Everything posted by kandiah Thillaivinayagalingam
-
"உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / கறுப்பு ஜூலையில் ஒரு சிந்தனை"
எல்லோருக்கும் நன்றிகள்
-
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்]
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 26 நீலிசவாதி [nihilist] என்பவன், எந்த அதிகாரத்திற்கும் தலைவணங்காதவன், விசுவாசத்தின் பெயரில், எந்த கொள்கையையும், அது எவ்வளவு மதிப்பிற்குரியதாக கருதப்பட்டாலும் ஏற்காதவன் [who does not accept any principle on faith, however much that principle may be revered.], இப்படித்தான் நான் அதை நம்புகிறேன். என்றாலும் நீலிசத்தைப் பற்றிய தப்பபிப்பிராயம், அதிகமாக 1860 ஆண்டில் ஏற்படுத்தப் பட்ட நீலிச இயக்கத்தால் [“Nihilist Movement”] ஏற்பட்டிருக்கலாம். இது அன்றைய சகல அதிகாரத்தையும் நிராகரித்ததால், அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக ஒரு வன்முறையை முன்மொழிந்தவர்கள் என ஐரோப்பா முழுவதும் இவர்களை அன்று அடையாளப் படுத்தினார்கள். இதனால் தான் நீலிசம் உண்மைக்கு புறம்பாக திரித்துக் கூறப்பட்ட ஒரு நிலையை [distorted idea of Nihilism] அடைந்தது எனலாம். பலவிதமான நீலிச வகைகளை நாம் காணலாம், என்றாலும் முக்கிய மூன்று வகைகளை இங்கு தருகிறேன். முதலாவது வகை நீலிசவாதிகள் [Epistemological Nihilist / அறிவாய்வியல் நீலிசவாதி], உண்மையான அறிவு என்று ஒன்றும் இல்லை என்றும், நீங்கள் ஒருபோதும் எதையும் உறுதியாக நம்ப முடியாது என்றும் நம்புகிறார்கள். ஏன் என்றால், என்றென்றும் நீங்கள், உங்கள் தலையில் அல்லது மனதில் சில கருத்துக்களை பதிந்து அல்லது ஒட்டி வைத்துள்ளீர்கள், அத்துடன் உங்கள் சூழலுக்கு, உங்கள் உணர்வு உறுப்புகள் சொல்லுவதனூடாகவே அணுகுகிறீர்கள் என்பதால் என்கிறார்கள் [you are forever stuck in your head and have access to the environment only via what your sense organs tell you], இரண்டாவது வகை [Existential Nihilist / இருத்தலியல் நீலிசவாதி] நீலிசவாதிகள், வாழ்க்கை ஒரு உள்ளார்ந்த கருத்தையோ அல்லது ஒரு நோக்கத்தையே கொண்டது அல்ல என்கிறார்கள் [denies that life has any inherent meaning or purpose] பிரபஞ்சத்தின் கண்ணோட்டத்தில், எதுவுமே ஒரு மதிப்போ அல்லது நோக்கமோ கொண்டதல்ல [From the perspective of the universe, nothing has any value or purpose] என்கிறது. மூன்றாவது வகை [Ethical Nihilist / நன்னெறி நீலிசவாதி], இவர்கள் சமுதாயம் அல்லது சமூகம் சொல்லுகிறதே என்பதற்காக, அதன் பொருட்டு மட்டுமே ஒன்றையும் செய்ய மாட்டார்கள் [who does not do what society says is ought to be done for just the sake of it.]. உதாரணமாக, ஏதாவது ஒன்று செய்ய எந்த காரணமும் இல்லை என்றால், அதைச் செய்வதால், சமூகம் அவர்களை எவ்வளவு மதிக்கக்கூடும் என்பது அவர்களுக்கு முக்கியமல்ல, அவர்கள் கட்டாயம் அதை செய்ய மாட்டார்கள் [If there is no reason do something, no matter how much society might value doing it, an Ethical Nihilist will not do it]. அவர்களுக்கு பின்பற்றவென்று உள்ளார்ந்த ஒழுக்கங்கள், மதிப்புகள் அல்லது விதிகள் [no inherent morals or values or rules] என்று ஒன்றும் இல்லை. நான் உங்களுக்கு ஒன்றைத் தெளிவாகச் சொல்கிறேன், இதன் கருத்து அவர்கள் வன்முறை மற்றும் கொலையாளிகள் என்பதல்ல, இதன் கருத்து அவர்கள் நடத்தை ரீதியாக, மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கவனத்தில் எடுக்காதவர்கள் [behaviorally immune to what others think] என்பதே ஆகும். இதனால் நீலிசவாதிகள் வன்முறை, சுயநலம் மற்றும் ஒழுக்கக்கேடானவர்கள் [violent, selfish and immoral] என்று பலர் எண்ணுகிறார்கள். ஆனால் அவர்கள் நீலிசவாதிகளும் மனிதர்களே என எண்ண தவறுகிறார்கள். மனிதர்கள் ஒழுக்க ரீதியாக நடந்து கொள்ள, உயிரியல் ரீதியாக பரிணமித்தவர்கள் [human beings have biologically evolved to behave “morally”] என்பதை மறந்து விட்டார்கள் . நீங்கள் மனிதனின் இயல்பான நடத்தையை, என்ன செய்ய வேண்டும் என்ற கட்டளைகளுடன், குழப்ப வேண்டாம் [Do not confuse natural human behavior with what ought to be done]. ஒரு நீலிசவாதி, தர்க்கரீதியாக நன்மை பயக்கும் அல்லது அதைச் செய்ய வேண்டும் என்று அவர் உணருவதால் செய்கிறார் [he does either because it is logically beneficial or because he feels an urge to do it], ஆனால் என்றென்றும் ஒரு சமுதாயம் சொல்லுகிறதே என்று மட்டும் செய்வதில்லை. அது தான் வித்தியாசம். பிரபலமான ஊடகங்களில் சித்தரிக்கப்படுவது போல, நீலிசம் ஒரு அவநம்பிக்கை அல்ல, நீலிசவாதிகள் ஒரு மனநோயாளி அல்ல, தர்மம் அல்லது தியாகம் அல்லது காணிக்கை [alms or sacrifice or offering] போன்ற ஒன்றும் இல்லை, நல்லது அல்லது தீய செயல்களின் [good or evil deeds] அடிப்படையில் புண்ணியம் என்று ஒன்றும் இல்லை. ஒரு மனிதன் நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய நாற்பெரும் கூறுகளால் [four elements] கட்டப்பட்டுள்ளது. அவன் இறக்கும் பொழுது பூமி பூமிக்கு போகிறது, நீர் நீருக்கு போகிறது, நெருப்பு நெருப்புக்கு போகிறது அதே போல காற்று காற்றுக்கு போகிறது. அவனின் உணர்வுகள் விண்வெளியில் மறைந்து விடுகின்றன. இந்த உலகில் இருந்து அவன் எந்த உலகிற்கும் போகவில்லை. மறுபிறவி என்று ஒன்றுமே இல்லை, தாய் அல்லது தந்தைக்கு ஆற்றும் சேவையிலிருந்து நீங்கள் ஒரு புண்ணியமும் பெறப்போவதில்லை. சரியான பாதையென ஒன்றில் சென்று, பரிபூரணத்தை [perfection] அடைந்தவர்கள் என எந்த துறவிகளும் பிராமணர்களும் [ascetics or Brahmins] இல்லை. இந்த உலகையும் இதற்கு அப்பால் உள்ளதையும் அறிந்தவர்களோ அல்லது அனுபவித்தவர்களோ இல்லை. நாலு பேர் உன் சவத்தை காவிச் செல்கிறார்கள். அவர்கள் சுடலைக்கு போகும் மட்டும் வீண் பேச்சு பேசுகிறார்கள். அவரின் எலும்பு கருகுகிறது. அவரின் தியாகங்கள் சாம்பலில் முடிகிறது. உடல் இறக்கும் பொழுது முட்டாளும் ஞானியும் [fool and wise] அழிந்துவிடுகிறார்கள். எனவே இவர்கள் பயனற்ற வெற்று பேச்சும் மற்றும் பொய்களும் பேசுகிறார்கள் என்கிறார் கி மு 600 ஆண்டை சேர்ந்த இந்தியாவின் அஜிதா கேஷாகம்பலி [Ajita Kesakambali] என்ற தத்துவவாதியும் முனிவரும். இவர் இந்த பதிலை, ஆற்றல் மிக்க கொடுங்கோண் அரசனாகவும் தனது தந்தை பிம்பிசாரனைக் கொன்று அரசை கைப்பறியவனனுமான, பேரரசர் அஜாதசத்ரு ஹரியங்காவின் [Ajatashatru Haryanka] கேள்விக்கு விடையாக கூறுகிறார். இங்கு நாம் ஒருவித நீலிசம் காண்கிறோம். மேலும் பழங்கால கிரேக்கர்களிடையே, உதாரணமாக கி மு 483-378 ஆண்டை சேர்ந்த கோர்கியஸ் [Gorgias] என்பவர் "எதுவும் இல்லை. ஏதாவது இருந்து இருந்தாலும் அதை அறிய முடியாது அல்லது தெரியாது இருக்கும். ஒரு வேளை அதை அறிந்திருந்தால், அது பற்றிய அறிவு பிறருக்குக் எடுத்து கூற முடியாததாக இருக்கும் " [“Nothing exists. If anything did exist it could not be known. If it was known, the knowledge of it would be incommunicable.”] என்று கூறியதை, நீலிசத்தின் [நிஹிலிஸின்] ஒரு அடிப்படைக் கொள்கையாகவும் கூறலாம். வாழ்க்கை அர்த்தமற்றது என்ற நம்பிக்கையில், அனைத்து மத மற்றும் ஒழுக்கக் கோட்பாடுகளையும் [religious and moral principles] நிராகரிப்பது நீலிசம் எனப்படுகிறது. எனவே, வாழ்க்கை அர்த்தமற்றதாக இருப்பதாக நீங்கள் நம்பினால், நீங்கள் அல்லது மற்றவர்கள் செய்யும் எதையும் ஆதரித்து எந்தவிதமான வாதமும் நீங்கள் செய்யத் தேவையில்லை. உங்களிடம் எந்த ஒழுக்கக் கோட்பாடும் இல்லை என்றால், உங்களிடம் சரியோ பிழையோ என்று தீர்மானிக்கும் அளவுகோல் இல்லை. எனவே அது இல்லாமல், எந்த காரணத்தை கொண்டு, ஒரு சமுதாயத்தை ஆதரிப்பதற்கு, மக்களை ஊக்குவிக்க அல்லது அதை நம்பவைக்க முடியும்? அப்படி என்றால் நீலிசம் சமுதாயத்தை, அதன் கட்டுக்கோப்பை குலைக்க வழிவகுக்கலாம் என்பது பலரின் நம்பிக்கை. மேலும் நீலிசம் அதீதமாக மக்களை இன்பமே நோக்கம் என்ற கொள்கைக்கு [hedonism] வழி நடத்துவதாகவும், இந்த உண்மையை சமுதாயம் முழுவதும் ஓரளவு பார்க்கிறோம் என்பதும் ஒரு பொதுவான வாதமாகும். எனவே நீலிசம் ஒரு வன்முறை மற்றும் பயங்கரவாத தத்துவமாக [violent and even terroristic philosophy] கருதப்படுகிறது. மேலும் வன்முறைக்கு ஆதரவாக நிஹிலிசம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது எதோ உண்மை தான். அது மட்டும் அல்ல பல ஆரம்பகால நீலிசர்கள் வன்முறை புரட்சியாளர்களாக [violent revolutionaries] இருந்தனர் என்பதும் உண்மைதான், உதாரணமாக ரஷ்ய நீலிசர்கள் [Russian Nihilists]. இவர்கள் பாரம்பரிய அரசியல், நெறிமுறை மற்றும் மத நெறிகள் [political, ethical, and religious norms] எந்தவொரு செல்லுபடியாகும் அல்லது கட்டுப்படுத்தும் சக்தியை தம் மேல் கொண்டு இருக்கவில்லை என்று நிராகரித்தனர். ஆனால், அவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததுடன், சமுதாயத்தின் ஸ்திரத்தன்மைக்கு எந்த வித அச்சுறுத்தலையும் கொடுக்கவும் வில்லை. ஆனால், அவர்களது வன்முறை, அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு உயிர் அச்சுறுத்தலாக இருந்தது என்பது உண்மை தான். நீலிசத்தின் ஒரு வரையறை, மனித வாழ்க்கை அர்த்தமற்றது, எல்லா மதங்களும், சட்டங்களும், தார்மீக கோட்பாடுகளும், அரசியல் அமைப்புகளும் முற்றிலும் வெறுமையானது பொய்யானது [all religions, laws, moral codes, and political systems are thoroughly empty and false] என்பதாகும். எனவே, சமுதாயத்திற்கு நீலிசம் தீங்கிழைக்கிறதா? என்ற ஒரு கேள்வி எழுகிறது. "அவ்வாறு இருக்கலாம், ஆனால் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை" என்றே இதற்கு நான், என் அனுபவத்தில் இருந்து பொதுவாக பதில் அளிப்பேன். உதாரணமாக, அடிப்படையில் மதத்திற்கு விரோதமாக என் வாழ்க்கை வாழ்ந்திருக்கிறது. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. எனவே ஒரு மதத்தை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. மற்றும் நான் எந்த மத தூண்டுதல்களையோ அல்லது மத உணர்வுகளையோ கொண்டு இருக்கவில்லை. ஆனால், நான் அடிப்படையில் அனைத்து சட்டங்களுக்கும் கீழ்ப்படிகிறேன், மற்றும் எனக்கு அர்த்தம் தருகிற தார்மீக கோட்பாடுகளையும், அரசியல் தத்துவங்களையும் [moral codes and political philosophy] கடைப்பிடிக்கிறேன். சட்டத்தை பொறுத்த வரையில், நான் அதை உடைக்க வேண்டும் என்று உணரவில்லை. அதே மாதிரி, ஒழுக்கம் சார்ந்த நெறிமுறையை [morals] பொறுத்த வரையில், நான் அவையை என் பெறோர்களிடம் இருந்து, ஆனால் நான் காரணங்களையும் அதில் உள்ள உண்மைத் தன்மையையும் உணாந்து நானாக கற்றுக் கொண்டேன். என்னை இரு பெறோர்களும் வளர்த்தார்கள். நாங்கள் ஒரு சராசரி குடும்பம். சில நேரங்களில் செலவிட போதுமான பணம் எம்மிடம் இருந்ததில்லை, ஆனால் என்றும் ஒருவரிடமும் இருந்து பணம் திருடவில்லை, ஏமாற்றவும் இல்லை. நான் நாள் முழுவதும், சந்திக்கும் எல்லோரையும், மரியாதையுடன் நடத்த முயற்சி செய்கிறேன். பெருபாலும் எந்த உரையாடலுடனும், நான் மக்களை சுற்றி நகைச்சுவை செய்ய விரும்புகிறேன், எனக்கு, வாழ்க்கை மகிழ்வாக வாழ்வதற்க்கே ! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 27 தொடரும்
-
"உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / கறுப்பு ஜூலையில் ஒரு சிந்தனை"
"உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / கறுப்பு ஜூலையில் ஒரு சிந்தனை" / பகுதி 02 [இது என் சிறிய சிந்தனை. இதில் பிழையும் இருக்கலாம் சரியும் இருக்கலாம். இதை சமாதான விரும்பிகளிடம், அவர்களின் கருத்துக்காக சமர்ப்பிக்கிறேன். உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் !] நாம் எம் பண்டைய அனுபவங்கள் மற்றும் இலக்கியங்ககளை கவனத்தில் எடுத்தால், உதாரணமாக 'அன்பே சிவம்' அதாவது அன்புதான் கடவுள் என்று பறைசாற்றுகிறது 'எம்மதமும் சம்மதம்', அதாவது எல்லா சமயமும் எமக்கு ஒன்றே என்கிறது 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' , அதாவது அனைத்து மக்களும் நமது உறவினர்களே 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' 'உண்பது நாழி, உடுப்பவை இரண்டே' இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் உதாரணம்: செல்வத்தை நியாயமான அளவில் பிரி, ஆயுத விற்பனையை கட்டுப்படுத்து, உண்மையை சரியாக, ஆராந்து புரியாமல், நாங்கள் நம்பும் உண்மையே உண்மை என அடம்பிடிப்பது ... இப்படி பல. உதாரணமாக ஒரு நாள் அரசன் ஒருவன் மூன்று அறிஞர்களை, தன் அரசவைக்கு கூப்பிட்டு, பாண் [ரொட்டி] என்றால் என்ன என்று கேட்டான். அதற்கு முதலாவது அறிஞர் ரொட்டி என்பது ஜீவனாம்சம் கொடுக்கும் ஒரு உணவு என்றான், இரண்டாவது அறிஞன் ரொட்டி என்பது மாவும் நீரும் கலந்து, நெருப்பின் வெப்பத்தில் சுட்ட ஒன்று என்றான், மூன்றாவது அறிஞனோ ஆணடவனின் கொடை என்றான் . இப்படி ஒரு சாதாரண உணவுக்கே கருத்து வேறுபாடு இருப்பதை இங்கு காண்கிறோம். இங்கு தான் எம் கல்வி / அறிவு / நம்பிக்கைகள் சரியாக ஒழுங்கு படுத்தப் படவேண்டும். இல்லாவிட்டால் முரண்பாடுகள் அதிகரித்து சமாதானத்தை குழப்பலாம்? இன்றைய சூழலை உற்று நோக்கின் பலர் 'மதக் கருத்தை உணராமல், மதம் தோற்றிவித்தவனை வணங்க ஆரம்பிக்கிறார்கள் / ஆரம்பித்துள்ளார்கள் ' உதாரணம் புத்த சமயம், தமிழர் வரலாற்று நிலங்களில் அத்துமீறி புத்தரை ஒரு பட்டாளத்துடன் குடியேற்றிக் கொண்டு, சமாதானத்துக்கு எதிராக புத்தரை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்? புதிது புதிதாக மதம் / மத பிரிவு வந்து கொண்டே இருக்கிறது சமாதானம் வேண்டுமாயின் திட்டம் வகுக்கலாம். ஆனால் அதற்க்கு , அதை ஒரு சமயமாக / நம்பிக்கையாக பெயரிடும் பொழுதே , அது சமாதானத்துக்கு ஆப்பு வைக்கிறது? பிறகு அதை வளர்க்க, பரப்ப, முன்பே இருந்த சமயங்களுக்குள் நுழைந்து மக்களை பிரித்து எடுக்கிறார்கள். அங்கு தான் பிரச்சனை எழுகிறது? உதாரணமாக, அண்மையில் , 1844 ஆண்டில் தொடங்கிய பஹாய் நம்பிக்கையை / Baha’i Faith எடுத்தால், அதன் முக்கிய கோட்பாடுகள் கடவுள் ஒருவரே. மனிதர்கள் அவரை எப்பெயரிட்டு அழைத்தபோதிலும், அவர் ஒருவரே சமயங்கள் ஒன்றே. மனிதகுலத்தைப் படைத்த கடவுள், அவர்களுக்குக் காலம் காலமாக தமது அவதராங்களின் மூலமாக வழிகாட்டி வந்துள்ளார். மனிதர்கள் வாழும் காலம் மற்றும் சூழ்நிலையைப் பொருத்து இந்த அவதராங்கள் போதனைகளை வழங்கி வந்துள்ளனர். சமயங்கள் அனைத்துமே ஒரே புத்தகத்தின் தொடர்ந்துவரும் அத்தியாயங்களே. மனிதகுலம் ஒன்றே மனித குலத்தைப் படைத்தவர் ஒரே கடவுள். மனிதர்கள் அவரிடமிருந்தே தோன்றியுள்ளனர். மனித ஆன்மா இறைவனிடமிருந்தே தோன்றியுள்ளது மற்றும் எல்லாருக்குள்ளும் ஒரே விதமாகவே படைக்கப்பட்டுள்ளது. ஆகவே நாம் அனைவருமே கடவுளின் குழந்தைகள், ஒரே குடும்பத்தினர் என்கிறது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் சமயம் / தமிழரின் சைவ தத்துவத்தை மற்றும் இலக்கியத்தை எடுத்தால் 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற பொன்னான வாக்கியத்தை காண்கிறோம் 'வாழு வாழவிடு' என்ற தோரணையில், மணிமேகலையில் ஒரு காட்சி அமைகிறது. அதில் தமிழரின் அன்றைய மனப்பான்மையை, சில முக்கிய வரிகள் எமக்கு இன்றும் எடுத்து காட்டுகிறது. “ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள் பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின் பற்ற மாக்கள் தம்முட னாயினும் செற்றமும் கலாமுஞ் செய்யா தகலுமின்” (மணிமேகலை,1. விழாவறை காதை - 60-63) யாமே வெல்வேம் எனச் சூள் மொழிந்து பல்வேறு சமயங்களை சாரந்தவர்கள் சொற் போரில் வென்று நிலை நாட்ட ஆங்காங்குள்ள பட்டிமண்டபங்களிலே ஏறும் மரபறிந்து ஏறக் கடவீர் எனவும்; விவாதம் செய்யும்பொழுது மற்றவருடைய சமயக்கருத்தை ஏற்க முடியவில்லை யென்றால் பகைமையும் பூசலும் கொள்ளாமல் விலகிச் செல்லுங்கள் எனவும் கூறுகிறது. அதாவது எம் மதமும் சம்மதம் என்ற பெருந் தன்மையுடன் தமிழர்கள் மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற தோரணையில், அறிவு பூர்வமாக பட்டி மன்றத்தில் விவாதித்து அதன் பெறுபேறுகளை கொண்டு ஏற்றுக்கொண்டதுடன், எல்லோரையும், எல்லா மத பிரிவினரையும் சமஉரிமை கொடுத்து அனைத்து வாழ்ந்தனர் என்பதை மணிமேகலையில் காண்கிறோம். சகிப்புத்தன்மையின் இலட்சியத்தை இங்கு காண்கிறோம்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] தொடரும் பகுதி : 03
-
"ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும்" [அரசியல், சமயம் மற்றும் வரலாற்று வாதிகளுக்கு, இன்று 24/07/2024 இல்]
எல்லோருக்கும் நன்றிகள்
-
𝑨𝒏 𝒆𝒙𝒄𝒆𝒓𝒑𝒕 𝒇𝒓𝒐𝒎 𝑷𝒓𝒊𝒔𝒐𝒏𝒆𝒓 #1056
𝑨𝒏 𝒆𝒙𝒄𝒆𝒓𝒑𝒕 𝒇𝒓𝒐𝒎 𝑷𝒓𝒊𝒔𝒐𝒏𝒆𝒓 #1056: 𝑱𝒖𝒍𝒚 24, 1983, 𝒘𝒂𝒔 𝒍𝒊𝒌𝒆 9/11 𝒇𝒐𝒓 𝑺𝒓𝒊 𝑳𝒂𝒏𝒌𝒂’𝒔 𝑻𝒂𝒎𝒊𝒍𝒔. 𝑫𝒂𝒚 𝒂𝒇𝒕𝒆𝒓 𝒅𝒂𝒚, 𝑻𝒂𝒎𝒊𝒍𝒔 𝒘𝒆𝒓𝒆 𝒕𝒂𝒓𝒈𝒆𝒕𝒆𝒅 𝒐𝒏 𝒕𝒉𝒆 𝒄𝒂𝒑𝒊𝒕𝒂𝒍 𝒔𝒕𝒓𝒆𝒆𝒕𝒔 𝒐𝒇 𝑪𝒐𝒍𝒐𝒎𝒃𝒐 𝒂𝒔 𝒕𝒉𝒆𝒚 𝒘𝒆𝒏𝒕 𝒂𝒃𝒐𝒖𝒕 𝒕𝒉𝒆𝒊𝒓 𝒃𝒖𝒔𝒊𝒏𝒆𝒔𝒔 𝒊𝒏𝒔𝒊𝒅𝒆 𝒃𝒖𝒔𝒆𝒔 𝒐𝒏 𝒕𝒉𝒆 𝒘𝒂𝒚 𝒕𝒐 𝒘𝒐𝒓𝒌. 𝑺𝒊𝒏𝒉𝒂𝒍𝒆𝒔𝒆 𝒎𝒐𝒃𝒔 𝒊𝒅𝒆𝒏𝒕𝒊𝒇𝒊𝒆𝒅 𝑻𝒂𝒎𝒊𝒍𝒔, 𝒔𝒕𝒓𝒊𝒑𝒑𝒆𝒅 𝒕𝒉𝒆𝒎 𝒏𝒂𝒌𝒆𝒅, 𝒌𝒊𝒄𝒌𝒆𝒅 𝒂𝒏𝒅 𝒃𝒆𝒂𝒕 𝒕𝒉𝒆𝒎 𝒃𝒆𝒇𝒐𝒓𝒆 𝒔𝒆𝒕𝒕𝒊𝒏𝒈 𝒕𝒉𝒆𝒎 𝒂𝒃𝒍𝒂𝒛𝒆 𝒐𝒓 𝒉𝒂𝒄𝒌𝒊𝒏𝒈 𝒕𝒉𝒆𝒎 𝒊𝒏𝒕𝒐 𝒑𝒊𝒆𝒄𝒆𝒔 𝒘𝒊𝒕𝒉 𝒎𝒂𝒄𝒉𝒆𝒕𝒆𝒔. 𝑺𝒐𝒎𝒆 𝒇𝒂𝒎𝒊𝒍𝒊𝒆𝒔 𝒘𝒆𝒓𝒆 𝒃𝒖𝒓𝒏𝒆𝒅 𝒕𝒐 𝒅𝒆𝒂𝒕𝒉 𝒊𝒏𝒔𝒊𝒅𝒆 𝒕𝒉𝒆𝒊𝒓 𝒄𝒂𝒓𝒔. 𝑴𝒐𝒃𝒔 𝒓𝒂𝒑𝒆𝒅 𝑻𝒂𝒎𝒊𝒍 𝒘𝒐𝒎𝒆𝒏, 𝒍𝒐𝒐𝒕𝒆𝒅 𝒂𝒏𝒅 𝒃𝒖𝒓𝒏𝒆𝒅 𝑻𝒂𝒎𝒊𝒍 𝒉𝒐𝒎𝒆𝒔 𝒂𝒏𝒅 𝒃𝒖𝒔𝒊𝒏𝒆𝒔𝒔𝒆𝒔. 𝑬𝒗𝒆𝒏 𝒘𝒉𝒊𝒍𝒆 𝑻𝒂𝒎𝒊𝒍𝒔 𝒘𝒆𝒓𝒆 𝒔𝒍𝒆𝒆𝒑𝒊𝒏𝒈 𝒊𝒏 𝒕𝒉𝒆𝒊𝒓 𝒐𝒘𝒏 𝒉𝒐𝒎𝒆𝒔—𝒊𝒕 𝒅𝒊𝒅𝒏’𝒕 𝒎𝒂𝒕𝒕𝒆𝒓. 𝑻𝒂𝒎𝒊𝒍 𝒉𝒐𝒎𝒆𝒔 𝒘𝒆𝒓𝒆 𝒊𝒅𝒆𝒏𝒕𝒊𝒇𝒊𝒆𝒅 𝒘𝒊𝒕𝒉 𝒓𝒖𝒕𝒉𝒍𝒆𝒔𝒔 𝒆𝒇𝒇𝒊𝒄𝒊𝒆𝒏𝒄𝒚 𝒘𝒊𝒕𝒉 𝒕𝒉𝒆 𝒉𝒆𝒍𝒑 𝒐𝒇 𝒗𝒐𝒕𝒆𝒓 𝒍𝒊𝒔𝒕𝒔 𝒅𝒊𝒔𝒕𝒓𝒊𝒃𝒖𝒕𝒆𝒅 𝒃𝒚 𝒕𝒉𝒆 𝑺𝒓𝒊 𝑳𝒂𝒏𝒌𝒂𝒏 𝒈𝒐𝒗𝒆𝒓𝒏𝒎𝒆𝒏𝒕. 𝑫𝒐𝒐𝒓𝒔 𝒂𝒏𝒅 𝒘𝒊𝒏𝒅𝒐𝒘𝒔 𝒘𝒆𝒓𝒆 𝒔𝒎𝒂𝒔𝒉𝒆𝒅 𝒊𝒏, 𝒉𝒊𝒏𝒈𝒆𝒔 𝒃𝒖𝒓𝒔𝒕𝒊𝒏𝒈 𝒂𝒔 𝒕𝒉𝒆 𝒎𝒐𝒃 𝒉𝒐𝒘𝒍𝒆𝒅 𝒐𝒏 𝒐𝒏𝒆 𝒔𝒊𝒅𝒆 𝒂𝒏𝒅 𝒊𝒕𝒔 𝒗𝒊𝒄𝒕𝒊𝒎𝒔 𝒄𝒓𝒊𝒆𝒅 𝒐𝒖𝒕 𝒊𝒏 𝒕𝒆𝒓𝒓𝒐𝒓 𝒐𝒏 𝒕𝒉𝒆 𝒐𝒕𝒉𝒆𝒓. 𝑾𝒐𝒎𝒆𝒏 𝒂𝒏𝒅 𝒄𝒉𝒊𝒍𝒅𝒓𝒆𝒏 𝒘𝒆𝒓𝒆 𝒏𝒐𝒕 𝒔𝒑𝒂𝒓𝒆𝒅 𝒃𝒚 𝒕𝒉𝒆 𝒕𝒉𝒖𝒈𝒔 𝒅𝒓𝒖𝒏𝒌 𝒐𝒏 𝒂𝒏𝒕𝒊-𝑻𝒂𝒎𝒊𝒍 𝒃𝒍𝒐𝒐𝒅𝒍𝒖𝒔𝒕. 𝑾𝒉𝒆𝒏 𝒕𝒉𝒆 𝒓𝒊𝒐𝒕 𝒘𝒂𝒔 𝒐𝒗𝒆𝒓, 𝒂𝒍𝒎𝒐𝒔𝒕 𝒕𝒉𝒓𝒆𝒆 𝒕𝒉𝒐𝒖𝒔𝒂𝒏𝒅 𝑻𝒂𝒎𝒊𝒍𝒔 𝒍𝒂𝒚 𝒅𝒆𝒂𝒅. 𝑬𝒗𝒆𝒏 𝒕𝒉𝒆 𝒑𝒆𝒂𝒄𝒆𝒇𝒖𝒍 𝑩𝒖𝒅𝒅𝒉𝒊𝒔𝒕 𝒎𝒐𝒏𝒌𝒔 𝒊𝒏 𝒕𝒉𝒆𝒊𝒓 𝒔𝒂𝒇𝒇𝒓𝒐𝒏-𝒄𝒐𝒍𝒐𝒖𝒓𝒆𝒅 𝒓𝒐𝒃𝒆𝒔 𝒅𝒊𝒅 𝒏𝒐𝒕 𝒔𝒕𝒂𝒏𝒅 𝒂𝒑𝒂𝒓𝒕 𝒇𝒓𝒐𝒎 𝒕𝒉𝒆 𝒗𝒊𝒐𝒍𝒆𝒏𝒄𝒆. 𝑭𝒐𝒓 𝒕𝒉𝒐𝒔𝒆 𝒏𝒊𝒈𝒉𝒕𝒎𝒂𝒓𝒊𝒔𝒉 𝒅𝒂𝒚𝒔, 𝒕𝒉𝒆 𝑩𝒖𝒅𝒅𝒉𝒂’𝒔 𝒕𝒆𝒂𝒄𝒉𝒊𝒏𝒈𝒔 𝒐𝒇 𝒍𝒊𝒃𝒆𝒓𝒂𝒕𝒊𝒏𝒈 𝒔𝒆𝒏𝒕𝒊𝒆𝒏𝒕 𝒃𝒆𝒊𝒏𝒈𝒔 𝒇𝒓𝒐𝒎 𝒔𝒖𝒇𝒇𝒆𝒓𝒊𝒏𝒈 𝒘𝒆𝒓𝒆 𝒔𝒆𝒕 𝒂𝒔𝒊𝒅𝒆, 𝒇𝒐𝒓𝒈𝒐𝒕𝒕𝒆𝒏, 𝒐𝒓 𝒔𝒊𝒎𝒑𝒍𝒚 𝒊𝒈𝒏𝒐𝒓𝒆𝒅. 𝑻𝒉𝒐𝒔𝒆 𝑻𝒂𝒎𝒊𝒍𝒔 𝒘𝒉𝒐 𝒕𝒐𝒐𝒌 𝒔𝒉𝒆𝒍𝒕𝒆𝒓 𝒃𝒆𝒉𝒊𝒏𝒅 𝒘𝒂𝒍𝒍𝒔 𝒘𝒆𝒓𝒆 𝒃𝒖𝒓𝒏𝒆𝒅 𝒂𝒍𝒊𝒗𝒆. 𝑻𝒐 𝒕𝒉𝒊𝒔 𝒅𝒂𝒚, 𝒏𝒐𝒕 𝒂 𝒔𝒊𝒏𝒈𝒍𝒆 𝒑𝒆𝒓𝒑𝒆𝒕𝒓𝒂𝒕𝒐𝒓 𝒉𝒂𝒔 𝒃𝒆𝒆𝒏 𝒃𝒓𝒐𝒖𝒈𝒉𝒕 𝒕𝒐 𝒋𝒖𝒔𝒕𝒊𝒄𝒆. — 𝑪𝒉𝒂𝒑𝒕𝒆𝒓 1, 𝑷𝒂𝒈𝒆 5
- "கறுப்பு யூலையை (Black July, ஆடிக்கலவரம்) முன்னிட்டு ... "
-
"உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / கறுப்பு ஜூலையில் ஒரு சிந்தனை"
எல்லோருக்கும் நன்றிகள்
-
"அதுவொரு கனாக்காலம்" [அந்தக் கனாக்காலம் 1948, 1956, 1970, 1977, 1983, என சிதறத் தொடங்கியது]
எல்லோருக்கும் நன்றிகள்
-
"உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / கறுப்பு ஜூலையில் ஒரு சிந்தனை"
"உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / கறுப்பு ஜூலையில் ஒரு சிந்தனை" / பகுதி 01 [இது என் சிறிய சிந்தனை. இதில் பிழையும் இருக்கலாம் சரியும் இருக்கலாம். இதை சமாதான விரும்பிகளிடம், அவர்களின் கருத்துக்காக சமர்ப்பிக்கிறேன். உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் !] காந்தி, ஒரு வெளிநாட்டு அதிகாரத்துக்கு எதிராக சுதந்திரம் வேண்டி போரிட்டார் நெல்சன் மண்டேலா நிறவெறிக்கு எதிராகப் போரிட்டார் மார்ட்டின் லூதர் கிங் சமூக உரிமைக்காக போரிட்டார் இவர்களில் இருந்தும் பெண் விடுதலைக்கு எதிராக போரிட்ட பாரதியார் சாதி, மதத்திற்கு எதிராக போரிட்ட பெரியார் தமிழர்களின் சம அரசியல் உரிமைக்காக போரிட்ட தந்தை செல்வா இவர்களில் இருந்தும், மற்றும் இதனுடன் தொர்புடைய மற்றும் பலரிடம் இருந்தும், அதேவேளை வரலாற்று செய்திகளிலும் இருந்தும் உதாரணமாக சமயத்தை எடுத்துக் கொண்டால், மேல் பழைய கற்காலப் பகுதியில் [Upper Palaeolithic Revolution] தோன்றிய முதலாவது சமய அமைப்பு ஒரு வாய்வழியாக ஒவ்வொரு இனக் குழு உறுப்பினர்களிடமும் அவர்களின் புதிய தலைமுறைக்கும் பரப்பபட்டன. அதன் பின் பல காலங்கள் கடந்து, எழுத்து முறை கண்டு பிடிக்கப்ப ட்டதும் அவை முதலில் எழுத்துருவில் பதியப்பட்டன. இதனால் அவை கால, சூழ்நிலை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றம் அடையக் கூடிய நெகிழ்வுத் தன்மையை இழந்தன. பொதுவாக வாய்வழி மரபுகள் காலப்போக்கில்- அவர்களின் அறிவு அனுபவத்திற்கு ஏற்ப- விட்டுக்கொடுப்புகளுடன் விரிவுபடுத்தக் கூடியவை, ஆனால் எழுத்துருவில் பதியப்பட்டவை அப்படியல்ல. இது ஒரு துரதிருஷ்டவசமே. ஏனென்றால், வெவேறு இடங்களில் அந்த அந்த காலக், சூழ்நிலைக்கு ஏற்ப, அவர் அவர்களின் ஒரு ஊகத்தின் அடிப்படையில் ஏற்பட்ட வெவேறு சமயங்கள் தனித்துவமாக விட்டுக் கொடுப்பு செய்ய முடியாத நிலையில் அவை வெவ் வேறாகவே இருக்கவேன்டியதாயிற்று. அவைகளின் போதனைகள், சிந்தனைகள் மாறுபட்ட வையாக இருந்தன. அது மட்டும் அல்ல, தமது மத அறிவுறுத்தல்கள், சடங்குகள், நம்பிக்கைகள் தமது ஆண்டவனே தமக்கு நேரடியாக தந்தவை என திடமாக நம்பினர். ஆகவே வெவ்வேறு மதங்களுக்கிடையான சமரசம் அல்லது இணக்கம் அடைவது கடினமாகவும் அதிகமாக முடியாத ஒன்றாகவும் இருந்தது. உலகின் சமாதானத்திற்கு எதிரான போர், முதல் முதலில் அதிகமாக தமது சமயங்களை, நம்பிக்கைகளை பரப்புவதற்கான போராகவே ஆரம்பித்ததாக உள்ளது. அது இன்றுவரை பலவழிகளில் தொடர்கிறது. இன்று அது போராக இல்லாவிட்டாலும், பரப்புரை, சிலவேளை பொய்களும் கலந்து மற்றும் உதவி போன்றவற்றால் தொடர்கிறது. ஒரு உதாரணமாக, நான் பிறந்து வளர்ந்த யாழ்ப்பாணத்தை எடுத்துக் கொண்டால் ... போர்த்துக்கேயர் கைப்பற்றி ஆண்ட காலத்தில், கிராமவாசிகளை ஓர் இடத்தில் கூடச் சொல்லி,பின் கிறிஸ்தவ மதப் போதகர், உங்கள் பொய் கடவுளான சிவன் முருகன் போன்றோரை நீங்கள் நிராகரித்து எங்கள் உண்மைக் கடவுளான ஜேசுவை ஏற்றுக் கொள்ளுங்கள் என கேட்டனர். இது ஒரு வேண்டுகோள் அல்ல, இது ஒரு போர்த்துக்கேய அரசாங்கத்தின் அதிகாரம் பெற்ற ஒரு கட்டளை. - பைபிளுடன் தொடங்கு, அது வெற்றி தரவில்லை என்றால், வாளை பாவி என்பதாகும் - அபராதம் அல்லது உடல் ரீதியான தண்டனை போன்றவற்றுக்கு எதிரான பயம், அந்த கிராமவாசிகளை, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொண்டாட்ட நாட்களிலும் ஒழுங்காக கிறிஸ்தவ ஆலயங்களுக்கு போகவைத்தது. இப்படித்தான் தமிழர் மதம் மாற்றப்பட்டார்கள். விரும்பியோ அல்லது ஒருவரின் தனிப்பட்ட சம்மதத்துடனோ அல்லது இரு சமயத்தையும் ஒப்பிட்டு பார்த்தோ இது நடைபெறவில்லை. முழுக்க முழுக்க பணத்தாலும் பதவியாலும் அதிகாரத்தாலும் இது நடந்தது. இது மேலும் மேலும் பிளவையே வளர்த்தது. சமாதான வாழ்வு சுக்கு நூறாகியது சமயத்தின் அல்லது ஆண்டவனின் பெயரால்!! இன்னும் ஒரு உதாரணமாக, நான் பிறந்து வளர்ந்த இலங்கையை எடுத்துக்கொண்டால், சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப்பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப்பட்ட தமிழ் பரவர் அல்லது பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப்பிரிவு மூடப்பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப்பட்டார்கள். வீட்டிலே தமிழ் பேசினாலும் பிள்ளைகளின் பாடசாலை மொழி சிங்களம் ஆனது. பின்னர் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம் 20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்பது வரலாறு ஆகும். எனவே தமிழர்கள் நாளடைவில் ஒருமைப்படுத்தல் (Assimilation) மூலம் சிங்களவர்களாக மாறினார்கள். அதாவது தமிழர் என்ற ஒரு இனமே அங்கு சாக்கடிக்கப் பட்டது. இவர்கள் இனமாற்றம் செய்வதற்கு தமிழர் என்ற அடையாளத்தை மெல்ல மெல்ல மத மாற்றத்தால் இழந்ததும், மற்றும் தமிழர் பெருவாரியாக உள்ள நிலத்தை விட்டு அகன்றதும் ஒரு முக்கிய இலகுவான காரணமாக அமைகிறது ? இந்த இனப்படுகொலைக்கு காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்! பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!! அவர் கத்தோலிக்க பள்ளிக் கூடங்களில் கற்கை மொழியாக இருந்த தமிழ் மொழியை அகற்றி விட்டு சிங்களத்தை புகுத்தினார். இதன் விளைவாக தமிழ்க் கத்தோலிக்கர்கள் சிங்களக் கத்தோலிக்கர்களாக மாற்றம் அடைந்தனர். [This historic process was embraced by the educational policies of a local Bishop Edmund Peiris who was instrumental in changing the medium of education from Tamil to Sinhalese] ஆகவே சமயத்தை, சாதியை, நிறத்தை, இனத்தை, பொருளாதாரம் / வசதி அல்லது ஆண் பெண் வேற்றுமைகள் கடந்தால் தான் சமாதானம் கிடைக்க வழிவரும் என்று நம்புகிறேன். அதேவேளை எம் குழந்தை / இளைஞர் பாட திட்டம் கட்டாயம் இவைகளை கடந்ததாக உதாரணங்கள் மூலம் கற்பிக்க வேண்டும். ஒரு உதாரணமாக, நான் பிறந்து வளர்ந்த இலங்கையை எடுத்துக் கொண்டால், இன்னும் புராணக் கதையான, உண்மைக்கு புறம்பான மகாவம்சத்தின் அடிப்படையிலேயே இலங்கை வரலாற்றை போதிக்கிறார்கள். அது தான் இன்னும் இலங்கையில் உள்நாட்டு சமாதானம் ஏற்படாததற்கு ஒரே ஒரு காரணமாகும். எனவே, நாம் இன்று அறிவியலில் மிக மிக முன்னேறி இருந்தாலும் சமாதானம் ஒரு கேள்வி குறியாகவே உள்ளது. எனவே பொருள்முதல்வாத வளர்ச்சி [materialistic development] மனிதனுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தாலும், சமாதானம் அதனால் வந்துவிடும் என்று சொல்லமுடியாது. அதற்க்கு கலாச்சார ஞானம் / அறிவு உள்ளத்தில் முழுமையாக வரவேண்டும். இங்கு தான் எம் பண்டைய அனுபவங்கள் மற்றும் இலக்கியங்கள் துணை நிற்கின்றன என்று நம்புகிறேன்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] தொடரும் பகுதி : 02
-
"அதுவொரு கனாக்காலம்" [அந்தக் கனாக்காலம் 1948, 1956, 1970, 1977, 1983, என சிதறத் தொடங்கியது]
"அதுவொரு கனாக்காலம்" [அந்தக் கனாக்காலம் 1948, 1956, 1970, 1977, 1983, என சிதறத் தொடங்கியது] ஒரு காலத்தில், இலங்கையின் வெப்பமண்டல சொர்க்கத்தில், தமிழ் சிங்கள வேறுபாடுகள் இன்றி பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட மக்கள் இலங்கையன் என்ற ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக இருந்தனர். இலங்கை மக்கள் தங்கள் வாழ்க்கையையும் நிலத்தின் மீதான அன்பையும் பகிர்ந்து கொண்டு இணக்கமாக வாழ்ந்தனர். இலங்கைத்தீவு வளங்கள் நிறைந்ததாக இருந்தது மட்டும் அல்ல, அதன் மக்கள் அவர்கள் பகிர்ந்து கொண்ட ஒற்றுமையில் மகிழ்ச்சியடைந்தனர். உதாரணமான சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டது மட்டும் அல்ல, 1911 ஆம் ஆண்டு முதல் இலங்கைச் சட்ட சபை உறுப்பினராக தெரிவும் செய்யப்பட்டார். அதுமட்டும் அல்ல, சிங்கள அரசியலாளர்கள், அவரைத் தங்கள் தோள்களில் சுமந்து, காலிமுகத்திடலில் ஊர்வலம் சென்றமையும் வரலாற்று நிகழ்வாகும். ஆனால் அந்த கனாக்காலம், 1920களின் பிற்பகுதியில் இருந்து தீபவம்சத்திலும், மகாவம்சத்திலும், எல்லாளனை நடத்திய விதம் மாதிரியே, இராமநாதனையும் சிங்கள அரசியல் வாதிகள் ஒதுக்கத் தொடங்கினார்கள். இலங்கையில் நிலவிய அந்தக் கனாக்காலம் 1948, 1956, 1970, 1977, 1983, என சிதறத் தொடங்கியது. அந்த கால இடைவெளியில் தான், 1982 ஆண்டு தொடக்கத்தில், விஜயவீர என்ற இளைஞனும், மகிழ்விழி என்ற இளம் பெண்ணும் பக்கத்து பக்கத்து கிராமங்களில் வசித்து வந்தனர். அவர்கள் வெவ்வேறு இனப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் - விஜயவீர சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர், மகிழ்விழி ஒரு தமிழர். அவர்களிடம் கலாச்சார வேறுபாடுகள் இருந்த போதிலும், அவர்களின் காதல் எல்லைகளைத் தாண்டியது! அதுமட்டும் அல்ல, அங்கு இன்னும் ஒரு கனாக்காலம் நிலவியதால், அவர்களின் குடும்பங்களும் நண்பர்களும் அவர்களின் உறவை எந்த இன ரீதியாகவும் பார்க்கவில்லை. காலம் செல்ல செல்ல, 1983 ஜூலைக்கு பின் அவர்களின் கனவு காலம் மறைய ஆரம்பித்தது. மலை அடிவாரத்தில், பரந்தவெளியில், எந்த பயமும் தயக்கமும் இன்றி இருவரும் மாலைப்பொழுதில் முழு நிலாவின் அழகை பார்த்து ரசித்து கொஞ்சி பேசி காதல் புரிந்த அந்தக் காலம் 'அதுவொரு கனாக்காலம்' ஆக அவர்களுக்கு மாறத் தொடங்கியது. ஒரு காலத்தில் நிலவிய தீவின் சிறப்பியல்புகள் குறையத் தொடங்கி, பதட்டங்கள் தோன்றின. பற்றாக்குறையான வளங்கள், வேலை வாய்ப்புகள் சமூகங்களுக்கிடையில் சச்சரவுகளைத் தூண்டின, மேலும் சில அரசியல், மத தலைவர்கள் தங்கள் வேறுபாடுகளை வளப்படுத்துவதற்குப் பதிலாக, பிளவுபடுத்தி குறுக்குவழியில் இலாபம் அடைய பார்த்தனர். பல நூற்று ஆண்டுகளாக ஒருங்கிணைக்கப்பட்ட இலங்கை மண், தவறான புரிதல்கள் மற்றும் அச்சங்களால் தூண்டப்பட்டு, இன பாகுபாடு மற்றும் இனப் பதட்டங்களை அனுபவிக்கத் தொடங்கியது. ஆழமான காதல் வசப்பட்ட விஜயவீராவும் மகிழ்விழியும், இந்த வளர்ந்து வரும் இன கொந்தளிப்பின் மத்தியில் தங்களைக் கண்டுகொண்டனர். ஒரு காலத்தில் அவர்களது உறவை ஆதரித்த அவர்களது குடும்பங்கள் மாறிவரும் காலத்தின் அழுத்தத்தால், மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகள், சமூக எதிர்பார்ப்புகள், பயம் காரணமாகவும் அவர்களின் எண்ணங்களை மெல்ல மெல்ல மாற்றத் தொடங்கினர். மேலும் அவர்கள் தங்கள் குழந்தைகளின் உறவை இனம் மற்றும் கலாச்சாரத்தின் கண்ணாடிகளின் ஊடாக இன்று பார்க்கத் தொடங்கினர். எதுஎவ்வாறாகினும், விஜயவீராவும் மகிழ்விழியும் தங்கள் காதலில் உறுதியாக இருந்தனர். தங்கள் சமூகங்களுக்கிடையில் வளர்ந்து வரும் பிளவை தங்களின் பிணைப்பு ஒரு பாலமாக சரிப்படுத்தும் என்று நம்பினர். அவர்கள் ஒரு காலத்தில் தங்கள் நிலத்தை வரையறுத்திருந்த ஒற்றுமையை தங்கள் தங்கள் மக்களுக்கு நினைவூட்டும் நம்பிக்கையில், புரிந்துணர்வு மற்றும் பச்சாதாபத்திற்காக உறவினருடனும் அயலவருடனும் வாதிட்டனர். அவர்களின் எண்ணம் எல்லாம் "அதுவொரு கனாக்காலம்" ஆக மாறாமல் என்றும் அது தங்களுக்கும் தங்கள் வருங்கால பிள்ளைகளுக்கும் நிலைத்து இருக்க வேண்டும் என்பதே! ஆனால், அவர்களின் முயற்சிக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதிகரித்த பதட்டங்கள் இரு தரப்பிலும் தீவிரவாதக் குரல்களுக்கு வழிவகுத்தது, பிளவுகளை விரிவுபடுத்தியது மற்றும் விஜயவீராவும் மகிழ்விழியும் பகிர்ந்து கொண்ட அன்பை மறைக்க முயன்றது. அவர்களால் பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான தெளிவான பாதை, பனிமூட்டமாக வளர்த் தொடங்கி, தப்பெண்ணம் மற்றும் பயத்தின் இருண்ட மேகங்களால் மறைக்கப்பட்டது. ஏறத்தாழ ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளை மட்டும் உள்ளடக்கிய மகாவம்சம் என்ற புராணக் கதைகளை அடிப்படையாக வரிந்து கட்டிக் கொண்டு, ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இது ஒரு கனாக்காலமாக மகிழ்வாக அனுபவித்த பன்மொழி நடைமுறை, பன்முக கலாச்சாரம் மற்றும் சர்வதேச வரலாறுகள் எல்லாவற்றையும் மூடி மறைக்க தொடங்கினர். துரதிர்ஷ்டவசமாக, 1983 ஜூலையில் தமிழ் மக்கள் மேல் மீண்டும் ஒரு வன்முறை ஏவிவிடப்பட்டது. வன்முறை நகரங்கள், கிராமங்கள், குடும்பங்கள் மற்றும் உயிர்களை கிழித்தெறிந்தது. இந்த குழப்பத்திற்கு மத்தியில் விஜயவீராவும் மகிழ்விழியும் கட்டாயத்தின் பேரில் பிரிக்கப்பட்டனர். ஒரு காலத்தில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த அவர்களது காதல், அவர்களது நிலத்தை, உயிரை மூழ்கடித்திருந்த வெறுப்பின் முகத்தில் அற்பமானதாகத் தோன்றியது. ஆண்டுகள் சென்றன, மோதலின் காயங்கள் ஆழமாக ஓடியது. விஜயவீரா மற்றும் மகிழ்விழியின் காதல் கதைகள் புராணக்கதைகளாக மாறிவிட்டது. கொந்தளிப்பின் போது இழந்த காதலை மீண்டும் புதுப்பிக்க முடியவில்லை. பாரபட்சம், இனத்துவேசம் மற்றும் பயத்தின் காரணமாக ஒற்றுமை கனவு சிதைந்ததை நல்ல உள்ளங்கள் பல உணர்ந்து தமது அந்த முன்னைய கனாக்காலத்தை வருத்தத்துடன் திரும்பிப் பார்த்தனர். 1987-89 ஜேவிபி புரட்சி மற்றும் 1987-90 இந்திய அமைதி காக்கும் படையின் போர் என இலங்கை முழுவதுமே ஒரே பதட்டத்திலும் பயத்திலும் மூழ்கி இருந்தது. என்றாலும் மகிழ்விழி முன்பு விஜயவீராவை சந்திக்கும் மலை அடிவாராத்தில் பரந்தவெளியில், ஆனால் இன்று சந்திரன் தோன்றாத அமாவாசை மாலையில் வானத்தை வெறுத்து பார்த்துக்கொண்டு இருக்கிறாள். அவள் எண்ணம் எல்லாம், விஜயவீராவுடன் மகிழ்வாக காலம் கழித்த அந்த கனாக்காலம் மட்டுமே ! ஆமாம் அவளுக்கு "அதுவொரு கனாக்காலம்" ஆக இன்று மாறிவிட்டது! "என் அன்பு ஒன்றில் நீ வாழ்ந்தாய் உன் அன்பு ஒன்றில் நான் வாழ்ந்தேன் நம் அன்பு கடலில் இருவரும் நீந்தினோம் நாளை நாமதேயென ஒன்றாய் மகிழ்ந்தோம்!" "உன் துன்பம் என்னை வலிக்கும் என் துன்பம் உன்னை வலிக்கும் நம் காதல் பூந் தோட்டத்தில் இன்ப மலர்கள் பூத்த காலமது!" "என் நிழலாக இருட்டிலும் நீயிருப்பாய் உன் மழலையாய் என்றும் நானிருப்பேன் இனம் மதம் தாண்டியதே நம்காதல் மனிதம் மட்டுமே அங்கு மலர்ந்தது!" "பொல்லாத வெறியர்கள் குழப்பத்தை ஏற்படுத்தி தவறான வார்த்தைகளை உண்மையென பரப்பி பிரியாத உள்ளங்களை தூர விலக்கி அதுவொரு கனாக்காலம் ஆக்கி விட்டார்களே!" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும்" [அரசியல், சமயம் மற்றும் வரலாற்று வாதிகளுக்கு, இன்று 24/07/2024 இல்]
"ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும்" [அரசியல், சமயம் மற்றும் வரலாற்று வாதிகளுக்கு, இன்று 24/07/2024 இல்] "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!" "சுயநல ஆசைகள் எங்கும் வளர்கிறது சுதந்திரமாக மனித மனதிலும் பதுங்குகிறது சுழன்று சுழன்று அவனை கெடுத்து சுருக்கி விடுகிறது அவனின் இதயத்தை!" "எமக்கு வேண்டியதை நாங்கள் எடுக்கிறோம் எம்மை பற்றி மட்டுமே சிந்திக்கிறோம் எதுக்கு எடுத்தாலும் எம்மை முதல்நிறுத்தி எடுத்த காரியத்துக்கு நியாயம் கூறுகிறோம்!" "நாங்கள் மன மற்றவர்களாகத் தோன்றுகிறோம் நாடி வருபவர்களுக்கு கையை விரிக்கிறோம் நாதியற்ற மக்களை வரவேற்பதும் இல்லை நாணம் எம்மை வருந்துவதும் இல்லை!" "நாங்கள் காயப் படுத்திய மக்களை நாம் அழித்த எண்ணற்ற உயிர்களை நாம் விட்டுச் சென்ற அழிவின் பாதையை . நாங்கள் எனோ இன்னும் உணரவில்லை!" "இருப்பதை விட்டு இல்லாததுக்கு ஏங்குகிறோம் இல்லாத இடங்களிலும் தேடி பார்க்கிறோம் இடுகாடுவிலும் மனிதத்தை புறக்கணிக்கிறோம் இறுமாப்புடன் எம்மிடம் தவறில்லை என்கிறோம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"வேகாத வெயிலிலே விறகொடிக்கப் போறபொண்ணே..!" / நாட்டுப்புற எசப்பாட்டு
எல்லோருக்கும் நன்றிகள்
-
"சத்தம் போடாதே, இன்று ஜூலை 23 , 1983 "
"சத்தம் போடாதே, இன்று ஜூலை 23 , 1983 " இன்று ஜூலை 23 , 1983 , சனிக் கிழமை. நானும் என் மனைவியும் எமது ஒரு வயது மகளும் நாலு வயது மகனும், கொழும்பில் இருந்து சனி காலை புறப்பட்டு, என்னுடன் வேலை செய்யும் சக பொறியியலாளர் ராஜரத்ன வீட்டிற்கு, அனுராதபுர பட்டணத்தில் இருந்து கொஞ்சம் உள்ளே உள்ள ஒரு கிராமத்துக்கு, அவரின் முதல் பிள்ளையின் முதலாவது பிறந்த நாளுக்கு வந்தோம். சனிக்கிழமை மதியம் மகிழ்வாக, கலகலப்பாக காலம் நகர்ந்தது. சனி இரவு நாம் கொண்டாட்டத்துக்கான அலங்காரம் மற்றும் ஏற்பாடுகள் செய்வதாக இருந்தோம். அதேவேளை என் மனைவி பிறந்த நாள் கேக் செய்வதில் ராஜரத்ன மனைவியுடன் சுறுசுறுப்பாக இருந்தார். எனவே நானும் ராஜரத்னாவும் அவரின் இரு தம்பிமாரும், மதிய உணவுக்கு பின் கொஞ்சம் பீர் [beer] எடுத்துக் கொண்டு சீட்டு விளையாடிக் கொண்டு இருந்தோம். என் மனைவிதான் கேக்யை வடிவமைத்தார். ஒரு வித்தியாசமாக இருக்கட்டும் என்று யாழ் குடா வடிவில், நடுவில் பனை மரம் அமைத்து, அதன் உச்சியில் மெழுகுதிரி வைக்கக் கூடியதாக நுட்பமான கைவண்ணத்துடன் அமைத்தார். அது முடிய ஜூலை 24 , ஞாயிறு அதிகாலை ஒரு மணி ஆகிவிட்டது. நாம் நால்வரும் பிறந்த நாளுக்கான சோடனைகளும் மற்றும் ஏற்பாடுகளும் அதற்கு சற்று முன் தான் முடித்தோம். இறுதியாக, எல்லோரும் நித்திரைக்கு போகுமுன், ஒரு வலுவான காபி [strong coffee] குடித்துக்கொண்டு, இலங்கை ஆங்கில வானொலியில் பாடல் கேட்டோம். அது தான் எம்மை கொஞ்ச நேரத்தால் 'சத்தம் போடாதே!' என என்னையும், மனைவியையும், பிள்ளைகளையும் மௌனமாகியது! ஆமாம், நாம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர்கள். இப்ப நாம் இருப்பது முற்றும் முழுதான சிங்கள கிராமத்தில். அது என்ன புது விடுகதை என்று யோசிக்கிறீர்களா ?. இது விடுகதை அல்ல, அவசர செய்தியாக வானொலியின் அறிவித்தலே அந்த விடுகதை! 1983 சூலை 23 இரவு 11:30 மணியளவில், யாழ் நகருக்கு அருகில் உள்ள திருநெல்வேலியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத் தொடரணி மீது பதுங்கியிருந்து தாக்குதல் செய்யப்பட்டதாகவும் தொடர்ந்து நடந்த மோதலில், ஒரு அதிகாரியும் பன்னிரண்டு இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர் என அறிவித்தது தான் அந்த திடுக்கிடும் செய்தி. ஆனால் அதை தொடர்ந்து பலாலி இராணுவ முகாமில் இருந்து புறப்பட்ட இராணுவத்தினர் திருநெல்வேலி செல்லும் வழியில் உள்ள அனைத்துக் கடைகளையும் அடித்து நொறுக்கினர். யாழ்ப்பாணத்தில் 51 தமிழ் பொதுமக்கள் பின்னர் பழிவாங்கும் வகையில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இந்த செய்திகள் எல்லாம் மௌனமாக்கப் பட்டன என்பதும் அதன் உள் நோக்கமும் பின்பு தான் தெரிந்தது. ஞாயிறு மாலை / இரவு தமிழருக்கு எதிரான வன் முறைகள் பெருவாரியாக கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. ஆனால் ராஜரத்ன, அவரின் சகோதரர்கள் எம்மை எல்லா நேரமும் கவனித்த படியே இருந்தார்கள். அவர்களின் ஒரே ஒரு வேண்டுகோள், எந்த சந்தர்ப்பத்திலும் நாம் அங்கு இருப்பது, அந்த கிராமத்தில் இருக்கும் காடையர்களுக்கும் இனவெறியாளருக்கும் மற்றும் ராணுவத்திற்கும் தெரியக்கூடாது. அதற்கு ஒரே வழி ' சத்தம் போடாதே' . ஏன் என்றால் எமக்கு தெரிந்த மொழிகள் தமிழும் ஆங்கிலமும் தான்! நம் சத்தம் கட்டாயம் காட்டிக் கொடுத்துவிடும். மற்றும் அன்று இரவு தான் பிறந்தநாள் கொண்டாடட்டம். கிராம மக்கள் பலர் வருவார்கள். அவர்களில் நல்லவர்களும் இருப்பார்கள். கெட்டவர்களும் இருப்பார்கள். அவர்களுக்கு பிடி கொடாமல் சமாளிக்கவும் வேண்டும். பாவம் ராஜரத்ன குடும்பம். எந்த மன சோர்வும் இன்றி, தைரியமாக அவர்கள் இருந்ததை நாம் கட்டாயம் போற்றத்தான் வேண்டும். ஆனால் ஒரு சிக்கல் இப்ப, இன்னும் இரண்டு மணித்தியாலத்தில் கேக் வெட்ட வேண்டும். ஆனால் கேக் யாழ்குடா வடிவில், பனை மரத்துடன்! யார் இதை பார்த்தாலும் ஒரு சந்தேகம் வரக்கூடிய சூழ்நிலை. அது தான் அந்த சிக்கல்! சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகிக்கு கூறிய காதல் மொழிகள் தான், என் மனைவியின் அழகு பற்றி எண்ணும் பொழுது வரும். அது எனோ எனக்குத் தெரியாது. அதில் உள்ள தமிழின் சிறப்பாக கூட இருக்கலாம் அல்லது அதைவிட அவளின் அழகு மேன்மையாக இருக்கலாம்? "மாசு அறு பொன்னே! வலம்புரி முத்தே! காசு அறு விரையே! கரும்பே! தேனே! அரும் பெறல் பாவாய்! ஆர் உயிர் மருந்தே! பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே! மலையிடைப் பிறவா மணியே என்கோ? அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ? யாழிடைப் பிறவா? இசையே என்கோ? தாழ் இருங் கூந்தல் தையால்! நின்னைஒ-என்று உலவாக் கட்டுரை பல பாராட்டி, தயங்கு இணர்க் கோதை – தன்னொடு தருக்கி," குற்றம் இல்லாத [24 கரட்?] பொன்னே, வலம்புரி முத்தே, குறை இல்லாத மணம் நிறைந்த பொருளே, கரும்பே, தேனே, சுலபத்தில் கிடைக்காத பெண்ணே, என் உயிரைப் பிடித்து வைத்திருக்கும் மருந்தே, பெரும் வணிகனாகிய மாநாயகன் பெற்ற மகளே! உன்னை நான் எப்படிப் பாராட்டுவேன்? மலையில் பிறக்காத மணியே என்பேனா? கடலில் பிறக்காத அமுதமே என்பேனா? யாழில் பிறக்காத இசையே என்பேனா? ... எனக்கே என்றும் புரியவில்லை. ஆனால் அது இப்ப முக்கியம் இல்லை, ஆமாம் அவள் உடலில் மட்டும் அழகு அல்ல, அறிவிலும் அழகானவள். அது தான் எனக்கு கிடைத்த வரப்பிரசாதம். அவள் ஒருவாறு மெதுவாக கதைகள் சொல்லி, காரணம் நாம் சாதாரணமாக கதைப்பது தமிழில் தான். எனவே காதும் காதும் வைத்தாற் போல் பிள்ளைகளுக்கு சொல்லி, அவர்களை நித்திரை ஆக்கிவிட்டார். கொண்டாடட்டம் முடியும் மட்டும் அவர்களும் 'சத்தம் போடாதே' தான்! அவர்கள் தூங்கிய கையோடு, தான் முன்பு வடிவமைத்த கேக்கை, கொஞ்சம் கண்டி நகரம் போல் வடிவை சரிப்படுத்தி, பனை மரத்தை கித்துள் மரமாக மாற்றி அமைத்து, ஓ! அதன் எழிலில் எழுத்தில் சொல்ல முடியாது. ராஜரத்ன கண்டி சிங்களவன் என்பதால், அது அவர்களுக்கும், ஏன் , கொண்டாட்டத்துக்கு வந்தவர்களுக்கும் உற்சாகமும் மகிழ்வும் கொடுத்தது. ஆனால் எம்மால் அதை நேரடியாக பார்த்து ரசிக்க முடியவில்லை ! நானும் மனைவியும் பிள்ளைகளுக்கு எந்த சிறு சத்தமும் இடையூறும் வராதவாறு கண்ணும் கருத்துமாக, கொண்டாட்டம் முடியும் வரை இருந்தாலும், நாம் இருவரும் அருகில் அருகில் இருந்தது எமக்கு ஒரு சங்க பாடலையும் [அகநானுறு 136] நினைவூட்டி சென்றது. இவளை நன்கொடையாக வழங்கி [சத்தம் போடாதே என கட்டளையிட்டு ஒரு அறையில் இருட்டில் அடைத்து], ஏற்படுத்திக் குடுத்த, “தலை நாள் இரவில் (இந்த பிறந்தநாள் இரவில்), என் உயிருக்கு உடம்பாக அமைந்த இவள் உடல் முழுதும் உடையால் போர்த்தி இருப்பதால்.. ஒரே புழுக்கமா இருக்கு அவளுக்கு ! அவள் நெற்றி இப்படி வேர்க்குதே? கொஞ்சம் காற்று வரட்டும் என எண்ணி [ஒரு சாட்டாக அதை என் கையில் எடுத்து], அவள் அழகை பார்க்கும் ஆவலுடன், ஆடையை திறவாய் எனச் சொல்லி, ஆர்வம் ததும்பும் நெஞ்சோடு, துணியை நான் கவர. அய்யோ [அலற முடியாது, 'சத்தம் போடாதே' தடுக்கிறதே என அவள் முழிக்க] உறையில் இருந்து உருவிய வாளைப் போல, அவளின் அழகு விளங்கும் உடல் ஆடையில் இருந்து நீங்கியது. அவள் தன் வடிவம் மறைக்க அறியாதவள் ஆனாள். [பிள்ளைகள் ஒரு பக்கம், தூங்கி இருந்தாலும், இயல்பாக பெண்களில் எழும்] வெட்கப்பட்டாள் (ஒய்யாரம்?) ஏய், என்னை விடுடா -ன்னு இறைஞ்சுகிறாள் [ஆனால் சத்தம் வராமலே ?]; வண்டுகள் மொய்க்கும் … ஆம்பல் மாலையைக் கழட்டி வச்சிட்டு; கூந்தலையே இருட்டாக்கி, அந்த இருட்டில் தன்னை, மறைத்தற்குரிய உறுப்புகளை மறைத்து, மறைச்சிக்கிட்டு வெட்கப்படுகிறாள்! "தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின், ‘ உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி! முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ, பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர் உறு வளி ஆற்றச் சிறு வரை திற ‘ என ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின், உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப, மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென நாணினள் இறைஞ்சியோளே பேணி, பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி, சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த இரும் பல் கூந்தல் இருள் மறை ஔதத்தே." 1983 சூலை 25 காலை 9:30 மணிக்கு அரசுத்தலைவர் ஜெயவர்தனா நாட்டின் பாதுகாப்புப் பேரவையை சனாதிபதி மாளிகையில் கூட்டினார். அதே நேரத்தில் அம்மாளிகையில் இருந்து 100 யார் தொலைவில் இருந்த 'அம்பாள் கபே' தீ மூட்டப்பட்டு எரிந்து கொண்டிருந்தது எவ்வளவு தூரம் அரச நிறுவனமும் அதன் உறுப்பினர்களும் இந்த வன் முறையில் ஈடுபட்டார்கள் என்பதை சத்தம் போடாமல் சொல்லிக்கொண்டு இருந்தன! அது மட்டும் அல்ல, அருகில் யோர்க் வீதியில் 'சாரதாஸ்' நிறுவனமும் தீக்கிரையானது. தொடர்ந்து சனாதிபதி மாளிகைக்கு முன்னால் இருந்த பெய்லி வீதியில் அனைத்துத் தமிழ்க் கடைகளுக்கும் தீ மூட்டப்பட்டன. பாதுகாப்புப் பேரவையின் கூட்டம் முடிவடைவதற்கிடையில், கொழும்பு கோட்டைப் பகுதியில் இருந்த அனைத்துத் தமிழ் நிறுவனங்களும் தீக்கிரையாகின. அது மட்டும் அல்ல, கொழும்பில் தமிழர்களுக்கு எதிராக காடையர்களாலும் அரசின் சில தலைவர்களாலும் ஏற்படுத்தப்பட்ட இந்த கலவரம் அடங்க ஏழு நாட்கள் சென்றது குறிப்பிடத் தக்கது . முக்கியமாக அங்கு சிங்களக் காடையர் கும்பல் தமிழரைத் தாக்கினர், உயிருடன் எரித்தனர், படுகொலைகளைப் புரிந்தனர், உடமைகளைக் கொள்ளையடித்தனர். இறப்பு எண்ணிக்கை 400 முதல் 3,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டது, 150,000 பேர் வீடற்றவர்களாயினர். ஏறத்தாழ 8,000 வீடுகளும், 5,000 வணிக நிறுவனங்களும் அழிக்கப்பட்டன. இக்கலவரத்தின் போது ஏற்பட்ட மொத்தப் பொருளாதாரச் செலவு $300 மில்லியன் என மதிப்பிடப்பட்டது. இன்னும் ஒன்றையும் நீங்கள் கட்டாயம் கவனிக்கவேண்டும். அதாவது கலவரங்களுக்கு சில நாட்களுக்கு முன்னதாக, 1983 ஜூலை 11 இல் இலண்டன் 'டெய்லி டெலிகிராப்' பத்திரிகைக்கு அரசுத்தலைவர் ஜெயவர்தன அளித்த ஒரு நேர்காணலில், ஜெயவர்தன இவ்வாறு கூறினார்: "யாழ்ப்பாண (தமிழ்) மக்களின் கருத்தைப் பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை. இப்போது நாம் அவர்களை நினைக்க முடியாது. அவர்களின் வாழ்க்கையைப் பற்றியோ அல்லது எங்களைப் பற்றிய அவர்களின் கருத்தைப் பற்றியோ அல்ல. வடக்கில் எந்தளவுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ அந்தளவுக்கு சிங்கள மக்கள் இங்கு மகிழ்ச்சியடைவார்கள்... உண்மையில் நான் தமிழர்களை பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்" இது ஒன்றே இந்த கலவரத்தின் நோக்கத்தையும் கொடுமையையும் எடுத்துக்காட்டும்! இவை எல்லாம் தமிழர்களை நோக்கி 'சத்தம் போடாதே'. என்ற ஒரு எச்சரிக்கையாக அரசு செய்து இருக்கலாம்? ஏன் இந்த கதை எழுதிக்கொண்டு இருக்கும் ஜுலே 2022 காலப் பகுதியிலும் கொழும்பில், காலி முக ஆர்ப்பாட்ட இளைஞர் குழுவினருக்கு 'சத்தம் போடாதே ' நிறைவேறிக்கொண்டு இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.! என் கதை வாசிப்பவர்களுக்கு, ஒரு வேண்டுகோள் தயவு செய்து இந்த கதை பற்றி 'சத்தம் போடாதே!' [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"கறுப்பு யூலையை (Black July, ஆடிக்கலவரம்) முன்னிட்டு ... "
"கறுப்பு யூலையை (Black July, ஆடிக்கலவரம்) முன்னிட்டு ... " "இருஇனம் வாழும் ஒரு நாட்டில் இருப்பை தனதாக்கி மற்றவனை தாழ்த்தி இறுமாப்புடன் வரலாற்றை திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்லவே !" "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி இணக்கம் கண்டு இதயம் பரிமாறி இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு இனியாவது மன்னிப்புகேள் நாடு முன்னேறும்! " இரக்கமற்ற காட்டு மிராண்டிகள் அவர்களல்ல இந்நாட்டின் பூர்வீக குடிகளில் ஒருவர் இணைந்து வாழ்ந்த குடிமக்கள் அவர்கள் இன்பமாக வாழ உரிமை உடையவர்களே ! " "இடித்து அழித்து எரித்து சாம்பலாக்கி இழிவு செய்த வெட்கமற்ற கறுப்புமனமே ! இன்று உன்னையறிந்து உண்மை அறிந்து இதயம் திறந்து கேட்காயோ 'மன்னிப்பை?' " "இருளை இன்னுமொரு இருள் அகற்றமுடியாது இமைகாக்கும் கண்ணுக்குக்கண் பகையும் கூடாது இன்முகத்துடன் மன்னித்தல் இயலாமையும் அல்ல இதயம்திறந்து மன்னிப்பது மனித மாண்பே! " "இன்பபுகழை அழியாது கொடுக்கும் அடக்கத்தை இருஅடி திருக்குறள் கூறியவாறு ஏற்று இருளாக்கி விடும் அடங்காமையை துறந்து இருகைகூப்பி மன்னிப்புகேள் உலகம் போற்றும்! " [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] [On the night of 24 July 1983, anti-Tamil rioting started in the capital city of Colombo and then spread to other parts of the country. Over seven days, mainly Sinhalese mobs attacked, burned, looted, and killed Tamil civilians. Estimates of the death toll range between 400 and 3,000. and 150,000 people became homeless. Around 8,000 homes and 5,000 shops were destroyed.The economic cost of the riots was estimated to be $300 million. Even I was personally left Colombo, on Indian cargo ship from Colombo harbour to KKS harbour with family and many others as an internal displaced refugees. கறுப்பு யூலை (ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 400 முதல் 3000 பேர் வரை படுகொலை செய்ததுமான ஒரு நிகழ்வாகும். இதில் நானும் என் குடும்பமும் மற்றும் பலரும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த அகதிகளாக , கொழும்பு துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை முகத்துக்கு [KKS] இந்தியாவின் ஒரு சரக்கு கப்பலில் சென்றது இன்னும் மறக்க முடியாது.]
-
"வேகாத வெயிலிலே விறகொடிக்கப் போறபொண்ணே..!" / நாட்டுப்புற எசப்பாட்டு
"வேகாத வெயிலிலே விறகொடிக்கப் போறபொண்ணே..!" / நாட்டுப்புற எசப்பாட்டு ஆண்: "வேகாத வெயிலிலே விறகொடிக்கப் போறபொண்ணே காலுனக்குப் பொசுக்கலையோ கற்றாழைமுள்ளுக் குத்தலையோ?" பெண்: "திண்ணை திண்ணையாத் தாண்டிப் போறவனே பாசாங்கு வேண்டாம்டா பசப்புவார்த்தை வேண்டாம்டா?" ஆண்: "இடுப்புச் சிறுத்தவளே இறுமாப்புநீ பேசாதேடி சிவத்த பாவாடை சித்தம் கலக்குதடி?" பெண்: "நேற்றுவரை உன்னை வெகுவாக நம்பினேனே அறம் அற்றவனே நானே விலகுகிறேனே?" ஆண்: "சிவத்த புள்ள நெனப்பெல்லாம் ஓமேல கரம்நீட்டி இவனைச் சந்திக்கக் கூப்பிடாயோ?" பெண்: "சந்திலே பொந்திலே மேஞ்சு பார்ப்பவனே உன் ஆசைதீர்க்க என்னை நண்பியேன்றாயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
முதியோருடன் ஒரு அலசல்: "நினைவாற்றல் இழப்பு [memory loss]"
kandiah Thillaivinayagalingam replied to kandiah Thillaivinayagalingam's topic in அறிவியல் தொழில்நுட்பம்எல்லோருக்கும் நன்றிகள்
- "முதுமையில் தனிமை [Senior Isolation]"
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
"முதுமையில் தனிமை [Senior Isolation]" மூத்த பிரஜைகள் என்று அழைக்க ப்படும் முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும், கௌரவமாகவும் நோக்கி அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் முகமாக, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆண்டு தோறும் அக்டோபர் 1ம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டோர் முதியோர் என வரையறுக்கப் பட்டாலும், இன்றைய கால கட்டத்தில், சுமுக அரசியல் சூழலும் பொருளாதார வளர்ச்சியும் வாழ்நாள் எதிர்பார்ப்பைக் கூட்டிக் கொண்டு போகின்றன. தற்போது உலகலாவிய ரீதியாக முதியோர் எண்ணிக்கை 60 கோடியைத் தாண்டியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை வரும் 2025ம் ஆண்டில் மேலும் அதிக அளவு உயர உள்ளதுடன், சராசரி ஆயுட் காலமும் 75 -ஐ தாண்டுகிறது. எது எப்படியாகினும், அவர்கள் மகிழ்வாக வாழ்கிறார்களா என்பது ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது? பிசிராந்தையர் என்ற புலவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பாடிய புறநானூறு பாடல் 191 எனக்கு ஞாபகம் வருகிறது: ‘யாண்டுபல வாக , நரையில ஆகுதல் யாங்கு ஆகியர்?’ என வினவுதிர் ஆயின், மாண்டஎன் மனைவியோடு, மக்களும் நிரம்பினர்; யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும் அல்லவை செய்யான், காக்க; அதன்தலை ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே" “தங்களுக்கு இவ்வளவு வயதாகியும் தாங்கள் எப்படி நரையில்லாமல் இருக்கிறீர்கள்?” என்று கேட்பீர்களானால், சொல்கிறேன். “சிறப்பான என் மனைவியோடு, என்னுடைய மக்களும் அறிவு நிரம்பப் பெற்றவர்கள். நான் எண்ணுவது போலவே, என்னிடம் பணிபுரிபவர்களும் எண்ணிப் பணியாற்றுகிறார்கள். என் வேந்தன் முறையல்லாதவற்றைச் செய்யாமல் நாட்டை ஆட்சி செய்கிறான். நான் வாழும் ஊரில், மாட்சிமைக்குரிய நற்குணங்களும் நல்லொழுக்கங்களும் நிறைந்து ஐம்புலன்களையும் வென்று, பணிவோடும் சிறந்த கொள்கைகளோடும் வாழும் சான்றோர்கள் பலர் உள்ளனர்.” எனவே, கவலைகள் இல்லாத வாழ்க்கையால் நரை உண்டாகவில்லை" என்கிறான் அந்த புலவன். ஆனால் இன்று நிலை மாறிவிட்டது. இன்று பொதுவாக மூன்று விதமாக இந்த முதியோர்கள் வாழ்கிறார்கள். உதாரணமாக, சிலர் பிள்ளைகளுடன் அல்லது உறவினர்களோடு வசிக்கிறார்கள், சிலர் கணவன் - மனைவி என்று இருவர் மட்டும் தனியாக வசிக்கிறார்கள், மற்றும் சிலர் ஆணோ அல்லது பெண்ணோ ஒருவராக தனியாக வசிக்கிறார்கள். இங்கு ஒரு சாரார் அவர்கள் எங்கு வசித்தாலும், சூழ்நிலை காரணமாக, தனிமையை உணர தொடங்குவதும், தாம் தனித்து விடப்பட்டு விடும் என ஏங்கத் தொடங்குவதும் அவர்களின் உடல் நிலையை / சுகாதாரத்தை மிகவும் பாதிக்கும் காரணியாகும். கொடிது கொடிது இளமையில் வறுமை என்றார் ஔவை அதற்குச் சற்றும் குறைந்ததல்ல முதுமையில் தனிமை! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புறநானூறு 243 இல் நாம் ஒரு முதியவரை சந்திக்கிறோம். அவர் எப்படி இருக்கிறார் தெரியுமா? "இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல் செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத் தண்கயம் ஆடும் மகளிரோடு கைபிணைந்து தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து நீர்நணிப் படுகோடு ஏறிச்சீர் மிகக் கரையவர் மருளத் திரையகம் பிதிர நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து குளித்துமணற் கொண்ட கல்லா இளமை அளிதோ தானே யாண்டு உண்டு கொல்லோ தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று இருமிடை மிடைந்த சிலசொல் பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே" இங்கே முதல் பதினொரு அடிகளில் தம் இளமைக் காலத்தில் நிகழ்ந்த பசுமையான அனுபவங்களை எண்ணிப் பார்த்து அந்த இளமை இப்ப எங்கே போய்விட்டது? என பெரு மூச்சு விடுகிறார். அப்படி என்றால் இப்ப அவரின் நிலை என்ன? அதையும் கடைசி மூன்று வரிகளில் ... "பூண் சூட்டிய நுனியை யுடைய வளைந்த ஊன்றுகோலை ஊன்றித் தளர்ந்து, இருமல்களுக்கு இடை இடையே வந்த சில சொற்களைக் கூறும், முதுமையின் நிலை இரங்கத் தக்கது" என்கிறார். மேலும் உடம்பின் வெவ்வேறு மாற்ற நிலையை குண்டலகேசிப் பாடல் ஒன்று இப்படிக் எடுத்து உரைக்கிறது; "பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும் காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும் மீளும் இவ் வியல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி நாளுநாள் சாகின் றோமால் நமக்குநாம் அழாதது என்னோ?" அதாவது, பாளை போன்ற இளங்குழந்தைப் பருவம் செத்து, குழந்தைப் பருவம் பிறக்கிறது. பின் குழந்தைப் பருவம் செத்து, காளைப் பருவம் பிறக்கிறது. அந்த காளைப் பருவம் செத்து, காதலுக்கு உரிய இளமைப் பருவம் ஏற்படுகிறது. அதுவும் பின் மாறி முதுமை உண்டாகிறது என்கிறது. ஆனால்,பொதுவாக இளமையைக் கொண்டாடும் சமூகம் முதுமை என்றால் முகம் சுளிக்கிறது. முகத்தில் சுருக்கம், உடலில் குடிகொள்ளும் நோய்கள், தள்ளாடும் நடை, புறக்கணிப்பு, தனிமை இப்படி நீளும் பட்டியலில் "முதுமையில் தனிமை" மிகவும் கொடியது. முதுமையில் தனிமைக்கான காரணங்களையும் அதன் விளைவுகளையும் நேரத்துடன் ஓரளவு விபரமாக நாம் அறிவதன் மூலம் அதை இலகுவாக தடுக்கலாம். மனிதர்களுக்கு வயது போகப் போக, தனிமையில் வசிக்கும் நிலையின் வாய்ப்பும் அதிகமாக அதிகரித்து செல்கிறது. தனிமையில் வாழ்வது, அவர் சமூகத்தில் இருந்து தனிமை படுத்தப்பட்டார் என்பதை குறிக்காது எனினும், கட்டாயம் ஒரு நோய் தாக்க நிலைக்கு அடிகோலக் கூடிய காரணிகளில் ஒன்றாகும். தனிமைக்கான காரணங்கள் ஒருபுறம் இருக்க, அதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் பாரதூரமானதும் ஆகும். இந்த முதுமை என்பது ஏதோ ஒரே இரவில் வந்து விடுவதில்லை. எனவே முதுமை எய்தும் முன்னரே, தன்னை அதற்குத் தயார்படுத்திக் கொண்டால் அதை அவரால் தன்பாட்டில் தவிர்க்கவும் முடியும். பொதுவாக இவர்கள் இரண்டு விதமான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள். முதலாவது, அவர்களது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்படுதலும் அதன் காரணமாக, வெளியில் தனிமையில் போக முடியாததால், ஓர் இடத்தில் முடங்கிப் போதல், அதனால் பல தேவைகளைப் பூர்த்தி செய்ய பிறரைச் சார்ந்திருத்தல், சமூகத் தொடர்பு குறைந்து போதல் போன்றவையாகும். மற்றது மனம் சார்ந்த பிரச்சினைகள் ஆகும். உதாரணமாக, பிறரைச் சார்ந்திருப்பது, அவர்களால் உதாசீனப்படுவது, நிந்திக்கப்படுவது, பய உணர்வு, தனிமை உணர்வு போன்றவற்றால் அவதிப்படுவது, நேரத்தை உபயோகப்படுத்த இயலாமை, பொழுது போக்கின்மை மற்றும் வாழ்வில் ஆர்வ மின்மை போன்றவை ஏற்படுத்தும் மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகும். இவர்களது மிக முக்கிய தேவை என்பது அன்பு, ஆதரவு, கரிசனம், இன்சொல், கவனிப்பு போன்றவையாகும். ஆனால், அவர்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளில் மிக்க கொடுமையானது அவர்கள் அனுபவிக்கும் முதுமையில் தனிமைதான். உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் அல்லது கல்லூரியில் பலரோடு சேர்ந்து பணி செய்த ஒருவர் முதுமையில் தனிமையில் பேச்சுத் துணை இன்றி சிலவேளை இருப்பது, தன் மனதில் தோன்றும் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளக்கூட எவரும் இல்லாது சில வேளை இருப்பது, தனது சுகதுக்கங்களை மனம் விட்டுப் பேச முடியாது சிலவேளை இருப்பது, போன்ற நிலைமைகள், அவர்களை கட்டாயம் துன்பப்படுத்தும். மேலும் இவர்கள் தங்கள் பிரச்சினைகளை பிறரோடு பகிர்ந்து கொள்ள முடியாத போது, அவற்றுக்குத் தீர்வு என எதுவும் அவர்கள் கண்ணில் படுவதும் இல்லை. நாளை நமக்கு முதுமை வரும் போது எந்த வகையில் நாம் நடத்தப்பட வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோமோ, அப்படியே இன்று நம் முன் நடமாடும் தாய் தந்தையரை, மற்றும் முதியோரை, நாம் நடத்த வேண்டும் என்ற கருத்தினை, நாம் அனைவரும் எமது மனதில் ஏற்றுக் கொண்டாலே இதற்கு விடை இலகுவாகி விடுகிறது எனலாம். பொதுவாக நகர்ப்புறத்தில் இந்நிலை மிகவும் மோசமாக உள்ளது. உதாரணமாக பல மூத்த குடிமக்கள் குடும்பத்தைவிட்டு பிரிந்து வாழ்வது அங்கு கண்டறியப்பட்டுள்ளது. இது கிராமப் பகுதியில் குறைவு. வயதான காலத்தில் இத்தகைய தனிமையின் கொடுமையை அனுபவிக்கும் நிலையில் யார் யார் என்று பொதுவாக பார்த்தால், குடும்பத்தினரோடு பேச்சுவார்த்தையே இல்லாத நிலையில் இருப்பவர்கள், ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள், சமூக நல்லுறவுக்கும், பரிவர்த்தனைக்கும் வாய்ப்பின்றி இருப்பவர்கள் என நாம் வகைப்படுத்தலாம். இத்தகைய பாதிப்புள்ளானவர்களில், நகர்ப்புற முதியவர்கள் கிராமப்புறப் பகுதிகளை விட பொதுவாக, மனோதத்துவ ஆலோசனைகள் அதிகம் தேவைப்படுபவர்களாக உள்ளனர். பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகளே பெற்றோரை முதியோர் இல்லங்களில் தள்ளுவதைப் பற்றிய செய்திகளைப் பார்த்து வருந்தியிருப்போம். செய்தியாகப் படிக்கும் போதே நமக்கு வலிக்கிறது என்றால், முதியோர் இல்லங்களில் நடைப் பிணங்களாக வாழும் வயது முதிர்ந்த பெற்றோர்களது மனம் என்ன பாடுபடும்? குறிப்பாக ஒரு வெளி நாட்டிற்கு குடிவரவாளர்களாக தமது முதுமைப் பருவத்தில் வந்தவர்கள் தம்மைக் அந்த நாட்டின் வாழ்வுச் சூழலுக்குள் பொருத்திக்கொள்வதற்கு எதிர்கொள்ளும் தடைகள் ஒரு புறம் இருக்க, புதிய நாடு, புதிய கலாசாரம், பழக்கமில்லாத காலநிலை, பரிச்சயம் இல்லாத மொழி என்கிற சூழலில் தெரிந்தவர்கள் அதிகம் இல்லாமல் தமது பிள்ளைகளை நம்பியே இங்குவரும் பெற்றோர், தமது பிள்ளைகளால் தனித்து விடப்படும் போது மிகப்பெரும் மனநெருக்கடிக்கு உள்ளாகின்றார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஒரு புறம் நோய்களும் இன்னொரு புறம் ஆதரவற்ற தனிமையும் மனதை வாட்டி முதியவர்களைப் பாடாய்படுத்திவிடும். சமீபத்தில் அமெரிக்காவின் அறிவியல் நிறுவனம் முதியவர்கள் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ‘சமூகத் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்ட நிலையில், தனிமையின் வேதனை மனதை வாட்டுவதால் பெரும்பாலான முதியவர்கள் பிரச்சினைக்கு ஆளாவதாகவும், இந்த மனரீதியான பிரச்சினையால் அதிக அளவில் மரணங்கள் நிகழ்வதாகவும்’ அந்த ஆய்வு சுட்டிக்காட்டியது. எனவே முதியோர்களை வாட்டும் தனிமையை விரட்டியடிக்கும் வகையில் முதியவர்களுக்கு உணவு பரிமாறுவது, இசையைச் கற்றுக்கொடுப்பது, ஃபேஸ்புக்கை [Facebook] இயக்கச் சொல்லிக் கொடுப்பது, பிறந்த நாள் கொண்டாட்டங்கள், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ஒன்றுகூடல் நிகழ்வுகள், முதியவர்களுடன் ஒன்றாக அமர்ந்து திரைப்படம் அல்லது விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பது போன்ற நிகழ்வுகளை ஒழுங்கு படுத்துவதன் மூலம் முதியவர்களை, தனிமையை மறந்து மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என நான் நம்புகிறேன். இன்றைய அவசர காலத்தில், கணவன் மனைவி இருவரும் வேலை, பிள்ளைகள் பாடசாலை, பல்கலைக் கழகம், இடையில் கொண்டாட்டங்கள், விடுமுறைகள் ... கூட்டுக்குடும்பம் என்றால் வயதானவர்களை கவனிக்க குடும்பத்தில் யாராவது ஒருவர் இருப்பர். ஆனால் இன்றோ பலர் தனிக்குடும்ப முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இப்படி நேரம் இன்றி அலையும் உலகில், தாய் தந்தையருக்கு ஒரு பாது காப்பாக முதியோர் இல்லம் சேர்ப்பவர்கள் இன்று பலர். இதில் பெரும் தவறு இருப்பதாக நான் கருத வில்லை. ஆனால், அதோடு நின்று விடுகிறார்கள். முற்றுப் புள்ளி வைத்து விடுகிறார்கள். அங்கு தான் தவறு ஏற்படுகிறது? அங்கு ஒரு உயிர் ஏங்குகிறது என்பதை மறந்து விடுகிறார்கள். "கருவறையில் இடம் தந்தேன்..! உன் வீட்டில் நான் வசிக்க.. இல்லையா சிறு அறை.. உள்ளத்தில் ஒரு மூலையில்... ஒருக்கா எம்மை நினைக்க... ஒருக்கா எம்மை பார்க்க .. ஒருக்கா எம்முடன் கதைக்க... " இப்படி அது தவிக்கிறது. மேலும் வசதி வாய்ப்புகள் இருந்தும் சில முதியோர்களை தனிமை வாட்டுகிறது. மனம் விட்டு பேச வீட்டில் யாரும் இல்லாததால் சில முதியோர்கள் தாங்களே விரும்பி முதியோர் இல்லத்தில் அடைக்கலம் புகுந்து கொள்கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஒவ்வொரு மனிதனுக்கும் முதுமை பருவத்தில் அன்பும், ஆதரவும் கட்டாயம் தேவை. அது கிடைக்காத முதியோர்கள் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். சிலர் வீட்டை விட்டு துரத்தப்படுகிறார்கள். இந்த அவல நிலை மாற ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டும்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"பாட்டி வாரார் பாட்டி வாரார்" [இரண்டு பாட்டிகளின் கதை]
"பாட்டி வாரார் பாட்டி வாரார்" [இரண்டு பாட்டிகளின் கதை] "பாட்டி வாரார் பாட்டி வாரார் பார்த்து படியில் கால் வைத்து பாதியில் நின்று கை காட்டி பாட்டி வாரார் பாட்டி வாரார்" "பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் பாலகனுக்கு கலந்து அன்புடன் ஊட்ட பாவம் பாட்டி இந்த வயதிலும் பாசம் கொண்டு மகிழ்ந்து வாரார்" "பாடி ஆடி விளையாட்டு காட்ட பால் கொடுத்து கதை சொல்ல பாயில் அணைத்து சேர்ந்து படுக்க பாக்கியம் பெற்றேனென மகிழ்ந்து வாரார்" "பாத்திரம் கழுவி வீடு துடைக்க பானை நிரம்ப சோறு காச்ச பாதை காட்ட நல்ல கதைசொல்ல பாசம் கொண்டு மகிழ்ந்து வாரார்" ****************** "பாட்டி வாரார் பாட்டி வாரார் பாட்டு கேட்டு படியில் இறங்கி பாதியில் நின்று ஐபாட் திறந்து பாட்டி வாரார் பாட்டி வாரார்" "பாத்தி கட்டி தண்ணீர் இறைத்தவர் பாரின் வந்து சோம்பி விழுகிறார் பாவம் குழந்தை துள்ளி விழுகுது பாட்டி யாருடனோ வம்பு அளக்கிறார்" "பாத்து தீத்தி குழந்தை வளர்க்க பாய்ந்து பறந்து பிள்ளையிடம் வந்தவர் பாயை விரித்து நீட்டி படுக்கிறார் பாய்ந்து குழந்தை வெளியே ஓடுது" "பாத்திரம் காயுது வீடு மணக்குது பாதி வயிற்றில் பிள்ளை அழுகுது பாரதி பாட்டு 'ஐபாட்'டில் பாடுது பானு மாமியுடன் வம்பு பேசுறார்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS"
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 26 "பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits of Ancient Sangam Tamils continuing" தொல்காப்பியர் வாகைத் திணையில் “அறு வகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்“ எனக் குறிப்பிட்ட பார்ப்பார்கள் இருக்கைக்கு சூரியன் மறையும் தருவாயில் நீ போகும் போது, நறிய நெற்றியினையும், வளையலை அணிந்த கையினையும் உடைய பார்ப்பனி, இராஜான்னம் என்ற பறவைப் பெயர் பெற்ற உயர்ந்த நெற்சோற்றையும், மாதுளம் பிஞ்சைப் பிளந்து, மிளகுப் பொடியும், கறிவேப்பிலையையும் கலந்து பசும் வெண்ணெயிலே வேகவைத்து எடுத்த பொரியலையும் வடுமாங்காயினையும், தம்மை நாடிவந்த உனக்கு கொடுத்து உபசரிப்பர் என்கிறார். [வயின்அறிந்து அட்ட, சுடர்க்கடை பறவைப் பெயர்ப்படு வத்தம், சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து, உருப்புற பசுங்காய்ப் போழொடு கறி கலந்து, கஞ்சக நறுமுறி அளைஇ பைந்துணர், நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த, தகைமாண் காடியின் வகைபடப் பெறு குவிர், 304-310]. பல அடுக்கு மாளிகைகளைக் கொண்ட செலவ மிக்க கடற் கரை பட்டணத்தே நீ இளைப்பாறும் போது, குறுகிய காலையுடைய ஆண் பன்றியின் இறைச்சியோடு களிப்புமிக்க கள்ளையும் பெறுவீர் என்கிறார். [குறுந்தாள் ஏற்றைக்,கொழு நிணத் தடியொடு கூர்நறாப் பெறுகுவீர், 344-345]. கலங்கரை விளக்குப் பகுதியைத் தாண்டிச் சென்றால் உழவர்களின் தனி மனைகளை நீ அடையலாம். அந்தத் தனிமனை தென்னங் கீற்றுகளால் வேயப்பட்டிருக்கும்.அங்கு அவர்கள் விருந்தாக உனக்கு பலாச்சுளை, இளநீர், மரத்திலேயே பழுத்த வாழைப்பழம், பனை நுங்கு, முதிர்ந்த சேப்பங் கிழங்கு [Taro root] அவியல் மற்றும் ருசிகரமான இனிய இனிப்பு பண்டங்கள் முதலானவை பெறுவாய் என்கிறது. [தண்டலை உழவர் தனி மனைச் சேப்பின், தாழ்கோட் பலவின் சூழ் சுளைப் பெரும்பழம், வீழ் இல் தாழைக் குழவித் தீம்நீர், கவை முலை இரும்பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும், குலை முதிர் வாழைக் கூனி வெண்பழம், திரள் அரைப் பெண்ணை நுங்கொடு பிறவும், 355-360]. இறுதியாக நீ அரண்மனையை அடையும் போது, அரசன் தொண்டைமான் இளந்திரையன், உனது கிழிந்துள்ள ஆடைகளை நீக்கி விட்டு, புத்தாடைகளை உடுத்திக் கொள்ளச் செய்வான். சமையல் தொழிலில் வல்லவர்களால் செந்நெல் அரிசியொடு பலவகையான புலால் துண்டுகளைச் சேர்த்துச் சமைத்த உணவை தருவான். மேலும் நல்ல மணமும், இனிய சுவையும் கொண்ட அமுதத்தை ஒத்த சிற்றுண்டிகளோடு பிறவும் விண்மீன்போன்ற வெள்ளிக் கலங்களில் பரப்பி தானே எதிர்நின்று உபசரித்து உம்மை உண்ணச் செய்வான் என்கிறார். [நின் அரைப்,பாசி அன்ன சிதர்வை நீக்கி, ஆவி அன்ன அவிர்நூற் கலிங்கம், இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ, கொடுவாள் கதுவிய வடுஆழ் நோன்கை, வல்லோன் அட்ட பல் ஊன் கொழு ங்குறை, அரிசெத்து உணங்கிய பெருஞ்செந் நெல்லின், தெரிகொள் அரிசித் திரள்நெடும் புழுக்கல், அருங்கடித் தீம்சுவை அமுதொடு பிறவும், 468-475]. 500 அடிகளைக் கொண்டு அமைந்த சிறப்புமிக்க இந்த பெரும்பாணாற்றுப்படையில் மேலும், மதுவின் செய் முறை விளக்கப் பட்டு இருப்பதுடன் [275-281], பட்டிணப்பாலையில் [106 -110], கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர் மதுவை அருந்தி மயக்கத்தில் கொண்டாடியதையும் நாம் காணலாம். "அவையா அரிசி அம்களித் துழவை, மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றி, பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும், பூம்புற நல் அடை அளைஇ தேம்பட, எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி, வல்வாய்ச் சாடியின் வழைச்சுஅற விளைந்த, வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி" பெரும்பாணாற்றுப்படை (275-281) அதாவது, குற்றாத தவிடெடு படாத அரிசியைக் அழகினையுடைய களியாகத் துழாவிக் சமைத்த கூழை, வாயகன்ற தாம்பாளத்தில் [தட்டில்] உலர வைப்பார். நல்ல நெல் முனையை இடித்து அக் கூழிற் கலப்பர். அக் கலவையை இனிமை பிறக்கும் படி இரண்டு பகலும் இரண்டு இரவும் கழித்து வலிய வாயினையுடைய சாடியின் கண்ணேயிட்டு, வெந்நீரின் வேகவைத்து நெய்யரியாலே வடிக்கட்டி, விரலாலே அலைத்துப் பிழியப் பட்ட நல்ல வாசனையுள்ள "கள்" என்கிறது. "துணைப்புணர்ந்த மடமங்கையர், பட்டுநீக்கித் துகிலுடுத்தும், மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும், மைந்தர்கண்ணி மகளிர் சூடவும், மகளிர்கோதை மைந்தர் மலையவும்" பட்டிணப்பாலை [106-110] அதாவது, தம் கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர், தாம் முன்பு அணிந்திருந்தப் பட்டாடைகளைத் தவிர்த்து நூலாடைகளை உடுத்தினர். இன்பத்தின் மயக்கத்தால் தாம் அருந்தும் மயக்கம் தராத கள்ளினைக் [மட்டினைக்] கைவிட்டு மதுவினை குடித்தனர். மதுவுண்ட மயக்கத்தில் கணவர் அணியும் மாலைகளை மகளிர் அணிந்து கொண்டனர். மகளிர் அணியும் கோதையினை (மாலை) ஆடவர் சூடிக் கொண்டனர் என்கிறது. கரிகால் வளவன் எனப்படும் சோழ மன்னனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட, 248 அடிகளைக் கொண்ட, பொருநராற்றுப்படையில், அடிகள்: 102 – 108, எப்படி பண்டைய தமிழன் இறைச்சியை இரும்பு கம்பி ஒன்றில் கோத்து வாட்டினான் என்பதை [சங்க கால கேபாப்?] சுட்டிக் காட்டுவதுடன் பலவகையான மாவுப் பலகாரங்களையும் மேலும் குறிப்பிடுகிறது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 27 தொடரும் "FOOD HABITS OF TAMILS" PART: 26 "Food Habits of Ancient Sangam Tamils continuing" When they get to the Brahmin settlements at sunset they will get well cooked rice that bears the name of a bird along with fresh pomegranate cooked with butter made from the milk of a red skinned cows, and fresh curry leaves and black pepper. They will also give fragrant pickles made with tender green mangoes [வயின்அறிந்து அட்ட, சுடர்க்கடை பறவைப் பெயர்ப்படு வத்தம், சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து, உருப்புற பசுங்காய்ப் போழொடு கறி கலந்து, கஞ்சக நறுமுறி அளைஇ பைந்துணர், நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த, தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர்]. At the seashore town there are many storied mansions where there is abundant food. They will get abundant toddy with fatty meat of the boar with short legs [குறுந்தாள் ஏற்றைக், கொழு நிணத் தடியொடு கூர்நறாப் பெறுகுவீர்]. When they leave these behind and go to the groves where farmers live in huts with roofs made of thatched coconut palm leaves, they will get big jackfruits that grow in clusters and sweet water from young coconuts and alluring plantain fruits. They will also receive young pulpy fruit of the palmyra palms and other dainty sweets to eat [தண்டலை உழவர் தனி மனைச் சேப்பின், தாழ்கோட் பலவின் சூழ் சுளைப் பெரும்பழம், வீழ் இல் தாழைக் குழவித் தீம்நீர், கவை முலை இரு ம்பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும், குலை முதிர் வாழைக் கூனி வெண்பழம், திரள் அரைப் பெண்ணை நுங்கொடு பிறவும் ]. And finally when the bards reach the palace of the patron, he will ask them to remove your old clothing and give fine clothing with bright threads and then serve them meat dishes cooked by a talented cook with strong hands. He will also serve large fine red rice and special sweet dishes that are spread in silver bowls [நின் அரைப், பாசி அன்ன சிதர்வை நீக்கி,ஆவி அன்ன அவிர்நூற் கலிங்கம், இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ, கொடுவாள் கதுவிய வடுஆழ் நோன்கை, வல்லோன் அட்ட பல் ஊன் கொழுங்குறை, அரிசெத்து உணங்கிய பெருஞ்செந் நெல்லின், தெரிகொள் அரிசித் திரள்நெடும் புழுக்கல், அருங்கடித் தீம்சுவை அமுதொடு பிறவும்]. Also we found from Perumpanatruppadai [275-81], a recipe for brewing & from Pattinappaalai [106 -110], how young women at nights, enjoy with their husbands at bed, while they drinking toddy. "when you are hungry, you will receive cool fish dishes and fine, fragrant liquor that is made by making a mash of unpounded, boiled rice spread on pots with wide mouths to cool, mixed with fine, tender leaves whose back sides look like the combs of termite mounds where snakes live, stirred twice morning and night with fingers in a jar with firm mouth, and aged and filtered with warm water" Perumpanatruppadai [275-281]. Also we find from Sangam literature that "Delicate women who unite with their husbands wear cotton instead of silk and drink wine instead of toddy. Men wear women’s garlands and women wear men’s garlands" Pattinappaalai [106 -110] The Sangam period poem, ”Porunaratruppadai, Which were written by the poet Mutathaamakkanniyaar in praise of the Chola king Karikala Chola, read like travelogues, in which poets who were returning with gifts received from a king, encourage other poets to do the same by describing in glowing terms the king and his country. Here, lines 102 – 108, Indicate how ancient Tamils roasted meat on iron rods.- may be a Sangam period kabab? - and many, different shapes of pastries. Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] PART : 27 WILL FOLLOW
-
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]"
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 13 மனித இனத்துக்கு முந்தைய இனமாகக் கருதப்படும் 'ஹோமோ எரெக்டஸ்' (Homo erectus), 'ஹோமோ ஹபிலிஸ்' (Homo habilis) போன்றவையில் இருந்து பரிமாணவளர்ச்சி அடைந்தே 'ஹோமோ சேப்பியன்ஸ்' (Homo sapiens / வாழும் மனித இனம்) என்ற இன்றைய மனித இனம் உருவானது. பரிணாம வளர்ச்சியில் ஒரு செல் உயிரிகளில் இருந்து பல வகையான உயிர்கள் உருவாயின என்பது டார்வின் [Charles Robert Darwin] கோட்பாடு. மாணிக்கவாசகரும் இதே போன்ற ஒரு கருத்தை பாடியிருக்கிறார் . "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்" அதில் அவரின் கருத்து அல்லது ஊகம் இன்றைய பரிணாம வளர்ச்சி கோட்பாடுடன் ஒத்து போகாவிட்டாலும், அவரின் முயற்சி பாராட்டுக்கு உரியதே. மேலும் 0.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், இப்போதைய மனித இனமான 'ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ்' [Homo sapiens sapiens] உருவானது என்கிறது பரிணாமவிதி எனப்படும் பரிணாம கொள்கை [evolution theory]. இங்கு 'ஹோமோ' என்றால் மனிதன், 'சேப்பியன்ஸ்' என்றால் அறிவாளி. ஆகவே 'அறிவாளி மனிதன்' என்று கூறலாம். உண்மையில் 'ஹோமோ சேப்பியன்ஸ்' மற்றும் 'ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ்' இற்கு இடையில் பெரிதாக ஒரு வேறுபாடும் இல்லை, மானுடவியல் மற்றும் பழங்காலவியலில், இன்றைய நவீன மனிதர்களில் இருந்து மிகவும் தொன்மையான மனித உறுப்பினர்களை வேறுபடுத்த இப்படியான சொற்பிரயோகம் செய்யப்படுகிறது. [Homo sapiens sapiens, in anthropology and palaeontology, the subspecies of Homo sapiens that consists of the only living members of genus Homo, modern human beings. Traditionally, this subspecies designation was used by palaeontologists and anthropologists to separate modern human beings from more-archaic members of Homo sapiens]. அதற்கு முன், இடையிடையே பல மனித இனப் பிரிவுகள் கால மாற்றத்திற்கு உட்பட்டு அழிந்துவிட்டன, உதாரணமாக ‘நியான்டர்தால்’[Neanderthal] மற்றும் ‘ஆஸ்த்ராலோபித்திக்கஸ் ’ [Australopithecus] மனிதப்பிரிவுகள் ஆகும். பல நூலாசிரியர்கள் சுமேரியனுக்கும் திராவிடனுக்கும் இடையே உள்ள இனம், மொழி, பண்பாட்டு ஒற்றுமையை [உறவை] அடிப்படையாக கொண்டு இரு இனமும் ஒரே இன குழுவை [குடும்பத்தை] சார்ந்ததாக முடிவு செய்துள்ளார்கள். அதாவது ஈலம் [Elam], சுமேரியா மக்கள் திராவிட [தமிழ்] இனத்தை சேர்ந்தவர்கள் என்பது அவர்களின் முடிவு. டாக்டர் எச்.ஆர். ஹால் (Dr. H.R. Hall) என்ற வரலாற்று அறிஞர், மெசொப்பொத்தேமியாவிற்கு திராவிடர்கள் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்தார்கள் என்கிறார். அதே நேரம் வேறு அறிஞர்கள், திராவிடர்கள் தமது முன்னைய குடியிருப்பான மத்தியத்தரைக் கடல் பகுதியில் இருந்து இந்தியா புலம் பெயர்ந்தார்கள் என்கிறார்கள். KP பத்மநாபா மேனன் திராவிடர் - சுமேரியர்களின் நெருங்கிய தொடர்புகளைப் பற்றி எழுதியுள்ளார். இவர் ஒரு சிறந்த வழக்கறிஞர், நீதிபதி, வரலாற்றாசிரியரும் ஆவார். பல கீழ்த்திசை மொழிப் புலமையாளர்கள் [Orientalists] சுமேரியர்கள் தொடக்க கால திராவிடர்கள் என்பதை ஒத்துக் கொள்கிறார்கள். அங்கு இருந்து திராவிடர்கள் இந்தியாவின் வட மேற்கு பகுதிக்கு இடம் பெயர்ந்தார்கள். எனினும், அங்கு அவர்கள் பல காலம் வாழ முடியவில்லை. அவர்களை அங்கு ஏற்பட்ட பலதரப்பட்ட சூழ்நிலை மாற்றங்கள், அவர்களை தெற்கு நோக்கி புலம்பெயர்ச் செய்து, நிரந்தரமாக, தென்இந்தியாவில் தங்க வைத்து விட்டது. இதை, இந்த கருது கோளை, நம்பகமான அறிஞர்கள் வலிமையாக ஆதரித்து வாதாடுகிறார்கள். சுமேரியர்களின் நூலின் பொருள் கண்டு பிடிக்கப்பட்டு அதன் உட் பொருளை சரிவர வெளிப்படுத்தி உள்ளார்கள். சுமேரியனுக்கும் தமிழனுக்கும் இடையே உள்ள மொழி, பண்பாட்டு, இனவொற்றுமைகள் ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட கால இடை வெளி என்பது இங்கு சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. பன்மொழிப் புலவரும், பேராசிரியருமான இலங்கையை சேர்ந்த மறைந்த ஆறுமுகம் சதாசிவம், மலேசியாவை சேர்ந்த முனைவர் கி.லோகநாதன், அறிவியல் பல்கலைக்கழகம், பினாங்கு போன்றோர் இதில் பல ஆய்வுகள் அல்லது முயற்சிகள் செய்துள்ளார்கள். பேராசிரியர் ஆ. சதாசிவம் மற்றும் முனைவர் கி.லோகநாதன் போன்றோர்கள், சுமேரிய மொழியையும், திராவிட [தமிழ்] மொழியையும், ஒப்பியல் முறையில் ஆராய்ந்து சுமேரிய மொழியையும் திராவிடமொழி [தமிழ் மொழி] என நிறுவினார்கள். இந்திய வரலாற்றாளர்களுள் குறிப்பிடத்தக்கவரான, கல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாத்திரி அவர்கள், கோயில் வழிபாட்டில் உள்ள ஒத்த தன்மையை சுட்டிக் காட்டியுள்ளார். திராவிடர்களின் மூதாதையர்களை மத்தியத்தரைக்கடல் பகுதியுடன் இணைக்கும் இந்த கருது கோளை, நம்பகமான அறிஞர்கள் இன்னும் ஆதரித்து வாதாடுகிறார்கள். பேராசிரியர் ஆ.சதாசிவம் சமஸ்கிருதம், மலையாளம், பாளி, தெலுங்கு, கன்னடம்,ஜேர்மன் முதலிய மொழிகளிற் புலமை சான்றவராக விளங்கினார். ஞானப்பிரகாச அடிகளாரின் பின், பன் மொழிப் புலமையில் தலையாயவராக விளங்கியவர் இவரே. சுமேரிய மொழியையும், திராவிட மொழியையும், ஒப்பியல்முறையில் ஆராய்ந்து சுமேரிய மொழியையும் திராவிட மொழி என நிறுவினார். மேலும், 1964 முதல் 1987 வரை ஈழத் தமிழறிஞர் மறைந்த பேராசிரியர் ஆ. சதாசிவம் அவர்களால் எழுதப்பட்ட பழங்கால சுமேரியருக்கும் தமிழுக்கும் உள்ள திராவிட தொடர்புகள் குறித்த நான்கு முன்னோடி ஆய்வுக் கட்டுரைகள் இப்போது நூலாகக் கிடைக்கின்றன. 1965 ஆம் ஆண்டில், புகழ்பெற்ற மொழியியலாளர் பேராசிரியர் டி. பர்ரோ [linguist Prof T. Burrow], திராவிடத்தை சுமேரியனுடன் தொடர்புபடுத்தும் முயற்சியில் சதாசிவம் புதிய தளத்தை ஏற்படுத்தி உள்ளாரென கூறினார், மேலும் அதை ஏற்றுக் கொண்டால், அந்தக் கோட்பாடு திராவிடம் மற்றும் சுமேரியர்களின் வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கு [prehistory of both Dravidian and Sumerian] கணிசமான முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறினார். “Proto Sumero Dravidian: The Common Origin of Sumerian and Dravidian Languages” என்ற புத்தகம் 2017 ஆண்டு தமிழ் தகவல் வரலாறு மற்றும் மரபுப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. ஏறக்குறைய கி.மு. 3000 ஆண்டு தொடங்கி கி.மு. 1500 வரை, இன்று ஈராக் எனப்படும் நாட்டுப் பகுதியில் சுமேரு மொழி பேசிய மக்கள் வாழ்ந்து இப்பொழுது உலகப் பண்பாட்டின் சிறப்பாக விளங்கும் பல கலைகளை வளர்த்து உதவினர். பிறகு இவர்களைச் சூழ்ந்து வாழ்ந்த செமிட்டிய மக்கள் இவர்களை வென்று, பாபிலோனிய நாகரிகத்தை வளர்த்தனர். சுமேரு மொழியும் அக்காடிய மொழிக்கு இடந்தந்து மறைந்து விட்டதாக அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால், உண்மையில் அது அழிந்து விடவில்லை. பல இடங்கட்கு புலம் பெயர்ந்து சுமேரு மக்களில் பெரும்பான்மையோர் தென்னிந்தியா வந்து இலங்கையிலும் தென்னகத்திலும் குடியேறி சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருங்குடியினராய் சிறந்தனர் என்று முனைவர் கி.லோகநாதன் கூறுகிறார். மேலும், சுமேரு மொழி பழந் தமிழே! என்று, சுமேருத் தமிழைப் பற்றி எளிமையான பல கட்டுரைகளை படைத்தும் உள்ளார். அவற்றில் ஒன்றே ஏண் உடு அன்னா [En-hedu-ana] எனப்படும் ஓர் அம்மையார் எழுதிய The Exalatations of In-Anna. இதை சுமேருத் தமிழில் "ஈனன்னை சீர்பியம்"ஆக மிகவும் எளிமையாகத் தந்துள்ளார். ஏண் உடு அண்ணா எனும் இந்த அம்மையார்தான் கி.மு மூன்றாம் மில்லென்னியத் தின் தலை சிறந்த மெய்ஞானியாக போற்றப் படுகிறார். இவர் தான் சிறைப்பட்டு கிடந்த போது ஈனன்னையின் அருளை வேண்டிப் பாடிய பாடலே இது. அதன் மூலம் சுமேரிய மொழி, தொல் தமிழ் என்று மட்டும் அல்ல, சுமேருத் தமிழ் பண்பாட்டிற்கும் இன்றைய தமிழர்களின் பண்பாட்டிற்கும் இடையே உள்ள தொடர்புகளைப் பற்றியும் அறிய முடிகிறது. இத்தொடரில் ஆழமான மெய்யறிவுச் சிந்தனைகள் மிளிரும் வரிகளையே தேர்ந்து எடுத்து, அவற்றின் பொருளை விளக்கி, எவ்வாறு திராவிட மெய்யறிவு சிந்தனைகளோடு அது இன்றும் தொடர்பு கொண்டிருக்கின்றது என்பதை அனைவரும் கண்டு மகிழும் வகையில் விளக்கியும் உள்ளார். "ஆதித் தமிழரின் அதி உன்னத வழர்ச்சிக்கு காரணமாக இருந்தது பொறி முறையாக்கப்பட்ட நீர்ப்பாசன முறை" என்பது பலரும் அறிந்ததே. அந்த முறையை தான் நாம், சுமேரியாவிலும், சிந்து சமவெளியிலும், மூவேந்தர்கள் ஆண்ட பண்டைய தமிழகத்திலும் காண்கிறோம். மேலே கூறிய இரண்டு இனங்ககளின் மொழிகளுக்கு இடையே உள்ள ஒத்த தன்மைக்கு அப்பால், மேலும் வாற் கோதுமை [பார்லி], கோதுமை பயிர் செய்கை [வேளாண்மை], மெசொப்பொத்தேமியாவில் (இன்றைய தென் ஈராக்) இருந்து சிந்து சம வெளிக்கு பரவியது என்பதை பொதுவாக எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். அது மட்டும் அல்ல, மரபியல். மக்கள் தாவரத்தொடர்பியில் சம்பந்தமான தரவுகளின் கண்காணிப்பின் அடிப்படையிலும் ["ethno-botanical data tracking" / Ethnobotany is the study of a region's plants and their practical uses through the traditional knowledge of a local culture and people] இது உறுதிபடுத்துகிறது. மேலும் இந்த வேளாண்மை மெசொப்பொத்தேமியாவில், இயூபிரட்டீசு [Euphrates] ஆறு பகுதியில், கி மு 8500 அளவில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் பின் அது சிந்து சம வெளிக்கும் இந்திய துணை கண்டத்திற்கும் கி மு 6500 அளவில் அடைந்தது எனவும், மரபியல். மக்கள் தாவரத்தொடர்பியில் [Ethnobotany] ஆய்வுகள் மூலம் நம்புகிறார்கள். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 14 தொடரும் பி கு : படம்-[01]: நம்மு [Nammu] (கி. மு 2100) எனும் மன்னனால் ஊர் பட்டணத்தில் சந்திரக் கடவுளுக்கு கட்டப்பட்ட, சிகுரத் எனப்படும் பெரிய கோவிலின் பெரிய படிகட்டுகள் / The original "Stairway to Heaven". The grand staircase of the great ziggurat at Ur. The temple was dedicated to Nanna, the moon god
-
"பெண்ணை மதித்திடு"
எல்லோருக்கும் நன்றிகள்
-
முதியோருடன் ஒரு அலசல்: "நினைவாற்றல் இழப்பு [memory loss]"
kandiah Thillaivinayagalingam replied to kandiah Thillaivinayagalingam's topic in அறிவியல் தொழில்நுட்பம்முதியோருடன் ஒரு அலசல்: "நினைவாற்றல் இழப்பு [memory loss]" / பகுதி 02 நினைவாற்றல் இழப்பு அல்லது மறதி பொதுவாக மூப்படைவதால் ஏற்படும் ஒரு சாதாரண நிகழ்வு என்றே கூறலாம். உதாரணமாக, மக்கள் முதுமையடைய அல்லது வயது போக, அவர்களின் உடலிலும், மூளை உட்பட, அதற்கு ஏற்ற மாற்றங்கள் தென்படுகின்றன. எனவே புது விடயங்களை படிக்க அல்லது உள்வாங்க சிலருக்கு, முன்னையதை விட கூடுதலான நேரம் எடுக்கலாம். மேலும் சில முன்னைய தரவுகளை, செய்திகளை அல்லது தாம் செய்ததை மறந்து விடலாம். உதாரணமாக எங்கே மூக்கு கண்ணாடி வைத்தது என்று அல்லது அது போன்ற அன்றாட செயல்களை. இது பொதுவான மறதியாகும். இதை அல்சீமர் நோய் [முதுமறதி / Alzheimer's disease] உடன் குழப்ப வேண்டாம். அல்சைமர் [முதுமறதி] என்பது மூளையை பாதிக்கும் ஒரு வகை மூளை நோயாகும். இந்த நோய் முதியவர்களிடயே பொதுவானதாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஞாபக சக்தி குறைகிறது மற்றும் மிகவும் பலவீனமான நினைவகத்தை கொண்டுள்ளனர். மேலும், அவர்களின் மூளை சரியாக செயல்படுவதில்லை. இதன் காரணமாக அவர்களின் அன்றாட நடைமுறை படிப்படியாக மோசமடையத் தொடங்குகிறது. அல்சைமர் என்பது ஒரு வகை டிமென்ஷியா [மறதி நோய் / dementia] ஆகும். நடுத்தர வயது உள்ளோர், தமது வாழ்க்கையின் பிற்பகுதியில் நினைவாற்றல் இழப்பிற்கு பொதுவாக உள்ளாகிறார்கள். இதை தடுக்க உத்தரவாதமான வழி என்று ஒன்றும் இல்லை என்றாலும், மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன வழிமுறைகள் கையாளவேண்டும் என்பதை ஆய்வாளர்கள் பட்டியல் இட்டு உள்ளார்கள். அவற்றில் சிலவற்றை கீழே பார்ப்போம். (1) உடற் பயிற்சி அல்லது உடலால் வேலைகள் செய்தல், இரத்த ஒட்டத்தை முழு உடலுக்கும், உதாரணமாக மூளைக்கும் சேர்த்து அதிகரிக்கிறது. இது உங்க நினைவாற்றலை கூர்மைப்படுத்த கட்டாயம் உதவும். (2) எப்படி உடற் பயிற்சி உங்க உடலை திடமாக, நல்ல வடிவத்தில் வைத்திருக்கிறதோ, அவ்வாறே, மனதைத் தூண்டும் நடவடிக்கைகள், கட்டாயம் உங்கள் மூளையை நல்ல நிலையிலும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். - அதாவது, நினைவாற்றல் இழப்பைத் தடுக்கும். (3) சமூக தொடர்பு, மன அழுத்தம் அல்லது மனசோர்வு போன்றவற்றை விரட்ட உதவுகிறது, பொதுவாக இந்த இரண்டும் நினைவாற்றல் இழப்பிற்கு காரணமானவை ஆகும். சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது அல்லது சந்தர்ப்பத்தை நீங்களே உண்டாக்கி, நீங்கள் விரும்புபவர்களுடன், உங்கள் நண்பர்களுடன் மற்றும் எல்லோரிடமும் ஒன்றிப் பழக முயலுங்கள் - குறிப்பாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொழுது. (4) உங்கள் வீடு இரைச்சலாக இருந்தாலும் அல்லது உங்கள் குறிப்புகள் குழப்பத்தில் இருந்தாலும் [if your home is cluttered and your notes are in disarray], நீங்கள் மறப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம். எனவே எப்பவும் உங்கள் பணிகள், நியமனங்கள் மற்றும் பிற நிகழ்வுகள் போன்றவற்றை ஒரு பிரத்தியேக குறிப்பு புத்தகத்தில் - காகித அல்லது மின்னணு - பதியுங்கள் . அது மட்டும் அல்ல, அவ்வற்றை பதியும் பொழுது, வாய் மூலம் அதை திருப்பி சொல்லவும். இது நினைவாற்றலில் அதை ஒட்டிவைக்க பெரிதாக கட்டாயம் உதவும். நீங்கள் இப்ப அறிந்ததை / நிகழ்வதை பதியும் பொழுது, முன்னையதையும் ஒருக்கா பாருங்கள். மேலும் உங்கள் பணப்பை, சாவி, கண்ணாடி மற்றும் பிற அத்தியாவசிய பொருட்ககளை வைத்து எடுப்பதற்கு ஒரு இடத்தை இயன்ற அளவு நிரந்தரமாக ஒதுக்குங்கள். கவனச்சிதறல்களை கட்டுப்படுத்துங்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபடாதீர்கள். நீங்கள் தக்கவைத்துக் கொள்ள அல்லது தொடர்ந்து வைத்துக் கொள்ள விரும்பும் ஒன்றில், முழு கவனத்தையும் செலுத்தி, செயற்பட்டால், கட்டாயம், பின்னொரு நேரம் அவ்வற்றை திருப்பி நினைவூட்டுவது இலகுவாக இருக்கும். அது மட்டும் அல்ல அப்படியான நிகழ்வுகளை அல்லது குறிப்புகளை, நீங்கள் அதிகம் விரும்பும் பாடலுடனோ அல்லது உங்களுக்கு பழக்கப்பட்ட கருத்துக்கள் உடனோ தொடர்பு படுத்துவதும் ஒரு நல்ல வரவேற்கத் தக்க முறையாகும். (5) ஆரோக்கிய வாழ்விற்கு உறக்கம் ஒரு முக்கியமான ஒன்றாகும். இது நினைவாற்றலுக்கும் பொருந்தும். பொதுவாக மனதையும் உடலையும் மூடும் [shut down] காலமாக நாம் உறக்கத்தை நினைக்கிறோம், ஆனால் இது உண்மையல்ல. இது எதோ சில செயல்களில் உள்ள காலமே. உதாரணமாக, உறக்கத்தின் முக்கிய பாத்திரங்களில் [vital roles] ஒன்று நினைவுகளை உறுதிப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் நமக்கு உதவுவதாகும்..உதாரணமாக, ஒவ்வொரு நாளும் எம் மூளை பெருவாரியான தகவல்களை உள்வாங்குகிறது. அவைகளை நேரடியாக பதிவு செய்யப்படுவதை விட , இந்த உண்மைகளும் அனுபவங்களும் [facts and experiences] முதலில் சீரமைப்பு செய்யப்பட்டு சேமிக்க வேண்டும் [need to be processed and stored]. இவைகளின் பெரும் பகுதி, நாம் உறங்கும் பொழுதே நடைபெறுகிறது. எனவே வயது வந்தோர் குறைந்தது ஏழு மணித்தியாலம் தொடங்கி ஒன்பது மணித்தியாலம் வரை துயில்வது மிக நன்றாகும். (6) படுக்கைக்கு முன் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது உறக்கத்தை சிறப்பிக்கலாம் அல்லது கெடுக்கலாம். சில குறிப்பிட்ட உணவுகள் மூளையை அமைதிப்படுத்துவதாகவும் மற்றும் உறக்கத்தை ஊக்கிவிப்பதாகவும் [calm the brain and help promote sleep] அறியப்படுகிறது. எனவே ஆரோக்கியமான உறக்கத்திற்கு மாலையில் சரியானவற்றை சாப்பிடுவது கட்டாயம் அவசியமாகும். உறக்கத்திற்கு முன், பெரிய அளவு உணவுகள் சாப்பிடக் கூடாது, ஏன் என்றால், இது உபாதைகள் மற்றும் அஜீரணத்திற்கு [discomfort and indigestion] வழிவகுக்கும். ஆனால், சிறிய சிற்றுண்டி பயனுள்ளதாக இருக்கும். மேலும் சில ஆய்வுகள், குறிப்பிட்ட சில ஊட்டச்சத்துக்கள் [nutrients] , உறக்கத்திற்கு ஒரு அடிப்படை பங்கை வகிக்கிறது என சுட்டிக் காட்டுகிறது. உதாரணமாக, ஒரு நீண்ட நல்ல ஆரோக்கியமான உறக்கத்திற்கு, சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற உணவில் [தக்காளி, ...] காணப்படும் லைகோபீன் [இலைக்கொப்பீன் / lycopene], கார்போஹைட்ரேட்டுகள் [ரொட்டி, பால், உருளைக்கிழங்கு, ... / மாசத்து / carbohydrates], வைட்டமின் சி [கொய்யா, ஆரஞ்சு, பப்பாளி, தக்காளி, ... / vitamin C], செலினியம் [கொட்டைகள், இறைச்சி மற்றும் மட்டி / selenium], லுடீன் / நிறமி வகை [பச்சை, இலை காய்கறிகள் / lutein / zeaxanthin ] உணவுகள் முக்கியமாகும். இரவில் அதிக கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை உண்பதும் மற்றும் .உறங்க செல்வதற்கு முன் காபி, தேநீர் மற்றும் மது போன்றவற்றை அருந்துவதும் உறக்கமின்மைக்கு பொதுவான காரணம் ஆகும். இரவு உறங்க செல்லும் முன் இளஞ்சூடான பால், முட்டை, உலர் பழங்கள், வாழைப்பழம், தோல் நீக்கப்பட்ட கோழி, சுண்டல் போன்ற புரதம் நிறைந்த உணவுகள் உறக்கத்துக்கு ஏற்ற உணவுகளாகும். அதேநேரத்தில் இத்துடன் மாவுச்சத்து நிறைந்த அரிசி உணவுகளையும் சேர்த்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இரவு உணவு உண்டதும் உடனடியாக உறங்கச்செல்ல வேண்டாம், அதேநேரம் பசியோடும் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டும் உறங்கச் செல்லவும் கூடாது. இரண்டுமே உறக்கத்தைக் கெடுக்கும். ஆரோக்கியமான உணவு மூளைக்கும் இதயத்துக்கும் நல்லது ஆகும். அதிகமாக கூடுதலான பழங்கள், மரக்கறிகள், முழு தானிய உணவுகள் நன்மை பயக்கக் கூடியவை. அது மட்டும் அல்ல குறைந்த கொழுப்பு உள்ள உணவுகளை தெரிந்து எடுங்கள். உதாரணமாக, மீன், பீன்ஸ் [அவரை], தோல் அற்ற வெள்ளை இறைச்சி கோழி, போன்றவை ஆகும். அத்துடன் நிறைவுற்ற கொழுப்புகளான [saturated fats] மாட்டிறைச்சி, சீஸ் [பால் கட்டி], வெண்ணெய் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. மேலும் நீங்கள் குடிக்கும் பானங்களும் கருத்தில் கொள்ளவேண்டும். உதாரணமாக கூடுதலாக மது அருந்துதல், தடுமாற்றத்தையும் நினைவாற்றல் இழப்பையும் ஏற்படுத்தலாம். அதே மாதிரி போதை பொருள்களும் ஆகும். இறுதியாக, நீங்கள் ஏற்கனவே மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால் [உயர் கொழுப்பு], நீரிழிவு நோய், கூடிய உடல் பருமன் [மிகவும் குண்டாக இருத்தல்] மற்றும் காது கேளாமை [depression high blood pressure high cholesterol diabetes, obesity, and hearing loss] போன்ற குறைபாடுகளுக்கு மருத்துவர் ஆலோசனையில் இருக்கிறீர்கள் என்றால், கட்டாயம் நீங்கள் உங்களில் கூடிய கவனம் செலுத்தவேண்டும். அப்படி என்றால் தான் உங்க நினைவாற்றல் இழப்பு பெரிதாக பாதிக்கப் படாமல் காப்பாற்ற முடியும். மேலும் ஒழுங்காக மருத்துவரின் ஆலோசனை பெற்று, உங்கள் மருந்துகளை மதிப்பாய்வு செய்யுங்கள். பலதரப்பட்ட மருந்துகள் கூட நினைவாற்றலை பாதிக்கலாம். மனித உடலில் கொழுப்புச் சத்து என்பது மிக அவசியமான ஒன்று. ஆனால் அது இருக்க வேண்டிய அளவு எவ்வளவு, அதை நாம் எந்த மாதிரியான உணவுகளில் இருந்து பெறுகிறோம் என்பது தான் முக்கியம். நம்முடைய உடலில் கொழுப்புச் சத்து என்பது இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. உடலுக்குத் தேவையான, நமக்கு ஆற்றலை வழங்குகிற நல்ல கொழுப்பு, மற்றும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கிற மோசமான, ஆபத்தான கொழுப்பு என இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. [மூலம்: ஆங்கிலத்தில், கலாநிதி கந்தையா சுந்தரலிங்கம், தமிழாக்கம்: கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] தற்காலிகமாக முற்றிற்று
-
"பிறந்தநாள் வயதைக் கூட்டுது ஒருபக்கம்"
"பிறந்தநாள் வயதைக் கூட்டுது ஒருபக்கம்" [01/11/2023 எழுதியது] "எளிமையான வாழ்வில் தூய்மை கண்டு எதிலும் பற்றற்ற தனிமை கண்டு எனக்குள் நானே எதையும் அலசி என்போக்கில் வாழ பழகி விட்டேன்!” "குழந்தை பருவம் சுமாராய் போக வாலிப பருவம் முரடாய் போக படிப்பு கொஞ்சம் திமிராய் போக பழக்க வழக்கம் கரடாய் போச்சு!” "உண்மை தேடி அலச தொடங்கினேன் வேஷம் போட்ட பலதை கண்டேன் ஒற்றுமை அற்ற மதங்களை கண்டேன் ஜனநாயகம் அற்ற ஜனநாயகம் கண்டேன்!” "நானாய் வாழ அமைதி தேடினேன் வாழத் தெரியாதவன் என்று திட்டினர் நாலு பக்கமும் ஓடித் திரிந்தேன் ஒன்றும் செய்யா கருங்காலி என்றனர்!” "ஈன்றவள் இல்லை இணைந்தவள் இல்லை இருந்ததும் இல்லை நிம்மதியும் இல்லை எழுதத் தொடங்கினேன் மனதில் பட்டதை உற்சாகம் தந்தனர் மகிழ்வும் வந்தது!” "ஓடும் உலகில் நாமும் ஓடி ஓரமாய் கொரோனா ஒதுங்க வைக்க பேரப் பிள்ளைகள் தனிமை போக்க ஆறுதல் அடைந்து ஆனந்தம் கண்டேன்!” "உறங்கி கிடைக்கா மனது ஒருபக்கம் உலகம் துறக்கா ஆசை ஒருபக்கம் பிறந்தநாள் வயதைக் கூட்டுது ஒருபக்கம் பிரிந்த உறவுகளை எண்ணுது ஒருபக்கம்!” "என்னை நினைக்க சிரிப்பு வருகுது அவளை நினைக்க அழுகை வருகுது வாழ்வை நினைக்க ஆத்திரம் வருகுது மரணத்தை நினைக்க மகிழ்ச்சி வருகுது!!” (கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்)
-
"பெண்ணை மதித்திடு"
என்னுடைய சில கருத்துக்களை அல்லது இலங்கை வரலாற்று நிகழ்வுகளை சூழ்ந்த, கற்பனைக் கதைகளே கூடுதலானவை. அதில் இதுவும் ஒன்று நன்றி கூடுதலான உண்மையும், அல்லது முழு உண்மையும் சில பொய்களும் அல்லது பொய்கள் இல்லாமலும் கலந்த கதைகளில் சிலவற்றின் லிங்க் கீழே தருகிறேன் ஓரளவு உண்மைக் கதைகளில் சில இதுவே !! சிறுகதை - 3 / "உள்ளம் கவர்ந்த கள்வன்" https://www.facebook.com/groups/978753388866632/posts/7146236552118254/? சிறு கதை - 6 / "நினைவில் நின்றவள்" https://www.facebook.com/groups/978753388866632/posts/7214613928613849/? சிறு கதை - 9 / "அறம் பேசுமா?" https://www.facebook.com/groups/978753388866632/posts/7296183263790248/? சிறு கதை - 15 / "உயர்ந்த மனிதர்கள்" https://www.facebook.com/groups/978753388866632/posts/7385664131508827/? சிறு கதை - 16 / "மர்மம் விலகியது" https://www.facebook.com/groups/978753388866632/posts/7405763156165591/? சிறு கதை - 18 / "ஒரு தாயின் கண்ணீர்" https://www.facebook.com/groups/978753388866632/posts/7446216112120295/? சிறு கதை - 22 / "நிழலாக ஆடும் நினைவுகள்" https://www.facebook.com/groups/978753388866632/posts/7547151945360044/? சிறு கதை - 26 / "தந்தை எனும் தாய்") https://www.facebook.com/groups/978753388866632/posts/7692124627529441/? சிறு கதை - 32 / "சத்தம் போடாதே" https://www.facebook.com/groups/978753388866632/posts/7889422104466358/? சிறு கதை - 39 / "அப்பாவின் பேனா..!" https://www.facebook.com/groups/978753388866632/posts/8062796290462271/? சிறு கதை - 42 / "கூட்டுக்குடும்பம்" https://www.facebook.com/groups/978753388866632/posts/8126263057448927/? சிறு கதை - 48 / "நிம்மதியைத் தேடுகிறேன்" https://www.facebook.com/groups/978753388866632/posts/8227714400637125/? சிறு கதை - 108 / "கனகம்மா" https://www.facebook.com/groups/978753388866632/posts/24162380043410639/? சிறு கதை - 129 / "இளங்கவியும்'ஏடிஎச்டி' யும் [ADHD]" https://www.facebook.com/groups/978753388866632/posts/25097762409872393/?