Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐக்கிய இலங்கைக்குள் முடங்கும் சம்பந்தரால் தமிழரின் தாகத்தை புரிந்துகொள்ள முடியாது.

Featured Replies

உழைக்கும் வர்க்கம் தனது உரிமைக்காகப் போராடி வெற்றிகொண்ட மே தினம், இன்று அரசியல் கட்சிகளின் பிரச்சாரத் தினமாக மாற்றமடைந்துவிட்டது. உலகெங்கும் இதுதான் மே தினத்திற்கு ஏற்பட்டுள்ள நிலைமை. கடந்த வாரம் இலங்கைத் தீவில் தமிழர் தாயகம் எங்கும் நடைபெற்ற தொழிலாளர் தினமும் அரசியல் கட்சிகளின் போட்டிப் பிரச்சார தினமாக இருந்ததையே காணமுடிந்தது.

குறிப்பாகச் சிங்களப் பேரினவாதக் கட்சிகள் தங்கள் மாயவலைக்குள் தமிழர்களை விழவைக்கும் ஒரு நாளாகவே இந்த நாளை பயன்படுத்த முனைந்திருந்தார்கள். யாழ்.குடாநாட்டில் மே தினத்திற்கான ஏற்பாடுகள் சில மாதங்களுக்கு முன்பாகவே சிங்களப் பேரினவாதக் கட்சிகளினால் தொடக்கிவிடப்பட்டிருந்தன. தங்கள் இனவாதச் சிந்தனைகளை தமிழ் மக்களிடம் திணிப்பதற்கும், வரும் தேர்தல்களில் தமிழர்களின் வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்கும் இந்த மே தினத்தைப் பயன்படுத்த அவைகள் முனைந்திருந்தன.

இதில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனது பேரணிக்கு பக்கபலமாக்க விரும்பியபோது, இன அழிப்பில் ஈடுபட்டு, தமிழர் விடுதலைப் போராட்டத்தை சிதைப்பதற்கு முனைந்து நின்ற ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மே தினத்தில் பங்கேற்பதை தவிர்க்கவேண்டியதன் அவசியத்தை பல்வேறு ஆதாரங்களுடன் ஈழமுரசின் கடந்த இதழ்களில் சுட்டிக்காட்டியிருந்தோம்.

இதற்கும் மேலாக தமிழர் தாயகத்தில் நடைபெறும் ஒரு நிகழ்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்து, தமிழ் மக்களுக்கு சிங்களப் பேரினவாதத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை உலகிற்கு அம்பலப்படுத்தியிருக்கலாம். தமிழ் மக்களின் அவலங்களை காட்சிப்படுத்தும் பதாதைகளை, நிகழ்வுகளை பேரணியில் கொண்டுவந்து இன்றைய இராணுவ முற்றுகைக்குள் மக்கள் படும் அவலங்களை வெளிப்படுத்தியிருக்கலாம்.

ஆனால், அவற்றைப் புறந்தள்ளிவிட்டு, ரணிலுடன் கைகோர்த்து பேரணியில் பங்கேற்ற கூட்டமைப்பு, இன்று அவமானப்பட்டு, அம்பலப்பட்டுப்போய் நிற்கின்றது. பெரும்பான்மையாக தமிழர்கள் வாழும் யாழ்குடாவில் சிங்களப் பேரினவாதக் கட்சி, அதுவும் தமிழின அழிப்பில் ஈடுபட்ட கட்சி ஒன்றுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மே தினத்தில் பங்கேற்றது என்பதே தமிழர்களுக்காக உரிமைக் குரல் எழுப்பும் கட்சியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கேள்வியை ஏற்படுத்திவிட்டது.

ரணிலின் நயவஞ்சக வலையில் சிக்குண்டு, தமிழ் மக்களின் கடும் எதிர்ப்புக்கு சம்பந்தரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளாகியுள்ள நிலையில், சம்பந்தர் ஏந்திய சிங்கக் கொடிக்காக மாவை சேனாதிராசா மன்னிப்புக் கோருகின்றார். நிகழ்சி நிரலில் தேசியக் கொடி காட்டும் நிகழ்வு உள்ளடக்கப்படாத நிலையில் இது ஐக்கிய தேசியக் கட்சியினால் நன்கு திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட நாடகம் எனவும் அவர் விளக்கம் கொடுக்கின்றார்.

திட்டமிட்டு சம்பந்தரிடம் சிங்கக் கொடியை பிடிக்கச் செய்து கூட்டமைப்பைப் பிளவுபடுத்தும் நரித்தந்திரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டார் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றஞ்சாட்டுகின்றார். தான் நிற்கும் இடம் எது, தன் கையில் என்ன திணிக்கப்பட்டுள்ளது, இதனால் ஏற்படப்போகும் பின்விளைவுகள் என்ன என்பதைக்கூட சிந்திக்கத் தெரியாதவராகவா சம்பந்தர் இருக்கின்றார்? கூட்டமைப்பிலுள்ள பலரும் சம்பந்தரின் நடவடிக்கையால் வருத்தமடைந்து புலம்பிக்கொண்டிருக்க, இதற்காக மன்னிப்புக் கோரவேண்டிய அவசியமே இல்லையென்கின்றார் சம்பந்தர்.

ஜெனீவா மனித உரிமைகள் விவாதத்தில் கலந்துகொள்வதாக அறிவித்து பின்னர் போக மறுத்ததும், மகிந்தவுடன் இரகசியப் பேச்சுக்களில் அடிக்கடி ஈடுபடுவதும், ‘இனப்படுகொலை’ என்ற வார்த்தையை பிரயோகிக்க மறுத்து வருவதும், இந்திய ஆலோசனைகளுடனே செயற்படவேண்டும் என பிடிவாதம் பிடிப்பதும் சம்பந்தர் சுயகட்டுப்பாட்டில் இல்லை

யென்பதைத் தெளிவாக்கி வருகின்றது.

இந்நிலையில், ஐக்கிய இலங்கைக்குள் சகல இனமக்களும் இணைந்து வாழும் தீர்வையே விரும்புவதாகக் கூறும் சம்பந்தர், சிங்கள தேசத்தின் கொடியை தாங்கிப்பிடிப்பதை தமிழர்கள் ஒன்றும் ஆச்சரியமாகப் பார்க்கவில்லை. காகம் கத்தி மாடு சாகப்போவதில்லை என்பதுபோல சம்பந்தர் சிங்களக் கொடியை ஏந்தியதாலும், ஐக்கிய இலங்கைக்குள் கனவு காண்பதாலும் தமிழர்களின் சுதந்திர தாகமான தமிழீழம் மலராமல் இருந்து விடப்போவதில்லை.

நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள், இலட்சக்கணக்கான மக்களின் உதிரத்தினால் எழுதப்பட்ட தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை சம்பந்தர் என்ற ஒற்றை மனிதரால் புறந்தள்ளிவிடமுடியாது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையும் அந்தக் கூட்டமைப்பில் இருந்தமைக்காகவே சிங்களத்தின் கொலைக் கரங்களினால் படுகொலையான ‘மாமனிதர்’களையும் சம்பந்தர் ஒரு கணம் சிந்திக்கவேண்டும்.

அந்த உணர்வு இல்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் சம்பந்தர் இருப்பதைவிட, அதிலிருந்து விலகி தமிழர்களுக்காக உண்மையாக உழைக்கக் கூடியவர்களின் கைகளில் அதனை ஒப்படைப்பதே சம்பந்தர் தமிழ் மக்களுக்கு செய்யக்கூடிய மிகவும் நல்ல காரியமாக இருக்கமுடியும்.

நன்றி : ஈழமுரசு

ஆசிரியர் தலையங்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.