Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தண்ணீர் தண்ணீர்

Featured Replies

தண்ணீர் தண்ணீர்

ஆனாரூனா

இந்தியா பல தேசங்களாக, சமஸ்தானங்களாக, பாளையங்களாகப் பிரிந்து, முரண்பட்டு, மோதிக் கொண்டிருந்த சூழ்நிலைதான் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. இந்தியாவை ஒற்றுமைப் படுத்தியதுதான் (!) பிரிட்டிஷ் ஆட்சி மறைவதற்கு அடிப்படையாய் அமைந்தது.

பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகும், சுதந்திர(?) இந்தியாவிலும் மாநில, வட்டார உணர்வுகள், - தேசிய அல்லது பிரிவினை உணர்வுகள் இருப்பதால்தான் இந்திய தேசியத்தின் பெயரால் `தேசிய ஒருமைப்பாட்டின்’ பெயரால் `வலிமையான’ அகில இந்தியக் கட்சியாக காங்கிரஸ் இருக்க முடிந்தது. அதே காரணம்தான் பாரதீய ஜனதாவுக்கும் ஆசையை வளர்த்தது. பல தேசிய இனங்களுக் கிடையேயான முரண்பாடுகளும், மோதல்களும் இருக்கும் வரைதான் இந்த இரு கட்சி களுக்கும் ஆட்சிக் கனவு நீடிக்கும்.

தேசிய இனங்களுக்கிடையேயான முரண்பாடுதான், மொழி வழித் தேசிய உணர்வு தான் இந்தக் கட்சிகளின் தோல்விகளுக்கும் காரண மாகின்றன. ஆகவே `இந்திய தேசிய’ ஆதிக்க சக்திகள் தேசிய ஒருமைப் பாட்டை வலியுறுத்தும் அதே நேரம் தேசிய இனச் சிக்கல்களையும் வளர்த்துவிட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றன.

இந்த நாடகத்தின் ஒரு பகுதிதான் முல்லைப் பெரியாறு அணை, காவிரி நதிநீர் போன்ற சிக்கல்கள்... மொழிவழித் தேசிய அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டது இந்த தேசிய இனங்களின் வளர்ச்சிக்காக அல்ல. தமிழர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும், ஆந்திரமும் ஒன்றாக இருந்தால் இந்தி - இந்திய - இந்துத்துவ ஆதிக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்பதாலேயே மொழி வழி மாநிலப் பிரிவினைக்கு காங்கிரஸ் கட்சி தலையசைத்தது.

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நியாயங்கள் புறக்கணிக்கப் பட்டன. தேவிகுளம் பீர்மேடு எனும் மலைசார்ந்த தமிழ்ப் பகுதிகள் கேரளத்துக்குத் தரப்பட்டன. தமிழ்த் தேசிய உணர்வு கேள்வி எழுப்பிய போது இந்திய தேசிய ஒருமைப்பாட்டின் பெயரால் பெருந்தலைவர் காமராசர் பதிலளித்தார். ``குள மாவது குட்டையாவது, மேடாவது பள்ளமாவது. எது எங்கே இருந்தால் என்ன? எல்லாம் இந்தியா வுக்குள்தான் இருக்கிறது’’ என்றார் காமராசர். தேவிகுளம் பீர்மேடும், முல்லைப் பெரியாறும், காவிரியும், பொதுவாக கேரளமும், தமிழ்நாடும், கன்னடமும் இந்தியாவுக்குள் இருப்பதால்தான் இத்தனை சிக்கல்கள்; இத்தனை மோதல்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும் என்று கேட்கிறவர்களின் உணர்வுகளை ஒரேயடியாக அலட்சியப்படுத்தி விட முடியாது.

மாநிலப் பிரிவினையின் போது தமிழ்நாட்டில் தலைமைச் செயலாளராக இருந்தவர் வர்கீஸ். இவர் மலையாளி. தேவிகுளம் பீர்மேடு கேரளத்துக்குப் போவதில் இவர் பெரிதும் ஆர்வம் காட்டினார். தேவிகுளம் பீர்மேடு பகுதி கேரளத்துக்குத் தரப்படவில்லை என்றால் கேரளத்தைத் தனிமாநிலமாகப் பிரிப்பதில் அர்த்தமே இல்லை என்றார் வர்கீஸ்.

பிறகு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம். குறித்துப் பிரச்சனை வந்தது. அப்போது கேரள முதலமைச்சரும் மலையாளி. தமிழக முதலமைச்சரும் மலையாளி. தமிழக அரசின் சார்பாகப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட தலைமைச் செயலாளர் அந் தோணியும் மலையாளி. முதலமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள், பொறியாளர்கள் எல்லோருமே மலையாளிகளாக இருந்த சூழலில் எந்த உணர்வில் பேச்சு வார்த்தை நடந்திருக்கும்?

இந்தப் பிரச்சனையின் இன்னொரு பக்கம் தீவிர சிந்தனைக்குரியது.

கேரளத்தில் ஒரு மலையாளிதான் அந்த நாட்டின் முதலமைச்சராக முடிகிறது. கன்னடத்தில் ஒரு கன்னடியர்தான் முதலமைச்சராக முடிகிறது. ஆந்திரத்தில் ஒரு தெலுங்கர்தான் முதலமைச்சராக முடிகிறது. மராட்டியத்தில், வங்கத்தில்... என்று இந்தியாவின் எந்த நாட்டிலும் அந்தந்தத் தேசிய இனத்தலைவர்களே முதலமைச்சராக முடிகிறது. இதுதான் இயல்பானது; இதுதான் முறையானது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் யார் வேண்டுமானாலும் முதல்வராக முடிகிறது.

இது தமிழர்களை மானக்கேடானவர்களாகவும் மடையர்களாகவும் அடை யாளப் படுத்துகிறதா?

தமிழர்கள் விரிந்த சிந்தனையாளர்கள்; விசால மனம் படைத்தவர்கள் என்று உலகுக்கு உணர்த்துகிறதா? ஆனால் பண்பாடுள்ள மக்கள் வரலாறு முழுவதிலும் படையெடுப்பாளர்களாலும், போக்கிரிகளாலும் வெல்லப்படுகிறார்கள் என்பதற்கு எத்தனையோ சான்றுகள் உண்டு.

இந்த வரலாற்று ஆதாரங்களைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு `தேசிய உணர்ச்சி’ என்கிற பெயரில் முற்போக்குச் சிந்தனைகளுக்கும், புரட்சிகரமான இயக்கங்களுக்கும் எதிராகப் புரட்டுரை செய்கிறவர்களும், பாசிசத்தை ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள். இந்த போலித்தமிழர்களும் கூலித்தமிழர்களும் உண்மையில் தேசியப் பெருமிதத்தால் அவ்வாறு செய்யவில்லை. அவர்களின் நோக்கம் எல்லாம் புரட்சிகர உணர்வுகளை மழுங்கடிப்பதும், அழிப்பதும்தான்.

கம்பன் கவிநயத்தால் உயர்ந்த பீடத்தில் அமரத்தகுந்தவன்தான். ஆனால் தமிழுக்குத் தொண்டாற்றியதில் கால்டுவெல்லும், வீரமாமுனிவனும் மிக உயரத்தில் இருக்கிறார்கள். கம்பனோ பள்ளத்தாக்கில் விழுந்து விடுகிறான்.

தமிழினத்தை மானமும் அறிவும் உள்ள சுதந்திர இனமாக மாற்றுவதற்குப் போராடுவதில் தந்தை பெரியாருக்கு இணையாக யாருண்டு இங்கே?

ஆனால் பார்ப்பனிய பாசிஸ்ட்டுகளும், தமிழினத் துரோகிகளும் பெரியாரின் கருத்துக்களை எதிர் கொள்ள முடியாத போதெல்லாம் அவர் கன்னடத்துக்காரர் என்று கூறித் தங்கள் எஜமான விசுவாசத்தைக் காட்டிக் கொள்ளத் தவறியதில்லை.

இவர்களுடைய பெரியார் எதிர்ப்புக்கும் திராவிட இயக்க எதிர்ப்புக்கும் ஆணி வேராக, அச்சாணியாக இருப்பது தமிழ்த்தேசிய உணர்வல்ல, பாசிசப் பற்று; புரட்சிகரமான சிந்தனைகளின்மீதும் இயக்கங்களின் மீதும் உள்ள வெறுப்பு.

இவர்கள் இருத்தல்வாதிகள், அல்லது பிழைப்புவாதிகள். பெரியாரை விமர்சிப்பதன் மூலம் நாங்கள் அடிமைத் தொழிலுக்கும் அதைவிடக் கேவலமான காரியங்களுக்கும் பயன் படக்கூடியவர்கள் என்று யார் யாருக்கோ தெரியப்படுத்துகிறார்கள் என்பதே உண்மை!

தண்ணீர் எங்களுக்குத் (கேரளத்துக்கு) தேவைப்படுகிறதோ இல்லையோ, தமிழகத்துக்குப் பயன்படக் கூடாது என்கிற தோரணையிலேயே கேரளம் தொடர்ந்து சண்டித்தனம் செய்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று 30 ஆண்டுகளாகக் கேரளம் பிடிவாதம் செய்து கொண்டிருக்கிறது. அணை பலவீனமாக இருக்கிறது. நீர் மட்டத்தை உயர்த்தினால் அணை உடைந்து கேரளமே மூழ்கி விடும் என்பதுபோன்ற அதீதக் கற்பனைகளை முன் வைத்து முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்கிறது. அணை உறுதியாக இருப்பதாக வல்லுநர்கள் சோதித்து உறுதியளித்த பிறகும் கேரளம் ஒப்புக் கொள்ள வில்லை.

இதை எதிர்த்து தமிழக அரசு தொடுத்த வழக்கில், அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடி யாக உயர்த்திக் கொள்ள லாம் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால், நீதிபதிகள் சி.கே. தாக்கர், பி.கே.பாலசுப்பிர மணியன் ஆகியோர் தீர்ப்பளித்திருக்கிறார்கள்.

அந்தத் தீர்ப்பில் -

``நில நடுக்கம் உள்பட பல்வேறு கோணங்களில் அணையின் பாதுகாப்புக் குறித்து ஆராயப்பட்டிருக்கிறது. நீர் தேக்கி வைக்கும் உயரத்தை 142 அடியாக உயர்த்தினால் ஆபத்து ஏற்படும் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் கேரளம் இதில் முட்டுக்கட்டை போடும் வகையில் நடந்து கொள்வதாகவே அறிக்கையின் மூலம் தெரிகிறது.’’

- என்று தெளிவுபடுத்தி யிருக்கிறார்கள்.

(அணையின் நீர்த்தேக்க உயரத்தை 152 அடியாக உயர்த்த அனுமதிக்க வேண் டும் என்கிற தமிழக அரசின் கோரிக்கை முதல் கட்டமாக 142 அடியை எட்டியிருக் கிறது.)

ஆனால், உச்சநீதி மன்றத் தின் இந்தத் தீர்ப்பை முறியடிக்கக் கேரளம் துணிந்து நிற்கிறது. கேரள முதல்வர் உம்மன் சாண்டி அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டி அதன் அடிப்படையில் கேரள சட்டமன்றத்தில் கேரள மாநில அணைகள் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.