Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலம் கடந்தேனும் ஞானம் பிறக்குமா?

Featured Replies

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் கூட்டத் தொடரில் சிறீலங்கா மீதான பிரேரணையை அமெரிக்கா கொண்டுவர முனைந்தபோது, அதனைத் தடுத்து நிறுத்துவதற்காகவும் தோற்கடிப்பதற்காகவும் சிறீலங்காவில் இருந்து ஏராளமான அமைச்சர்களும் பிரமுகர்களும் களமிறக்கப்பட்டிருந்தனர்.

இதில் முஸ்லீம் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதின் உட்பட சில முஸ்லீம் பிரமுகர்களும் அடங்கியிருந்தனர். அமெரிக்காவின் பிரேரணையை அவர்களால் தோற்கடிக்க முடியாது போனாலும், சிறீலங்காவிற்கு ஆதரவாக 15 நாடுகளை வாக்களிக்க வைக்க அவர்களால் முடிந்திருந்தது. இதில் ஒன்பது நாடுகள் முஸ்லீம் நாடுகள். இந்த நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொடுத்த பெருமை தங்களுக்குத்தான் உள்ளதென இந்த இரு அமைச்சர்களுமே தம்பட்டம் அடித்திருக்கின்றார்கள்.

இதனைவிட கொழும்பிலும் பிற பகுதிகளிலும் மகிந்தவிற்கு ஆதரவாகவும் ஜெனீவாப் பிரேரணைக்கு எதிராகவும் முஸ்லீம்கள் தொடர்ச்சியான பல போராட்டங்களை நடத்தியிருந்தார்கள். இவைகள் நடைபெற்று இரண்டு மாதங்கள் கூட கடந்துவிடவில்லை, இன்று அதே மகிந்தவிற்கு எதிராக குரலெழுப்ப வேண்டிய நிலைக்கு இரண்டு அமைச்சர்கள் மட்டுமல்ல இலங்கையிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லீம்களும் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

தமிழர் தாயகம் எங்கும் புத்தர் சிலைகளை நிறுவி சிங்கள பௌத்த நாடாக இலங்கைத் தீவை மாற்ற முனைந்துவரும் மகிந்த அரசும், பௌத்த மதவாதிகளும் தற்போது முஸ்லீம்களின் பக்கம் தமது பார்வையைத் திருப்பியுள்ளனர். அந்த வகையில் தற்போது தம்புள்ளை நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றை அகற்றுவதற்கான முதல் முயற்சியில் மகிந்தவின் ஆசீர்வாதத்துடன் பௌத்த பிக்குகள் களம் குதித்துள்ளனர். தம்புள்ளைப் பள்ளிவாசல் பிக்குகளால் சேதமாக்கப்பட்ட சம்பவமும் அதனை அங்கிருந்து அகற்றவேண்டும் என சிறீலங்காவின் பிரதமர் ஜயரட்ண போட்டுள்ள உத்தரவும் முஸ்லீம்களை கொதிப்படைய வைத்துள்ளது.

01-81.jpg

தாங்கள் காட்டிய நன்றிக்கு சிங்கள ஆட்சியாளர்கள் தரும் பிரதிஉபகாரம் இதுதானா என கொந்தளிக்கின்றார்கள். ‘ஜெனீவாவில் உங்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்ததற்கு பரிசு இதுதானா?’ என பாதகைகளைத் தாங்கியவாறு முஸ்லீம்கள் போராட்டத்தில் குதித்துள்ளார்கள். சிறுபான்மை இனங்களை அழித்தும், ஒடுக்கியும் இலங்கைத் தீவை முழுமையான சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதே சிங்கள இனவாத சக்திகளின் நீண்டகால நோக்கம்.

தமிழர்கள் மீதான பாரிய ஒடுக்கி அழிக்கும் நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்துவிட்ட சிங்கள இனவாதிகளின் அடுத்த இலக்கு முஸ்லீம்களாகவே இருப்பார்கள் என்பது உறுதியாகவே தெரிந்திருந்தது. சிங்கள இனவாதிகளால் முஸ்லீம் மக்களுக்கு ஏற்படக்

கூடிய எதிர்கால ஆபத்துக்களை ஆரம்பத்திலேயே கணித்திருந்த விடுதலைப் புலிகள், இது குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தமது எதிர்வுகூறலையும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக முஸ்லீம்கள் பங்காற்றவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி வந்தார்கள்.

எனினும், சிங்கள இனவாத மாயைக்குள் சிக்கிய சில முஸ்லீம் தலைமைகள் யாழ்குடாவில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதையே காரணம்காட்டி, முஸ்லீம் மக்களை விடுதலைப் புலிகளுக்கு எதிராக திசை திருப்புவதாகக் கருதி, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக அவர்களை மாற்றவே முனைந்து நின்றார்கள். அன்றைய முஸ்லீம் மக்களின் வெளியேற்றத்திற்காக விடுதலைப் புலிகள் தங்கள் வருத்தத்தை வெளியிட்டு, மீண்டும் யாழ்குடாவில் சென்று முஸ்லீம்களை குடியமருமாறு கூறியதன் பின்னரும், யாழ்குடா சிறீலங்காவின் ஆக்கிரமிப்பினுள் வந்து 20 வருடங்களைக் கடந்துள்ள நிலையிலும் இன்றும் அந்தக் குற்றச்சாட்டையே வைத்துக்கொண்டிருப்பவர்கள் இன்னமும் இருக்கவே செய்கின்றார்கள்.

கிழக்கில் சிங்களம் நிகழ்த்திய நயவஞ்சகத்தில் சிக்குண்டு தமிழ் - முஸ்லீம் மக்களுக்கு இடையிலான வன்முறைகளை அவ்வப்போது தூண்டிவிட்டவர்களுக்கும், முஸ்லீம் ஊர்காவல் படைகளை அமைத்து தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட, அதாவது, ‘தங்கள் விரல்களைக் கொண்டே தங்கள் கண்களைக் குத்தவைக்கும்’ சிங்களத்தின் இராஜதந்திரங்களை புரிந்துகொள்ளாமல் நடந்துகொண்டவர்களுக்கும் இப்போது உண்மைகள் உறைக்கத் தொடங்கியிருக்கும்.

காலம் கடந்து இப்போது என்றாலும் முஸ்லீம்கள் தங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படப்போகும் அபாய நிலையை அனுபவ ரீதியாக புரிந்துகொள்ளும் வாய்ப்பை தம்புள்ள பள்ளிவாசல் அவர்களுக்கு வழங்கியுள்ளது. சிங்கள இனவாதம் தமிழ் பேசும் இந்து, கிறிஸ்தவ மக்களை மாத்திரம் குறிவைக்கவில்லை. அனைத்து தமிழ் பேசும் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்வ மக்களையும் அது குறிவைத்துள்ளது என்பதை தம்புள்ள பள்ளிவாசல் சம்பவம் மிகத் தெளிவாக்கியுள்ளது.

‘தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் முஸ்லிம்களின் இருப்புக்கான பிரச்சினையாக மாறியுள்ளதை’ அமைச்சர் ரவூப் ஹக்கீமும் ஒத்துக்கொண்டிருக்கின்றார். முரண்பட்டுச் செல்வது தான் பொருத்தமென்றால் முரண்படுவதற்கும் தயங்க மாட்டோம் என்று றிசாத் பதியுதீன் கூறத்தலைப்பட்டுள்ளார். எனவே சிங்கள, பௌத்த இனவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், முஸ்லிம் மக்களும் தம்மை இணைத்துக்கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.

தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்கள இனவாதத்தின் ஆக்கிரமிப்பை புரிந்துகொண்டு ஒன்றுபட்டு செயற்பட்டாலேயே சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்து முழுமையான விடுதலையைப் பெறமுடியும். இல்லையேல் தமிழர்களுக்கு 83 யூலைக் கலவரம் ஒரு தொடக்கம் போல், தம்புள்ள முஸ்லீம்களுக்கான தொடக்கமாக அமைந்துவிடக்கூடும்.

நன்றி : ஈழமுரசு

ஆசிரியர் தலையங்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.