Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நியமன உறுப்பினர்கள் அறிவிப்பு

Featured Replies

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு வலுவூட்டும் வகையில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுக்குரிய நியமன அவை உறுப்பினர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் ஏப்ரல் 13ம் நாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளதாவது :

நியமன உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பல்வேறு பட்ட தகமைகளும் நல்ல அனுபவமும் படைத்தவர்கள்.

இவர்கள் தமிழர்கள் அனுபவித்து வரும் மனித உரிமைப் பிரச்சனைகள் பற்றி நன்கு அறிந்து, அவை தொடர்பான முன்னெடுப்பு களில் ஈடுபாடு கொண்டு தம் பங்களிப்பை வழங்கி வருபவர்களாவர்.

இந்திய நாட்டுக்குரிய நியமன உறுப்பினர்கள்:

(1) பேராசிரியர் திருமதி சரஸ்வதி ராஜேந்திரன் – தமிழ் நாட்டின் ஓர் சிறந்த கல்விமான். பட்டப்படிப்பு விரிவுரையாளர்.மனித உரிமை ஆர்வலர். மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள் தொடர்பான பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தமிழக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவு மைய ஒருங்கிணைப்பாளர்.

(2) திரு. செல்வராஜ் முருகையன் – தகவல் தொழில் நுட்பத்துறையில் ஒரு வல்லுநர், நிறுவனத்தின் உரிமையாளர். மாவீரன் முத்துகுமார் பற்றிய ஆவணப் படத்தின் தயாரிப்பாளர் . மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர். தமிழக நாடுகந்த தமிழீழ அரசாங்கத்தின் தன்னார்வத் தொண்டர்.

(3) திருமதி பாண்டிமாதேவி சுப்பிரமணியன் – சென்னை சட்டக் கல்லூரியின் சட்டத்துறைப் பட்டதாரி. சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர். மாணவர் இயக்கங்களில்ஈடுபாட்டுடன் இயங்கியவர். தமிழக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவு மையத்துடன் அதன் ஆரம்ப காலத்திலிருந்து செயற் பட்டு வருபவர். சென்னை லோயலாக் கல்லூரியின் முன்னை நாள் பகுதி நேர விரிவுரையாளர்.

(4) திரு. சிறீதர் சுந்தரம் – கட்டடப் பொறியியலாளர், விழித்தெழு இளைஞர் இயக்கத்தின் முன்னோடி,மனித உரிமைகளுக்காக போராடும் செயற் பாட்டாளர்.

(5) செல்வி சுதா காந்தி தியாகராஜன் – சட்டத்துறையிலும் வர்த்தக துறையிலும் பட்டம் பெற்றவர். மதிப்பீட்டு கணக்காளராக பணிபுரியும் இவர் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்.

தென்னாபிரிக்க நாட்டுக்குரிய நியமன உறுப்பினர்:

(1) திரு. கிறிஸ் கோவிந்தர் – 1976 ஆம் ஆண்டு தொடக்கம் தென் ஆபிரிக்காவில் சட்ட வல்லுனர். இணைத் தலைவர்-தென்னாபிரிக்க சட்ட மன்றம். நீதி ஆணைக்குழு உறுப்பினர்;. சிறிலங்காவில் அமைதிக்கும் நீதிக்குமான ஆதரவுக் குழுவின் உறுப்பினர்.

இவர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவை உறுபினர்களாக வரவேற்பதில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பெருமையடைகின்றது.

இவர்கள் ஒவ்வொருவரும் நீண்ட காலம் தமிழீழ விடயங்கள் தொடர்பாகக் காட்டி வரும் ஈடுபாட்டின் மூலம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாதையில் சென்று தமிழீழ மக்களின் சுதந்திரத்துக்காக உழைப்பதற்கு அவர்கள் தயாராக உள்ளனர் என்பது வெளிப்படுகின்றது.

எனவே, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இந்த நியமன உறுப்பினர் அனைவரையும் பாராட்டி நிற்கின்றது.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு பெறுவதற்கு பிரதமர் அலுவலகப் பேச்சாளர், திரு ஜெ. ஜெயபிரகாஷ் அவர்களுடன் தொடர்பு கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலை பேசி இலக்கம்: 646) 363-6418

http://nerudal.com/nerudal.45522.html

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றை கம்பனிக்கு ஒன்னே முக்கால் போஸ்டிங்கு..!அதும் முழுமையாக செயல்படுவதே கிடையாது.. மாதம் ஆனால் அன்பார்ந்த தமிழ் பேசும் மக்களே..! என அறிக்கை வேற.. இன்னேரம் ஈரான் ஈராக்கு கொரியா.. அண்டார்டிக்கா என அனைத்து நாடுகளுக்கும் பறந்து சென்று விளங்கபடுத்த வேணாமா..? அமைப்பை விரிவாக்க வேண்டாமா..? தமிழ்நாட்டில் ஆபீஸ் திறப்பதை விடுத்து வேற நாட்டில் திறங்கப்பா..! விளங்கபடுத்துங்கப்பா..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.