Everything posted by நவீனன்
-
கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுவி அண்ணா- சமையல் செய்முறைகள் சில
கத்தரி மொச்சை பிரட்டல் தேவையானவை: பிஞ்சுக் கத்திரிக்காய் - கால் கிலோ, பச்சை மொச்சை - 100 கிராம், நாட்டுப் பூண்டு - 4 பல் (நசுக்கவும்), இஞ்சி - ஒரு துண்டு (சுத்தம் செய்து, நசுக்கவும்) நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, சோம்பு (பெருஞ்சீரகம்) - அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 10, நாட்டுத் தக்காளி - 4, நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கத்திரிக்காய், சின்ன வெங்காயம், நாட்டுத் தக்காளியை மீடியம் சைஸில் நறுக்கவும். பச்சை மொச்சையை வேகவைக்கவும். வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, சோம்பு தாளிக்கவும். சோம்பு சிவந்த பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்க்கவும். பாதி வதங்கிய பின் நறுக்கிய கத்திரிப்பிஞ்சு சேர்த்து, நன்றாக வதக்கி... வேகவைத்த மொச்சை, அரை கப் நீர் விட்டுக் கிளறவும். எல்லாம் நன்கு சேர்ந்து உதிர்உதிராக ஆன பின் இறக்கவும். மீதமுள்ள எண்ணெயைக் காய்ச்சி... நசுக்கிய பூண்டு, இஞ்சி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு புரட்டி கத்திரி - மொச்சை கலவையில் சேர்த்துக் கலந்து... கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். நாட்டுக்காய் கூட்டாஞ்சோறு தேவையானவை: அரிசி - 200 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம், மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு, புளி - நெல்லிக்காய் அளவு, வாழைக்காய் - ஒன்று, கத்திரிக்காய் - 4, இளம் முருங்கைக்காய் - ஒன்று, அவரைக்காய் - 10, வெள்ளை முள்ளங்கி - ஒன்று (இவற்றைப் பெரிய துண்டுகளாக நறுக்கவும்), முங்கைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு, நெய், எண்ணெய் - தலா 2 டீஸ்பூன், கடுகு - சிறிதளவு. வதக்க: நாட்டுத் தக்காளி - 3 (நறுக்கவும்), நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப். வறுத்து அரைக்க: தனியா - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10 (அல்லது காரத்துக்கேற்ப), தேங்காய் - அரை மூடி (சிறிய மூடி போதும்... துருவிக்கொள்ளவும்), சின்ன வெங்காயம் - 4, நாட்டுத் தக்காளி - ஒன்று. செய்முறை: அரிசியுடன், துவரம்பருப்பு, கொஞ்சம் உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், தேவையான தண்ணீர் சேர்த்து வேகவிடவும். அகலமான மண்சட்டி (அ) அடி கனமான பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை சிவக்க வறுத்து விழுதாக்கவும். அதே மண்சட்டியில் சிறிதளவு எண்ணெய் விட்டு தக்காளி, வெங்காயத்தை வதக்கவும். இத்துடன் நறுக்கிய காய்கள், முருங்கைக்கீரை சேர்த்து தண்ணீர் தெளித்து, முக்கால் பதமாக வெந்த பின் புளிக்கரைச்சல், தேவையான உப்பு, மஞ்சள்தூள், அரிசி - பருப்பு கலவை சேர்க்கவும். பின்னர், அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் வேகவிட்டு இறக்கவும். நெய்யை காயவிட்டு, கடுகு தாளித்து, கூட்டாஞ்சோறில் சேர்த்து, சூடாகப் பரிமாறவும்.- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
கறிவேப்பிலை பூரி தேவையானவை: கோதுமை மாவு - கால் கிலோ கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு மிளகு - அரை டீஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கறிவேப்பிலை, மிளகு, சீரகத்தைச் சேர்த்து வறுத்து சூடு ஆறியதும், மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும். இனி கோதுமை மாவுடன் அரைத்த பொடி, உப்பு, தண்ணீர் சேர்த்து மாவாகப் பிசைந்து கொள்ளவும். பிறகு மாவை சிறு சிறு உருண்டைகளாகக்கி பூரிகளாக தேய்த்து, எண்ணெயில் சுட்டெடுக்கவும். ஊறுகாய், உருளைக்கிழங்கு கிரேவி, தயிர்ப் பச்சடி, சென்னாவுடன் சேர்த்துப் பரிமாறவும். மட்டன் கொத்துக்கறி தேவையானவை: கொத்துக்கறி - கால் கிலோ சின்ன வெங்காயம் - 200 கிராம் இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் பட்டை - ஒரு துண்டு, கிராம்பு - 4 மஞ்சள்தூள் - சிறிதளவு பூண்டு - 10 பல் (தட்டிக்கொள்ளவும்) உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை: மட்டன் கொத்துக்கறியை இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். தண்ணீரை இறுத்து கொத்துக்கறியை மட்டும் எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, பட்டை, கிராம்பு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, சோம்புத்தூள் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். இத்துடன் வேக வைத்த கொத்துக்கறியைச் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு மிதமான தீயில் வேக வைக்கவும். பச்சை வாசனை போனதும் இறுதியாக தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.- சமையல் செய்முறைகள் சில
மிளகுக் குழம்பு தேவையானவை: புளி - சிறிய எலுமிச்சையளவு உப்பு - தேவையான அளவு மஞ்சள்தூள் - சிறிதளவு அரைக்க: எண்ணெய் - சிறிதளவு மிளகு - 2 டீஸ்பூன் மல்லி (தனியா) - 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன் தாளிக்க: நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் வெந்தயம் - அரை டீஸ்பூன் பெருங்காயம் - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிதளவு எண்ணெயில் நன்றாக மணம் வரும் வரை வறுத்து, ஆறியவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். புளியை சிறிது தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். புளிக்கரைசலுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல், அரைத்து வைத்துள்ள விழுது முதலியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும் குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் சமயம் அடுப்பிலிருந்து இறக்கவும். குறிப்பு: இந்தக் குழம்பு ஒரு வாரத்துக்கு நன்றாக இருக்கும். தேவையென்றால், தாளிக்கும்போது தோலுரித்த 10 பூண்டுப் பல் சேர்த்துக் கொள்ளலாம்.- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
சுண்டைக்காய் வற்றல் தேவையானவை: சுண்டைக்காய் - 100 கிராம் தயிர் - ஒரு கப் உப்பு - ஒரு டீஸ்பூன் செய்முறை: சுண்டைக்காய்களைக் கழுவி காம்பை நீக்கி விட்டு, ஒரு கல்லால் எல்லா சுண்டைக்காயையும் தட்டி, வெயிலில் காய வைக்கவும். காய்ந்த சுண்டைக்காய்களை, உப்பு மற்றும் தயிருடன் கலந்து ஒரு நாள் ஊற வைக்கவும். பின்னர் தயிரிலிருந்து எடுத்து வெயிலில் காய வைக்கவும். பிறகு மீதமுள்ள தயிரில் போடவும். இவ்வாறு தயிர் வற்றும் வரை ஊறவைத்து காயப்போடவும். சுண்டைக்காய்களை நன்றாக காய வைத்து எடுத்து வைக்கவும். இதை எண்ணெயில் பொரித்து தயிர் சாதத்துடன் சாப்பிடலாம். காய்ந்த சுண்டைக்காய்களை புளிக்குழம்பில் சேர்த்தால், நல்ல சுவையுடனும் மணத்துடனும் இருக்கும். பிரெட் ஆனியன் பொடிமாஸ் தேவையானவை: பிரெட் - 10 நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 பச்சைமிளகாய் - 3 துண்டுகளாக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன் தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் உளுந்து - அரை டீஸ்பூன் கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன் சீரகம் - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை : பிரெட்டை நீங்கள் விரும்பும் வடிவில் துண்டுகளாக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயைக் கீறிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்துத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். பிறகு பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, பிரெட் துண்டுகள் சேர்த்துக் கிளறவும். இறுதியாக எலுமிச்சைச்சாறு ஊற்றிக் கிளறி கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.- சமையல் செய்முறைகள் சில
முருங்கை பூ சூப் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : முருங்கை பூ – 2 கைப்பிடி புளி – சிறிய எலுமிச்சை பழ அளவு தக்காளி – 1 ( நறுக்கி கொள்ளவும்) ரசப்பொடி – 2 தேக்கரண்டி வேகவைத்த துவரம் பருப்பு – 2 தேக்கரண்டி( சிறதளவு நீரில் கரைத்து கொள்ளவும்) உப்பு – சுவைக்கு தாளிக்க : மிளகு – 1 தேக்கரண்டி ( தூளாக்கவும்) சீரகம் – அரை தேக்கரண்டி நெய் – 1 தேக்கரண்டி செய்முறை : * புளியை சிறிதளவு நீரில் கரையுங்கள். அத்துடன் முருங்கை பூ, தக்காளி, ரசப்பொடி கலந்து நன்கு கொதிக்க வையுங்கள். பருப்பு கரைசல், உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். * கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தாளிக்க வேண்டிய பொருட்களையும் சேர்த்து தாளித்து சூப்பில் சேருங்கள். * இதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். சூப்பாகவும் பருகலாம். சளி, இருமலுக்கு சுவையான மருந்து இது.- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
மாம்பழ பிரஞ்சு டோஸ்ட் சான்விச் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : பால் – 1 கப் முட்டை – 1 தேன் – 2 ஸ்பூன் ஏலக்காய், பட்டை தூள் – ஒரு சிட்டிகை மாம்பழம் – 1 வெண்ணெய் – 2 ஸ்பூன் செய்முறை : • மாம்பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். • ஒரு கிண்ணத்தில் பால், முட்டை, தேன், ஏலக்காய், பட்டை தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பால் மிதமான சூட்டில் இருக்க வேண்டும். • முட்டை சேர்க்க விரும்பாதவர்கள், 1 ஸ்பூன் கார்ன்ஃப்லார் (அ) கஸ்டர்ட் பொடி சேர்த்து செய்யலாம். • தோசை கல்லில் வெண்ணெய் போட்டு ரொட்டி துண்டுகளை முட்டை கலவையில் முக்கி எடுத்து, தோசைக்கல்லில் இரு புறமும் மிதமான சூட்டில் டோஸ்ட் செய்யவும். • டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளில் நடுவில் நறுக்கிய மாம்பழ துண்டுகளை வைத்து பரிமாறவும். • உங்களுக்கு பிடித்த எந்த பழங்களை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்- சமையல் செய்முறைகள் சில
மட்டன் கொத்துக்கறி தேவையானவை: கொத்துக்கறி - கால் கிலோ சின்ன வெங்காயம் - 200 கிராம் இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் பட்டை - ஒரு துண்டு, கிராம்பு - 4 மஞ்சள்தூள் - சிறிதளவு பூண்டு - 10 பல் (தட்டிக்கொள்ளவும்) உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை: மட்டன் கொத்துக்கறியை இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். தண்ணீரை இறுத்து கொத்துக்கறியை மட்டும் எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, பட்டை, கிராம்பு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, சோம்புத்தூள் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். இத்துடன் வேக வைத்த கொத்துக்கறியைச் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு மிதமான தீயில் வேக வைக்கவும். பச்சை வாசனை போனதும் இறுதியாக தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கிப் பரிமாறவும். மணத்தக்காளி வற்றல் தேவையானவை: மணத்தக்காளிக் காய் - 200 கிராம் தயிர் - ஒரு கப் உப்பு - ஒரு டீஸ்பூன் செய்முறை: மணத்தக்காளிக்காயை சுத்தம் செய்து கழுவி, தயிர், உப்புடன் சேர்த்து ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் மணத்தக்காளிக்காயை ஒரு தட்டில் பரப்பி, வெயிலில் காய விடவும். மாலையில் மீதமுள்ள தயிரில் போட்டு மூடி வைக்கவும். தயிர் வற்றும் வரை மணத்தக்காளியை ஊற வைத்து வெயிலில் காய வைக்கவும். இரண்டு நாட்கள் வெயிலில் நன்றாக காய வைத்து எடுக்கவும். இந்த மணத்தக்காளி வற்றலை சிறிது நெய்விட்டு பொரித்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட வயிற்று வலி மற்றும் வயிற்றுப் புண் ஆறி விடும். இந்த வற்றலை எந்தக் காயைக் கொண்டும் செய்யும் புளிக்குழம்பில், தாளிக்கும்போது சேர்த்துக்கொண்டால், குழம்பு மணமாகவும் நல்ல சுவையுடனும் இருக்கும்.- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
சிக்கன் ப்ரை சமோசா- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
கொத்தவரங்காய் வற்றல் தேவையானவை: கொத்தவரங்காய் - அரை கிலோ உப்பு - ஒன்றரை டீஸ்பூன் புளிக்காத தயிர் - 2 கப் செய்முறை: கொத்தவரங்காய் பிஞ்சாக இல்லாமல் பெரியதாக, முற்றியதாக இருந்தால் வற்றல் நன்றாக இருக்கும். கொத்தவரங்காயைக் கழுவி இரண்டு நுனிகளையும் நறுக்கி விடவும். ஒரு லிட்டர் தண்ணீரைக் கொதிக்க வைத்து, இதில் அரை டீஸ்பூன் உப்பு, மற்றும் கொத்தவரங்காயைச் சேர்த்து பாதி அளவு வேக விடவும். பிறகு கொத்தவரங்காயை தண்ணீர் வடிக்கும் தட்டில் கொட்டி தண்ணீரை வடிக்கவும். பிறகு இதை வெயிலில் நன்றாக காய வைக்கவும். கொத்தவரங்காயுடன் மீதமுள்ள ஒரு டீஸ்பூன் உப்பு மற்றும் தயிர் சேர்த்து நன்றாக ஒட்டுமாறு பிசறி வெயிலில் காய வைக்கவும். மாலையில் எடுத்து மீண்டும் அதே தயிரில் போட்டு வைக்கவும். மறுநாள் மீண்டும் வெயிலில் வைக்கவும். இதே போல தயிர் வற்றும் வரை ஊற வைத்து வெயிலில் காய விடவும். காய்ந்த கொத்தவரங்காயை எண்ணெயில் அப்பளம் பொரிப்பது போல் பொரித்து எடுக்கவும். பொரிக்கும்போது அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும். இல்லையென்றால், வற்றல் கருகி கசப்பு ருசியைக் கொடுக்கும். இந்த வத்தலை தயிர் சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கறிவேப்பிலை இறால் தேவையானவை: இறால் - கால் கிலோ மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது - அரை டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு - அரை டீஸ்பூன் மிளகுத்தூள் - கால் டீஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவு - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எலுமிச்சை - ஒன்றில் பாதி பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்) முட்டை - ஒன்று (உடைத்து நன்கு கலக்கி வைக்கவும்) பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 10 கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: இறாலை சுத்தம் செய்து கொள்ளவும். தேவையானவற்றில் கொடுக்கப்பட்டுள்ள எலுமிச்சைச் சாறு தவிர்த்து, மற்ற எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். அரை மணி நேரம் ஊற விடவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊறிய இறாலைச் சேர்த்துப் பொரித்தெடுத்து வைக்கவும். பரிமாறும் போது எலுமிச்சைச்சாறு தெளித்துப் பரிமாறவும்.- சமையல் செய்முறைகள் சில
கறிவேப்பிலைக் கோழி தேவையானவை: சிக்கன் - அரை கிலோ இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு சின்ன வெங்காயம் - 100 கிராம் மல்லித்தூள் (தனியாத்தூள் ) - ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் - கால் டீஸ்பூன் மிளகு - ஒரு டீஸ்பூன் சோம்பு - அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: சிக்கனை சுத்தம் செய்து விருப்பமான வடிவில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிக்கன், இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும். ஆறியதும் பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறிய சிக்கனை சேர்த்து வதக்கவும். இத்துடன் அரைத்த விழுதைச் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை கிளறவும். மிதமான தீயில் சிக்கனை வேக விடவும். தேவையென்றால், தண்ணீர் விட்டுக் கொள்ளலாம். கலவை கிரேவி பதத்தில்தான் வர வேண்டும். இறக்குவதற்கு முன் எலுமிச்சைச்சாறு ஊற்றி இறக்கிப் பரிமாறவும். மா வற்றல் தேவையானவை: பெரிய கிளிமூக்கு மாங்காய் - 5 கல் உப்பு - முக்கால் கப் மோர் - அரை கப் செய்முறை: மாங்காயை நன்றாகக் கழுவி துடைத்துக் கொள்ளவும். தோலுடன் நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய மாங்காய்த் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, இதில் உப்பு, மோர் ஊற்றிப் பிசிறி மூடி போட்டு ஒரு நாள் ஊற வைக்கவும். மறுநாள் மாங்காய்த் துண்டுகளை உப்பு நீரிலிருந்து எடுத்து, வெயிலில் காய வைக்கவும். மாலையில் மாங்காய்த் துண்டுகளை இதே உப்பு நீரில் மீண்டும் போட்டு மூடி வைக்கவும். இவ்வாறு தொடர்ந்து பாத்திரத்தில் உள்ள உப்பு நீர் வற்றும் வரை மாங்காய் வத்தலை ஊறவைத்து காயப்போடவும். பிறகு மாங்காய் வற்றலை இரண்டு நாள் வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கவும். உப்பு சரியாக இருந்தால், மா வற்றல் ஒரு வருடம் வரை கெட்டுப் போகாது. காய்ந்த மா வற்றல்களை பாத்திரத்தில் அடைத்து வைக்கவும். இந்த மா வற்றலைக் கொண்டு, சாம்பார், புளிக்குழம்பு செய்யலாம். புளிக்குழம்பு செய்யும் போது மாங்காய் சேர்ப்பதால் தனியாக புளி சேர்க்கத் தேவையில்லை. மா வற்றலைக் கொண்டு சாம்பாரை காய்கறி சாம்பார் செய்வது போல செய்யவும். சாம்பார் வைப்பதற்கு முன் மா வற்றலை தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். மாங்காய் மலிவாக கிடைக்கும்போது இந்த வற்றலை போட்டு வைத்துக் கொண்டால், வருடம் முழுவதும் மாங்காய் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் செய்யப்படும் அவியல் கூட நன்றாக இருக்கும். ஊற வைத்த மா வற்றலில் ஊறுகாயும் போடலாம்.- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
கத்திரிக்காய் வற்றல் தேவையானவை: கத்திரிக்காய் - ஒரு கிலோ புளி - பெரிய எலுமிச்சையளவு உப்பு - ஒரு கைப்பிடி செய்முறை: கத்திரிக்காயைக் கழுவி இதன் காம்பை மட்டும் நறுக்கி விடவும். சதைப்பகுதியை நீளவாக்கில் நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும். தண்ணீரில் போட்டு வைப்பதால், கத்திரிக்காய் கறுத்துப் போகாது. புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவு தண்ணீரைக் கொதிக்க வைத்து, இதனுடன் ஊற வைத்த புளித்தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்தவுடன் நறுக்கிய கத்திரிக்காய்த் துண்டுகளைப் சேர்த்து வேக விடவும். பாதி வெந்தவுடன் கத்திரிக்காயை தண்ணீர் வடிக்கும் தட்டில் கொட்டி ஆற விடவும். பிறகு கத்திரிக்காயை தட்டில் ஒவ்வொன்றாகப் பரப்பி வைத்து வெயில் காய வைக்கவும். இரண்டு மூன்று நாட்கள் காய வைத்து எடுத்து வைக்கவும். இந்தக் கத்திரிக்காய் வற்றலை வைத்து நாம் தினசரி செய்யும் காய்கறி சாம்பார் போலவே சாம்பார் செய்யலாம். கத்திரிக்காய் வற்றலை சாம்பார் செய்வதற்கு முன் சிறிது நேரம் தண்ணீரீல் ஊற வைத்துக் கொள்ளவும். இந்த வற்றலை நன்றாக காயவைத்து எடுத்து வைத்தால், ஒரு வருடம் வரை கெடாது. காய்கறி விலை அதிகமாக விற்கும் காலங்களில் இந்த வத்தலை உபயோகித்துக் கொள்ளலாம். கத்திரிக்காய் புளிக்குழம்பு செய்யும் போது இந்த வத்தலை சேர்த்து குழம்பு செய்யலாம்.- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
மரவள்ளி கிழங்கு தோசை தேவையானவை: மரவள்ளி கிழங்கு - ஒரு கிலோ இட்லி அரிசி - 200 கிராம் சிவப்புமிளகாய் / வர மிளகாய் - 4 சீரகம் - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு பெரிய வெங்காயம் - 25 கிராம் எண்ணெய் - 20 மில்லி லிட்டர் உப்பு - தேவையான அளவு செய்முறை: அரிசியை நன்றாகக் கழுவி தண்ணீரில் 3 மணிநேரம் ஊறவைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மரவள்ளி கிழங்கை தண்ணீரில் சேர்த்து, அதன் தோலை நீக்கவும். பிறகு, கிழங்கினை நன்றாகக் கழுவி, சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். துண்டுகளாக்கிய மரவள்ளிக் கிழங்குடன், ஊறவைத்த அரிசி, சிவப்புமிளகாய், கறிவேப்பிலை, உப்பு, சீரகம், தண்ணீர் சேர்த்து வடை மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும். பிறகு இதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் ஒரு தோசைக் கல்லில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும், தயாராக வைத்திருக்கும் மாவினை தோசை போல் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும். சூடான தோசையை கெட்டியான தேங்காய் சட்னியுடன் பரிமாறவும். பப்பாளி அல்வா தேவையானவை: பப்பாளி(காய்) - 250 கிராம் பால் - 500 மில்லி லிட்டர் சர்க்கரை - 125 கிராம் ஏலக்காய் - 5 கிராம் முந்திரி - 10 கிராம் திராட்சை - 5 கிராம் நெய் - 100 மில்லி லிட்டர் வெண்ணிலா எசன்ஸ் - கால்டீஸ்பூன் ஆரஞ்சு கலர் - ஒரு சிட்டிகை செய்முறை: பப்பாளியின் தோலை சீவி, விதைகளை நீக்கி, மீடியம் துண்டுகளாக கட் செய்யவும். கட் செய்த பப்பாளி துண்டுகளை, துருவிக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு நெய்யை சூடாக்கி, முந்திரி, திராட்சையை பொன்நிறமாக வறுத்துக்கொள்ளவும். மற்றொரு வாணலியில் பப்பாளி துருவல், பால் சேர்த்து நன்றாக வேகவிடவும். கலவையில் பால் கொதிவந்ததும் ஏலக்காய், ஆரஞ்சு கலர், வெண்ணிலா எசன்ஸ் ஆகியவற்றை சேர்த்து வேகவிடவும். சிறிது நேரம் கழித்து அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும். சர்க்கரை கரைந்து கலவை கெட்டியாகும் பொழுது, நெய்யை சேர்த்து, நன்றாக கிளறவும். பாத்திரத்தில் கலவை ஒட்டாமல் வரும்வரை கிளறியதும், வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.- கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- கருத்து படங்கள்