Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தயானுக்கு எதிராக குற்ற விசாரணை சட்ட திட்டங்களுக்கு கீழ் வழக்கு தொடர ராஜபக்ஸ நிர்வாகம் தயார்?

Featured Replies

குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்

GTN.special_CI.jpg

பிரான்ஸிற்கான இலங்கைகத் தூதுவர் தயான் ஜயதிலக்கவிற்கு எதிராக குற்ற விசாரணை சட்டதிட்டங்களின் கீழ் ஏன் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லையென வெளிவிவகார அமைச்சின் பதில் பணிப்பாளர் நாயகம் ஜி.எஸ். பிரசன்ன கடிதமொன்றின் மூலம் கேள்வியெழுப்பியுள்ளார் என குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வருகிறது.

பரிஸ் நகரிலுள்ள தூதரக அலுவலகத்தில் இடம்பெற்றுவரும் முறைகேடுகள் குறித்து அவர் இந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தக் கடிதம் ஐந்து பக்கங்களுக்கு எழுதப்பட்டுள்ளது.

இதில் மிக முக்கியமாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பரிஸ் அலுவலகத்திற்கு வருவதற்கு முன்னர் வெள்ளையடிக்கப்பட்டது குறித்தும் குறிப்பாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் ஊடகவியலாளர்களுக்கும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் எதிராக செயற்பட்டுவந்த ராஜபக்ஷ நிர்வாகம், தற்போது இராஜதந்திர சேவையில் தங்களுக்கெதிராக கிளம்பியுள்ள குரல்களை நசுக்குவதற்கு ஆரம்பித்துள்ளது என குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த கடிதத்தின் திரைமறைவில், அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு எதிரானவர்களும், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவின் ஆதரவாளர்களும் இருப்பதாகத் தெரியவருகிறது. இதே வேளை ரோஹித போகோல்லாகம பாதுகாப்புச் செயலாளருக்கு நெருக்கமானவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனைத்தவிர, இந்தக் கடிதத்தின் பின்னணியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சஜின்வாஸ் குணவர்தன செயற்பட்டுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைத்த மற்றுமொரு தகவலும் கூறுகிறது. சஜின்வாஸ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஆலோசகராவார்.

தயான் ஜயதிலக்க இதற்கு முன்னர் ஜெனீவா நகரில் மனித உரிமைப் பேரவையின் இலங்கைக்கான பிரதிநிதியாக பணியாற்றியிருந்தார். இந்தக் காலத்தில் அனுப்பப்பட்ட பெயர் குறிப்பிடாத மொட்டை தொலைநகல் (ஃபெக்ஸ்) ஒன்றை அடிப்படையாக வைத்தே தயான் ஜயதிலக்க அந்தப் பணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.

இதன்பின்னர் சிங்கப்பூர் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரைக்காக சென்ற தயான் ஜயதிலக்க, ராஜபக்ஷ அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வந்தார். 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ராஜபக்ஷ அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறக்கூடாது என்ற நிலைப்பாட்டில் தயான் ஜயதிலக்க காணப்பாட்டார்.

எனினும், சிறிது காலம் கடந்து சென்றதும் தயான் ஜயதிலக்கவை மீண்டும் பிரான்சுக்கான இலங்கைத் தூதுவராக ராஜபக்ஷ நிர்வாகம் நியமித்தது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு நெருக்கமான ஹெல உறுமயவாதியான மாலிந்த செனவிரத்னவின் கருத்துபடி, தயான் ஜயதிலக்க இந்தியாவிற்கு சார்பானவராகவே கருதப்பட்டார். சிங்கள இனவாதிகள் யுத்த வெற்றிக்குச் சொந்தம் கொண்டிய சந்தர்ப்பத்தில் கூட தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் எனக் கூறிவந்த தயான் ஜயதிலக்கவை சிங்கள இனவாதிகள் துரோகியாகவுமே பார்த்து வருகின்றனர்.

அத்துடன், ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கப் பிரேரணையிலுள்ள ஆரோக்கியமான ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென தயான் ஜயதிலக்க கூறிய கருத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆத்திரமடைய வைத்திருந்தது.

இந்த நிலையில், அரசாங்கத்திற்குள் இருந்து எழுப்பும் எதிர்ப்புக் குரல்களையும் நசுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதை தற்போது ராஜபக்ஷ ஆதரவாளர்கள் உணர்த்தி வருகின்றனர்.

இதன் அடிப்படையிலேயே தூதுவர் தயான் ஜயதிலக்கவிற்கு எதிராக குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென தற்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜனநாயக குரலை ஒடுக்கி, ஏகாதிபத்திய ஆட்சியை நிலைநிறுத்தவே ராஜபக்ஷ நிர்வாகம் தற்போது முனைத்துவருவதாக மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.