிலையுடனான பெயர்கள்: ‘படகு கட்டளை அதிகாரி’ & 'தாக்குதல் கட்டளையாளர்' லெப். கேணல் தியாகன், 'படகு கட்டளை அதிகாரி' லெப். கேணல் கன்னியத்தம்பி, கப்டன் அகன்போர் எ செவ்வந்தன், 2ம் லெப். அகரக்கடல், 2ம் லெப். ஒளிநிலவன், 2ம் லெப். செந்தமிழ்வாணன் ஆதாரம்: உதயன்: 14/08/2007 | தமிழ்நெற்: 13/08/2007 (SLN, Sea Tigers battle at Point Pedro seas) | கட்டுரை: லெப். கேணல் தியாகனின் வாழ்க்கை வரலாறு திகதி: செப்டெம்பர் 26 & 27, 2007 அடிபாட்டுக் காலம்: சாமம் 10:30 மணியிலிருந்து வைகறை 3:30 மணிவரை நிகழ்வு இடம்: கொக்கிளாய்-புல்மோட்டைக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: சுருக்கமாக, திருமலையின் பேராறு மற்றும் கும்புறுபிட்டிக் காடுகளில் மறைந்திருந்த 300 இற்கும் மேற்பட்ட போராளிகளை வன்னிக்கு ஏற்றிப்பறிக்கும் கடல் நடவடிக்கை இதுவாகும். இக்கடல் நடவடிக்கையின் போது கடற்புலிகளின் சுமார் 20 வழங்கல் மற்றும் சண்டைப்படகுகள் பயன்படுத்தப்பட்டன. நடவடிக்கையின் போது சிறிலங்காக் கடற்படையின் 17இற்கும் மேற்பட்ட டோறாக்களுடன் ஏற்பட்ட கடற்சமர் வெடித்தது. இதேவேளை கடற்படையினருக்கு ஆதரவாக தரைப்படையினரும் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், புல்மோட்டை ஆகிய இடங்களிலிருந்து கடலை நோக்கி எறிகணை வீச்சு நடாத்தினர். புலிகளின் அலுவல்சார் அறிக்கையின்படி, நடந்த கடற்சமரின் ஒரு கட்டத்தில் கடற்புலிகள் கடற்படையின் டோறாக்களை புல்மோட்டை வரை பின்தள்ளிச் சென்று அங்கு வைத்து தீவிர தாக்குதல் தொடுத்தனர். இதன் போது கடற்படையின் இரு டோறாக்கள் மீளப்பாவிக்கேலாத நிலைக்கு சேதப்படுத்தப்பட்டன. அவற்றை கட்டியிழுத்துச் செல்லவென திருமலையிலிருந்து வந்த டோறாக்கள் மீதும் கடற்புலிகள் கலைத்து வலுவாக அடித்தனர். இதன் போது திருமலை துறைமுகத்திற்கு அருகில்வைத்து மேலுமொரு டோறா சேதமாக்கப்பட்டது. இழப்புகளுடன் சிறிலங்காக் கடற்படையினர் திருமலைக்குப் பின்வாங்கினர். புலிகள் தரப்பில் எந்தவொரு படகுகளும் மூழ்கடிக்கப்படவில்லை. அதே வேளை புலிகளின் படகுகள் சில சேதமடைந்தன. ஆனால் வழக்கம் போல் சிறிலங்காக் கடற்படையினர் தமது டோறாக்களுக்கு எவ்விதச் சேதமுமில்லையென்றும் கடற்புலிகளுக்கே அள்ளுகொள்ளையான இழப்புகளென்றும் கதை கட்டினர். முழு நிகழ்வின் விரிப்பையும் வாசிக்க: சேதப்பட்ட (மீளப்பாவிக்கேலாது) கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சேதப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை கடற்புலிகளின் ஆளணியினரில் வீரச்சாவடைந்தோர்: 3 பேர் தரநிலையுடனான பெயர்கள்: ‘படகு கட்டளை அதிகாரி’ லெப் கேணல் நிசாந்தன், பெயர் அறியா கடற்புலி (‘படகு கட்டளை அதிகாரி’ சுதாவின் படகில் இருந்த சூட்டாளர்களில் ஒருவர்), மற்றும் இன்னுமொரு பெயர் அறியா கடற்புலி காயப்பட்டோர்: பலர் ஆதாரம்: உதயன்: 29/09/2007 | தமிழ்நெற்: 28/09/2007 (Sea Tigers, Sri Lanka Navy clash in Eastern waters) திகதி: ஒக்டோபர் 13, 2007 அடிபாட்டுக் காலம்: காலை 9:45 மணி முதல் நண்பகல் 10:45 மணி வரை கடற்கலம் மூழ்கடிக்கப்பட்ட நேரம்: நண்பகல் 10:45 மணியளவில் நிகழ்வு இடம்: கல்லடி - முகத்துவாரக்கட்டை ஆகிய பரப்புகளுக்கு இடைப்பட்ட கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: விடுதலைப் புலிகளின் நீர்ப்பரப்புக்குள் புகுந்த சிறிலங்கா கடற்படையின் மூன்று கடற்கலங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வலிதாக்குதலால் மூண்ட கடற்சமர் இதுவாகும். இக்கடற்சமரின் போது சிறிலங்காக் கடற்படையினர் தரப்பில் ஒரு சுடுகலப் படகு மூழ்கடிக்கப்பட்டதோடு அதிலிருந்த படைக்கலன்களும் மூன்று சடலங்களும் கைப்பற்றப்பட்டன. கடற்புலிகள் தரப்பில் ஆளணியோ கடற்கல இழப்புகளோ ஏற்படவில்லை. கடற்சமரின் போது கடற்படையினருக்கு ஆதரவாக தரைப்படையினரும் பலாலியிலிருந்து கடலை நோக்கி எறிகணை வீச்சு நடாத்தினர். இவ்வெறிகணைகள் கொழும்புத்துறை, மணியந்தோட்டம், அரியாலை கிழக்கு ஆகிய பரப்புகளில் வீழ்ந்து வெடித்தன. இதனால் இப்பரப்பு மக்கள் பதற்றமாகினர். இக்கடற்சமரால் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் அலறித் துடித்து ஓடினர். எனினும் மீனவர்கள் ஆருக்கும் பாதிப்பு வரவில்லை. மாலை 7:30 மணியளவில் 40 மீனவர்கள் படையினரால் கைது செய்யப்பட்டு அவர்களின் கடல் "பாஸ்" பெறப்பட்டது. அதனை அடுத்த நாள் மாதா கோவிலடி படைமுகாமில் வந்து பெற்றுக்கொள்ளவும் என்று கடற்படையினர் கூறினராம். ஆனால் மீனவர்கள் குருநகர் படைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். பாசையூர் - குருநகர் கடற்பரப்பில் 13/10 இடம்பெற்ற மோதலின் போது கொல்லப்பட்ட சிறிலங்காக் கடற்படை வீரர்களின் 3 சடலங்களை விடுதலைப் புலிகளின் அரச சார்பற்ற நிறுவனமும் ஐ.நா.வின் தொடர்பு அதிகாரியுமான எம். பாவரசன் கிளிநொச்சியில் உள்ள பன்னட்டு செஞ்சிலுவைச் சங்க நிகராளி திருமதி கட்ஜா லோரன்ஸிடம் 14ம் திகதி காலை 10:00 மணியளவில் கையளித்தார். மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: உட்கரை சுற்றுக்காவல் கலம் படகிலிருந்து கைப்பற்றப்பட்ட படைக்கலன்கள் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், காயப்பட்டோர்: அறியில்லை கொல்லப்பட்டோர்: 5 பேர் படிமங்கள்: ஆதாரம்: உதயன்: 14/10/2007 | தமிழ்நெற்: 13/10/2007 (SLN arrests 32 Jaffna fishermen), (Sea Tigers sink SLA vessel, recover 3 bodies), 14/07/2007 (LTTE hands over 3 SLA bodies to ICRC) திகதி: நவம்பர் 23, 2007 அடிபாட்டுக் காலம்: காலை 7:50 மணியளவிலிருந்து தொடங்கி 2:35 மணி நேரமாகத் தொடர்ந்தது. நிகழ்வு இடம்: பேசாலை & தலைமன்னார் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: பேசாலைக் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் நீர்ப்பரப்புக்குள் நுழைந்த சிறிலங்காக் கடற்படையின் 6 வோட்டர் ஜெட் வகுப்புப் படகுகள் மீது கடற்புலிகள் தாக்குதல் நடாத்தி விரட்டியடித்தனர். இத்தாக்குதலின் போது இரு வோட்டர் ஜெட் படகுகள் சேதமடைந்தன. கடற்படையின் நடவடிக்கையை வெற்றிகரமாக முறியடித்துவிட்டுத் திரும்பும் போது பேசாலைக் கடற்படைத்தளம், அதன் காவலரண்கள் மற்றும் காவல் நிலையம் மீது கடற்புலிகள் சுட்டனர். கடற்புலிகள் கரைக்கு அண்மையாக 75 மீட்டர்கள் வரை நெருங்கி வந்து தாக்குதல் நடாத்தினர் என மன்னார் சிறிலங்காக் காவல்துறையினர் தெரிவித்தனர். இதனால் கடற்படைத்தளக் கட்டடங்கள் சேதமடைந்தன. இம் மொத்த தாக்குதலில் எவ்வித சேதமுமின்றி கடற்புலிகள் பாதுகாப்பாகத் தளம் திரும்பினர் என்று தவிபு படைத்துறைப் பேச்சாளர் மார்சல் தெரிவித்தார். மன்னார் காவல்துறை வட்டாரங்களின் மேலதிகத் தகவலின் படி, கடற்புலிகளுடன் பேசாலை மற்றும் வங்காலைப்பாடு கடற்படையினர் கரையிலிருந்து 2 கிமீ தொலைவில் மிண்டியதால் மோதல் ஒன்று வெடித்து 35 நிமிடங்கள் நீடித்தது. பின்னர் அது வடமேற்காகப் பெயர்ந்து தலைமன்னார் கடற்பரப்பில் மேலும் 2 மணிநேரம் நீடித்தது. மோதலின் போது பேசாலை கரையோரத்தில் உள்ள சிறுதோப்பு மற்றும் வங்காலைப்பாடு ஆகிய சிற்றூர்களைச் சேர்ந்த சில வீடுகள் சேதம் அடைந்ததுடன் 01, 02, 03 மற்றும் 04 ஆகிய வட்டங்களில் உள்ள 400+ பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெற்றி மாதா தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தனர். பின்னர், மீதமுள்ள நான்கு வட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் செயின்ட் மேரிஸ் பாடசாலையில் தஞ்சம் அடைந்தனர். ஏ௧4 வீதியில் பேசாலை ஊடாக தலை மன்னார் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்துப் போக்குவரத்துகளும் காலை 7.50 மணி முதல் நிறுத்தப்பட்டன. சேதப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 24/11/2007 | தமிழ்நெற்: 23/11/2007 (Sea Tigers open fire on coastal sentry in Peasaalai) திகதி: திசம்பர் 25 & 26, 2007 அடிபாட்டுக் காலம்: நண்பகல் 11:00 மணி முதல் 1:50 மணி வரை நிகழ்வு இடம்: நெடுந்தீவுக்கும் கச்சதீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடற்புலிகள் தமது வழமையான கடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது தொலைவில் ஒரு கடற்கலம் தென்பட்டது. அது இரணைதீவிலிருந்து 4 அ 5 கடல்மைல் தொலைவில் நின்றுகொண்டிருந்தது. அது எப்படியான இலக்கு என்று காண்பதற்காக பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்புலிகளின் இரு சண்டைப்படகுகளைக் கொண்ட கலமணி (squadron) ஒன்று புறப்பட்டுச் சென்றது. கடற்புலிகளின் சண்டைப்படகுகள் அதனை அண்மித்ததும் அக்கடற்கலம் கடற்புலிகளை நோக்கி வேட்டுகளைத் தீர்க்கத் தொடங்கியது. உடனே கடற்புலிகளும் சிங்களவரின் டோறா தாக்குகின்றது என்பதை அறிந்து பகரடித் தாக்குதலில் களமிறங்கினர். கடற்புலிகளின் தாக்குதலில் டோறாவில் சில வேட்டுகள் பட்டுத் தெறிக்க அது காரைநகரை நோக்கி ஓட்டம்பிடித்தது. எனவே கடற்புலிகளின் சண்டைப்படகுகளும் அதனை துரத்தியபடி உயரச் சென்றன. அப்போது இவ் டோறாவோடு தலைமன்னாரிலிருந்து வந்திருந்த வேறு மூன்று டோறாக்கள் கரைநகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கடற்புலிகளின் சண்டைப்படகுகளை கீழாக வழிமறித்து சுற்றிவளைப்பதற்காக கீழே இறங்கி வந்துகொண்டிருந்தன. இதைக் கரையிலிருந்து கவனித்த கடற்புலிகள் அவசரமவசரமாக இரு கலத்தொகுதிகளை (6-7 சண்டைப்படகுகள்) கடலேற்றினர். கடற்புலிகளின் சண்டைப்படகுகள் தம்மை நோக்கி வருவதைக் கவனித்த சிங்களக் கடற்படையின் மூன்று டோறாக்களும் நெடுந்தீவுக்கு உயர கச்சதீவை நோக்கி செல்லத் தொடங்கினர். அதாவது சிங்களக் கடற்படையினர் தந்திர வழிவகையாக தமது பாதுகாப்பு எல்லைக்குள் ஓடுகின்றனர். ஓடிய கடற்படையினர் மேலதிக உதவியினைக் கோரினர். காரைநகர் கடற்படைத்தளத்திலிருந்து 30 மிமீ தெறுவேயங்கள் (Cannons) பொருத்தப்பட்ட சூட்டுவலு கூடிய டோறாக்கள் உடனே உதவிக்கு விரைந்தன. இப்போது கடற்படையின் தரப்பில் டோறாக்களின் எண்ணிக்கை 11 (பேபி டோறாக்கள் & சுப்பர் டோறாக்கள்) ஆகக் கூடியது. இவற்றைக்கொண்டு சிங்களவர் அங்கு கடல் வியூகமொன்றை அமைத்தனர். அது அவர்களின் வழமையான அரைநிலவு வடிவ வளைய வியூகமாகும். அந்நேரத்தில் கடற்புலிகளுக்கும் சிங்களக் கடற்படைக்குமான இடைவெளி கிட்டத்தட்ட 5 கிமீ ஆக இருந்தது. உடனே கடற்புலிகள் நெடுந்தீவைத் தாண்டியதும் தமது ஓட்டத்தை நிறுத்தி மேலதிக உதவியினை அனுப்புமாறு கட்டளைப்பீடத்திடம் கோரினர். ஏனெனில் அப்பொழுது கச்சதீவிற்கு கிட்டவாக நின்ற டோறக்களின் எண்ணிக்கை காரைநகரிலிருந்து அனுப்பப்பட்ட உதவிகளால் பத்தைத் தாண்டிவிட்டிருந்தது. கடற்புலிகளின் கட்டளைப்பீடமும் அதற்கமைவாக மேலதிக கலத்தொகுதிகளை அனுப்பி வைத்தது. கடற்புலிகளின் படகுகளின் எண்ணிக்கை இப்போழுது 16 படகுகளாக ஏகிறியது. சமரும் வெடித்தது. தமது வியூகத்திற்குள் கடற்புலிகளை உள்ளிழுத்துத் தாக்கியழிக்க எண்ணிய போது கடற்புலிகளும் உட்செல்வது போன்று சென்று போக்கிக்காட்டி பகைவர் மேல் கடுமையான தாக்குதலை தொடுத்தனர். சிங்களக் கடற்படையினருக்கு ஆதரவாக அ'புரத்திலிருந்து சிங்கள வான்படையின் எம்.ஐ. 24 உலங்குவானூர்தியொன்றும் விரைந்து சூட்டாதரவு வழங்கியது. எனவே கடற்புலிகள் அத்தாக்குதலிலிருந்து தமது கடல் வியூகத்தை விரித்தனர். உலங்குவானூர்தி தாக்குதல் நடாத்திக்கொண்டிருக்கையில் சிங்களக் கடற்படையின் டோறாக்கள் அதன் பக்கவலுவோடு கீழிறங்கி வந்து கடற்புலிகளோடு பொருத அது பாரிய கடற்சமராக மூண்டது. எனினும் கடற்புலிகள் விடாது தாக்கினர். அதனால் ஒவ்வொரு டோறாக்களும் தம் நிலையிலிருந்து தளர அவை ஒவ்வொன்றிற்கும் இடையிலான இடைவெளி 100, 200, 300 மீட்டர்கள் என கூடிக்கொண்டு சென்றது. ஒரு கட்டத்தில் சிறிலங்காக் கடற்படையின் டோறா ஒன்று செயலிழந்தது. அதாவது அதன் கலக்குழுவினர் சிலர் கொல்லப்பட்டதோடு அதன் வேகமும் குறைந்த நிலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது சிங்களவரின் கடல் வியூகத்திற்கும் வான்தாக்குதலிற்கும் நடுவணிலும் வெடிப்படகொன்று ஊடறுத்துச் சென்று சிங்கள வியூகத்தின் பக்கவாட்டிலிருந்து மூன்றாவதாக நின்றிருந்த டோறா மீது நண்பகல் 12:45 மணிக்கு மோதியிடித்து அதை மூழ்கடித்தது. இரண்டாவது கடற்கரும்புலித் தாக்குதல் எப்பொழுது மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியவில்லை. தொடர்ந்த கடற்சமரில் கடற்படையின் மற்றொரு டோறா நண்பகல் 1:00 மணியளவில் திருத்த வேலைகளக்கு அப்பால் சேதமாக்கப்பட்டது. மற்றொன்று 1:50 மணியளவில் சேதமாக்கப்பட்டது. அத்துடன் சிங்களக் கடற்படையினர் தமது தளங்களுக்கு பின்வாங்கி ஓடினர். இத்தாக்குதலை கடற்புலிகளின் தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் செழியன் கடலில் வழிநடாத்தினார். இங்கு சிறிலங்காக் கடற்படையினர் இரு வேறு வியூகம் அமைத்துக் கடலில் இறங்கியிருந்தனர். கடற்புலிகளை கரைவரை அண்மித்துத் தாக்குவது அல்லது அவர்களை சீண்டி வலிந்திழுத்து தமக்கு ஏலுமான கடற்பரப்பில் வைத்துத் தாக்குவது (சூழ்ச்சிப்பொறி) ஆகியனவாகும். ஆனால் கடற்புலிகளின் எதிர் வியூகங்களால் அவர்களின் இரண்டு வியூகமும் பொய்த்திடவே சிங்களம் பின்வாங்கி ஓடியது. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) தொடரெண்: பி 413 சேதப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சேதப்பட்ட (மீளப்பாவிக்கேலாது) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: ஒரு அதிகாரி உட்பட 11 பேர் காயப்பட்டோர்: 2 பேர் வீரச்சாவடைந்த போராளிகள்: 13 பேர் கடற்கரும்புலிகள்: 4 பேர் தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் சங்கரி, லெப். கேணல் கலையரசி, மேஜர் ஈழவீரன், மேஜர் மதிமுகிலன் கடற்புலிகள்: 13 பேர் பதவிநிலை & தரநிலையுடனான பெயர்கள்: 'படகு கட்டளை அதிகாரி' லெப். கேணல் நிலவன் எ மாறன், கப்டன் ஈகைத்தீ, லெப். அகப்புலவன், 2ம் லெப். சந்தன அறிவன், 2ஆம் லெப். கோதைக்கொற்றவன், 2ஆம் லெப். செந்தமிழரசு, 2ஆம் லெப். அகக்கதிர், 2ஆம் லெப். ஈழத்திண்ணன், கப்டன் தப்தகி எ இந்து மற்றும் நான்கு பேர். சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 2 கல வகை: அறியில்லை ஆதாரம்: உதயன்: 24/11/2007 | தமிழ்நெற்: 26/12/2007 (Black Sea Tigers sink SLN Dvora attack craft in the seas off Delft island) | நெடுந்தீவுத் தாக்குதல் விரிப்பு நிகழ்படம் ******
  9. ஆண்டு: 2006 திகதி: சனவரி 7, 2006 அடிபாட்டுக் காலம்: வைகறை 2:30 மணியளவில் நிகழ்வு இடம்: சூடைக்குடா (ஃவௌல் முனை/ Foul Point) கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: திருகோணமலையின் துறைமுகத்திலிருந்து சுற்றுக்காவலுக்கென புறப்பட்ட இரு சுப்பர் டோறாக்களில் ஒன்றினை நோக்கி கடற்புலிகளின் இனந்தெரியா வகுப்பினைச் சேர்ந்த வெடிப்படகொன்று வந்துகொண்டிருந்தது. சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த டோறாக்களில் ஒன்றின் தகவல் தொடர்பு ஏந்தனம் ஒன்றில் 'முன்னால் வருகின்ற டோறா மீது மோதப்போகின்றோம்' என்ற தொனிப்பட தமிழில் தகவலொன்று முல்லைத்தீவு சல்லிப் பரப்பிலுள்ள தளமொன்றை நோக்கி அப்படகிலிருந்து அனுப்பப்பட்டது செவிமடுக்கப்பட்டது என்று சிறிலங்காக் கடற்படை தகவல் தெரிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து சிங்களக் கடற்படைத் தளத்திலிருந்த கடற்படை அதிகாரி அப்படகை சோதனையிடுமாறு டோறா ஒன்றிற்குக் கட்டளை பிறப்பித்தார். அதற்கிணங்க சுப்பர் டோறா ஒன்று அப்படகை நோக்கிச் சென்று அதை சோதனை செய்ய முயன்றது. அப்போது வெடிப்படகு அதன் மீது மோதி வெடித்துச் சிதறியதில் டோறா மூழ்கடிக்கப்பட்டது. இத்தாக்குதலை விடுதலைப்புலிகளே மேற்கொண்டனர் என்று சிறிலங்காக் கடற்படையினர் குற்றம் சாட்டினர். எனினும் இதனை முதலில் மறுத்த விடுதலைப்புலிகளின் அப்போதைய பேச்சாளர் தயா மாஸ்டர் இதற்கும் தமது அமைப்பிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென்று திட்டவட்டமாக மறுத்தார், தமிழ்நெற்றிற்குத் தெரிவிக்கையில். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த சிறிலங்கா கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹக்ரப் ஹோக்லண்ட், புலிகள் மீது ஐயமிருப்பினும் அவர்கள் இதை மறுத்துள்ளதால் இதற்கு அவர்கள் தான் பொறுப்பு என்று கூறிவிட முடியாது என்றும் கடற்படையினர் இது தொடர்பில் உசாவல் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இது போர் நிறுத்த மீறல் அல்ல, இது அவர்களுக்குள் இடம்பெறும் வழமையான சண்டைகளில் ஒன்றாகவே கருத முடியும் என்று பொருள்படும் படியாக மேலும் தெரிவித்தார். எப்படியாயினும் 2006 மாவீரர் வாரத்தில் வெளியிடப்பட்ட மாவீரர் பட்டியலில் இத்தாக்குதலில் இரு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: சுப்பர் டோறா விதம் - 3 சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 13 பேர் காயப்பட்டோர்: இரண்டு பேர் நீரினுள்ளிருந்து மீனவர்களால் காப்பாற்றப்பட்டனர். வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் வஞ்சி எ வஞ்சியின்பன், லெப்.கேணல் நளா எ அகரெழில் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 1 கல வகை: அறியில்லை ஆதாரம்: உதயன்: 8/01/2006 | தமிழ்நெற்: 7/01/2006 (SLN Dvora reported missing) | மாவீரர் பட்டியல் திகதி: மார்ச் 25, 2006 அடிபாட்டுக் காலம்: நண்பகல் நிகழ்வு இடம்: குதிரைமலையிலிருந்து 17 கடல்மைல் தொலைவிலுள்ள கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: ஆழ்கடலில் தரிபெற்றிருந்த தமிழீழக் கடற்படைக்குச் சொந்தமான வழங்கல் கப்பலிலிருந்து போர்த்தளவாடங்களை கரைக்கு ஏற்றிவருவதற்கென படகு ஒன்று சென்றது. அப்போது அதன் இயந்திரம் பழுதானதால் அதனால் திரும்பி வர இயலவில்லை. எனவே அதற்கான மாற்று இயந்திரம் மற்றொரு படகில் கடற்புலிகளால் அனுப்பப்பட்டது. இயந்திரத்தைக் கொண்டு சென்றுகொண்டிருந்த கடற்புலிகளின் படகை இடைநடுவில் கடற்படையினர் வழிமறித்தனர். அப்போது தாமும் படகு அதனினுள்ளிருந்த பொருட்களும் கடற்படையினரிடம் பிடிபடக்கூடாது என முடிவெடுத்தனர், போராளிகள். அதற்கமைவாக பொதுவாக வழங்கல் படகுகளோடு பொருத்தப்பட்டிருக்கும் வெடிபொருளை வெடிப்பித்து தவிபு மரபிற்கிணங்க தம்மையும் படகையும் அழித்துகொண்டனர். இவ்வெடியதிர்வால் தமிழரின் படகை நெருங்கிய சிங்களத்தின் டோறா மோசமாகச் சேதமடைந்து கடலினுள் மூழ்கியது. அதிலிருந்த பல சிங்களக் கடற்கலவர் நீரினுள் தூக்கி வீசப்பட்டனர், வெடியதிர்வால். "இந்நிகழ்விற்கும் தமக்கும் தொடர்பு கிடையாது" என்று தவிபு சமாதான செயலகப் பணிப்பாளர் மாவீரர் புலித்தேவன் 'ரொய்ட்டர்' செய்தி நிறுவனத்திற்கு ஆங்கிலத்தில் தெரிவித்தார். எனினும் கடற்படையின் இந்நிகழ்வில் புலிகள் தொடர்புபட்டிருப்பதாகவும் ஆனால் அவர்கள் தம்மீது நேரடியாகத் தாக்குதல் நடத்தவில்லையென்றும் தமது படகை அழிக்கும் போது ஏற்பட்ட வெடியதிர்வே தம் டோறா மூழ்கக் காரணமென்றும் தெரிவித்தார், சிறிலங்காவின் படைத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் அமரசிங்கே. மேலும் இதுவொரு அப்பட்டமான போர் நிறுத்த மீறல் என்றும் இதுதொடர்பில் தாம் கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடிட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த சிறிலங்கா கண்காணிப்புக் குழு, புலிகள் தாமிதில் தொடர்புபடவில்லை என்று மறுத்திருந்தாலும் அவர்களின் கடந்த கால செயற்பாடுகள் மூலம் அவர்களின் கைவரிசை மறுப்பை விலத்திட வேண்டும் என்று பொருள்படும் படியான கூற்றுரை ஒன்றை வெளியிட்டது. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 8 பேர் காயப்பட்டோர்: 11 பேர் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 6 பேர் தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் தமிழ்முரசு எ சுஜீந்திரன் மற்றும் பெயர் அறியில்லா 5 போராளிகள் ஆதாரம்: உதயன்: 26/03/2006 | தமிழ்நெற்: 25/03/2006 (Blast in seas off Kalpitti, 14 feared dead), 26/03/2006 (SLMM condemns Kalpitti attack, raises paramilitary issue) | மாவீரர் பட்டியல் திகதி: மே 11, 2006 அடிபாட்டுக் காலம்: எற்பாடு 4 மணியளவிலிருந்து சுமார் 2 மணி நேரம் டோறா மீது இடியன் மோதிய நேரம்: எற்பாடு 5:15 மணியளவில் நிகழ்வு இடம்: வடமராட்சிக் கிழக்குக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: தமிழீழக் கடலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விடுதலைப்புலிகளின் கடற்புலிகளை குழப்பும் நோக்கோடு வலிதாக்குதலில் ஈடுபட்ட டோறாக்கள் மீதான எதிர்த் தாக்குதல் இதுவாகும். இந்நிகழ்வில் சிங்களக் கடற்படைக்குச் சொந்தமான 'பேர்ள் குறுஸ் II' என்ற 710 படையினரை ஏற்றிவந்த படைக்காவிக் கப்பலுக்கு ஏமமாக வந்த இரு டோறாக்களே புலிகளை வலிந்து சீண்டி இழுத்தன. அதன் போது கடற்படையினர் மீது கடற்புலிகள் தம் படகுகளின் தற்காப்பிற்காக எதிர்த்தாக்குதலை நடாத்தினர். அப்போது ஒரு டோறா கடற்கரும்புலித் தாக்குதலால் 5:15 மணியளவில் மூழ்கடிக்கப்பட்டது. தொடர்ந்த கடற்சமரில் மற்றொன்று சேதத்துடன் பின்வாங்கிச் சென்றது. ஆனால் மேற்கொண்டு செல்லமுடியாத நிலையில் குடாரப்புக் கடற்பரப்பில் மூழ்கியது. இத்தாக்குதல் தொடங்கிய போது கடற்சமர் பரப்பிலிருந்து சில மைல்கள் தொலைவில் சென்றுகொண்டிருந்த பேர்ள் குறுஸ் கப்பல் பன்னாட்டுக் கடற்பரப்பிற்குத் தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டது, கடற்புலிகளால். அக்கப்பலில் சிறிலங்காக் கண்காணிப்புக் குழு ஆட்கள் 2 பேர் இருந்ததகைக் கடற்புலிகள் நோக்கியுள்ளனர். பேந்து, அக்கப்பல் இந்தியக் கடலோரக் காவற்படையின் ஏமத்துடன் காங்கேசன்துறையை வந்தடைந்தது. இக்கடற்சமரில் புலிகளின் தரப்பில் 15 வரையான படகுகளைத் தாம் கண்டதாக சி.க.கு. தகவல் தெரிவித்தது. கடற்புலிகள் தரப்பில் எப்படகும் மூழ்கடிக்கப்படவில்லை. இத்தாக்குதலின் பின்னர், சிறிலங்காக் கண்காணிப்புக் குழுவிற்கு விடுதலைப்புலிகள் அனுப்பிய கடிதத்தில் சிங்களக் கடற்படையின் கடற்கலங்களில் நீங்கள் ஏறவேண்டாம் என்றும் இதுவே அதற்கான கடைசி எழுதருகை (warning) என்றும் வலியுறுத்தினர். இதற்கு முன்னர் இன்னும் இரு தடவை இவ்வாறு சி.க.கு. விற்கு சிறிலங்காக் கடற்கலங்களில் ஏறவேண்டாம் என வலியுறுத்தி புலிகள் கடிதத்தாலும் வாய்மூலம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறிலங்காக் கண்காணிப்புக் குழுவானது சிறிலங்காவின் கடற்கோட்டத்தையும் வான்வெளியையும் அரச சார்பற்ற எவரும் கட்டுப்படுத்த முடியாது என்றும் புலிகளுக்கு கடலில் நடமாட எவ்வித உரிமையும் இல்லையென்றும் திடீரென்று சிறிலங்கா அரசிற்கு சார்பாக அறிக்கையிட்டது (அறிக்கையின் முழு விரிப்பையும் தமிழ்நெற்றில் வாசிக்குக), இக்கடற்சமர் முடிந்த கையோடு. சிறிலங்கா அரசிற்கு பக்கச்சார்பான சிறிலங்காக் கண்காணிப்புக் குழுவின் இவ் அறிக்கையை எதிர்த்து தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அறிக்கை வெளியிட்டார். அதன் ஓரிடத்தில், "எங்களுடைய ஆட்புலத்தின் சமர்க்களத்தில் அடைந்த தற்போதைய நிலையின் அடிப்படையில் தான் நாங்கள் சமாதான முன்னெடுப்பினுள் நுழைந்தோம். எமது தாயகத்தின் அருகிலுள்ள கடலையும் வான்வெளியையும் அணுகுவதற்கான இறையாண்மை உரிமைகள் குறித்து தீர்ப்பு வழங்க யாருக்கும் உரிமை இல்லை." என்றார் சீற்றமுடன் (அறிக்கையின் முழு விரிப்பையும் தமிழ்நெற்றில் வாசிக்குக). கடற்சமரிற்குப் பின்னர் 12ம் திகதி ஊடகவியலாளர்களைச் சந்தித்த பிரிகேடியர் சூசை, அரசியல்துறையின் அறிக்கையின் தொனிப்படத்தக்க கருத்தினையே தெரிவித்திருந்தார் (அறிக்கையின் முழு விரிப்பையும் தமிழ்நெற்றில் வாசிக்குக). படிமம்: பேர்ள் குறுஸ் II படைக்காவிக் கப்பல் | படிமப்புரவு: விக்கிபீடியா மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) உடனே மூழ்கியதின் தொடரெண்: பி 418 சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 15-17 பேர் காயப்பட்டோர்: அறியில்லை விடுதலைப்புலிகளின் ஆளணியினரில், வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 4 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் மலர்நிலவன், லெப். கேணல் அன்பு, லெப். கேணல் கவியழகி, லெப். கேணல் சஞ்சனா எ புவிச்செல்வி காயமடைந்த கடற்புலிகள்: 2 பேர் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 2 கல வகை: அறியில்லை ஆதாரம்: உதயன்: 12 & 13/05/2006 | தமிழ்நெற்: 11/05/2006 (SLN vessel destroyed in Vadamaradchi East), (LTTE has no rights at sea - SLMM), (LTTE refutes SLMM's controversial statement) & 12/05/2006 (SLMM has no mandate to rule on Tamils sovereign rights - Thamilchelvan) & 13/05/2006 (Soosai reiterates sovereign right to seas bordering Tamil Homeland) திகதி: சூன் 17, 2006 அடிபாட்டுக் காலம்: காலை 6:30 மணியளவில் தொடங்கியது நிகழ்வு இடம்: பேசாலைக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: விடுதலைப்புலிகளின் கடற்பரப்பினுள் நுழைந்து வலிதாக்குதலில் ஈடுபட்ட சிறிலங்காக் கடற்படையின் 4 புளு ஸ்ரார் வகுப்புப் படகுகள் மீது கடற்புலிகள் எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் கடற்படையினரின் 3 படகுகள் அழிக்கப்பட்டன, மற்றொன்று சேதப்படுத்தப்பட்டது. சேதப்பட்டதிலிருந்து கடற்புலிகள் சில படைக்கலன்களையும் கைப்பற்றினர். கடற்படையினரோ, தமது தரப்பில் மூன்று படகுகளே சேதமாக்கப்பட்டது என்று கூறி வழக்கம் போல புலிகளின் இழப்பினை ஊதிப் பெருப்பித்துக்காட்டினர். தமக்கு வான்படையினரும் சேணேவிப் பிரிவினரும் கடலில் கடற்புலிகளை எதிர்க்கத் துணை நின்றதாக மேலும் தெரிவித்தனர். இக்கடற்சமரில் கடற்புலிகள் தரப்பில் யாரும் வீரச்சாவடையவில்லை என அவர்கள் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. இவ் அடிபாட்டைத் தொடர்ந்து கடற்படையினர் வங்காலைப்பாடு மற்றும் பேசாலைக் கடற்கரையோரங்களின் மேல் வலுத்த தாக்குதலை மேற்கொண்டனர். இதில் பேசலையைச் சேர்ந்த 68 மீனவர்களின் 43 வெளியிணைப்பு மின்னோடிகள் (OBM), 70 மீனவக் குடில்கள் மற்றும் வலைகள் என 2.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. வங்காலைப்பாட்டைச் சேர்ந்த 68 மீனவர்களின் 13 வெளியிணைப்பு மின்னோடிகள், 36 ஆடியிழைப் படகுகள், மூன்று 3 1/2 தொன் இழுவலை படகுகள் மற்றும் முட்டுகள் என 2.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. இதற்கிடையில், அந்த காலகட்டத்தில் ஒன்பது வணிக நிறுவனங்கள் எரிக்கப்பட்டன, இதனால் சுமார் 5.7 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டதாக அறிக்கை வெளியிடப்பட்டது. கரையோரக் குடியிருப்புகள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெயர்ந்து சென்று மக்கள் தங்கியிருந்த வெற்றிமாதா தேவாலயத்தினுள் கைக்குண்டுகளை வீசியும் சுடுகலனால் சுட்டும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. குடியிருப்புகள் மீதான தாக்குதல்களில் கடற்றொழிலாளர்கள் நால்வரும் தேவயத் தாக்குதலில் மூதாட்டி ஒருவரும் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல்களில் மொத்தம் 54 பேர் காயமடைந்தனர். எரிக்கப்பட்ட படகு ஒன்றிலிருந்து சடலம் ஒன்றும் மீட்கப்பட்டிருந்தது. படிமப்புரவு: உதயன் மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 3 கடற்கல வகுப்புப் பெயர்: புளூ ஸ்ரார் (விதப்பான கல வகுப்பு அறியில்லை. இந்த புளூ ஸ்ரார் நிறுவனத்தால் படைத்துறைக்கு K-71, K-72, சீ கார்ட், ஆகிய வகுப்புக் கடற்கலங்கள் மற்றும் கட்டைப் படகு வகைகளும் உருவாக்கப்படுகின்றன) சேதப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: புளூ ஸ்ரார் (விதப்பான கல வகுப்பு அறியில்லை. இந்த புளூ ஸ்ரார் நிறுவனத்தால் படைத்துறைக்கு K-71, K-72, சீ கார்ட் ஆகிய வகுப்புக் கடற்கலங்கள் கட்டைப் படகு வகைகளும் உருவாக்கப்படுகின்றன) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 12 பேர் காயப்பட்டோர்: பலர். கடற்புலிகளின் ஆளணியினரில் காயப்பட்டோர்: 2 பேர் ஆதாரம்: உதயன்: 18 & 19/06/2006 | தமிழ்நெற்: 17/06/2006 (3 SLN boats sunk, 12 troopers killed - LTTE) & 21/06/2006 (Mannar SLN rampage causes $5m damage to property) திகதி: சூன் 28, 2006 அடிபாட்டுக் காலம்: நண்பகல் 11:25 மணியளவில் தொடங்கி 55 நிமிடங்களுக்கு தொடர்ந்து நீடித்தது. நிகழ்வு இடம்: குதிரைமலைக்கும் கற்பிட்டிக்கும் இடைப்பட்ட கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: தமிழீழக் கடற்பரப்பினுள் 15இற்கும் மேற்பட்ட படகுகளில் சுற்றுக்கவலில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளுக்கும் சிறிலங்காக் கடற்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் கடற்சமராகியது. தமிழீழக் கடற்பரப்பினுள் நுழைய முற்பட்ட கடற்படையினர் மீது கடற்புலிகள் தாக்குதல் மேற்கொண்டு விரட்டியடித்தனர். இதில் கடற்புலிகளின் சண்டைப்படகொன்றிலிருந்து மேற்கொள்ளப்பட்ட உந்துகணைத் (ஆர்.பி.ஜி பெரும்பாலும்) தாக்குதலில் கடற்படை படகொன்று எரிந்து நீரினுள் மூழ்கியது. புலிகளின் படகுகளுக்கு எவ்விதச் சேதமும் ஏற்படவில்லை. இதன் பின்னர் புத்தளம் நகரினுள் (முஸ்லிம்களே இங்கு பெரும்பான்மை) நுழைந்த கடற்படையினரின் வானை நோக்கி வேட்டுக்கள் தீர்த்தபடி வீதியில் நின்றிருந்த பொதுமக்களை விரட்டியடித்தனர். அனைத்து கல்வி மற்றும் வணிக நிறுவனங்களும் 12 மணியுடன் மூடப்பட்டன. கற்பிட்டிக் கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் கரையை நோக்கி கட்டாயப்படுத்தப்பட்டு அனுப்பப்பட்டனர். மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 5 பேர் காயப்பட்டோர்: பலர். கடற்புலிகளின் ஆளணியினரில் காயப்பட்டோர்: 2 பேர் வீரச்சாவடைந்தோர்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்கள்: அறியில்லை ஆதாரம்: உதயன்: 29/06/2006 | தமிழ்நெற்: 28/06/2006 (5 SLN sailors, 1 LTTE cadre killed in sea clash - LTTE) திகதி: ஓகஸ்ட் 1, 2 & 3, 2006 அடிபாட்டுக் காலம் & நிகழ்வு இடம்: முதற் கடற்சமர்: ஓகஸ்ட் 1 எற்பாடு 2:25 - 3:00 மணிக்கும் இடைப்பட்ட வேளையில் நடந்து முடிந்தது | கொக்கிளாய்க் கடற்பரப்பு & உட்துறை முகாம் கடற்பரப்பு இரண்டாம் கடற்சமர்: ஓகஸ்ட் 1 எற்பாடு 5:30 மணி முதல் மாலை 7:00 மணி வரை | திருமலைத் துறைமுகத்தின் கடற்பரப்பு மூன்றாம் கடற்சமர்: ஓகஸ்ட் 1 மாலை 9:00 மணி முதல் ஓகஸ்ட் 2 வைகறை 3:30 மணி வரை | திருமலைக் கடற்பரப்பு நான்காம் கடற்சமர்: ஓகஸ்ட் 3 காலை வேளையில் | மூதூர் இறங்குதுறைக்கு அண்மையான கொட்டியாரக்குடா கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: இது திருகோணமலையில் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட (ஓகஸ்ட் 1 - ஓகஸ்ட் 5) மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையின் கடற்சமர்கள் பற்றிய தகவலாகும். ஓகஸ்ட் முதலாம் திகதி எற்பாடு 2:25 மணியளவில் 850 இற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினரை திருகோணமலைத் துறைமுகத்தை நோக்கி ஏற்றிக்கொண்டு வந்தது, 'ஜெட் லைனர்' என்ற கலப்பெயரைக் கொண்ட படைக்காவிக் கப்பல். அது துறைமுகத்தை அண்மித்ததும் விடுதலைப்புலிகள் துறைமுகத்தை நோக்கி 122மிமீ சேணேவி எறிகணைகள் 36ஐ ஏவினர். ஏவிய எறிகணைகள் அங்குள்ள கடற்படைக் கூட்டுப்படைத்தளத்தினுள் இருந்த கடற்படைக் கல்லூரியில் வீழ்ந்து வெடித்ததில் 6 கடற்படையினர் கொல்லப்பட்டதுடன் 30இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதால் கடற்படைத் தலைமையகமும் கடும் சேதமடைந்தது. இவ் எறிகணை வீச்சால் துறைமுகத்தினுள் நிப்பாட்டப்பட்டிருந்த பாவிக்கப்படாத சுடுகலப் படகொன்று அழிக்கப்பட்டது என்று கொழும்பு கடற்படை வட்டாரங்கள் தெரிவித்ததாக தமிழ்நெற் செய்தி வெளியிட்டது. முதலாவது கடற்சமர் எற்பாடு 2:25இற்கும் 3:00 மணிக்கும் இடைப்பட்ட வேளையில் நடைபெற்றது. எறிகணை வீச்சு நடந்துகொண்டிருந்த போது கொக்கிளாய் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளின் 5 படகுகள் கப்பலோடு வந்த டோறாக்களோடு மிண்டின. சிங்களக் கடற்படைக்கு சிறிலங்கா வான்படையும் வான் ஆதரவை நல்கியது. அப்போது வெடித்த கடற்சமரில் ஒரு டோறாக் கலம் மூழ்கடிக்கப்பட்டதோடு அதிலிருந்தோரில் 8 கடற்படையினர் கொல்லப்பட்டனர் என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவித்ததாக தமிழ்நெற் செய்தி வெளியிட்டது. இக்கடற்சமரில் கடற்புலிகள் தரப்பில் ஒரு கடற்புலி வீரச்சாவடைய இன்னும் சிலர் காயப்பட்டததாக புலிகளின் முதல் தகவல் அறிக்கை தெரிவிக்கின்றது. துறைமுகத்தின் மீதான எறிகணை வீச்சாலும் கடற்புலிகளின் தாக்குதலாலும் பின்வாங்கிய கப்பல் பன்னாட்டு கடற்பரப்பை நோக்கிச் சென்றது. பின்னர் அது, மீண்டும் துறைமுகத்தை நோக்கி வந்த போது, எற்பாடு 5:30 மணியளவில், துறைமுகக் கடலில் கப்பலை வழிமறித்து கடற்புலிகள் சுற்றிவளைத்துத் தாக்கினர். அப்போது கப்பலிற்கு ஏமம் வழங்கவென வந்த டோறாக்களோடும் பொருதினர். இக்கடற்சமர் மாலை 7:00 மணி வரை நீடித்தது. இக்கடற்சமரில் கடற்புலிகள் தரப்பில் ஐந்து கடற்புலிகள் வீரச்சாவடைய இன்னும் சிலர் காயமுற்றதாக புலிகளின் முதல் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது. இக் கடற்சமரில் கடற்புலிகளின் சண்டைப்படகுகள் 3 கடும் சேதமடைந்து திருத்த வேலைகளுக்காக கட்டியிழுத்துச் செல்லப்பட்டன. இதனால் மீண்டும் ஆழ்கடலை நோக்கித் திரும்பிய கப்பல், மீண்டும் 9:00 மணியளவில் சிறிலங்கா வான்படையின் வான் ஆதரவோடு துறைமுகத்தை நோக்கித் திரும்பியது. அப்போது திருகோணமலைக் கடற்பரப்பில் வைத்து மறுபடியும் கடற்புலிகளால் வழிமறிக்கப்பட, பெரும் கடற்சமர் மூண்டது. முடிவில், கப்பல் துறைமுகத்தை அடைந்ததாக சிறிலங்க அரசு தெரிவித்தது. இக்கடற்சமரில் கடற்புலிகள் தரப்பில் இரு போராளிகள் வீரச்சாவடைந்ததாக புலிகளின் முதல் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது. திருமலைத் துறைமுகக் கடற்பரப்பிலும் திருமலைக் கடற்பரப்பிலும் நடைபெற்ற கடற்சமர்களில் சிங்களக் கடற்படையின் இரு டோறாக்கள் சேதமுற்றதாகவும் மற்றொரு டோறா மெல்லிய சேதமடைந்ததாகவும் தவிபு படைத்துறைப் பேச்சாளர் திரு இளந்திரையன் தெரிவித்தார். இம்மூன்று கடற்சமர்களிலும் ஒரு கலத்தொகுதியை லெப். கேணல் நிலவன் வழிநடாத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து 2ம் திகதி & 3ம் திகதி சிறிலங்காக் கடற்படையினரின் திருமலை துறைமுகத்திலிருந்ததான மூதூர் இறங்குதுறை நோக்கிய கடல்வழி தரையிறக்கத்திற்கு எதிரான கடற்புலிகளின் மற்றொரு கடற்சமர் நடைபெற்றது. இக்கடற்சமரிற்கு கடற்புலிகள் அவசரவசரமாக ஆயத்தமாகிச் சென்றனர். இதன்போது லெப். கேணல் நிலவனைக் கட்டளை அதிகாரியாக் கொண்ட இரு சண்டைப்படகுகள் மட்டுமே முதலில் சென்று கடற்படையினரை எதிர்த்தன. பின்னர் மேற்கொண்டு ஏனைய சண்டைப்படகுகளும் வந்து மிண்டி பல மணிநேரம் நகர்வினைக் கட்டுப்படுத்தினர். இக்கடற்சமரின் போது 3ம் திகதி காலை ஒரு கடற்படைப் படகு மூழ்கடிக்கப்பட்டதாக தவிபு படைத்துறைப் பேச்சாளர் திரு. இளந்திரையன் தெரிவித்தார். இவ்விரு நாட்களிலும் கொட்டியாரக்குடாகடற்பரப்பில் நடைபெற்ற கடற்சமரில் ஒன்றுக்கும் மேற்பட்ட கடற்புலிகள் வீரச்சாவடைந்திருந்தனர். கடற்புலிகளின் ஒரு சண்டைப்படகும் கடும் சேதமடைந்திருந்தது. மூதூரில் மூழ்கிய படகு 'டோறா' என்று இம் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை முடிந்த பின்னர் அது தொடர்பான ஊடக வெளியீட்டின் போது தவிபு படைத்துறைப் பேச்சாளர் திரு இளந்திரையன் அறிவித்தார். ஆனால் சிறிலங்கா அரசோ தமது கடற்கலங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் மூச்சுக்கூட விடவில்லை. மாறாக தமிழ்நெற்றில் வெளிவந்தவை பொய்யானவை என்று மட்டும் பரப்புரை செய்தது. படிமங்கள்: ஜெட் லைனர் படைக்காவிக் கப்பல் | வேசுபுக்கு வழியாக மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 3 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) - 2 (கடற்சமர்களின் போது மூழ்கடிக்கப்பட்டன) கடற்கல வகுப்புப் பெயர்: பாவனையில் இல்லாத சுடுகலப் படகு (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை) - 1 (எறிகணை வீச்சில் அழிக்கப்பட்டது) சேதமாக்கப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சேதமாக்கப்பட்ட (மெல்லிய) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: எறிகணை வீச்சால்: ஆகக் குறைந்தது 6 பேர் கடற்சமரில்: 8+ பேர் காயப்பட்டோர்: எறிகணை வீச்சால்: ஆகக் குறைந்தது 30 பேர் கடற்சமரில்: பலர் கடற்புலிகளின் ஆளணியினரில் காயப்பட்டோர்: 'கலத்தொகுதி கட்டளை அதிகாரி' லெப். கேணல் நிலவன் உட்பட பலர் வீரச்சாவடைந்தோர்: ஆகக் குறைந்தது 9 கடற்புலிகள் (இது தவிபு இன் முதல் தகவல் அறிக்கையின் படி கிடைத்த மாவீரர் பட்டியல். நான்காம் ஈழப்போரின் மாவீரர் பட்டியல் முற்றாகக் கிடைக்காமல் ஊழியால் அழிந்துபோனதால் முழு வீரச்சாவு விரிப்பையும் என்னால் அறியமுடியவில்லை). முதற் கடற்சமர்: மேஜர் இசைக்கலை இரண்டாம் கடற்சமர்: 'படகு கட்டளை அதிகாரி' லெப். கேணல் அலையழகி, 'படகு கட்டளை அதிகாரி' லெப். கேணல் சூரியா, 'படகு கட்டளை அதிகாரி' லெப். கேணல் நிலாவேந்தி, கப்டன் இசையரசன், வீரவேங்கை சூட்டி. மூன்றாம் கடற்சமர்: கப்டன் இசையருவி, வீரவேங்கை வீரக்கோன் நான்காம் கடற்சமர்: 'படகு கட்டளை அதிகாரி' லெப். கேணல் தென்றல்மாறன் ஏனைய கடற்புலிகள்: லெப். கேணல் உதயராணி எ வேதினி ஆதாரம்: உதயன்: 2, 3, 4, 5, & 6/08/2006 | தமிழ்நெற்: 1/08/2006 (Shells hit Trinco navy base, 14 killed, Dvora destroyed), (SLN ship under siege off Pulmoddai coast), 03/08/2006 (LTTE to hand over bodies of 40 SLA troopers) | கட்டுரை: லெப். கேணல் நிலவனின் வாழ்க்கை வரலாறு | த.தே.தொ. ஆவணப்படம்: நடந்து வந்த பாதையில் கடந்து சென்ற 2006 திகதி: செப்டெம்பர் 1 & 2, 2006 அடிபாட்டுக் காலம்: மாலை 9:00 மணியளவிலிருந்து வைகறை 4:00 மணியளவில் நிகழ்வு இடம்: முனைக் (பருத்தித்துறை) கடற்பரப்பு & மணல்காடு கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: கடற்புலிகளுக்கும் கடற்படையினருக்கும் இடையில் குறித்த கடற்பரப்பில் வெடித்த கடற்சமரில் சிங்களக் கடற்படையின் இரு டோறாக்கள் கடற்புலிகளால் சுட்டு தாட்டப்பட்டது. இத்தாக்குதலில் கடற்கரும்புலிகள் யாரும் பயன்படுத்தப்படவில்லை. மேற்கொண்டு நடந்த கடற்சமரில் சேதமடைந்த கடற்படை டோறா காங்கேசன் துறைமுகம் நோக்கி இழுத்துச் செல்லப்பட்டது. யாழிலுள்ள சுப்பர்மடம், கொட்டடி, முனை, கற்கோவளம், மூர்க்கம் மற்றும் புனிதநகர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த சுமார் 900 குடும்பங்கள், புனித அந்தோனியார் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்ததால், கரையோரத்திலுள்ள சிறிலங்கா படைத்துறை நிலைகள் சூட்டிற்குட்பட்டதால், கரையோர வலுவெதிர்ப்புக் கோட்டிலிருந்து சிறிலங்கா தரைப்படையினர் தற்காலிகமாக தங்கள் நிலைகளைக் காலி செய்தனர். கரையோரத்தில் தற்காலிகமாக தமது நிலைகளை விட்டு வெளியேறிய சிறிலங்கா தரைப்படையினர் காலை 5:00 மணியளவில் தங்கள் நிலைகளுக்குத் திரும்பியதுடன், வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்களும் காலை 7:00 மணியளவில் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைக் காண முடிந்தது. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சேதமாக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், காணாமல்போனோர்: 30 பேர் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: அறியில்லை ஆதாரம்: உதயன்: 02/09/2006 | தமிழ்நெற்: 1/09/2006 (Clashes erupt off Point Pedro coast), 2/09/2006 (2 SLN Dvora vessels sunk, one damaged in Jaffna) திகதி: செப்டெம்பர் 24 & 25, 2006 அடிபாட்டுக் காலம்: மாலை 9:45 மணியளவிலிருந்து தொடர்ந்து ஐந்து மணி நேரம் நிகழ்வு இடம்: புல்மோட்டைக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: தென் தமிழீழத்திலிருந்து வன்னிக்குப் போராளிகளை ஏற்றிவரும் நடவடிக்கை ஒன்றின் போது ஏற்பட்ட கடற்சமர் இதுவாகும். ஏற்றிக்கொண்டுவரச் சென்ற போதே முட்டுப்பட்டுவிட்டனரா இல்லை திரும்பும் போது முட்டுப்பட்டனரா என்பது தெரியவில்லை. இவ் வெய்யக் கடற்சமரில் சிறிலங்காக் கடற்படையின் 20இற்கும் மேற்பட்ட கடற்கலங்களும் கடற்புலிகளின் பல்வேறு வகைப் படகுகளைக் கொண்ட வலுவூட்டப்பட்ட 25 படகுகளும் பொருதின. கடற்புலிகள் தரப்பில் பல படகுகள் ஆளணி காவிப் படகுகளாகும் (நடவடிக்கைக்கு ஏற்ப). ஏற்றிக்கொண்டு வரப்பட்ட தரைப்புலிகளில் சிலரும் வீரச்சாவடைந்தனர். ஆயினும் சேதங்களுக்கு நடுவணிலும் வெற்றிகரமாக தென் தமிழீழப் போராளிகள் வன்னிக்கு ஏற்றிப்பறிக்கப்பட்டனர். ஆனால் கடற்புலிகளின் கடற்கலங்களுக்கு ஏற்பட்ட சேதவிரிப்புகள் தெரியவில்லை. சேதப்பட்ட (கடுமையாக) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சேதமாக்கப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: ஆகக் குறைந்தது 5 பேர் வீரச்சாவடைந்த போராளிகள்: 6+ பேர் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 'படகு கட்டளை அதிகாரி' லெப். கேணல் சீராளன், 'படகு கட்டளை அதிகாரி' லெப். கேணல் புயலினி, கப்டன் தாயகன் மற்றும் பலர் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: மேஜர் மைந்தனா, கப்டன் கதிர்மதி வீரச்சாவடைந்த தரைப்புலிகள்: லெப். கேணல் செவ்வேள் மற்றும் சிலர் ஆதாரம்: உதயன்: 02/09/2006 | தமிழ்நெற்: 1/09/2006 (Clashes erupt off Point Pedro coast), 2/09/2006 (2 SLN Dvora vessels sunk, one damaged in Jaffna) திகதி: ஒக்டோபர் 18, 2006 அடிபாட்டுக் காலம்: காலை 7:45 மணியளவில் தொடங்கப்பட்டு இரண்டு மணி நேரம் நடைபெற்றது நிகழ்வு இடம்: தட்சின துறைமுகம், காலி நிகழ்வு விரிப்பு: நடவடிக்கை பற்றிய தகவல்: மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 3 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) - 1 கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் - 2 செயலிழக்கச் செய்யப்பட்ட கடற்கலங்கள் - 1 கடற்கலப் பெயர்: பராக்கிரமபாகு கல வகை: கொடிக்கப்பல் (பழையது) சேதமாக்கப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கலப் பெயர்: அறியில்லை கல வகை: எரிவாயு காவி மற்றும் ஒரு இனந்தெரியாக் கடற்கலம் சிறிலங்கா கடற்படை ஆளணியினரில் (சிறிலங்கா அரச தகவலின் படி), கொல்லப்பட்டோர்: 3 பேர் காயப்பட்டோர்: 14 பேர் சிறிலங்காப் பொதுமக்களில் காயப்பட்டோர்: 15 பேர் தவிபு தரப்பில் நடவடிக்கையில் பங்கேற்றோர்: 15 பேர் (கடற்கரும்புலிகள், கடற்புலிகள், மற்று படையப் புலனாய்வுப் பிரிவினரைக் கொண்ட 5 படகுகள்) வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 8 பேர் தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் அரவிந்தா, மேஜர் தமிழ்வேந்தன், மேஜர் அறிவுக்குமரன், மேஜர் கடலவன், மேஜர் முகிலன், மேஜர் வன்னிமன்னன், கப்டன் இசையின்பன், கப்டன் கண்ணாளன் ஆதாரம்: உதயன்: 19/10/2006 | தமிழ்நெற்: 18/10/2006 (Naval base in Galle attacked, mob riots in port city) | கட்டுரை: கடற்புலிகளின் துணைக் கட்டளையாளர் (தரநிலை அறியில்லை) விடுதலை | navypedia.org (srl_cf_parakramabahu) | போரிலக்கியப் பாடல்: காலித் துறைமுகம் மீதில் புகுந்தவர் - இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 12 திகதி: ஒக்டோபர் 20, 2006 அடிபாட்டுக் காலம்: மாலை 6:30 மணியிலிருந்து 7:30 மணிவரை முனையில், பின்னர் 7:30 மணிக்குமேல் (மொத்த நிமிடங்கள் அறியில்லை) மணல்காட்டில் நிகழ்வு இடம்: முனைக் (பருத்தித்துறை) கடற்பரப்பு & மணல்காடு கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: நாகர்கோவில் கடற்பரப்பில் நின்றிருந்த கடற்புலிகளின் கடற்கலங்கள் மீது மாலை 6:30 மணியளவில் தாக்குதல் நடாத்திய சிறிலங்காக் கடற்படையின் கலத்தொகுதி மீது கடற்புலிகள் எதிர்த்தாக்குதல் நடாத்தி பருத்தித்துறைக் கடற்பரப்பு வரை விரட்டியடித்தனர். இக்கடற்சமர் மாலை 7:30 வரை நீடித்தது. அவர்கள் தளம் திரும்பும் வேளையில் மணல்காடு கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா வான்படையின் தாக்குதல் உலங்குவானூர்திகளும் கடற்படையினரும் கடற்புலிகளை வழிமறித்துத் திரும்பவும் வலிதாக்குதல் மேற்கொண்டனர். கடற்புலிகளும் எதிர்த்துப் பொருதினர். இதே நேரத்தில் வரணையிலிருந்த படையினர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பரப்புகளை நோக்கி சேணேவி எறிகணை வீச்சையும் மேற்கொண்டனர். இக்கடற்சமரில் கடற்புலிகளின் 15 வரையிலான படகுகள் பங்கெடுத்ததாக சிறிலங்காக் கடற்படை தெரிவித்தது. கடற்புலிகள் தரப்பில் இழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. சேதமாக்கப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 21/10/2006 | தமிழ்நெற்: 20/10/2006 (Two SLN Dvora vessels damaged in sea clash - LTTE) திகதி: நவம்பர் 9, 2006 அடிபாட்டுக் காலம்: எற்பாடு 5:30 மணியிலிருந்து மாலை 7:00 மணிவரை நிகழ்வு இடம்: முனைக் (பருத்தித்துறை) கடற்பரப்பு & வல்வெட்டித்துறைக் கடற்பரப்பு முதலாவது டோறா மீது இடியன் மோதிய நேரம்: எற்பாடு 5:35 மணியளவில் நிகழ்வு விரிப்பு: கடற்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள நாகர்கோவில் கடற்பரப்பில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளை ஆத்திரமூட்டி தாக்குதல் நடத்த முயன்றனர், சிறிலங்காக் கடற்படையினர். இதனால் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளுக்கு காவலாக நின்ற கடற்புலிகள் கடற்படையினர் மீது எதிர்த்தாக்குதலை மேற்கொண்டனர். தொடர்ந்த கடற்சமர் பருத்தித்துறையின் முனைக் கடற்பரப்பினுள் விரிந்தது. அப்போது அங்கு வைத்து சிறிலங்காக் கடற்படையின் டோறா மீது எற்பாடு 5:35 மணியளவில் கடற்கரும்புலித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. தாக்குதலால் அது முற்றாக மூழ்கடிக்கப்பட்டது. பின்னர் பின்வாங்கி ஓடிய கடற்படையினரை துரத்திச் சென்ற கடற்புலிகள் வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் வைத்து நடத்திய தாக்குதலில் (கடற்கரும்புலித் தாக்குதலா என்பது தெரியவில்லை) இன்னொரு டோறா சேதமடைந்தது. இது நடந்தது 6 மணியளவில் ஆகும். அது மூழ்க முன்னர் அதிலேறிய கடற்புலிகளால் அதிலிருந்த சில படைக்கலன்கள் கழட்டி எடுத்து கைப்பற்றப்பட்டன. கடற்புலிகளால் சிறிலங்காக் கடற்படையின் சடலம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. பின்னர் தொடர்ந்த கடசமரில் கடற்படையினரை காங்கேசன் துறைமுகம் வரை கடற்புலிகள் விரட்டிச் சென்றனர். அப்போது மற்றொரு டோறா சேதப்படுத்தப்பட்டது. தொடர்ந்த கடற்சமர் மாலை 7:00 மணியோடு ஓய்ந்தது. பின்னர் கடற்புலிகள் பாதுகாப்பாக தளம் திரும்பினர். இவற்றை கரையிலிருந்து கண்ட ஒருவர் சாட்சியளித்துள்ளார், தமிழ்நெற்றிற்கு. கடற்புலிகளின் எந்தவொரு படகும் மூழ்கடிக்கப்படவில்லை. கடற்புலிகளின் கடற் தாக்குதலை லெப். கேணல் செழியன் வழிநடாத்தினார். இக்கடற்சமரின் போது சிறிலங்கா கடற்படைக்கும் உதவியாக சிறிலங்கா வான்படையும் களமாடியது. அதன் எம்.ஐ. 24 தாக்குதல் உலங்குவானூர்திகளும் கிபிர் தாரை வானூர்திகளும் தாக்குதலில் ஈடுபட்டன. படிமங்கள்: மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) தொடரெண்: பி 416, பி 461 சேதமாக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 25 பேர் காயப்பட்டோர்: அறியில்லை போர்க்கைதிகளானோர்: 4 பேர் பி 461இலிருந்து பிடிபட்டோரின் பெயர் விரிப்பு: இந்திக்க பிரசாந்த பிட்டியகுபுருவ, 30, (சிறிலங்கா கடற்படை பதிவு எண்: EE17275) 37C இன் இயந்திரப் பொறியியலாளர், கிரிந்திஹேவ, புண்டுலு ஓயா, நுவரெலியா, சமந்த குமார ஹேவகே, 28, (சிறிலங்கா கடற்படை பதிவு எண்: XS 25749), முன்னணி கடற்கலவர், பேலியகந்தே, கலேவேல, கமல் கேமந்த குமாரசிறி, 26, (சிறிலங்கா கடற்படை பதிவு எண்: XS 29966) பதவிய, பராக்கிரமபுர, அனுராதபுரம். பி 416இலிருந்து பிடிபட்டோரின் பெயர் விரிப்பு: அனில் பிரியங்கே மடதெனிய, 21, (சிறிலங்கா கடற்படை பதிவு எண்: SS38801), சாதாரண கடற்கலவர், நாலந்த, மாத்தறை வீரச்சாவடைந்த போராளிகள்: 5 பேர் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 4 பேர் தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் தாரணி, மேஜர் லவனிதா, கப்டன் சாந்தினி, லெப்டினன்ட் அகவாணன் ஆதாரம்: உதயன்: 10/11/2006 | தமிழ்நெற்: 09/11/2006 (Sea Tigers, Sri Lanka Navy clash in Trincomalee sea), (Sea Tigers sink 2 Sri Lankan attack crafts, seize armament, capture troopers) திகதி: நவம்பர் 18, 2006 அடிபாட்டுக் காலம்: மாலை 6:30 மணியிலிருந்து 8:30 மணிவரை நிகழ்வு இடம்: விடத்தல்தீவுக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: கடற்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள விடத்தல்தீவுக் கடற்பரப்பினுள் நுழைந்து அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளை ஆத்திரமூட்டி தாக்குதல் நடத்த முயன்றனர், சிறிலங்காக் கடற்படையினர். உடனே பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளுக்குக் காவலாக நின்ற கடற்புலிகள் எதிர்த்தாக்குதலை மேற்கொண்டனர். கடற்படையினரின் வலிதாக்குதலுக்கு ஆதரவாக சிறிலங்கா வான்படையின் எம்.ஐ. 24 தாக்குதல் உலங்குவானூர்திகள், கிபிர் மற்றும் மிக் தாரை வானூர்திகள் தாக்குதலில் ஈடுபட்டன. விடத்தல்தீவில் தொடங்கிய கடற்சமர் தலைமன்னார் சிறிலங்காக் கடற்படைத் தளம் வரை நீண்டது; கடற்புலிகள் கடற்படையினரைத் துரத்திச் சென்றனர். கடற்படையின் படகுகளில் மாலை 6:55 மணிக்கு ஒன்ரும் மாலை 7:50 மணிக்கு ஒன்றும் மூழ்கடிக்கப்பட்டன. இரண்டவது மூழ்கடிக்கப்பட்ட போது சிறிலங்காக் கடற்படைக்கு வலுவூட்டம் நடைபெற்றது. தொடர்ந்த கடற்சமரில் மற்றொரு சுற்றுக்கவல் படகும் சேதமடைந்தது. இக்கடற்சமரில் கடற்புலிகளின் சண்டைப்படகுகளுக்கோ ஆளணியினருக்கோ இழப்புகள் ஏற்படவில்லை. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: உட்கரை சுற்றுக்காவல் கலம் சேதமாக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: உட்கரை சுற்றுக்காவல் கலம் சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: ~10 பேர் காயப்பட்டோர்: அறியில்லை காயமடைந்த கடற்புலிகள்: 3 பேர் ஆதாரம்: உதயன்: 19/11/2006 | தமிழ்நெற்: 18/11/2006 (Sri Lanka Navy, Sea Tigers clash in Mannar seas) ******
  10. அரசியல்துறை நடுவப்பணியகத்தில் இரு போராளிகள் பாதுகாப்பிற்கு நிற்கின்றனர் கிளிநொச்சி பேராசை பிடித்த இழிபிறவிகளே... படிமம் வேண்டுமெனில் அப்படியே பயன்படுத்துங்கள். ஆனால் இந்தப் படிமங்களை எடுத்து உங்கள் ஐந்து சதத்திற்கும் பிரியோசனமில்லாத வலைத்தளங்களின் பெயர்களை எழுதி வெளியிடவேண்டாம். ஒரு படிமத்தினை உருவி எடுக்க மணித்தியாலங்களில் செலவு ஆகிறது. அதைத் தன்னார்வத் தொண்டர்கள் உருவி எடுத்து மக்களிடம் ஒப்படைக்க இந்தப் பேராசைப் பிடித்த இழிஞர்கள் தங்களிற்குத் தேவையான பெயர்களை எழுதி மீள்வெளியீடு செய்வது எரிச்சலூட்டுகிறது. எமது இனத்தின் வரலாற்றில் மிகவும் முக்கியமான படிமங்களில் சில இவையாகும்... இதிலை இந்த இரண்டு போராளிகளும் அணிந்திருக்கும் சீருடையே விடுதலைப்புலிகளின் இறுதித் தரைப்புலி உருமறைப்புச் சீருடை விருத்து (version) ஆகும். மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஆகையால் பாதுகாத்து வையுங்கள், வரலாற்றில் ஆர்வமுடையோர். 23/05/2006 05/2006 படிமத்தை உருவித் தந்த துவிட்டர் கணக்கிற்கு நன்றி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.