-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
1984 - 1987 காலப்பகுதியில் இயக்கங்களால் கொடுக்கப்பட்ட தண்டனைகள் பொதுவாக இராணுவத்ததோடு தொடர்புவைத்துக்கொண்டு இயக்க நடவடிக்கைகளை காட்டிக்கொடுத்தல் (ஒத்தோடிகள்) தொடர் கொள்ளைகள், பாலியல் வல்லுறவுகள் இப்படியானவர்கள் மீது உடனடியாக இருந்தது. அதிலும் பல, தடவைகள் எச்சரிக்கை விடப்பட்டு, தொடர்ச்சியின் காரணமாக மரண தண்டனை வழங்கப்பட்டது. மரணதண்டனை கொடுத்ததை இன்று நான் ஆதரிக்கவில்லை. அன்று 16,17 வயதில் ஆழமாக சீர்தூக்கி பார்க்கும் பக்குவமும் இருக்கவில்லை. அன்றைய சூழ்நிலையில் கெரில்லா போராட்ட முறைகள் உலகம் முழுவதும் அப்படித்தான் இருந்தன என்று நினைக்கிறன். வெறும் கோழி திருடியவன், ஆடு திருடியவன் எல்லாம் மின்கம்பத்தில் கட்டப்படவில்லை. எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, பச்சைமட்டை பிரயோகப் படுத்தப்பட்டு தண்டனைகள் கொடுக்கப்பட்டது. எங்கள் ஊரில் ஒரு இளம்பெண் (எனது வகுப்பு தோழி, பெயர் சொல்வதை தவிர்க்கிறேன்) இந்திய இராணுவ சிப்பாய் ஒருவரோடு காதல் போன்ற ஒரு உறவில் இருந்தார். இந்திய ராணுவம் தோழியின் வீட்டு வாசலில் அடிக்கடி வாகனத்தை நிறுத்தி, களைப்பாறி, இளைப்பாறி போவார்கள். ஊர் மக்களுக்கும் கூட இதில் அதிருப்தி இருந்தது. அன்றைய நாவட்குழி இயக்க பொறுப்பாளர் அருள் ஓரிரு தடவைகள் தோழியின் வீட்டுக்கு சென்று தாய் தகப்பன் சகோதரர்களோடு உறவாடி எச்சரிக்கை விடுத்து இருந்தார். இருந்தும் இந்திய ராணுவம் வீட்டுக்கு வருவதை நிறுத்தவில்லை. தோழியும் இதை சீரியஸாக எடுக்கவில்லை. கடைசியில் பொறுப்பாளர் தோழியின் வீட்டு வாசலில் வைத்தே அவருக்கு தண்டனை வழங்கினார். அதிசயமாக அந்த பிள்ளையும் முகத்தில் பாரிய முகம் சிதைந்த காயத்துடன் உயிர் தப்பியது. இதேபோல வெள்ளையன் என்று அழைக்கப்பட்ட (பின்னாளில் EPRLF / EPDP அட்டகாச குழு உறுப்பினர் ) பல சிறிய திருட்டு செயல்களுக்காக, பெண்கள் சேஷ்ட்டை காரணங்களுக்காக இயக்க முகாமுக்கு அழைக்கப்பட்டு பச்சை மட்டை தண்டனை வழங்கப்பட்டு கொஞ்ச காலம் அமைதியாக இருந்தார். இந்திய ராணுவம் வந்தவுடன் EPDP, EPRLF குழுக்களோடு சேர்ந்தது ஊரில் பெரும் அட்டகாசங்கள் செய்தார். இரண்டு, மூன்று அப்பாவி இயக்க ஆதரவாளர்கள் கொலைகளோடு கூட அவனின் பெயர் பேசப்பட்டது.
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
பெயர் தெரியாத முகநூல் தளத்தில், யாரோ நா... தாரி (மொக்கை) கருத்தை இப்படி ஒரு சமூகத்தின் கொள்கை தீர்மானமாக நீங்கள் எடுத்து காவித்திரிவது சிரிப்பை உண்டாகிறது சகோ. இதை எழுதியவன் நோக்கம் கூட இந்த சமூகத்தை அசிங்கப்படுத்திடுவதாகவும் இருக்கலாம்.
-
`தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதாம்; உண்மைதான், ஏனெனில்...' - நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் உரை!
சிங்கம் அங்க போயும் Take 1... Scene 1... Camera ... Action பாணியில் நடிச்சு கதை வசனம் பேசி இருக்கு போல.
-
கனேடிய பிரதமர் மார்க் கார்னியின் உலக கவனத்தை ஈர்த்த உரை
தம்பர்... வழமையான வழ வழ ... கொழ கொழ
-
யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
படிக்க ஆர்வம் உள்ள பிள்ளை எங்க இருந்தாலும் படிக்கும் ... ஏகலைவன் தூர நின்று துரோணரின் கலையை பயின்றதும், ஆபிரகாம் லிங்கன் தெரு விளக்கு வெளிச்சத்தில் படித்ததும் போல இந்த பிள்ளை எதோ செய்ய ட்ரை பண்ணி இருக்கு போல. இங்கு எந்த ஒரு பல்கலை கழக விரிவுரையிலும் யாரும் போய் உட்கார்ந்து இருந்து படிப்பிப்பதை கேட்டுக் கொண்டு இருக்கலாம். ID கார்டு பார்த்து உள்ளே அனுப்புவதில்லை. மாணவ விடுதிக்கு எப்படி போனார் என்பது தான் பெரிய கேள்வி?
-
கனேடிய பிரதமர் மார்க் கார்னியின் உலக கவனத்தை ஈர்த்த உரை
இன்றைய திகதிக்கு உலக அரங்கின் நிகழ்வுகளுக்கு மத்தியில் இப்படியான உரையை நான் வாக்களித்த கட்சியின் பிரதமர் ஒருவர் உரையாற்றினார் என்ற பெருமையோடு...
-
வணக்கம்உறவுகளே
மீள்வருகை நல்வரவாக அமையட்டும் !!!
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மனையாளின் பிரிவால் துயருற்று இருக்கும் மோகன் அண்ணாவிற்கும், அவர் குடும்பத்தினருக்கும் எனது குடும்பத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலிகள். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும். 🙏 💐
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
இந்த திரியை ஆரம்பத்தில் மேலோட்டமாக வாசித்து இருந்தேன். தேர் சில்லு உருள ஆரம்பித்து விட்டது. சிறிய அளவு என்றாலும் முடிந்த அளவு என்னுடைய பங்களிப்பும் இருக்கும். (உங்களை போலவே வேறு இரண்டு திட்டங்களில் இணைந்துள்ளேன்) **பனர், இலச்சினை இவற்றில் யாழ்க்களத்தின் சின்னம் கூட சிறப்பாக இருக்கும். அனைவருக்கும் பாராட்டுக்கள். ❤️🙏
-
கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
இதை விட மோசமான கருத்தை நம்மட "பைத்தியன்" அர்ச்சுனா பாராளு மன்றத்தில் வைத்து அறுத்து உறுத்து பேசினான். அதுவும் ஹரிணியின் ஒருபால் இன சேர்க்கை சம்பந்தமான நக்கல், நையாண்டி...
-
ஐ.நா.சாசனத்தை மீறிச் செயற்பட முடியாது: ஹக்கீம் காட்டம்
தம்பர் தன்னுடைய shoe lace அவிழ்ந்துவிட்டது, ஓடிவந்து கட்டி விடுங்கோ பாய் என்று கேட்டால்... சிங்கம் இப்பவே ஓடிப்போய் குனிந்து கட்டிவிடும்.
-
தாலிக்கொடியை யுவதியிடம் இழந்த யாழ் வங்கி ஊழியர்
அல்லது "விட்டுப்போட்டு" கதை விடுறாரோ 😉
-
தாலிக்கொடியை யுவதியிடம் இழந்த யாழ் வங்கி ஊழியர்
அதுசரி களவா உல்லாசம் , சல்லாபம், டண்டணக்கா அனுபவிக்க போனவர் எதுக்கு மனைவியின் 9 பவுன் தாலிக்கொடியை கொண்டு போனார். சைத்தாங்கே பச்சி!!!
-
இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்
இன்னும் ஒரு காரணம் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகை காரியாலயம் இந்திய ராணுவத்தால் அடித்து நொறுக்கப்பட்டது. அதோடு புலிகளின் தொலை தொடர்பு கோபுரம் ஒன்றையும் குண்டு வைத்து தகர்த்து இருந்தார்கள். இந்த சம்பவங்களின் + திலீபன் அண்ணா, பன்னிரு வேங்கைகள் சம்பவங்களின் பின்னரே போர் மூண்டது.
-
இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்
நான் அப்போது வட்டுகோட்டை தொழில்நூட்ப கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தேன். விடுதலை புலிகளின் இளம் போராளிகள் மூவரை வாகனத்தில் செல்லும் போது இந்திய துணை ராணுவ குழு ஒன்று இடைமறித்து தாக்கி கொன்று இருந்தார்கள். பத்திரிகைகளில் படத்தோடு செய்திகள் வாசித்தது ஞாபகம். நடந்தது வடமராட்சி, சுழிபுரம் அண்டிய பகுதியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.