Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழை அகற்றி நுழையும் சிங்களம்! - கந்தரதன்

Featured Replies

சிங்களத்தின் தமிழ் மக்களின் பூர்வீக ஆலயங்களில் சூறையாடப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக பல தடவைகள் இப் பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். தொடர்ந்து ஆலயங்கள் மீதான சூறையாடல்கள் எதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அன்றில் தீர்வு ஏதேனும் எட்டப்பட்டதோ என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். இன்றும் ஆலயங்கள் மீதான சூறையாடல்கள் மேலும் மேலும் உச்சம் பெறுகின்றமையையே காணமுடிகின்றது.

இவை சிங்கள இனவாத பெரும்பான்மையினால் நன்கு திட்டமிட்டு நடாத்தப்படும் நடவடிக்கைகளில் ஒன்றாகவே கருதமுடிகின்றது. தமிழர் தாயகப் பகுதியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் பலமாகவிருந்த காலத்தில் சிங்களம், தமிழ் மக்களின் பூர்வீகங்களில் கைவைப்பதற்கு அச்சமடைந்திருந்தனர். ஆனால், இன்று தமிழ்பேசும் முஸ்லிம் மக்களின் பூர்வீகத்திலும் கைவைக்குமளவிற்கு சிங்கள இனவாதத்தினர் துணிந்துவிட்டனர்.

சிறீலங்காவின் தம்புள்ள எனும் பகுதியில் நீண்டகாலமாக அமைந்திருந்த முஸ்லிம் பள்ளிவாயிலை அகற்றுமாறு கோரி அதனை இடித்துச் சேதப்படுத்தி அகற்றும் முயற்சியில் சிங்கள பௌத்த பிக்குகளும் சிங்களக் காடையர்களும் இணைந்து சட்டத்தைத் தமதுகையில் எடுத்துக்கொண்டு கொலைவெறித் தாண்டவம் ஆடியுள்ளனர். ஆயினும் தடுக்கமுயன்ற சிறிலங்கா பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்குக் கூட இவர்கள் அடங்கவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டிய ஒன்று.

இலங்கை பூராகவும் சிங்களவர்களுக்கே சொந்தம் என்ற இறுமாப்புடன் மார்தட்டிக்கொள்கின்றனர். இதற்கு சிறீலங்கா அரசும் துணை நிற்பதையும் அவதானிக்க முடிகின்றது. ஆயினும் இப்பிரச்சினைக்கு இன்னும் தீர்வுகாணப்படவில்லை. இவ்விடயம் தொடர்பாக சிங்களவர்கள் மத்தியிலேயே இரண்டு கருத்துக்கள் எழுந்துள்ளது என்பது வேறு. இப்பிரச்சினை இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்களை சிறிலங்காவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கவைத்திருக்கும் நிலையில் உலகெங்கும் வாழ்கின்ற முஸ்லிம்களையும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது.

இத்தோடு நிற்காத சிங்களம், திருகோணமலைப் பகுதியில் உள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான 60 வருடகால பழைமை வாய்ந்த விநாயகர் ஆலயம் ஒன்றையும் அகற்றவேண்டும் என்று புதிய பிரச்சினை ஒன்றை உருவாக்கியுள்ளது. தம்புள்ளப் பள்ளிவாசல் பிக்குகளால் சேதமாக்கப்பட்ட விவகாரத்தையடுத்து முஸ்லிம் மக்கள் மத்தியில் எழுந்துள்ள கொதிப்பு தணியும் முன்னரே கிழக்கில் திருகோணமலையில் விநாயகர் ஆலயத்தை அகற்றுவதற்கான உத்தரவு சிங்களப் பேரினவாதத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

14jaffna02.jpg

திருகோணமலை பொதுவைத்தியசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள இந்தப் பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜுலை 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கையானது தமிழ் மக்களின் கலாசார, சமய விடயங்களில் கைவைக்கும் விடயமாக மாறியுள்ளதுடன் இந்து மதத்தையும் பாதிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பழைமை வாய்ந்த இந்து ஆலயம் கடந்த காலங்களில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள நிலையில் வீதி அபிவிருத்தியைக் காரணம் காட்டி பிள்ளையார் மீது கைவைக்க முயற்சி எடுக்கப்படுகிறது.

சிறிலங்கா அரசு நாட்டினுள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகின்ற நிலையிலேயே இவ்வாறான செயல்களும் நாட்டில் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் அரங்கேற்றப்படுகின்றன. இதனால், தமிழ்மக்கள் கடும் அதிருப்தியடைந்து பொங்கியெழுந்துள்ளனர். தமிழர் கலை, கலாசாரங்களையும், சமய விழுமியங்களையும் அழிக்கும் நடவடிக்கை திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றது என்றும் அவர்கள் விசனமடைந்துள்ளனர்.

இவ்வாறே ஏ-9 கண்டி நெடுஞ்சாலை அகலிப்புப் பணியெனக்கூறி யாழ்.குடாவில் தமிழ் மக்களின் பல பூர்வீக உடைமைகள் வரலாற்று சிறப்பு மிக்க பழைமைவாய்ந்த கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பலருடைய நீண்டகால வர்த்தக நிலையக் கட்டடங்கள் கூட அழிக்கப்பட்டுள்ளதாக யாழில் பாதிக்கப்பட்டவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். ஆனால் இவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை அவர்கள் காணியை வாங்கிய காலப்பகுதியின் பெறுமதியே

வழங்கப்பட்டுள்ளதாகவும் - அக்காலத்தில் கட்டடங்களை அமைக்கும்போது 60 ஆண்டு காலத்திற்குள் எப்போதாவது அகற்றப்படும் என அறிவுறுத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல மக்கள் மிகவும் விரக்தியடைந்தவர்களாகக் காணப்படுகின்றனர். பலர் எஞ்சிய வீட்டின் பாகங்களையும் காணியையும் சொற்பவிலைக்கு விற்றுவிட்டு வெளிநாடுகளுக்கு தஞ்சமடையும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தமிழ் மக்களை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாகவே கருத முடிவதாக அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், தம்புள்ள மற்றும் திருகோணமலை ஆலயங்களை அகற்ற முயற்சித்த சிறிலங்காவின் பயங்கரவாத அரசு, தற்போது திருக்கேதீஸ்வர ஆலயத்தையும் அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தை அண்டிய பகுதிகளில் பௌத்தமதத்தைப் பரப்பும் செயற்பாடுகளில் சிறிலங்கா அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டுவருகிறது.

slarmy%20hindu.jpg

பாடல்பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலயச்சூழலில் பௌத்த சமயத்தைப் பரப்பும் நோக்குடன் அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் ஆதரவோடு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை கண்டிப்பதாக அகில இலங்கை இந்து மாமன்றம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து மக்களின் சுதந்திரத்தைப் பாதிக்கின்ற எந்தவொரு முயற்சியையும் பொறுக்க முடியாது, `மதத் துவேஷ நிகழ்வுகளுக்கு இந்து மாமன்றம் கண்டனம்’ எனும் தலைப்பிலான அந்த அறிக்கையில், நாளிதழ் ஒன்றில் ‘பிள்ளையார் கோவிலை அகற்ற உத்தரவு’ திருமலையில் தமிழர்கள் கொந்தளிப்பு எனும் தலைப்பில் பிரசுரமான செய்தி கண்டு அதிர்ச்சியும் மன வேதனையும் அடைகின்றோம். 60 வருடகால பெருமைவாய்ந்த பிள்ளையார் ஆலயத்தை அகற்றுமாறு அரசாங்கமோ, எந்த ஓர் அதிகார சபையோ உத்தரவு பிறப்பிக்க இந்நாட்டின் சட்டமோ அல்லது எந்த நீதி நியாயமோ இடம் தரவில்லை.

இந்த நாட்டில் சம உரிமையுடனும் சுதந்திரத்துடனும் வாழும் உரிமை இந்து மக்களுக்குண்டு. இந்தச் சுதந்திரத்தை பறிகொடுக்க இந்த நாட்டின் எந்தவோர் இந்துவும் தயாரில்லை. இந்து மக்களின் சுதந்திரத்தைப் பாதிக்கின்ற எந்தவொரு முயற்சியையும் பொறுக்க முடியாது.

உடனடியாக இந்தத் துவேஷ நடவடிக்கைகளை நிறுத்துமாறு பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றோம். மேலும், இதில் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சகல தமிழ் அரசியல் தலைவர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பிரச்சினைகளுக்கு வெறும் அறிக்கையோடு நிறுத்துவதில் எந்தத்தீர்வும் எட்டப்படப்போவதில்லை. புலம் பெயர்வாழ் மற்றும் தாயகத்தில் வாழும் எம் தமிழ் உறவுகளே இது சிந்திக்கும் நேரமல்ல, நாம் செயற்படவேண்டிய தருணம் இது. சர்வதேசத்தை நோக்கி ஓங்கிக் குரல்கொடுப்போம்!

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.