Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைப் பயணத்தில் இருந்து விலகியது ஜெயலலிதா அம்மையாரின் நல்லதொரு முடிவு

Featured Replies

‘இந்தியா - சிறீலங்கா சதுரங்க ஆட்டத்தில் தமிழர்கள் மீண்டும் பகடைக் காய்களா?’ என கடந்த இதழில், இந்திய அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயணம் குறித்து எமது சந்தேகத்தை எழுப்பியிருந்தோம். காரணம், ஜெனீவாவில் அமெரிக்கப் பிரேரணையை ஆதரித்து இந்தியா வாக்களித்ததன் பின்னர், இந்தியாவின் வருகையாளர்களை வேண்டத்தகாதவர்களாகவே சிறீலங்கா நோக்கும் நிலை இருந்தது. அவ்வாறான கருத்துக்கள் தான் சிறீலங்கா உயர்மட்டத் தலைவர்களின் குரல்களிலும் ஒலித்தது.

ஆனால், மாறாக இந்திய நாடாளுமன்றக் குழுவினரின் வருகையை சிறீலங்காவின் ஆட்சியாளர்கள் (தீவிர இனவாதிகளைத்தவிர) மகிழ்ச்சியுடன் வரவேற்க முனைந்தது மட்டுமல்ல, தற்போதைய காலகட்டத்தில் இந்தியக் குழுவினரின் இந்தப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதாகவும் இந்தியா - சிறீலங்கா உறவை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கை இதுவென்றும் வெளியிட்ட கருத்துக்கள் இந்திய நாடாளுமன்றக் குழுவினரின் பயணத்தின் நோக்கம் தொடர்பாக பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதனால், இந்தப் பயணம் தமிழர்களுக்கு எந்தவித சாதகத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. அத்துடன், தமிழர்களுக்கு சார்பான நிலைப்பாட்டைக்கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருந்தனர். எனவேதான், அவ்வாறான ஒரு சந்தேகத்தை கடந்த இதழில் எழுப்பியிருந்தோம்.

எனினும், சிறீலங்கா அரசின் இனவிரோதப் போக்குக்கு எதிராக தொடர்ச்சியாக குரல்கொடுத்து வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களும் தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை அதுவும் ஈழத் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டிருக்கும் ஒருவரும், சிறந்த ஊடகவியலாளருமான வில்லியம் ரவி பேர்னாட் என்பவரை இந்த அணியில் இணைத்திருந்தது, இந்தப் பயணத்தின் ஊடாக ஒரு சில உண்மைகள் என்றாலும் வெளிவரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.

jayalalitha.jpg

இந்நிலையில்தான், இந்திய நாடாளுமன்றக் குழுவின் பயணத்தின் உண்மை நோக்கத்தைப் புரிந்துகொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, தனது குழுவினர் இந்தப் பயணத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்று பயணக்குழுவில் இருந்து தமது கட்சியின் உறுப்பினரை விலக்குவதாக அறிவித்தார். ‘போரினால் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாட வாய்ப்பு இல்லாததாலும், ராஜபக்ச அரசு தொடர்ந்து தமிழர் விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் இலங்கை செல்லும் குழுவில் இருந்து அ.தி.மு.க. விலகுகிறது’ என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளமையானது தமிழ் மக்களால் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தப் பயணத்தில் இருந்து விலகிக்கொள்வது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்ட வெட்டவெளிச்சமான அறிக்கையினால் இந்திய மத்திய அரசே ஆடிப்போயுள்ளது. ‘நாடாளுமன்றக் குழுவினரின் சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரலை பார்க்கும்போது, இது ஏதோ சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் சுற்றுப்பயணம் போலவும், இது சிறீலங்கா அரசால் அவர்களுக்கு சாதகமாக ஒரு கருத்து இந்தியாவில் ஏற்பட தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் போலவும் இருப்பதாக’ குற்றம்சாட்டியுள்ள ஜெயலலிதா அம்மையார், ‘இக்குழுவில் பத்திரிகையாளர்கள், மனித உரிமைகளில் ஆர்வம் உடையவர்கள், சுதந்திரமான கண்காணிப்பாளர்கள் யாரும் இடம்பெறாதது தனது ஐயத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்றும் இந்தக் குழுவின் பயணமும், ஏற்கனவே தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு, அதிபர் ராஜபக்சவுடன் விருந்துண்டு, பரிசுப் பொருட்களை பெற்றது போல் ஒரு கண்துடைப்பு ஏற்பாடாக ஆகிவிடும் என்று தான் கருதுவதாகவும்’ கூறி அந்தக் குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்தமையானது இந்தியப் பயணக் குழுவினரின் நிகழ்ச்சி நிரலையும் மாற்றியமைக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.

அத்துடன், தி.மு.க உட்பட தமிழகத்தின் கட்சிகளும் இந்த ஏமாற்றுப் பயணத்தில் இருந்து விலகவேண்டிய நிர்ப்பந்தத்தை தமிழக முதல்வரின் அதிரடியான இந்த முடிவு எடுக்கவைத்துவிட்டது. இப்போது தி.மு.கவும் பயணத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே, இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றும் இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரை மற்ற நாடுகளுடன் இணைந்து சிறீலங்கா அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் இயற்றியவர் ஜெயலிதா.

ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு ஆதரவான நிலையில் இறுதிவரை இந்திய அரசு இருந்தபோதும், தமிழக முதல்வரின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக இறுதியில் அந்த முடிவை மாற்றவேண்டிய நிர்ப்பந்தத்தை மத்திய அரசுக்கு ஏற்படுத்தியவர் ஜெயலலிதா அம்மையார் என்றே கருதப்படுகின்றது.

இவ்வாறு எப்போது அதிரடியான முடிவுகளை துணிச்சலாக எடுக்கக்கூடிய தமிழக முதல்வரின் இப்போதைய நடவடிக்கையும் ஒரு துணிச்சலான, உண்மைகளைப் போட்டுடைத்த நல்லதொரு நடவடிக்கையாகவே பார்க்க முடிகின்றது. ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்க மறுத்துள்ளது மட்டுமல்ல, அதற்கு எதிராக நில ஆக்கிரமிப்புக்களையும், கடத்தல்களையும், காணாமல்போகச் செய்தல்களையும், இராணுவ மயமாக்கல்களையும் தொடர்ந்து கொண்டிருக்கும் சிறீலங்கா அரசை காப்பாற்ற முனையும் இந்திய நாடாளுமன்றக் குழுவினரின் பயணத்தின் உண்மை முகத்திரைகளைக் கிழித்தெறிய தமிழக முதலமைச்சர் எடுத்த இந்த துணிச்சலான முடிவை ஈழத் தமிழர்கள் நன்றியோடு, பாராட்டக் கடமைப்பட்டவர்கள்.

ஆசிரியர் தலையங்கம்

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.