Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெளிவடையாத கேள்வி நாயகர்கள்

Featured Replies

தெளிவடையாத கேள்வி நாயகர்கள்

அன்னை பூபதியின் வணக்க நிகழ்வும் மக்கள் அரங்கமும் என்ற பெயரில் 22.04.2012 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி போகும் நகரில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. நானும் அங்கு போயிருந்தேன். குறைந்த அளவில் மக்கள் கலந்து கொண்டனர். பெண்கள் மூவர் மட்டும்தான் வந்திருந்தனர். எனக்குப் பக்கத்தில் இருந்தவருடன் "ஏன் பெண்கள் குறைவாகக் காணப்படுகின்றனர்"| என்றபோது. அவர் அக்கம் பக்கம் பார்த்தபின், "கூட்டத்தைக் குழப்பவெண்டு ஒரு குழு(ளு) இருக்கு. அதுகள் வந்து அடி, தடி என்று இறங்கினால் பெண்களுக்கு கஸ்டம்தானே"| ஏன்றார்.

அகவணக்கத்தைச் தொடர்ந்து. ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது, அதன்பின் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமார் அவர்கள் உரை காணொளியில் போடப்பட்டது. சிறதுநேரம் செல்ல நுழைவாயில் பகுதியில் இருந்து சிறு சலசலப்புத் தோன்ற எல்லோரும் திரும்பிப்பார்த்தார்கள். கூட்டமாகக் கொஞ்சப்பேர் வந்துகொண்டிருந்தனர். எனக்கருகில் இருந்தவர் "இதுதானண்ணை கூட்டத்தைக் குழப்பிற குழு. இதுகள் யேர்மனியில் நடந்த, நாடுகடந்த தமழீழ அரசாங்க ஆரம்பக் கூட்டத்திலிருந்து இன்றுவரை எல்லாக் கூட்டத்துக்கும் வருகிறதும் கேள்விகள் கேட்பதும் அடாவடித்தனம் பண்ணுவதும்தான் வேலை"| என்றார். "கேள்வி கேட்பதும் தெளிவடைவதும் நல்லதுதானே" என்றேன். அவர் சிரித்தார். "ஏன் சிரிக்கிறீர்கள்" என்றேன். "அவர்கள் கேள்வி மட்டும்தான் கேட்பார்கள். தெளிவடையிறதன்மை வந்தவரில் ஒருவருக்காவது இருக்காவென்று தெரியவில்லை. இருந்தால் திரும்பத் திரும்ப வந்து கேள்வி கேட்பார்களா?" என்றார்.

இச்சந்தர்ப்பத்தில் வந்தவர்கள் "எங்களிடம் பல கேள்விகள் இருக்கு"| என்று தொடங்கினார்கள். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் "ஒவ்வொருவராகக் கேள்வியை கேழுங்கள்" என்றார். பிரதமரிடம் கேட்ட கேள்விக்கு, பிரதமர் பதிலளித்தார்.

மீண்டும் சலசலப்புத் தோன்றியது. திரும்பிப்பார்த்தோம். குண்டாந்தடி தாங்கிய பொலிசார் வந்துகொண்டிருந்தனர். என்னத்துக்கு வந்தார்கள் என்று தெரியவில்லை. சில நிமிட இடைவெளியில் அவர்கள் திரும்பிவிட்டார்கள். கூட்ட முடிவில் விசாரித்தபோது, கூட்டம் குழப்பவந்தவர்களில் சிலர் கத்தியுடன் வந்ததாகவும் அதை அறிந்து பொலிசார் வர, கத்தியுடன் வந்தவர்கள் கம்பி நீட்டிவிட்டதாகவும் அறிய முடிந்தது.

இலங்கையின் அரசியில் நிலை எப்படி இருக்கு என்று அறியக் கூட்டத்துக்குப் போன எனக்கு பயமும் மனக்குழப்பமும் ஏற்பட்டது. தமிழ்மக்களின் அரசியில் ஞானம் இதுதானா? விடுதலைத் தீயைச் சுற்றி விட்டில் பூச்சிகள் வாழ்ந்திருக்கிறதே என்று கவலைப்பட்டேன். எனது கவலையை நாடுகடந்த அரசாங்கப் பிரதிநிதியுடன் பேசியபோது. அவர் "நாங்களும் பொறுத்துப் பொறுத்துப் பார்க்கிறம். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. சட்டத்தை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறோம் "என்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்துக் கடைசியில்........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.