Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. தீர்க்க தரிசன தலைமை என்று தம்மை சொல்லிக்கொண்ட தலைவராலேயே தமிழ்மக்களின் வளங்களை முழுக்க உபயோகித்து பாரியளவு மக்களை பலி கொடுத்து இரண்டு தலை முறை பிள்ளைகளையும் பலியிட்டும் தொடங்கிய இடத்தில் இருந்து பல மடங்கு பின்னோக்கி Reverse gear ல் கொண்டு விட்டு விட்டு சென்ற பிறகு சாதாரண அரசியல்வாதி சுமந்திரன் எம்மாத்திரம்.
  2. மாங்காய் பறிக்க முடியாததை விட மோசமானது, முட்டள்தனமானது என்ன வென்றால், ஒரு சில மாங்காய்களையாவது எட்டிப் பறிப்பதற்கான சந்தர்பங்கள் கிடைத்த போதும், எமக்கு மாங்காய் வேண்டாம் எட்டாத உயரத்தில் இருக்கும் தேங்காய்தான் வேணும் என்று அடம் பிடித்து கடைசியில் மாங்காயும் இல்லாமல் தேங்காயும் போன லூசுத்தனம் தான்.
  3. தமிழ் தேசியத்தின் இன்னோரு குணாம்சம் என்னவென்றால், தான் செய்த செயல்களால் விளைந்த விளைவுகளுக்கு நேர்மையுடன் பொறுப்பேற்று அதை திருத்திக் கொள்ளாமல் எப்போது பார்ததாலும் தனது தவறுகளுக்கு அடுத்தவர் மீது பழி போட்டு தப்பிக்கும் மன நிலை. இந்த தப்பிக்கும் மன நிலை உங்கள் கருத்திலும் தெளிவாக தெரிகிறது.
  4. பிரச்சனைகளை இனங்கண்டு அதை உரிய முறையில் தீர்ப்பதை விடுத்து செய்தி மிகைப்படுத்துதல் வெற்று உசுப்பேற்றுதல், வெற்று கோசங்கள், கற்பனைகள் மூலம் கட்டி எழுப்பப்பட்டதே தமிழ் தேசிய கோமாளிக் கருத்தியல். கடந்த 15 வருடங்களில் சமூக ஊடக வருகையால் பொய் செய்திகள் விஸ்வரூபம் எடுத்துள்ளதே யொழிய அத்தனையும் காலாகாலமாக அந்த காலத்திற்கேற்ற முறையில் தமிழ் தேசியம் பேசியவர்களிடம் இருந்தவையே. அதனாலேயே அதனால் ஒரு அங்குலம் கூட முன்னே நகர முடியமல் நின்ற இடத்தில் அப்படியே நின்று குறளி வித்தை காட்டுகின்றனர். வெட்டி வீரம் பேசுவதும் பின்னர் புலம்புவதும் தமிழ் தேசிய அரசியலில் மாறாத சுற்றுவட்டம். இந்த வட்டத்தை சுற்றிச் சுற்றியே தமிழ் தேசியம் பேசும் தாயக/ புலம் பெயர் கோமாளிகள் பொழுது போக்குகின்றனர்.
  5. இதில் ஏக்கிய ராஜ்ஜிய அதாவது பிரிக்கப்பட முடியாத நாட்டிற்குள் அதிகார பரவலாக்கல் என்பதை பற்றி சுமந்திரன் பல முறை பேசி உள்ளார். அப்படியான அரசியலமைப்புக்கக முயன்றும் உள்ளார். அதில் தப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் நீங்கள் கூறிய மற்றய விடயங்களை சுமந்திரன் பேசினார் என்பதற்கான காணொளி ஆதாரங்கள் உண்டா? இருக்கு என்று சொல்பவர் தான் ஆதாரம் தரவேண்டும் என்ற உங்கள் கூற்றுப்பட அந்த காணொளி ஆதாரங்களை இங்கு இணைப்பீர்கள் என நம்புகிறேன். தாங்களே செய்திகளை உருவாக்கி தாமே அதை பிரசுரித்து பின்பு அதையே ஆதாரமாக தமிழர்களுக்குள் மட்டும் காட்டும் கேவலமான அணுகுமுறை தீவிர தமிழ் தேசியம் பேசுபவர்களிடம் உள்ள ஒரு பொதுவான குணாம்சம். அதனால் தான் கடந்த 75 ஆண்டுகளாக சற்றும் முன்னேறாமல் அதே இடத்தில் நின்றபடி அதே விடயங்களை திருப்பி திருப்பி பேசி ஜோக் அடித்தபடி தமிழ் தேசியம் பேசுபவர்கள் உள்ளார்கள். மற்றப்படி எல்லா தமிழ் தேசியக்கடசி அரசியல்வாதிகளைப் போலவே சுமந்திரனும் ஒரு தமிழ் அரசியல்வாதியே.
  6. பாராளுமன்றத்தில் பல தடவைகள் ஆதாரங்களுடன் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து சுமந்திரன் ஆற்றிய பல உரைகள் உள்ளனவே. ஹன்சார்ட் இலும் அவை பதியப்பட்டுள்ளனவே! அதை விட அவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்பே நீதிமன்றங்களில் வாதாடிய செய்திகள் வந்தனவே.
  7. மனிதாபிமான நிவாரணப்பொருட்களை உரிய வேளையில் வழங்கிய சுவிஸ் அரசுக்கு மிக்க நன்றிகள்.
  8. வெள்ளத்துக்கு பிறகு பலர் அசுத்தமான நீரும் நுளம்புகளும் காரணமாக உடல்நலப் பிரச்சனைகள் பெறலாம். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள். சுத்தமான அல்லது கொதிக்க வைத்த நீரை மட்டுமே குடிக்கவும், உடனடி சமைத்த உணவு சாப்பிடவும், காயங்களை மூடி வைத்திருக்கவும், வெள்ளநீரை தவிர்க்கவும். நுளம்பு விரட்டும் கிரீம் பயன்படுத்துங்கள், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்கவும், அடிக்கடி கைகள் கழுவவும். காய்ச்சல், வயிற்றுப்போக்கு அல்லது ஏதாவது விசித்திரமான அறிகுறிகள் இருந்தால் உடனே டொக்ரரைச்சந்திக்கவும்(டொக்ரர் அரச்சனாவை அல்ல😂
  9. கொட்டும் மழையிலும் யாழில் இளைஞர் ஒருவர் துரத்தி துரத்தி வெட்டிக் கொலை #info4tamil #tamilnewsupdates #TopNews #BreakingNews #TamilNews #srilanka #SriLankaNews #lka #lkanews #jaffnanews கொட்டும் மழையிலும் ஒரு இளைஞர் திருநெல்வேலி சந்திக்கு அணமையில் துரத்தி துரத்தி வெட்டி கொல்லப்பட்டார் என்ற செய்தியை இன்போ தமிழ் வெளியிட்டுள்ளது.
  10. அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கூறவில்லை. சங்கர் கலவியில் முக்கியமாக கணித பாடத்தில் மிக திறமையானவராக இருந்தார். அவரைப் போன்ற கல்வியில் மிக திறமையானவர்கள்களின் தியாகம் எல்லாம் வீணாகியதுடன், இன்று புலம் பெயர் அடாவடிகளின் கையில் சிக்கி தமிழரின் அரசியல் பாழ்படுவதால் வந்த கடுப்பில் கூறப்பட்ட கருத்து. அவமானப்படுத்தும் தொனியில் அது தெரிந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அதை மீளப்பெற்றுகொள்கிறேன். மன்னிக்கவும்.
  11. 1979 காலப்பகுதியில் இயக்கத்தில் இணைந்து பிரபாகரன், குமரப்பா , புலேந்திரன், சீலன் போன றவர்களுடன் ஒன்றாக தங்கியிருந்து தலைமைறைவு வாழ்க்கையை ஆரம்பித்தவர். தனது இளமைகாலம முழுவதையும் போராட்டத்திற்காக தியாகம் செய்தவர் A/L இரண்டம் வருடம் sciences திறமையாக படித்துக்கொண்டிருந்த சிவசங்கரை (பொட்டமானை) இயக்கதில் சேர்ததவர். இன்று புலம் பெயர்ந்த போலித் தேசியம் பேசும் வியாபாரிகளிடம் கெஞ்சவேண்டிய நிலை. 😢
  12. உங்கள் வாழ்தது கருத்துக்கு எதிராக நான் எதுவுமே கூறவில்லை. பொதுபடையாக தாயகமக்கள் உரிமை போராட்டத்திற்கு இது கிஞ்சித்தும் உதவப்போவதில்லை என்ற உண்மையை எனது கருத்தாக மட்டுமே தெரிவித்ததற்கு நீங்கள் தான் எனக்கு பதிலெழுதி விவாதத்தை ஆரம்பித்தீர்கள். அதில் தவறில்லை ஆனால், இப்போது உங்கள் வாழ்த்துக்கு எதிராக உங்கள் கருத்துக்கு எதிராக நான் பதிவிட்டது போல் கதையை மாற்ற எத்தனிக்கின்றீர்கள். அது தான் தவறு. நான் பல முறை கூறிவிட்டேன் உங்கள் திருப்தி என்பது உங்கள் உரிமை என்பதை. உங்கள் உரிமையில் நான் என்றும் தலையிடவில்லை.
  13. மக்கள் சாகும், அழிவை ஊக்குவிக்கும் அரசியலை செய்துவிட்டு, மக்கள் இறந்த பின்னர் அவர்களுக்கு நன்றிகடன் என்று உண்டியல் குலுக்கும் அரசியலை மட்டும் தான் செய்து வருகிறார்கள். இப்ப கொஞ்ச நாள் மக்கள் சாகவில்லை என்பது பும் பெயர் தேசியர்களுக்கு மிகுந்த கவலை. புதிய தலைமுறை பிள்ளைகள் படித்து முன்னறுகிறார்களே, அவர்களை உசுப்பேற்றி மீண்டும் இரத்தகளரியை உண்டாக்கி, பின்னர் இறந்த மக்களுக்கு நன்றி செலுத்துவதாக முதலைக்கணீர் வடித்து கலெக்சன் செய்வது, தாயகத்தில் மக்களின் வாழ்வை சீரழித்து அந்த பிள்ளைகளின் கல்வியை சீரழிக்கும் வேலைகளை செய்வது, ஆனால் தமது பிள்ளைகளை மட்டும் மேற்கு நாட்டு பல்கலைகழகங்களில் கற்பிப்பது போன்ற சுயநல செயற்பாடு குறித்து தாயக மக்கள் மிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.
  14. தமிழ் மக்கள் அழிந்ததாக நீங்கள் கவலைப்படுகின்றீர்கள். நீங்கள் கூறிய மக்களில் 90 வீதம் யுத்த காலத்திலேயே கொல்லப்பட்டனர். 1983 வரையும் தமிழர் சனத்தொகை அதிகரித்தே வந்தது. 2009 ம் ஆண்டின் பின்பும் தமிழர் சனத்தொகை அதிகரித்தே வருகிறது. யுத்தகலத்தில் தினசரி 10 தமிழர்களாவது கொல்லப்பட்டனர். ஏற்கனவே சிறுபான்மையாக இருக்கும் தமிழர்களில் பாரிய மக்கள் அழிவுகளினூடான போராட்டங்களை தவிர்க்க வேண்டும் அது எம்மை மேலும் மேலும் பலவீனப்படுத்தும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத போராட்டத்தினால் எந்த பயனும் இல்லை. பாரிய மக்கள் அழிவு ஏற்பட்டால் சர்வதேசம் தலையிட்டு தமிழீழம் எடுத்து தரும் என்று நினைத்து மக்களை பலியிட்ட முட்டாள்தனம் 2009 ல் அரங்கேறியது. மேற்கு நாடுகளில் யுத்தத்திற்கு பாரியளவில் பணம் சேர்தது அதை கொள்ளையிட்ட மாபியாகளின் தாகத்தை மட்டும் தான் அந்த போராட்டம் தீர்ததது. முஸ்லீம்கள் அதிக பிள்ளைகளை பெற்று சனத்தொகையில் வளர்ந்து வருகிறார்கள் என்று இனவாதம் பேசும் உங்களைப் போன்றவர்கள் மீண்டும் மோதல் தமிழர் அழிவுகளை நோக்கிய அரசியலையே ஆதரிப்பது முரண்நகை. முஸலீம்கள் எங்களை அழிக்கவந்தவர்கள் என்று பச்சை இனவாதம் பேசும் உங்கள் இனவாத சிந்தனையையே தான் சிங்கள இனவாதிகளும் தமிழர்களை பார்தது கூறுகிறார்கள். இனவாதிகள் எந்த இனத்தில் இருந்தாலும் ஒரே மாதிரி தான் சிந்திப்பார்கள். தாங்கள் தமது குடும்பங்களுடன் சுகபோக வாழ்ககை வாழ்வது போலவே தாயகத்தில் உள்ள மக்களும் வாழ விரும்புவார்கள் சிந்திக்காத சிந்திக்க விரும்பாத ஒரு சைக்கோ கூட்டமே புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் அரசியல் நடத்துகிறன.
  15. மதுரை மீனாட்சியே இந்த கேள்வியை ரணிலிடம் கேட்டிருக்கமாட்டார். ரணில் கொடுத்த காணிக்கையை எண்ணியதோடு மனத்திருப்தி அடைந்திருப்பார். 😂
  16. அல்வாயன், நான் ஏற்கனவே கூறியது தான். அவரவர் தமது மனத்திருப்திக்காக இவ்வாறான விடயங்களை செய்து தமக்குள் மகிழ்ந்திருப்பதற்கு எதிராக நான் கருத்து கூறவில்லை. அது அவரவர் உரிமை. ஆனால், இவை எதுவும் இலங்கையின் இன முரண்பாட்டை தீர்ககவோ தமிழருக்கான ஒரு அரசியல் தீர்வுக்கோ கிஞ்சித்தும் உதவப்போவதில்லை என்பதை உணர்வதற்கு ரொக்கெற் விஞ்ஞானம் படிக்க தேவையில்லை. ஒரு சாமான்ய மனிதனுக்கு உள்ள அறிவு போதுமானது. அமெரிக்காவின் மசாசூசெற் மாநில தமிழீழ பிரகடனம் எப்படி தாயகத்தில் போராட்டத்துக்கு பாதகமான விளைவை தந்ததோ அது போல் தான் இதுவும் என்ற புரிதலுடன் அரசியல் செய்வதே தமிழ் மக்களுக்கு பலன் தரும். இனவாதம் என்பது இலங்கையில் நீண்டகாலமாக மக்கள் மண்டைக்குள் திணிக்கப்பட்ட ஒன்று . அது உங்களுக்குள் கூட உள்ளது இனவாதத்துக்கு எதிராக பொங்கும் நீங்கள் முஸலீம்களுக்கு எதிராக பல இனவாத பதிவுகளை இங்கேயே செய்துள்ளீர்கள். அநுரா மட்டுமல்ல எந்த ஜனாதிபதியாலும் இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனவாதத்தை ஒரு mouse click ல் delete பண்ணகூடிய நிலையில் அது இல்லை. அதற்கான செயல்முறை (Process) என்பது நீண்டது. அதன் முன்னேற்றம் என்பது இலங்கையில் வாழும் மக்கள், அரசியல்வாதிகள், சமூக அமைப்புகள் தான் தங்கியுள்ளது. அதற்கு புலம் பெயர் நாடுகளில் இருந்து தமிழ் மக்களுக்கு ஆதரவாக செய்ய வேண்டியது வட கிழக்கு எமது மக்களை கல்வி பொருளாதார சமூக ரீதியிலான பலப்படுத்துதலை செய்ய உரிய முதலீடுகளை அங்கு செய்வதும், தம்பட்டம் அடிக்காமல் இலங்கை அரசின் பலவீனங்களை உபயோகித்து அதை செயற்படுத்துவதாகும். இதன் மூலம் தமிழ் மக்கள் இலங்கையில் ஒரு தவிர்கக முடியா சக்தியாக கட்டியெழுப்புவது. இதற்கு இனவாதிகளிடம் இருந்து தடைகள் வந்தால் அதை வைத்து உணர்ச்சி அரசியல் செய்யாமல் அதை தந்திரோபாயரீதியில் வெல்லும் செயற்பாடுகளே இலங்கை என்ற நாட்டிற்குள் தமிழருக்கு பலம் சேர்ககும் ஒரு அரசியல் தீர்வை உருவாக்க மெதுவாக வென்னும் உந்திதித்தள்ளும். ஏற்கனவே தமிழ் மொழிப்பயன்பாடு முன்னரை விட இலங்கையில் மேலோங்கி வருவதை அங்கு சென்று வந்தவர்கள் உணர்ந்திருப்பர்.
  17. எனது பார்வையில் தமிழருக்கு அதிகபட்ச நன்மை தந்திருக்கக் கூடிய அரசியல் தீர்வை உருவாக்குவதற்கான அருமையான இறுதிச் சந்தர்ப்பம் 2002 பேச்சுவார்ததைகள். அதை உதைத்து தள்ளிய பின் இனி செய்யக்கூடியது ஒன்று தான், தமிழரசுக் கட்சியானது எப்படி இனவாதத்தை எதிர்கொண்டு அதற்கான தீர்வுகளை காண முயலாமல், மக்களுக்கு இனவாத பூச்சாண்டி காட்டி மக்களை உசுப்பேற்றி தங்கள் பின் வந்த இரண்டு தலைமுறையை நாசப்படுத்தியதோ அதே போல் நாமும் ஏற்கனவே தோல்வியடைந்த. எமது அணுகுமுறைகளை மாற்றாமல் அதை அப்படியே தொடர்ந்து அதே பூச்சாண்டி காட்டி மக்களை உசுப்பேற்றி அடுத்த தலைமுறையையும் நாசப்படுத்தி விட்டு அந்த மகிழ்வுடன் நிம்மதியாக கண்ணை மூடுவது தான்.
  18. உங்களது தனிப்பட்ட சென்றிமென்றுக்கோ குட்டி குட்டி சந்தோசத்துற்கோ நான் குறுக்கே நிற்கவில்லை. ஆனால், இவை போன்ற நிகழ்வுகள் எந்த விதத்திலும் தாயகத்தில் தீர்வுக்கு உதவப்போவதில்லை என்ற விழிப்புணர்வு எமது பட்டறிவில் உள்ளதை நிச்சயம் சுட்டிக்காட்டப்படல் வேண்டும். ஏற்கனவே, “தமிழீழம்” என்ற கற்பனை எண்ணக்கருவை நம்பியதால், practical அரசியல் தீர்வுகளை முயற்சிக்காமல் புறக்கணித்ததன் விளைவுகளை தமிழ் மக்கள் அனுபவித்துக்கொட்டிருக்கும் போது, இப்படியானவை தாயக மக்களுக்கு பயன்பாடாது என்ற ஜதார்ததத்தை உரைப்பதால் எவருக்கும் நட்டம் இல்லை.
  19. வித்தியாசம் உள்ளது தான். அது, அன்று வாழ்ந்த மக்களை ஏமாற்ற நன்றாகப் பயன்பட்டது. இது, அன்றைய தீர்மானத்தை நம்பியதால் நாய்படா பாடு பட்டு பட்டுத் தெளிந்த, இன்று வாழும் மக்களையும் ஏமாற்ற முயற்சி செய்கிறது. ஒற்றுமை, இரண்டாலும் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு சதத்துக்கு பிரயோசனம் இல்லை.
  20. 1978 ல் அமெரிக்க மாநிலமான மசாசூசெற் தமிழீழ பிரகடனம் செய்திதை அன்று கொண்டாடினோம். அந்த பிரகடனம் தமிழர் பிரச்சனைக்கு தீர்வுக்கு உதவியதா? தமிழர் பேரழிவை தடுக்க உதவியதா?
  21. யாயினி, பாராளுமன்றத்துக்கு பிரதிநிதிகளை மக்கள் அனுப்புவது மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கே. ஆனால், அரச்சனா உட்பட அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் பாராளுமன்ற சிறப்புரிமையை பாவித்து செய்வது, அடுத்த தேர்தலுக்கான தமது சொந்த தேர்தல் பிரச்சாரத்தை மட்டுமே. தான் இப்படிக் குரைப்பதால் இந்த பிரச்சனை மேலும் பற்றியெரிந்து, தமிழ்மக்களுக்கே அது பாதிப்பை உண்டாக்குமே தவிர பிரச்சனை தீரப்போவதில்லை என்பது, அர்சசனாவுக்கு நன்கு தெரியும். அப்படி பிரச்சனை மேலும் பற்றி எரிந்தால், அதை இன்னும் தனது அரசியல் நலன்களுக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என்பதும் அரச்சனாவுக்கு தெரியும். அதனால் மற்றய தமிழ் பாராளுமன்ற உறுபினர்களை போல் பண்பாக உரையாற்றாமல் தான் இப்படி நாய் போல் குரைப்பது பிரச்சனையை மேலும் அதிகரித்தாலும், தனக்கு மற்றயவர்களை விட வாக்குகளை அதிகரிக்க வைக்கும், என்று அவர் நம்புகிறார். பண்பற்று பேசுபவர்களை ரசிக்கும் கூட்டம் சமூகவலைத்தளங்களில் இருப்பதை துல்லியமாக அறிந்து அரசியலுக்கு வந்தவர் அவர். வைத்தியத்துறையில் தன்னால் மிளிர முடியாது அந்தளவுக்கு அந்த துறையில் தனக்கு அறிவில்லை என்பதை உணர்ந்து அடுத்தவனை வித்தியாசமாக பேக்காட்டி வாழலாம் என்பதை துல்லியமாக கணிப்பிட்ட திறமை உடைய அர்சசனா உண்மையில் பாராட்டுக்குரியவர்தான். @Justin கூறியது போல் பாராளுமன்றத்துக்கு வெளியே பம்மிக்கொண்டு அடக்கி வாசித்து தனது பதவியை காப்பாற்றிகொள்ளவும் அர்சசனாவுக்கு நன்கு தெரியும். தனது அப்பா தமிழீழ காவற்துறையில் உயர் அதிகாரி என்றும், ஜேர்மனியில் இருந்து தேசியத்தலைவரின் கொள்கைகளின் பார் ஈர்ககப்பட்டு இங்கு தாயக பணி புரிய வந்ததாகவும் தமிழ் சனலில் கூறிவிட்டு, அதே மாதமே( அது போன மாசம் என்று சொல்லவேண்டிய தேவையே இருக்கவில்லை) சிங்கள சனலில் பல்டியடித்து அப்பா வேலையில்லாமல் கஷரப்பட்டதால் புலிகளின் பொலிசில் கடமையாற்ற வேண்டிய தேவை வந்ததே தவிர அவர்களது கொள்கைகளில் அப்பாவுக்கு எந்த ஈடுபாடும் இல்லை என பேட்டியளித்த பின்பும் தனக்கு வாக்களிக்கும் மென்டல்கள் கணிசமான அளவில் இருப்பதை அனுபவத்தில் உணர்ந்தவர் அவர். இருப்பினும், 1970/80 களின் இருந்த இளம் சமுதாயம் போல் இப்படியான அரசியல் சுயநலமிகளின் பேச்சில் மயங்கி தமது வாழ்வைத் தொலைக்காமல், இவர்களின் அயோக்கியத்தனமான அரசியலை திரும்பி கூட பார்ககாமல் தாமுண்டு தமது கல்வி, தமது உழைப்பு , தமது career என்று தமது வாழ்வை அமைக்க விரும்பும் அதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் கணிசமான இளம் சந்ததி தாயகத்தில் தற்போது இருப்பது ஆறுதலான, தமிழர் வாழ்வில் நம்பிக்கையளிக்க கூடிய விடயம்.
  22. அப்படியா! அப்ப இலங்கையில் பாராளுமன்றத்திற்கு வெளியே கூட்டம் போட்டு புலிக்கொடியேற்றி தலைவர் பிரபாகரனுன் கொள்கைகளை நான் பொறுப்பேற்று நடத்தப் போகிறேன் என்று கூறலாமே! அடக்கி ஆளும் நாட்டில் தானே போராடவேண்டும் உஙலகள் கூற்றுப்படி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.