Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

kandiah Thillaivinayagalingam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by kandiah Thillaivinayagalingam

  1. 'என் மனச திருப்பிக் கொடு' "என் மனச திருப்பிக் கொடு இல்லை என்றால் என்னையே எடுத்துவிடு உன் மனசை தந்து விடு இல்லை என்றால் உன்னையே தந்துவிடு" "எண்ணங்களின் தொகுப்பே மனம் என்றால் நல்ல மனிதர்களை நீ நாடு கன்னங்களின் குழியே அழகு என்றால் நல்ல சிரிப்பை நீ தேடு" "நான் என்ற உணர்வு தோன்றின் மனம் அகங்காரம் ஆகி விடும் ஏன் என்ற கேள்வி பிறப்பின் மனம் புத்தி ஆகி விடும்" "மனது ஆன்மா தொடர்பு பற்றி இறையியல் அன்று எமக்குச் சொன்னது மனது வெறும் உளவியலின் தோற்றமென அறிவியல் இன்று எமக்குச் சொல்லுது" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  2. "தமிழர்களின் மரபும் பாரம்பரிய மும்" / பகுதி: 24 பாரம்பரியம் என்பது நமக்கு முன்னோர்களிடமிருந்து கிடைத்த சொத்து என்று பொருள்படுகிறது. இந்தச் சொல் பல்வேறு விடயங்களையும் விளக்குவதற்கு பயன்படுகிறது. அப்படியானவற்றில் ஒன்றே வாழ்க்கை வட்டச் சடங்குகள் (Life Cycle Rituals), கருவுறுதல் தொடங்கி இறப்பு வரை உள்ள பல சடங்குகள் ஆகும். இவற்றைத் தகுதிப் பெயர்ச்சிச் சடங்குகள் (Rites of Passage) என்றும் அழைப்பர். இவை அனைத்தும் எமது முன்னோர்கள் பாரம்பரியமாக எமக்கு தந்தவை, சில சில மாற்றங்களுடன் இன்றும் தொடர்பவை. பொதுவாக, மனிதன் தோன்றிய பொழுதே சடங்குகளும் தோன்றியது எனலாம். உதாரணமாக அன்று வேட்டைக்கு போகு முன் ஒரு வேட்டை சடங்கு நிகழ்ந்தன என இன்று நாம் கல்வெட்டுக்கள் மூலமும் பாடல்கள் மூலமும் அறிகிறோம். வேட்டையைத் தொழிலாகக் கொண்ட மனிதன் வேட்டையில் விலங்குகள் அகப்பட வேண்டும் என்பதற்காக வேட்டைக்குச் செல்லும் முன்பு விலங்கு நடனம் ஆடினார்கள் என அறிகிறோம். சடங்குகள் சில நோக்கங்களுக்காக, சில நம்பிக்கை அடிப்படையில் அன்று உருவாகின. மனிதன் பிறந்தது முதல் அவன் இறக்கும் வரை, ஏன் அவன் இறந்த பின் கூட, அவனை நினைவு கூற, பல்வேறு சடங்குகள் மேற்கொள்ளப் படுகின்றன. இவை அனைத்தும் அந்த மனித வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நடைபெறுகின்றன. உதாரணமாக - பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு இவைகளை அடிப்படையாக கொண்டவையாக இருக்கின்றன. ஆனால், பூப்பு சடங்கு பெண்களுக்கு மாத்திரமே நடைபெறுகின்றன. பெரும்பாலும் பெண்களில் 12 - 18 வயதுகளில் நிகழலாம். அனேகமான எல்லாச் சமூகத்தினருமே இந்நிகழ்வை ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதுகிறார்கள். ஒரு பெண் பூப்படைந்தால்தான் அவள் கருத்தரிப்பதற்கு உரிய பருவத்தை அடைந்து விட்டாள் என்பதே இதற்குரிய அடிப்படைக் காரணம் ஆகும், அதை தாம் வாழும் சமூகத்திற்கு உரைப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். பூப்பு என்பது வாழ்வின் அடிப்படைக் கூறுகளில் மிகமுக்கியமான ஒன்றான இனவிருத்திக்கு ஏற்ற வகையில் உடல் பக்குவப்படும் ஒரு நிலை அல்லது ஒருவர் தனது இனத்தை தோற்ருவிக்ககூடிய பருவத்தினை எட்டுதல் என்று கூறலாம். இந்தப் பக்குவம் ஆண், பெண் இருபாலாருக்குமே ஏற்படுகின்றது. எனினும் பெண்ணே கர்ப்பம் தரிப்பதால், அதற்கே முக்கியம் கொடுத்து சடங்கு கொண்டாட்டத்தை கையாண்டனர் எனலாம் அல்லது ஆணின் பங்கை அல்லது ஆண் பக்குவமடையும் நிலையை அல்லது பெண்களைப் போல வெளிப்படையாக இல்லாததால் அன்று சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றும் கூறலாம். மனிதர்களைப் போல, சிம்பன்சி, பொனோபோ போன்ற மனிதகுரங்குங்களுக்கும், பூப்படையும் தன்மையும், மாதாமாதம் மாதவிடாய் உண்டாகும் தன்மையும் உண்டு. மேலும், புறநானுறு 312 இல் பொன்முடியார் எனும் சங்ககாலப்பெண்புலவர் கூறுவது போல “ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே, சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே", என்ற கருத்து பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்ததாலும் ,பெண் அந்த கடமைக்கு தயார் என வெளிப்படுத்தும் கொண்டாட்டமாக, எனவே பெண்களுக்கு மட்டுமே பூப்பு சடங்கு கொண்டாடப் பட்டு , அது வாழையடி வாழையாக இன்றும் தொடர்கிறது என நம்புகிறேன். இந்த வரிசையில் முதலில் வருவது "பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த, மக்கட்பேறு அல்ல பிற" என்று குறள் 61 இல் வள்ளுவர் கூறிய மக்கட் செல்வமாகும். கிடைத்தற்கு அரிய இம் மக்கட் செல்வத்தைக் காக்கச் செய்யப்படும் சடங்குகளே பிறப்புச் சடங்குகள் ஆகும். இந்த வரிசையில் முதலில் வருவது கருவுறுதல் ஆகும். எனவே அந்த தமது வாரிசின் வருகையை, கருவுற்ற நல்ல செய்தியை, வலை காப்புடன் மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகிறார்கள். இதை 'சீமந்தம்' என்றும் கூறுவர். இது பெரும்பாலும் கருவுற்ற 7 அல்லது 9 ஆம் மாதத்தில், செய்யப்படுகிறது. இச்சடங்கின் போது கர்ப்பமான பெண்ணின் இரண்டு கைகளிலும் பலவை ஒலி எழுப்பக் கூடிய கண்ணாடி வளையல்களை (காப்பு) அணிவித்து ஒலி எழுப்பி பாடல்கள் பாடி மகிழ்வர். வார்த்தைகளே இல்லாமல் முட்டையிலிருந்து முளைத்த பச்சிளம் குழந்தை உணர்ச்சிப்பூர்வமாக உள்ளுக்குள்ளிருந்தே கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விக்கு வெளியே இருந்து பெரியோர்களால் வெளிப்படையாக கூறப்படும் பதில்களே இந்த வளைகாப்பு என்றும் சிலர் சொல்லுவர். மேலும் அணிவிக்கப்பட்ட வளையல்கள் உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இதன் நோக்கமே எந்த ஒரு செயலையும் அவசரம் இல்லாமல் நிதானமாகச் செய்யவேண்டும் என்பதற்காகத் தானாம். வளைகாப்பு நடக்கும் இடத்தில் பூக்கள், பல்வேறு வகையான பழவகைகள், சந்தனம், குங்குமம், மஞ்சள், கண்ணாடி வளையல்கள், மேலும் பல்வேறு வகையான இனிப்பு வகைகளும் வைக்கப்பட்டிருக்கும். சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் போன்ற பல்வேறு விதமான சாதவகைகளும் இருக்கும். அதை தொடர்ந்து பிள்ளை பிறந்ததும் வருவது சேனை தொடுதலும், தொட்டிலிடுதலும், பெயர் இடுதலும் ஆகும். சேய்+நெய்+தொடுதல் என்றால், குழந்தை பிறந்தவுடன் பெரியவர்களை அழைத்துக் குழந்தையின் நாவில் இனிப்புக் கலந்த நெய் அதாவது எண்ணெய்யைத் தொட்டு வைக்கும் வழக்கம் ஆகும். சேனை என்பதைக் ‘குழந்தை பிறந்தவுடன் புகட்டும் இனிப்புக் கலந்த திரவ உணவு’ என்கிறது தமிழ் அகராதி. குழந்தையைத் தொட்டிலில் கிடத்தித் தாலாட்டுப் பாடித் தூங்க வைக்கும் பழக்கம் தமிழரின் தனிப்பண்பாகும் என்பதால், பொதுவாக பலராலும் குறிப்பாக நாட்டுப்புற மக்களாலும் இது ஒரு சடங்காகவே மேற்கொள்ளப்படுகிறது. தமிழரின் தாலாட்டுப் பாடல்களில் இது குறித்த செய்திகளை நாம் தாராளமாக காணலாம். "பச்சை இலுப்பை வெட்டி பவளக்கால் தொட்டிலிட்டு பவளக்கால் தொட்டிலிலே பாலகனே நீயுறங்கு கட்டிப் பசும் பொன்னே-கண்ணே நீ சித்திரப் பூந்தொட்டிலிலே சிரியம்மா சிரிச்சிடு-கண்ணே நீ சித்திரப் பூந் தொட்டிலிலே." அடுத்து, குழந்தைகள் தொடர்பான சடங்குகளில், சிறப்பிடம் பெறுவது சோறு தீத்துதல், பல்லுக் கொழுக்கட்டை அவித்தல், மற்றும் ஏடு தொடக்குதல் ஆகும். பிள்ளைக்குச் சோறு தீத்துவதிலே பல்வேறு நடைமுறைகள் இடத்துக்கு இடம் குடும்பத்திற்கு குடும்பம் காணப்படுகின்றன. தாய்ப்பாலுடன் மட்டும் வளர்ந்த பிள்ளைக்கு மற்றைய உணவுகளை குழந்தைக்குக் கொடுக்கத் தொடங்கு முன்னர் முதல் தடவையாக பிள்ளைக்கு சோறு தீற்றுதல் நிகழ்ச்சி பொதுவாக ஏழு மாதமாகையில் நடை பெறுகிறது. சிலர் ஆலயத்திற்கு போயும் சிலர் தமது வீட்டிலேயும் இதை நடத்துவர். பொதுவாக சர்க்கரைப் பொங்கல் மாமனோ, தகப்பனோ,பேரனோ சிறிதளவு அமுதினை மசித்து குழந்தைக்குத் தீத்தி விடுவர். சில குடும்பங்களிலே உணவை ஒரு பெரிய தட்டிலே போட்டு பிள்ளையே தனது கையால் எடுத்துச் சாப்பிட விடுவர். இதனை 'அள்ளித் தின்ன விடுதல்' என்று அழைப்பர். சில பிள்ளைகள் சாப்பாட்டை எடுத்து வாயிலே வைக்கும். சாப்பாட்டைப் (சோறு) பிள்ளை வாயிலே வைக்காது விட்டால் தாயார் சிறிதளவு எடுத்துத் 'தீத்தி' விடுவார்.'தீத்துதல்' என்ற சொல் சில இடங்களிலே 'ஊட்டுதல்' என்ற சொல்லாலும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் தமிழ் நாட்டிலே 'ஊட்டுதல்' என்ற சொல் வழக்காற்றில் உண்டு. யாழ்ப்பாணத்து பழக்க முறையில், சோறு 'தீத்தும்' சடங்கிற்குப் பின்னர் பல்லுக் கொழுக் கட்டை சடங்கு நடைபெறும். இது குழந்தைக்குப் பல்லுத் தோன்றியதும் நடைபெறும் சடங்காகும். குழந்தையை பாயில் அல்லது ஏதாவது விரிப்பு ஒன்றில் இருத்தி, குழந்தையின் தலையின் மேல் வெள்ளைத் துணியொன்றை போர்த்து, அவித்த பல்லு கொழுக்கட்டைகளைச் சுளகில் அல்லது வெள்ளித்தட்டு அல்லது 'தாம்பாளம்' போன்ற ஒன்றில் எடுத்து வந்து, பொதுவாக தாய்மாமன் குழந்தையின் தலையிலே கொட்டுவார். தமிழர் பண்பாட்டில் சிறப்பாக யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டில் ஏடு தொடக்கல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. யாழ்ப்பாணச் சமூகம் கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தது, கொடுக்கிறது என்பதை இந்த நிகழ்வு இன்று வரை சிறப்பாக தொடர்வதில் இருந்து அறிந்து கொள்ளலாம். ஏடுதொடக்கல் நிகழ்வு பெரும்பாலும் ஆலயங்களில், பாடசாலையில், பொது இடங்களில் அல்லது வீட்டில் நடைபெறும். இங்கு குழந்தைகளின் விரலைப்பிடித்து ஆனா ஆவன்னா என அரிசியில் எழுதப்பழக்குவர். அடுத்து வருவது காது குத்துதல் சடங்காகும். அவரவர் தம் குல தெய்வக் கோயில்களில் குழந்தைகளுக்கு முடியெடுத்து காது குத்தும் சடங்கு நடத்துவார்கள். பண்டைய காலத்தில் காதுவளர்க்கும் முறை ஒரு குறிப்பிட்ட சமூக மக்களிடம் இருந்தது வரலாற்றில் இருந்து தெரிய வருகிறது. உதாரணமாக, சமண சமயத்தின் தாக்கத்தால் கி.பி. 7, 8 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் வந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இக் காது வளர்க்கும் வழக்கம் பெண்களிடம் மட்டும் அல்லாமல் அக்காலத்தில் ஆண்களிடம் இருந்துள்ளன. தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள ரகசிய அறையில் வரையப்பட்டுள்ள ஓவியத்தில் மன்னர் இராசராச சோழன் தனது காதுமடல்களை நீளமாக வளர்த்து அதில் வளையம் போன்ற அணிகலன்களை அணிந்திருப்பது போன்றே காட்சியளிக்கிறார் என அறிகிறேன். இப்படி தமிழர் காது குத்தி காதணிகள் அணிவதை உறுதி படுத்துவது போல, தமிழன்னையின் காதினில் குண்டலங்களாக, குண்டலகேசி ஒளிர்கின்றது என "காதொளிரும் குண்டலமும் கைக்குவளை -யாபதியும்,கருணை மார்பின் " என்று கவியோகி சுத்தானந்த பாரதியின் பாடல் கூறுகிறது. வழிவழி வந்த இந்த பழக்கம் பின்னாளில் ஒரு சடங்காகவே மாறிவிட்டது. அதில் தாய் மாமன் மடியில் குழந்தையை அமர வைத்துக் காது குத்துதல் என்பது மாறாத வழக்கமாக இன்றும் இருந்து வருகிறது. உறவுகளில் அழிக்க முடியாத உறவு "தாய்மாமன்" உறவு என்பர். இங்கு இந்த உறவு தாயின் உடன் பிறந்தவரைக் குறிக்கும். பெரும்பாலான தாலாட்டுப் பாடல்களில் மாமன் பெருமையைக் கூறும் பாடல்களே அதிகம். அப்படியான காது குத்தும் நாட்டுப் பாடல் ஒன்று உதாரணமாக கீழே தரப்பட்டு உள்ளது: "கண்ணான அம்மாளுக்கு - ஏனம்மா காதுகுத்தப் போறாகன்னு கிண்ணியில் சந்தனமும் கிளிமூக்கு வெத்தலையும் தங்கத்தினால் ஆபரணமும் - ஏனம்மாளுக்கு கொண்டு வந்தார் தாய்மாமன்" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 25 தொடரும்
  3. "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 11 இந்தியாவினதோ அல்லது தமிழ் நாட்டினதோ தொல் பொருளியல் துறையினர் ஒரு முழுமையான முறையான எந்த ஆய்வும் பூம்புகார் பற்றி இது வரை செய்யவில்லை. ஒரு மிக சிறிய ஆய்வே இதுவரை எவராலும் செய்யப்பட்டு உள்ளது. ஆங்கிலேய ஆய்வாளர் கிரகாம் கான்காக் [Graham Hancock] தற்போதய பூம்புகாரின் கிழக்கே கடலுக் கடியில் செய்த ஆய்வு, கரையில் இருந்து 5 கில்லோ மீற்றர் தூரத்தில், 23 மீற்றர் ஆழத்தில் குதிரை லாட வடிவத்தில் அமைந்த ஒரு கட்டுமானமும் அதன் பக்கத்தில் அமைந்த இன்னும் ஒரு கட்டுமானத்துடன் மட்டுமே நின்று விட்டது. ஆனால் அதே பகுதியில் 100 மீற்றர் ஆழத்திற்கு மேல் 20 இற்கு மேற்பட்ட பெரிய கட்டுமானம் அங்கு இருப்பதாக அறிந்தது பரபரப்பூட்டுகிறதாக உள்ளது. அவை ஒரு கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டதே தவிர சுழியோடியால் இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை. அவை ஒரு அழிந்த நாகரிகத்தின் பகுதியா?என்பதை கூடுதலான, முழுமையான ஆய்வு மூலம் நாம் அறியலாம். அது மட்டும் அல்ல குமரி கண்டம் என்று ஒன்று உண்மையில் இருந்ததா அல்லது அது ஒரு கட்டு கதையா என்பதற்கும் இது விடை கொடுக்கும். எனவே, இன்றைய நிலையில், குமரிக் கண்டம் என்பது உண்மையா அல்லது வெறும் கற்பனையா என்ற விடயம் தெளிவாக இல்லாது இருக்கின்றது. கன்னியகுமரி பகுதியில் கடலுக்கடியில் ஒலிச்சமிக்கை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதாக ஒரு ஆராச்சி உரிமை கோருகிறது. ஆகவே நாம் மீண்டும் இந்த வேலை திட்டத்தை தொடங்க வேண்டும். அதன் மூலம் பல சாட்சிகளை முன் நிறுத்தி உண்மையை உலகத்திற்கு எடுத்து கூறலாம். குமரி கண்டம் உண்மையா பொய்யா என்பதை. நிரூபிக்க அல்லது சான்று பகிர, பண்டைய பேச்சு, கவிதை தவிர எம்மிடம் உருப்படியான வேறு அறிவியல் சாட்சிகள் இன்னும் இல்லை. எவ்வாறாயினும் குமரி கண்டத்தை நம்புபவர்கள் சுட்டி காட்டும் காரணங்களை கீழே ஒரு பட்டியலாகத் தருகிறேன். 1) மடகாஸ்கர் தீவிலும் [Madagascar Islands], இந்தியாவிலும் வாழ்கிற விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு இடையில் ஒரு பெரும் ஒத்த தன்மை [great similarity] காணப்பட்டது. அது மட்டும் அல்ல, அந்த ஒற்றுமைகள், மடகாஸ்கர் தீவிற்கு அருகில் இருக்கும் ஆப்ரிக்காவுடன் ஒத்து போகாமல், 2,500 மைல் தூரத்தில் இருக்கும் இந்தியாவுடன் ஒத்து போனது. 2) அவுஸ்ரேலியா பழங்குடி மக்கள் மற்றும் ஆப்ரிக்க பழங்குடி மக்கள் பேசும் மொழி தமிழினை ஒத்து இருத்தல். [The language of aboriginal Australians & aboriginal Africans have some similarity / Connection with Tamil] இதனை நீங்கள் மாத்தளை சோமு எழுதிய ‘வியக்க வைக்கும் அறிவியல்’ என்னும் நூலில் இருந்தும் மா.சோ.விக்டர் எழுதிய மொழி ஆய்வு நூல்களில் இருந்தும் அறிந்துக் கொள்ளலாம். உதாரணமாக அவுஸ்ரேலியா பழங்குடி மக்கள் ஒரு பெண்ணினைக் கூப்பிட ‘பூனங்காஇங்கவா’ என்றுக் கூறுகின்றார்கள். இது ‘பூ நங்கையே இங்கே வா’ என்பதின் மருவு தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 3) சங்க இலக்கிய பாடல்களின் செய்திகள். 4) பழந்தமிழர்களின் பழக்க வழக்கங்கள். குறிப்பாக கடலோரத்தில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்கள். 5) பூம்புகார் என்று பெயர் பெற்ற, மாபெரும் நகரமான காவேரிப்பூம்பட்டினம் கடலினுள் மூழ்கிய வரலாறு. 6] அவ்வாறே தனுஷ்கோடியின் [Dhanushkodi] ஒரு பகுதி கடலினுள் மூழ்கிய வரலாறு. இந்தக் கதை நம் சமகாலத்தில் நிகழ்ந்தது. 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 இல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை, வீசிய கடும் புயலில் அடித்து செல்லப்பட்டது. புயல் வந்து புரட்டிப் போட்டதன் அடையாளமாக இன்றும் மிச்சமிருப்பது அழிந்த நிலையில் உள்ள ஒரு தேவாலயம். சில கட்டடங்கள் மட்டுமே. அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் மொத்தம் 2000 பேர் வரை உயிரிழந்தனர். அதன் பின்னர் தமிழ் நாடு அரசு இந்த ஊரை வாழத்தகுதியற்றதாக அறிவித்தது. 7) தமிழகத்திலுள்ள குளச்சல் துறைமுகத்தில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் கடலில் ஒரு பாறை இருக்கின்றது. அந்த பாறையினை அங்கு வாழும் மக்கள் ‘ஆடு மேய்ச்சான் பாறை’ [Sheep grazing rock] என்று பெயரிட்டு அழைக்கின்றனர். காரணம் என்னவெனில் ஒரு காலம் அந்த பாறை இருந்த இடம் தரையாக இருந்தது என்றும், அப்பொழுது அங்கு சென்று மக்கள் ஆட்டினை மேய்தனர் என்றும் கூறுகின்றனர். 8] மொழி ஆராய்ச்சியாளர்களின் கருத்துகளும் மற்றும் தமிழ் அறிஞர்களின் கூற்றுக்களும். 9] ஆங்கிலேய ஆய்வாளர் கிரகாம் கான்காக் (Graham Hancock)கின் ஆராச்சி முடிவு. 10] கன்னியாகுமரிக்குத் தெற்கே ஒலிச்சமிக்ஞை [sound signal] அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதாக கண்டறியப் பட்டது இப்பொழுது நாம் சில விடயங்களை தெளிவு படுத்திக் கொள்ளுவோம் 1] அறிவியல் ஆராய்ச்சிகள் குமரி கண்ட கொள்கையை ஆதரிக்கவும் இல்லை நிராகரிக்கவும் இல்லை. புவிஓடு அசைவுகள், கண்ட ஓட்டங்கள் போன்ற புதிய அறிவியல் கருத்துக்கள் புவியியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட பின், ஆசிய ஆப்பிரிக்க கண்டங்களுக்கு இடையே பாலம் போல் அமையலாம் என்ற குமரி கண்டம் / இலெமூரிய புனைக்கோள் கைவிடப்பட்டாலும், அறிவியல் முடிந்த முடிவாக தேவையான சாட்சிகளை இன்னும் முன் வைக்கவில்லை. ஆகவே முறையான ஆய்வுகள், கடல் அடி பரிசோதனைகள் பூம்புகார் கடல் பகுதியிலும் அதற்கு அண்டிய பகுதியிலும் செய்யப்பட்டு, அங்கே புதையுண்டு கிடக்கும் மனிதனால் செய்யப்பட்ட கட்டு மானங்கள், பொருட்கள் மற்றும் ஏதாவது முக்கிய சாட்சிகள், அது ஒரு மூழ்கிய நிலப்பகுதி என காட்டக் கூடியதாக அல்லது நிராகரிக்க கூடியதாக அமைந்தால், மேலும் அவைகளின் காலம் சரியாக கணக்கிடப்பட்டால் அன்றி நாம் ஒரு அறிவியல் முடிவிற்கு வரமுடியாது. அப்படியான ஒரு U வடிவ மனிதன் செய்ததாக கருதப்படும் ஒரு கட்டு மானம் 1991 இல் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதன் பின் எந்தவொரு ஆய்வும் அங்கு இதுவரை செய்யப் படவில்லை. அப்படி மேலும் பல ஆய்வுகள் செய்யும் வரை, யாரும் ஒருவர் ஏதாவது ஒரு உலகத்தின் மூலையில் இருந்து இதைப் பற்றி கதைத்துக் கொண்டே இருப்பர். 2] இப்போதைய அறிவியல் ஆராய்ச்சிகள் உலக நாகரிகங்கள் சுமேரியாவிலோ அல்லது சிந்து சமவெளியிலோ தோன்றி இருக்க வேண்டும் என்று கூறுகின்றன. அதற்கு முன்னர் நாகரிகங்கள் இருந்தனவா? அதற்கு முன்னர் மக்கள் எவ்வாறு இருந்தனர் ? போன்றவற்றிற்கு விடை காண, இன்னும் ஆராய்ச்சிகள் முழுவீச்சில் தொடங்கவில்லை. இது ஒரு குறைபாடே? 3] தமிழர்கள் பூம்புகார் பற்றிக் கூறும் செய்திகள் உண்மையென்று சில ஆராய்ச்சிகள் கூறும் பொழுது குமரிக்கண்டத்தைப் பற்றி மட்டும் அவர்கள் பொய் சொல்லி இருப்பார்களா? ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுமா? உண்மை வெளிப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்? திருச்சி பாரதிதாசன் பல்கலை கழகத்தை சேர்ந்த, ரிமோட் சென்சிங் துறையில் உள்ள இரு பேராசியர்கள் [Professor of Eminence Somasundaram Ramasamy and colleague J. Saravanavel, at the Department of Remote Sensing at Bharathidasan University in Tiruchirappalli], Current Science 25 June 2019 அன்று ஒரு ஆராய்ச்சிக்கட்டுரையை, GEBCO [The General Bathymetric Chart of the Oceans] என்ற இணையதளத்தில் கடல் கீழ் தரை மட்ட செயற்கைகோள் படங்கள் மற்றும் Geographical software ஐ பயன்படுத்தி, கடலுக் கடியில் நதிகள் ஓடிய தடங்களை பற்றி ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு அறிக்கையின் படி வைகை நதி பற்றிய குறிப்பு கிடைத்தது. தற்போதுள்ள முகத்துவரங்களிலிருந்து கிழக்கு பக்கமாக பாய்ந்த வைகை நதி, ராமேஸ்வரத்திற்கு வடக்காக சென்று பிறகு தெற்கு நோக்கி திரும்பியுள்ளது. அதன்பின் அங்கிருந்து 400 கிமீ தூரம் ஓடி இருக்கிறது. அதாவது இலங்கையின் தென் பக்கம் இருக்கும் காலி வரை நீட்சி காணப்படுவதை செயற்கைக் கோள் படங்கள் காட்டுகின்றது. அந்த இடம் தான் இப்ப மன்னார் வளைகுடாவாக இருக்குது. கடலுக் கடியில் தரை மட்டத்தை காட்டும் செயற்கைகோள் படங்களில் தாமிரபரணி நதி ஓடிய பள்ளங்களும் தெளிவாக இருக்கு. இந்த இடம் சுமார் 20,000 வருடங்களுக்கு முன்பாக கடல் சீற்றத்தில் அழிந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் லெமுரியா கண்டம் படிப்படியாக அழிந்திருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் தெரிகிறது . கடலின் அடிப் பகுதி தரையை செயற்கைகோள் படங்கள் மூலம் ஆய்வு செய்த போது, அதில் ராமேஸ்வரத்திற்கு கிழக்கே இருந்து இலங்கையின் காலிவரை ஒரு பெரிய பள்ளத்தாக்கு தெளிவாக தெரிகிறது. தற்போதைய மன்னார் வளைகுடாவில் இருக்கும் கடல்பகுதியில் தான் இந்தப் பள்ளத்தாக்கு இருந்திருக்கிறது. இந்த பள்ளத்தாக்கில் வைகைநதி ஓடிய தடம் தெளிவாக காணப்படுகிறது. அது போல தாமிரபரணி கடலில் கலக்கும் இடத்திலிருந்தும் ஒரு நீட்சி காணப்படுகிறது . அந்த பள்ளத்தாக்கு ஒரு இடத்தில் கடலுக்கு அடியில் வைகை நதியோடு இணைகிற காட்சி தெள்ளத்தெளிவாக காணப்படுகிறது. இந்த நதிகளின் பாதைக்கு மேற்கே மற்றுமொரு நதிப்பள்ளத்தாக்கு தெரிகிறது. இதுவே இலக்கியங்களில் கூறப்படும் பஃறுளி ஆறாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது? இந்த நிலப்பரப்பு மேற்கில் மடகாஸ்கர் தீவிலிருந்து கிழக்கில் ஆஸ்திரேலியாவரை பறந்து விரிந்து இருந்திருக்கிறதென சொல்லப்பட்டாலும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் சுமார் 3 லட்சம் சதுரகிலோமீட்டர் அளவுக்குத்தான் தெளிவாக இருக்கின்றன என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் சொல்லப்படுகிறது [References; Ramasamy, S. M. & Saravanavel, J. Drowned valleys of Vaigai and Tamiraparani rivers in the Gulf of Mannar region, India. Current. Science. (2019) Article]. லெமுரியா என்பது 19 ஆம் நூற்றாண்டின் கோட்பாடு. கண்டப்பெயர்ச்சி [continental drift] அதை எதிர்த்தது மட்டும் அல்ல, குளோமர் சேலஞ்சர் [Glomar Challenger / குளோமர் சேலஞ்சர் ஒரு ஆழ்கடல் ஆராய்ச்சி மற்றும் கடல்சார் மற்றும் கடல் புவியியல் ஆய்வுகளுக்கான அறிவியல் துளையிடும் கப்பல் ஆகும்] ஆய்வு அறிவியல் ரீதியாக 'கண்டம் சறுக்கல்லை' உறுதிப்படுத்தியது. மற்றொரு அறிவியல் ஆய்வின்படி, தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையே ஒரு தரைப்பாலம் இருந்துள்ளது உள்ளது, ஆனால் குமரி கண்டம் என கருதப்படும் பெரிய கண்டம் அல்ல. உதாரணமாக தமிழ்ச் சங்கங்கள் என்று ஒன்று 10,000 ஆண்டுகளாக இருந்திருந்தால் அதற்கு முன்னரும் ஓரளவு முன்னேறிய நாகரிகம் அங்கு இருந்திருக்க வேண்டும். ஆனால் எதுவும் அப்படி இருந்ததாக இதுவரை விஞ்ஞான, தொல்பொருள் தரவுகள் ஒன்றும் பெரிதாக இல்லை. நாயே 12,000 ஆண்டுகளுக்கு முன்புதான் வீட்டு மிருகமாக வளர்க்கப்பட்டது (domesticated (hunter / gatherer society) / வேட்டையாடி சேகரிக்கும் சமூகம்) என அறிகிறோம். அதற்கு முன் எப்படி ஒரு மேம்பட்ட நாகரிகம் இருந்தது, அதுவும் அறிவியலால் கண்டுபிடிக்கப் படாமல்? சங்க காலக் கவிதைகளில் மூழ்கிய "கண்டத்தை" சுட்டிக்காட்டும் ஒரு துப்பு கூட அங்கு நம்மால் காண முடியாது - மாறாக அவை மூழ்கிய பகுதிகள் மற்றும் சுனாமி பற்றி மட்டுமே பேசுகின்றன. இதைப் பலர் தவறாகப் புரிந்து கொண்டனர் என நம்புகிறேன் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் ஒருவேளை மாவட்டங்களின் அளவைப் போன்றது; இது கடலுக்கு அடியில், குமரியில் மனிதர்கள் ஆக்கிரமித்துள்ள நிலங்கள் பற்றி பேசுகிறது நிலங்கள் கடல்களால் சூழப்பட்டதாகவும், அதனால் மக்கள் அங்கிருந்து வெளியேறினார் எனவும், அவர்கள் மாற்று நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டார்கள் எனவும் கூறுகிறது. அவ்வளவு தான். [இந்த சங்க இலக்கியம் (கிமு 600க்கு முற்பட்டது)] பாண்டியர் செப்புத் தகடுகளிலிருந்து ~700 CE: "உயரமான கடல் அலையைத் தடுக்க பாண்டியன் ஈட்டியை எறிந்தான்" என்றும் ~ 1000 CE: "பாண்டிய மன்னன் வானத்தைப் போல உயரமான அலைகளை நிறுத்தினான்" என்றும் மிகைப்படுத்திய தகவல் அறிகிறோம், குமரிக்குக் கீழே அது ஒரு ஒரு கண்டம் என பண்டைய குறிப்புகளில் குறிப்பிடப்பட்டிருப்பதை நாம் எங்கும் காணவில்லை. மாறாக 2 ஆறுகள் கொண்ட சில நிலங்கள் (மாவட்டங்கள்) மற்றும் கடல்களால் சூழப்பட்ட ஒரு கரையோரம் என்று மட்டும் அங்கு குறிப்பிடுகிறார்கள். எனவே தவறான குமரிக் கண்டம் என்ற விளக்கம் எங்கிருந்து தொடங்கியது? ஐரோப்பிய விலங்கியல் வல்லுநர் பிலிப் ஸ்க்லேட்டர் இந்தியா, மடகாஸ்கர் மற்றும் ஆப்பிரிக்கா இடையே ஒரு நீரில் மூழ்கிய நில இணைப்பு இருப்பதாக கருதினார். ஏனென்றால் மடகாஸ்கர் மற்றும் தென் இந்தியாவில் ஒரே வகை லெமூர் என்னும் புதை படிவம் இருப்பதை கண்டறிந்தார். அதை ஒரு கோட்பாடாக பதிவு செய்தார். அந்த நிலத்திற்கு லெமூரியா என்று பெயரிட்டார். அதை தமிழ் ஆர்வலர் சிலர், சங்க இலக்கியத்தில் கூறிய குமரிக் கோடுவை [குமரிக் கோடு என்பதற்கு குமரிமலை என்று சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் முதல் போ.வே.சோமசுந்தரனார் வரை (உ. வே.சா .உட்பட ) அனைவரும் கூறுகின்றனர். ஆனால் தென் தமிழகத்தைப் பொறுத்த வரை '-கோடு 'என்னும் பின்னொட்டு இடம் பெறும் ஊர்களெல்லாம் நீர்க்கரைகளில் அமைந்துள்ளன. உதாரணமாக: அதங்கோடு [தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் பிறந்தது இவ்வூர் ஆகும்], புதாங்கோடு [சேர நாட்டில்], திருவிதாங்கோடு [கன்னியாகுமரி மாவட்டம்], கோழிக்கோடு [கேரள மாநிலத்தில்], அழிக்கோடு [கேரளம்], காரிக்கோடு [கேரளா, இடுக்கி மாவட்டம் தொடுபுழா] இப்படி வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.] குமரிக் கண்டம் என, லெமுரியாவை உரிமை கொண்டாடினர். என்றாலும் லெமூரியா கருதுகோள், கண்டப்பெயர்ச்சி கோட்பாடு அறிமுகம் ஆகிய பின் வழக்கற்றுப் போனது. இந்தியச் சூழலில், பனி உருகுவதால் ஏற்படும் ஒப்பீட்டளவில் ஆழமற்ற நீரின் பகுதியின் கீழ் மூழ்கியிருக்கும் ஒரு பகுதியின் படங்கள் சில முக்கிய கண்டுபிடிப்புககளுடன் - மரபணு, தொல்பொருள் மற்றும் கடல் படுக்கை ஆய்வுகள் - இணைக்கப்பட்டுள்ளன. அவை சுய விளக்கம் தரும் என்று நம்புகிறேன். எனவே இன்று லெமுரியா அல்லது குமரிக்கண்டம் என்பது இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு கற்பனையான நிலப்பரப்பு / கண்டமாகும் என ஏற்றுக்கொள்ளப் படுகிறது என்பதே உண்மையாகும். பண்டைய நாகரிகங்களில் நம்பிக்கை கொண்டவர்கள், மறைநூல் வல்லுநர்கள் [அமானுஷ்ய வல்லுநர்கள்] மற்றும் அனைத்து வகையான எழுத்தாளர்களும் [believers in ancient civilizations, occultists and writers of all sorts] இதைப் பற்றி எழுதத் தொடங்கியபோது இந்த கற்பனையான நிலப்பரப்பு கல்வி வட்டங்களுக்கு வெளியே அறியப்பட்டு பிரபலமானது. அவ்வளவுதான். இருப்பினும், 1950 களின் முற்பகுதியில், கண்டப்பெயர்ச்சி [கான்டினென்டல் டிரிஃப்ட் / continental drift] கோட்பாடு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதும், இன்று இது புராணங்களாக மாறிவிட்டன. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 12 தொடரும் பி கு : படம் 03 :: மடகாஸ்கர் மூதாட்டி படம் 04 : ஆஸ்திரேலிய பழங்குடி சிறுமி படம் 05 : கிராமப்புற தமிழ் சிறுமி
  4. "இன்று 07/07/2024 உலகளாவிய மன்னிப்பு தினம் / National Global Forgiveness Day" ["மன்னிப்போம்! மறப்போம்!! மகிழ்வாக வாழ்வோம்!"] "இடித்து அழித்து எரித்து சாம்பலாக்கி இழிவு செய்த வெட்கமற்ற மனமே இன்று உன்னையறிந்து உண்மை அறிந்து இதயம் திறந்து கேட்காயோ 'மன்னிப்பை?' " "இருளை இன்னுமொரு இருள் அகற்றமுடியாது இமைகாக்கும் கண்ணுக்குக்கண் பகையும் கூடாது இன்முகத்துடன் மன்னித்தல் இயலாமையும் அல்ல இதயம்திறந்து மன்னிப்பது மனித மாண்பே! " [எனது ஒரு பாடலில் இருந்து எட்டு வரிகள் கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மன்னிப்பு என்பதை ஆங்கிலத்தில் pardon, forgiveness, exemption or apology என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது செய்த தவறு, குற்றம் போன்றவற்றுக்காக ஒருவர்மீது கோபம் கொள்ளாமல் அல்லது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடிவெடுத்து அதை அவருக்கு உணர்த்தும் செயல் என்றும் கூறலாம். இதற்கு எதிர்மாறான சொல்லாக மன்றுதல் அல்லது ஒறுத்தல் [தண்டஞ்செய்தல்,To fine, punish] காணப்படுகிறது. மன்னித்தல் [Forgiveness] என்பது உண்மையில் ஒரு உளவியல் [psychological] செயல்முறை, ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டதாக உணர்ந்த ஒருவர், அந்த குற்றச்செயல் [offense] தொடர்பான உணர்வுகள் மற்றும் அணுகுமுறையில் மாற்றத்திற்கு உள்ளாகி அதில் இருந்து விடுபட வழிவகுக்கிறது எனலாம். அதாவது மனக்கசப்பு மற்றும் பழிவாங்குதல் போன்ற எண்ணங்களில் [ negative emotions such as resentment and vengeance ] இருந்து இதனால் அவர் விடுபடுகிறார் எனலாம். எனினும் ஆழமாக சிந்திக்கும் பொழுது மன்னிப்பு என்பது உணர்வு மட்டும் அல்ல அது ஒரு செயல் என்பது தெரியவரும். நாம் மனக்கசப்பை விட்டுவிட்டு, நாம் அனுபவித்த காயம் அல்லது இழப்புக்கு ஈடுசெய்யப்பட வேண்டும் என்ற எந்தவொரு கோரிக்கையையும் கைவிடும்போது மற்றவர்களை நாமாகவே மன்னித்து விடுகிறோம் எனலாம். அதே போல எமக்கு கொடுமை இழைத்தவர்கள் தங்கள் கொடுமையை உணர்ந்து, தமது தவறை மறைக்காமல், இனி அப்படி ஒன்று நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுத்து, தாம் செய்த அநியாயங்களை வெளிப்படையாக கூறி, மன்னிப்பு கேட்பது இரு சாராரையும் ஒற்றுமையாக்கும். மன்னித்தல் எப்படி மாண்பு மிகுந்ததோ, அப்படித்தான் மன்னிப்பு கேட்பதும். மன்னிப்பு கேட்பதற்கும் ஒரு பேருள்ளம்வேண்டும் பெருந்தன்மை வேண்டும். கூடுதலாக ஆண்மையும் வேண்டும். மேலும் ஒரு குற்றத்தை ஒப்புக் கொள்வதே அதைத் தவறென்று உணர்ந்திருப்பதை வெளிப்படுத்தும். மன்னிப்பு கேட்பதே குற்றத்திற்கான பாதிதண்டனையை பெற்றுவிட்டதற்கு சமம். மன்னிப்பு கேட்பவனை விட மன்னிக்கத் தெரிந்தவன் தான் மனிதன் என்பார்கள். அந்த மன்னிக்கத் தெரிந்த குணம் எப்போது வரும் என்றால் தவறு செய்தவன் தவறை உணரும் போதுதான். ஆனால் அந்த தவறையும் உணராமல் மன்னிப்பும் கேட்காமல் அவன் இருந்தால் ? இது தான் இன்று பெரும்பான்மை ஆட்சியாளரிடம் சிக்கி தவிக்கும் சிறுபான்மை இனத்தின் கதி ? எனவே தான் உண்மையை கண்டறிந்து, கொடூரத்தின் வெளிப்பாட்டை அவனுக்கு உணர்த்தி, அதன் மூலம் அவனை மன்னிப்பு கேட்க வைக்க, இலங்கையில் காணாமல் போன பெற்றோர் இன்னும் அறவழியில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படியான ஒருவரின் இன்றைய நிலையை ''குஞ்சுகளைக் கண்டால் சொல்லுங்கோ....'' என்ற சிறு கதை மூலம் தீபம் ஆசிரியர், திரு செ. மனுவேந்தன் வெளிப்படுத்துகிறார் [http://www.ttamil.com/2021/07/blog-post_05.html]. பொதுவாக கூறுமிடத்து, நம்மை நாம் முதலாவதாக மன்னிக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தலாம். அதாவது இந்த தவறை செய்ய மாட்டேன் என முடிவெடுத்து நம்மை நாம் மன்னிக்கும் போது, நாம் அடுத்த நல்ல நிலைமைக்கு நம்மை எடுத்து செல்கிறோம் என்றாகிறது. மற்றவர்களை காட்டிலும் நாம் யாரை மன்னித்தோமோ அவர்களே நம் மீது அதிக அன்பு கூறுவார்கள் என்பது உண்மை. ஒருவர் நமக்கு தீமை செய்கிறார். நமக்கு அவர் மேல் கோபம் கொப்பளிக்கிறது. பின் அவர் தனது தவறை உணர்ந்து நம்மிடம் மன்னிப்பு கேட்கிறார். நாமும் மன்னித்தோம் என்று கூறி விடுகிறோம். இதனால் இருவருக்கும் இடையில் சமாதானம் ஏற்படுகிறது. இது தான் நாம் பெரும் பெரிய முதல் பரிசு ஆகும். எது எப்படியாகினும், நாம் உண்மையில் மன்னித்தோமா அல்லது மன்னிக்கப் பட்டோமா என்பது முக்கியம். அது கட்டாயம் உறுதிப்படுத்தப் படவேண்டும். அப்ப தான் சந்தேகம் அற்ற சமாதானம் நிலவும். இன்றைய உலகில் 'மன்னிப்பு' என்ற செயல் கொஞ்சம் வித்தியாசமாக மட்டும் அல்ல. பைத்தியக்காரத்தனமாகக் கூடத் தோன்றும். மன்னிப்பார்கள் என்று நம்பி வெள்ளைக்கொடியுடன் சென்று மாண்டவர்கள் எத்தனை ?. எது எவ்வாறாகினும், நாளும் பிறர்க்குதவும் நல்லெண்ணம் மட்டும் இருப்பதாலோ அல்லது பாசமும் பரிவும் காட்டும் உள்ளங்கள் இருப்பதாலோ நாம் எல்லாவற்றையும் சாதிக்க முடியாது. ஆனால் மன்னிக்கிற மாண்பு மாபெரும் வெற்றிகளை நிகழ்த்துகிறது. ஆமாம், மன்னிப்பு மானுடத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது! தண்டனையால் முடியாத மாற்றத்தை மன்னிப்பு நிகழ்த்தி விடுகிறது. “இருளை இருள் அகற்ற முடியாது என்பதைப்போல பகையை பகை அகற்ற முடியாது. அன்புதான் பகையை அகற்றும்” என்றார் மார்ட்டின் லுாதர் கிங் [Darkness cannot drive out darkness; only light can do that. Hate cannot drive out hate; only love can do that - Martin Luther King] ஆமாம், அந்த அன்பு தான் மன்னிப்பு ஆகும். எனவே, மன்னித்தல் என்பது இயலாமையோ,கோழைத்தனமோ அல்ல. முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி சொல்லியது போல, “மன்னித்தல் என்பது பலசாலிகளின் பண்பு” ஆகும். “கண்ணுக்குக்கண் என்ற பகையுணர்வு இருந்தால் உலகில் எல்லோருமே குருடர்களாகத்தான் திரிந்து கொண்டிருப்பார்கள்” என்று ஒரு முறை மகாத்மா காந்தி கூறியதை நினைவு படுத்துங்கள். "மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்டால், உங்கள் பரலோகத் தகப்பன் உங்களுக்கு மன்னிப்பார் [For If You Forgive Men When They Sin Against You, Your Heavenly Father Will Also Forgive You]. நீங்கள் மற்றவர்களுடைய பாவங்களை மன்னிக்காவிட்டால், உங்கள் பிதா உங்கள் பாவங்களை மன்னிக்கமாட்டார் [But If You Do Not Forgive Men Their Sins, Your Father Will Not Forgive Your Sins]." என்று கிறிஸ்தவம் தனது மத்தேயு 6: 14-15 வில் மனிதர்களுக்கு ஒரு பயமுறுத்தலுடன் போதிக்கிறது. அதே போல "மன்னித்தல் அல்லாஹ் தனது நபிக்கும் அடியார்களுக்கும் ஏவிய நற்பண்புகளில் ஒன்று" என இஸ்லாத்தில் கூறப்படுகிறது. உதாரணமாக, 'இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.' [whoever pardons and makes reconciliation – his reward is [due] from Allah]. (அல்குர்ஆன் 42:39-43) இந்து மதத்தின் ஒரு காப்பியமான மகாபாரதத்தில், வனபர்வம் பகுதி 29 இல் [Mahabharata, Book 3, Vana Parva, Section XXIX,] மன்னிப்பு பற்றிய நீண்ட உரையாடல் காணப்படுகிறது. அதில் "உண்மையில், நேர்மையானவனும் மன்னிக்கும் குணமுள்ளவனும் எப்போதும் வெற்றி பெறுவான் என்பதே அறம்சார்ந்தவர்கள் கருத்து. உண்மையே பொய்மையைவிட நன்மை; மென்மையான நடத்தையே கடுமையான நடத்தையைவிட நன்மை. கோபம், மக்களின் அழிவுக்கும் துயரத்திற்கும் காரணமாகும். மன்னிக்கும் தன்மையுடன் பூமியைப் போன்ற பொறுமை கொண்ட மனிதர்கள் உலகத்தில் இருப்பதாலேயே உயிர்கள் செழிப்பையும் வாழ்வையும் பெறுகின்றன. ஓ அழகானவளே, என்ன காயம் ஏற்பட்டாலும் ஒருவன் மன்னிக்க வேண்டும். மனிதன் மன்னிக்கும் தன்மையுடன் இருப்பதாலேயே உயிர்களின் தொடர்ச்சி ஏற்படுகிறது. கோபத்தை வெல்பவனே, ஞானி. அவனே பலவான். எப்போதும் மன்னிக்கும் தன்மை கொண்ட பொறுமையானவர்களுக்காக சிறப்பு மிகுந்த மன்னிக்கும் தன்மை கொண்ட காசியபர் இந்த வரிகளைப் பாடியிருக்கிறார். "மன்னிப்பதே {பொறுமையே} அறம்; மன்னிப்பதே வேள்வி, மன்னிப்பே வேதம், மன்னிப்பே சுருதி. இதை அறிந்த மனிதன் எதையும் மன்னிக்கும் ஆற்றல் பெற்றவனாக இருப்பான். பொறுமையே பிரம்மம், பொறுமையே உண்மை, மன்னிப்பே பாதுகாக்கப்பட்ட ஆன்மத்தகுதி, எதிர்கால ஆன்மத்தகுதியைக் காப்பது பொறுமையே. பொறுமையே தவம், பொறுமையே புனிதம், பொறுமையாலேயே இந்த அண்ட ம் தாங்கப்படுகிறது. [For, O thou of handsome face, know that the birth of creatures is due to peace! If the kings also, O Draupadi, giveth way to wrath, his subjects soon meet with destruction. Wrath, therefore, hath for its consequence the destruction and the distress of the people. And because it is seen that there are in the world men who are forgiving like the Earth, it is therefore that creatures derive their life and prosperity. O beautiful one, one should forgive under every injury. It hath been said that the continuation of species is due to man being forgiving. He, indeed, is a wise and excellent person who hath conquered his wrath and who showeth forgiveness even when insulted, oppressed, and angered by a strong person. The man of power who controleth his wrath, hath (for his enjoyment) numerous everlasting regions; while he that is angry, is called foolish, and meeteth with destruction both in this and the other world. O Krishna, the illustrious and forgiving Kashyapa hath, in this respect, sung the following verses in honour of men that are ever forgiving, Forgiveness is virtue; forgiveness is sacrifice; forgiveness is the Vedas; forgiveness is the Shruti. Forgiveness protecteth the ascetic merit of the future; forgiveness is asceticism; forgiveness is holiness; and by forgiveness is it that the universe is held together.]" என்று கூறி உள்ளதை கவனிக்க. "பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று." [குறள் 152] தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் [மன்னித்துக்] கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் [மன்னித்தலையும்] விட நல்லது என்கிறது திருவள்ளுவர் தந்த திருக்குறள். அதாவது, நாம் வாழ்வில் பல மனிதர்களை சந்திக்கிறோம். பெரும்பாலானோரிடம் நல்லவையும் உண்டு குறைகளும் உண்டு என்பதை அறிவோம். சிலரிடம் அதிக குறைகள் உண்டு. அவர்கள் அத்தவறுகளை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள், திருத்துத்திக்கொள்ளவும் மாட்டார்கள். மறுபுறம் சிலர் தங்கள் தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்பார்கள். அது அவர்களின் நல்லுள்ளத்திற்கான சான்று. அவர்களின் முன்னேற்றத்திற்கான சான்று. மன்னிப்பு கேட்காதவரிடம் நாம் அமைதியாக சகித்துக்கொண்டு செல்வது சிறப்பாகும். மன்னிப்பு கேட்பவரை மன்னித்து செல்வது சிறப்பாகும். ஆனால் இவற்றைவிடவும் அத்தவறுகளையும் குற்றங்களையும் அறவே மறந்துவிடுவது என்பது சகித்துக்கொள்வதை காட்டிலும் மன்னித்தலை காட்டிலும் மிக மிக சிறந்தது என்று திருவள்ளுவர் வாதாடுகிறார். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  5. "தமிழுடன் ஒரு விளையாட்டு" - 03 [காளமேகப் புலவரின் தகரவரிசை, ககரவரிசை பாடல்கள்] இவர் இயற்பெயர் வரதன். இவர் ஆசு கவி (நொடிப் பொழுதில் பாடல் எழுதுபவர்) பாடுவதிலும் சிலேடைப் படல்கள் (ஒரே பாடல் இரு பொருள்) பாடுவதிலும் வல்லவர். இவர் காலம் 15ம் நூற்றாண்டின் இடைப்பகுதி. பாடுக! என்றதும் மழை பொழிவதைப்போல் பாடும் திறமை இவர் பெற்றதால், இவர் ‘காளமேகம்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றார் என்பர். வைணவ சமயத்தில் பிறந்த இவர், திருச்சிக்கு அருகே அமைந்துள்ள, திருவானைக்கா [திருஆனைக்காவல்] கோவிலைச் சேர்ந்த மோகனாங்கி என்பவளிடம் ஆசை கொண்டார். இதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த சைவ சமயத்துக்கு மாறி அவரை திருமணம் செய்துகொண்டார். இனி அவரின் தகரவரிசை, ககரவரிசை பாடல்கள் இரண்டையும் கிழே பார்ப்போம். ”தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி தித்தித்த தித்தித்த தாதெது? தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது?” வண்டே, நீ பல பூக்களைச் சென்று பார்த்துத் தேன் உண்கிறாய், அதில் மிகவும் இனிப்பான பூ எது? தத்தித் தாது ஊதுதி – தத்திச் சென்று (மலர்களில் உள்ள) மகரந்தத்தை ஊதுகிறாய் / குடிக்கிறாய் தாது ஊதித் தத்துதி – குடித்தபின் மீண்டும் தத்திச் செல்கிறாய் துத்தித் துதைதி – ’துத்தி’ என்று ஒலி எழுப்பியபடி அடுத்த பூவைத் தேடிப் போகிறாய் துதைது – அடுத்த பூவுக்குச் சென்று அத்தாது ஊதுதி – அந்தப் பூவின் மகரந்தையும் குடிக்கிறாய் தித்தித்த தித்தித்த தாது எது? தித்தித்தது எத்தாதோ தித்தித்த தாது? – நீ இதுவரை குடித்த பூக்களில் / மகரந்தங்களில் மிகவும் இனிப்பானது எது? "காக்கைகா காகூகை, கூகைக்கா காகாக்கை கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க — கைக்கைக்குக் காக்கைக்குக் கைக்கைக்கா கா" காக்கைக்கு -காக்காவிற்கு ஆகா கூகை -ஆந்தையைப் பிடிக்காது. ஒத்துப்போகாது. கோக்கு -கோ என்றால் அரசன். கூ -பூமி, அவன் நாடு, காக்கை - காப்பது அரசாள்வது கொக்கொக்க -கொக்கைப் போன்று கைக் கை - விரோதிகளை வென்று கா - காப்பது. இதை ஒரு ஒழுங்கில் சொன்னால், காக்கைக்கு இரவில் கண் தெரியாது. ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது. இரண்டிற்கும் நட்பு கிடையாது. காக்கையை விட ஆந்தை பலம் கொண்டது. எனவே காக்கை தனக்கு சாதகமான பகலில் ஆந்தையை விரட்டும். ஒரு அரசனுக்கு தனது நாட்டைக்காப்பது இன்றியமையாத முக்கிய கடமையாகும். மீன்களை எப்படி கொக்கு நிதானமாக காத்திருந்து உறுமீன் வந்தவுடன் சட்டென்று அதைக் கவ்வுமோ அது போல் எதிரி அசந்திருக்கிற சமயத்தில் அவன் மேல் படை எடுத்து, அவனை வென்று நாட்டைக் காப்பது அவசியம் என்பது இதன் பொருள் ஆகும்.
  6. "உயிரே!" "அள்ளி அரவணைத்து அன்பு பொலிந்து அனு தினமும் அடைக்கலம் அளித்து அக்கறையாய் பேசி அமுதம் ஊட்டி அமைதி தந்து அறிவூட்டிய உயிரே !" "ஆதரவு கொடுத்து ஆர்வம் ஏற்படுத்தி ஆலோசனை தந்து ஆணவம் அகற்றி ஆரத் தழுவி ஆசை தூண்டி ஆறுதல் படுத்தி ஆணாக்கிய உயிரே !" "இடுப்பு வளைவு இன்பம் சேர்க்க இதயம் மகிழ்ந்து இதழை பதிக்க இளமை பருவம் இழுத்து அணைக்க இரக்கம் கொண்ட இனிய உயிரே!" "ஈரமான நெஞ்சம் ஈர்த்து பிணைக்க ஈவிரக்கத் துடன் ஈருடல் ஓருயிராக ஈட்டிய நட்பு ஈன்றார் வாழ்த்துபெற ஈனமாந்தர் விலக ஈடுஇணையற்ற உயிரே!" "உடலின் அழகு உள்ளம் கவர உறவு கொள்ள உடன்பாடு கேட்டு உரிமை நாட்ட உறுதிமொழி பெற உரத்து கேட்கிறேன் உண்மையாய் உயிரே !" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  7. "தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 23 "பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits of Ancient Sangam Tamils continuing" சங்கத் தமிழரின் உணவு மரபை ஒரு இள மனைவியின் கதையாகவே கொடுக்கிறது கி மு 200 ஆண்டை சேர்ந்த குறுந்தொகை 167. “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல், கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக், குவளை யுண்கண் குய்ப்புகை கமழத், தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர், இனிதெனக் கணவ னுண்டலின், நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.” என்று. மேலும் அந்த இளம் குடும்பப் பெண் தித்திக்கும் புளிச் சுவை நிறைந்த மோர்க் குழம்பை அல்லது புளிக் குழம்பை ஆக்குவதில் கொண்டிருந்த ஆழமான ஈடுபாட்டை ஒவ்வொரு வரிகள் ஊடாகவும், அதே நேரம் அந்த உணவு ஆக்கும் முறையையும் நாம் அதில் அறிய முடிகிறது. தலைவனும் தலைவியும் பிறர் நன்கு அறியாத படி மறைவாக கண்டு காதல் கொண்டு, பெற்றோரின் சம்மதம் இன்றி, களவு மணம் செய்து இருவரும் தனிக் குடித்தனம் சென்றனர். துடித்துப் போனாள் மணப் பெண்ணின் தாய். பொறுப் பேதுமின்றி, செல்வச் செழிப்புடன், உலாவித் திரிந்தவளால் தனக் குடித்தனம் நடத்த முடியுமா? அடுப்பங்கரையே தெரியாதவள் எப்படி ஆக்கிப் போடுவாள்? அமைதி கொள்ள முடியாத தாய், தன் தோழியை அழைத்து மகளின் தனிக் குடித்தனத்தின் சிறப்பை கண்டு வருமாறு கேட்டுக் கொண்டாள். அதன் படி, எப்படி இல்லறம் நடத்துகிறாள் என்பதைப் பார்க்கப் போன செவிலிக்குக் கிடைத்த அருமையான காட்சி இங்கு கவிதையாகிறது. தலைவன் வெளியே சென்று விட்டான், தன் தலைவனுக்காக உணவு ஆக்கும் பணியில் இறங்கினாள் அந்த இளம் தலைவி. முதல் காட்சியில் தலைவி சமையல் செய்கிறாள். நன்கு முற்றிய கட்டியாகியிருந்த தயிரை உறியிலிருந்து இறக்கி எடுத்து, அந்த கெட்டித் தயிரை தன் மெல்லிய விரல்களால் பிசைகிறாள்; அவ்வேளை, அவள் திடுமென எழுகிறாள். அப்பொழுது, அவள் அணிந்திருந்த சேலை நழுவி விட்டது. கை கழுவிப் பின் சேலையைச் செருகி மீண்டும் தயிரைத் தொட்டால் தயிரின் பதம் கெட்டு விடும் என்பதால், அது அழுக்காகி விடும் என்று தெரிந்தும், உடனே தயிர் பிசைந்த கையால் பற்றி ஆடையை உடுத்துக் கொள்கிறாள். நெய்யோடு கடுகு மிளகு என்பன இட்டுத் தாளித்துப் பின் பிசைந்த தயிர் ஊற்றி மோர்க் குழம்பு செய்தாக வேண்டும். அப்படி முறைப்படி தாளிக்கும் போது, கடுகும் மிளகும் இன்ன பிறவும் நெய்யில் வதங்கிப் பொரிய, புகை பொங்கி எழுந்தது, கண்களில் புகை நிறைகிறது; எனினும் அதனை அவள் பொருட்­ ப­டுத்­தாது கண்ணைக் கசக்கியபடி துழாவி துழாவி இத­மாகச் சமைத்தாள். தாளித்த [கறி] சட்டியை விட்டு அவள் விலகவே யில்லை. சற்றே விலகினாலும் சுவை மாறி விடும் என்பதால். இவ்வாறு புளிக் குழம்பு செய்து முடிக்கிறாள் தலைவி. அடுத்த காட்சியில் தலைவன் உண்டு கொண்டிருக்கிறான். ‘இனிது’ என்கிறான். தலைவியின் முகத்தில் சொல்ல முடியாத மிக நுட்பமான மகிழ்ச்சி பரவுகிறது. செவிலி வருணிக்கும் காட்சியில் கேட்கும் ஒரே பேச்சுக் குரல் தலைவன் சொன்ன “இனிது” என்ற ஒற்றைச் சொல்தான். மற்றபடி இது அன்பினால் இயக்கப் பட்ட ஒரு மௌன நாடகம் ஆகும். தமிழில் எழுதப்பட்ட சமையல் நூல் ஒன்று சங்க காலத்தில் இருந்ததாக சிறுபாணாற்றுப்படை, வரிகள் 238 - 241, “கா எரியூட்டிய கவர் கணைத் தூணிப், பூ விரி கச்சைப் புகழோன் தன்முன், பனிவரை மார்பன், பயந்த நுண் பொருள், பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில்," குறிப்பிடுகிறது. அதில், ஒய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் [இவன் சங்ககால வள்ளல்களில் ஒருவன்] பாணர்களுக்கு விருந்து படைக்கும் போது இந்த நூலிலுள்ள முறைமை வழுவாமல் சமைக்கப் பட்ட உணவை இட்டானாம் என்கிறது. இந்த நூல் அருச்சுனனின் அண்ணன் வீமனால் எழுதப் பட்டதாம். ஆகவே இது வடமொழி நூலைத் தழுவியதாக இருக்கலாம். எனினும் இலக்கியத் தொகுப்பிற்கு முன்பாகவே இந்நூல் அழிந்து விட்டது போலும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமையல் தொடர்பாகத் தனித்துவமான ஒரு நூல் இருந்தது என்ற செய்தியால், நாம் அக்கால தமிழரின் உணவு மரபின் சிறப்பைக் காணக் கூடியதாக இருக்கிறது. மேலும் அங்கு காணப்பட்ட உணவு மரபு வளர்ச்சியின் உன்னதமான நிலை, வீடுகள் தோறும் தனியாக ‘சமையலறை’ என்று ஒன்று அமைய காரணமாக இருந்திருக்க கூடும். அவற்றை அட்டில் என சங்க தமிழர் அழைத்தனர். அது மட்டுமா, மிக நுணுக்கமாக உணவருந்தும் முறைகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் பொருத்தமாக உணவு உண்ணும் பன்னிரெண்டு முறைகளை தந்துள்ளார்கள் என்பதும் அவர்களின் அக்கால உணவு மரபின் சிறப்பைக் காட்டுகின்றது. அருந்துதல் - மிகச் சிறிய அளவு உட்கொள்ளல், உண்ணல் - தாராளமாக பசிதீர உட்கொள்ளல். உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு திரவத்தை உறிஞ்சி உட்கொள்ளல். குடித்தல் - திரவ உணவை (கஞ்சி போன்றவை) மெல்ல மெல்ல பசி போக்க உட்கொள்ளல். தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல். துய்த்தல் - மகிழ்ந்து,சுவைத்து உட்கொள்ளுதல். நக்கல் - நாவினால் துலாவி உட்கொள்ளுதல். நுங்கல் - முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல். பருகல் -திரவிய பண்டத்தை சிறுகக் குடிப்பது. மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல். மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல். விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல் ஆகும். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 24 தொடரும் "FOOD HABITS OF TAMILS" PART: 23 "Food Habits of Ancient Sangam Tamils continuing" Kuzhambu (குழம்பு / curry), is a dish common in South Indian and Sri Lankan Tamil cuisines, and is a gravy based on a broth made with tamarind, urad (bean) dal and toor dal, and can include vegetables. The dish is very popular as a side for rice among Tamils. The number of varieties of kuzhambu are countless, one of which is a tamarind based gravy, puzhi kuzhambu, which people ate even 2200 years ago! It is a thick gravy with tamarind pulp. It has a tangy flavour combined with the special spices. We found this curry in Kurunthokai 167 [2nd century B.C], penned by Koodalur Kizhaar. The verse is situated in the forest regions of ‘Mullai’ and speaks in the voice of the lady’s foster-mother to the birth-mother, narrating events that transpired in the lady’s marital home. The verse opens with the words ‘முளி தயிர் பிசைந்த’ meaning ‘kneading well-set curd’ and talks about a well-known food item in Indian cuisine, known as ‘curd’ here, and goes by the alias of ‘yoghurt’ in an international scene, which purists will declare as different. Whatever that may be, here’s an evidence of the usage of curd, known for its probiotic wealth, in Sangam times. Next, the final dish being prepared appears in ‘தீம் புளிப் பாகர்’ meaning ‘sweet and sour gravy’. What is really cooking in this verse? The context reveals that Hero & Heroine have fallen in love and without parents consent. They have eloped and married. After few days the girl's parents send the foster mother to check out if the girl is doing well & happy. The foster mother goes to her place and observes and reports back to their parents. So this situation usually results in poem of how the young girl has taken up responsibility of running the family and how she does really well even though she is young and used to luxurious conditions in her parents home. Here is the poem where the foster mother recounts her observations to Heroine’s mother. “After kneading the thick curd with her flame-lily-like, soft fingers, as her well-washed attire slipped away, even without washing her fingers, she touched her attire and wore it. With her blue-lily-like, kohl-streaked eyes, filled with cooking smoke, she served the sweet and sour curry that she stirred on her own to her husband, who savouring it, declared it to be delicious. Hearing that, a subtle joy spread on that face, decked with a luminous forehead.” With these words, the foster-mother passes on the news to the birth-mother that their daughter is leading a happy life with her husband. Sangam poem, Sirupanatruppadai, which were written by the poet Nathattanaar in praise of a minor Velir chieftain named Nalliyakkotan, a Naka king of Naka Nadu (ancient Malabar North Ceylon) - mentioned that there were cook book in Tamil during Sangam period, may be written based on sanskrit [saṃskṛtam] book, wrote by Bhima of mahabharata. It is also understand from Mahabharata that he is the first to have cooked a dish much loved in South India, Aviyal, which is a thick stew of vegetables, curd and coconut, While he served at the court of King Virata as disguise himself as a cook named Vallabha. "He will serve you many different foods that have been created from cookbooks written by Bheeman with a chest like that of a snow-covered mountain, older brother of Arjunan who wears a breast cloth with flower designs, famed for his archery skills, the one who received a quiver with arrows from the fire god after burning a forest." [Sirupanatruppadai: 238-241] It is surprised to understand that during the Sangam period or even before that every Tamilian houses had separate kitchen called attil [அட்டில்] and further We come to know from Sangam literature that ancient Tamilian consumed food or drink in twelve different ways. They are Arunthuthal [அருந்துதல்] - consuming very very little like medicine, Unnal [உண்ணல்] - eating, Urinchal [உறிஞ்சல்] - suction, Uudiththal [குடித்தல்] - Drinking, Thinral [தின்றல்] - eating, tuyttal [துய்த்தல்] - Eating anything with satisfaction or pleasure, Nakkal [நக்கல்] - Things eaten by licking, Nunkal [நுங்கல்] - devouring, parukal [பருகல்] - drinking, liquid food, maantal [மாந்தல்] - eating drinking, Mellal [மெல்லல்] - Mastication or chewing -food is crushed and ground by teeth and, vilunkal [விழுங்கல்] - deglutition Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] PART : 24 WILL FOLLOW
  8. "நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 22 உலக அளவில் நாம் பார்க்கும் பொழுது, இன்று சிரியாவில் ஐஎஸ் ஐஎஸ் [ஈராக் மற்றும் சிரிய இஸ்லாமிய அரசு / ISIS] அமைப்பினர், ஈராக் நாட்டில் மிகப் பழைமையான, 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த டைக்ரிஸ் (Tigris) ஆற்றின் கரையில் உள்ள உலகின் ஒரு மிகப் பெரும் சாம் ராஜ்யமாகத் திகழ்ந்த புராதன அசிரியன் [Assyrian] நகரான நிம்ருட்டை [Nimrud] ஐஎஸ் பயங்கரவாதிகள் தகர்த்தனர். பழமை வாய்ந்த வரலாற்று நினைவுச் சின்னங்கள், ஆவணங்கள் மற்றும் கலைப் பொருட்கள, அழித்தும் எரித்தும் வரலாற்றை இன்று அழிப்பதை காண்கிறோம். இப்படி எத்தனையோ வரலாற்று அழைப்புகள் இந்தியா உட்பட இன்று நடை பெறுகின்றன. உண்மையான வரலாற்றை ஏற்றுக் கொள்ள முடியாமலும், அது திருப்ப திருப்ப நினைவூட்டுவதை சகித்துக் கொள்ள முடியாமலும் அவதியுறும் ஒரு இனத்தின், ஒரு குழுவின் செயல் பாடு இதுவாகும். எமது அரசியல் மற்றும் சமூக போராட்டம், கட்டாயம் வரலாற்றை அழிக்கக் கூடாது, அது நல்லதோ கூடாதோ அவை வரலாறே, நாம் அவ்வாற்றில் இருந்து பாடம் படிக்க வேண்டுமே ஒழிய அவ்வற்றை அழித்து வரலாற்றை மாற்றி தமக்கு சார்பாக பொய்யாக ,உண்மைக்கு புறம்பாக எழுதக் கூடாது. ஆனால் இதைத் தான் இலங்கை, இந்தியா அரசு தமிழருக்கு எதிராக செய்கிறது என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு. உதாரணமாக, ஆரிய கலாச்சாரத்திற்கு முந்தைய, அதற்குச் சற்றும் தொடர்பில்லாத, சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்த ஒரு நகர சமூக அமைப்பு தமிழ் நாட்டில் இருந்திருக்கிறது என்பதை உறுதி செய்யும் வரலாற்றுச் சான்றுகள் கீழடி அகழ்வாய்வின் மூலம் தற்போது கிடைத்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்பை இருட்டடிப்பு செய்வதுடன், கீழடி ஆய்வைத் தொடரவிடாமல் முட்டுக் கட்டை அல்லது இழுத் தடிப்பு செய்யும் இந்தியா மத்திய அரசின் செயலைக் கூறலாம். இராணுவ வரலாற்றாசிரியர்கள் எவ்வாறு ஒரு படையெடுப்பாளர்கள் அல்லது ஆக்கிரமிப்பாளர்கள் அல்லது ஒரு பெருமப்பான்மையாளர்களைக் கொண்ட அரசாங்கம், மற்றவர்களின் அல்லது சிறுபான்மையாளர்களின் உண்மையான வரலாற்றை மாற்றுகிறார்கள் அல்லது அழிக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டி உள்ளார்கள். தார்மீக நோக்கத்திற்காக [some sense of moral purpose] நாம் பண்டைய நாகரிகம் மற்றும் இராச்சியம் இவைகளின் வரலாற்று சாட்சிகளாக மட்டும் இன்றி, கலாச்சார சாதனைகளாகவும் இருந்தவற்றை அழிக்கிறோம் என்று பெருமையுடன் உரிமை கோரும் அமைப்புகளில், ஈராக் மற்றும் சிரிய இஸ்லாமிய அரசசை [ஐஎஸ்ஐஎஸ் / ISIS.], முதல் தீவிர குழு [radical group] என்று நாம் கூறமுடியாது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் / தலிபான் தீவிரவாதிகள் [Taleban], ஆறாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட, பாமியன் பள்ளத்தாக்கில் இருந்த உலகப் புகழ் பெற்ற 1,400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்ட 100 அடி உயரமுள்ள பாமியன் புத்தர் சிலைகளை [Buddhas of Bamyan] இதே காரணங்களுக்காக உடைத்து தள்ளினார்கள். ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வுவான கீழடி அகழாய்வின் அகழ்ந்த கலைப்பொருட்கள் ஏன் தமிழ் நாட்டை விட்டு வெளியே பெங்களூருக்கு கொண்டு போனார்கள் என்பது இன்று ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது. இதனால், அவர்கள் தமிழ் நாட்டு வரலாற்றை அழிக்க முயல்கிறார்களா என்று கேட்கவும் தோன்றுகிறது. மேலும் வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், “கீழடியானது தமிழகத்தில் கிடைத்துள்ள மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். இதன் மூலம் தமிழக வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதற்கான ஆய்வு மேலும் தொடர வேண்டும்” என்று உரையாற்றியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. அரசியல் காரணமே இவைக்கு காரணம் போல் தெரிகிறது. உதாரணமாக,கண்டு பிடிப்புகளை வெளியிடாமையும், அங்கு கண்டுபிடிக்கப் பட்ட கலை பொருட்கள் வெளியிடாத தகவல்களை வலுக்கட்டாயமாக சேர்ப்பதாக கிடைத்த தகவலும், மற்றும் எந்த அதிகாரி ஆய்வு நடத்தி புதியன வற்றை கண்டறிகிறாரோ அவர் தான் அதற்குரிய ஆய்வறிக்கையை உண்மையில் எழுதவேண்டும், ஆனால் அதை மாற்றுவதும் அரசியல் காரணம் இருப்பதை எடுத்து காட்டுகிறது. எது எவ்வாறாயினும் அதைக் கண்டு பிடித்த தொல்துறை ஆய்வாளர் திரு அமரநாத் ராமதிருஷ்ணன் மீண்டும் தமிழகத்துக்கே மாற்றி கீழடிப் பணியை தொடர மதுரை உயர் நீதி மன்ற அண்மைய அறிவிப்பு, நமக்கு மகிழ்ச்சியை தருகிறது. அது மட்டும் அல்ல இன்று " கீழடி நம் தாய்மடி ", என சிகாகோ வில் ஜூலை 2019 நடந்த 10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டில் முழங்கியதும் குறிப்பிடத் தக்கது. எப்படி சுமேரியாவிலோ அல்லது சிந்து வெளியிலேயே நதி நெடுகிலும் ஆற்றங்கரையில் பெரியதும் சிறிதுமாக நகரங்களை உருவாக்கிய அதே பாணியிலேயே வைகை நதியெங்கும் நகரங்களை இது உருவாக்கியது இன்று வெளிச்சத்திற்கு வருகின்றது என்பது குறிப்பிடத் தக்கது. இலங்கை, இந்தியா பெரும்பான்மையாளர்களின் ஆட்சியில் உள்ளது எனவே அங்கு சிறுபான்மையினரின் வரலாற்று பெருமைகளை ஏற்பதில் அவர்களுக்கு அரசியல் நெருக்கடி ஏற்படுகிறது. சிறுபான்மையினர் அங்கு தமது தொன்மையை சாட்சிகளுடன் கட்டுவது அவர்களின் நோக்கங்களுக்கு இடைஞ்சலாக உள்ளது. அதனால் அவர்கள் இதை விரும்ப வில்லை. எந்த மொழியும் கலாச்சாரமும், பெரும்பாலானோர் பேசும் மொழியிலும் அவர்களின் வரலாற்றிலும் தொன்மையாக [antiquity] காணப்பட்டு அவர்களுக்கு சவால் விடுவது அவர்களால் பொறுக்கமுடியாது. எனவே படிப்படியாக அதை அழிப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். இவைதான் வரலாற்று அழிப்பிற்கான முதன்மை காரணமாகும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 23 தொடரும்
  9. "Tamil Slang / கொச்சை வழக்கு சொற்றொடர்" Enna elavu [என்ன எலவு] - Literal meaning What death (ceremony), usually used to describe an unknown and non-understandable situation. Enna Elavo theriyaathu [என்ன எலவோ தெரியாது] means What death, I don’t know. Enna kothari [என்ன கோதாரி] - Meaning same as enna ellavu but true meaning of Kothari unknown. My mom used to say "Kothari" but even she doesnt knew what does it mean? All she knew is that its a bad word. but my Grandma has told me that its kind of disease/கோதாரி’ என்பது கொள்ளை நோயையும் வாந்திபேதியையும் குறிக்கும். மனிதரை நோக்கி இச்சொல் பயன்படுத்தப்பட்டால் அந்த நோயை ஒத்தவர்கள் என்று பொருள்படும். வீண் பிடிவாதம் பிடிப்பவர்களையும் இச்சொல் குறிக்கக்கூடும். Enna savam [என்ன சவம்] Meaning same as enna ellavu. Savam means a dead body. Alukkosu [அலுக்கோசு ] - Origin unknown but generally to denote a condition of assumed stupidity of the person being called as such..[eg:இந்தவகையில் மகிந்த பாசிசம் கோமாளித்தனமாகவே மாறி, அங்குமிங்குமாக அலுக்கோசு வேலை செய்கின்றது] Visar [விசர் / பைத்தியம்] - Means gone mad to describe a person. Visar manisan [விசர் மனிசன்] or mad man can be used by a wife to denote a husband in a mild reproaching manner. Visar attam [விசர் ஆட்டம்] - Means dance induced by madness to describe an action of a person that is is not rational to the user. Payithiyam [பைத்தியம்] - Means a mad person. Thalai thattina kesu [தலை தட்டின கேசு / கேஸு] - Compound Tamil-English word.Thalai means head.Thattina means knocked for mad and kesu is from English case:- [Informal] A peculiar or eccentric person; a character Moothevi [மூதேவி] - A Hindu terminology based on a goddess of bad luck./'godess of ill-luck' Usually used by mothers to scold their children. [eg: 'கிழட்டு மூதேவி' 'கரி முண்டம்' னெறு அவர்கள் சர்வசாதாரணமாகப் பேசிக் கொண்டவர்கள்தான் .......] தரித்திரம் ='unlucky person' Naasam aruppu [நாசம் அறுப்பு] - Means destruction or destroyed to describe an event or situation that is looks defintely destructive to the user. Thadithchi [தடிச்சி] - Lit. meaning a fat woman can be used to describe a any woman who is alleged to be uppitty and unrepentant to the user. Thadiyan [தடியன்] - Lit. meaning a fat man can be used to describe any man who is alleged to be uppity and unrepentant to the user. Paraiya [பறையா / பறையன்] - Derived from a name of a Dalit like caste, used as a pejorative. [eg: வட இந்தியாவில், தீண்டத்தகாதவர்கள் என்று 'பறையா' என்று ... அப்பொழுது ஆரம்பித்த்து தான் 'பறையா' என்னும் சொல்.] Parachi [பறச்சி] - Female version of the above.[eg:வாடி போடி... பறச்சி நாயி, சிறுக்கி, தேவிடியா என பின்னூட்டத்திலேயே சரியாக வசைபாடித் தீர்த்துவிட்டான்.] [மிக உயர்ந்த சங்கத் தமிழ்ச் சொல்லான "பறை", ஆதிக்க மனப்பான்மையின் தவறான செயல்களால், இன்று, தாழ்வான சொல் போல் பிறழ்ந்து விட்டது! பாணன் " "பறையன்" துடியன் கடம்பன் இந்நான்(கு) அல்லது குடியும் இலவே - என்பது புறநானூறு! இன்றைய கால கட்டத்தில், பறையன் / பறைச்சி என்பது வசைச்சொல்!] Naye [நாயே] - Derived from the Tamil word for a dog, can be used as a combined word such as paranaye or sakkilinaye as a pejorative.[eg:நீ ஒரு நாயி. ஏன் இப்படி கத்திக்கிட்டே இருக்கே? 'You are a dog. Why are you screaming all the time'.] Sorinaye [சொறி நாயே] means a dog that has a skin problem. Madaiyan [மடையன்] - Lit. meaning stupid.'senseless-male' - மடச்சி 'senseless-female' கிறுக்கன் 'insane (male)', கிறுக்கி 'insane (female)'. Muttal [முட்டாள்] - Lit. meaning stupid. Vengayam [வெங்காயம்] - Lit. meaning onion to denote there nothing inside the denoted persons brain. Stupid is the closest meaning. Uricha vengayam [உரிச்ச வெங்காயம்] means scale removed onion to denote a person who is stupider. Thevangu [தேவாங்கு] - Derived from Tamil name of a animal Loris which hangs upside down to denote a persons stupidity. Loosu [லூசு] - Means a stupid person, derived from English loose screw in ones head. கழுத்தறுப்பு 'boring person' lit. one who would cuts the neck Konangi [கோணங்கி / lunatic] - Origin unknown, means a stupid person. Paradesi [பரதேசி] - Lit. mean foreigner. Used to denote a not-liked person. Panchapparadesi [பஞ்சப்பரதேசி] Literally a starving foreigner to denote a highly not liked person. [eg: பரதேசியாய்ப் பல ஊர்களில் சுற்றினார் (Like a pilgrim/nomad, he wandered around) Nappi [நப்பி / கஞ்சன்] - Lit. meaning stingy person can be used as Nappi doosu and Nappi pandaram. Kallabaduva [கள்ளவடுவா] - Kalla means a thief. Baduva meaning unknown, can be derived from Vaduga for Telugu person. Used also by adults for children as a term of endearment. Kallarascal [கள்ளராஸ்கல்] - Another compound English- Tamil term. Means a thieving trouble maker. Ponnaya [பொண்ணையா] or Ponce' - For a male who behaves like a female also used amongst the Sinhalese. Maramandai [மரமண்டை] - For a thick skulled person or a person who doesn't care about insults or is not smart. Saniyan [சனியன்] - Derived from the Hindu astrological term for planet Saturn which is considered to be very hostile to the well being of people. Used by mothers to scold their children. Mundam [முண்டம்] - Lit. meaning headless corpse for stupid person. Solaavaari - Meaning unknown used for a person trying get ahead without waiting his / her turn. Sampirani [சாம்பிராணி] - Derived from item used in Hindu rituals which burns up after use. Someone who is useless. Kannadi polanga [கண்ணாடி பொலங்க] - One of the rare Tamil-Sinhalese compound swear words. To ridicule a person wearing specktacles or glasses. Kannadi means glass and polanga is potentially from Sinhalese for a snake. Used exlusively in Colombo area. Sandala [சண்டாள] - Anyone who has done something perceived to be bad. Derived from Sanskrit Chandala [eg: “சண்டாள, ஏன்டா இப்படி பண்ணிக்கிற” என் பாட்டியும் கிட்டதட்ட அது போலத்தான்...........] ..................................................................... Attam [ஆட்டம்] - Lit. meaning dance, for a person who is a show off.[eg: இந்த ஆட்டம் போதுமா?] Andavane [ஆண்டவனே] - Similar to exclamation Oh god Appanne [அப்பனே ] - Same as above but means Oh father[eg: அப்பனே! நீயா கேட்டாய்?] Isaku pisaku [இசகு பிசகு] - Something out of the ordinary usually related to censored behaviour.[eg: கிரீஸ் மனிதரின்ரை பிரச்சனையாலை தாயகத்திலை சனங்கள் இசகு பிசகாக ..... ] Karaicchal [கரைச்சல் - Means problem [eg:பகைவர்களின் கரைச்சல் கூடும்] Kilu kiluppu [கிளு கிளுப்பு] - Means titillation, both sexual and asexual context.[eg:இவர்களது கிளு கிளுப்பு வேலைகளில் இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டு எங்கோ தொலைந்து போகக்கூடாது அல்லவா? ] Siva perumane [சிவ பெருமானே] - A word derived from Shiva a popular Hindu deity, used at the end of sentences to indicate some discomfort or end of a task. Used by all age groups but mostly by the elderly. Can also be Sivane[சிவனே]. Kaacha [கச்சை / கச்சு] - Under pants[eg:குறிஞ்சி நிலத்தலைமகன் (காதலன்) நுண்ணிய வேலைப்பாடமைந்த கச்சையைக் கட்டியிருந்தான் (குறிஞ்சி, அடி.125) Kosu kadi [கொசு கடி] – Lit. Meaning, Mosquito bite to indicate a person is just annoying as such Kadiyan [கடியன்] – Lit. meaning a biter to indicate an annoying person / a cruel man [eg:27 வயசு தடியன்.. மனசளவுல பொடியன்.. பேசினா கடியன்.. கோவம் வந்தா வெடியன்] Nariyan [நரியன்] – Lit. meaning a male Fox, to indicate a cunning person[eg:உனக்கென்ன விசரோ . அவன் JR பொறுத்த நரியன் .எல்லாம் அடக்கி ஒடுக்கி போடுவன் என்றார் .] Kummalam [கும்மாளம்] – Lit. meaning dance, derived from a folk form to indicate too much fun [eg: பெண்களுடன் கும்மாளம் அடிக்கும் இவன் யார் தெரியுமா......???] Nalla thanni [நல்ல தண்ணி] – Lit meaning, good water, to indicate one had too much alcohol to drink Nalla veri [நல்ல வெறி] – Lit meaning one who is highly intoxicated [eg:"கொப்பர் ஏன் உனக்கு நேற்று அடிச்சவர்?" என்று ஒரு இடைச்செருகல் போட்டான் ரவி."நல்ல வெறி போலை.." ஏற்றினான் குஞ்சன்] Nalla attam [நல்ல ஆட்டம்] – Lit. good dance to indicate too much fun 'Ariya koothu [ஆரிய கூத்து] – Derived from a folk dance variety to mean too much fun at the expense of prudence.[eg: ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே! – காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே!] Periya pahudi [பெரிய பகிடி] – Lit. meang big humor to indicate good humor or interesting person [ eg: ... அதில் பெரிய பகிடி என்னவென்றால் அங்கே பஜனை நடக்கும்போது மின் துண்டிக்கப்பட்டிருந்தது.] Pokku vaakku [பொக்கு வாக்கு] - Unknown origin to indicate no rational in actions [pokku (பொக்கு) - pokkai (பொக்கை) means emptiness or hollow & வாக்கு [ vākku ] , word , speech , வார்த்தை ] Machchan [மச்சான்] – Derived from cousin to indicate a friend also used amongst the Sinhalese Missi [மிஸ்ஸி] – Derived from English Mistress to indicate an girl who is not behaving or even as an endearment term[eg: எனக்கு மிக்ஸி வேணாம், மிஸ்ஸி தான் வேணும்,] Pudunkki [புடுங்கி] / Pudukki – Lit. meaning one who is plucking to indicate an annoying person [eg: என்ன பெரிசா புடுங்கிட்டெ? 'what (the hell) did you make a big thing of? (lit. what did you pull that was so big?) ] Amukku [அமுக்கு] – Lit. meaning submerge to indicate one who is hiding something[eg:விளம்பரங்களையும் ஒரு அமுக்கு அமுக்கியாச்சு ...] Sooran [சூரன்] - Derived from Sanskrit Asura to indicate a very capabale person. Opposite of its original meaning.[eg: துப்பாக்கி சூரன்!, gunner king., ] kiLambu, kaaththu varattum [கிளம்பு, காத்து வரட்டும்] - a decent way of saying that your words are not making any sense and you better shut up and get lost [eg:'கிளம்பு காத்து வரட்டும்' என்று பதில் சொல்லிவிட்டு தன் வேலையப் பார்ப்பான். இதன் பொருள் 'உன் வெட்டிப் பேச்சை நிறுத்தி விட்டு நீ கிளம்பினால் எனக்கு கொஞ்சம் நல்ல காற்றாவது கிடைக்கும்' என்பதாகும்] Pannadai [பண்ணாடை] - lunacy indefined [eg: முதலில் அதெற்கெல்லாம் நிஜமாகவே சக்தி வேண்டும், அந்த கண்றாவி சக்திதான் எந்த பண்ணாடை சாமியாருக்கும் இல்லையே?] Punnaku [புண்ணாக்கு] - Useless [eg: புலம் பெயர்ந்த புண்ணாக்கு ஊடகங்களில் இருந்து புலம்பும் புண்ணாக்கு ஆய்வாலர்களால் அவலப்படும் தமிழர்கள்] Ravudi [ரவுடி] - Troublesome Thalai [தலை] - The Head (boss, one and only leader etc.) Vennai [வெண்ணை] - Useless guy [eg: "போடா வெண்ணை, அந்த லென்சை காலை,மாலை ரெண்டு நேரமும் கழுவனும்,அப்புறம் ..] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  10. "நில்லாமல் நிற்கும் உன்கால் அழகினால்" [அடி எதுகை 'ல்,ள்,ழ்' யிலும் இணை மோனை: (1,2) லும் பாடல் தரப்பட்டுள்ளது] "நில்லாமல் நிற்கும், உன்கால் அழகினால் சொல்லாமல் சொல்லும், உன் பார்வையால் கொல்லாமல் கொல்லும், உன் வனப்பினால் செல்லாமல் செல்லும், என்னைத் தடுக்கிறாய்!" "துள்ளாமல் துள்ளும், என் உள்ளத்தில் கிள்ளாமல் கிள்ளி, ஆசை கூட்டி அள்ளாமல் அள்ளி, அன்பைக் கொட்டி தள்ளாமல் தள்ளி, என்னை அணைக்கிறாய்!" "பள்ளியில் படிக்காத, பாடம் சொல்லி வள்ளல்கள் வழங்காத, காதல் கொடுத்து நுள்ளாமல் நுள்ளி, ஊடல் கொண்டு பள்ளத்தில் பதுங்கி, என்னை ஏங்கவிடுகிறாய்!" "மல்லாந்து மஞ்சத்தில், படுத்து இருந்து கல்லாமல் கற்ற, லீலைகளைக் காட்டி எல்லோரும் எண்ணாத, அரட்டை அடித்து எல்லைகளை எடுத்தெறிந்து, என்னை வீழ்த்துகிறாய்!" "தாள்களில் தாரமாய், ஓவியம் வரைந்து வேள்விகள் வேண்டாமல், வரங்கள் தந்து கேள்விகள் கேட்காமல், உன்னையே தந்து வெள்ளத்தால் வெளுக்காத, வாழ்வு தருகிறாய்!" "வள்ளங்களில் வந்து, கரை சேரும் கொள்ளகை கொண்ட, தந்திர பறவையாய் கள்ளத்திலும் கண்ணியம், கடைப் பிடித்து தோள்களில் தோரணமாய், சாயா காரிகையோ!" "ஆழ்ந்த ஆசையும், இளமையும் சேர வீழ்ந்தும் வீழாமலும், உன்னை ரசித்து தாழ்ந்த தாழ்வாரத்தில், குந்தி இருந்து வாழ்க வாழ்கவென, உன்னை வாழ்த்துகிறேன்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  11. "அஞ்சலி" [உண்மையான தொல்லியல் மற்றும் வரலாற்றை நிலைநாட்டிட ...] கதைகளைக் கேட்டு வளரும் மனிதர்களாகிய நாம், வரலாறும் கதைகள் போலவே இருக்கவேண்டும் என்று பெரும்பாலோனோர் அதிலும் ஆளும் அரசும் அரசு சார்ந்த மக்களும், தங்கள் இருப்பை திடம் ஆக்க ஆசைப்படுகிறார்கள். வரலாறு தமக்குப் பிடித்தாற்போல், தமக்கு புகழ் சேர்ப்பது போல இருக்கவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். அது மட்டும் அல்ல, தமக்குப் பிடித்த தரப்பே வெல்லவேண்டும். எதிர்த்தரப்பு தோற்கவேண்டும். என்றெல்லாம் தமக்குள்ள இன்று வரலாற்றுக்கு வரையறைகள் தாமே விதிக்கிறார்கள். பிடிக்காத கதையைக் கேட்கும் குழந்தை அந்தக் கதையைக் கேட்பதை நிறுத்தி வேறு கதை கேட்டு அடம்பிடிப்பது போல், பிடிக்காத உண்மையான வரலாற்றை பொய் என்று முத்திரை குத்தி, அதற்கு மாற்றாக தமக்குப் பிடித்தாற்போல் இன்னொரு ‘வரலாற்றை’ கட்டியெழுப்ப முயல்கிறார்கள். அதை உண்மை என்று நிறுவ, பொய்களையும் புரட்டுகளையும் செய்து படாதபாடு படுகிறார்கள். அப்படியான நிகழ்வு ஒன்று தான் இன்று முல்லைத்தீவு - குருந்தூர்மலை பகுதியில் நடைபெறுகிறது. அதன் அருகில் பசுமையான வயல்களுக்கும், தென்னை மரங்களுக்கும் நடுவே அமைந்திருக்கும் அழகிய ஒரு கிராமத்தில் அஞ்சலி என்ற இளம்பெண் வாழ்ந்து வந்தாள். அஞ்சலி தனது ஆர்வமுள்ள மனதாலும், கற்றலில் தீராத ஆர்வத்தாலும் கிராமம் முழுவதும் அறியப்பட்டார். அவளுடைய பெற்றோர், எளிய விவசாயிகள், தாங்கள் பெற்றிராத கல்வியை அவளுக்குக் கொடுக்க வேண்டும் என்று எப்போதும் கனவு கண்டார்கள். ஒவ்வொரு காலையிலும், அஞ்சலி குறுகிய மண் பாதைகளில் நடந்து செல்வார், அவரது பள்ளிப் பையை முதுகில் தொங்கவிட்டு, சிறிய கிராமப் பள்ளிக்குச் செல்வார். அவரது ஆசிரியை, மிஸ் கமலா, அஞ்சலியின் திறனை ஆரம்பத்திலேயே உணர்ந்து, பெரிய கனவு காண ஊக்குவித்தார். அஞ்சலியின் விருப்பமான பாடம் அறிவியல், பள்ளிக்குப் பிறகு மணிக்கணக்கில் பிரபஞ்சத்தின் மர்மங்கள், உயிரியலின் அதிசயங்கள், தொழில்நுட்பத்தின் அற்புதங்கள் ஆகியவற்றைப் படிப்பார். என்றாலும் அறிவியல் [விஞ்ஞானம்] முதன்மையாக இருந்தாலும், அங்கு தினம் தினம் ஏற்படும் அமைதியின்மையைப் பார்த்து பார்த்து, அதனால் அவள் மனதில் தோன்றிய கேள்விகளுக்கு சரியான பதிலை அறிந்து கொள்ளும் ஆர்வம் தொல்லியல், வரலாறு போன்றவற்றிலும் அவளின் கவனத்தை தூண்டியது. ஒரு நாள், அவரின் வீட்டிற்கு கொழும்பில் வாழ்ந்த அஞ்சலியின் மாமா ராஜன், பல ஆண்டுகளுக்குப் பிறகு தன் தங்கை குடும்பத்தை பார்க்க வந்தார். அவர் ஒரு வெற்றிகரமான பொறியாளர். அவர் தன் தங்கையுடன் கதைக்கும் பொழுது, கொழும்பு ஒரு பரபரப்பான நகரமாகவும் இன்று பல உயரமான கட்டிடங்கள் கொண்டு இருப்பதுடன் உயர்கல்வி பயிலுபவர்களுக்குக் நிறைய வாய்ப்புகள் அங்கு இருப்பதைப் பற்றியும் சொன்னார். அஞ்சலி தாயின் பக்கத்தில் இருந்து மிகுந்த கவனத்துடன் கேட்டாள், அவள் கண்கள் உற்சாகத்தில் மின்னியது. மாமாவைப் போலவே தானும் இன்ஜினியர் ஆக வேண்டும் என்றும் அதே நேரம் தன் அயலிலும் மற்றும் வடக்கு கிழக்கிலும் நடைபெறும் தொல்லியலின் முடிவுகளின் உண்மையான வரலாற்றை சரியாக அறிந்து, உண்மையை உண்மையாகவே மக்களுக்கும் அரசுக்கும் எடுத்துரைக்கவேண்டும் என்றும் அப்போதே முடிவு செய்தாள். மகாவம்சம் முதலான பாளி நூல்கள் யாழ்ப்பாணக் குடாநாடு, அதற்கண்மையிலுள்ள தீவுகள் ஆகியவற்றை நாகதீப என்ற பெயராற் குறிப்பிடுகின்றன. அதனை மணிமேகலை நாகநாடு எனக் குறிப்பிடுகின்றது. ஆனால் அது “ணாகதீவு” [நாகதீவு] என்னும் பெயரால் அங்கு வாழ்ந்தவர்களிடையே வழங்கியது என்பதை வல்லிபுரம் பொன்னேட்டின் மூலம் அறியமுடிகின்றது. மேலும் இலங்கையின் பூர்வீக குடிகளாக இயக்கர்களும் நாகர்களும் இருந்தார்கள் என்பதும் அவர்களுக்கான அரசுகளும் இருந்திருக்கின்றன என்பதும் இவர்கள் இருவரும் நாகர் குலம் இயக்கர் குலம் என்பதில் வேறுபட்டாலும் ஒரே இன-மொழிக்(தமிழ்) குழுமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் உண்மையாகும். அது மட்டும் அல்ல, நாகரிக வளர்ச்சிக்கு ஏதுவான உற்பத்தி முறையினையும் தமிழ் மொழியினையும் இலங்கையில் அறிமுகம் செய்த நாகர் மூலமாகவே, கிருஸ்துக்கு முன்பே, குறைந்தது கி மு 300 ஆண்டுகள் அளவிலேயே நாக வழிபாடும் சிவலிங்க வழிபாடும் கூட இலங்கையில் பரவலாயின என்பது வரலாற்றாசிரியர்களின் முடிவும் ஆகும். கிமு. மூன்றாம் நூற்றாண்டிலே பௌத்த சமயம் பரவியதும் அதில் நாகரும் அல்லது தமிழரும் ஈடுபாடு கொண்டனர். சமுதாயக் கட்டமைப்பிலே பல்வேறு நிலைகளிலுள்ள நாகர் அல்லது தமிழர் பௌத்த சங்கத்தாருக்கு வழங்கிய நன்கொடைகளைப் பற்றிய குறிப்புக்கள் அவற்றிலே பதிவுசெய்யப்பட்டுள்ளன. பௌத்த துறவிகளுக்கு உறைவிடங்களாகக் குகைகளை வழங்கியுள்ளனர். அவர்களிற் சிலர் அரசர்; வேறுசிலர் கமஞ்செய்வோர்; இன்னுச் சிலர் உலோகத் தொழில் புரிவோர். நாகநகர், நாககுலம் என்பன பற்றிய குறிப்புகளும் கல்வெட்டுகளிற் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத் தக்கது. நாகர் வழங்கிய நன்கொடைகளைப் பதிவு செய்யும் கல்வெட்டுகளிலே பல தமிழ்ச் சொற்கள் பிராகிருத மயமான கோலத்திற் காணப்படுகின்றன. மேலும் அன்றே இலங்கைத் தமிழரின் வரலாற்று ரீதியான வதிவிடங்களான வட, கிழக்கு மாகாணங்களில் அடங்கிய நிலப்பகுதிகளில் தமிழ் மொழியின் செல்வாக்கு மேலோங்கிவிட்டது. மேலும் குறிப்பாக தமிழகத்தில் கிபி ஏழாம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் தோன்றுவதற்கு முன்னர் ஒரு செல்வாக்கு உடைய மதமாகவே தமிழ் பௌத்தம் தமிழகத்தில் காணப்பட்டது. எனவே அதன் தாக்கம் வடக்கு கிழக்கு தமிழர்களிடமும் ஏற்பட்டிருக்கும் என்பதில் ஐயம் இல்லை. எனவே வடக்கு கிழக்கில் காணப்படும் தொல்லியல் பௌத்தஆதாரங்கள், முழுக்க முழுக்க தமிழ் பௌத்த மக்களின் என்பதே உண்மை. ஆனால் தொல்லியல் திணைக்களம் அதற்க்கு சாயம் பூசுவதே, அங்கு ஏற்படும் அமையியின்மைக்கு முழு முழு காரணம் என்பதை அஞ்சலி அந்த இளம் வயதில் முழுதாக அவளால் அறிய முடியவில்லை. என்றாலும் நம்பிக்கையும் ஆர்வமும் அவளுக்கு இருந்தது. பல மாதங்களாக, அஞ்சலி முன்னெப்போதையும் விட கடினமாக உழைத்தார், படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதேநேரம் அவள் நெஞ்சமும் மாறியது. இப்ப தொல்லியல் மற்றும் வரலாறு அவளிடம் முதலிடத்தை பெற்றுக்கொண்டது. சாதாரண வகுப்பு படிக்கும் காலத்திலேயே, அவையைப் பற்றிய நூல்களிலும் செய்திகளிலும் முழுக்கவனம் செலுத்த தொடங்கினாள். அவளுடைய பெற்றோரும், ஆதரவாக இருந்தாலும், அஞ்சலியை உயர் வகுப்பிற்கு மாமாவிடம் கொழும்பிற்கு அனுப்புவதில் பொருளாதார ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் சவாலாக இருக்கும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால் அவளது அர்ப்பணிப்பைக் கண்டு அவர்களின் நெஞ்சமும் கொஞ்சம் மாறியது. என்றாலும், ஒரு நாள் மாலை, அஞ்சலி அவர்கள் வீட்டு முற்றத்தில் இருந்த பழைய ஆலமரத்தடியில் அமர்ந்திருந்தபோது, அவளுடைய அப்பா ரவி அவளை நெருங்கினார். அவர் அவள் அருகில் அமர்ந்தார், மறையும் சூரியன் அப்பொழுது முற்றத்தில் நீண்ட நிழல்களை வீசியது. அது அவர்களுக்கு வெக்கையை குறைத்து இருவரும் வசதியாக உரையாட வழிவகுத்தது. "அஞ்சலி" என்று மெதுவாக ஆரம்பித்தார், "உன் அம்மாவும் நானும் பேசிக்கிட்டு இருக்கோம். நீ எவ்வளவு கொழும்புக்கு போய் படிக்கணும்னு எங்களுக்கு தெரியும். ஆனா நீ வீட்ல இருந்து ரொம்ப தூரமா இருக்கனும்னு எங்களுக்கும் கவலை. இது பெரிய முடிவு, நீங்கள் உண்மையிலேயே அதற்குத் தயாராக இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அப்ப தான் நாமும் நெஞ்சம் மாறி, முடிவு எடுக்க முடியும்" அஞ்சலி தன் தந்தையைப் பார்த்தாள், அவள் கண்களில் இருந்த உறுதி அசையாது. "அப்பா, இது ஒரு பெரிய படி என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன், எங்கள் கிராமத்திற்கும் ஏன் பொதுவாக இங்கு நடைபெறும் தொல்லியல் அகழ்வு ஆராச்சி என்ற பெயரில் நடைபெறும் தில்லு முல்லுகளை சரியாக விளங்கவும் மற்றும் அதை, தக்க காரணங்களுடன் எம் மக்களிடம் கொண்டு சேர்க்கவும் விரும்புகிறேன். தமிழர்களிடையே நம் அனைவருக்கும் உதவக்கூடிய அறிவை இலகுவாகவும் வெளிப்படையாகவும், கா. இந்திரபாலா, ப புஸ்பரட்ணம் ... போல மீண்டும் கொண்டு வர விரும்புகிறேன். நான் உங்களைப் பெருமைப்படுத்துவேன் என்று உறுதியளிக்கிறேன்." ரவி சிரித்தார், மனதில் பெருமிதம் பொங்கியது. "எங்களுக்கு தெரியும், அன்பே. ஆனால் நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் எங்கு சென்றாலும், இந்த கிராமம் எப்போதும் உங்கள் வீடாக இருக்கட்டும்." நாட்கள் செல்ல செல்ல அஞ்சலி கிளம்புவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. முழு கிராமமும் ஒன்று கூடி அவளுக்கு ஆதரவாக, அவளது பயணத்திற்கான பணம், உடைகள் மற்றும் பொருட்களை சேகரித்தது. அவள் கொழும்புக்குப் புறப்பட்ட நாள் கண்ணீரும், அணைப்பும், வாழ்த்துக்களும் நிறைந்து அந்த கிராமம் முழுவது இருந்தது. நகரத்தில் அஞ்சலி பல சவால்களை எதிர்கொண்டார். வேகமான வாழ்க்கை, அறிமுகமில்லாத முகங்கள் மற்றும் கடுமையான படிப்புகள் அவளுடைய நெகிழ்ச்சியை சோதித்தன. ஆனால் அவள் தன் கிராமத்தின் நினைவுகளாலும், தன் பெற்றோருக்கு அளித்த வாக்குறுதியாலும் உந்தப்பட்டவள் என்பதால் என்றுமே தளரவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு, அஞ்சலி யாழ்ப்பாணத்திற்குத் திரும்பினார், ஒரு தொல்லியலாளராக மட்டுமல்ல, ஒரு உத்வேகமாகவும் கொண்ட வரலாற்று விரிவுரையாளராகவும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பதவியேற்றார். அவர் தனது புதிய யோசனைகள், புதிய நுட்பங்கள் மற்றும் அதன் மூலம் தொல்லியலின் உண்மையான வெளிப்பாடை மேம்படுத்த புதுமையான தரவுகளை கொண்டு வந்தார். ஒரு காலத்தில் அவளை கண்ணீர் மல்க கொழும்புக்கு வழி அனுப்பி வைத்த கிராம மக்கள், இப்போது அவளை இருகரம் நீட்டி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். ஆனால், அவள் தமிழ் மக்களை விழ்ப்புணர்வு செய்ய முடிந்ததே தவிர, அதற்கு மேல் செல்ல முடியவில்லை. அரசு தமிழ் தொல்லியலாளர்களையும் வரலாற்று ஆசிரியர்களையும் புறக்கணித்து, தன் பயணத்தை வடக்கு கிழக்கில், முன்போலவே பயணித்துக் கொண்டு இருந்தது?? கசப்பான உண்மையை நாம் முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். கதையும் வரலாறும் முற்றிலும் வேறுவேறானவை. கதைகளை யாரும் உருவாக்கிக் கொள்ளலாம். அதை நம்புவதும் மறுப்பதும் எவருக்குமுள்ள சுதந்திரம். ஆனால், வரலாறு கதைகளை விட மெய்யானது. பக்கச்சார்பாலோ, நம் தனிப்பட்ட விருப்பு வெறுப்பாலோ என்றோ நிகழ்ந்த வரலாறு மாறாது, மாறவும் கூடாது. விஞ்ஞானத்தால் அங்கீகரிக்கப்பட்ட கருவிகளின் மூலம் நிரூபிக்கப்படுவதால், வரலாறு திருத்தமானது. எவர் மீதும் ஓரம் சாராது வெளிப்படுவதால் அது இரக்கமற்றது. இரக்கமற்றது என்பதாலேயே அது தூய்மையானது என்பதில் அவளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. கட்டாயம் ஒரு நாள் உண்மை மலரும், அந்த நாளே நாம் எல்லோரும் இலங்கையராக பயணிக்கும் நாள். அவள் தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள். அது வரை மக்கள் இயக்கமாக, உண்மையை வெளிப்படுத்த, இளம் துடிப்புள்ள அரசியல் வாதியாக, உண்மையான தொல்லியல் மற்றும் வரலாற்றை நிலைநாட்டிட அவள் நெஞ்சம் துணிவு கொண்டு மீண்டும், இன்னும் ஒரு பரிமாணத்தில் மாறியது!! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  12. "இடையது கொடியாய் இளமையது பொங்க" "இடையது கொடியாய் இளமையது பொங்க நடையது அன்னமாய் நயனம் இமைத்து உடையது ஜொலிக்க உச்சாகம் தந்து சடையது அலைபாய சஞ்சலம் தந்தவளே!" "அழகில் மயிலாய் அன்பில் தாயாய் ஆனந்தத் தேனாய் ஆசைக்கு நாயகியாய் வானின் தேவதையாய் வாழ்க்கைக்கு துணையாய் தன்னையே தந்து தந்திரமாய் பறித்தவளே!" "பணிந்து உன்னை பலவாறு காட்டி பண்பின் திறனை பலவாறு விளக்கி பருவ எழிலை பலவாறு வீசி பந்தத்தை ஏற்படுத்தி பத்தினியாய் வந்தவளே!" "என்னை அறிந்து எல்லாம் தந்து இன்பம் அளித்து இடர்கள் அகற்றி சிந்தை தெளிவாக்கி சிற்றறிவை பேரறிவாக்கி துன்பம் களைய துணை கொடுத்தவளே!" "ஏகாந்தம் இனிதென ஏற்று வாழ்ந்தவனை வலிந்து அணைத்து வலிகள் தணித்து காதோடு சொல்லி காமம் தெளித்து குமிழி வாழ்க்கையை குதூகலம் ஆக்கியவளே!" "வாழ்வின் அர்த்தத்தை வாழ்த்தி எடுத்துரைத்து வசந்தத்தை ஏற்படுத்தி வருத்தம் நீக்கி களைப்பும் சோர்வும் கலந்த மனதை சிரிப்பு பூக்களால் சிந்தையை மயக்கியவளே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  13. "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 23 ஒருவனது அல்லது ஒருவளது உடலை மறைக்கும் உடை ஒன்று இல்லாமல் எவராலும் இன்று ஒரு நாகரிக மனிதனை சிந்திக்க முடியாது. சூரியன் மற்றும் மழையின் தாக்கத்தில் இருந்து தம்மை பாதுகாக்கும் ஒரு தேவையின் நிமித்தமே முதல் முதல் ஆடை உருவானது எனலாம். எனினும் நாளடைவில் அந்த ஆடைகள் வளர்ச்சி அடைந்து ஒரு முழுமை அடைந்து அந்த மனிதனின் வாழ்க்கையில் அது ஆழமாக பதியப் பட்டு, அதன் விளைவாக, அந்த குறிப்பிட்ட இனக் குழுவுக்கு அல்லது சமுதாயத்திற்கு அல்லது நாட்டுக்கு என சிறப்பு ஆடை பழக்க வழக்கமாகி, அது ஒரு தனி மரபாக பின்னாளில் மாறியது எனலாம். உதாரணமாக, தமிழில் ஒரு பழமொழி உண்டு: ‘ஆள் பாதி ஆடை பாதி’ என்று. அதாவது, ஒருவர் அணிந்திருக்கும் ஆடை அவரது தன்மை, தரம், சார்பு போன்றவற்றை அல்லது இயல்பை எடுத்து இயம்பும் என்பர். ஆடை என்பது ஒருவரை அடையாளம் காட்டுவதற்குரிய ஒன்றாக விளங்குகிறது. ஒருவர் அணிந்திருக்கும் ஆடையை அடிப்படையாகக் கொண்டு, அவர் எந்த நாட்டைச் சார்ந்தவர், எந்தச் சமயத்தைச் சார்ந்தவர், எத்தகைய தட்பவெப்ப நிலையில் வாழ்கின்றவர் என்பன போன்றவற்றை அறிய இயலும். அதோடு மட்டுமல்லாமல், ஒருவர் அணியும் ஆடையும் ஒருவரது பண்பாட்டை வெளிப்படுத்தும். தமிழர் மற்றும் இந்தியர் உடைகளின் வரலாறு, கிமு 2500 முன்னர் சிந்துவெளி நாகரிகத்தில் பருத்தியை சுழற்றல், நெய்தல் மற்றும் சாயமிடல் [spun, woven and dyed] ஆகியவற்றிலிருந்து தொடங்குகிறது. அங்கு கண்டு எடுக்கப்பட்ட சிறு உருவச்சிலைகளில் (figurines), உதாரணமாக ஒரு மத குரு அரசன் ["Priest King"], ஒரு சேலையால் உடம்பை சுற்றி போர்த்து (wrapped around the body) இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. இது தமிழரின் மூதாதையரான சிந்து சம வெளி மக்கள் எப்படியான உடை அணிந்தார்கள் என்பதை காட்டுகிறது. எனினும் நாம் இன்றைய தமிழகத்தில், இலங்கையில், எமது பார்வையை திருப்பும் பொழுது, முதலில் சங்க காலத்தில், எதை அணிந்தார்கள் என்று பார்த்தால், எமக்கு உதாரணமாக வரும் முதல் சங்க பட்டு, புறநானுறு 189 ஆகும். இதில் சிந்து வெளி தொடர்ச்சியை அப்படியே காண்கிறோம். கடல் சூழ்ந்த உலகம் தனது பொறுப்பின் கீழ் வரவேன்டும் என்று துடிக்கிற வேந்தருக்கும், இரவு பகல் தூங்காமல் காட்டில் வேட்டையாடித் திரிகிற கல்வி அறிவில்லா முரட்டு மனிதனுக்கும் அத்தியாவசியத் தேவைகள் இரண்டே. பசியைப் போக்க ஒரு நாழித் [கால் படி] தானியம் மற்றும் மேலும் கீழும் உடுக்க இரண்டு உடை என்று "தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி, வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும், நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான், கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும், உண்பது நாழி; உடுப்பவை இரண்டே"; என அறிகிறோம். அதாவது சங்க தமிழரின் உடை இரண்டு துண்டுகளையே கொண்டிருந்தன. ஒன்று வேட்டி மாதிரி ஒரு கீழாடை, மற்றது சால்வை மாதிரி, அதிகமாக தலைப்பாகை போல, ஆண்கள் உடுத்தனர். ஆனால் பெண்கள் இடுப்பிற்கு கிழே மட்டுமே பொதுவாக மறைத்தனர் அல்லது தமது உடலின் கூடுதலான பகுதிகளை மறைக்கக் கூடியதாக அணிந்தார்கள். மார்பை மாலைகளாலும் சந்தனம் பூசியும் அலங்கரித்துக் கொண்டனர். மரப்பட்டைகள் ஆடையாக அணியப்பட்டமை குறித்தும் பெண்கள் தழையுடை அணிந்தமை குறித்தும் சங்க இலக்கியம் பேசுவதுடன் சங்க காலத்திலேயே, காலப்போக்கில் நூல் இழைகள் உருவான பிறகு, பருத்தியில் இருந்தும் ஆடைகள் செய்தனர் என அறிகிறோம். அதிகமாக,செல்வர்களும் அரசர்களும் அழகிய வேலைப்பாடு மிக்க நுண்ணிய பட்டாடைகளை உடுத்தனர். பொதுவாக மற்றவர்கள் எல்லோரும் இரண்டு துண்டு துணியுடன் தம்மை திருப்தி படுத்திக் கொண்டனர். அன்று வேட்டி போல் இடையில் கட்டும் ஆடையை காழகம் என்று அழைக்கப்பட்டுள்ளது. காழகம் என்பதற்கு அரையில் கட்டப்பெறும் ஆடை என்பது பொருள். பண்டைய கோவில் சிற்பங்கள் ஓவியங்கள் வெறும் கற்பனையல்ல. அவை மேலாடை அணியும் நாகரிகம் வந்த பின்னரே முன்னைய நிலை இன்று ஆபாசமாகத் எமக்கு தோன்றுகின்றது. பெண்கள் கச்சைக்கு மேலாகச் சட்டை அணிவதும் சில நூற்றண்டுகளின் முன் தோன்றிய வழக்கமே ஆகும். கண்ணியமாக உடையணிவது என்பது காலத்துக்கு ஏற்பவும், இடத்துக்கேற்பவும், சமூகத்துக்கு ஏற்பவும் மாறுபட்டு வந்துள்ளது என்பதே உண்மை. இன்றைய வழக்கம் போல், வேட்டி, சேலை அணிதலைப்பற்றி சிந்திக்கிற போது கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்குப்பின், சிலப்பதிகார காலத்தில் அது பொது வழக்கத்திற்கு வந்துவிட்டது என்பர் இலக்கிய ஆய்வாளர்கள். எனவே இவை நீண்ட நெடுங்காலமாகப் பின்பற்றப்படும் ஒரு பழக்கம் அல்லது மரபு ஆகும். உதாரணமாக, சிலப்பதிகாரம் 4. அந்தி மாலைச் சிறப்பு செய் காதையில் , “அம்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய, மென் துகில் அல்குல் மேகலை நீங்கக், கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்“ என்ற வரி அழகிய சிவந்த சிறிய அடிகள் அணியுஞ் சிலம்பினை ஒழியவும், மெல்லிய துகிலை யுடுத்த அல்குலிடத்து மேகலை (waist ornament for women- ஒட்டியாணம்) நீங்கவும், கொங்கை முற்றத்தில் குங்குமம் பூசாளாய், என்று உரைக்கிறது .இதன் பின் வந்த, ஆண்டாள், “இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம், வந்து இருந்து என்னை மகள் பேசி மந்திரத்து, மந்திரக் கோடி யுடுத்தி மண மாலை, அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்“ என்று நாச்சியார் திருமொழியில், துர்க்கை என்கிற நாத்தனார் கல்யாண புடைவை சாத்தி, இந்திரனும் மற்ற தேவர்களும் வந்திருந்து, தன்னை நாராயணனுக்கு மணமுடிக்கப் பேசுவதாய் பாடுகிறார். இப்பொதும் பெண்கள் தாலி கட்டும் நேரத்தில், பொதுவாக சிவப்பு நிற கூரைப் புடவை அணிந்தே திருமண மேடைக்கு வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. மற்றது, சங்க இலக்கியமான ‘பத்துப் பாட்டு’ தொகுப்பில் உள்ள பட்டினப் பாலையின் "துணைப் புணர்ந்த மடமங்கையர், பட்டு நீக்கித் துகில் உடுத்து,... " என்ற வரி அந்த காலத்திலேயே இரவி உடை [nightie] அணியும் மரபு இருந்ததை, மணமான மகளிர், பகலெல்லாம் அணிந்த பட்டாடையைக் கழற்றிவிட்டு, மென்மையான பருத்தி ஆடையாகிய துகில் அணிகிறார்கள் எனவும் எடுத்து காட்டுகிறது. இன்று சேலை அணிதல் தமிழ்ப் பெண்களுக்கு கலாசார முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது போலவே வேட்டி அணிவதும் ஆண்களுக்கு முக்கியமானதொரு பண்பாட்டுச் சின்னமாகவே விளங்குகின்றது. தட்ப வெப்ப நிலமைகளுக்கு உட்பட்ட நாடுகளில் வாழும் நாம் கனம் குறைந்த இலேசான ஆடைகளை அணிவது ஒன்றும் வியப்பில்லை. என்றாலும் பலர் இன்று இந்த பாரம்பரிய உடை , 'வசதி குறைவானது' என்று ஐயம் அடைகிறார்கள். ஆனால் ஊர்ப்புறத்தில் நாற்று நடுதல் முதலிய வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் இதை ஒரு வசதிக் குறைவு என்று ஒரு போதும் கருதுவது இல்லை. அவர்கள் ஓடினால் கூட அது அவர்களுக்கு இடையூறாய் இராது. நன்கு ஆராய்ந்து கண்டறிந்த உடுத்தல் முறை போலும். இன்று பலபேருக்கு அதுபோன்ற உடுத்தல் முறைகள் தெரியாமையே இதற்க்கு முக்கிய காரணம் ஆகும். எனவே சரியான சேலை, வேட்டி காட்டும் பழக்கமே தேவையானது. தொடக்கத்தில், சேலைக்கும் வேட்டிக்கும் பெரிய வேறுபாடு இல்லை. இவை உடலை சுற்றி அணியப்பட்டன, அவர்களுக்கு தையல் கலை தெரிந்து இருந்தும், நெகிழ்வுத்தன்மை மற்றும் வெவ்வேறு விதமாக ஒரு துணியாலேயே அணியும் படைப்பாற்றல் ஆகியவையை அது கொண்டு இருந்ததே (flexibility and creativity that draped clothing allowed), இந்த உடைகள், தைக்கப் படாமலே இன்றுவரை நிலைத்து இருந்தமைக்கு காரணமாகும். பண்டைய தமிழர் பெண்ணின் அழகை சிறிய இடை, பெரிய மார்பளவு மற்றும் பெரிய இடுப்பு (small waist and large bust and hips) கொண்டு அளந்தனர், இதற்கு சேலை ஒரு பொருத்தமான ஆடையாக, ஒரு பெண்ணின் இடுப்பை கச்சிதமாக, நேர்த்தியாக, பார்ப்பவர் கண்களுக்கு அம்பலப்படுத்துவதுடன் (it exposes the waist of a woman), இடுப்பு மற்றும் மார்பை, புடவை மடிப்பால் மேலும் வலியுறுத்தி (emphasizes the waist and bust with the pleated fabric), ஒரு பெண்ணின் அழகை துல்லியமாக காட்டுகிறது. இது ஒரு தைக்காத துணியாக (unstitched drape), உடுப்பவரின் உடல் தோற்றத்தை மேம்படுத்துவதுடன், பகுதியாக மட்டும் வயிற்றுப் பகுதியை மறைக்கிறது (partially covering the midriff), அப்படியே வேட்டியுடன் சால்வையை கம்பீரமாக ஆண்கள் அணிகிறார்கள். இந்த இரு உடைகளுமே மிக இலகுவாக வேலை ஆடையாகவோ அல்லது கொண்டாட்ட ஆடையாகவோ மாற்றக் கூடியவை (easily turned into working dress or party-wear). இன்று உலகத்தில் கிடைக்கும் ஆடைகளில் முழுநிறைவாக எல்லோருக்கும், எந்த வடிவத்திலும் எந்த அளவிலும் இருந்தாலும் பொருந்தக் கூடியது (one dress that is universal) எமது பாரம்பரிய உடையான வேட்டியும் சேலையும் தான் !. சரியாக இந்த உடைகளை கையாண்டால், அவை வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள், போன்றவற்றிற்கும் அணியலாம், ஏன் வேலு நாச்சியார், பெலவாடி மல்லம்மா, கிட்டூர் ராணி சென்னம்மா போன்றோர் குதிரையின் முதுகில் எதிரிகளுடன் போரிட்டது சேலை உடுத்துக் கொண்டு தான் ! எது எப்படியாயினும், ஒவ்வொரு நாட்டுக்கும் இனக்குழுக்கும், மரப்பட்டைகளும் தழைகளும் கட்டிக் கொண்டிருந்த காலம் முதல் இன்றுவரை, ஆடை என்பது அதன் தனி அடையாளமாகும். நம் முன்னோர்கள், இடுப்பில் ஒரு துண்டும், தோளில் துண்டும் அணிந்தவர்கள். அப்புறம் ஆண்கள் முழு வேட்டி ,சால்வை அதனுடன் மேல் சட்டை. பெண்கள் சேலை ரவிக்கை. இன்று நவீன தொழில் நுட்பத்தாலும், நூற்பாலைகள் (பஞ்சாலைகள்) மற்றும் செயற்கை நூல் இழைகளின் வருகையாலும், ஆடைகளின் உபயோகமும், வடிவமும், பயன்பாடுகளும் மாறி விட்டன. இச்சூழலில் உதாரணமாக, தமிழன் என்றால் வேட்டி, சட்டை, சேலை என்ற தனித்த ஆடை அடையாளம் சாத்தியமா? என்ற ஒரு கேள்வி வரலாம். பொதுவாக உடைகள் என்பது தேவை, வசதி சார்ந்த ஒரு பார்வையிலும், மற்றும் இன அடையாளம் சார்ந்த ஒரு பார்வையிலும் கருதப் படுகிறது. இவ்விரண்டுமே நாம் வாழும் அந்தந்த சூழலுடன் சம்பந்தப்பட்டவையே ஒழிய நிரந்தரமானவை அல்ல. எனவே இன்றைய தேவைக்காகவும் வசதிக்காகவும் நாம் நம் உடைகளைத் தேர்வுசெய்வது ஒன்றும் வியப்பில்லை. என்றாலும் இன்னொருபக்கம் உடை என்பது அடையாளம். எனவே திருமணங்கள் மற்றும் இது போன்ற தமிழர் சடங்குகளில் கட்டாயமாகவும், மற்றும் நாம் எம் தாயகத்தில் பல பொருத்தமான வேலை இடங்களிலும் அல்லது பொருத்தமான அன்றாட வாழ்க்கையிலும் நாம் நம் தனியடையாளத்தை பேணக்கூடியதாக உடைகளை அணிவோம். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 24 தொடரும்
  14. எல்லோருக்கும் நன்றிகள்
  15. "தமிழுடன் ஒரு விளையாட்டு" - 02 [பண்டைய காலத்து சுந்தர கவிராயர் தனிப்பாடல்] பண்டைய காலத்து சுந்தர கவிராயர் தனிப்பாடல் ஒன்றில் பதினொரு முறை 'மரம்' என்ற வார்த்தை திரும்பத் திரும்ப வருகிறது. ஒவ் வொருமுறையும் வெவ்வேறு மரத்தைக் குறிப்பதாக அமைந்து பொருள்படுகிறது. மரங்களைக் கொண்டு மன்னனின் வீரத்தையும், மகளிர் அவன் மேல் கொண்டுள்ள மதிப்பையும் விளக்குகிறார் சுந்தரகவிராயர். இவரது காலம், இடம் போன்ற வரலாற்று குறிப்புகள் ஒன்றும் அறியப்படவில்லை. "மரமது மரத்திலேறி மரமதைத் தோளில் வைத்து, மரமது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்தி, மரமது வழியே சென்று, வளமனைக் கேகும் போது, மரமது கண்ட மாதர் மரமுடன் மரமெடுத்தார்" ["The king climb on a horse carrying a spear on his shoulder The king show a tiger - stab the tiger with spear and The king went away, while return towards Palace women show the king,they perform "Aalathi" to him "] மரமது - அரச மரம் / peepal tree = (அரசு / KING) மரத்திலேறி - மா மரம் / mango tree = மா என்பது குதிரை / HORSE மரமதைத் தோளில் வைத்து - வேல மரம் = வேப்ப மரம் / margosa or neem tree = (வேல் / SPEAR){ஆலும் வேலும் பல்லுக்குறுதி} மரத்தைக் கண்டு - வேங்கை மரம் / indian kimo tree, வேங்கை = புலி / tiger மரமுடன் - ஆலமரம் / banyan tree மரமெடுத்தார் - அத்தி மரம் / fig tree Hence ஆல + அத்தி = ஆலத்தி, ie Aal + Athi = Aalathi அரசன் ஒருவன். தன் தோளிலே வேல் தாங்கிக்கொண்டு குதிரையில் ஏறி வேட்டைக்குச் சென்றான். அங்கு அவன் ஒரு வேங்கைப் புலியைத் தன்னுடைய வேலால் குத்திக்கொன்றான். பின்னர் அரசன் தான் வந்த வழியே திரும்ம்பி தனது அரண் மனைக்குச் சென்றான். புலியைக் கொன்று வெற்றி வீரனாகத் திரும்பி வரும் மன்னனைக் கண்ட மாதர்கள் அரசனுக்கு ஆலத்தி [ஆரத்தி] எடுத்து வரவேற்றனர் என்கிறது இந்த பாடல்.
  16. "தன்னம்பிக்கை" யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் அல்லது வைத்தீஸ்வராக் கல்லூரி எனப்படும் என் பழைய பாடசாலை 1913 ஆம் ஆண்டில் நாகமுத்து இடைக்காடர் என்னும் சமூகப் பற்றாளர் ஒருவரால் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சொந்தமான கட்டிடமொன்றில் ஆரம்பிக்கப்பட்டது என வரலாறு கூறுகிறது. உண்மையில் அங்கு முதலில் இரண்டு பாடசாலைகள் ஆரம்பிக்கப் பட்டன. தமிழ் மொழி பாடசாலையாக விவேகானந்தா வித்தியாலயமும், ஆங்கில மொழி பாடசாலையாக வைத்தீஸ்வர வித்தியாலயமும் ஆகும். பின் 1918 இரண்டும் இணைக்கப்பட்டு வைத்தீஸ்வர வித்தியாலயமாக இராமகிருஷ்ணா மிஷனிடம் அன்று கையளிக்கப் பட்டது. இங்கு முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரும் கடமையாற்றனார் என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும் இது முதலாம் தர பாடசாலையாக, 01/01/1952 அன்று, அன்றைய அதிபர் s அம்பிகைபாகனின் விடாமுயற்சியால் தரம் உயர்த்தப் பட்டதும் குறிப்பிடத்தக்கது. நாகமுத்து என் அம்மம்மா திருமதி பார்வதி முருகேசுவின் ஒரு அண்ணா ஆகும், மற்ற அண்ணா சரவணமுத்து இடைக்காடர் ஆகும். எது எப்படியாகினும் இன்று என் அப்பா கணபதிப்பிள்ளை கந்தையா ஒரு சுருட்டு தொழிலாளியாகும். என் அம்மா கனகம்மா தன் எட்டு பிள்ளைகளையும், அந்த வருமானத்துக்குள் எப்படியோ நல்ல படிப்பு கொடுத்து, தன்னம்பிக்கையுடன் வளர்த்துக்கொண்டு இருந்தார். நான் என் பெற்றோருக்கு ஏழாவது குழந்தையாகும். நான் ஐந்தாம் வகுப்புவரை யாழ் ஆனைப்பந்தி மெதடிஸ்ற் மிஷன் வித்தியாலத்தில் கல்வி கற்றுவிட்டு, ஆறாம் வகுப்புக்கு வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் என் பெற்றோரால் சேர்க்கப் பட்டேன். முதல் நாள் பாடசாலைக்கு போகும் பொழுது என் அம்மா சொல்லி அனுப்பியது, "எந்த சந்தர்ப்பத்திலும், இது எம் முன்னைய குடும்பத்தாரின் கல்வித் தொண்டால் உருவானது என்பதை சொல்லக்கூடாது, அந்தக் குடும்பத்தின் இன்றைய ஒரு உறுப்பினரான நாம் கொஞ்சம் உழைப்பில் கீழே இறங்கிவிட்டோம். ஆனால் எமக்கு தன்நம்பிக்கை உண்டு, நீங்கள் ஒவ்வொரு வரும் கல்வியில் உயர்வீர்கள். அது தான் எமது பெருமை! பழையதை, எம் முன்னைய கும்பத்தின் பெருமையை சொல்லித்திரிவது அல்ல" . அது இன்னும் என் மனதில் ஆழமாக பதிந்து உள்ளது. மரத்தை வெட்டிக் கொள்ளும் தச்சர்கள் பெற்ற சிறுவர்கள் தம் மழுவோடு காட்டிற்குச் சென்றால் அங்குள்ள மரங்கள் எப்படி அவர்களுக்கு உடனே வேண்டுமாறு பயன்படுமோ அப்படி "எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே" என வாயிற் காப்போனிடம் ஔவையார் கூறியது தான் எனக்கு ஞாபகம் வந்தது. அந்த துணிவு, தன்னம்பிக்கை தான் எம் அம்மா எமக்கு தந்தது! இலங்கை தமிழ் நாவல்களை எடுத்துக்கொண்டால், முதல் நாவல் என்று கருதப்படும் "பிரதாப முதலியார் சரித்திரம்" தொடக்கம் இன்று வரை அறவியல் நோக்கில் எழுதப்பட்டவை அனேகம். அத் தகையோரில் ஒருவரே 'இடைக் காடர்' என்னும் புனைபெயரில் நவீனங்களும் வேறு சில நூல்களும் எழுதிய ஆசிரியர் த. நாகமுத்து [1868 - 1932] அவர்கள் ஆகும். இவர் இடைக்காடு, அச்சுவேலி என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தமையாலும், அவருடைய முன்னேர் ஒருவர் அப் பெயரைக் கொண்டிருந்தமையாலும் நூல்கள் வெளியிட முற்பட்ட வேளையில், இடைக்காடர் என்ற புனைபெயரில் 'நீலகண்டன்", சித்தகுமாரன்", *வினுேதக்கதைகள்" ஆகிய புனை கதைகளையும் அம்பலவாண பிள்ளை என்பவருடன் இணையாசிரியராக "இலகுசாதகம்" என்னும் சோதிட சாஸ்திர நூலையும் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது. எனினும் இந்நூல்களை வெளியிட்டமையால் பெற்ற கீர்த்தியிலும் பார்க்க 'யாழ்ப்பாணம் வண்ணுர்பண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயத்தை' நிறுவியமையால் அவர் ஈட்டிய புகழே இன்று வரை நிலைத்திருக்கிறது! இது ஏறத்தாழ அன்று 500 மாணவர்களை கொண்ட முதலாம் வகுப்பில் இருந்து உயர் வகுப்பு மட்டும் உள்ள ஒரு கலவன் பாடசாலை ஆகும். ஆகவே முதல் நாள் நான் அங்கு போகும் பொழுது, பெரும்பாலான மாணவர்கள் அங்கு ஏற்கனவே கற்றுக்கொண்டு இருபவர்களாகவே இருந்தனர். நான் என் குடும்ப நிலையின் காரணமாக, காலில் சப்பாத்து ஒன்றும் இல்லாமல், வெறும் காலுடன் மற்றும் கட்டை காக்கி காற்சட்டையுடன் போய் இருந்தேன். என்னை பார்த்த சில சக மாணவ மாணவிகள் கேலி சிரிப்பு செய்தனர். ஏன் முதல் நாள் என் வகுப்பு ஆசிரியை ஒருவர் கூட என்னைக் கடைசி வாங்கில் இருக்கும் படி பணித்தார். எனக்கு என் அம்மா என்றும் தரும் தைரியம் என் இரத்தத்தில் ஓடுவதால், இதை பார்த்து நான் துவண்டு போகவில்லை. எனக்கு பாரதிதாசன் கவிதைதான் நினைவில் நின்றது. "விழுவது இயல்பு வெட்கப் படாதே வீறுடன் நின்றிடுவாய்! அழுபவன் கோழை அச்சத் தியல்பு தாழ்வை அகற்றிடுவாய்!" ஆனால் நான் அங்கு எல்லோரையும் அப்படி குறிப்பிடவில்லை. இதை கவனித்த இன்னும் ஒரு ஆசிரியை என்னை கூப்பிட்டு, “ கிண்டல் செய்யும் பொழுது, நீ தன்னம்ம்பிக்கையை அதிகமாக இழக்கலாம், எனவே தான் அவர்கள் மீண்டும் சிரிக்க தொடங்குகிறார்கள். எனவே நம்பிக்கையுடன் அவர்களுக்கு துணிந்து பதில் சொன்னால், அவர்கள் கேலி செய்வதை நிறுத்தி விடுவார்கள். நீ அவர்களுக்கு “நான் இப்படித்தான் வருவேன், நீ யார் கேட்க ? அது என் இஷ்டம்” என்று சொல்லு என உற்சாகப் படுத்தினார், என்றாலும் எனக்கு கடைசி வாங்குதான் நிரந்தரமாக இருந்தது விட்டது! "ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல் ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப, புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர் பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப, படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்! இன்னாது அம்ம, இவ் உலகம்; இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே" எனக்கு பக்குடுக்கை நன்கணியார் பாடல் மனதை தொட்டது. ஒரு சிலர் துன்பம் தந்து என்னைக் கவலை படுத்த, வேறு சிலர் தைரியம் தந்து மகிழ்ச்சி படுத்த, இப்படியான ஒரு வாழ்வை வகுத்துத் தந்த படைப்புக் கடவுள் பண்பு இல்லாதவன் என்றுதான் அப்பொழுது எனக்குத் தோன்றியது. எனினும் இதன் இப்படியான இயல்பினை உணர்ந்தவர்கள் இதிலும் இனிமையைக் காணக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவரின் இறுதி வார்த்தை தன்னம்பிக்கையை மேலும் கூட்டியது! இரண்டு மூன்று மாதத்தில் தவணைப் பரீட்சை வந்தது. என் எண்ணம் எல்லாம் இதில் நான் யார் என்று கட்டவேண்டும். ஒருவனின் அறிவுக்கும் உடைக்கு ஒரு தொடர்பும் இல்லை என்பதை அந்த சிலருக்கு தெரியப்படுத்த வேண்டும். என்னைப் பார்த்து சிரித்தவர்கள் தலை குனிந்து போகவேண்டும். எனக்கு என் அம்மா, அந்த ஆசிரியை, தமிழ் இலக்கியம் தந்த தன்னம்பிக்கை இப்ப நிறைய உண்டு, அதைவிட எனக்கு என்னில் கூடுதலான நம்பிக்கை உண்டு! “இளம்பிறையே! உனது ஏழைமையை நினைத்து வருந்தாதே! ஏனென்றால் உன்னுள்ளேதான் பூர்ணசந்திரன் புதைந்து கிடக்கிறான்” என்று யாரோ சொன்னது ஞாபகம் வந்தது! ஆமாம் நான் புது மாணவன் தான் ஆனால் விரைவில் என் முழுமை வெளியே வரும். எனக்குள் ஒரு சிரிப்பும் வந்தது! சோதனை நடந்து ஒரு கிழமையால், பரீட்சை பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டன. சக மாணவ மாணவிகளின் ஆச்சரியத்துக்கு இடையில் பெரும் புள்ளிகளுடன் நான் முதல் இடத்தில் நின்றேன், ஆனால் அது எனக்கு மகிழ்வு தரவில்லை, அது எனக்கு முதலே தெரியும், ஆனால் மகிழ்வு தந்தது அந்த சிலர் வாயடைத்து நின்றதும், என்னுடன் நண்பராக முந்தி வந்ததுமே! இதில் என்ன வேடிக்கை என்றால், என்னை கடைசி வாங்குக்கு அனுப்பிய அந்த ஆசிரியை என்னை முதல் வாங்கில் அமர கூப்பிட்டதுவே! என்றாலும் நான் அதை ஏற்கவில்லை, மிக பணிவாக 'பின் வாங்கில் ஒரு பிரச்சனையும் இல்லை டீச்சர், இரண்டும் ஒரே வாங்குதான், பார்க்கும் பார்வைகள் தான் வித்தியாசம்' என்று கூறி பின் வாங்கிலேயே அமர்ந்து விட்டேன்! அதன் பிறகு தொடர்ந்து முதலாம் இடத்தில் இருந்ததுடன், எல்லோரும் என்னுடன் அன்பாக நட்பாக பழகினார்கள். அதுமட்டும் அல்ல அந்த ஆசிரியை உட்பட அந்த சில சக மாணவர்களும் என்னை மதிக்க தொடங்கினார்கள். இப்ப அவர்களுக்கு உடை பெரிதாக தெரியவில்லை. இன்னும் நான் வெறும் காலுடன் கட்டை காக்கி காற்சட்டையுடன் தான் பாடசாலை போகிறேன், பின் வாங்கில் தான் இருக்கிறேன், அதில் எந்த மாற்றமும் இல்லை! ஆனால் இப்ப நான் வேண்டும் என்றே அப்படி போகிறேன், அப்படி இருக்கிறேன். அது தான் வித்தியாசம்!! அது நான் பல்கலைக்கழகம் போகும் மட்டும் தொடர்ந்தது. ஆனால் நான் யாழ் மத்திய கல்லூரிக்கு போய்விட்டேன். இப்ப நினைத்தால் எனக்கு கொஞ்சம் வருத்தம் தான்! கொஞ்சம் நானும் விட்டுக்கொடுத்து போய் இருக்கலாம் என்றே எண்ணுகிறேன், ஆனால், மனதில் முதல் நாள் ஏற்பட்ட அந்த கோபம் வைராக்கியம் உண்மையாக மாற பல ஆண்டுகள் எடுத்துவிட்டது! "குழந்தை பருவம் சுமாராய் போச்சு வாலிப பருவம் முரடாய் போச்சு படிப்பு கொஞ்சம் திமிராய் போச்சு பழக்க வழக்கம் கரடாய் போச்சு" என்பதே உண்மையாக போச்சு!! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  17. "தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 22 "பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits of Ancient Sangam Tamils continuing" [ஆங்கிலத்திலும் தமிழிலும் / In English and Tamil] கரிய சட்டியில் இனிப்புப் பாகொடு பால் கலந்து பிடித்து அழகான வட்டமாக அப்பம் சங்க காலத்தில் சுடப்பட்ட நிகழ்வை பெரும்பாணாற்றுப்படை, வரிகள், 377-378 மூலம் நாம் அறிகிறோம். "கூவியர் பாகொடு பிடித்த, இழை சூழ் வட்டம் பால் கலந்த வை போல்" என்ற வரிகள் அதை விளக்குகின்றன. உணவியல் அறிஞர் கே.டி.ஆசயா [Dr K.T. Achaya] தனது "Indian Food, A Historical Companion, The Food Industries of British India, and A Historical Dictionary of Indian Food (all published by Oxford University Press, India)" என்ற புத்தகங்களில் தோசை, வடை போன்றவை 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று ஆணித்தரமாக குறிப்பிடுகிறார். எனினும் இட்டலி அப்படியில்லை என்கிறார். அது ஒரு வெளி நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது என்கிறார். கி பி 920 ஆண்டை சேர்ந்த சிவகோட்டியாச்சார்யர் எழுதிய வட்டராதனே [Sivakoti Acharya's Vaddaradhane] என்னும் பழமையான சமஸ்கிருத, கன்னட நூலில், இட்டலியை ‘இட்டலிகே' ['iddalige'] என குறிக்கப் பட்டுள்ளது. அதில் இருந்தே இட்டலி என்ற சொல் பிறந்தது என்கிறார். ஆனால், இந்த இட்டலிகே, உளுத்தம் பருப்பு மாவினால் மட்டுமே செய்யப் பட்டவை ஆகும். மேலும் இது புளிக்க வைக்கப் படவில்லை. மேலும் ஒரு பெண்ணின் வீட்டிற்கு விருந்தாளியாக சென்ற ஒரு பிரமச்சாரிக்கு உபசாரம் செய்த 18 உணவுகளில் ஒன்றாக இது குறிக்கப் பட்டுள்ளது. இதை தொடர்ந்து கி பி 1130 இல் எழுதப்பட்ட மற்றொரு சமஸ்கிருத, கன்னட நூலான, மனசொல்லசாவில் (Manasollasa) 'இட்டரிக்க' என குறிக்கப் பட்டுள்ளது. இதுவும் உளுத்தம் பருப்பு மாவினால் மட்டுமே செய்யப் பட்டவை ஆகும். இது சிறு உருண்டைகளாக, மிளகு தூள், சீரகத் தூள், பெருங்காயம் போன்றவற்றால் வாசனைப் படுத்தப் பட்டன என்கிறது. என்றாலும் இன்று இட்டலி செய்யும் முறைகளான உளுந்துடன் தீட்டப் படாத அரிசி, நீண்ட நேரத்திற்கு கலவையை புளிக்க வைத்தல், நீராவியில் முழுமையாக அவித்தல் ஆகிய இந்த மூன்று முறையும் அங்கு காணப் படவில்லை. கி பி 1250 இற்கு பின்பு தான் இப்ப நாம் செய்வது போன்ற இட்டலி நடை முறைக்கு வந்ததாக கே.டி.ஆசயா கூறுகிறார். சீன மதகுருவும், கல்வியாளரும், பயணியும், மொழிபெயர்ப்பாளருமான மற்றும் சீன காலவரிசையாளருமான சுவான்சாங் [யுவான் சுவாங் / Xuang Zang], கி பி 700 ஆண்டு வரை, இந்தியர் நீராவி சமையலை அறிந்து இருக்க வில்லை என்று மிக அழுத்தம் திருத்தமாக குறிப் பிட்டுள்ளார். கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் வந்த யுவான் சுவாங் காஷ்மீரம், பாடலி புத்திரம் முதலான முக்கிய பௌத்தத் தலங்களுக்குச் சென்று புத்த மதம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார். நாளந்தா பல்கலைக் கழகத்திலும் தங்கிப் பயின்றுள்ளார். பின்னர் அவர் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரத்தில் இருந்த பௌத்தப் பல்கலைக் கழகத்திற்கும் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நாம் எல்லோரும் உண்ணும் இட்டலி உண்மையில் இந்தோனேஷியாவில் முதலில் சமைக்கப்பட்டது என்றும், அதன் ஒரு பகுதியை ஆட்சி செய்த தென் இந்தியா அரசனின் சமையல்காரன் கி பி 800-1200 ஆண்டுகளில் நாடு திரும்பும் போது, இந்த உணவை தென் இந்தியாவிற்கு கொண்டு வந்து இருக்கலாம் என்ற ஒரு பரிந்துரையை உணவியல் அறிஞர் கே.டி.ஆசயா [Dr K.T. Achaya] முன் வைக்கிறார். மேலும் இது இந்தோனேஷியாவில் கேட்லி [Kedli ] என அப்போது அழைக்கப் பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவர் சங்க காலத்தில் செய்யப்பட்ட தோசை அதிகமாக அரிசியை மட்டுமே பாவிக்கப் பட்டதாக இருந்ததாகவும், அது கள்ளு முதலியவற்றால் புளிக்க வைக்கப் பட்டது என்றும், கட்டாயம் உளுந்து பாவிக்கப் படவில்லை என்றும் சுட்டிக் காட்டுகிறார். மேலும் சுவாரசியமான விடயம் என்ன வென்றால், மனசொல்லசாவில் குறிக்கப் பட்ட தோசக [“dhosaka”], முற்றிலும் உளுந்தில் செய்யப் பட்டது. அரிசி அங்கு பாவிக்கப் படவே இல்லை. இந்த தோசையானது தோன்றிய இடம் தோராயமாக கர்நாடக மாநிலம் மைசூர் தான் என்றும் அதுவும் உடுப்பியில் என்றே கருதப் படுகிறது. இடியப்பமும் அப்பமும் காழியர், கூவியர்களால் [காழியர் = பிட்டு வாணிகர். கூவியர் = அப்பம் சுடு வோர். பாசவர் = வெற்றிலை விற்பவர்] கடற்கரை வீதிகளில் விற்கப் பட்டதாக கூறுகிறார். இது பிந்திய சங்க இலக்கியமான சிலப்பதிகாரம், மணிமேகலையில் விவரிக்கப்பட்டுள்ளது. "பன்மீன் விலைஞர் வெள்ளுப்புப் பகருநர், கண்ணெடை யாட்டியர் காழியர் கூவியர்", என்ற கச்சிமாநகர் புக்க காதை, மணிமேகலை 31,32 ஆவது வரி - பல மீன்களை விற்கும் பரதவரும் வெள்ளிய உப்பு விற்போரும் கள்ளை விற்கும் வலைச்சியரும் பிட்டு வாணிகரும் அப்ப வாணி கரும் - என கூறுகிறது. புளியோதரை எனப்படும் ஒரு புளி சாதம் பற்றியும் புளி, நெல்லிக்காய் சேர்ந்த ஒரு வகை பானம் பற்றியும் அங்கு விரிவாக சொல்லப் பட்டுள்ளது. கீரை, பூசனிக்காய், முருங்கைக்காய், மற்றும் மூன்று பருப்பு வகைகள் - உளுந்து, பயத்தம் பருப்பு, துவரம் பருப்பு - அங்கு பரவலாக பயன்படுத்தப் பட்டுள்ளது. அதே போல அரிசி, தயிர், தயிரில் நனைத்த வடை போன்றவையும் ஆகும். மற்றும் முக்கனிகளான மா, பலா, வாழையும் அவர்களின் உணவில் தாராளமாக இருந்தன. அரசியல் சூழல் காரணமாக, ஒரே இடத்தில் பெருந்தொகையினர் பல்லாண்டுகள் வாழ நேரிட்ட போது ‘நகரம்’ ஏற்பட்டது. இத்தகைய நகரங்களில் பல, காலப்போக்கில் அழிந்து விட்டன. என்றாலும் சங்க இலக்கியமான ‘மதுரைக் காஞ்சி’ சித்திரிக்கும் மதுரை நகரம் இரண்டாயிரமாண்டுகளைக் கடந்த பின்னரும், தனக்கான அடையாளத்துடன் இன்றும் உயிர்த் துடிப்புடன் விளங்குகிறது. இரவு வேளையில், இரண்டாம் சாமத்தில், மதுரை நகரின் நிலை பற்றிய காட்சி ஒன்றை, வரிகள், 624 -627: "நல்வரி இறாஅல் புரையும் மெல் அடை, அயிர் உருப்பு உற்ற ஆடு அமை விசயம், கவவொடு பிடித்த வகை அமை மோதகம், தீஞ் சேற்றுக் கூவியர்" என்று சுட்டிக்காட்டுகிறது. இந்த விவரிப்பில் ‘உணவு வணிகர்’ குறித்த குறிப்புகள் முக்கியமானவை. சங்க காலத்தில் நல்ல வரிகளையுடைய தேனிறாலை ஒக்கும் மெல்லிய இனிப்பு அடை [அடை: அரிசி, பருப்பு வகைகள், சிறு தானியங்கள் அகியவற்றை பல விதமான சேர்க்கைகளில் ஊறவைத்து, மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துத் தோசையைப் போல வட்டமாகச் சுட்டு எடுக்கும் உணவுப் பண்டம் அடை. கத்தரிக்காய், வாழைப்பூ, தேங்காய், வெங்காயம் ஆகியவற்றையும் மிகப்பொடியாக அரிந்து, அடையின் மீதுத் தூவிச் சமைப்பர். சம்பிரதாயமாக வெல்லம் அடையுடன் தொட்டுக் கொள்ளப்பட்டது], காய்ச்சின பாகோடே பருப்பும் தேங்காய் கூட்டி உள்ளீடாக வைத்துப் பிடித்த மோதகம் [கொழுக்கட்டை] விற்கும் வணிகர் பற்றிய தகவலுடன், இரவு நேரத்தில் மதுரை நகரில் உண்பதற்குப் பல சிற்றுண்டிக் கடைகள் இருந்தன என்று இந்த பாடல் வரிகள் மூலம் அறிய முடிகின்றது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 23 தொடரும் "FOOD HABITS OF TAMILS" PART: 22 "Food Habits of Ancient Sangam Tamils continuing" In Perumpanattuppadai, lines 377- 378, We find some details about Appam as: " .... in the shade, appear like round appam made with threads of rice and sugar syrup lying in milk in the dark, wide bowls of vendors who call out prices.... " Eminent food scientist Dr K.T. Achaya. His books — Indian Food, A Historical Companion, The Food Industries of British India, and A Historical Dictionary of Indian Food (all published by Oxford University Press, India), he points out authoritatively that while Dosai and Vadai have a hoary two - thousand - year history in Tamil country, Idli is a foreign import. He notes that the word Idli, might derive from ‘iddalige’, first mentioned in a Kannada work “Vaddaradhane” of Sivakotyacharya in 920 AD as iddalige, but the indications are that this was made from an urad dhal batter only, which was neither fermented, nor steamed to fluffiness. It figures as one of the eighteen items served to a brahmachari [unmarried man] who visits the home of a lady. In the subsequent Sanskrit Manasollasa (1130 AD), It is mentioned as iddarika, but again made from urad dhal flour only. It actually describes iddarika as made of fine urad flour fashioned into small balls and then spiced with pepper powder, cumin powder and asafoetida. In Karnataka, a century later, the idli is described as being 'light, like coins of high value.' But the three elements of modern Idli making are missing in all these references: use of rice grits along with urad dal, the long fermentation of the mix, and steaming the batter to fluffiness. Achaya contends that only after 1250 AD are there references to what seem to be idli as we know them. The Chinese chronicler, a Buddhist monk, scholar, traveller, and translator Xuang Zang categorically stated that in 7th century AD Indians did not know the use of the steamer. Before he leaves India he travelled to Andhradesa & later proceeded to Kanchi, the imperial capital of Pallavas, and a strong centre of Buddhism in Tamil Nadu. There is a suggestions that the Idli was developed in Indonesia, a part of which was then ruled by Hindu kings like the Pallava, Gupta, The Pala Empire [பாலப் பேரரசு 750-1162 CE was an imperial power during the post-classical period in the Indian subcontinent, which originated in the region of Bengal] and Chola in the succeeding centuries up to the 12th century. It is called Kedli there. Achaya writes that the cooks who accompanied the Kings during 800 -1200 AD, May have returned home with the recipe, and there by brought fermentation and steaming methods to South India. Also he point out that Dosai during the Sangam period was probably made only out of rice, is made out of fermented rice batter, but the fermenting agents range from toddy to yeast, never urad dal. And even more interestingly, the “dhosaka” mentioned in Manasollasa, the Chalukyan king Someswara’s massive encyclopedia about daily life in 12th century Karnataka, was made only of dhals - no rice at all. It is generally believed that dosa had its roots in the Temple Streets of Udupi, Karnataka. Dr K.T. Achaya, further mentioned that both idiyappam and appam were dishes sold by kaazhiyar [காழியர்] and kuuviyar [கூவியர்] - vendors of snack foods on the seashore; it is described in post-Sangam poems such as Silappathikaram and manimekalai, for example in Manimekalai, It says, fisher folk who sells many fishes, salter who sells many heap of silvery crystalline salt, along with toddy sellers, pittu traders and appam traders were there as: "பன்மீன் விலைஞர் வெள்ளுப்புப் பகருநர், கண்ணெடை யாட்டியர் காழியர் கூவியர்", where, kaazhiyar means "Dealer in the rice-preparation piṭṭu" and kuuviyar means, "those who sell Appam [rice pancakes]". Tamarind rice figures extensively, as also a drink made with tamarind and nellikai (gooseberry). Leafy greens (keerai), gourds, drumsticks and the three pulses were widely used. So were rice and curd, and vadai soaked in curds as well as the three great Tamil fruits were of course, mango, jackfruit and bananas. Due to the political environment, the 'city' was formed when large numbers of people had to live in one place for many years. Many of these cities have perished over time. However, the city of Madurai, depicted in the Sangam literature ' Mathuraikkanchi [மதுரைக் காஞ்சி]', is still vibrant with its own identity even after two thousand years. we come to know from that mothakam [மோதகம்] being sold on the streets of Madurai along with Adai, which is made of lentils and rice, a type of Dosai or pancake as per Lines 624-627: "vendors who sell delicate adais that are like honeycombs with fine lines and 'mothakams' that are made on the palms pressing fingers, with fillings of sugar syrup," ["நல்வரி இறாஅல் புரையும் மெல் அடை, அயிர் உருப்பு உற்ற ஆடு அமை விசயம், கவவொடு பிடித்த வகை அமை மோதகம், தீஞ் சேற்றுக் கூவியர்"]. Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] PART : 23 WILL FOLLOW
  18. "சித்திரம் பேசுதடி" "சித்திரம் பேசுதடி சின்ன பெண்ணே சிறிதளவும் உனக்கு இதயம் இல்லையோ? கோத்திரம் கேட்கிறாய் காதலித்த பின்பு கோலம் ஒன்றை நீரில் போட்டேனோ? பாத்திரம் அறியாமல் காதலை ஏற்றேனோ பாவியாய் இன்று அலைய விட்டாயோ?" "சாத்திரம் பார்க்கும் அழகு மாதே சாந்தமாய் கதைத்து கவர்ந்தது ஏனோ? ஆத்திரம் வருகுதடி ஏமாந்து போனேனே ஆசையை வார்த்து மோசம் செய்தாயோ? காத்திரமான உறவு என்று நான் காலத்தை வீணாக்கி உன்னை நம்பினேனோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  19. "இங்கிலாந்தில் இன்று, ஜூலை 4ம் தேதி பொதுத் தேர்தல்" இங்கிலாந்தில் இன்று, ஜூலை 4ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. தொழிற்கட்சிக்கு பெரும் வெற்றி ஏற்படும் என கருத்துக் கணிப்பில் எதிர்பார்க்கப் படுகிறது / Britons vote in poll expected to deliver Labour landslide. பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் இம்முறை மொத்தம் 8 தமிழர்கள் போட்டியிடுகிறார்கள் என்பது மகிழ்ச்சிக் குரிய செய்தி கூட . அவர்கள் எட்டு பெயரின் படங்களும் இணைக்கப் பட்டுள்ளது. It is also a happy news that a total of 8 Tamils are contesting in the British parliamentary elections this time. Their photos are also attached here. 14 கொந்தளிப்பான ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சியை தூக்கி எறிந்துவிட்டு, கெய்ர் ஸ்டார்மரின் தொழிற் கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரிட்டன், இன்று வியாழக்கிழமை வாக்களிக்கத் தொடங்கி உள்ளது. Britons began voting on Thursday in a parliamentary election that is expected to bring Keir Starmer's Labour Party to power, sweeping away Prime Minister Rishi Sunak's Conservatives after 14 often turbulent years. இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின் பிரதமராக பொறுப்பேற்றபின் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். கருத்துக் கணிப்புகள் ஸ்டார்மரின் மைய-இடது கட்சியை [தொழிற் கட்சியை] மகத்தான வெற்றிக்கு வழிவகுக்கிறது, எட்டு ஆண்டுகளில் ஐந்து பிரதமர்களுக்கு வழிவகுத்த கன்சர்வேடிவ் கட்சி, அதன் உட்பூசல் மற்றும் கொந்தளிப்பு காலத்திற்குப் பிறகு பல வாக்காளர்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், இதனால் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வி அடையும் என பரிந்துரைக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. Opinion polls put Starmer's centre-left party on course for a landslide victory but also suggest many voters simply want change after a period of infighting and turmoil under the Conservatives that led to five prime ministers in eight years. 1997ல் முன்னாள் தலைவர் டோனி பிளேயர் 18 ஆண்டுகால கன்சர்வேடிவ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தபோது, தொழிற்கட்சி பெற்ற சாதனையான 418 இடங்களை விட அதிகமாக வெற்றி பெறும் என்று பல ஆய்வுகள் கணித்துள்ளன. Several surveys predict Labour will win more than the record 418 seats it secured when ex-leader Tony Blair ended 18 years of Conservative rule in 1997. The main political parties include the Conservative Party led by Prime Minister Rishi Sunak, Labour Party led by Keir Starmer, Liberal Democrats led by Ed Davey, Reform UK led by Nigel Farage, Scottish National Party (SNP) led by John Swinney, and the Green Party co-led by Carla Denyer and Adrian Ramsay.
  20. "நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 21 7] வரலாறு அழிப்பு [Erasure of History] ஸ்பானிய அமெரிக்க மெய்யியலாளர், ஜார்ஜ் சண்டயானா (1863 - 1952) என்பவர் [George Santayana], "முன்னைய தவறுத்தல்கள் மீண்டும் வராமல் தவிர்ப்பதற்கு, கட்டாயம் வரலாறு படிக்கவேண்டும்" என்கிறார், என்றாலும் இன்றைய அரசியல் சூழலில், பல்வேறு காரணங்களால், அதில் இருந்து பாடங்களை படிக்காமல், அதை தமக்கு சார்பாக திரித்துக் கூறுவதற்காக, தமக்கு பிடிக்காத அல்லது மற்றவர்களின் வரலாறு சான்று கூறும் உயர்வை பொறுக்க முடியாமல், உண்மையான வரலாறுகளை, அரச துணையுடன் இன்று அழிப்பதைக் காண்கிறோம். அப்படியானவற்றில் ஒன்று தான், 97 ஆயிரம் அரிய நூல்களுடன் காணப்பட்ட யாழ் நூலக எரிப்பு ஆகும். மத்திய அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கிய, மாயன் இனத்தவரின் வரலாற்று நூல்களை, கண்டு பிடிப்புகளை, ஸ்பானிய ஏகாதிபத்தியத்துடன் வந்த அடிப்படைவாத கிருத்துவர்கள், அன்று எரித்து போல, இன்று இலங்கை அரச படை இதை செய்ததை காண்கிறோம். தமிழ்ப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற வரலாற்றுப் புத்தகங்களில், சிங்களவர்கள், ஆரியர்களாக இலங்கைக்கு வருவதற்கு முன்னரே, தமிழர்கள் இரண்டு இனங்களாக இங்கு குடியிருந்தார்கள் என்ற போதிலும், அவையெல்லாம் மறைக்கப்பட்டு, தமிழர்களின் வரலாறுகள் அழிக்கப் பட்டுள்ளதுடன், தமிழ் மன்னர்கள் தொடர்பில் எதுவுமே குறிப்பிடப்பட வில்லை எனவும், ஆயிரம் வருடங்கள் வரலாற்றைக் கொண்ட தமிழ் பேசும் முஸ்லிம்களின் வரலாறு தொடர்பில், அந்த வரலாற்றுப் புத்தகங்களில் ஒரு வசனமேனும் இல்லை என்பதையும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், வெவேறு காலங்களில் இலங்கை நாடாளுமன்றில் சுட்டிக்காட்டி யுள்ளார்கள். இவை எல்லாம், எமக்கு எதிராக ஏற்பட்ட, வரலாறு அழித்தலுக்கான சில உதாரணங்கள் மட்டுமே!! “இலங்கை சிங்களவர்களின் தேசம், இங்கு வாழும் தமிழர்கள் வந்தேறு குடிகளே’ என்ற பாணியில் அண்மைக் காலமாக பல அரசியல் வாதிகள் தொடக்கம், புத்த மதகுருமார் வரை சொல்லுவதை எழுதுவதைக் காண்கிறோம். ஒன்றை மறைத்து இன்னொன்றாகச் செய்வதே இலங்கை இனவாத எழுத்தர்கள் தமிழ் வரலாற்றுக்குச் இதுவரை செய்த தொண்டாகும். மகாவம்ச சிந்தனையில் ஊறிப் போன சிங்களவர்கள் தங்களை ஆரியர் என்றும் தாங்களே இலங்கையின் மூத்த குடியென்றும் தங்களுக்கே நாடு சொந்தம் என்றும் பவுத்த தர்மத்தைக் காப்பாற்றிப் பேணுவதற்குரிய இடமாக இலங்கைத் தீவு புத்தரால் ஆசிர்வதிக்கப்பட்டது என்றும் நம்புகிறார்கள். ஆனால் கௌதமபுத்தர் இலங்கை வருகைகளைப் பற்றி வரலாற்றுச் சான்றுகள் கிடையா, மற்றது புத்தர் வட இந்திய ஆட்புலத்தை விட்டு வேறெங்கும் செல்லவில்லை. ஏன் தெற்கேயுள்ள தமிழகத்துக்கும் கூட வரவில்லை. மேலும் பவுத்த – சிங்கள அரசியல் மேலாண்மைக்கும் சிங்கள தேசத்தின் இருப்பிற்கும் தமிழரே பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் எனவும் நினைக்கிறார்கள். இந்த மகாவம்ச சிந்தனையே இன்றைய இன முரண்பாட்டுக்கும் மற்றும் வரலாறு அழிப்ற்கும் அடிப்படைக் காரணம் ஆகும். மகாவம்சத்தை எழுதியதன் நோக்கத்தை ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவில் நுலாசிரியர் குறிப்பிடுகிறார். எடுத்துக்காட்டாக ஆறாம் அத்தியாயத்தின் முடிவில் “(பவுத்த) பக்தர்களின் அமைதியான ஆனந்தத்துக்கும் மனவெழுச்சிக்கும் தொகுக்கப்பட்ட மகாவம்சத்தின் விஜயனின் முடிசூடல் என்ற 6 ஆம் அத்தியாயம் இத்துடன் முடிவுற்றது” எனக் கூறுவார். இது ஒன்றே நூலின் நோக்கத்திற்கு எடுத்துக் காட்டு ஆகும். இருந்தும் மகாவம்சத்தை முற்று முழுதாக இலங்கை வரலாற்றைக் கூறும் நூல் எனக் கொள்ள முடியாவிட்டாலும் அதனை முற்று முழுதாகப் புறக்கணித்து விடவும் முடியாது. மகாவம்சம் புனைந்துள்ள கதையில் சில உண்மைகள் மறைந்து காணப்படுகின்றன. மகாவம்சம் இலங்கையின் ஆதிக்குடிகள் என இயக்கர், நாகர், இப்படி சிலரை குறிக்கிறது. உதாரணமாக, நாகர் என்பவர்கள் தமிழ் இலக்கியங்களிலும் இலங்கை இலக்கியங்களிலும் குறிப்பிடப்படும் பழங்குடி மக்களாவர். இலங்கையை மகாவம்சம் குறிப்பிடும் விசயன் (பொ.மு. 543 – 504) என்ற மன்னனுக்கு முன்பே முடிநாகர் என்னும் தமிழ் நாகர் இனத்தவர்கள் ஆண்டனர் என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து. இதற்கு ஆதாரமாக முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் முடிநாகர் இனத்தைச் சேர்ந்தவர் சேர மன்னனான உதியஞ்சேரலை பாடியதை குறிப்பிடுகின்றனர். இவர்கள் நாகவுருவை தலையில் அணிந்ததால் இவர்கள் முடிநாகர் என்றும் சூட்டுநாகர் என்றும் அழைக்கப்பட்டனர். இலங்கையில் பண்டு தொட்டு தமிழர் எவரும் வாழவில்லை என்றும் சிங்கள அரசுகள் மீது படையெடுத்து வந்த சோழ, பாண்டியர் படைகளோடே தமிழ் மக்கள் ஈழத்தில் வந்து குடியேறினர் என சில சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் துட்ட கைமுனு காலத்தில் மாகா கங்கைக்கு அப்பால் தமிழர்கள் வாழ்ந்தார்கள் எனச் சொல்லப்பட்டுள்ளது. பவுத்த மதத்தைத் தழுவிய முதல் அரசன் தேவநம்பிய தீசனே. இவனுக்கு முன்னர் அனுராதபுரத்தை ஆண்ட அரசர்கள் வைதீக மதத்தவரே. தேவநம்பிய தீசனின் தந்தை பெயர் மூத்த சிவன் (கிமு 307 – 247) ஆவான். இவர்கள் நாக வம்சத்தைச் சேர்ந்தவர்கள். மகாநாகன் இவனது உடன்பிறப்பு ஆவான். இவன் துட்ட கைமுனுவின் பாட்டனுக்குப் பாட்டன் (ஒட்டன்) ஆவன். எனவே தமிழர்கள் இலங்கையின் ஆதி குடிகள் என்பது மகாவம்சத்திலேயே கூறப்பட்டுள்ளதை காண்க. ஆனால் இவை சில உதாரணங்களே, இன்னும்பல வரலாற்று ரீதியான ஆதாரங்களும் உதாரணங்களும் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. உதாரணமாக, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஆனைக்கோட்டை என்னும் இடத்தில், 1980 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், தொல்லியலாளர் கா. இந்திரபாலாவின் தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அகழ்வாராச்சிக் குழுவினர் நடாத்திய அகழ்வாய்வு ஒன்றின் போது, கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த இறந்த மனிதன் ஒருவனுடைய கல்லறை கண்டு பிடிக்கப்பட்டது. அங்கு ஒரு முத்திரை ஒரு மோதிரத்தின் முன் பகுதியாக கண்டு எடுக்கப் பட்டது. அங்கு பதியப்பட்டிருந்த இரண்டு வரியிலமைந்த எழுத்துக்கள், தமிழ் பிராமிவகையைச் சார்ந்தாக இருந்தது. கோ வெ ர அல்லது "கோ" "வே" "த" (ko ve ta) என்ற அந்த எழுத்துக்கள் முதல் சங்ககால எழுத்துக்ளைச் சார்ந்தாகும் [யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை முத்திரை]. அதை வாசித்த பேராசிரியர் கா. இந்திரபாலா, மற்றும் பொ. இரகுபதி, முனைவர் ஆர். மதிவாணன் போன்றோர்கள், அந்தக் கல்லறை ஒரு தமிழ் மன்னனுடையதாக இருக்கக்கூடும் என்கின்றார்கள். அது மட்டும் அல்ல இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து துரத்திவிடப்பட்ட அந்நாட்டு இளவரசனான விஜயன் என்பவன் தனது தோழர்கள் எழுநூறு பேருடன் இலங்கையில் வந்து இறங்கி, அதன் பின், தொடக்கத்தில் தமிழர் [இயக்கர், நாகர்] பண்பாட்டை பின்பற்றி இருந்த இவர்களிடையே மகிந்ததேரரால் கிமு 3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பௌத்தம் அறிமுகம் செய்யப்பட்டதும், பண்டைய சிங்கள எழுத்துக்கள், குறிப்பாக மட்பாண்டங்களில் கி பி 6 ஆம் நூற்றாண்டின் பின்னர்தான் காணப்படுவதும் அதிகார பூர்வமான வரலாற்று சான்றாகும். என்றாலும் பவுத்த – சிங்கள அரசியல் மேலாண்மை இன்னும் தொடர்கிறது. உதாரணமாக, அண்மையில், முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை சுவீகரித்து அங்கு பௌத்த விகாரை அமைத்து குடிகொண்டுள்ள பௌத்த துறவியான கொலம்ப மேதாலங்க தேரர், பாரிய புத்தர் சிலை ஒன்றை நிறுவி முரண்பாடுகளை தோற்றுவித்திருந்தார். அங்கு மிக நீண்டகாலமாக ஒரு பிள்ளையார் ஆலயம் இருந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றாலும், அடாத்தாக பௌத்த பிக்குவால் 2019 ஆண்டு தொடக்கத்தில் விகாரை அமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. அதே போல் கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலய விவகாரமும் இன்னும் 2019 ஆண்டு நடுப்பகுதியை தாண்டியும் தொடர்கிறது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 22 தொடரும்
  21. மிக்க மிக்க நன்றி ஈழப்பிரியன் & புலவர் கிருஸ்னி ரசிகரன் தொழிற் கட்சி Chrishni Reshekaron, Labour Party candidate for Sutton and Cheam சேர்க்கப்பட்டுள்ளது எல்லோருக்கும் நன்றிகள்
  22. "கம்பன் வழியில் .... " [கம்பன் விழா 2024 ஜூன் நடுப்பகுதியில் இருந்து பல நாடுகளில் / இடங்களில் ஜூலை நடுப்பகுதிவரை நடக்கின்றன. அதையொட்டி கம்பன் வழியில் எனது ஒரு துளி] "பால் ஒழுகும் இரு குடங்களோ பாலகன் பசி தீர்க்கும் சுனையோ? பாசம் பொழியும் பெண் தெய்வமோ பாவி என்னை அணைக்கா தேவதையோ??" "தென்னையில் இரு அழகு குரும்பையோ தெய்வ மங்கையின் எழில் வடிவமோ? தெவிட்டாத அவள் இன்ப மழையோ தென்றல் காற்றும் கொஞ்சும் உடலோ??" (கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்)
  23. "இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்" 2024 ஆம் ஆண்டு இங்கிலாந்து பொதுத் தேர்தல் ஜூலை 4 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பிரித்தானியாவின் பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களாக முன்பை விட அதிகமான பிரிட்டிஷ் தமிழர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். "British Tamils running to become UK Member of Parliament" With the 2024 UK General Election set to take place on July 4, more British Tamils than ever before have been named as candidates with a range of Britain’s political parties. உமா குமரன், தொழிற் கட்சி Uma Kumaran, Labour Party Candidate for Stratford and Bow டெவினா பால், தொழிற் கட்சி Devina Paul, Labour Party Candidate for Hamble Valley கிருஸ்னி ரசிகரன் தொழிற் கட்சி Chrishni Reshekaron, Labour Party candidate for Sutton and Cheam மயூரன் செந்தில்நாதன், சீர்திருத்த யுகே Mayuran Senthilnathan, Reform UK Candidate for Epsom & Ewell கமலா குகன், லிபரல் டெமாக்ராட்ஸ் Kamala Kugan, Liberal Democrats Candidate for Stalybridge and Hyde நரனீ ருத்ரா-ராஜன், பசுமைக் கட்சி Naranee Ruthra-Rajan, The Green Party Candidate for Hammersmith and Chiswick

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.