Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Joined

  • Last visited

Everything posted by நவீனன்

  1. மெது அடை : செய்முறைகளுடன்...! June 02, 2016 தேவையானப் பொருட்கள் பச்சரிசி - அரை கப் புழுங்கலரிசி (இட்லி அரிசி) - அரை கப் துவரம் பருப்பு - கால் கப் கடலைப்பருப்பு - கால் கப் உளுத்தம் பருப்பு - கால் கப் பெரிய வெங்காயம் - 2 இஞ்சி - ஒரு பெரிய துண்டு பூண்டு - 4 (அ) 6 தேங்காய் - ஒரு மூடி சீரகம் - ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி பெருங்காயப் பவுடர் - அரை தேக்கரண்டி சிவப்பு மிளகாய் - 15 உப்பு - ஒரு மேசைக்கரண்டி கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு தாளிக்க - நல்லெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு செய்முறை : தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். அரிசி வகைகளைத் தனியாகவும், பருப்பு வகைகளைத் தனியாகவும் குறைந்தது இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்கவும். (பருப்பு வகைகளை ஹாட் பாக்ஸில் ஊற வைத்தால் நன்றாக ஊறிவிடும்). வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும். சிறிதளவு தேங்காயைப் பொடியாக (பல் பல்லாக) நறுக்கிக் கொள்ளவும். மீதமுள்ள தேங்காயைத் துருவி வைக்கவும். அரிசி மற்றும் பருப்பு வகைகள் ஊறியதும் நன்றாகக் களைந்துவிட்டு அரிசியைத் தனியாகவும், பருப்பு வகைகளைத் தனியாகவும் அரைத்துக் கொள்ளவும். (பருப்பை மிகவும் மசிய (நைசாக) அரைக்க வேண்டாம்). சிவப்பு மிளகாயுடன் உப்பு, தோல் சீவிய இஞ்சி, தோலுரித்த பூண்டு, சீரகம், பெருஞ்சீரகம், பெருங்காயம், சிறிது கறிவேப்பிலை மற்றும் சிறிது கொத்தமல்லித் தழை சேர்த்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். அத்துடன் சிறிது கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து வதக்கவும். அரைத்து வைத்துள்ள அரிசி மாவுடன் பருப்பு மாவு, மிளகாய் விழுது சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். அதனுடன் துருவிய தேங்காய், வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்துக் கலந்து கொள்ளவும். (உப்பு, உறைப்பு சரி பார்த்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் மேலும் சிறிது உப்பும், சிவப்பு மிளகாய்ப் பொடியும் சேர்த்துக் கொள்ளலாம்). மீதமிருக்கும் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழையையும் பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்துக் கலக்கவும். தோசைக் கல்லை நன்றாகக் காயவிட்டு, கலந்து வைத்துள்ள அடை மாவை எடுத்து ஊற்றவும். அதன் மேல் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, சிறு பற்களாக நறுக்கி வைத்துள்ள தேங்காயைத் தூவி, இரண்டு பக்கமும் சிவக்க வேகவிட்டு எடுக்கவும். சுவையான அடை தயார். தொட்டுக் கொள்ள அவியல், சர்க்கரை, மிளகாய்ப் பொடி போன்றவை பொருத்தமாக இருக்கும். விரும்பினால் சூடான அடையின் மீது சிறிது வெண்ணெய் அல்லது சீஸ் தடவி பரிமாறலாம்.
  2. வாழைப்பூ பிரியாணி தேவையானவை: வாழைப்பூ - ஒன்று (சிறியது) சீரகசம்பா அரிசி - அரை கிலோ பட்டை - 5 (சிறியது) கிராம்பு - 5 ஏலக்காய் - 2 பிரிஞ்சி இலை - ஒன்று நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 3 நீளமாக நறுக்கிய தக்காளி - 3 கீறிய பச்சைமிளகாய் - 3 இஞ்சி-பூண்டு விழுது - 5 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் (காரத்துக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்) கரம் மசாலாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன் ஜாதிக்காய்த்தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி புதினா இலை - 5 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன் நெய் - 4 டீஸ்பூன் எலுமிச்சைப்பழம் - ஒன்றில் பாதி தயிர் - 3 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு அரைக்கத் தேவையானவை: சின்ன வெங்காயம் - 200 கிராம் முந்திரி - 7 கசகசா - ஒன்றரை டீஸ்பூன் சோம்பு - ஒன்றரை டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன் புதினா - 2 டீஸ்பூன் செய்முறை : அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். வாழைப்பூவை நரம்பு நீக்கி இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். சீரகசம்பா அரிசியை ஐந்து நிமிடம் ஊறவைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, அரைத்த பேஸ்ட், தயிர் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, ஜாதிக்காய்த்தூள், கொத்தமல்லித்தழை, புதினா இலை சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை வதக்கி, வாழைப்பூ சேர்த்து வதக்கவும். இத்துடன் அரிசி சேர்த்து ஒரு பங்கு அரிசிக்கு 2 பங்கு தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு முக்கால் பதம் வேகும் வரை சாதாரண மூடியால் குக்கரை மூடவும். இடையில் மூடியை திறந்து அரிசியைக் கிளறவும். முக்கால் பதம் வெந்ததும் நெய் ஊற்றி மெதுவாக கிளறி, எலுமிச்சைச் சாறு, ஊற்றி குக்கருக்கான மூடியை வைத்து மூடி, வெயிட் போட்டு தீயைக் குறைத்து 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும். ஐந்து நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
  3. வாழைப்பூ பொரியல்: செய்முறைகளுடன்...! தேவையானப் பொருட்கள் வாழைப்பூ - கால் கிலோ (மொட்டில் இருந்தே எடுத்துக்கலாம்) சின்ன வெங்காயம்-10 காய்ந்த மிளகாய்-2 கடலைபருப்பு-ஒரு தேக்கரண்டி தேங்காய் பூ-கொஞ்சம் உப்பு தாளிக்க : எண்ணெய் -ஒரு தேக்கரண்டி கடுகு கருவேப்பிலை செய்முறை : வாழைப்பூ ,கடலை பருப்பு இரண்டையும் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு ,காய்ந்த மிளகாய் தாளிக்கவும்.. அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் ,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.. வதங்கியதும் வேகவைத்த வாழைப்பூவை இதில் சேர்த்து கிளறிவிடவும்... கடைசியில் தேங்காய் பூ சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும்.. சுவையான வாழைப்பூ பொரியல் ரெடி
  4. சிக்கன் ரோல் மைதா மாவு - ஒரு கப் உப்பு - தேவையான அளவு தண்ணீர் - முக்கால் கப் எண்ணெய் - சிறிதளவு செய்முறை: மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஆப்பத்துக்கு மாவு பக்குவத்துக்கு ஒன்றாக கலக்கி வைக்கவும். ஆப்பச் சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி லேசாக எண்ணெய் தெளித்து உள்ளே மாவை ஊற்றி, மெல்லிய ஆப்பங்களாக வேக வைத்து எடுக்கவும். ரோலின் உள்ளே வைக்கும் பூரணத்துக்கு: கோழி கைமா - 250 கிராம் பீன்ஸ் - 6 முட்டைகோஸ் - கால் கப் பெரிய வெங்காயம் - ஒன்று கேரட் - ஒன்று குடமிளகாய் - ஒன்று இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் பச்சைமிளகாய் - 3 மிளகுத்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 4 டீஸ்பூன் செய்முறை: காய்கறிகள் மற்றும் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கழுவிய கோழி கைமாவுடன் மஞ்சள்தூள், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக அவித்துக் கொள்ளவும். பிறகு வெளியே எடுத்து வாணலியில் சேர்த்து ஈரம் போக நன்கு வதக்கி எடுக்கவும். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், நறுக்கிய காய்கறிகள், பச்சைமிளகாய் சேர்த்து, காய்கறிகள் அரைவேக்காடு வேகும் வரை வதக்கவும். இத்துடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும். ரோல் செய்ய தேவையானவை: முட்டையின் வெள்ளைக் கரு - 2 உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு பிரெட் கிரம்ப்ஸ் - 2 கப் எண்ணெய் - தேவையான அளவு மைதா பேஸ்ட் - சிறிதளவு செய்முறை: வேக வைத்து எடுத்த ஒரு ஆப்பத்தின் உள்ளே கோழி பூரணத்தை நீள வடிவில் வைக்கவும். இனி ஆப்பத்தின் வலது, இடது ஓரங்களை உள்நோக்கி மடிக்கவும். பிறகு ஆப்பத்தின் மேல் பகுதியை உள் நோக்கி மடக்கி, இறுதி ஓரங்களை மைதா பேஸ்ட் தொட்டு ஒட்டி விடவும். ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கரு, உப்பு, மிளகுத்தூளை ஒன்றாக சேர்த்துக் கலக்கி வைக்கவும். இதில் தயார் செய்த சிக்கன் ரோல்களை முக்கியெடுத்து பிரெட் கிரம்ப்ஸில் புரட்டி வைக்கவும். இனி, வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் சிக்கன் ரோல்களைச் சேர்த்து பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். சூடாக தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
  5. ராகி சேவை-வெஜ் சாலட் தேவையானவை: ராகி சேவை - ஒரு பாக்கெட் நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை, சிவப்பு, மஞ்சள் குடமிளகாய் - ஒரு கப் புராக்கோலி - 10 பூக்கள் வெள்ளரித் துண்டுகள் - கால் கப் வேக வைத்த முளைக்கட்டிய பயறு - கால் கப் உப்பு - தேவையான அளவு மிளகு, சீரகத்தூள் - 2 டீஸ்பூன் எண்ணெய் - 2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு - 4 டேபிள்ஸ்பூன் புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு செய்முறை: ராகி சேவையை சுடுநீரீல் சேர்த்து 3 முதல் 5 நிமிடம் வரை வைத்திருந்து எடுத்து விடவும். நீரை வடித்து விட்டு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தனியே வைக்கவும். புரோக்கோலி பூக்களைப் பிரித்து உப்பு நீரில் போட்டு எடுக்கவும். காய்கறிகளை ஓரளவு பெரிய துண்டுகளாக நறுக்கி, ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். சிறிய பாட்டிலில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகு, சீரகத்தூள், எண்ணெய் சேர்த்து நன்கு குலுக்கிக் கொள்ளவும். இனி பெரிய பாத்திரத்தில் காய்கறிகள், பயறு, புதினா மற்றும் எலுமிச்சைச் சாறு, கலவையை ஊற்றிக் குலுக்கவும். 10 நிமிடம் கழித்து சாப்பிடவும். விருப்பப்பட்டால், மிக்ஸ்டு ஹெர்பஸ் சேர்க்கலாம். டயட்டில் இருப்பவர்கள், மதிய உணவுக்கு இப்படி செய்து சாப்பிடலாம்.
  6. கடந்த சில நாட்களாக முகநூலில் இருந்து இணைக்கும், முன்னர் இணைத்த வீடியோ இணைப்புகள் தெரியுது இல்லை யாழில்.
  7. பனீர் மஞ்சூரியன் தேவையானவை: பனீர் - 200 கிராம் மரவள்ளிக் கிழங்கு மாவு - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் நெய் - 2 டேபிள்ஸ்பூன் பெரிய வெங்காயம் - ஒன்று குடமிளகாய் - ஒன்று இஞ்சி - அரை அங்குலம் பூண்டு - 10 பல் தக்காளி சாஸ் - சிறிதளவு பச்சைமிளகாய் - 3 செய்முறை: வெங்காயம், குடமிளகாயை சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பனீருடன் மரவள்ளிக் கிழங்கு மாவு, உப்பு, மிளகுத்தூள், சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசிறி 10 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு தோசைக் கல்லில் சிறிது நெய் விட்டு, இதில் ஊற வைத்த பனீர் சேர்த்து இரண்டு பக்கமும் நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் மீதமுள்ள நெய்யைச் சேர்த்து, இதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயைச் சேர்த்து வதக்கவும். இதில் வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். தேவையான உப்பு மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும். வறுத்த பனீரை சேர்த்துக் கிளறி இறக்கவும். சுவையான பேலியோ பனீர் மஞ்சூரியன் தயார். குறிப்பு: பனீருக்கு தேவையான அளவு உப்பை முதலிலேயே சேர்த்து உள்ளதால் காய்களுக்கு தேவையான உப்பு மட்டும் சேர்க்கவும்.
  8. வாழைப்பூ சப்பாத்தி தேவையானவை: கோதுமை மாவு - கால் கிலோ பாசிப்பருப்பு - 5 டீஸ்பூன் நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப் (ஒரு கைப்பிடி) சின்ன வெங்காயம் - 7 பச்சைமிளகாய் - ஒன்று பூண்டு - 2 பல் சீரகம் - 2 சிட்டிகை உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு தயிர் - 2 டீஸ்பூன் செய்முறை : வாழைப்பூவை நார் நீக்கி பொடியாக நறுக்கிவைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவைத்து தண்ணீரை வடித்துக்கொள்ளவும். இத்துடன் வாழைப்பூ, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, சீரகம், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி இறக்கவும். சூடு ஆறியதும், மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். இதனை கோதுமை மாவுடன் சேர்த்து, தயிர், உப்பு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். பிறகு சப்பாத்திகளாக சுட்டெடுத்துப் பரிமாறவும். குறிப்பு: வாழைப்பூ சீக்கிரத்தில் கறுத்துவிடும். எனவே, மாவு பிசைந்ததும் சப்பாத்தி போடுவது நல்லது.
  9. மரவள்ளிக்கிழங்கு தோசை தேவையானவை: இட்லி மாவு - 100 கிராம் மரவள்ளிக்கிழங்கு - 100 கிராம் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 3 கறிவேப்பிலை - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் சின்ன வெங்காயம் - 50 கிராம் உப்பு - தேவையான அளவு கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன் (வரகரிசி மாவு) செய்முறை: மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து பொடியாக நறுக்கி, மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். இதை இட்லி மாவுடன் சேர்த்துக் கலக்கவும். அரிசி மாவையும் இட்லி மாவுடன் சேர்த்துக் கலக்கவும்.வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் பொடியாக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், சீரகம், கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கி இட்லி மாவில் சேர்த்து உப்பு போட்டு கலக்கி 2 மணி நேரம் ஊறவிடவும். பிறகு, மாவை கல்லில் ஊற்றி தோசையாக வார்த்தெடுத்து, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும். குறிப்பு: ஊற வைத்த அரிசி, உளுந்துடன், நறுக்கிய கிழங்கைச் சேர்த்து அரைத்து, புளிக்க வைத்தும் தோசையாக வார்க்கலாம். அரிசி மாவை சேர்த்தால் தோசை மொறு மொறுவென்று வரும்.
  10. வாழைப்பூ சைவ மீன் குழம்பு தேவையானவை: சின்ன வெங்காயம் - 100 கிராம் தக்காளி - ஒன்று கீறிய பச்சை மிளகாய் - 2 புளி - 50 கிராம் பூண்டு - 10 பல் மீன் குழம்புத்தூள் - 3 டீஸ்பூன் தேங்காய் - அரை மூடி சோம்பு - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் கடுகு - கால் டீஸ்பூன் வெந்தயம் - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய்- தேவையான அளவு உப்பு - தேவையான அளவு பொரிக்க: வாழைப்பூ - தேவையான அளவு கார்ன்ஃப்ளார் - ஒரு பங்கு மைதா - ஒரு பங்கு உப்பு - தேவையான அளவு இஞ்சி-பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் (காரத்துக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்) எண்ணெய் - தேவையான அளவு மீன் குழம்பு மசாலாத்தூள் செய்ய: மல்லி (தனியா) - அரை கிலோ காய்ந்த மிளகாய் - 300 கிராம் மஞ்சள்தூள் - 25 கிராம் கடலைப்பருப்பு - 25 கிராம் துவரம்பருப்பு - 25 கிராம் வெந்தயம் - 10 கிராம் சீரகம், மிளகு - 25 கிராம் செய்முறை : பொரிக்கக் கொடுத்துள்ள பொருட்களில் வாழைப்பூவை நரம்பு நீக்கி சுத்தம் செய்துகொள்ளவும். எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாகக் கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு வாழைப்பூவை சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து வைக்கவும். மீன்குழம்பு செய்ய கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி சோம்பு, சின்ன வெங்காயம் 10 சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்து வைத்துக்கொள்ளவும். புளியைக் கரைத்து வைத்துக்கொள்ளவும். இத்துடன் அரைத்த கலவை, உப்பு சேர்த்துக் கலக்கி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய். தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு கலந்து வைத்துள்ள புளிக்கரைசல், தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைக்கவும். குழம்பின் பச்சை வாசனை போனதும் பொரித்த வாழைப்பூவை இத்துடன் சேர்த்து மீண்டும் 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கிப் பரிமாறவும்.
  11. முளைப்பயறு சலாட் தேவையானவை: முளைகட்டிய பச்சைப் பயறு – ஒரு கப், வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், சாட் மசாலா பொடி – 2 டீஸ்பூன், கொத்தமல்லி, உப்பு – தேவையான அளவு. செய்முறை: முளைகட்டிய பச்சைப் பயறை வேகவிடவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங் காயம், தக்காளி, எலுமிச்சைச் சாறு, சாட் மசாலா பொடி, உப்பு கலந்து வைக்கவும். பரிமாறும்போது கொத்தமல்லி தூவி அலங்கரித்து பரிமாறவும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.