Jump to content

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9353
  • Joined

  • Days Won

    16

யாயினி last won the day on May 11

யாயினி had the most liked content!

About யாயினி

  • Birthday 03/30/1868

Contact Methods

  • AIM
    ----------------------------------------
  • ICQ
    0

Profile Information

  • Gender
    Female

யாயினி's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • One Year In
  • One Month Later

Recent Badges

3k

Reputation

Single Status Update

See all updates by யாயினி

  1.  

    1434978707.JPG

     
    இலங்கையில் ஏற்படவுள்ள மிகப்பெரிய புவிநடுக்கம்!!
     

    (புதியவன்) 

    நேற்றையதினம் (18) இரவு 11.02 மணியளவில் இலங்கையில் சிறியளவிலான நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக செய்தித்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் தகவல்கள் வெளியாகின.

    இலங்கையின் நிலப்பகுதிகளிலும், இலங்கையை அண்மித்த கடல் பகுதிகளிலும் கடந்த 5 ஆண்டுகளில் 29 நில அதிர்வுகள் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை புவிநடுக்க பதிவுக் கருவியில் (Seismograph) குறைந்தளவான ரிக்டர் அளவுத்திட்டத்தில் அளவிடப்பட்டிருந்தாலும் கூட, இவை அனைத்தும் நாம் ஒரு மிகப்பெரிய புவிநடுக்கத்தை எதிர்கொள்ளப்போகின்றோம் என்பதற்கான எதிர்வுகூறலே ஆகும்.

    பூமியானது பெரியதும் சிறியதுமான பல கவசத்தகடுகளால் அமையப்பெற்றது. இதில் இலங்கையானது இந்தோ-அவுஸ்திரேலியா கவசத்தகட்டின் வட மேற்கு பிராந்தியத்தில் அமைந்துள்ளது. இலங்கையில் அண்மைக்காலமாக நிகழும் பல புவிநடுக்க அதிர்வுகள் இலங்கையின் கீழான சிறிய கவசத்தகடுகளில் விலகல், ஒருங்கல், அமிழ்தல் போன்ற சிறியளவிலான மாற்றங்கள் ஏற்படுவதை வெளிப்படுத்தியுள்ளன. இந்த மாற்றங்கள் பெரிதாக அமையும் சந்தர்ப்பங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய புவிநடுக்கங்கள் இலங்கையில் ஏற்படும் வாய்ப்புள்ளது.

    உலகில் முன்னெதிர்வு கூற முடியாத மிகப்பெரும் உயிர் ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடிய இயற்கை இடர்களில் புவிநடுக்கம் முதன்மையானது. ஆயினும் இது தொடர்பில் போதியளவு விழிப்புணர்வுடன் இருந்தால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை ஓரளவு குறைக்கலாம்.இலங்கையில் புவிநடுக்கத்தைப் பதிவு செய்யும் புவிநடுக்கப் பதிவுக் கருவிகள் கண்டி-பள்ளேகலவிலும், அனுராதபுரம்- மிகிந்தலையிலும், மட்டக்களப்பிலும் மற்றும் மாத்தறையிலும் உள்ளன. இவ்வாறாக வவுனியாவில் நேற்று  ஏற்பட்ட நில அதிர்வு மிகிந்தலையில் உள்ள புவி நடுக்கப் பதிவுக் கருவியில் பதிவாகியுள்ளது.

    வவுனியாவில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் மதவாச்சி, கெப்பத்திகொல்லாவ ஆகிய பகுதிகளை அண்மித்து இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

    நேற்றிரவு 11.02 மணியளவில் 2.3 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாக புவிசரிதவியல், நில அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

    இதனால் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    எவ்வாறாயினும் இலங்கையின் அனைத்துப் பகுதியினரும் மிகப்பெரியவொரு புவிநடுக்கத்தை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. (ஏ)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.