Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா தீர்மானம்: சிறிலங்கா அரசு குத்துக்கரணம் – பீரிசையும் காலை வாரியது

Featured Replies

ஜெனிவா தீர்மானம்: சிறிலங்கா அரசு குத்துக்கரணம் – பீரிசையும் காலை வாரியது [ வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2012, 00:06 GMT ] [ கார்வண்ணன் ]

G-L-peris-colombo.jpgஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தீர்மானத்தை ஏற்க முடியாது என்றும் அதனை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிப்பதாகவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் வெளியிட்ட கருத்துகள் அனைத்தும் சிறிலங்கா அரசின் அதிகாரபூர்வமான கருத்தல்ல என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்தவாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிப்பதாகவும், இதற்கு கட்டுப்படப் போவதில்லை என்றும் ஜெனிவாவில் இருந்து திரும்பிய சிறிலங்கா அரசகுழு கடந்த திங்கட்கிழமை கொழும்பில் நடத்திய சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரிஸ் கூறியிருந்தார்.

இந்தச் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர்களான மகிந்த சமரசிங்க மற்றும் நிமால் சிறிபால டி சில்வா போன்றோரும் இதே கருத்தையே வெளியிட்டனர்.

சிறிலங்கா அரசின் இந்தக் கருத்து வெளிநாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் கடும் விமர்சனங்களை எற்படுத்தியுள்ள நிலையில் சிறிலங்கா அரசாங்கம் நேற்று திடீரெனக் குத்துக்கரணம் அடித்துள்ளது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வெளியிட்ட கருத்தையே நிராகரித்து, அது அவரது தனிப்பட்ட கருத்து என்று காலை வாரிவிட்டுள்ளது.

சிறிலங்கா அமைச்சரவையின் முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் நேற்று கருத்து வெளியிட்ட பதில் அமைச்சரவைப் பேச்சாளரான லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன,

“ஜெனிவா தீர்மானம் குறித்த சிறிலங்கா அரசின் அதிகாரபூர்வமான கருத்து இன்னமும் வெளியிடப்படவில்லை.

சிறிலங்கா அரசின் கருத்து விரைவில் வெளியிடப்படும்..

இதுபற்றி சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் வெளியிட்ட கருத்துகள் அனைத்துமே அவர்களின் தனிப்பட்ட கருத்து“ என்று கூறியுள்ளார்.

திடீரென சிறிலங்கா அரசு இவ்வாறு அறிவித்திருப்பதன் பின்னணியில் வலுவான அழுத்தங்கள் இருந்திருக்கலாம் என்று கொழும்பு இராஜதந்திரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

http://www.puthinappalakai.com/view.php?20120330105888

  • தொடங்கியவர்

ஐ.நா. தீர்மானம் தொடர்பில் ஜி.எல்.பீரிஸ் சொன்னது அவர் தனிப்பட்ட கருத்து: லக்ஷ்மண் யாப்பா

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 29 மார்ச், 2012 - 14:44 ஜிஎம்டி


120329143322_lakshman_yappa_abeywardana_sri_lanka_304x171_bbc_nocredit.jpg

லக்ஷ்மண் யாப்பா அபெயவர்த்தன

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றியிருந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரிக்கும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியிருந்த கருத்து அவரின் தனிப்பட்ட கருத்தே ஒழிய இலங்கை அரசாங்கத்தின் முடிவை அது எவ்வகையிலும் பிரதிபலிக்கவில்லை என இலங்கை அமைச்சரவை சார்பாகப் பேசவல்ல அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா அபெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஐ.நா.மனித உரிமைக் கவுன்ஸில் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு இலங்கை அரசாங்கம் இதுவரை பதில் அளித்திருக்கவில்லை என்றும் அதன் உத்தியோகபூர்வ பதில் இனிதான் தெரிவிக்கப்படும் என்றும் யாப்பா கூறினார்.

ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேறியிருந்த நிலையில், அத்தீர்மானத்தை இலங்கை அரசு நிராகரிக்கும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸை மேற்கோள்காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

அது பற்றி பத்திரிகையாளர் வினவியபோதே லக்ஷ்மண் யாப்பா அபெயவர்த்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

படிப்பினைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட வேண்டும் எனஐ.நா.மனித உரிமைக் கவுன்ஸில் தீர்மானம் வலியுறுத்துகிறது.

ஆனால் எல்.எல்.ஆர்.சி.யின் பரிந்துரைகள் வருவதற்கு முன்பாகவேகூட அப்பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது போன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கிறது என்று யாப்பா தெரிவித்தார்.

படிப்பினைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது உத்தியோகபூர்வ பதிலை இன்னும் வழங்கியிருக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் கூறினார்.

எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதறான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துவருவதாகவும், அப்பரிந்துரைகளை செயல்படுத்துவதில் இலங்கைக்குப் பொருத்தமான ஒரு வழிமுறை கையாளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

bbc tamil

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனிப்பட்ட கருத்துகள பீரிஸ் தன்னட மனுசியிட்ட சொல்ல வேண்டியதுதானே. பிறகேன்சிறப்பு செய்தியாளர் மாநாடு? அதுசரி பீரிசுக்கு எத்தனை மனுசிகள்....?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.